காக்கா குளியல்; மாணவர்கள் பற்றி பதஞ்சலி நக்கல்! (Post No.7662)

Written by LONDON SWAMINATHAN

Post No.7662

Date uploaded in London – 7 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி. ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச்  சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக்  கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் என்பவர் விளக்க உரை எழுதினார்.  இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான். அதிலுள்ள சில நயங்களை ஒருவர் ஆங்கிலக் கட்டுரையில் தந்தார். அதன் மொழிபெயர்ப்பு இதோ-

ப்ராயேன ஸம்க்ஷேப ருசினான் அல்பவித்யா பரிக்ரஹான்

ஸம்ப்ராப்ய வையாகராணான் ஸங்க்ரஹே சமுபாகதே

க்ருதே ச பதஞ்சலினா குருணா தீர்த்த தரிசினா

ஸர்வேஷாம் ந்யாய பீஜானாம் மஹாபாஷ்யே நிபந்தனே

–பர்த்ருஹரி

“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால் நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச்  சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார் 

பதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீ யக்  காட்சிகள்  , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.

காகங்களும் டேக்கா கொடுக்கும் மாணவர்களும்

யதா தீர்த்த காகாஹா ந சிரம் ஸ்தாதாரோ பவந்தி

ஏவம் யோ குருகுலானி கதவை ந சிரம் திஷ்டதி ச தீர்த்த காக்காஹா

காகங்கள் தலையை மட்டும் முக்கிக் குளிப்பது போல , குருகுலத்தில் நீண்ட காலம் இல்லாத மாணவர்கள் காக்கைக் குளியல்  குளித்தவர்களே .

அதாவது பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வகுப்புகளைக் ‘கட்’ அடிக்கும் மாணவர்கள் காக்கை குளிப்பது போல அரைகுறைகளே .

நாம் எல்லோரும் காகங்கள் குளிப்பதை பார்த்திருப்போம் ஆயினும் அதை பதஞ்சலி பயன்படுத்தும் அழகு தனி அழகுதான்.

xxx

ஒரு சொல்லை விளக்கப் போகையில் மாணவர்- ஆசிரியர் உறவு முறை பற்றி  ஒரு உதாரணம் தருகிறார்

சிஷ்யாஹா சத்ரவத் சாத்யாஹா

 சிஷ்யேன குரூஹு பரிபாலயஸ் ச

‘அரசாட்சியில் காண்பதை போல மாணவர்களைக் குருவும் குருவை மாணவர்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்’

Xxx

கெட்ட மாணவர்களால் ஏற்படும் விளைவுகளை விளக்குகையில் ஆரோக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன-

நத்வலோதகம் பாதரோகாஹா ததித்ரபுசம் ப்ரத்யக்ஷ ஜ்வராஹா

கெட்ட தண்ணீரில்  காலை நனைத்தால் நோய் வரும்; கெட்டுப்போன தயிரைப் பயன்படுத்தினால் ஜுரம் வரும் என்பது போல

2200 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களிடையே இருந்த சுகாதார அறிவையும் மருத்துவ அறிவையும் இதன் மூலம் அறிகிறோம்.

Xxx

ஒருமையில் சொன்னால் போதும்; எல்லாவற்றுக்கும் இலக்கண சுத்தமாகப் பன்மையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் விளக்குகிறார்

இதம் மே அக்ஷி பஸ்யதி அயம் மே கர்ணஹ சுஸ்து ஸ்ருனோதி

கண் பார்க்கிறது ; காது கேட்கிறது என்று ஒருமையில் சொல்வர். இருமை/ பன்மை அவசியமில்லை.

Xxxx

ஒருவருடன் உரையாடு கையில் சொற்களைப்  பயன்படுத்தும் திறமையை அழகாக விளக்குகிறார். ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ – என்ற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்துவதாக இது உள்ளது

ஆம்ரஸ்ச சிக்தா ஹா பிதரஸ் ச ப்ரிநீதாஹா (மாமரத்துக்கும் தண்ணீர் விட்டாச்சு; பித்ருக்களையும் திருப்தி செய்தாச்சு.)

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது’ என்று தமிழில் சொல்லுவோம். ஒருவர் நீத்தார்க்கு நீர்க்கடன் செய்ய நினைத்தார். அட, மாமரத்தின் அடியில் செய்தால் மாமரத்துக்குத் தண்ணீர் விட்ட பயனும் கிட்டும் நீத்தார்க் கடனையும் முடித்ததாக இருக்கும் என்று மாமரத்துக்கு அடியில் தர்ப்பணம் செய்தாராம்;

Xxxx

இரு பொருள் தரும் சொற்களை இவ்வாறு விளக்குகிறார்

ஸ்வேதா (White)  தாவதி

நாய் ஓடியது ; வெள்ளை ஓடியது .

Xxx

உரிச் சொற்களைப் பயன்படுத்துவதிலும் அ ல்பம் என்ற இடத்தில் ஹ்ரஸ்வம் வரா து என்று காட்டுகிறார்–

அல்பம் க்ருதம் அல்பம் தைலம் இத்யுச்சதே ந புனஹ

ஹ்ரஸ்வம் க் ருதம்ஹ்ரஸ்வம் தைலம்

அல்பம் என்றால் குறைவான என்று பொருள் நெய் குறைவு , எண்ணெய் குறைவு என்று சொல்லலாம் ஆனால்  குள்ளமான / ஹ்ரஸ்வம் என்ற சொல்லை அங்கே பயன்படுத்த மாட்டோம்.

தமிழிலும் கூட கன்றுக் குட்டி, அணில் பிள்ளை , பன்றிப் போத்து, கோழிக் கு ஞ்சு  என்று சொல்கிறோம்.

Xxxx

சம்ஸ்கிருதத்தில் வர்ணங்களைப்  பயன்படுத்துவதிலும் கூட சில விதி முறைகள் உண்டு—

சமானே ரக்தே கௌஹு லோஹித அஸ்வ சோனஹ

சமானே  காளார்த்தே கௌஹு  க்ருஷ்ண அஸ்வ ஹேமஹ

சமே தவளார்த்தே கௌஹு  ஸ்வேதஹ  அஸ்வ கர்கஹ

சிவப்பு நிறப்  பசுவை ‘ரத்த’ வர்ணம் எனலாம் ; சிவப்பு நிற குதிரையை சோனக என்போம் .

கருப்பு நிறப் பசுவை க்ருஷ்ண  வர்ணம் எனலாம் ; கருப்பு நிற குதிரையை ஹேம வர்ணம்  என்போம்.

வெள்ளை  நிறப்பசுவை ஸ்வேத  வர்ணம் எனலாம் ; வெள்ளை  நிற குதிரையை  கர்கஹ  என்போம்.

அதாவது வர்ணம் ஒரே வர்ணம்தான்; ஆனால் பசு, குதிரைகளின் நிறத்தைக் குறிப்பிடுகையில் வெவ்வேறு வர்ண சொற்கள் பயன்படுத்துவது மரபு..

xxxx

உலக நடைமுறை

ஏவம் ஹி த்ருஷ்யதே லோகே பிக்ஷுகோயம் த்விதீயாம் பிக்க்ஷஆம் சமாசாத்ய பூர்வம் ந ஜஹாதி  ஸஞ்சயாயைவ ப்ரவர்த்ததே

உலகத்தில் நாம்  காண்பது என்ன ? இரண்டாவது பிச்சை கிடைத்தாலும் முதலில் கிடைத்த  பிச்சையைத் தூக்கி எறிவதில்லை. அவன் எல்லாவற்றையும் சேர்த்து வை த்துக் கொள்வான் ; இதை அவர் உரிச் சொற்களின் தேவையை விளக்குகையில் எடுத்துக் காட் டாகத் தருகிறார் . சாதாரணமாக  நாம் காணும் காட்சியை க்  கொண்டு இலக்கண விதிகளை அவர் விளக்கும் பாங்கு மிகப்பெரிய, அரிய  பாணினி இலக்கணத்தை எவரும் புரிந்துகொள்ள உதவுகிறது. பாணினி ‘உயிர்’  என்றால், பதஞ்சலி எழுதியதை ‘உடல்’ என்று சொல்லலாம்.

xxxx

வெவ்வேறு உடைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் சொல்லப்படும்

அன்யேன சுத்தம் தவுத்கம்

அன்யேன சேபாலிகம்

அன்யேன மாத்யமிகம்

Xxx

ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது

‘காப்பி’ அடிப்பதில் (Imitating)  பயனில்லை என்று ஓரிடத்தில் விளக்குகையில்

ந கல்வன்யத் ப்ராக்ருதமனு வர்த்தநாத் அஞ்ஞாத நஹி கோதாஹா ஸர்பந்தி ஸர்பனாதஹிர்  பவதி .(பாம்பு போல வளைந்து நெளிந்து உருண்டாலும் கீரி , பாம்பு ஆகிவிடாது) .

