ஆற்றைக் கடக்க துணையாக வருபவர் யார்? (Post No.10,666)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,666
Date uploaded in London – – 17 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்பன் தரும் காதல் காட்சிகள்
ஆற்றைக் கடக்க உனக்குத் துணையாக வருபவர் யார்?
ச.நாகராஜன்

கம்பன் எழுச்சிப் படலத்தில் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களில் ஆறு இளைஞர்களைச் சுட்டிக் காட்டுகிறான்.மூவரைப் பார்த்தோம். இன்னும் மூவரை இப்போது பார்ப்போம்.

அவளது கேஸம் சுருண்டு அழகாக அலை போல இருக்கிறது. அந்தக் கேஸத்தின் ஈர்ப்பினால் வண்டுகள் அவள் தலையைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றன. அந்த அழகியின் விழிகளோ கூர்மையாக இருக்கின்றன. அவளைப் பார்க்கின்றான் யானை போல நடந்து செல்லும் ஒரு வாலிபன். (சின்ன யானை நடையைத் தந்தது என்ற திரைப்படப் பாடலை இங்கு ஒப்பிடலாம்) அவள் கண்களின் கூர்மை அவன் சிந்தனையைத் தூண்டி விடுகிறது.

தன் கையிலிருந்த வேலைப் பார்க்கிறான். இந்த வேலின் நுனி கூர்மையா, இல்லை அந்தக் கண்கள் கூர்மையா என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறான்.

இந்த வேலை விட அந்தக் கூரிய கண்கள் மிகவும் ஆபத்தானவை என்ற முடிவுக்கு அவன் வந்து விடுகிறான்.
ஏனெனில் இந்த வேல், கேவலம், ஒருவனின் உடலின் மீது மட்டுமே பாய்ந்து அவனை வருத்த முடியும். ஆனால் அந்தக் கண்களோ எனது உயிரின் மீது பட்டு உயிரையே அல்லவோ வருத்துகிறது, ஆகவே அந்தக் கண்களே மிகக் கூர்மையானவை என்ற முடிவுக்கு வருகிறான்.

பாடலைப் பார்ப்போம்:
சுழியும் குஞ்சிமிசை சுரும்பு ஆர்த்திட,
பொழியும் மா மத யானையின் போகின்றான்,
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி, தன் வேலையும் நோக்கினான்
-எழுச்சிப் படலம் பாடல் 34
பொருள் :
சுழியும் குஞ்சிமிசை – சுழியலுடன் இருக்கும் ஒருத்தியின் கூந்தலின் மேல்
சுரும்பு ஆர்த்திட – வண்டுகள் ஆரவாரித்துக் கொண்டிருக்க
மா மதம் பொழியும் யானையின் போகின்றான் – மத நீரைச் சொரிகின்ற யானை போலச் செல்லும் ஒரு வாலிபன்
ஒரு காரிகை விழியை நோக்கி – அழகியான அவளது கண்களை நோக்கி, அவை கூர்மையாய் இருப்பதைப் பார்த்து
தன் வேலையும் நோக்கினான் – தனது வேலையும் நோக்கினான் (ஒப்பிட்டுப் பார்த்தான் – எது கூர்மை என்று)

இன்னொரு வாலிபன். பேரழகன். அவன் ஒரு பேரழகியைப் பார்க்கிறான். அவனுக்கு வந்தது ஒரு சந்தேகம்.
அலை போல் நீண்டு சுருண்டிருக்கும் கூந்தல் ஒரு புறம். தாமரை போன்ற அழகிய சிறு பாதங்கள் இன்னொரு புறம். நெருங்கிய ஆபரணங்களை அணிந்த பெருத்த மார்பகங்கள்; அழகிய வளையல்கள் கொண்ட அழகிய தோள்கள். ஆனால், அடடா, அவளது இடையைக் காணோமே! அது தான் அவனது சந்தேகம். சரி, இதை யாரிடம் கேட்பது.

அவளிடமே கேட்டு விடுவது என்று தீர்மானித்து அவளையே கேட்டு விடுகிறான்.
(அவள் நாணினாளா, கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாளா, என்பது நமக்குத் தெரியாது)
கம்பன் தரும் காட்சியைப் பார்ப்போம்:

தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங் கண் வாள் உடையாளை, ஓர் காளை தான்,
‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?’ என்றான்.
எழுச்சிப் படலம், பாடல் 35

பொருள்:
தரங்கம் வார் குழல் – அலை போலச் சுருண்டு நீண்ட கூந்தலையும்
தாமரைச் சீறடி – தாமரை மலர் போன்ற சிறிய பாதங்களையும்
வாள் கருங் கண் – வாள் படை போன்ற கரு நிறமுள்ள கண்களையும்
உடையாளை – கொண்டிருக்கும் பேரழகியைக் கண்ட
ஒரு காளை – ஒரு வாலிபன்
‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?’ – ‘நெருங்கிய ஆபரணங்களை அணிந்த, மார்பகங்களையும் நீண்ட வளையலை அணிந்த தோள்களையும் உடையவரே!நீர் உமது இடையை எங்கு மறந்து வைத்திருக்கிறீர்?’

என்றான் – என்று கேட்டான்.
ஆக அந்த அழகியின் இடை கண்ணுக்குப் புலனாகாதவாறு அவ்வளவு நுண்மையாக இருக்கிறது.

கடைசியாக இன்னொரு இளைஞனை கம்பன் சுட்டிக் காட்டுகிறான்.
இவன் கொஞ்சம் குறும்புப் பேர்வழி!
தைரியமாக ஒரு கேள்வியைக் கேட்டு நான் உதவிக்கு வரலாமா என்று கேட்கிறான்.
யமனைப் போல கொலை செய்ய வல்ல கண்கள் அவளுடையது. கண் ஜாடையினால் மட்டுமே அவள் பேசுவாள்; வாயைத் திறக்க மாட்டாள். அவளிடம் சென்ற ஒரு வாலிபன்,

ஆற்றைக் கடக்கும் போது உம்மைக் கைகளால் எடுத்து அக்கரை சேர்ப்பார் யார்? என்கிறான்.
‘நீ பேச மாட்டேன் என்கிறாய்? உன் பேச்சுக்கு உரியவன் அல்லாதவன் உன்னைத் தீண்டுதற்கு மட்டும் உரியவனோ, ஆகவே (தேன் மொழியாளே, உன் குரலைக் காட்டி) கொஞ்சம் பேசேன்’ என்கிறான்.

