மர்லின் மன்றோ உடைகள் ஏலம்! (Post No.7547)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No.7547

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஒருவர் புகழ் பெற்றுவிட்டால் பின்னர் அவர் தொட்டதெல்லாம் பொன்  தான்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்  என்பர்.

இதைக் கொஞ்சம் மாற்றிப் புகழுடையோர் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் எனலாம். நான் 2-8-1992ல் தினமணி கதிரில் எழுதிய ஒரு செய்தி இதோ:-

கிரேக்கர்கள் இந்துக்களே! நப்பின்னை கதை!!(Post No.7468)

IMAGES OF PENELOPE

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7468

Date uploaded in London – 18 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வலிமைமிக்க கம்பணன், கிராடர்களின் அரசன் சுமனஸ் , சாணுரன் , யவனர்கள் அதிபதி , தேவவிரதன், போஜன், tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வான் பூட்டினன் , யவனர்களை கிரேக்கர் (Greeks) என்றே மொழிபெயர்த்துள்ளார் .

இதையெல்லாம் விட பெரிய சான்றுகள் தமிழ் இலக்கிய, மற்றும் வேத கால கதைகளாகும் . சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம் , ரிக் வேதத்தில் வரும் சரமா நாய்க் கதை ஆகியன கிரேக்க புராணக் கதைகளில் இருப்பதை முன்னரே எழுதிவிட்டேன்.

நப்பின்னை கதை

இப்போது நப்பின்னை கதையை விரிவாகக் காண்போம். 2012-ல் நான் எழுதிய கட்டுரையில் நப்பின்னை என்ற சொல் 

பெனாலப்பி (Penolope) என்ற கிரேக்கப் பெண்ணின்

amilandvedas.com › 2012/04/08 › கிரேக்க…

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு | Tamil …

1.      

8 Apr 2012 – தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி. … அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க …

tamilandvedas.com › tag › தமிழில்-இரு…

தமிழில் இருந்து ஆங்கிலம் | Tamil and …

1.      

27 Feb 2018 – Posts about தமிழில் இருந்து ஆங்கிலம் written by Tamil and Vedas. … தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? … கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER … ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை …

tamilandvedas.com › tag › ரிக்வேதம்

ரிக்வேதம் | Tamil and Vedas

1.      

2.      

இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. … (பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ) … இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க …

tamilandvedas.com › tag › யவனர்கள்-யா…

யவனர்கள் யார் | Tamil and Vedas

1.      

1 Aug 2014 – யவனர் என்ற ஸம்ஸ்கிருதச் சொல் ‘ஐயோனியன்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. தமிழில் ய, ச என்ற எழுத்துகளோடு எந்த …

You’ve visited this page 2 times. Last visit: 28/12/17

tamilandvedas.com › 2013/08/12 › தமிழில்…

தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!! | Tamil …

1.      

2.      

12 Aug 2013 – சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி … கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை … Tamil and Vedas … Ghost , Ghoul என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்களுக்கு மிகவும் நெருங்கியவை. கூளி= …

tamilandvedas.com › 2012/05/07 › கிரேக்க…

கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள் …

1.      

2.      

7 May 2012 – மேலும் சில தமிழ்கிரேக்க சொற்கள் ஒற்றுமை … நாகர் இனத்தவருக்கு தமிழில் ஓவியர், அருவாளர், நாகர் என்று பல பெயர்கள் உள்ளன.

tamilandvedas.com › tag › சம்ஸ்கிருத-…

சம்ஸ்கிருத அதிசயங்கள் | Tamil and Vedas

1.      

19 Dec 2014 – தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு … கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய … “சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன.

tamilandvedas.com › 2014/06/04 › சங்கத்-த…

ரிக் வேத நாய் | Tamil and Vedas

1.      

25 Jun 2015 – Research paper No 1953. Written by London swaminathan. Date: 25 June 2015. Uploaded in London at காலை 9-50. ரிக்வேதத்தில் (10-108) சரமா என்ற நாயின் கதை பத்தாவது …

tamilandvedas.com › tag › நாய்-கல்லறை

நாய் கல்லறை | Tamil and Vedas

1.      

17 Feb 2017 – உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் சரமா என்ற நாயின் கதை உள்ளது. அதை கிரேக்கர்கள் ‘திருடி’ ஹெர்மிஸ் HERMES என்று …

சங்கத் தமிழில் ராமன், பலராமன் …

1.      