அதாவது பிறரைப் பார்த்து அவர் போல நடித்தாலும் குணம் வேறுபடாது . 

ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது என்ற தமிழ்ப் பழமொழியை ஒப்பிடலாம்

Xxx

மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்

சைசா மஹ தி  வம்ச ஸ்தம்பா லாதவானுக்கிருஷ்யதே

சின்ன பலனுக்காக பெரிய வேலையை, கஷ்டமான பணியைச் செய்பவனை பதஞ்சலி ‘மூங்கில் காட்டில் பறவை பிடிக்கப்போனவனை’ ஒப்பிடுகிறார் .

தமிழிலும் மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம் என்ற பழமொழி உளது .

மூக்கைத்  தொடுவதற்கு கையைக் கழுத்துக்குப் பின்னால் வளைத்துத் தொடுவதற்கு முயற்சிப்பது போன்றது இது.

Xxx

சூடு =சுறுசுறுப்பு, குளிர்= சோம்பேறித்தனம், மந்தம்

ய ஆசு கர்தவ்யான அசிரேன   கரோதி  ச சீதகஹ  

ய ஆசு கர்தவ்யாநாஸ்வேன கரோதி  ச உஷ்ணகஹ  

எவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை தாமதமாகச் செய்கிறானோ அவன் குளிர்ந்தவன்

எவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை உடனே  செய்கிறானோ அவன் வெப்பமானவன்

வெப்பம், குளிர் என்பதையும் குணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.

மேலை நாடுகள் குளிர்ப் பிரதேச நாடுகள் ; ஆகவே இங்கு வெப்பம் போற்றப்படும். ஒருவருக்கு உற்சாக வரவேற்பு என்பதை இளம் சூட்டு – warm welcome வார்ம் வெல்கம் — வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பர்.

வெப்ப நாடான இந்தியாவில் அவர்கள் பேசும் மொழிகளில் இது எதிர்மறையான பொருளைத் தரும்

xxx

காஸுக்ருஸ்தா ப்ராஹ்மணி என்ற சொல் அக்காலத்தில் மீமாம்ச சாஸ்திரத்தில் வல்ல பெண்கள் இருந்ததைக் காட்டும்; பெண்கள் கல்வி உயர் நிலையில் இருந்தது.

Source (with my inputs from Tamil literature)

Article written by P .Narayanan Namputiri in

New Horizons of Indological Research , Edited by Dharmaraj Adat , KAIR, 2013

Tags — பதஞ்சலி , மஹா பாஷ்யம், பாணினி காகம் , குளியல், கீரி, வர்ணம்

–subham–

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7653

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு —  என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;

அது எப்படி?  எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.

எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல  முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .

Jesus Christ said in the Bible,

‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13

ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.

வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான்  பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா  , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .

சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.

வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்

உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.

“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY)  (BG.7-6)

xxx

என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி

எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994)  சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத்  தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.

உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல்  மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!!  .

உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்

சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.

அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .

வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது  ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’  என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்

சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!

வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு  பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்;  ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’  என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.

ஆராய்ச்சி முடிவு-

திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity)  மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.

காரணம் ?

மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure)  உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!

எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!

இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ  உச்சரிக்கலாம் .

இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்

மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .

‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !

திருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157

பகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97

திருக்குறளில் ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23

பகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17

திருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114

பகவத் கீதையில் ‘இ’  எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21

திருக்குறளில்  ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8

பகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1

திருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81

பகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9

திருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21

பகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2

திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;

பகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.

இந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .

கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!

ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .

குறில் என்றால் அதிகம்;

நெடில் என்றால் குறைவு .

உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .

அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப்  பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!

Tags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்

வாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்

–subham–

எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு (Post 7645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7645

Date uploaded in London – 3 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

 மநு நீதி நூல் – பகுதி 48

மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மனு நீதி நூலில் வெற்றிகரமாக  பத்து அத்தியாயங்களை முடித்து 11ஆவது அத்தியாயத்தில் நுழைகிறோம். முதல் நூறு ஸ்லோகங்களைக் காண்போம். இந்த அத்தியாயம் பிராயச்சித்தம்  என்னும் கழுவாய் பற்றிப் பேசுகிறது. முக்கியமான விஷயம் இதில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கானது .

முதலில் சுவையான விஷயங்கள் புல்லட் (bullet points)  பாயிண்டுகளில் :–

ஸ்லோகம் 11-76 TO 78

சரஸ்வதி நதியில் நீரோட்டத்துக்கு எதிராக நதி உற்பத்தியாகும் இடம் வரை நடக்கவேண்டும் என்பது ஒரு தண்டனை/ பிராயச் சித்தம். இதிலிருந்து இவர் சிந்து- சரஸ்வதி நாகரீக காலத்தவர் அல்லது அதற்கு முந்தியவர் என்பது தெளிவாகிறது. ஆகவே இவர் பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர். உலகத்தில் முதல் முழு நீள சட்டப் புஸ்தகத்தை எழுதிய நிபுணர். ஆனால் எல்லா புராணங்களையும் அப்டேட் UDATE  செய்தது போலவே மனு நீதியையும் புதுப்பித்திருக்கின்றனர். வேதம் சொல்லிக்கொண்டே நுறு யோஜனை / 1000 மைல் நடக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு பிராயச் சித்தம். இவை அனைத்தும் பிரமணர்களுக்கான கடும் தண்டனைகள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தீவிர பிராமண ஆதரவு சுங்க வம்சம் (Sunga Dynasty) வரை அப்டேட் UPDATE ஆனதால் பிராமண ஆதரவு ஸ்லோகங்களையும் காண முடிகிறது. 

ஸ்லோகம் 11-91/99

குடிகார பிராமணர்களுக்கு கடும் தண் டனை விதிக்கிறார் மநு .

ஸ்லோகம் 11-33

பிராமணர்களின் ஆயுதம் வாக்கு தான் ; அவர்கள் அதர்வ வேதத்தைக் கொண்டு எதிரிகளை விழுத்தட்டலாம் என்கிறார் . எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தைப் பயன்படுத்து என்று அறிவுறுத்துகிறார்.

ஸ்லோகம் 11-65 & 11-69

மரங்களை வெட்டுவது தவறு; ஒட்டகம் கழுதை போன்ற பிராணிகளைக் கொல்வது தவறு என்கிறார். இதிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு  முன்னரே புறச் சூழல் பற்றி கவலைப்பட்டதும், அஹிம்சையைப் பின்பற்றுவதே நல்லது என்ற உணர்வும் இருந்ததை அறியலாம்.

