Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
இந்து
மதக் கதைகளை எல்லாம் ‘காப்பி‘ அடித்து, ஜாதகக் கதைகளில் புத்த மதக்
கதைகளாக்கிவிட்டனர். அதில் ராமாயணம், மஹாபாரதம் கூடப் போதிசத்துவ அவதாரத்தில் வந்ததாகக் கூறப்படும். இதே
போல விஷ்ணு பத்து முதல் 24
அவதாரங்கள் எடுத்ததாக நமது புராணங்கள் கூறுவதற்குப் போட்டியாக போதிசத்துவர்
நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததாக எழுதிவிட்டனர். இது போல மற்றொரு ‘காப்பி‘ அடித்த விஷயம் மஹாபாரதத்திலுள்ள யக்ஷப்
பிரஸ்னம் ஆகும். தண்ணீர் எடுக்க குளத்துக்குப் போன 4 பாண்டவர்கள் இறந்துபோனவுடன், ஐந்தாவதாகப் போன தர்மபுத்திரன் (யுதிஷ்டிரன்) யக்ஷனின்
கேள்விகளுக்குச் சரியான பதில்களைக் கூறுகிறான். இது மிக நீண்ட கேள்வி-பதில் பகுதி.
இது மஹா பாரதத்தில் மிகவும் புகழ்பெற்ற சம்பவம். ஒவ்வொரு பதிலும் ஒரு பொன்மொழி.
இந்த
மஹாபாரத யக்ஷப் பிரஸ்னத்துக்குப் போட்டியாக உள்ள பகுதியில் புத்தரை ஒரு தேவதை
கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் பதில் சொன்னதாகவும் எழுதிவிட்டனர். புத்தர்
உயிர்வாழ்ந்தவரை இப்படிச் செய்யவில்லை. அவர் இறந்தபின்னர் இப்படிக் கதை
கட்டிவிட்டனர்.
இதோ புத்த மத யக்ஷப் பிரஸ்னம். இது மலேயாவில் இருந்து 1958ம் ஆண்டு வெளியான நவரசம் பகுதியில் வெளியானது-
xxx
பாரதியாரும்
தமிழ் இசையும்
தமிழிசை இயக்காத்தை 1940களில் செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியார் முறையாகத் துவக்கிவைத்தார். அதற்கு முன்னதாகவே இது பற்றி கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி எழுதி வந்தார். ஆனால் அவர்களுக்கும் முன்னதாக பாரதியார் தமிழில் கீர்த்தனைகள் பாடுவது பற்றியும், மற்ற மொழி பாட்டுகளைப் பொருள் தெரிந்து பாடுவதையும் ஆதரித்து எழுதி வாந்தார். புத்தரின் கேள்வி பதிலுக்குக் கீழே (1958ல்) பாரதியாரின் மேற்கோளைப் படியுங்கள்.
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய
நூல்கள் – 60 – பகுதி 2
டி.என்.இராமச்சந்திரன் எழுதியுள்ள ‘வழி வழி பாரதி’
ஐந்தாவது அத்தியாயமான ‘அரியதில் அரிய பாரதி’யில் ‘ நாம்
அறிந்த பாரதியை விட நாம் அறியாத, அறிய முடியாத பாரதியைப்’ பற்றி ஆராயப்
புகுகிறார் நூலாசிரியர் சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரன். ஆய்வின்
முடிவில் அரிய பாரதியைக் காண்கிறோம்.
பாரதியார் கையாண்ட சொற்கள் 82 சதவிகிதம் Classical Tamil Diction
(செவ்விய தமிழ்ச் சொற்கள்) என்ற அரிய தான் கேட்ட தகவலைத் தரும் நூலாசிரியர் பாரதியாரின்
வார்த்தைகளுக்குத் தவறான பொருள் கொள்ளுதலைச் சுட்டிக் காட்டி எப்படி சரியாகப் பொருளைக்
கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
இரு எடுத்துக் காட்டுகள்:
பாரத மாது தானே பணித்தன்று (வேல்ஸ் இளவரசரை வரவேற்று இயற்றிய
பாடல்) என்றால் பணித்தது அன்று என்று பொருள் கொண்டு பக்கம் பக்கமாக அடுக்கிச் செல்லும்
பாரதி அன்பரைப் பற்றி என்ன சொல்ல?
பணித்தன்று என்றால் பணித்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.