பாடல் இதோ:
கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி,
மாற்றம் பேசுகிலாளை, ஓர் மைந்தன் தான்,
‘ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்த்
ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?’ என்றான்
எழுச்சிப் படலம், பாடல் 36

பொருள்:
கூற்றம் போலும் – யமனைப் போன்ற
கொலை கணினால் அன்றி – கொல்லும் தன்மையுள்ள கண் ஜாடையினால் அல்லாமல
மாற்றம் பேசுகிலாளை – வாயைத் திறந்து பேசாமல் மௌனம் சாதிக்கும் ஒருத்தியை

ஓர் மைந்தன் – ஒரு இளைஞன்
‘ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்த்
ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?’ – ‘வழியே இருக்கும் ஆற்று நீரில் உம்மை அழகிய கைகளால் எடுத்து கரை ஏற்ற வல்லவர் யார்?’
என்றான் – என்று கேட்டான்.
மைந்தனை காதலன் என்றும் கொள்ளலாம்; கணவன் என்றும் கொள்ளலாம்.

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்பது அவள் பேசினால் தான் அவனுக்குப் புரியும்!
ஆக இப்படி ஆறு பாடல்களில் அழகிய காதல் சித்திரங்களை சித்தரிக்கும் கவிஞன் மகா கவிஞன் தானே!


ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)

ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7456

Date uploaded in London – 15 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பொங்கல் 15, ஜனவரி 2020

எமது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம:

ச.நாகராஜன்

1

சூரியனின் புகழ் பாடுவோம்:

அவன் புகழ் பாடுவது :-

புண்ணியத்தைத் தருகிறது.

எதிரிகளை அழிக்கிறது

வெற்றியைத் தருகிறது.

அழியாத மங்களத்தைத் தருகிறது.

கணவன் மனைவியை இடைபிரியாமல் அன்யோன்யமாக இருக்க வைக்கிறது.

ஆரோக்கியத்தைத் தருகிறது.

பூரண ஆயுளைத் தருகிறது.

செல்வத்தை வழங்குகிறது.

தலைமைப் பதவியைத் தருகிறது.

நல்லனவற்றை நாடிச் செய்ய வைக்கிறது.

புத்திர பாக்கியத்தைத் தந்து அவர்களின் புகழையும் ஓங்க வைக்கிறது.

ஞாயிற்றால் பெற முடியாது ஒன்றும் இல்லை.

அவனைத் தொழுவோம் உயர்வோம்.

2

மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் சூர்ய அஞ்சலியை மனதில் நினைத்து சூர்யனின் புகழைப் பாடுகிறோம்.

ஞாயிறு வணக்கம்

கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வாள்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்
சுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.

என்த னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்
நின்தன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா!
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!

காதல்கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள்,இதில் ஐயமொன்றில்லை;

சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.

 3

மஹாகவியின் வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழ் பாடும் அருமையான நீண்ட கவிதை  ஞாயிறு.

அதில் சில பகுதிகளைப் பார்ப்போம்:

ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?

வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது?

மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது?

உயிர் எவன் தருகிறான்? புகழ் எவன் தருகின்றான்?

புகழ் எவனுக்குரியது?

அறிவு எதுபோல் சுடரும்?

அறிவுத் தெய்வத்தின் கோயில் எது?

ஞாயிறு. அது நன்று.

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி.

மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து

இவை யெல்லாம் நினது திகழ்ச்சி.

கண் நினது வீடு.

புகழ், வீரம்இவை நினது லீலை.

அறிவு நின் குறி. அறிவின் குறி நீ.

நீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.

உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்.

வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,

நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.

4

அகஸ்திய மஹரிஷி ஸ்ரீராமருக்கு உபதேசித்து அருளிய ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைத் துதிக்கும் ஸ்தோத்திரம்.

அதைப் பாடுவோம்.

ராவண சக்திகளை அழிப்போம்.

5

சிவபிரான் அருளியுள்ள சூர்யாஷ்டகத்தைப் பொருளுணர்ந்து ஓதுவோம்.

சூரிய அஷ்டோத்திர சத நாமாவளியை ஓதித் துதிப்போம்.

6

கஸ்யப மஹரிஷிக்கும் அதிரிக்கும் மகனாப் பிறந்தவர் சூரியன். சூரிய வம்சத்தை உருவாக்கியவர் சூரியன்.

சூரியனின் ரதம் 9000 யோஜனைகள் நீளம் உள்ளது. இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. காலச் சக்கரம் மூன்று மையங்களையும் ஐந்து உருளிப்பட்டைகளையும் ஆறு ஆரைகளையும் கொண்டது.

ஏழு வேத சந்தங்களான ஏழு குதிரைகளைக் கொண்டது அந்தத் தேர்.

காயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி ஆகியவையே அந்த ஏழு குதிரைகள்.

சூரிய ரதத்தின் இன்னொரு அச்சு 45,500 யோஜனைகள் நீளம் கொண்டது.

இந்த ரதத்தின் பெருமை மிக மிக நீண்டது.

ஆதித்யனைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் பெருமை எல்லையற்றது.

அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக சூரியனை சிவபிரான் நியமித்ததை மஹாபாரதம் சாந்தி பர்வம் விவரிக்கிறது. (அத்தியாயம் 112)

சுப்ரஜா, பாஸ்வரா ஆகிய இரண்டு ஏவலாட்களைத் சுப்ரமண்யருக்குச் சூரியன் தந்தார்.

7

எல்லையற்ற மஹிமை கொண்ட சூரியனுக்கு அளவற்ற நாமங்கள் உண்டு.

பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரஸ்மே திவாகரா என்று கூறித் தொழுவோம்.

சூர்யா, ஆர்யமா, ஆதித்யா, திவாகரா,அர்கா, மிஹிரா, லோக பாந்தவா, தின மணி, இனா, பர்கா, தர்ம நிதி … அடடா எத்துணை அற்புதமான பெயர்கள்!

அனைத்தையும்  கூறி அனுதினமும் அவனைத் தொழுவோம்.

உயர்வோம்.

*******

AUSPICIOUS DAYS ARE AHEAD ! Happy New Year 2020 (Post No.2446)

Complied by  London Swaminathan

Uploaded in London on  – 31 December 2019

Post No.2446 posted again with new matter

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Posted by me on 1-1-2016 (now posted with a different format and new pictures and additional matter)

Who is a Kududupai man?

A fortune teller as well as a bogey man; a magician cum beggar.

Kudukudu is the sound made by a kettle drum in the hands of a fortune teller in Tamil Nadu and other places of South India. They (always men) are fearsome and roam the streets at the dead of night. If they are not given food or money they curse the people. And the belief is that it will come true like a Gipsy’s curse. They worship the fearsome goddesses like Durga, Chandi, Suli, Veeri, Malayala Bjagavati. It is believed that they can do evil by invoking the powers of those goddesses. Mothers used to frighten the naughty children with the name of this person like a bogey man in the west. But Bharati, the greatest of the modern Tamil poets, use this man  as a positive figure. But here also that there is a curse that if the learned do something wrong they will be utterly destroyed.