ஸ்லோகம் 11-15

திருவள்ளுவர் சொல்லுவது (குறள்  1077, 1078) போல மனுவும் கருமிகளின் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் குத்து விட்டுப் பொருட்களை பறித்து நல்ல பணிகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை என்கிறார் . அதாவது பணக்கரர்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்கு கொடுத்த ராபின்ஹுட் (Robin Hood) ஆக மாறலாம் என்பார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

பாவ மன்னிப்பு (Confession) ஓ.கே. என்று ஆதரவு தருகிறார். பலர் முன்னிலையிலும் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என்பது மனுவின் மனிதாபிமாதைக் காட்டுகிறது.

ஸ்லோகம் 11-1/2 ஒன்பது விதமான பிராமணர் களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆதரவு தருகிறார்.

ஸ்லோகம் 11-55 பஞ்ச மஹா பாதகங்கள் என்ன என்பதை விளக்குகிறார்.

ஸ்லோகம் 11-49 to 11-54 என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என்று பட்டியல் தருகிறார். தற்கால டாக்டர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது சரஸ்வதி நதி தீர நாகரீக நம்பிக்கை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

பசுவைக் (11-60) கொன்றால் , பிரமணனைக் (11-55) கொன்றால், தங்கத்தைத் திருடினால் (11-49)  , தகாத முறையில் பாலியல் உறவு கொண்டால் என்ன தண்டனை என்றும் விளம்புகிறார் . ஒரு தண்டனை 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் மண்டை ஓட்டுக்(11-73)  கொடியுடன்!

11-36 யாருக்குப் புரோகிதம் செய்யும் தகுதி உண்டு என்றும் வரையறுக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

11-25 பிராமணன் யாகத்துக்கான பொருளுதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் பிணம் தின்னும் கழுகாகவோ காகமாகவோ பிறப்பான் என்று எச்சரிக்கிறார்

subham

கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்! (Post No.7628)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7628

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

ஏழு விஷயங்கள் ஒருவனின் கவலையை உடனடியாகத் தீர்க்கக் கூடியவையாகும்.

அவை யாவை?

  1. பண்டிதர்களின் சபை
  2. மஹாபாரதம்
  3. நல்ல கவிதையைப் படிப்பது
  4. வாத்திய இசை
  5. அருமையான பாட்டு
  6. அன்பான மனைவி
  7. நல்ல நண்பன்

இந்த ஏழும் இருப்பின் கவலை ஏது?

இதைக் கூறும் சுபாஷிதம் இதோ:

வித்வத்கோஷ்டி பாரதம் காவ்ய சிந்தா தந்த்ரி வாத்யம் சுப்ரயுக்தம் கேயம் |

இஷ்டா பார்யா தத்சமானம் ச மித்ரம் சத்ய: சோகம் நாசயந்தீஹ சப்த ||

Seven things could put an immediate stoppage to worry, viz –

An assembly of scholars,

The text of Mahabharata

Study of poetry

Instrumental music

Well accomplished song

A loving wife

And a suitable friend  (Translation by Dr N.P.Unni)

ஏழு ‘ஸ்காரம் இருந்தால் கவலையே இல்லை!

ஒருவனுக்கு ஏழு ஸகாரம் இருந்தால் கவலையே இருக்காது. அந்த ஏழு ‘ஸ’காரங்கள் எவை தெரியுமா?

  1. ஸம்பத்
  2. ஸரஸ்வதி
  3. ஸத்யம்
  4. ஸந்தானம்
  5. ஸதனுக்ரஹ:
  6. ஸத்தா
  7. ஸுக்ருதஸம்பார:

செல்வம், நல்ல கல்வி, சத்யம், நல்ல புத்திரர்கள்,நல்லோரின் ஆசீர்வாதம், இருத்தல்,  புண்யத்தின் சேர்க்கை இந்த ஏழும் இருந்தால் கவலை தான் ஏது? இவை கிடைப்பது துர்லபம் தான்!

இதைக் கூறும் சுபாஷிதம் இதோ:-

ஸம்பத்ஸரஸ்வதி ஸத்யம் ஸந்தானம் ஸதனுக்ரஹ: |

ஸத்தா ஸுக்ருதசம்பார: ஸகாரா: ஸப்த துர்லபா: ||

The seven Sakaras (words beginning with the syllable ‘Sa’ are said to be Sampat (wealth),Saraswathi (learning), Satyam (Truth), Santhanam (Childern) Sadanugrah (blessing of the noble), satta (existence) and sukrutasambhara (collection of merit).

(Translation by Dr N.P.Unni)

மூர்க்கரை எப்படி அடையாளம் காண்பது?

மூர்க்கரை அடையாளம் காண ஒரு சுலபமான வழி உள்ளது. அவர்களின் ஆறு குணங்களைப் பார்த்தாலே போதும் அவன் மூர்க்கன் தான் என்பதை உறுதிப் படுத்த. அந்த ஆறு குணங்கள் எவை?

  1. கர்வம்
  2. கெட்ட வார்த்தைகள்
  3. பகைமை
  4. அனாவசியமான விதண்டாவாதம்
  5. கடமையைச் செய்ய மறுப்பது
  6. ஒரு செயலைச் செய்யும் போது அலட்சியமாகச் செய்வது

இதை விவரிக்கும் சுபாஷிதம் இது தான்:-

மூர்க சின்ஹானி பீடதி கர்வோ துர்வசனம் முகே |

விரோதி தீர்கவாதி க்ருத்யக்ருத்யம் ந மன்யதே ||

There are six characteristics for a wicked fellow – pride, nasty words, enemity, given to much talk, refusal to do duty, and carelessness in actions.   

                                                                  (Translation by Dr N.P.Unni)

தீயே இல்லாமல் உடலை எரிக்கும் ஐந்து விஷயங்கள்!

தீயே தேவை இல்லை. கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் உடலைத் தானே தஹித்து விடும்!

  1. மனைவியைப் பிரிந்திருப்பது
  2. உறவினர்கள் வதந்தியைப் பரப்புவது
  3. கடன் இருப்பது
  4. மோசமான ஒருவனிடம் வேலை பார்ப்பது
  5. தரித்திரமான காலத்தில் பிரியமான ஒருவரைப் பார்ப்பது

இந்த ஐந்தும் தானே உடலை எரித்து விடும்.

இதைக் கூறும் சுபாஷிதம் இது:

பார்யா வியோக: ஸ்வஜனாபவாதோ க்ருணஸ்ய சேஷம் க்ருபணஸ்ய சேவா |

தாரித்ர்ய காலே ப்ரியதர்சனம் ச விநாக்நினா பஞ்ச தஹந்தி காத்ரம் ||

Five things burn one’s limbs without the use of fire – viz.,

Separation from the wife

Scandal from relatives

The balance of debt

Attendance on a wretched person

And the sight of a dear one in times of penury

                                                             (Translation by Dr N.P.Unni)

பட்டு பட்டென்று விஷயங்களை பிட்டு பிட்டு வைக்கும் சுபாஷிதங்களிடமிருந்து வாழ்க்கைக்கான பாடங்கள் பலவற்றைக் கற்கலாம்!

***

‘யோகா’ ஒரு சமுத்திரம் – 5 லட்சம் சுவடிகள் ! (Post No.7612)

Tevaram manuscript in British library

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7612

Date uploaded in London – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

yoga in alphabet

ஞானஸ்ய காரணம் கர்ம, ஞானம் கர்ம விநாசகம்

பலஸ்ய கரணம் புஷ்பம், பலம் புஷ்ப விநாசகம்

ஞான மார்க ப்ரபோதினி

பழத்தை உண்டாக்கியது பூ ; அந்தப் பழமே பூவின் முடிவுக்குக் காரணம் ஆகிவிடுகிறது.

ஞானத்தை  உண்டாக்கியது கர்மவினையே ; அந்த ஞானமே  கர்மவினைக்கு முடிவுகட்டி விடுகிறது .