காணி நிலம் என்றால் 8 மனை;மனை ஒன்றுக்கு 2400 சதுர அடி என்று
பொருள் கொண்டு சிலர் கணக்கிடுவது தவறு; காணி என்றால் உரிமை என்று பொருள். எனக்கென்று
சிறிய நிலம் வேண்டும்; அது உரிமை நிலமாக இருத்தல் வேண்டும் என்கிறார் பாரதியார்.
ஆறாவது அத்தியாயம் “ ‘பாரதி நாமம் வாழ்க’.
தவம், முக்தி, யோகி, நல்ல தொழில் போன்ற பல சொற்களுக்கான விளக்கங்களை
பாரதி குறைந்த சொற்களில் விளக்கும் பான்மையை வியந்து போற்றி இதில் விளக்கம் தரப்படுகிறது.
ஏழாவது அத்தியாயம் : மகாகவி பாரதியின் சிரிப்பும் சீற்றமும்.
இதில் பாரதியாரின் ஆன்மீக புத்திரரான திருலோக சீதாராமின் பாரதி பற்றிய பல கருத்துக்களைக்
கண்டு மகிழலாம்.
எட்டாவது அத்தியாயம் : பாட பேத பூதங்கள்
ஏராளமான பாட பேதங்கள் பாரதியாரின் பாடல்களில் உள்ளன. சில வலிந்து
புகுத்தப்பட்டன (விஷம நோக்குடன்); சில அச்சுப் பிழைகளாக வந்துள்ளன.
சாரு மானுடமாயினும் என்பது சாகு மானுடமாயினும் ஆகி இருக்கிறது.
நல்ல ஒளியின் வகைபல கண்டுளன் வெண்ணிலாவே என்பதை நல்ல ஒளியின்
வகைபல கண்டிலன் வெண்ணிலாவே என்று மாற்றி விட்டனர்!
இது போல ஒரு நீண்ட பட்டியலைக் காணலாம்.
ஒன்பதாம் அத்தியாயமான மகாகவி பாரதியாரும் ஷெல்லியும் இரு பெருங்
கவிஞர்களை ஒப்பிட்டு மகிழ்கிறது; நம்மை மகிழ்விக்கிறது!
பத்தாம் அத்தியாயம் பாரதியாரையும் புஷ்கினையும் ஒப்பிடுகிறது.
பதினொன்றாம் அத்தியாயம் பாரதியாரையும் ரூமியையும் ஒப்பிடுகிறது.
பனிரெண்டாம் அத்தியாயம் பாரதியாரையும் மில்டனையும் ஒப்பிடுகிறது.
பதிமூன்றாம் அத்தியாயம் பாரதியாரையும் ப்ரௌனிங்கையும் ஒப்பிடுகிறது.
பதினான்காம் அத்தியாயம் பாரதியாரையும் ஃபிரான்ஸிஸ் தாம்ஸனையும்
ஒப்பிடுகிறது.
சில கருத்துக்களை மட்டும் இங்கு பார்க்கலாம்:
ஷெல்லி : This
habitable earth is full of bliss
பாரதியார் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!
புஷ்கின் : எழுக கவிதை! எழுக அறிவு!
ஏற்றுவோம்
இவற்றை இனிய பாடலில்
ஞான ஞாயிறே,
ஒளிர்க, ஒளிர்கவே!
உண்மை அறிவின்
தேயா ஒளியில்
உன்
ஒளி அதனின் ஒரு சிறு கீற்றில்
ஓய்ந்தொழிந்ததே
பொய்மை எலாம்
வாழ்க நீ,
ஒளியாய், பகலே!
வீழ்க, வீழ்கவே, இருளும், இரவும்!
பாரதியார் : பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட் கணம் போயின யாவும்
எழு பசும்
பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
ரூமி : உள்ளதும் நான், அல்லதும் நான்
நீர் அறிகின்ற
ஜலாலுதீன் நான்
ஆஹா! கேளீர் நான்
சொலு வார்த்தை
நான் தான்
அனைத்தின் ஆன்மா காண்
பாரதியார் : வானிலே பறக்கின்ற புள்ளெலாம் நான்…
ஆன பொருள்கள்
அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய்,
விளங்கு முதற் சோதி நான்
மில்டன் : அகத்தே ஒளிர்க
பாரதியார் : தீயினை நிறுத்திடுவீர்!
நல்ல தீரமும்
தெளிவும் இங்கருள் புரிவீர்!