A NOVEL FORTUNE TELLER – POEM BY TAMIL  POET SUBRAHMANYA BHARATI (1882-1921)

1.KUDUKUDU KUDUKUDU KUDUKUDU KUDUKUDU

Auspicious days are ahead;

Castes combine; conflicts cease

Speak up, speak up , Sakti, Durga

Predict, predict, propitious days for Vedapura

2.Destitution disappears; affluence is attained

Learning spreads apace; sin ceases to be;

If the learned take to trickery and commit crimes

They ‘ll be ruined, alas, utterly ruined.

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம்போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது; பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான்!

3.Commerce expands in Vedapura ;

Industry grows; workers prosper;

Sciences flourish; secrets come to light;

Power plants multiply; know-how develops;

Fertile ideas arise in abundance.

4.KUDUKUDU KUDUKUDU

Speak up, speak up, Malayala Bhagavati

Antari , Veeri, Chandika, Sulini

KUDUKUDU KUDUKUDU

வேதபுரத்திலே வியபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்

சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’

யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது

மந்திரமெல்லாம் வளருது, வளருது;

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடு குடு குடு குடு

5. KUDUKUDU  KUDUKUDU

Masters are becoming brave;

Paunch shrinks; diligence spreads;

All forms of wealth grow apace;

Fear dies; sin perishes;

Sciences grow; castes declines;

Eyes  open; justice is perceived;

Old madness vanishes all of a sudden;

Heroism is attained so is honour.

Speak up Sakti, Malayala Bhagavati

Virtue flourishes, virtue thrives.

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;

எட்டு லட்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வளருது, மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி, மலையாள பகவதி;

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

பாரதியார்

Tamil original is from Kathai-k-Kothu, year 1939.

English Translation is done by Prof. S Ramakrishnanan ( S R K )

Source book- BHARATI PATALKAL,

TAMIL UNIVERSITY, THANJAVUR, 1989

EDITOR- SEKKIZAR ADIPPODI Dr T N RAMACHANDRAN

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

புதிய கோணங்கி

 குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம்போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது; பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான்!

வேதபுரத்திலே வியபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்

சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’

யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது

மந்திரமெல்லாம் வளருது, வளருது;

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடு குடு குடு குடு

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;

எட்டு லட்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வளருது, மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி, மலையாள பகவதி;

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

பாரதியார்

Tags  குடு குடுப்பைக்காரன் ,நல்ல காலம் வருகுது, பாரதியார்

–Subham–

பாரதி, திருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333)

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 12 DECEMBER 2019

 Time in London – 13-27

Post No. 7333

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

தமிழ் சுடர்மணியில் பேரறிஞர் வையாபுரிப்  பிள்ளை ,

 பாரதியார்   பற்றிச் சொன்ன இரண்டு சுவை யான

சம்பவங்கள் இதோ:-

subham

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்! (Post No.7327)

NATIONALIST POET SUBRAHMANYA BHARATI

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்! (Post No.7327)

WRITTEN BY  S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 11 DECEMBER 2019

 Time in London – 5-28 AM

Post No. 7327

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பாரதி தினம் டிசம்பர் 11 : நினைவு அஞ்சலி!

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!

ச.நாகராஜன்

STATUE OF BHARATI AT SETUPATI HIGH SCHOOL, MADURAI.

தமிழ் அன்பர் : மஹாகவியே! பார் புகழும் பாரதியாரே! கோடி வணக்கம். போற்றுகிறோம் உம்மை இந்த நன்னாளில். சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுகிறோம்.

பாரதியார் : சபாஷ்! பாண்டியா! கேள்.

அன்பர் : உமக்குத் தொழில் யாதோ?

பாரதியார் : நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

அன்பர்:  தொழில் கவிதையா ! … எப்படிப்பட்ட கவிதை?

பாரதியார் : “சுவை புதிது, நயம் புதிது வளம் புதிது

               சொற் புதிது ஜோதி கொண்ட

            நவ கவிதை எந்நாளும் அழியாத

                மஹா கவிதை”

அன்பர் : அடடா! இப்படிப் போற்றிப் புகழ்வது யார்?

பாரதியார் : என்று நன்கு …..

              பிரான்ஸென்னும் நாட்டிலுயர்

                   புலவோரும் பிறரும் ஆங்கே

              விராவு புகழ் ஆங்கிலத்தீம் கவியரசர்

                   தாமும் மிக வியந்து கூறிப்

              பராவியென்றன் தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்துப்

                   போற்றுகின்றார்.

அன்பர்: அடடா! எப்படி இப்படிப்பட்ட கவிதை மலர்கிறதோ?

பாரதியார் : செய்யும் கவிதை பராசக்தியாலே செய்யப்படுங் காண்!

அன்பர் : ஆஹா! அருமை!

பாரதியார் : மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்

            மனோன்மணியென் மாசக்தி வையத் தேவி

அன்பர் : பார் புகழும் தங்கள் எழுத்தும் பாட்டும் எங்களைப் பரவசப்படுத்துகிறது.

பாரதியார் : எழுது கோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்!

அன்பர் : உங்களின் குறிக்கோள் என்ன?

பாரதியார் : சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை நம்முள்ளே

நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்.

அன்பர்: அற்புதமான சொற்களைக் கவிதை வாயிலாக அள்ளிக் கொட்டுகிறீர்கள்.. உங்கள் குறிக்கோள் என்ன?

பாரதியார் : நூலைப் பலபலவாகச் சமைத்து நொடிப் பொழுது

           வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்

           கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே

அன்பர் : கணபதியின் காலைப் பிடித்து அவன் பதம் கண்ணில் ஒற்றி இப்படி நீவீர் பாடி இருப்பது எம்மைப் புல்லரிக்க வைக்கிறது. கவிப் பெருக்கு நாட்டிற்கு என்ன செய்யும்?

பாரதியார் : வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்

அன்பர் : ஆகவே  …. ?

பாரதியார் : பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே!

              பாரதநாட்டியக் கூத்திடுவீரே!!

அன்பர் : எந்தச் சொல் செய்யுளுக்கு நலம் பயக்கும்?

பாரதியார் : சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!

அன்பர் : இதைப் பெற என்ன செய்ய வேண்டும்?

பாரதியார் : வாணி கலைத் தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள்

          ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாலையினாள்

         காணுகின்ற காட்சியைக் காண்பதெல்லாம் காட்டுவதாய்

          மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே!

அன்பர் : வாணியைக் கூவுங்கால் என்ன ஆகும்?