எளிய நடை ; அதி அற்புதமான தத்துவம் . இந்த நூல் வெளியாகவில்லை!! tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியா தங்கத்துக்கும் வைரத்துக்கும் பெயர்பெற்ற இடங்கள். இதைக் கொள்ளையடிக்க கஜினி முகமது முதல் கொலம்பஸ் வரை புறப்பட்டதையும் கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளில் இறங்கி அதுதான் இந்தியா  என்று பெயரிட்டதையும் இன்று வரை அந்த கரீபியன் கடல்  தீவுகளுக்கு மேற்கு இந்தியா (West Indies) என்று பெயர் இருப்பதும் நீங்கள் அறிந்ததே ; அதற்குப் பின்னர் 700 ஆண்டுகளுக்கு துலுக்கர்களும் 300 ஆண்டுகளுக்கு வெள்ளையர்களும் இந்தியாவைக் கொள்ளையடித்ததும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

எனக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது . அதாவது இந்தியாவின் மஹத்தான பொக்கிஷம் ஒன்று உலக லைப்ரரிகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது . அது என்ன?

ஐந்து லட்சம் சம்ஸ்கிருத , பிராகிருத, பாலி மொழி சுவடிகள் ஆகும்.! ( இதில் தமிழ் சுவடிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.. ஏனெனில் இதை பெங்களூரைச் சேர்ந்த பாண்டுரங்கி எழுதிய கட்டுரையிலிருந்து தருகிறேன்.).

உலகிலுள்ள 215 கல்வி நிறுவனங்கள் ,  நூலகங்களில் ஐந்து லட்சம் சுவடிகள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சம் சுவடிகள் ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன், இலங்கை, நேபாளம் முதலிய நாடுகளில் உள்ள 40 ஸ்தாபனங்களில் இருப்பதாகவும் பாண்டுரங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளார். (K T Pandurangi, The Wealth of Sanskrit Manuscripts in India and Abroad, Bangalore 1997 ) tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாரசீக மொழிகளில் உள்ள சுவடிகளை அவர் கணக்கில் சேர்க்கவில்லை. இதற்கு முன்னர் தியோடர் ஓப்ரக்ட்(Theodor Aufrecht)  , பிரான்ஸ் கீல்ஹான் (Franz Kielhorn) , ஜார்ஜ் பியூலர் (George Buhler) , செஸில் பென்டெல் (Cecil Bendell) , ஏ ஸி பர்னல் ( A C Burnell) , ஹர பிரசாத் சாஸ்திரி (Hara Prasad Shstri)  , ஆர்.ஜி.பண்டார்க்கர் (R G Bhandarkar)  , குப்புசுவாமி  சாஸ்திரி Mm Kuppuswami  Sastri) ,டாக்டர் வி.ராகவன் (Dr V Raghavan) , பி.கே. கோடே ( P K Gode)   முதலிய பல அறிஞர்கள் எடுத்த நன் முயற்சியால் சம்ஸ்கிருத, பாலி , பிராகிருத மொழி சுவடிகள் பற்றி தெரிய வந்தது. சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட புதிய கேட்டலாகஸ் கேட்டலகோரம் ( The New Catalogus Catalogorum, Department of Sanskrit, Madras University) ‘அட்டவணைகளின்  அட்டவணை’ ) புஸ்தகம் நமக்கு சுவடிப் பட்டியலைத் தருகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அது ஒரு கலைக்களஞ்சியம் . அதில் வெறும் சுவடிப்பட்டியல் மட்டும் இல்லாமல் அதிலடங்கிய விஷயம் , அதை எழுதியோர்,தொ குத்தோர் , பாஷ்யம் செய்தோர் முதலிய பல விஷயங்கள் உள .

இதற்கு அடுத்தாற்போல யோகா சம்பந்தப்பட்ட சுவடிகள் மட்டும் எவ்வளவு என்று ஆராயாப் புகுந்த கே.எஸ். பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்) எழுதினார். அதில் கண்ட சுவையான விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டு (Bullet Points) களில் தருகிறேன்.

ராஜ யோகம், ஹட யோகம் லய யோகம், மந்த்ர யோகம் என பல பிரிவுகள் உண்டு. யோகம் பற்றிய புஸ்தங்களைத் தவிர ஆகம, பவுத்த, ஜைன நுல்களுக்கிடையேயும் யோக விஷயங்கள் வருகின்றன. ஆகையால் அவ்வளவையும் சேகரிப்பதே ஒரு பெரிய கடினமான பணி . tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆனால் யோகா என்பது மனிதனின் ஆன்மீக , உடல் ஆரோக்கிய , மன ஆரோக்கிய விஷயங்களுக்கு உதவுவதாலும் , இன்று உலகம் முழுதும் அதில் ஆர்வம் காட்டுவதாலும் கடினமான பணியைச் செய்துதான் ஆகவேண்டும் .

அடையாறு நூலகம் , தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முதலிய இடங்களில் இன்னும் பல யோகா சுவடிகள் அச்சேறாமல் உள்ளன.

யோகா சுவடிகளில்  சுந்தரதேவ எழுதிய ‘ஹட சங்கேத சந்திரிகா’ முக்கியமானது . வேறு பல ஹடயோக நூல்களில் இல்லாத அரிய பல விஷயங்களை சுந்தரதேவ எழுதி இருக்கிறார் . இந்த சுவடியின் பிரதிகள் வேறு பல நகரங்களிலும் கிடைக்கின்றன; சுந்தர தேவ 1650-1750 இடையே வாழ்ந்தவர். அவர் பல்கலை வித்தகர்; காவ்ய, யோக, ஆயுர்வேத , வேதாந்த விஷயங்களில் வல்லவர். நூலின் அடிக்குறிப்பிலிருந்து அவர் காஸ்யப கோத்ரத்தைச் சேர்ந்த தென்னிந்திய பிராமணர் என்பதும் காசி மா நகரில் குடியேறியவர் என்றும் தெரிகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவர் 90 வேதாந்த, வைத்ய, யோக ஆசிரியர்களின் நுல்களைக் குறிப்பிடுவதால் அவருடைய மேதா விலாசம் விளங்கும்; கே. எஸ் பாலசுப்ரமணியன் இதை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

சுந்தரதேவ குறிப்பிடும் பல யோக நூல்கள் இன்று காணக்கிடக்கில. அவை யாவை ?

விரூபாக்ஷ எழுதிய அம்ருத சித்தி யோக;

கோரக்சனாத எழுதிய அமருக ப்ரபோத;

யோக சம்க்ரஹ , எழுதியர் பெயர் இல்லை

பாதஞ்சல யோக சம்க்ரஹ – இது பதஞ்சலியின் யோக சூத்ரம் அல்ல ; இது வேறு. tamilandvedas.com, swamiindology.blogspot.com

சாயா  புருஷ யோக ;

சாயா  புருஷ லட்சண;

ஞான யோக ப்ரபோதினி ;

குண்டலினி பஞ்சகாதி நிரூபணம்;

ராஜ யோக சார;

சித்தாந்தசார ;

யோக ரஹஸ்யம்;

ஸ்வர சாஸ்த்ர சம்க்ரஹ.

இவை அனைத்துக்கும் எழுதியோர் பெயர் கிடைக்கவில்லை

பரமேஸ்வர யோகி எழுதிய பரமேஸ்வர யோகின் , சுவடி வடிவில் அடையாறு நுலகத்தில் உள்ளது.

தஞ்சாவூர்  சரஸ்வதி மஹாலில் இன்னும் வெளியிடப்படாத யோக நூல்கள் சுவடிகளாக உள்ளன . tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகத்தைப் பயில்வோம்! சுக போகத்தை அடைவோம்!!

–subham–

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி(Post No.7611)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7611

Date uploaded in London – – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – க்ட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி

ச.நாகராஜன்

2. சிவானந்த லஹரி

நூறு சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது சிவானந்த லஹரி.