ப்ரௌனிங் : A tincture
Of force to flush old age with youth
பாரதியார் : I will age into youth
ஃபிரான்ஸிஸ் தாம்ஸன் : Till Time, the hidden root of
change, updries
பாரதியார் : காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும்
பாரதியை ஆழ்ந்து பயில இந்தப் புத்தகத்தை பாரதி ஆர்வலர்கள் படிக்க
வேண்டும். பரந்து பட்ட உலகப் பார்வையில் பாரதி உயர்கிறான்; அதை ஓர்ந்து நாமும் உயர்கிறோம்.
பாரதி இயல் பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம்
இது!
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய
நூல்கள் – 60 – பகுதி 1
டி.என்.இராமச்சந்திரன்
எழுதியுள்ள ‘வழி வழி பாரதி’
சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரன் சேக்கிழாரில்
தோய்ந்தவர். இவரில் சேக்கிழாரில் மட்டும் தோய்ந்தவர் அல்ல, பாரதியிலும் தோய்ந்தவர்
என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது.
நன்கு ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் இது.
400 பக்கம் கொண்ட நூல் 14 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.
2000, டிசம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த நூலை ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர்
சென்னை – 35 பதிப்பிட்டுள்ளது.
நூலுக்கு அறிமுக உரையைத் தந்து சிறப்பித்துள்ளவர்
ஆகப் பெரும் தமிழறிஞரான தி.வே.கோபாலையன் ஆவார்.
அவர் தனது உரையில் கூறுவது இது :-
“பாரதியாரை ஓரளவு உணர்வதற்கு அவரிடத்து உபாசனை, அவரை
உபாசித்து உயர்ந்தவர்களின் நட்பு, பழுத்த தமிழ்ப்புலமை, பாரத தேயப் பொது மொழியாகிய
வடமொழி அறிவு, உலகப் பொது மொழியாகிய ஆங்கிலத்தில் தேர்ந்த புலமை, பாரதியாரின் பெருமையை
ஏனைய மொழிப் பெருங்கவிஞரோடு ஒப்பிட்டுக் காணுதற்கு உரிய கூர்த்த நுண்ணறிவு என்பன இன்றியமையாதன.”
“ பாரதியாரை உணர்தற்கு உரிய மேற்குறித்த தகுதிகள்
யாவும் குறைவறப்பெற்று அவர் கவிதைகள் முழுதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ள
இந் நூலாசிரியர் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன் அவர்கள் பாரதியாரை உணர்ந்து
நமக்கு உணர்த்துதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர். மரபு நிலை திரியா மாண்புடைய பாரதியார்
உலகச் சான்றோர் வழி வந்த மூதறிஞர் என்பதனை மக்களுக்குப் புலப்படுத்தவே இந்த நூல் எழுந்துள்ளது.”
பேரறிஞரே
இப்படி மதிப்பீட்டு உரை வழங்கிய பின்னர் நாம் பரவசப்பட்டு புத்தகத்தை படிக்க ஆரம்பிக்க
வேண்டியது தானே!
பாரதியாரைப் பற்றிய பல பொய்ச் செய்திகள் ஊடகங்கள்
வாயிலாகத் திட்டமிட்டு பரப்பப்படுவது பற்றி நூலாசிரியர் கவலை கொள்வது இயல்பே. பாரதியாரைத்
திரித்தும், மறைத்தும், தனக்கு வேண்டுவனவற்றை அவர் மேல் புனைந்தும் அவரை இழிவு படுத்தும் வேலையில்
பலர் இறங்கியுள்ளது உண்மையே.
ஆகவே
பாரதியாரை “உள்ளது உள்ளபடி” அறிய வேண்டுவது அவசியமாகிறது.
அதற்கு இந்த நூலாசிரியர் போன்ற நுண்மான் நுழைபுலம் மிக்க பாரதி
அன்பர்களின் பல நூல்கள் தேவை.
‘வழி வழி பாரதி’ என்ற முதல் அத்தியாயத்தில்
வேத உண்மைகளை பாரதியார் எடுத்துரைக்கும் பாங்கு விவரிக்கப்படுகிறது. பாரதியார் ஒரு
வேத ரிஷி என்பதை நிரூபிக்கும் அவரது பாடல்களையும் தத்துவங்களையும் விளக்கும் நூலாசிரியர்
அவர் தமிழின் தவத் திருமகனாகவும் விளங்குவதை ஆதாரங்களுடன் விளக்குகிறார். சங்க இலக்கியம்,
கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற பாரம்பரிய வழி வழி வந்தவர் பாரதியார் என்பதை ஏராளமான
மேற்கொள்கள் விளக்குகின்றன.