பாரதியார் : கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்;

            காவியம் பல நீண்டன காட்டென்பார்;

            விதவிதப்படு மக்களின் சித்திரம்

             மேவு நாடகச் செய்யுளை மேவென்பார்;

            இதயமோ எனில் காலையும் மாலையும்

             எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்

       எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி

       இன்பம் ஒன்றினைப் பாடுதல் அன்றியே

      நாட்டு  மக்கள் பிணியும் வறுமையும்

      நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே;

      கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்

      கொண்டு வையம் முழுதும் பயனுறப்

      பாட்டிலே அறம் காட்டெனும் ஓர் தெய்வம்;

      பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும்

      ஊட்டி எங்கும் உவகை பெருகிட

      ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே

      நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

      நானிலத்தவர் மேல்நிலை எய்தவும்

      பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்

      மூட்டும் அன்புக் கனலொடு வாணியை

      முன்னுகின்ற பொழுதில் எல்லாம் குரல்

      காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

      கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.

      மழை பொழிந்தியும் வண்ணத்தைக் கண்டு நான்

       வான் இருண்டு  கரும்புயல் கூடியே

      இழையும் மின்னல் சரேலென்று பாயவும்

      ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

      உழை எலாம் இடை இன்றி இவ்வான நீர்

      ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

      “மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்

      வாழ்க தாய்” என்று பாடும் என் வாணியே.

       சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்

      சொல்ல வேறிடம் செல்ல வழி விடாள்

      அல்லினுக்குள் பெருஞ்சுடர் காண்பவர்

      அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார்

      கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்

      கால வெள்ளத்திலெ நிலை காணுங்கால்

      புல்லினில் வயிரப் படை காணுங்கால்

      பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!

அன்பர் : பராசக்தியை என்ன வேண்டுகிறீர்?

பாரதியார் : சுவை நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக

                     நன்றாய் உளத்தழுந்தல் வேண்டும் – பல

                  பண்ணிற் கோடி வகை இன்பம் – நான்

                     பாடத் திறனடைதல் வேண்டும்

                  கல்லை வயிரமணி ஆக்கல் – செம்பைக்

                      கட்டித் தங்கமெனச் செய்தல் – வெறும்

                  புல்லை நெல்லெனப் புரிதல் – பன்றிப்

                      போத்தைச் சிங்க ஏறாக்கல் – மண்ணை

                  வெல்லத் தினிப்பு வரச் செய்தல் – என

                       விந்தை தோன்றிட இந் நாட்டை – நான்

                  தொல்லை தீரத்து உயர்வு கல்வி – வெற்றி 

                       சூழும் வீரம் அறிவு ஆண்மை

                  கூடுந் திரவியத்தின் குவைகள் – திறல்

                    கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை

                  நாடும் படிக்கு வினை செய்து – இந்த

                     நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க – கலி

                  சாடும் திறன் எனக்குத் தருவாய் – அடி

                     தாயே! உனக்கு அரியதுண்டோ?!

அன்பர் : ஆஹா!  உங்கள் கவிதையால் பாரத மக்கள் நாங்கள் எல்லோரும் பராசக்தியைப் பாடுவோம்; ஆசிர்வதியுங்கள் கவிஞரே!

பாரதியார் :   நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி

                    நலத்தை நமக்கிழைப்பாள்;

              “அல்லது நீங்கும்” என்றே உலகேழும்

                    அறைந்திடுவாய் முரசே!

              சொல்லத் தகுந்த பொருள் அன்று காண்! இங்குச்

                    சொல்லும் அவர் தமையே,  

              அல்லல் கெடுத்து அமரர்க்கிணை ஆக்கிடும்

                     ஓம்; சக்தி, ஓம் சக்தி, ஓம்!

அன்பர் பாரதியாரை பக்தியுடன் வணங்கி விடை பெறுகிறார்.

கவிஞர் பிறந்த நாள் டிசம்பர் 11, 1882

அவர் மலரடிக்கு நமது அஞ்சலி உரித்தாகுக!

****

FROM KALAKSHETRA, CHENNAI

பாரதியாரின் பாடல்களே பாரதியாரின் கூற்றாக இக்கட்டுரையில் அமைந்துள்ளது.

கவிதை பற்றி அவர் கூறும் அவரது பாடல்கள் இன்னும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்பர்கள் படித்து மகிழலாம்.

இந்தக் கட்டுரையில் உள்ள பாரதியாரின் கவிதைகளைப் பற்றிய உதவிக் குறிப்பு இதோ (பாடல் தலைப்புகள் தரப்பட்டுள்ளன) :

நமக்குத் தொழில் : விநாயகர் நான்மணி மாலையில் வெண்பா

சுவை புதிது : ஸ்ரீமான் எட்டயபுரம் மஹாராஜா அவர்கள் மீது சீட்டுக் கவிகள்

என்று நன்கு பிரான்ஸென்னும் : மேலே உள்ள அதே பாடல்

செய்யும் கவிதை : விநாயகர் நான்மணி மாலையில் கலித்துறை

மனத்தினிலே நின்றிதனை : பாரதி அறுபத்தாறு – முதல் பாடல்

எழுது கோல் தெய்வம் : பாரதி அறுபத்தாறு – பாடல் 18

சொல் ஒன்று வேண்டும் : சொல் – வாணி

நூலைப் பலபலவாக : விநாயகர் நான்மணி மாலையில் கலித்துறை

வெள்ளத்தின் பெருக்கைப் போல் : தமிழ்

பாட்டும் செய்யுளும் : தொழில்

சொல்லில் உயர்வு : பாப்பாப் பாட்டு

வாணி கலைத் தெய்வம் : நவராத்திரிப் பாட்டு

கதைகள் சொல்லி : பராசக்தி

சுவை நண்ணும் : யோகசித்தி

நல்லதும் தீயதும் : ஓம் சக்தி

–SUBHAM–

FROM OLD TAMIL MAGAZINE

டிசம்பர் மாத 2019 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.7278)

BHARATI AND HIS WIFE CHELLAMMA
GREATEST OF THE MODERN TAMIL POETS- BHARATI

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 6-57 am

Post No. 7278

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பண்டிகை  நாட்கள்

டிசம்பர் 8- கீதா ஜயந்தி ; 10- கார்த்திகை தீபம் ; 11- பாரதியார் பிறந்த தினம் 12- பாஞ்சராத்ர தீபம் ; 17 –திருப்பாவை, திருவெம்பாவை விழா துவக்கம் ; 25- கிறிஸ்துமஸ்

அமாவாசை -25; பவுர்ணமி -11; ஏகாதசி –8,22

முகூர்த்த நாட்கள் 1, 2, 6,  11, 15.

பாரதியார் பிறந்த மாதமாதலால் 31 பாரதி மேற்கோள்களைக்  காண்போம்

தமிழ் வாழ்க , பாரதி வாழ்க

xxx

டிசம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை

நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு

டிசம்பர் 2 திங்கட் கிழமை

ஒன்று பரம்பொருள்  நாம் அதன்மக்கள் , உலகு இன்பக்கேணி

டிசம்பர் 3 செவ்வாய்க் கிழமை

வாழிய செந்தமிழ் , வாழ்க நற்றமிழர்

டிசம்பர் 4 புதன் கிழமை

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே

பார்மிசை ஏதொரு நூல் இது போலே?