லஹரி என்றால் அலை அல்லது பிரவாஹம். சிவனைக் குறித்த ஆனந்த அலை பிரவாஹமே சிவானந்த லஹரியாக அமைகிறது. சிவனைக் குறித்த ஸ்தோத்திர நூல் இது. ஒவ்வொரு செய்யுளிலும் சிவனின் அபார பெருமைகள் விளக்கப்படுவதால் பக்திப் பரவசத்துடன் இந்த துதியை துதிக்க முடியும்.

இதைப் பற்றி பெரியவாள் – காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அருளியிருப்பது :

”சிவாநந்த லஹரீ” என்றால் ”சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்” என்று அர்த்தம். காம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.

அதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு ‘சிவம்’ என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே “சிவம்” ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் ”சிவாநந்த லஹரி”க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.”

(முழு உரையையும் ஆசார்யாள் உரைகளில் படித்து அனுபவிக்கலாம்.)

இதிலுள்ள உவமைகள் மிக அற்புதமானவை.

நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்வதை ஆன்மாவைப் பண்படுத்துவதுடன் ஒப்பிடும் ஸ்லோகம் 40வது ஸ்லோகமாக அமைகிறது.

மாணவனாக இருந்தால் என்ன, கிரஹஸ்தனாக இருந்தால் என்ன, சந்யாசியாக இருந்தால் என்ன, அல்லது வேறு என்னவாக இருந்தாலும் தான் என்ன, ஒருவனது இதய கமலம் உன்னதாக ஆகும்போது, நீ அவனுடைவனாக ஆகிறாய் என்று 11ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

“மனம் ஒரு குரங்கு. அது மாயையென்னும் காட்டில் ஆசைகள் என்னும் கிளைக்கு கிளை எல்லா திசைகளிலும் தாவிக் குதிக்கிறது. ஓ, பிக்ஷுவே, உனக்கு அதை அர்ப்பணிக்கிறேன். அதை பக்தியால் கட்டி விடு.” – இப்படி 20வது ஸ்லோகம் கூறுகிறது.

சிவானந்த லஹரியில் சிவ பிரானின் ஏராளமான லீலைகளை எடுத்துரைக்கிறார் சங்கரர்.

யமனை காலால் உதைத்தது,மன்மத தகனம் உள்ளிட்ட ஏராளமான சரிதங்கள் ஆங்காங்கே ஸ்லோகங்களில் படித்து பரவசமடைகிறோம்.

பக்தி அமிர்தத்துடன் ஆன்ம உபதேசங்களை இந்த நூலில் அளிப்பதால் பகவான் ரமண மஹரிஷி இதிலுள்ள பத்து ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப் படுத்தித் தந்துள்ளார்.

அந்த ஸ்லோகங்களாவன : 61,76,83,6,65,10,12,9,11, 91

இந்த ஸ்லோகங்களை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள அதில் வரும் முதல் வார்த்தைகளை இணைத்து ஒரு ஸ்லோகத்தையும் அவர் அருளியுள்ளார்:

அம்-பக் ஜன- கடோ-வக்ஷஸ்- நர-குஹா -கபீ- வது: |

ஆத்யா – தச சிவானந்த லஹரி ஸ்லோகா சூசிகா ||

பத்து ஸ்லோகங்களின் ஆரம்பத்தைக் கீழே காணலாம் :

ஸ்லோகம் 61 : அங்கோலம் நிஜ பீஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா

ஸ்லோகம் 76 : பக்திர் மஹேஸ பத-புஷ்கரமாவஸந்தீ

ஸ்லோகம் 83 : ஜனன-ம்ருதி-யுதானாம் ஸேவயா தேவதானாம்

ஸ்லோகம் 6 : கடோ வா ம்ருத்பிண்டோऽப்யணுரபி ச தூமோऽக்னிரசல:

ஸ்லோகம் 65 : வக்ஷஸ்தாடன ஸங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:

ஸ்லோகம் 10 : நரத்வம் தேவத்வம் நக-வன-ம்ருகத்வம் மஸகதா

ஸ்லோகம் 12 : குஹாயாம் கேஹே வா பஹிரபி வனே வாऽத்ரி-ஸிகரே

ஸ்லோகம் 9 :  கபீரே காஸாரே விஸதி விஜனே கோர-விபினே

ஸ்லோகம் 11 : வடுர்வா கேஹீ வா யதிரபி ஜடீ வா ததிதரோ

ஸ்லோகம் 91 : ஆத்யாऽவித்யா ஹ்ருத்கதா நிர்கதாஸீத்-

98வது ஸ்லோகம் ஒரு அற்புதமான சிலேடை ஸ்லோகமாக அமைகிறது.

சிவானந்த லஹரி என்னும் கவிதையை தனது பெண்ணாக வர்ணிக்கிறார் ஆதி சங்கரர்.

கவிதையில் வரும் அலங்காரங்களே மணப்பெண்ணுக்கான அலங்காரம். (சர்வாலங்கார யுக்தாம்)

சரளபத யுதாம் – வார்த்தைகளே அழகிய நடையாக அமைகிறது.

சாதுவ்ருத்தம் –  அழகிய சந்தங்களால் அமைந்தது – பக்தியுடன் இருப்பது

சுவர்ணாம் – அழகு ததும்பியது

நல்லோரால் போற்றப்படுவது

இனிய நடையை உடையது

இலட்சியம் என்றே சொல்லக்கூடியது (இலட்சிய கவிதை- இலட்சிய பெண்)

கல்யாணி (மங்களமயமானவள்)

இப்படிப்பட்ட கவிதை என்னும் பெண்ணை கௌரிப்ரியா, ஏற்றுக் கொள் என்கிறார்.

ஒரு நல்ல கன்னிகையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா!

கன்னிகை போல இருக்கும் எனது கவிதையை ஏற்றருள்- அவள்

நல்ல அலங்காரங்களுடன் கூடியவள்,

அழகிய நடையை உடையவள்,

நற்குணங்கள் உடையவள்,

கவர்ச்சிகரமான நிறம் கொண்டவள்,

நல்லோரால் கொண்டாடப்படுபவள்,

இனிய விரும்பத்தகும் நடத்தை கொண்டவள்,

மற்றவருக்கு முன் மாதிரியாகத் திகழ்பவள்,

அனைத்து லட்சியங்களையும் கொண்டவள்,

ஜொலிக்கும் ஆபரணங்களை அணிந்தவள்,

நற்பண்புகளுடன் நடப்பவள்,

கையில் தனரேகையைக் கொண்டவள்,

அனைத்து நல்லனவற்றின் களஞ்சியமாகத் திகழ்பவள்

ஒரு நல்ல கவிதையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா

எனது கவிதை என்னும் பெண்ணை ஏற்றருள் ;

அது அனைத்து அணிகளையும் கொண்டது,

அழகிய அனைவரும் விரும்பும் பதங்களைக் கொண்டது,

இனிய இசையுடனான சந்தத்தைக் கொண்டது,

தேர்ந்தெடுத்த சொற்களால் ஒளிர்வது,

அறிவாளிகளால் புகழப்படுவது,

அனைத்து குணங்களையும் தன்னகத்தே கொண்டது,

பக்தியைப் பரப்பும் லட்சியத்தைக் கொண்டது,

முன்மாதிரியான கவிதையாக அமைவது,

அழகிய சொற்றொடர்களைக் கொண்டது,

மிருதுவாகவும் இனிமையாகவும் ஒலிப்பது,

ஒளிரும் கவர்ச்சியான பொருளைக் கொண்டது,

அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது,

முழுக் கவிதையின் பொருளையும் வார்த்தை வார்த்தையாகப் பொருள் பிரித்து, படித்து மகிழலாம்.

தேவர்கள் அனைவரும் உத்தமோத்தம பலம் என்று புகழும் (பெறுதற்கரிய உத்தம பலன் என்று புகழும்) சிவபிரானே, உன்னை எப்படிப் புகழ்ந்து போற்றுவது? (அது இயலாத காரியம்) என்று முடிக்கிறார் ஆதி சங்கரர் சிவானந்த லஹரியை.