மகிழ்கிறோம். மலைக்கிறோம்.
அடுத்த அத்தியாயமான ‘மகாகவி பாரதியாரின் கவிதை உலகம்’ அவர் வாழ்க்கையின்
முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறது.அத்தோடு பாரதியாரின் இளமைக் காலப் பாடல்கள்,
பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை
பற்றிய ஒரு சிறந்த திறனாய்வையும் இந்த அத்தியாயம் தருகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம்,
சம்பந்தர் தேவாரம், லாங்ஃபெலோ கவிதை என ஏராளமான பாடல்களுடன் பாரதியாரை ஒப்பீடு செய்து
ஆதாரங்களுடன் அவரது கவித் திறத்தை நூலாசிரியர் விளக்குகிறார்.
அடுத்து வரும் ‘பாரதி தமிழ்’ என்ற அத்தியாயத்தில்,
“Bharati is
too great a theme for me’ (என் வீச்சுக்கு உட்படாத சாலப் பெரியோன் பாரதி) என்ற கே.எஸ்.வெங்கடரமணியின்
கூற்றை மேற்கோள் காட்டும் நூலாசிரியர், “எளியோனால் என்ன சாதிக்க முடியும்?”
என்று கேட்கிறார். ஆனாலும் சாதிக்கிறார் நன்கு!
மெல்லிது என்று வள்ளுவன் கூறிய சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்
எது? Soft என்று கூறலாமா?
இல்லை, இன்னும் கூடுதலான பொருள் பொதிந்தது அல்லவா இது? Tender? ஊஹூம்!
Delicate? ஊஹூம்! Subtle?
மெல்லிது, மெல்லிது தான்!
‘இதே போல சொல்லை உபாசித்த ப்ரம்மரிஷி நமது பாரதி’ என்று கூறும்
நூலாசிரியர், உதாரணங்களாக நம் முன் பல வரிகளை வைக்கிறார்:
வான மளந்த தனைத்து மளந்திடும்
வண் மொழி வாழியவே
விண்ணை இடிக்கும் தலை யிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறன் உடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை
அன்னை எனப் பணிதல் ஆக்கம்
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்
அடுத்து பாரதியார் பாடல்களில் வேதாந்தக் கருத்துக்கள் என்ற அத்தியாயத்தில்
பாரதியாரின் வேதாந்தக் கருத்து விளக்கத்தைக் காண முடிகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
தரப்படும் கருத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியத்தில் ஆரம்பித்து தேவார,
நாலாயிர திவ்ய பிரபந்தம் ஈறாக உள்ள கருத்துக்களுடனும் சொற்களுடனும, உரசப்பட்டு, ஒப்பிடப்பட்டு
நம் முன் வைக்கப்படும் போது பிரமிக்கிறோம்.
அடுத்த அத்தியாயங்களையும் பார்த்து விட்டால் இந்த நூல் பற்றி
முழுவதுமாக அறிந்து கொண்டவர்களாவோம்.
ரகமி (இயற்பெயர் டி.என்.ரங்கஸ்வாமி) வாஞ்சிநாதனைப் பற்றி இரு
தொடர்களை தினமணி கதிரில் எழுதியுள்ளார்.
ஆஷ் கொலை வழக்கு என்ற
தொடரைப் பற்றி இந்தத் தொடரில் (கட்டுரை எண் 4364; வெளியான தேதி – 4-11-17) மஹாகவி
பாரதியார் பற்றிய நூல்கள் – 42 என்ற கட்டுரையில் பார்த்தோம்.
அவர் வீர வாஞ்சியைப்
பற்றி எழுதியுள்ள இந்தத் தொடரில் பாரதியார் பற்றிய அரிய செய்திகள் இடம் பெறுவதால் இந்த
நூலை இங்கு பாரதி ஆர்வலர்களுக்குக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
இந்தத் தொடர் தினமணி
கதிரில் 5-6-1983 இதழில் ஆரம்பிக்கப்பட்டு 30-10-1983 இதழில் முடிக்கப்பட்டுள்ளது.
22 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தத் தொடர்.