Translate this page

4 Jun 2014 – பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. Written by London Swaminathan Post No. 1083 ; Dated …

tamilandvedas.com › tag

ஔ | Tamil and Vedas

1.      

2.      

Translate this page

23 Dec 2014 – தமிழில் கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது … ய, ர, ல ஆகிய எழுத்துக்களும் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாது என்பது விதி. … கிரேக்க மொழியானாலும் அராபிய மொழியானாலும் நம்மைத் தான் பின்பற்றுகின்றனர். வேத …

tamilandvedas.com › category › page

Tamil Literature | Tamil and Vedas | Page 60

1.      

8 Apr 2012 – தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி. … அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க …

–SUBHAM–

ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி, நடிகை ஜேன் பாண்டா (Post No.7427)

ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி, நடிகை ஜேன் பாண்டா (Post No.7427)

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7427

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

1992ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்  தினமணியில் எழுதிய மூன்று பழைய விஷயங்கள்

1.பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) – இன்னும் பதவியில் நீடிக்கிறார். விக்டோரியா மகாராணியின் 64 ஆண்டு ஆட்சி சாதனையை முறியடித்த பின்னர் பதவி விலகி இளவரசர் சார்லசுக்கு வழிவிடுவார் என்று நம்பப்பட்டது . ஆனால் இப்போது அவர் 67 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். தற்கால உலகில் நீண்ட காலம் ஆடசி செய்யும் ராணி இவர்தான்

XXXX

ஜேன் பாண்டா (Jane Fonda) வின் மணம் முறிந்தது.

மூன்றாவது கணவரான டெட்டுடன் 2001 வரை வாழ்ந்தார்.

பின்னர் நாலாவது கணவராக ரிசர்ட் பெறி வந்தார். அவர்கள் திருமண வாழ்வு 2009ல் துவங்கி 2017ல் முடிந்தது. இப்போது ஜேனுக்கு வயது 82.

XXX

ஷான் கானரி

ஷான் கானரிக்கு (Sean Connery) வயது 89. அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

TAGS —ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி , இரண்டாம் எலிசபெத்,நடிகை ஜேன் பாண்டா

–SUBHAM–

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7427

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

1992ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்  தினமணியில் எழுதிய மூன்று பழைய விஷயங்கள்

1.பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) – இன்னும் பதவியில் நீடிக்கிறார். விக்டோரியா மகாராணியின் 64 ஆண்டு ஆட்சி சாதனையை முறியடித்த பின்னர் பதவி விலகி இளவரசர் சார்லசுக்கு வழிவிடுவார் என்று நம்பப்பட்டது . ஆனால் இப்போது அவர் 67 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். தற்கால உலகில் நீண்ட காலம் ஆடசி செய்யும் ராணி இவர்தான்

XXXX

ஜேன் பாண்டா (Jane Fonda) வின் மணம் முறிந்தது.

மூன்றாவது கணவரான டெட்டுடன் 2001 வரை வாழ்ந்தார்.

பின்னர் நாலாவது கணவராக ரிசர்ட் பெறி வந்தார். அவர்கள் திருமண வாழ்வு 2009ல் துவங்கி 2017ல் முடிந்தது. இப்போது ஜேனுக்கு வயது 82.

XXX

ஷான் கானரி

ஷான் கானரிக்கு (Sean Connery) வயது 89. அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

TAGS —ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி , இரண்டாம் எலிசபெத்,நடிகை ஜேன் பாண்டா

–SUBHAM–

பாப் இசை ராணி மடோன்னா (Post No.7299)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 4 DECEMBER 2019

 Time in London – 15-24

Post No. 7299

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

நான் 1992ல் தினமணி யில் எழுதிய கட்டுரை காண்க

மடோன்னாவுக்கு இப்போது வயது 61.

இன்று வரை பாடிக்கொண்டிருக்கிறார் .

இரண்டு கணவர்கள் ; ஆறு குழந்தைகள்

சம்பாதித்த தொகை- சுமார் 80 கோடி டாலர்.

xxx

வெங்காயம்

வெங்காயம்  ரிகார்டும் 2014-ல் மாறிவிட்டது . ஒருவர் 18 பவுண்டுக்கு மேல்  எடையுடைய வெங்காயத்தை உற்பத்தி செய்துள்ளார்.

British gardener grows Guinness World Record breaking onion

A GREEN-fingered Brit has planted himself in the Guinness World Records book with the largest ever onion.