சிவானந்த லஹரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை திரு T.M.P. Mahadevan , The Hymns of Sankara என்ற நூலில் அளித்துள்ளார்.

சிவ ஸ்தோத்திரமாகவும் அருமையான பக்தி இலக்கியமாகவும், உயரிய ஆன்மீக உபதேசங்களை அருள்வதாகவும், உயரிய கவிதைக்கான இலக்கணமாகவும், வேத, புராண, இதிஹாஸ சம்பவங்களை அடக்கியதாகவும் உள்ள சிவானந்த லஹரி பக்தர்களுக்கு ஒரு வரபிரசாதம் என்பதில் ஐயமில்லை.

ஜய ஜய சங்கர,

ஹர ஹர சங்கர!

***

உதவிக் குறிப்பு :

சிவானந்த லஹரியின் தமிழ் வடிவத்தையும் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பையும் பல தளங்களில் பார்க்கலாம். யூ டியூபிலோ பல அறிஞர்கள், பக்தர்கள் விரிவுரைகளத் தந்துள்ளனர். அவரவருக்கு ஏற்ற வகையில் இவற்றை அனுபவித்து மகிழலாம். பரமாசார்யாளின் உரைகளும் இணையதளத்தில் இருப்பதால் அதிகாரபூர்வமான அந்த உரையை அடித்தளமாகக் கொண்டு ஆதி சங்கரர் நூல்களின் பயணத்தை அன்பர்கள் மேற்கொள்ளலாம்.  

ஆதி சங்கரரின் அற்புத ஸ்துதிகள், நூல்கள்! (Post No.7531)

Written by S Nagarajan               

Post No.7531

Date uploaded in London – – 4 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே பாரதத்தில் உலவிய பெரும் அவதார புருஷரான ஆதி சங்கரர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை.

அவற்றில் உள்ள உபதேச அருளுரைகளும், உண்மைகளும் இரகசிய விளக்கங்களும் எண்ணற்றவை.

அவரது நூல் பட்டியல் இதோ:

  Bhashya Granthas:   1. Brahma Sutras 2. Isavasya Upanishad 3. Kena Upanishad 4. Katha Upanishad 5. Prasna Upanishad 6. Mundaka Upanishad 7. Mandukya Upanishad 8. Mandukya Karida 9. Aitareya Upanishad 10. Taittireeya Upanishad 11. Chhandogya Upanishad 12. Brihad Aranyaka Upanishad 13. Sree Nrisimha Taapaneeya Upanishad 14. Sreemad Bhagawad Geeta 15. Sree Vishnu Sahasranama 16. Sanat Sujateeyam 17. Lalita Tri-satee 18. Hastaamalakeeyam Compiled by S Nagarajan, tamilandvedas.com, swamiindology.blogspot.com     Prakarana Granthas: 19. Viveka Chudamani 20. Aparokshanubhooti 21. Upadesa Sahasri 22. Vaakya Vritti 23. Swaatma Niroopanam 24. Atma-bodha 25. Sarva Vedanta Sara Samgraha 26. Prabodha Sudhakaram 27. Swaatma Prakasika 28. Advaita anubhooti 29. Brahma anuchintanam 30. Prashnouttara Ratnamaalika 31. Sadachara anusandhanam 32. Yaga Taravali 33. Anatmasree Vigarhanam 34. Swaroopa anusandhanam 35. Pancheekaranam 36. Tattwa bodha 37. Prouda anubhooti 38. Brahma Jnanavali 39. Laghu Vakyavritti 40. Bhaja Govindam 41. Prapancha Saaram   Hymns and Meditation Verses: 42. Sri Ganesa Pancharatnam 43. Ganesa Bhujangam 44. Subrahmanya Bhujangam 45. Siva Bhujangam 46. Devi Bhujangam 47. Bhavani Bhujangam 48. Sree Rama Bhujangam 49. Vishnu Bhujangam 50. Sarada Bhujangam 51. Sivananda Lahari 52. Soundarya Lahari 53. Ananda Lahari 54. Sivapaadaadi kesaanta varnana 55. Siva kesaadi padaanta varnana 56. Sree Vishnu-paadaadi-kesanta 57. Uma maheswara Stotram 58. Tripurasundari Vedapada Stotram 59. Tripurasundari Manasapooja 60. Tripurasundari Ashtakam 61. Devi shashti upachara-pooja 62. Mantra matruka Pushpamaala 63. Kanakadhara Stotram 64. Annapoorna Stotram 65. Ardhanareshwara Stotram 66. Bhramanaamba Ashtakam 67. Meenakshi Stotram 68. Meenakshi Pancharatnam 69. Gouri Dasakam 70. Navaratna Malika 71. Kalyana Vrishtistavam 72. Lalitha Pancharatnam 73. Maaya Panchakam 74. Suvarna Mala Stuti 75. Dasa Sloki 76. Veda Sara Siva Stotram 77. Siva Panchaakshara Stotram 78. Sivaaparadha Kshamapana 79. Dakshinamoorthy Ashtakam 80. Dakshinamoorthy Varnamala 81. Mrutyunjaya Manasa Pooja Stotram 82. Siva Namavali Ashtakam 83. Kaala Bhairava Ashtakam 84. Shatpadee Stotram 85. Siva Panchakshara Nakshatra Mala 86. Dwadasa Ling Stotram 87. Kasi Panchakam 88. Hanumat Pancharatnam 89. Lakshmi-Nrisimha Pancharatnam 90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram 91. Panduranga Ashtakam 92. Achyuta Ashtakam 93. Sree Krishna Ashtakam 94. Hari Stuti 95. Govinda Ashtakam 96. Bhagavat Manasa Pooja 97. Praata Smarana Stotram 98. Jagannatha Ashtakam 99. Guruvashtakam 100. Narmada Ashtakam 101. Yamuna Ashtakam 102. Ganga Ashtakam 103. Manikarnika Ashtakam 104. Nirguna Manasa Pooja 105. Eka Sloki 106. Yati Panchakam 107. Jeevan Mukta Ananda Lahari 108. Dhanya Ashtakam 109. Upadesa (Sadhna) Panchakam 110. Sata Sloki 111. Maneesha Panchakam 112. Advaita Pancharatnam 113. Nirvana Shatakam 114. Devyaparadhakshamapana Stotram  




ஸ்வாமி சின்மயாநந்தா ஆதி சங்கரர் நூல்கள் பற்றி பவன்ஸ் ஜர்னல் இதழில் மே 1988-1989 இல் எழுதிய கட்டுரையில் 139 நூல்களின் பட்டியலைத் தருகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com   ஆதி சங்கரர் இயற்றிய நூல்களின் விளக்கத்தை ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகான்கள் மட்டுமே தர முடியும். இந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.   ஸ்வாமி விவேகானந்தர் தனது அருளுரைகளில் சங்கரர் பற்றிய ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளார்.   சமீப காலத்தில் காஞ்சி காமகோடி மஹா பெரியவாள் ஏராளமான உபதேச அருளுரைகளிலும் கட்டுரைகளிலும் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய விளக்கங்களைத் தந்து அருளியுள்ளார். கல்கி இதழில் வாரா வாரம் வெளியாகிய ஜகத்குருவின் அருளுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. அடுத்து ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த பல்வேறு துறவிகள் பல நூல்களில் விளக்கங்களை அளித்துள்ளனர்.   சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்து வெளியீடான சௌந்தர்ய லஹரி குறிப்பிடத்தகுந்த ஒன்று. அண்ணா எழுதிய இந்த விளக்க உரையில் பதத்திற்குப் பதம் தமிழில் அர்த்தம், இரகசியங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.   அடுத்து ஸ்வாமி சின்மயாநந்தரின் நூல்கள் மிகத் தெளிவான விளக்க உரைகளை தந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பற்றிப் பலரும் எழுதிய விளக்க நூல்களை எடுத்துக் கொண்டால் பல நூறு பக்கங்களில் அதிசய விளக்கங்களைக் கண்டு பிரமித்துப் போகிறோம்.   இன்னும் சிலர் ஆதி சங்கரரின் ஸ்தோத்திரங்களை மொழி பெயர்த்துத் தமிழிலும் தந்துள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com   தெய்வீக ஸ்தோத்திரங்களை சங்கரர் அருள்வாக்கில் இயற்றியதை அப்படியே கூற வேண்டும் என்றாலும் அர்த்தம் புரிந்து கொள்ள இந்தத் தமிழ்/ ஆங்கில மொழி பெயர்ப்புகள் உதவும் என்பதில் ஐயமில்லை. அடுத்து வரும் சில கட்டுரைகளில் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய சிறு குறிப்புரைகளைக் கண்டு மகிழலாம்.  