இது புத்தகமாக வெளி வந்துள்ளதா என நிச்சயமாகத் தெரியவில்லை;
ஆயின் புத்தகமாக வெளிவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதை உறுதியாக அறிய முடிகிறது.
ஆஷ் கொலை வழக்கு
தொடரில் பாரதியார் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் இங்கு மீண்டும் இடம் பெறுகின்றன.tamilandvedas.com,
swamiindology.blogspot.com
புதுவை தேசீய வீரர்கள்
பற்றிய பல விஷயங்களையும் பாரதியாரின் நண்பர்களைப் பற்றியும் நூல் குறிப்பிடுகிறது.
ஆஷ் கொலை வழக்கு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள போஸ்ட் ஆபீஸ் தகவலை
இதிலும் காண்கிறோம்.
அத்தியாயம் 8இல் வரும் தகவல் இது:
“சில நாள் தபாலாபீசுக்கே தபால் கட்டுகள் தாமதமாக வரும். அன்றும்
கவி பாரதியாரே தபாலாபீசுக்கு வந்திருப்பார். காலதாமதமாக தபால்கட்டுகள் வந்ததினால் போஸ்ட்மாஸ்டரால்
கவி பாரதியார் வந்திருப்பதையும் கவனிக்க முடியாத நிர்ப்பந்தமான வேலை நேரம்.பரிசீலனை
செய்ய வேண்டிய தபால்களிலும் தாமதம். இந்த தாமதங்களைக் கவி பாரதியாரால் பொறுத்துக் கொள்ளாமல்
முதலில் சாதாரணமாகக் கூப்பிடும் ‘போஸ்ட்மாஸ்டர்’ என்ற விதம்
போய் கோபத்தோடு, “என்ன, எம்.கே. ஸ்ரீனிவாசய்யங்காரே!”யென இனிஷியலோடு
கணீரென்று குரல் கொடுப்பாராம். இவரது குரலைக் கேட்டு போஸ்ட்மாஸ்டர் திடுக்கிட்டு,
‘மன்னிக்கணும், இன்னிக்கு கட்டு லேட். கொஞ்சம் உள்ளே வந்து உட்காரலாமே. உங்கள் தபால்களைத்
தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்பாராம்.
“என்னய்யா, பரிசோதனை வேண்டியிருக்கு?அவைகளை அப்படியே கொடுத்தாலென்ன..
அதில் என்ன அப்படிப்பட்ட ரகசியத்தைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்?” யென்று பாரதி
கேட்பதுண்டு. என்ன சொல்வது? ‘ராஜாங்க உத்தரவாயிற்றே!’ என்று போஸ்ட்மாஸ்டர்
கூறும் போது, “சீ,சீ, கேவலம் நாயும் கூட இந்தப் பிழைப்பு பிழைக்குமே!” என்று கத்தி
விட்டு வேகமாகத் திரும்பிச் சென்று விடுவாராம் பாரதி.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
பீச்சில் நடந்த
ஒரு சம்பவத்தை 15ஆம் அத்தியாயம் விவரிக்கிறது. போஸ்ட்மாஸ்டர் தபால்களைக் கொடுப்பது
பற்றிய விஷயம் தான் இதுவும். பாரதியார் உள்ளிட்ட அனைவரும் குழுமியிருந்த போது நடந்தது
இது.
அங்கிருந்த வாஞ்சி, அவர் தபாலைத் தாமதிக்காமல் ஒழுங்காகக் கொடுத்தால்
தான் நல்லது ; இல்லாவிட்டால் இவரை இந்த ஊரில் தாமசிக்காமல் செய்து விட்டால் போச்சு” என்கிறார்.
மாடசாமியைப் பற்றிய
அரிய தகவல்களை 22ஆம் அத்தியாயம் தருகிறது.
அவரை பாரதியார் ஒரு இரவு தன் வீட்டிலேயே தங்கச் சொன்ன தகவலை
இதில் காண்கிறோம்.
மொத்தத்தில் வீர வாஞ்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட
நூல் என்பதால் இது சுதந்திரப் போர் பற்றிய – அதில் குறிப்பாக தமிழகம் பற்றிய – ஒரு
ஆய்வு நூலாக அமைகிறது.
அதில் பாரதியார் சம்பந்தப்பட்ட செய்திகளை நன்கு ஆதாரபூர்வமாக
அறியவும் முடிகிறது.
நூலை எழுதியுள்ள ரகமி பாராட்டுக்குரியவர்; வெளியிட்ட தினமணி
கதிர் ஒரு அரிய சேவையைச் செய்திருக்கிறது.