டிசம்பர் 5 வியாழக் கிழமை

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

டிசம்பர் 6 வெள்ளிக் கிழமை

தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன்

எள்ளத்தனைப்பொழுதும் பயனின்றி இராதென் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்

டிசம்பர் 7 சனிக் கிழமை

பாரதநாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

WORLD BHAGAVAD GITA DAY -8TH DECEMBER

டிசம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

டிசம்பர் 9 திங்கட் கிழமை

ஊனம்  ஒன்றும் அறியா ஞான மெய்ப்பூமி

வானவர் விழையும் மாட்சியார்  தேயம்

டிசம்பர் 10 செவ்வாய்க் கிழமை

வெற்றியேயன்றி வேறேதும் பெறுகிலேம்

டிசம்பர் 11 புதன் கிழமை

முன்னர் நமது இச்சையால் பிறந்தோமில்லை

முதல் இறுதி இடை  நமது வசத்தில் இல்லை

டிசம்பர் 12 வியாழக் கிழமை

பொய்க்கும் கலியை நான் கொன்று பூ லோகத்தார்  கண்முன்னே

மெய்க்கும் கிருதயுகத்தினையே கொணர்வேன் தெய்வ விஃதியிதே

டிசம்பர் 13 வெள்ளிக் கிழமை

தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல்லும் பொய்யாமோ

டிசம்பர் 14  சனிக் கிழமை

நமக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்

டிசம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை

தனி ஒருவனுக்கு  உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

டிசம்பர் 16 திங்கட் கிழமை

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம்  இந்த நாட்டினிலே

AS MINISTER – MANIKKAVASAGAR

AS AN ASCETIC – MANIKKAVASAGAR

டிசம்பர் 17 செவ்வாய்க் கிழமை

எண்ணிய முடிதல் வேண்டும் ,நல்லவே எண்ணல்  வேண்டும்

TIRUPPAVAI, TIRUVEMBAVAI FESTIVAL FROM 17-12-2019

டிசம்பர் 18 புதன் கிழமை

வல்லமை தாராயோ இந்த மாநிலம்  பயனுற வாழ்வதற்கே

டிசம்பர் 19 வியாழக் கிழமை

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்

டிசம்பர் 20 வெள்ளிக் கிழமை

அன்பு  சிவம் உலகத்துயர் யாவும் அன்பினில் போகும்

டிசம்பர் 21 சனிக் கிழமை

மூர்த்திகள்  மூன்று  பொருள் ஒன்று – அந்த மூலப்   பொருள்

ஒளியின் குன்று ; நேர்த்தி திகழும் அந்த ஒளி யை – எந்த நேரமும் போற்று சக்தி என்று

டிசம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே

டிசம்பர் 23 திங்கட் கிழமை

வேத நூல்  பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி

டிசம்பர் 24 செவ்வாய்க் கிழமை

பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம்- பரி

பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்

டிசம்பர் 25 புதன் கிழமை

வாழ்வுமுற்றும் கனவெனக் கூறிய

மறை வலோர்தம் உரை பிழையன்று காண்

டிசம்பர் 26 வியாழக் கிழமை

சாமி நீ சாமி நீ கடவுள் நீயே

தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்

டிசம்பர் 27 வெள்ளிக் கிழமை

அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக

டிசம்பர் 28 சனிக் கிழமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்

டிசம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச்  செய்வீர்

தேமதுரத்  தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை  செய்தல் வேண்டும்

டிசம்பர் 30 திங்கட் கிழமை

பண்டைச் சிறுமைகள் போக்கி  என் நாவில் பழுத்த சுவைத்

தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே

டிசம்பர் 31 செவ்வாய்க் கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்

Xxxx  subham xxxxx

Bonus Quotes

நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்,அச்சம்  வேண்டேன் அமைதி வேண்டினேன்

xxx

மனத்திற்  சலனம் இல்லாமல் , மதியில் இருளே தோன்றாமல் .

நினைக்கும்பொழுது  நின் மவுன நிலை வந்திட நீ செ யல்வேண்டும்

xxx

கனக்கும் செல்வம்  நுறு வயது  இவையும் தர

நீ கடவாயே

xxxx

தோகைமேல் உலவும் கந்தன் சுடர்க்கரத்து இருக்கும் வெற்றி

வாகையே சுமக்கும் வேலை வணங்குவது  எமக்கு வேலை

xxx

சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை

xxx

ஓம்சக்தி அருளால் உலகில் ஏறு , ஒரு சங்கடம் வந்தால் இரண்டு கூறு

xxxx

இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே

எதற்கும் இனி உலைவதிலே பயன் ஒன்றில்லை

xxxx

ஆயிர வருடம்  அன்பிலா அந்நியர் ஆட்சியின் விளைந்த

அல்லல்கள் எண்ணில

–subham

கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி! (Post No.7144)

கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி! (Post No.7144)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 27 OCTOBER 2019


Time  in London – 5-08 AM

Post No. 7144

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கொங்குமண்டல சதகம்

கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி!

ச.நாகராஜன்

உண்மையாக நடந்த வரலாறு இது. கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த காலம். சோழமண்டலத்தை குலோத்துங்க சோழன் ஆண்டு வந்தான்.

ஒருமுறை காவேரி நதி பெருக்கெடுத்தோடி வெள்ளம் கரையைக் கடந்தது. இதனால் நதியின் இருக்கரையிலும் இருந்த நிலங்கள் பாழாயின. ஊர்கள் அழியலாயின.

அரசனும் அதிகாரிகளும் குடிமக்களும் ஒன்று கூடினர். என்ன செய்வதென்று யோசித்து, பின்னர் அணை கட்டினார்கள். இருந்தாலும் வெள்ளம் அடங்கவில்லை.

குடிமக்கள் அரசனை நோக்கி, “அரசே! கம்பர் பாடினால் கரை நிற்கும்” என்றனர்.

அனைவரும் மஹாகவியாகிய கம்பரைப் பலமுறையும் வேண்டினர்.

உடனே கம்பர்,

River Kaveri Pictures by Lalgudi Veda

கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள்

பொன்னி கரையழிந்து போயினளென் -றின்னீர்

உரை கிடக்க லாமோ வுலகுடைய தாயே!

கரை கடக்க லாகாது காண்

என்ற வெண்பாவைப் பாடினார்.

உடனே நதிப்பெருக்கு அடங்கியது.

பெருமகிழ்வுற்ற மன்னனும், குடிமக்களும் கம்பரை போற்றிப் புகழ்ந்தனர்.

அரசன் கம்பரை நோக்கி,”கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் காப்பாற்றப்பட்டது. இதற்கு யாது கைம்மாறு செய்வேன்” என்று கேட்டான்.