Tony Glover has smashed the existing record for his whopping vegetable, which weighs an eye-watering 18lbs and 11oz and measures 32 inches around its widest part.

When recipes call for a large onion, on average they mean around 12 ounces. But Mr Glover’s whopper was almost 25 times that size.

biggest onion 18 pounds

Madonna

டுமீல், டுமீல் கிளின்ட் ஈஸ்ட்வுட் (Post No.7284)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 DECEMBER 2019

Time in London – 7-23 AM

Post No. 7284

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

திரைப்பட  நடிகர்

பிறப்பு – 31 மே  1930

தற்போது வயது- 89

நான் எழுதிய கட்டுரை தினமணியில் 1992ல் பிரசுரமானது

Clinton Eastwood Jr. is an American actor, filmmaker, musician, and politician. After achieving success in the Western TV series Rawhide, he rose to international fame with his role as the Man with No … Wikipedia

Born31 May 1930 (age 89 years), San Francisco, California, United States

Height1.93 m

ChildrenScott EastwoodFrancesca EastwoodAlison EastwoodMORE

SpouseDina Eastwood (m. 1996–2014), Maggie Johnson (m. 1953–1984)

TV showsRawhideMrs. Eastwood & CompanyThe BluesThe Lone Ranger: Extras

கணவனை எரித்த காரிகை (Post No.7187)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7  NOVEMBER 2019

Time  in London – 9-45 am

Post No. 7187

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

~கொழுநனனைக் கொளுத்தினால் பொய்யெனப் பொய்யும் மழை~

கணவனைத் தொழுதால் போதும்; தெய்வத்தைத் தொழ வேண்டாம் என்றான் சநாதனி ஹிந்து, ஹிந்து தீவிரவாதி, பழைய பத்தாம் பசலி திருவள்ளுவன்.

இப்போது ~டேய், வாடா, போடா~ என்று காதலனைக் கூப்பிடும் பெண்கள் வள்ளுவனைப் பார்த்துச் சிரிக்கின்றனர்;பரிகசிக்கின்றனர்.

~கணவனையா? தொழ வேண்டுமா? மசூதீல வேணும்னா தொழுகை நடக்கும். எங்க வீட்ல அவர்தான் என்னைத் தொழுவார்; காரணம் என்ன வென்றால். திருவள்ளுவன் குறளை இலக்கணப்படியே இரண்டு விதங்களிலும் அர்த்தம் சொல்லலாம்~– என்பாள் படிதாண்டாப் பத்தினிகள்!!

தெய்வம் தொழாள்;

கணவன் தொழுது எழுந்திருப்பாள்  – என்று!`

இப்போது கூட பல வீடுகளில் பார்க்கிறோம்.

அம்மா தாயே; பிள்ளைங்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகனும்; எனக்கு காப்பி கூட வேனாம். அதுகளுக்கு உடுப்பைப் போட்டு மத்தியானச் சாப்பாட்டைக் கட்டிக்கொடு; உன்னை யாரு ராத்ரி ஒரு மணி வரைக்கும் டெலிவிஷன் பாக்கச் சொன்னான்  – என்று கணவன்மார்கள் கதறுவதை!!

பிரிட்டனில் 1992-லேயே கொலைகாரிக்கு மாலை போட்டார்கள். இதோ நான் எழுதிய 15-11-1992 அலுவாலியா கட்டுரை.

அலுவாலியா கட்டுரையைப் படிச்சிட்டு அழுவலியா?

தெய்வம் தொழாள் கொழுநனனைக் கொளுத்துவாள்

பொய் எனப் பொய்க்கும் மழை (கலியுகத்தில்)–

சுவாமிநாதன் எழுதிய அருட்குறள்.

இதோ வள்ளூவன் எழுதிய உண்மைக் குறள்:–

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

எனது கட்டுரைக்குப்பின்னர் வந்த செய்திகள்………………….

கிரன் ஜித் அலுவாலியா வழக்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். கிரன் ஜித் தனது வாழ்க்கையை சர்க்கிள் ஆFப் லைட் என்ற தலைப்பில் சுயசரிதையாகவும் எழுதினார்.

இதையும் படியுங்கள்………………………..

தெய்வம் தொழாஅள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › தெய்வம்-த…

  1.  

Translate this page

3 Jun 2017 – Written by S NAGARAJAN. Date: 3 June 2017. Time uploaded in London:- 6-29 am. Post No.3966. Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.

மும்மாரி | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › மும்மாரி

  1.  
  2.  