Tags – ஆதி சங்கரர், இயற்றிய நூல்கள், ஸ்துதிகள்,   Adi Shankara Hymns  

மாமிசம் சாப்பிட்ட பிராமணர்கள்- மநு தரும் ‘லிஸ்ட்’ (Post No.7489) மநு நீதி நூல் – பகுதி 47


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7489

Date uploaded in London – 24 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மநு நீதி நூலில் பத்தாம் அத்தியாயத்தில் 73 சுலோகங்களைச்  சென்ற கட்டுரையில் கண்டோம். இன்று 10-74 முதல் இறுதி வரை காண்போம். முதலில் சுவையான விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.

நாலு வர்ணத்தாருக்கும் உயிர்போகும் ஆபத்து நேரிடுமானால் அவர்கள் சொந்த தர்மங்களைக்        கைவிட்டு ஆபத்கால தர்மங்களைப் பின்பற்றலாம் என்பது மனுவின்  வாதம்.

10-75 சங்க இலக்கிய நூல்களும் அதைத் தொடர்ந்து வந்த திருக்குறள் முதலியனவும் பிராமணர்களை அறு தொழிலோர் என்று புகழும்; அந்த 6 தொழில்களை 10-75-ல் காணலாம்.

10-77 முதல் 10-80 மற்ற வர்ணத்தாரின் குலத் தொழில்கள்.

10-84 உழவுத் தொழில் , பிராமணர்களுக்கு லாயக்கானது இல்லை. ஏனெனில் உழவின் மூலம் உயிர்க் கொலை நடக்க  வாய்ப்பு இருக்கிறது (இது பிராமணர்களின் பரிபூரண அஹிம்சையைக் காட்டுகிறது; சங்க இலக்கியமும் பிராமணர் வீட்டு உணவு வகைகளில் சைவ உணவை மட்டுமே இயம்பும்.அவர்களுடைய  தெருக்கள்  கோழியும் நாயும் உள்ளே புக முடியாத தூய்மையுடையன  என்றும் 2000 ஆண்டுக்கு முன்னரே புகழ்கின்றது )

10-81 முதல் 10-85 வரை – ஆபத் கால தர்மம்

10-81 முதல் 10-93 வரை பிராமணர்கள் விற்கக்கூடாத பொருட்களின் பட்டியல்

10-94 பண்டமாற்று செய்யலாம்

10-96 பேராசையுடன் மற்றவர்க்குரிய தொழிலை செய்ய விழைவோரை நாடு கடத்து; சொத்துக்களைப்  பறிமுதல் செய்.

10-97 கீதையின் எதிரொலி

ச்ரேயான் ஸ்வதர்மோ விகுணஹ பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்

ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேயஹ  பரதர்மோ பயாவஹக -3-35

பொருள்

நன்கு அனுஷ்டிக்கக் கூடிய பிறருடைய தர்மத்தைக் காட்டிலும்  , தவறுகளுடன் கூடிய சொந்த தருமமே மேலானது. தன்னுடைய தர்மத்தில் சாவும் மேலானதே .

பிறனுடைய தர்மம் பயத்தைத் தரும். 3-35

xxxx

உவமைகள்

10-102 முதல் 10-104 வரை பிராமணர்கள் பற்றிய உவமைகள்

கங்கை நீர்,  தீ , ஆகாயம் போல தூய்மைமிக்கவர்கள்.

xxxx

இவற்றை எல்லாம் சொல்லும் மநு , அந்த ரிஷிகளை மகா தபஸ்விக்கள் என்றும் வருணிக்கிறார். அதற்கு முன்னர்  தூய்மையானவர்கள் கங்கைக்கும், அக்நிக்கும் ஆகாயத்துக்கும் சமமானவர்கள். அசுத்தப் பொருட்கள் அவர்களைத் தீண்டா  என்றும் சொல்கிறார்.

ஆனால் விஷமக்கார இந்து மத விரோதிகள் இதையெல்லாம் மறைத்துவிட்டு ‘காமா சோமா’ என்றும் ‘கன்னா பின்னா’ என்றும் எழுதி மகிழ்வர்!

Xxx

10-115, 10-116 ஆகிய இரண்டு ஸ்லோகங்களிலும் மநு மூன்று ஜாதியினரும் பசி வந்த காலத்தே, கஷ்ட காலத்தே பொருள் ஈட்டக்கூடிய 10+7 = 17 வழி முறைகளை விளம்புகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

10-120 ல் மன்னன் எவ்வளவு வரி வாங்கலாம் என்று உரைக்கிறார்.

10-124 ல் சூத்திரர்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் பிராமணர்கள் தரவேண்டும் என்று கட்டளை இடுகிறார்.

10-127 ல் பஞ்ச காலத்தில் சூத்திரர்களும் வேதம் ஓதுதலைத் தவிர மற்ற உயர்ந்தோர் தொழிலையும் செய்யலாம் என்பார் .

10-129ல் சூத்திரர்கள் அளவுக்கு அதிகமாக பொருள் ஈட்டுவது ஆபத்தில் முடியும் என்பார். இதைப் படிப்போர் முந்தைய அத்தியாயத்தில் பிராமணர்கள் கொஞ்சமும்  பொருள் சேர்த்துவைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இத்துடன் பத்தாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

–subham—

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 7 (Post No.7436)

இந்தத் தொடரில் கடைசிக் கட்டுரை

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 77436 (Post No.)

Written by S NAGARAJAN

Uploaded in London on  – 9 JANUARY 2020

Post No.7436

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது. இந்த ஸ்தோத்திரங்களின் மூலமும் ஆங்கிலத்தில் அர்த்தமும் கிடைக்காதா என எண்ணுபவர்கள் கட்டுரையின் கடைசி பாராவைப் பார்க்கவும்.

இத்தொடரில் இறுதிக் கட்டுரை இது.

24) சுதர்சனாஷ்டகம்

8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் முதலாவதானது சுதர்சனம். சில ஆலயங்களில் சுதர்சனருக்குத் தனி சந்நிதி உண்டு. திருமோகூரில் குறிப்பிடத்தகுந்த சுதர்சன சந்நிதி உள்ளது.

பாஞ்சராத்ர ஆகமத்தின் பழைய சம்ஹிதையான அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் சுதர்சனத்தின் பெருமை பல அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது.

கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.

திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார் தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும் மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதில் உள்ள எட்டு ஸ்லோகங்களை அர்த்தத்துடன் மனதில் ஊன்றிப் படிப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும் என்று உறுதி கூறுகிறார் ஒன்பதாவது ஸ்லோகத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர்.

25) ஷோடசாயுத ஸ்தோத்ரம்

 19 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஷோடசாயுத ஸ்தோத்ரம். ஒரு சமயம் திருப்புட்குழியில் வாழ்ந்தோர் கொடிய ஜுரம் ஒன்றினால் பாதிக்கப்பட்டு வருந்த, அப்போது தேசிகர் இதை இயற்றி அவர்களின் ஜுரத்தைப் போக்கடித்ததாகக் கூறப்படுகிறது.