மஹாகவி
பாரதியாரின் கவிதைகளில் 803 உவமைகள் இடம் பெற்றுள்ளதாக நூலாசிரியர் சிவ.மாதவன் தெரிவிக்கிறார்.
இதில் 533 உவமைகள் உவம உருபு பெற்றுள்ளன. 270 உவமைகளில் உவம
உருபு தொக்கி வந்துள்ளது.
உருபு தொக்கி நிற்கும் உவமை :-
இதற்கு எடுத்துக்காட்டாக,
‘மதுரத் தேமொழி மங்கையர்’
‘நண்ணுமுக வடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்’
‘கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ’
என்பனவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
எடுத்துக்காட்டு உவமையுடன் வினாவை இணைத்து பாரதி பாடிய பாடலின்
ஒரு பகுதி இது:
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்
மின்மினி கொள்வாரோ?
கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
இல்பொருளுவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு இதோ:
குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்
கொட்டிக் குதித்தாடுவான்.
இல்லாத ஒன்றை உவமையாக்கை உரைப்பது இல் பொருள் உவமை. மலை குதிப்பது
போல துரியோதனன் குதித்து ஆடுவான் என்பது அருமையான
இல்பொருளுவமை.
பாரதியாரின்
பாடல்களில் உருவக அணியும் ஏராளமாக உள்ளது.
21 வகை
உருவகங்களில் பாரதியாரின் பாடல்களில் ஐந்து வகை உருவகங்களைக் காண முடிகிறது.
ஆகிய
என்ற சொல் இல்லாமல் வரும் தொகை உருவகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:
‘தொல்லைதரும்
அகப்பேய்’
‘காமப்பிசாசைக்
– குதிக்
கால்கொண்டடித்து
விழுத்திடலாகும்’
‘நல்ல
னெந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்’
இம்மூன்றிலும்
அகப்பேய், காமப்பிசாசு, துயர்க்கடல் என்பன தொகை உருவகங்களாகும்.
இன்னும்
வஞ்சப்புகழ்ச்சி அணி, பெருமை அணி, ஐயவணி, உடனிகழ்ச்சியணி, முரணனி, பொருள்முரண், தன்மேம்பாட்டுரையணி,
சுவையணி ஆகிய அணிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டப்படும் பாரதியாரின் கவிதைகளைப் பார்த்தால்
பாரதியாரை ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்து ஆஹா என்று வியக்க முடிகிறது.
பாரதியாரின்
சொல்லாட்சி தனித்துவம் வாய்ந்த ஒன்று. உள்ளம், விழி, நிலவு, அமுதூற்று, வீசி, அடா,
அடீ போன்ற சொற்களைப் பாரதியார் நயம்படக் கையாண்டிருப்பது வியப்பூட்டும் ஒன்று.
ஒரு பாடல்
முழுதும் குறியீடாக அமையின் அது முழுநிலைக் குறியீடு எனப்படும். இந்த வகையில் பாரதியாரின்
அக்கினிக்குஞ்சு மற்றும் விடுதலை ஆகிய இருபாடல்கள் முழுநிலைக் குறியீடு அமைந்த பாடல்களாக
உள்ளன.
பாரதியாரின்
அற்புதமான கவிதைகளில் உவமைகள் உணர்த்தும் செய்திகள் பல.
ஒவ்வொரு
சொல்லையும் அவர் கையாண்ட விதத்தின் அழகே அழகு.
தீ –
படரும் செந்தீப் பாய்ந்திடுமோர் விழியுடையாள் (பராசக்தியின் கண்களைப் பற்றிப் பாடுகையில்
இப்படிக் கூறுகிறார்)
மின்னல்
: திரௌபதியின் கண் வீசும் ஒளி – மின்செய்கதிர்
நிலவு
: பொங்கிவரும் புது நிலவு, நிலவூறித் ததும்பும் விழி
சிங்கம்
– நரி தந்திடு ஊனுணாச் சிங்கமே என வாழ்தல் சிறப்பு
உலோகம்
(பொன்) – பொன் போல் குரலும்
பொன்னை நிகர்த்த குரலும்
பொன்னங்குழலின்
புதிய ஒலி தனிலே
மேலே
தரும் செய்திகளோடு, இப்படியே மரம், பயிர், புல், கரும்பு, விழல்,மலர்,குன்றம், உணவுப்
பொருள்கள் ஆகியவற்றிற்கான கவிதைகளை சிவ.மாதவன் அழகுற எடுத்துக் காட்டுகிறார்.