Translate this page

22 Dec 2012 – வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= …

subham

திகில் சினிமா படம் எடுக்க கதை வேண்டுமா? (Post No.7137)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 25 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-15 AM


Post No. 7137

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

நான் எழுதிய ‘ரஷியாவை அதிரவைத்த கொலை வழக்குகள்’ என்ற கட்டுரை தினமணியில் உலகப் பலகணி -யின் கீழ் 1992-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியானது. அத்துடன் பாட்டில் படத்தின் விலை 21 லட்சம் டாலர் , இமயமலையில் புற்று நோய்க்கு மருந்து என்ற கட்டுரைகளும் வெளியாகின.

–subham–

ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் 525 (Post No.5680)

Written by S Nagarajan

Date: 20 November 2018

GMT Time uploaded in London –5-28 am
Post No. 5680

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஆங்கில இலக்கியம்

 ‘ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரில் பெயிலான கதை’ என்ற இதற்கு முந்தைய கட்டுரையைப் படித்து விட்டீர்களா?

ஷேக்ஸ்பியரின் இலக்கியத்தின் மீது எழுந்த திரைப்படங்கள் 525!

ச.நாகராஜன்

ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளாக உள்ளவை 37. இவற்றை அடிப்படையாகக் கொண்டு 410 திரைப்படங்கள் உருவாகி இருப்பதாக  விக்கிபீடியா கூறுகிறது.

ஆனால்

IMDb, 1095 தயாரிப்புகள் ஷேக்ஸ்பியரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. இவற்றில் சினிமா, தொலைக்காட்சிக்கான படைப்புகள், சில விளையாட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். ஷேக்ஸ்பியரின் படைப்புகளை நேரடியாக அப்படியே கொண்டுள்ள படைப்புகளோடு அவரது சானெட் உள்ளிட்டவையும் சேர்த்துக் கணக்கிட்டால் 525 என்று கணக்கிடலாம் என ஷேக்ஸ்பியர் ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இதை ஒரு படமாகவே புள்ளி விவரங்களுடன் அவர் தருகிறார் இப்படி:

ஆக உலக வரலாற்றில் ஷேக்ஸ்பியருக்குள்ள ஒரு தனி இடம் மறுக்க முடியாத இடமாக ஆகிறது. இப்படி ஒரு தொகுப்பைத் தந்துள்ள www.stephenfollows.com/blog ற்கு நமது நன்றியை இங்கு பதிவு செய்கிறோம்.

ஷேக்ஸ்பியரின் இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்தோர் தரும் விவரங்கள் ஏராளம்.

மேலே கூறிய 525 படங்களில் சிலவற்றை, எடுத்துக்காட்டிற்காக, இங்கு பார்க்கலாம்:

மேலை நாட்டு ஆங்கிலப் படங்கள்:

West Side Story (Robert Wise and Jerome Robbins) – Romeo and Juliet

Kiss Me, Kate (Geroge Sidney) – The Taming of the Shrew

Forbidden Planet (Nicholas Nayfack) – The Tempest

My Own Private Idaho (Gus Van Sant) – Henry IV parts 1 and 2

Gnomeo and Juliet (Kelly Asbury) – Romeo and Juliet

Looking for Richard (Al Pacino) – Richard III

 

ஹிந்தி திரைப்படங்கள்

Omkara, Maqbool, Haider ( by Bhardwas) – Othello, Macbeth, Hamlet

Golioyon ki Rasleela : Ram – Leela (Sanjay Leela Bhansali) – Romeo and Juliet

ஜப்பானியத் திரைப்படங்கள்

Throne of Blood (Akira Kurosawa) – Macbet                                                                     Ran (Akira Kurosawa) – King Lear

கடந்த 18 ஆண்டுகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

ஜப்பான், இந்தியா, ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, ஜெர்மனி, தாய்லாந்து, இத்தாலி, சீனா, போலந்து, ருஷியா, தென்னாப்பிரிக்கா, திபத், நெதர்லாந்து, வியட்நாம், இஸ்ரேல், சிலி, எஸ்டோனியா, பிரேஜில், ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் இந்தப் படைப்புகளை மிக்க ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

118 மொழிகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி என்ற கணக்கில், ஷேக்ஸ்பியர் இயற்றிய படைப்பிலக்கியப் புத்தகங்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன. இதுவரை எத்தனை கோடி விற்றன என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில் பல கோடி என்று சொல்லி முடிப்பதே சிறந்த விடை ஆகும்!.