சுதர்சனருக்கு ஆயுதேஸ்வரன் – ஆயுதங்களின் ஈஸ்வரன் – என்று பெயர். 16 ஆயுதங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுதர்சனர் இடது கையில் எட்டையும் வலது கையில் எட்டையும் வைத்திருக்கிறார். மிக முக்கியமான சுதர்சன சக்கரத்தை அவர் தன் கையில் வைத்திருக்கிறார்.

18வது ஸ்லோகத்தில் தேசிகர் இந்த 16 ஆயுதங்களுடன் சுதர்சனர் இந்த உலகத்தைக் காத்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.

19வது ஸ்லோகத்தில்  16 ஆயுதங்களையும் போற்றித் துதிக்கும் இந்த ஸ்லோகங்களை யார் ஒருவர் சொல்கிறாரோ அவருக்கு நலமும் வளமும் கூடும் என்கிறார்.

26) ஸ்ரீ கருட தண்டக:

 4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.

விஷ்ணுவின் வாகனம் கருடன். நித்யசூரிகளில் ஒருவரான கருடர் வேதத்தில் புகழப்படுபவர். அவருக்கு ருத்ரா மற்றும் சுகிர்தி என இரு மனைவிகள் உண்டு. விஷ்ணுவின் வியூக தோற்றங்களில் அவர் சங்கர்ஷண அம்சமாக கருதப்படுகிறார்.

ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும் பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.

உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது. உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக் கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும் அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும்  வேண்ட தேசிகர் இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக் கீழே போட்டது.

இதில் உள்ள சந்தச் சிறப்பை சம்ஸ்கிருத ஆர்வலர்கள் வெகுவாகப் போற்றுவர்.

27) ஸ்ரீ கருட பஞ்சாஷத்

 52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.

கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.

வர்ணகா என்று கூறப்படும் ஐந்து பகுதிகள் கொண்ட இது, கருட மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

முதல் பகுதி பர வ்யூஹ வர்ணகம். இரண்டாவது பகுதி அம்ருதாஹரண வர்ணகம். மூன்றாவது பகுதி நாகதமன வர்ணகம். நான்காவது பகுதி பரிஷ்கார வர்ணகம். ஐந்தாவது பகுதி அத்புத வர்ணகம்.

கருடர் விஷ்ணுவுக்கு பல அம்சங்களில் சமமானவர் எனக் கூறும் தேசிகர் தனது இறுதி ஸ்லோகத்தில் பாம்பினால் ஏற்படும் உடல் மற்றும் மனோ பாதிப்புகள், வியாதிகள்,விதியின் தீய விளைவுகள் அனைத்தும் இந்த ஸ்லோகங்களைப் படிப்பதால் போய் விடும் என்று கூறி அருள்கிறார்.

28) ஸ்ரீ யதிராஜ சப்ததி

 74 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ யதிராஜ சப்ததி. ஸ்ரீ ராமானுஜரைப் போற்றித் துதிப்பவை இந்த ஸ்லோகங்கள். தயா சதகம் போலவே வெவ்வேறு சந்தங்களில் அமைந்திருக்கிறது இந்த சப்ததி. இதில் அனைத்து ஆசாரியர்களையும் குறிப்பிடுகிறார் தேசிகர். விஷ்ணுவில் ஆரம்பித்து  பெரிய நம்பியில் முடிக்கிறார்.

ராமானுஜரின் மஹத்தான அருமை பெருமைகள் தேசிகரால் விரித்துரைக்கப்படுகின்றன.

முராரியின் பஞ்ச ஆயுதங்கள் ஓருரு எடுத்து ராமானுஜராக அவதரித்ததாக தேசிகர் 12ஆம் ஸ்லோகத்தில் கூறுகிறார்.

இதைப் படிப்பவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென – கரதல ஆமலகம் போல – தர்ம வழியைக் காண்பர் என்றும், அவர்களது அறிவு சார்ந்த வார்த்தைகள் ஏனையோருக்கு பகல் நேர நக்ஷத்திரம் போலத் திகழுமென்றும் தேசிகர் 74வது ஸ்லோகத்தில் கூறுகிறார்.

என்னுரை

இதுவரை தேசிகரின் பரந்த இலக்கியத்தில் 28 முத்துக்களைக் கண்டோம்.

இதை மூலத்துடன் முழுவதுமாகப் படிக்க ஆசை கொண்டோர் ஸ்லோகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் போனஸாக சேர்த்துப் பெறலாம்.

மறைந்த மேதை ஸ்ரீமான் எஸ்.எஸ். ராகவன் மற்றும் டாக்டர் எம்.எஸ். லக்ஷ்மிகுமாரி, டாகர் எம்.நரசிம்ஹாசாரி ஆகியோர் Sri Vedanta Desika’s Stotras (with English Translation) என்ற புத்தகத்தில் மேலே கண்ட 28 ஸ்தோத்திரங்களைத் தொகுத்து வழங்கியுள்ளனர். அரிய இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1995இலும் இரண்டாம் பதிப்பு 2002இலும் வெளியாகியுள்ளன.

இதை வெளியிட்டு பெரும் சேவையைச் செய்திருப்போர் : Sripad Trust, 19, Second Main Road, C.I.T.Colony, Chennai – 600 004. பக்கங்கள் 351.

ஆர்வமுள்ள அன்பர்கள் இந்த நூலைப் படித்துப் பெரும் பயன் பெறலாம்.

இந்தக் கட்டுரைத் தொடர் வழங்க உத்வேகமூட்டியது இந்த நூலே.

நமது நன்றியை இவர்களுக்குப் பதிவு செய்து இந்தத் தொடரை முடிக்கிறேன்.

ச.நாகராஜன்

Old articles on Vedanta Desika

அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி …



https://tamilandvedas.com › 2019/10/21 › அறுபத…

  1.  

Translate this page

21 Oct 2019 – அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி-சுவையான சம்பவங்கள் (Post No.7121). WRITTEN BY London …

வேதாந்த தேசிகரின் … – Tamil and Vedas



https://tamilandvedas.com › 2019/10/28 › வேதாந…

  1.  

Translate this page

வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறும் அவர் செய்த அற்புதங்களும்- 1 (Post No7149). Compiled by …

வேதாந்த தேசிகரின் வாழ்க்கை …



https://tamilandvedas.com › 2019/10/29 › வேதாந…

  1.  

Translate this page

29 Oct 2019 – வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறும் அவர் செய்த அற்புதங்களும்- 2 (Post No7152).

Kalki Purana | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › kalki-purana

  1.  

3 Apr 2015 – The title of the book is ‘KALKI PURANA’. The Sanskrit text was … Vedanta Desika in his famous hymn ‘Daya Satakam’ says. Maa saahasokti …

STORY OF THE BELL THAT TRAVELED TO 60 TOWNS! (Post …



https://tamilandvedas.com › 2019/10/20 › story-of-the-b…

  1.  

Translate this page

20 Oct 2019 – Vedanta Desikan wrote over 100 books. He was considered the incarnation of The Bell that Brahma used in the worship of Lord Venkateswara …

100 year life | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › 100-year-life

  1.  

Translate this page

6 Dec 2017 – … such as Facebook friends, Books, Google and newspapers; thanks. … Sri Ramanuja lived for 120 years and Vedanta Desika lived for 101 …

Foot Prints worship | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › foot-prints-worship

  1.  

15 Aug 2012 – Vedanta Desika, one of the Vaishnavaite Acharyas of Tamil Nadu wrote 1000 slokas on Lords Padukas (shoes)in one night! An amazing feat.

–subham–

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 6 (Post No.7432)

Written by S Nagarajan

Uploaded in London on  – 8 JANUARY 2020

Post No.7432

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

அடுத்து அவர் அருளியுள்ள இன்னும் சில ஸ்தோத்திரங்களைப் பார்ப்போம்.

***

தொடரும்