இன்னும்
தேச விடுதலை, பெண் விடுதலை, ஆன்ம விடுதலை பற்றிய பாடல்களில் பாரதியாரின் பலவிதமான உவமைகளைக்
கண்டு களிப்படையலாம்.
தன் நூலில்
எடுத்தாண்ட பிற நூல்களின் குறிப்பாக சுமார் 610 குறிப்புகளை இந்த நூலாசிரியர் தருவதன்
மூலமே அவரது ஆராய்ச்சியின் ஆழம் தெரிய வருகிறது.
துணை
நூற்பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களையும், முப்பதுக்கும்
மேற்பட ஆங்கில நூல்கள் மற்றும் கட்டுரைகளின் பட்டியலையும் காண்கிறோம்.
இத்துடன்
அருமையான ஆறு இணைப்புகள் நூலின் இறுதியில் உள்ளன:
வடமொழி
அணியிலக்கண நூல்கள்
தமிழ்
அணியிலக்கண நூல்கள்
பாரதியார்
கவிதைகளில் உவமை அகராதி
பாரதியார்
கவிதைகளில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள்
பாரதியார்
கவிதைகளில் உருவக அகராதி
பாரதியின்
சில புதுமைச் சொற் சேர்க்கைகள்
மேலே கண்டவற்றுள் 3,4,5,6 ஆகிய பகுதிகளை நன்கு
ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் நம் கண் முன்னே புதிய பாரதியார் தோன்றுவார்.
இந்த புதிய பாரதியாரை நம் கண் முன்னே காண வைக்கும்
சிறப்பான ஆராய்ச்சி நூலாக இந்த நூல் திகழ்கிறது.
மீண்டும் நமது பாராட்டுதல்களை சிவ.மாதவனுக்கு
அளிக்கிறோம்.
இந்த நூல் பாரதி ஆர்வலர்களுக்கு ஒரு இன்றியமையாத
நூல் என்பதை மீண்டும் கூறி இதை வாங்குமாறு பரிந்துரை செய்கிறோம்.
மஹாகவி
பாரதியார் பற்றிய அருமையான ஒரு நூலை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
அனைத்து
பாரதி ஆர்வலர்களும் இதைக் கண்டிப்பாகப் படிப்பதோடு ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
448 பக்கங்கள்
கொண்ட இந்த நூல் 2002, அக்டோபரில் Elavalagan Pathippagam, New no 16, Old no 32 First
Floor, Second Street, Balaji Nagar, Royapettah Chennai – 600014 – இளவளகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ
200/.
இது ஒரு ஆய்வு நூல். சென்னைப்
பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து இந்த நூலை ‘முன்னேற்றமடையாத சிற்றூர்ப்புறத்திலிருந்து
வந்து’, முனைவர் சிவ. மாதவன் இதைத்
திறம்படச் செய்துள்ளார்; பாராட்டுக்குரியவர்!
முன்னுரை,
1. அணிகளின் பயன்பாடும் வளர்ச்சியும், 2. பாரதியார் கவிதைகளில் மரபு உவமைகள் 3. பாரதியார்
கவிதைகளில் புதிய உவமைகள் 4. பாரதியார் உவமைகள் உணர்த்தும் செய்தி, முடிவுரை, குறிப்புகள்,
துணை நூற்பட்டியல், இணைப்புகள் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த நூல்.
முன்னுரையில் நூலாசிரியர், “பாரதியார் கவிதைகளில்
அமைந்துள்ள அணிநலக் கூறுகளை விளக்கி அவற்றை மதிப்பிடும் முயற்சி இவ் ஆய்வில் மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே, இவ் ஆய்வில் விளக்கவியல் மற்றும் மதிப்பீடு ஆய்வுமுறை (Descriptive and
Evaluatory method) அணுகுமுறையாக அமைகிறது” என்று குறிப்பிடுகிறார்.
அணிகளின் இன்றியமையாமையையும் வளர்ச்சியையும் பற்றி
சிவ. மாதவன் அழகுற விளக்குகிறார்.
அணி குறித்த விளக்கமாய் நான்கு
கருத்துக்களை அவர் நம் முன் வைக்கிறார் : 1)கவிதையை அழகுபடுத்துவது 2) பொருளைப் புலப்படச்
செய்வது 3) இலக்கியப் புலமைக்கு வளம் சேர்ப்பது 4) அணிமைப் படுத்துவது.