LOVE என்ற சொல்லை 2191 முறை ஷேக்ஸ்பியர் பயன்படுத்தியுள்ளார்.அவரது கதாபாத்திரங்களில் வரும் பெயர்களில் உலக மக்கள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் பெயர் ஒலிவியா.

ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்கள் சுமார் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவரது படைப்புகளில் செக்ஸ், அரசியல் சூழ்ச்சி, வன்முறை (இன்றைய நோக்கில் ஒரு திரைப்படத்திற்கான மூன்று முக்கிய அம்சங்கள் இவை தானே!) ஆகிய மூன்றும் உண்டு என்பதால் அவை அனைவரையும் கவரும் திறன் வாய்ந்தவை.

அடுத்து ஷேக்ஸ்பியர் பிறந்த தேதி :

23-4-1564 என்ற தேதி ஷேக்ஸ்பியரின் பிறந்த தேதி. ஆனால் ஜூலியன் காலண்டர் என்ற பழைய காலண்டரின் அடிப்படையில் இந்தத் தேதி தரப்படுவதால் அதை மாற்றி இந்தக் காலத்திய க்ரெகோரியன் காலண்டர் படி பார்த்தால் வரும் தேதி 3-5-1564!

ஷேக்ஸ்பியருக்கு ஏழு உடன்பிறந்தோர் உண்டு.

ஜோன் (இரண்டு மாதமே வாழ்ந்த குழந்தை; பிறந்த ஆண்டு 1558)

மார்கரெட் (1562)

கில்பர்ட் (1566)

இன்னொரு ஜோன் (1569)

ஆன்னி (1571)

ரிச்சர்ட் (1574)

எட்மண்ட் (1580)

ஷேக்ஸ்பியருக்கு 18 வயது ஆகும் போது 26 வயதான ஆன்னி ஹாத்வேயை மணந்தார். மணமான போது ஷேக்ஸ்பியரின் குழந்தையை மூன்று மாதக் கருவாகக் கொண்டிருந்தார் அவர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு.ஒரு மகன் ஹாம்னெட் இரு பெண்கள் – சூசன்னா, ஜூடித்.

ஷேக்ஸ்பியர் ஒரு நாடக நடிகரும் கூட.

இங்கிலாந்தின் ராணி முதலாம் எலிஸபத் முன்னாலும் மன்னர் முதலாம் ஜேம்ஸ் முன்னாலும் அவர் நடித்திருக்கிறார்!

அவர் ஒரு நல்ல வியாபாரி. செல்வந்தரும் கூட. ஒவ்வொரு படைப்புக்கும் சன்மானமாக அவருக்கு நிறையப் பணம் வந்தது!

ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களை,1852ஆம் ஆண்டு, ‘தி இண்டர்நேஷனல் அஸ்ட்ரானமி யூனியன்’,  யுரேனஸ் கிரகத்தின் 27 துணை நிலாக்களில் பலவற்றிற்கு சூட்டியது. இந்தத் துணை  நிலாக்களுக்கு அலெக்ஸாண்டர் போப்பின் ‘தி ரேப் ஆஃப் தி லாக்’ -இல் வரும் பாத்திரங்களின் சில பெயர்களையும் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களுடன் கூடச் சேர்த்துச் சூட்டியது.

ஷேக்ஸ்பியரைப் பற்றிய மேலும் சில விவரங்களை இன்னுமொரு கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

TAGS– ஷேக்ஸ்பியர்,  திரைப்படங்கள். 

****

1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்! (Post No.5654)

WRITTEN BY S NAGARAJAN

Date: 12 November 2018

Time uploaded in London – 6-30 AM (GMT)

Post No. 5654

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1001 அருமையான ஆங்கிலத் திரைப்படங்கள்!

ச.நாகராஜன்

இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 1001 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியலைத் தொகுத்துத் தருகிறது 1001 Movies You Must See Before You Die என்ற ஆங்கிலப் புத்தகம். இதைத் தொகுத்து வழங்கி இருப்பவர்  Steven Jay Schneider.

1900 ஆம்  ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை வந்திருக்கும் ஆங்கிலப் படங்களில் சிறந்தவற்றை இப்புத்தகம் வழங்குகிறது. இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய படங்கள் இவை!

 இப்படி ஒரு நூலை யாராவது தொகுக்க மாட்டார்களா என ஏங்கி இருக்கும் பல்லாயிரக்கணக்கான திரைப்பட ஆர்வலர்களுக்கு வர பிரசாதம் இந்தப் புத்தகம்.

116 ஆண்டு ஆங்கிலத் திரைப்பட வரலாறு தொகுக்கப்பட்டது போன்ற ஒரு கலைக்களஞ்சியமாக இது அமைகிறது!

முதலில் தொகுக்கப்பட்ட பட்டியலில் 1300 படங்கள் இடம் பெற்றன. ஆனால் திருப்பித் திருப்பி ஆராய்ந்து யோசித்து 1001 படங்களைத் தெரிவு செய்துள்ளார் ஸ்டீவன் ஜே ஷ்னெய்டர்.

அனைத்துப் படங்களின் பெயர்களும் நூலின் ஆரம்பத்திலேயே அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு படத்தைப் பார்க்கலாம். 1998 ஆம் ஆண்டு வெளியான ஒரு படம் டாம்  டய்க்வெரின் ‘ரன் லோலா ரன்’. (Tom Tykwer’s Run Lola Run).

20 நிமிடம் நடக்கும் ஒரு சம்பவம் மூன்று முறை எடுக்கப்பட்டிருக்கிறது.

 

ஒரு சில நிமிடங்களில் சூழ் நிலை எப்படி மாறும் என்பதைக் காட்ட மூன்று முறை சற்று நேரத்தை மாற்றிக் காண்பிக்கிறார் டைரக்டர். லோலாவுக்கு என்ன நேருகிறது? படத்தைப் பார்த்தால் தெரியும்; காலத்தின் அருமையும் புரியும்!

அடடா, என்ன மாற்றம்! அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.

சிசில் பி டெமிலியின் டென் கமாண்ட்மெண்ட்ஸ்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராஸிக் பார்க்.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ!

இப்படி ஒவ்வொரு படமும் வெளி வந்த ஆண்டு, டைரக்டர், நடித்தவர்கள், கதை உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 150 முதல் 500 வார்த்தைகளில் ஒவ்வொரு கட்டுரையிலும் தருகிறார் நூலாசிரியர்.

22 விஷயங்களாகப் படங்கள் தொகுக்கப்பட்டு அதில் இடம் பெறும் படங்கள் இறுதியில் தரப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் 22 விஷயங்கள் :

Action, Adventure, Animation, Avant-Garde, Comedy, Crime, Docu-drama, Documentary, Drama, Experimental, Family, Fantasy, Horror, Musical, Mystery, Noir, Romance, Sci-fi, Short, Thriller, War and Western.

இப்படங்களை இயக்கியுள்ள 596 பிரபலமான டைரக்டர்களின் பெயர்களும் டைரக்டர் இண்டெக்ஸில் தரப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் பற்றிய் படங்களா?

இதோ The Bridge on the river Kwai (1957), The Great Escape (1963), Gone with the Wind (1939).

படங்கள் அணி வகுக்கின்றன!

என்றாலும் கூட நாம் விரும்பும் அனைத்துப் படங்களும் இதில் காண முடியுமா என்றால், அது சந்தேகம் தான்.

எடுத்துக்காட்டாக உலகப் போர் சம்பந்தமாக நாம் விரும்பும், The Guns of Navarone, Force Ten from Navarone முதலியவை 1001 படங்களில் இடம் பெறவில்லை. அனைவரும் ரசித்துப் பார்த்த கொள்ளை அடிக்கும் சம்பவம் இடம் பெறும் The Italian Job போன்ற படங்கள் சிலவும் இதில் இல்லை.

ஆனால் ஒன்று, இப்படி ஒவ்வொருவரின் விருப்பத் தேர்வையும் இடம் பெறச் செய்ய வேண்டுமானால் தொகுப்பாளர் 10001 படங்கள் என்று தலைப்பை மாற்ற வேண்டியிருக்கும்! ஸயின்டிபிக் பிக்ஷன் படங்கள் பற்றியோ கேட்கவே வேண்டாம். அன்றாட வாழ்க்கை, காமெடி, த்ரில்லர் என அசத்துகிறது பட்டியல்!.

ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் ஏராளமான படங்கள் வேறு. மலரும் நினைவுகளைக் கொண்டு வரும் படி உள்ளது.

திரைப்படத் துறை 100 ஆண்டுகளுக்கு மேலாக வலுவுள்ள ஒரு பொழுதுபோக்குத் துறையாக ஆகி உள்ளது. ஏழை முதல் பணக்காரன் வரை, நாடு, மொழி, பால்,இனம், வயது பேதமின்றி குறைந்த செலவில் நிறைந்த மன நிறைவைத் தருவது நல்ல திரைப்படங்களே!

2012இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி இதுவரை உலகில் 1,32,000 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்காவில் மட்டும் 44000 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது திரைத்துறையின் பிரம்மாண்டத்தைக் காண்பிக்கிறது!

ஆக இப்படி திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூல் என்றால் அது திறம்பட தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்துள்ள ஸ்டீவன் ஜே ஷ்னெய்டர் பாராட்டுக்குரியவரே! இவர் திரைப்பட விமரிசனகர்த்தா. தயாரிப்பாளர். திரைப்படத் துறை பற்றி நன்கு அறிந்தவர். சினிமா கலை பற்றிப் பல நல்ல புத்தகங்களை எழுதியவரும் கூட.

இறப்பதற்கு முன் இந்த 1001 படங்களில் முடிந்தவற்றைப் பார்த்து முடிப்போம்!

****

எம்.ஜி.ஆர் பாடல்கள் : “நான் ஆணையிட்டால்!” (Post No.5477)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 September 2018

 

Time uploaded in London – 6-01 AM (British Summer Time)

 

Post No. 5477

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

எம்ஜிஆர் நூற்றாண்டு. மக்களை உயிராக நேசித்தவரை – மக்களால் உயிராக நேசிக்கப்பட்டவரை மறக்க முடியுமா? நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை!

எம்.ஜி.ஆர் பாடல்கள் : “நான் ஆணையிட்டால்!

 

ச.நாகராஜன்

1

எம் ஜி ஆர் நூற்றாண்டு. மக்கள் திலகத்தை மறக்க முடியுமா? அவர் பாடல்களைத் தான் பாடாமல், கேட்காமல் இருக்க முடியுமா?

எம் ஜி ஆர் பாடல்கள் என்றாலே ஒரு தனிச் சொற்றொடராக விளங்குகிறது. அவருக்கென எழுதப்பட்ட பாடல்கள் என அர்த்தமாகிறது.

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்?

அது நடந்து விட்டால் ! ஏழைகள் வேதனைப் பட மாட்டார்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.

எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்திலா?

அது முடிந்து விட்டால் என் பேச்சிருக்கும்.

கடமை. அது கடமை.

தூங்காதே தம்பி தூங்காதே

திருடாதே பாப்பா திருடாதே

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்!

 

இப்படி அற்புதமான பாடல்களை இன்றும் கேட்டு மகிழும்படி அளித்தவர் எம் ஜி ஆர். பல்லவி அவருக்குப் பிடித்திருந்தால் தான் கவிஞர் மேலே போகலாம்!

சில வரிகளைத் தனக்குப் பிடிக்கும் வரை மாற்றச் சொல்வார். ஏனெனில் அவை மக்களைச் சென்று சேர வேண்டுமே! அது எம் ஜி ஆர் பாடலாயிற்றே!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் எழுதிய எம்ஜிஆர் வரிகள் அவரை என்றும் வாழ வைத்திருப்பதோடு பாடல்களைப் படைத்த அவர்களையும் வாழ வைத்துள்ளது.

கணீரென டி.எம்.சௌந்தரராஜன் தன் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் எங்கும் ஒலிக்கின்றன. பானுமதி, சரோஜா தேவி, ஜெயலலிதா என கதாநாயகிகள் தலையை அசைத்து, புன்முறுவல் பூத்து, உடல் அபிநயம் காட்டி, நடித்து மக்களை மகிழ்வித்தது ஒரு புறம் இருக்க பாடல்களின் அர்த்தம் இன்றும் பேசப்படக்கூடிய அளவில் இருப்பது தான் அவற்றின் சிறப்பு.

நாடோடி மன்னன் படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தூங்காதே தம்பி தூங்காதே.

தூங்காதே தம்பி  தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! (தூங்)

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும்  தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று  அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்  கோட்டைவிட்டார்! (தூங்)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல
பொன்னான வேலையெல்லாம்  தூங்குதப்பா! (தூங்)
[நாடோடி மன்னன்,1958]

 

பல நல்ல கருத்துக்களைத் தரும் இந்தப் பாடலுக்குப் பின்னர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருடாதே படத்திற்காக எழுதிய எம் ஜி ஆர் பாடல் திருடாதே பாப்பா திருடாதே!

 

திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு

சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது

திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்

தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது (திரு)

கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி

எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா

கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்

கீழும் மேலும் புரளாது! (திரு)

[திருடாதே,1961]

கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது! எம் ஜி ஆர் அரசுப் பொறுப்பை ஏற்கக் கட்டியம் கூறிய பாடலோ இது.

மலம் நிறைந்த பாதாளச் சாக்கடை போல நாற்றம் பிடித்த கும்பலிலிருந்து தப்பி வெளி வந்தவர்கள் தமிழக சரித்திரத்தில் பலர். சிவாஜி கணேசன், கண்ணதாசன், எம்.ஜி.ஆர் என்று இந்த நீண்ட பட்டியலைத் தொகுக்கலாம். கொள்ளையடிக்கும் கும்பலிலிருந்து வெளி வந்த எம்.ஜி.ஆர் மக்களுக்காக எதைக் கொடுக்கலாம் என்று நினைத்தாரே தவிர அவர்களிடமிருந்து எதையெதை எடுக்கலாம் என்று ஒரு போதும் நினைத்ததில்லை; கள்ளப் பணத்தால் சொத்தும் சேர்த்ததில்லை.

 

அடுத்து அவரது உள்ளக்கிடக்கையை நன்கு தெரிவித்த பாடல் கவிஞர் வாலி எழுதியது.

நான் ஆணையிட்டால். எம் ஜி ஆர் ஆணையிட்டால் என்னென்ன நடக்கும்? பார்ப்போம்:

 

நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் தூங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா

பாடல் வரிகளுடன் எம்ஜிஆர் ஒன்றி விட்டார்; அல்லது எம்ஜிஆருடன் பாடல் வரிகள் ஒன்றி விட்டன.

1964இல் வெளியான தெய்வத்தாய் படம் அவரது மூச்சு எங்கிருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டியது. கவிஞர் வாலி எழுதிய பாடல் இது:

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..

அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..

அந்த ஊருக்குள் எனக்கோரு பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..

அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..

துணிவும் வரவேண்டும் தோழா..

பாதை தவறாமல் பண்பு குறையாமல்..
பழகி வரவேண்டும் தோழா..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..
துணிவும் வரவேண்டும் தோழா..

பாதை தவறாமல் பண்பு குறையாமல்.
பழகி வரவேண்டும் தோழா..

அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் தேவன்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..

நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..
நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..

அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் வேதம்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

கடமை அது கடமை..
கடமை அது கடமை..

 

இப்படி, தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என்பதைப் பட்டியலிட்டுப் பாடிய எம்ஜிஆர் உலகம் முழுவதையும் அணைத்த பாடலை1965இல் வெளியான படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்காக கண்ணதாசன் அளித்தார்..

அற்புதமான அந்தப் பாடல் – அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.

 

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே — (ஒரே வானிலே)

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லிலாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியிலாமல் வாழவில்லையே
போகும் போது வேறு பாதை போகவில்லையே — (ஒரே வானிலே)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை — (ஒரே வானிலே)

 

எம்ஜிஆரை மேடைக்கு மேடை கண்ணதாசன் கடுமையாக விமரிசித்தவர். ஒரு நாள் முதல் அமைச்சராக இருந்த எம்ஜிஆரிடமிருந்து அவரை உடனடியாக வந்து பார்க்குமாறு அழைப்பு வந்தது. கண்ணதாசன் அவரைச் சந்தித்த போது அரசவைக் கவிஞராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதைக் கூறிய எம் ஜி ஆர், ‘சரி’ என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கண்ணதாசன் நெகிழ்ந்து உருகிப் போனார்.

 

பொன் மனம் கொண்ட எம்ஜிஆரின் உடலும் தங்க மயம் தானே!

 

அதில் லயித்த கண்ணதாசன் அவரை கதாநாய்கி வர்ணிப்பது போலத் தன் உள்ளத்தில் பட்டதை அப்படியே சொல்லி விட்டார் 15-8-1963 அன்று வெளியான நீதிக்குப் பின் பாசம் படத்தில்:

“தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது” (மானல்லவோ கண்கள் தந்தது பாடல்)

தங்க நிற உடலுக்கு மட்டுமல்ல இந்த உவமை; தங்கமான மனதிற்கும் சேர்த்து உவமையாக வந்தது பொன்!

எம்.ஜி.ஆர் என்ற. மூன்றெழுத்து தமிழக மக்களில் உள்ளங்களில் என்றென்றும் நிரந்தரமாக இருக்கும்.

 

****