கம்பர் புன்னகையுடன், “அரசே! எப்பொழுதும் அரசனும் குடிகளும் நினைக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆதலின் கலியாண வரி என்று ஒரு வரியை ராஜ்யத்துக்கு மக்கள் செலுத்தி வருகிறார்கள். அதை இதற்கு உதவுங்கள். அது போதும்” என்றார்.

உடனே சோழன் ஒரு சாசனம் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.

கதுவி வருபொன்னி கரைகடவா வண்ணம்

பதுமமுகக் கம்பனவர் பாட – வதுவைவரி

மாடை யரைக்கழஞ்சு வண்கம்பர்க் கீந்தபரி

சேடர் குலோத்துங்க னெழுத்து.

என்ற பாடல் குலோத்துங்கன் ஓலையில் சாசனம் எழுதிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

‘கம்பர்க்கு ஈந்த பரிசு ஏடர் குலோத்துங்கன் எழுத்து’ என்பதில்  ஏடர் என்றால் ஏடு அல்லது ஓலை. ஆகவே சாசனம் என்றாகிறது.

கம்பர் உடனே, “இது என் வல்லமையால் நிகழ்ந்த ஒன்று அல்ல; தெய்வத் தமிழால் நடந்தது. ஆகவே வதுவை வரி எனப்படும் இந்த கலியாண வரியை அத்தமிழுக்கே உரிமை ஆக்குகின்றேன்” என்றார்.

பின்னர் அரசனையும் குடிமக்களையும் நோக்கி அவர், “அரசே! குடிமக்களே! இந்தத் தமிழ்நாட்டின் குடிகளான புலவர் பெருமக்கள் இந்தக் கொங்கு நாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றனர். அரசர்களாலும் குடிகளாலும அவர்கள் ஆதரிக்கப்பட்டு தமிழை நன்கு வளர்த்து வந்தார்கள். இப்போது அவர்களின் செழிப்பு சற்று மலினப்பட்டது போல இருக்கிறது. ஆகவே இந்தக் கொங்கு மண்டலத்தில் கல்யாண காலத்தில் மணமகன் மணமகளை ஆசீர்வதித்து வாழ்த்தும் சமயம்  எனக்குக் கொடுத்த கலியாண வரியை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.

அரசனும் குடிமக்களும் கம்பரின் இந்தப் பெருங்குணத்தை வியந்து போற்றி, அப்படியே ஆகுக என்றனர்.

கம்பர் வாழி பாடி அப்புலவர்களிடம் சாசனத்தைக் கொடுத்துத் தலைமுறை தலைமுறையாக, காலங்களில் வாழி கூறி வரிப்பணத்தைப் பெற்றுத் தமிழை வளர்த்து வாருங்கள் என்று கூறினார்.

கொங்கு நாட்டில் சோழர்களின் ஆதிக்கம் இருந்ததை வரலாறு மூலம் நன்கு அறியலாம்.

கரூர் சோழர்களது ஐந்து முடிசூட்டும் தலங்களின் ஒன்றாக இருந்தது.

ஜயங்கொண்ட சோழேச்சுரம்

கரிகாலச் சோழேச்சுரம்

பராக்கிரம சோழேச்சுரம்

விக்கிரம சோழேச்சுரம்

குலோத்துங்க சோழேச்சுரம்

குலோத்துங்க விண்ணகரம்

என இப்படிப் பெயர் பெற்ற பல சிவ, விஷ்ணு ஆலயங்களும் இங்கு உள்ளன.

பல சிலாசாசனங்களும் உள்ளன. பிரபந்தங்களும் உள்ளன.

குலோத்துங்கன் காலத்தில் காவேரி கரை கடந்தது என்றும் கம்பர் பாட அது அடங்கிற்றென்றும் கூறும் பல பிரபந்தங்களும், சாசனங்களும் உள்ளன.

கம்பர் காலத்தில் இருந்தவன் இரண்டாம் குலோத்துங்கன் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.

இந்த அழகிய வரலாற்றைக் கொங்கு மண்டல சதகத்தின் முப்பதாவது பாடல் இப்படி விளக்குகிறது :-

கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே

பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்

பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச்செய்

மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே

பொருள் : ‘கன்னியழிந்தனள்’ என்று தொடங்கும் பாட்டை கம்பர் பாடும் படி செய்த கங்கா குலத்தவர்கள் வசிப்பதும் கொங்கு மண்டலமே!

***

Kambar Samadhi, Nattarasankottai, picture sent by Venkat Kannan

–subham–

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி (Post No.7117)


WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com

Date: 20 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 16-53
Post No. 7117

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை  (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.

முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –



பாரதிக்குப் பிடித்தவர்

சைவ உணவுக்காரர், vegetarian

நாஸ்திகர், atheist 

பாரதி போலவே இளம் வயதில் மரணம்.

ஆனால் இலக்கிய உலகில் அழியா இடம்பெற்றவர்.

பிரெ ஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரத்தால் (Liberty, Equality, Fraternity) ஈர்க்கப்பட்டவர்.

அவரைப் பற்றி பெர்னாட் ஷா (Bernard Shaw) சொன்னதையும் படியுங்கள்:–

PERCY BYSSHE SHELLEY PROFILE

SHELLEY, English Poet, Novelist and Essayist

Born August 4, 1792

Died July 8, 1822

Age at death 29

Publications

1810 Zastrozzi

1813 Queen Mab

1816 Alastor

1818 The Revolt of Islam

1818 Ozymandias

1819 The Cenci

1820 Prometheus Unbound

1821 Adonais

Published after he died

1824 The Triumph of Life

Shelley was Tamil Poet Bharatiyar’s favourite poet.

ஷெல்லி | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › ஷெல்லி

  1.  

Translate this page

17 Oct 2015 – நமது பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆங்கிலக் கவிஞர். … ‘ஸார், நான் பேயை எழுப்பிக் கொண்டு இருக்கிறேன்’– என்றார் ஷெல்லி.

பாரதியார் நூல்கள் – 44, வரகவி …



https://tamilandvedas.com › 2017/12/03 › பாரதிய…

  1.  

Translate this page

3 Dec 2017 – அக்காலங்களில் எல்லாம், நம் கவிஞர் ஷெல்லி தாஸன் என்ற புனைபெயருடன் பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்தார்.

–subham–

கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்! (Post No.7068)

WRITTEN by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am
Post No. 7068

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

7-10-2019 சரஸ்வதி பூஜை. இதையொட்டி 6-10-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்!

ச.நாகராஜன்

கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம் யார்?

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,

      தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்,

உய்வம் என்ற கருத்துடையோர்கள்

     உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம்

செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர்

      செம்மை நாடிப் பணிந்திடும் தெய்வம்

கைவருந்தி உழைப்பவர் தெய்வம்

     கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – சரஸ்வதியே தான்.

‘சரஸ்வதி தேவியின் புகழ்’ என்ற கவிதையில் இப்படிக் கூறும் மஹாகவி பாரதியார் கலைமகளைக் கொண்டாடிப் பாடிய பாடல்கள் நிறைய உள்ளன.

‘ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாலையினாளைத்’ தொழுதால் என்னென்ன பெறலாம் என்று அவரே பட்டியலிட்டுத் தருகிறார்.

தான் என்னும் பேய் கெடும்.

பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படும்.

வான் என்னும் ஒளி பெறலாம்.

நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடும்.

ஊனங்கள் போக்கிடலாம்.

நல்ல ஊக்கமும் பெருமையும் பெறலாம்.

இதை விட வேறு என்ன வேண்டும், ஒரு மனித வாழ்க்கையில்?

அவ்ள் எங்கிருப்பாள் என்பதையும் அவரே அருமையாக விளக்கி விடுகிறார்:

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்.

கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்,

வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்.

முனிவர்கள் கூறும் கருணை வாசகத்தின் உள் பொருளில் இருப்பாள்.

சாஸ்த்ர புராண நாடக மஹா காவ்யாதி சஞ்சாரிணீம் என  இலக்கியங்களில் சஞ்சரிக்கும் அவளைப் புகழ்கிறது சரஸ்வதி ஸ்தோத்திரம்.

கவிஞர் தெய்வம் என்று பாரதியார் கூறியதை அப்படியே பலர் வாழ்க்கையிலும் கண் கூடாகக் காணலாம்.

காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

ஸ்ரீ வைகுண்டத்திலே பிறந்த குமரகுருபரருக்கு ஐந்து வயது வரை பேச்சு வரவில்லை. திருச்செந்தூர் முருகனைத் தொழ அவர் நாவிலிருந்து கவி மழை அருவியெனப் பொழியத் தொடங்கியது. கந்தர் கலி வெண்பாவைப் பாடினார்.

பின்னர் தல யாத்திரை மேற்கொண்டு வட தேசம் சென்று காசியை அடைந்தார். அங்கு ஒரு மடத்தை நிறுவி இறைப்பணி செய்ய நினைத்தார். அதற்கென காசியை ஆண்ட பாதுஷாவைச் சந்திக்க விரும்பினார்.

பாதுஷாவிற்கோ ஹிந்துஸ்தானி மொழி மட்டுமே தான் தெரியும்.

குமரகுருபரர் கலைமகளை வேண்டி மனமுருகிப் பாடினார். பத்துப் பாடல்களைக் கொண்ட சகலகலாவல்லி மாலை மலர்ந்தது.

சகலகலாவல்லி ஆயிற்றே, அவள் அருளால், ஒரு கணத்தில் ஹிந்துஸ்தானி பாஷையில் வல்லவரானார் குமரகுருபரர்.

பாதுஷாவின் அவையில் நுழைந்தார். அரியாசனத்தில் அமரிந்திருந்த பாதுஷா அவரை நிற்க வைத்துப் பேசுவதைக் கண்ட குமரகுருபரர் அரியாசனத்திற்கு நிகரான சரியாசனமாக ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் மேலேறி அமர்ந்தார்.

பாதுஷா திகைத்தார்; பிரமித்தார். அவரது பல சந்தேகங்களைத் தீர்த்த குமரகுருபரர் அவருக்கும் அருள் பாலித்தார்.

பாதுஷா அவரது இறைப்பணிக்கு உதவிகள் செய்ய முன் வந்தார். காசித் திருத்தலத்தில் காசி மடம் உதித்தது.

 தென்னாடு வந்த அவர் திருப்பனந்தாளில் மடத்தை நிறுவினார்; அது இப்போதும் செய்யும் இறைத்தொண்டை அனைவரும் அறிவர்.

திருமலை நாயக்கரின் அரசவையிலே குமரகுருபரர் ஆற்றிய அற்புதங்கள் பல.

‘பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிதெய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே’

என்று அவர் சகல கலாவல்லியைத் தொழுத பாடல் உள்ளிட்ட சகல கலாவல்லி மாலையின் பத்துப் பாடல்களையும் தினமும் ஓதினால் அன்னை கலைமகள் அருளைப் பெறலாம் என்பது திண்ணம்.

சரஸ்வதி தேவியைத் துதித்தால் அவள் அருளால் ‘தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகும்’ என்பது அவரது சத்திய வாக்கு..

கம்பரோ ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’யைத் துதித்தால் ‘கல்லும் சொல்லாதோ கவி’ என்று கேட்கிறார்.

30 பாடல்கள் கொண்ட சரஸ்வதி அந்தாதியைப் பாடிய கம்பர் கலைமகளைத் துதித்தால் எதையும் ‘துணிந்து சாதிக்கலாம்’ என்ற பெரிய ரகசியத்தைப் பாடலிலேயே கூறுகிறார்.

அவர் பத்தாயிரம் பாடல்களால் இராமாயணம் பாடித் துணிந்து சாதித்தது சரஸ்வதி அருளாலேயே என்பது இதனால் பெறப்படுகிறது.

தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கூத்தனூரில் உள்ளது.

ஒட்டக்கூத்தர் என்னும் பெரும் தமிழ்ப் புலவர் இங்கு வழிபட்டு அன்னையின் அருளைப் பெற்று பெரும் கவிஞராகி ‘கவி ராட்சதன்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றார். அவரே பூந்தோட்டம் என்னும் ஊரில் சரஸ்வதிக்குக் கோவில் அமைத்தார்; அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் வெண்ணிற ஆடையுடன் வெண்தாமரையில் பத்மாசனத்தில் சரஸ்வதி தேவி வீற்றிருக்க அவர் வலது கீழ் கையில் சின் முத்திரை உள்ளது. இடது கையில் புத்தகமுள்ளது. வலது மேல்கையில் அட்சர மாலையும் இடது மேல் கையில் அமிர்தகலசமும் உள்ளது.

பழம் பெரும் புனித நூலான ரிக் வேதத்தில் சரஸ்வதியைப் பற்றிய் பல குறிப்புகளைக் காணலாம்.

யாக்ஞவல்க்யர் என்ற பெரும் முனிவர் சரஸ்வதியைத் துதிக்க அவர் முன் தோன்றி ஓம் என்பதைச் சொல்லி அனைத்து அட்சரங்களையும் சரஸ்வதி அருளினாள் என மஹாபாரதம் சாந்தி பர்வம் தெரிவிக்கிறது.

சரஸ்வதி என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

சரஸ் என்றால் நீர். ஆக சரஸ்வதி என்பது தெய்வீக நதியான சரஸ்வதி நதியைக் குறிக்கிறது. அத்துடன் மட்டுமன்றி பெரும் நீர்நிலைகளையும் குறிக்கிறது.

இன்னொரு பொருள் சரஸ் என்றால் வாக்கு அல்லது பேச்சு;

வதி என்றால் தரித்திருப்பவள். ஆக சரஸ்வதி என்ற சொல்லுக்கு வாக்தேவி அல்லது வாணி என்ற பொருளும் ஏற்படுகிறது.

ஸ்வாமி சின்மயாநந்தர், ‘ஸ்வ’ என்றால் ஒருவரின் ஆன்மா என்றும் ‘சார’ என்றால் சாரம் என்றும் அர்த்தம் கூறி சரஸ்வதி என்றால் ஒருவரின் ஆன்மாவின் சாரத்தைத் தருபவள் (She who gives the essence (Saara) of our own Self (Sva)) என்று விளக்குகிறார்.

சரஸ்வதியின் வாகனம் ஹம்ஸம். சரஸ்வதியின் பூஜைக்கு உகந்த மலர்கள் வெண்தாமரை மற்றும் செந்தாமரை மலர்கள்.

சில்ப சாஸ்திரம் 12 விதமான சரஸ்வதி சிற்பங்களை விளக்குகிறது; 1) வாக் சரஸ்வதி 2) வித்யா சரஸ்வதி 3) கமலா 4) ஜயா 5) விஜயா 6) சாரங்கி 7) தம்புரி  8) நாரதி 9) சர்வ மங்களா 10)  வித்யா தாரி 11) சர்வ வித்யா 12) சாரதா

சரஸ்வதி தேவியின் கீழ்க்கண்ட 12 பெயர்களை புராணங்கள் விவரிக்கின்றன.

  1. பாரதி 2) சரஸ்வதி 3) சாரதா தேவி 4) ஹம்ஸவாஹினி 5) ஜகதி க்யாதா 6) வாகீஸ்வரி 7) குமுதி 8) ப்ரஹ்மசாரிணி 9) புத்திதாத்ரி 10 ) வரதாயினி 11) சந்த்ரகாந்தி 12) புவனேஸ்வரி

தேவியின் ஆயிரம் திரு நாமங்களை சரஸ்வதி சஹஸ்ரநாமமும் சரஸ்வதி அஷ்டோத்திரம் தேவியின் 108 திருநாமங்களையும் தருகின்றன.

சரஸ்வதிக்கு ஸ்ரீ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இதனால் அனைத்தும் அருள்பவள் சரஸ்வதி என்பது பெறப்படுகிறது.

 சகல கலாவல்லி மாலை, சரஸ்வதி சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டகம், சரஸ்வதி சூக்தம், சரஸ்வதி கவசம் மற்றும் சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் ஏராளம் உள்ளன. இவற்றால் சரஸ்வதி தேவியை வழிபடலாம்; சுடர் விடும் அறிவைப் பெறலாம்.

பாரத நாடெங்கும் சரஸ்வதி தேவிக்கான ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பித் தகுந்த சிலவற்றைப் பார்க்கலாம்.

பெஹோவா : ஹரியானா மாநிலத்தில் குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள ஊர் இது. இதன் பழைய காலப் பெயர் ப்ரூதக்.

மன்னன் ப்ருது, தான் இறக்கும் சமயம் சரஸ்வதி நதிக் கரையில் இறக்க விரும்பியதால் அவனது மகன் அவரை அங்கு அழைத்துச் சென்றான். அவர் இறந்தவுடன் அவரது சிரார்த்ததையும் அங்கேயே செய்தான்.

விஸ்வாமித்திரர் இங்கு தான் பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற்றார். இங்குள்ள சரஸ்வதி தேவியின் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

மஹாபாரத காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் அமைந்த நகர் இது.

 பிலானியில் உள்ள சரஸ்வதி ஆலயம் : 1959ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஜி.டி. பிர்லாவினால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்த ஆலயம் 70 தூண்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரா : உத்தரபிரதேசத்தில் மதுரா நகருக்கு மேற்கே ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது. மஹாவித்யா தேவி ஆலயம் என அழைக்கப்படும் இதன் அருகில் சரஸ்வதி குண்ட் என்ற குளமும் உள்ளது.

சிருங்கேரியில் உள்ள பெருமை மிக்க சாரதா பீடம் விளக்க முடியா மஹிமை கொண்ட சரஸ்வதியின் பீடம்.

இன்னும் குஜராத், மஹராஷ்டிரம், பீஹார், காஷ்மீர், கர்நாடகம், மத்ய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் சரஸ்வதி தேவிக்கெனவே பிரத்யேக ஆலயங்கள் உள்ளன.

சரஸ்வதி தேவியை வசந்த ருதுவில் மாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் பஞ்சமியில் நாடெங்கும் கோலகலமாகக் கொண்டாடுகின்றனர். இது சரஸ்வதி தேவி தோன்றிய தினமாக கருதப்படுகிறது.

ஒரிஸாவில் இந்த தினம் சரஸ்வதி பூஜை தினமாகவும் ஆந்திர பிரதேச்த்தில் ஸ்ரீ பஞ்சமியாகவும் கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி தேவியின் சிறப்பு வழிபாடு நவராத்ரியில் அமைகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் பண்டிகை நவராத்ரி.

புரட்டாசி மாதம் அமாவாசை கழிந்த பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடிய ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

காளி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆக மூன்று தெய்வங்களும் மூன்று நாட்கள் வீதம் முறையே வழிபடப்பட்டு ஒன்பதாம் நாளான நவமி அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

துர்க்கா தேவி மகிஷாசுரனை எட்டு நாட்கள் போரிட்டு ஒன்பதாம் நாளன்று நவமியில் வதம் செய்தாள்.

அடுத்த நாள் வெற்றிக்கான விஜய தசமி நாளாக அமைகிறது

இசை, நாடகம் உள்ளிட்ட 64 கலையைப் பயில்பவர்களும் தமக்கு உரிய சாதனங்களுடன் ஆய கலைகள் அறுபத்திநான்கினுக்கும் அதி தேவதையான சரஸ்வதியை வழிபடுகின்றனர்.

 விஜய தசமித் திருநாளை, அடுத்த மேல் நிலையை அடைவதற்கான துவக்க நாளாகக் கொள்கின்றனர்.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்டளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும் விளம்பில் உன் போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே என வாக் தேவியைத் துதித்து வளம் பெறுவோமாக!    

***

பாரதியும் கிரேக்க மன்னன் பிர்ரஸும் (Post No.7002)

WRITTEN BY London Swaminaathan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 16-45

Post No. 7002


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

கிரேக்க மன்னன் பிர்ரஸ் (Pyrrhus of Epirus, 318- 272 BCE) உலகையே வென்ற பின்னaர் சின்ன வீடு கட்டி சுகமாக இருக்கப் போவதாகச் சொன்னான். பாரதியோ உலகையே வெல்ல நினைக்காமல் காணி நிலம் போதும் என்றார். அவர் ஒரு வேதாந்தி. இதோ பிர்ரஸுக்கும் வேதாந்திக்கும் நடந்த வாக்குவாதமும் பாரதி பாடலும்:-