உவமையின் பயன் என்ன? மதுரைக்
காஞ்சியை மேற்கோளாகக் காட்டி ஆசிரியர், ‘அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளைப் பிறர்க்கு
அறிவுறுத்தல்’ என உவமையின் பயனை இவ்வாறாகக்
குறிப்பிடுகிறார்.
தமிழின் அணியிலக்கணம் 1) தமிழுக்குரிய
தனிமரபு 2) வடமொழியைத் தழுவியமைந்த மரபு 3) வடமொழி மரபு 4) புது மரபு என இப்படி நான்கு
வகைகளாக அமைவதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
அடுத்து தமிழில் உள்ள அணிநூல்கள்
பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார் ஆசிரியர்.
வீர சோழியம் : பொருளணிகள் முப்பத்தைந்தும்
சொல்லணிகள் ஏழும் இந்நூலுள் குறிப்பிடப்படுகின்றன.
தண்டியலங்காரம் : பொதுவணியியல்,
பொருளணியியல், சொல்லணியியல் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது இந்த நூல்.
மாறனலங்காரம் : பொருளணியியலில்
64 அணிகளை இந்த நூல் குறிப்பிடுகிறது.
இலக்கணவிளக்கம்: 35 பொருளணிகள்,
2 சொல்லணிகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.
தொன்னூல் விளக்கம் : 30 சொல்லணி,
30 பொருளணிகளை இது விளக்குகிறது.
முத்துவீரியம் : இதில் 58 பொருளணிகள்,
14 வகை சொல்லணிகள் விளக்கப்படுகின்றன.
சுவாமிநாதம் : இதில் 31 பொருளணிகள்,
சொல்லணி மரபில் மடக்கணி மற்றும் 23 சித்திரக் கவிகளும் விளக்கப்படுகின்றன.
இது தவிர வடமொழி மரபை அப்படியே
தந்துள்ள குவலாயனந்தம், தொனி விளக்கு உள்ளிட்ட நூல்கள் பற்றியும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
அணிகள் பற்றி நன்கு இப்படி விளக்கிய பின்னர் இந்த
வலுவான அடிப்படையில் நூலாசிரியர் நம்மிடம் பாரதியாரின் அணிநலம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.
பாரதியாருக்கு, ‘தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவு தர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல்’ (பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் வாணியை நோக்கி வேண்டுதல்) ஆகியவையே
முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு.
அத்தோடு மட்டுமன்றி, ‘நாசக்கதையை
நடுவே நிறுத்தி விட்டுப்
பேசும் இடைப் பொருளின் பின்னே
மதி போக்கிக்
கற்பனையும் வர்ணனையும் காட்டிக்
கதை வளர்க்கும்
விற்பனர் தம் செய்கை விதமும்
தெரிகிலன் காண்” என்ற அவர் தம் பாடல் அடிகளால்
வெற்றுக்கு கதை வளர்ப்பதில் அவரது ஆர்வமின்மையை நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த அடிப்படையில் பாரதியார்
பாக்களில் நுழைந்தால் அடடா, எத்தனை அற்புதமான அனுபவங்கள் ‘அணி அணியாக’!
அத்தனையையும் விளக்குகிறார்
சிவ. மாதவன்.
பாரதி படைத்த பயன் உவமத்திற்கு ஒரு எடுத்துக்
காட்டு:
“போனதற்கு வருந்திலன் – மெய்த்தவப்
புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வனைத்திடத் தூண்டிலை
வீசலொக்கு மெனலை மறக்கிலேன்”
போனதற்கு வருந்துவது வானத்து
நட்சத்திரத்தைத் தூண்டில் போட்டு வளைத்துப் பெற இயலாததைப் போல ஆகும்.
பாரதியாரின் மெய்யுவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு
:
துரியோதனனைப் பற்றிய பாரதியாரின்
வர்ணனை:
“உடல் வற்றித் துரும்பொத்து
இருக்கின்றான்”
வடிவம் சார்ந்த உவமம் இது.
அடுத்து, “ சுருளலை வெள்ளம்
போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே” என அவர் கூறுவது எண்ணிக்கை சார்ந்த உவமையாகும்.
இப்படி
நூல் முழுவதும் பாரதியார் கையாண்ட அணிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன.