மகளிர் சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி832020 (Post No.7668)

Written  by  LONDON SWAMINATHAN

Post No.7668

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ACROSS

4. – (3) கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர்குலப் பெண்

7. (2)- சங்க காலத்தில் புகழ்பெற்ற பெண் புலவர்

8. (R to L)- (4) வலமிருந்து இடம் செல்க/  ராஜராஜ சோழனின் தமக்கை

14. – (5) அப்பர் பெருமானின் சகோதரி

DOWN

1– (4)- சிலப்பதிகார கதாநாயகி

2. சிலப்பதிகார ஆடல் அழகி

3. – பாரிமகளிரில் ஒருத்தி

5.– (8) கோவலனுக்கு வழித்துணையாக வந்த சமண மத பெண் துறவி

6. – (5)- சிலப்பதிகாரத்துடன் வந்த இரட்டைக் காப்பியம் இந்தப் பெண்மனியின் பெயர் கொண்டது

9. – (5 )காவிரியில் விழுந்த ஆட்டநத்தியைத் தொடர்ந்து சென்ற கரிகால் சோழன் மகள்

10. – (5)காரைக்கால் அம்மையார் ஆனவர்

11., go up — (4) கீழிருந்து மேலே செல்க/பாரி மகளிரில்  மற்றவர்

12. go up – (2) -கீழிருந்து மேலே செல்க/ சிலப்பதிகார ஆயர்குலப் பெண் /ஆர்யை என்பதன் தமிழ் வடிவம்

—subham—-

அதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்! (Post No.7667)

Written  by  LONDON SWAMINATHAN

Post No.7667

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை –  செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மதுரவாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக்  காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது

இதோ சில சுவையான செய்திகள் –

தஞ்சாவூரிலிருந்து  ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.

ராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.

அவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும்  மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில்  12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம்.  அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.

மதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில்  ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றி ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.

ராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல்.  இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை  பொழிந்தார்

சாதுர்யமேதி கவிதாஸு சதுர்விதாஸு

வீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா

ப்ரக்ஞாமியம்  நிபுணமஞ்சதி  பாணிணீ யே

மேதாம் வ்யனக்தி  பஹுதா விவிதா வதானே

என்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.

மதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆசு கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..


பெண்மணிக்கு தங்க அபிஷேகம்

ரங்க ஜம்மா  என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள்.  உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க  மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.

பெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.

முத்துப் பழனி

நாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூத்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ்  நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி

சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத்  திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன  அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை  சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம்  ஆகும்.

–subham—

அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7653

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு —  என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;

அது எப்படி?  எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.

எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல  முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .

Jesus Christ said in the Bible,

‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13

ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.

வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான்  பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா  , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .

சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.

வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்

உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.

“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY)  (BG.7-6)

xxx

என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி

எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994)  சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத்  தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.

உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல்  மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!!  .

உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்

சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.

அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .

வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது  ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’  என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்

சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!

வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு  பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்;  ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’  என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.

ஆராய்ச்சி முடிவு-

திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity)  மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.

காரணம் ?

மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure)  உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!

எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!

இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ  உச்சரிக்கலாம் .

இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்

மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .

‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !

திருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157

பகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97

திருக்குறளில் ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23

பகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17

திருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114

பகவத் கீதையில் ‘இ’  எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21

திருக்குறளில்  ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8

பகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1

திருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81

பகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9

திருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21

பகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2

திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;

பகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.

இந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .

கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!

ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .

குறில் என்றால் அதிகம்;

நெடில் என்றால் குறைவு .

உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .

அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப்  பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!

Tags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்

வாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்

–subham–

தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக் காணலாம்! (Post 7637)

தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக் காணலாம்! (Post 7637)

Written by S Nagarajan

Post No.7637

Date uploaded in London – 1 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

காலிங் பெல் அடித்தது.கதவைத் திறந்தேன். திரு கணேஷ் கோபாலன் வந்திருந்தார். வரவேற்றேன்.

முன்பே வரப்போவதாகச் சொல்லி இருந்ததால் கணினியை (மாக் லேப்டாப் Mac LapTop) தயாராக வைத்திருந்தேன்.

அவரது மென்பொருளைக் காட்டினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று இருந்த பட்டியலிலிருந்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுங்கள் என்றார். தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.

பேசுங்கள் என்றார் அவர்.

திரு கணேஷ் அவர்களை வரவேற்கிறேன். நல்வரவு என்றேன்.

என்ன ஆச்சரியம். நான் பேசப் பேச அப்படியே எழுத்துக்கள் கணினியில் தோன்ற ஆரம்பித்தன.

நல்ல ஒரு கண்டுபிடிப்பு.

இது எப்படி சாத்தியமானது என்று அவரைக் கேட்டேன்.

விவரித்தார்.

“ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இது சாத்தியமானது. பல ஆண்டுகள் டெக்ஸாஸ் இண்ஸ்ட்ருமெண்ட்ஸ் மற்றும் ஐ.பி.எம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய் அனுபவமும் எனது சகா அனந்த் நாகராஜ் அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதும் தான்

இந்த மென்பொருள் உருவாகக் காரணம். தமிழில் பல்வேறு குரல்களை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் சேகரித்தோம். எந்தப் பிழையும் வந்து விடக் கூடாது என்பதால் பொறுமையுடனும் கவனத்துடனும் இதை உருவாக்கினோம். வெற்றி கிடைத்தது.”

“இதில் என்ன விசேஷ அம்சங்கள்?”

“முதலாவதாக துல்லியம். அப்படியே பேச்சு எழுத்தாக மாறுகிறது. இரண்டாவது விரைவு. பேசப் பேச எழுத்துக்கள் உருவாகும்.”

“இப்போது இது எங்கு பயன்பாட்டில் இருக்கிறது? யார் யாருக்கெல்லாம் இது உதவும்?”

“இப்போது போலீஸ் துறையில் இதைக் கொடுத்திருக்கிறோம்.

இதர பயன்பாடு பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்….”

சற்று யோசித்தேன். பிறகு சொல்ல ஆரம்பித்தேன். சாதாரண இல்லத்தரசி முதல் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் வரை இது பயன்படுமே. செய்ய வேண்டிய வேலைகளை நினைத்த போதெல்லாம் கம்ப்யூட்டரில் சொல்லி விட்டால் அது எழுத்தாக மாற்றுகிறது. அதை பிரிண்ட் எடுத்தால் போதுமே. எழுத்தாளர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்களுக்கு இது பெரிய உதவி சாதனமாக இருக்கும். டப்பிங் கலைஞர்களுக்கு, தான் எதைப் பேசினோம், எந்த இடத்தில் தவறு வந்துள்ளது என்பதை பிரிண்ட் அவுட் சுட்டிக் காட்டி விடும்.

போலீஸ் விசாரணை, கோர்ட் விசாரணையின் போது வக்கீல்கள், சாட்சிகள் பேசுவது துல்லியமாகப் பதிவு செய்யப்படும். ஆகவே யாரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேச முடியாது. உண்மைகள் விரைவில் வெளிப்படும். பேசியதை பதிவு செய்து உடனுக்குடன் கையெழுத்து வாங்கி விடலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.

சி.இ.ஓக்கள் மற்றும் ஏராளமானோருக்கு வேலையைப் பங்கிட்டுத் தர வேண்டிய நிறுவன உரிமையாளர்கள் முன்பே பேசி அதை உதவியாளரிடம் தந்து விடலாம்.

எனது பேச்சைக் கேட்டு கணேஷ் புன்னகை பூத்தார்.

“இன்னும் டிடிபி பப்ளிஷர்கள், டைரக்டர்கள் போன்றோரை விட்டு விட்டீர்களே. நினைத்த படி காட்சியை விவரித்து அதை அஸிஸ்டண்ட் டைரக்டர்கள், காஸ்ட்யூம் டிசைனர், செட்டை நிர்மாணிப்பவர்கள், பாடலாசிரியர், வசனகர்த்தா ஆகியோருக்குக் கொடுத்து விட்டால் திட்டமிட்டு காட்சிகளைப் படம் பிடிக்கலாம்; மீண்டும் மீண்டும் டேக் எடுக்காமல் செலவு குறையும், இல்லையா?”

“சரி, இதை உருவாக்க எப்படி நிதி கிடைத்தது?”

“சாம்சங் வெஞ்சர்ஸ் (Samsung Ventures) இதை உருவாக்க உதவும் வகையில் போதுமான நிதியை அளித்து உதவியுள்ளனர். எங்கள் நிறுவனத்தில் 30 பேருக்கு மேல் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது போன்ற ஆய்வுகளைச் செய்து புதிய மென்பொருளை உருவாக்க வழி வகுக்கிறோம்.”

“சரி,முக்கியமான விஷயத்திற்கு வருவோம். உங்கள் நிறுவனத்தின் பெயர் என்ன? உங்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது, அதைச் சொல்லுங்கள்”

“ எங்கள் நிறுவனத்தின் பெயர் ஞானி இன்னோவேஷன் பிரைவேட் லிமிடட். (Gnani Innovations Private Limited (gnani.ai)).

இதைப் பயன்படுத்த விரும்புவோருக்கு ஒரு வாரம் இலவசமாக இந்த மென்பொருளை அளிக்கிறோம். இதைப் பயன்படுத்தி திருப்தி அடைந்த பின்னர்  அவரவர் தேவைக்குத் தக்கபடி ஒரு வருடத்திற்கு 999 ரூபாயிலிருந்து பல்வேறு திட்டங்களின் படி அதற்குரிய தொகையில் இதைப் பெறலாம்.

இதைப் பெற விரும்புவோர் அணுக வேண்டிய எங்களது தளம் மற்றும் தொலைபேசி எண்ணைச் சொல்கிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்  : கணேஷ் கோபாலன் மற்றும் அனந்த் நாகராஜ் (நிறுவனர்கள்)

நிறுவனம் : gnanidhwani.com (part of Gnani Innovations Private Limited), பெங்களூரு, இந்தியா

Website Url : https://gnanidhwani.com.

மின்னஞ்சல் தொடர்பு முகவரி : support@gnanidhwani.com

தொலைபேசி எண் : 91 – 9342510660

திரு கணேஷ் கோபாலன்

திரு அனந்த் நாகராஜ்

அதிசயமான ஒரு கண்டுபிடிப்பின் டெமோவைப் பார்த்தபின் சொன்னேன் இப்படி:

“இந்த நல்ல கண்டுபிடிப்பிற்கு நாடு முழுவதும் அந்தந்த மொழி பேசுவோரிடம் நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக இந்திய மொழிகளில் ஃபாண்ட் பற்றிப் பல்வேறு சங்கடங்கள் உள்ளன. இப்படி பேசுவதை எழுத்து வடிவத்தில் மாற்றுவது பல புதிய பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறது.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”.

 “நன்றி” என்று சொல்லி கணேஷ் எழுந்து விடை பெற்றார்.

ஆர்வமுள்ளோர் இதைச் சற்றுப் பயன்படுத்திப் பார்க்கலாம்

ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி! (Post.7633)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7633

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

ஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.

சம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.

தெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.

ஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்?

இப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி – மூன்று வெண்பா எனப்படும்.

தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை – மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி – பாடியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.

அருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.

தலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.

சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே

கலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய

கங்கரா கோணாகலா மதியக் கோடீர

சங்கரா சோணா சலா.

இதன் பொருள் :-

நாற் புங்கவன் மால் காணா – உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத

புலவு உடைய – புலால் நாற்றத்தை உடைய

கம் – பிரமகபாலத்தைத் தாங்கிய

கரா – கரத்தை உடையவனே

கோணா – மாறுபடாத

கலா மதியம் – ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த

கோடீர – ஜடாபாரத்தை உடையவனே

சங்கரா – சங்கரனே

சோணாசலா – அருணாசலனே

சலம் ஏதோ – (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ

சங்கம் தா – சங்க வளையலைக் கொடு

பூணாரம் தா – ஆபரணங்களைக் கொடு

மேகலை தான் – மேகலையைக் கொடு

இந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.

அருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.

சோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் வரும்.

அருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.

இப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.

பின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.

இராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

தமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை!

 tags – இராமசந்திர கவிராயர், வெண்பா, மூன்று , திரிபங்கி, 

–subham–

Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7632

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)

1850 ஆம் ஆண்டு தமிழை ரசித்துப்படிக்க ஒரு குட்டிக் கதை

முதலில் பழைய தமிழைப் படியுங்கள் . புரியாவிட்டால் நான் சொல்லும் கதையைப் படியுங்கள்.

ஒரு தமிழன் வெளியூர் செல்கையில் கட்டுச் சாதம் சாப்பிடுவதற்காக தனது குதிரையை குளத்தின் கரையில்,ஒரு மரத்தில் கட்டினான். அவ்வழியே வெளியூருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு துலுக்கன் தனது குதிரையையும் அந்த மரத்தில் கட்டப் போனான்.

“டேய் அங்கே கட்டாதே ; என் குதிரை ரொம்ப பொல்லாதது” என்று பல முறை சொன்னான். அப்படியும் முரட்டுத் துலுக்கன் அதே மரத்தில் கட்டி விட்டு அவனது சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தான். பொல்லாத தமிழ் குதிரை, துலுக்கன் குதிரையைக் கடித்துக் குதறி கொன்று போட்டது. துலுக்கன் சண்டைக்கு வந்தான். அவன் வே ட்டியைப் பிடித்து, எனக்கு நஷ்ட ஈடு கொடு  என்றான் . தமிழன் தான்  சொன்னதையே சொல்ல, அவனைத் துலுக்கன் மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச்  சென்று தனது தரப்பை எடுத்துரைத்தான்.

தமிழன் தரப்பை வியாதிபதி கேட்ட போது அவன் வாய் மூடி மௌனியாக இருந்தான். அடப் பாவமே, இவன் ஊமை அல்லவா , உன்னிடம் பேசினான் என்றாயே? என்றார்.

துலுக்கன் சொன்னான் – ஐயோ அவனை நம்பாதீர்கள்; அவன் பாசாங்கு செய்கிறான். என்னிடம் இரண்டு முறை சொன்னான்- “மரத்தில் குதிரையைக் கட்டாதே” என்றான்.

மாஜிஸ்திரேட் சிரித்துக்கொண்டே “அப்படியா சொன்னான். அப்படியானால் உனக்கு அவன் நஷ்ட ஈடு எதுவும் தர வேண்டியது இல்லை. போ” என்றார்.

துலுக்கன் தோற்றான்; தமிழன் வென்றான்.

1850ம் ஆண்டு கதை

ஒரிஜினல் தமிழில் படியுங்கள். சுவையாக இருக்கும்.

subham

நூறு எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன? (Post No.7631)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7631

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2822020

ஒவ்வொரு மூலிகைக்கும் துவங்கும்  எழுத்தும் அதற்கான எண்களும் இதோ –

1அதி….. 7.வல்…… 11.திப்….. 15.நா…. 19.கண்….. 27.சிறு….. 33. நெ…… 37.மி…. 40.அரு…. 46.ஆடா….. 50.ஆடு……58.குங்…… 64.குப் …….69. முட…… 76.கீழா….. 81.நில….. 86.பொன்…. 92.கடு….. 97. வி……….

விடை கீழே உளது………………………

Answers

1அதிமதுரம் 7.வல்லாரை 11.திப்பிலி 15.நாயுருவி 19.கண்டங்கத்திரி 27.சிறுவழுதுணை 33. நெருஞ்சி 37.மிளகு 40.அருகம்புல் 46.ஆடாதோடை 50.ஆடுதின்னாப்பாலை, 58.குங்கிலியம் 64.குப்பைமேனி 69. முக்கத்தான் 76.கீழாநெல்லி 81.நிலவேம்பு, 86.பொன்னாங்காணி 92.கடுக்காய், 97. வில்வம்

–subham–

புற நானூற்றின் கடவுள் வாழ்த்தில் சுவையான விஷயங்கள் (Post No.7608)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7608

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கண்ணி கார்நறுங் கொன்றை ;காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே ; சிறந்த

சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று ; அக்கறை;

மறைநவில் அந்தணர் நுவலும் படுமே ;

பெண்ணுறு ஒருதிறன்  ஆகின்று ; அவ்வுரு த்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று ; அப்பிறை

பதினெண் கணமும் ஏத்தவும் படுமே

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே

கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் ;அவருடைய பெயர் மஹா+தேவன் ;

அதை அழகாக பாதித் தமிழ்ப் படுத்தி இருக்கிறார். மஹா = பெரு, பெரிய.

அவர் ஆதிகாலத்திலேயே மஹாபாரதத்தை தமிழில் பாடியவர்!

சிலர் தமிழில் முதலில் தூய தமிழ்ப் பெயர்கள் இருந்ததாகவும் தெலுங்கர்களும் பார்ப்பனர்களும் வந்து அதற்கு சம்ஸ்கிருதப் பெயர்களைக் கற்பித்ததாகவும் கதைப்பார்கள். அது தவறு. உண்மையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வடிவங்கள் ஏக  காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகவே கொள்ள வேண்டும்.

ஆனால் பிற் காலத்தில் வலிய பொருள் சொல்லப்போய், சிலர் அபத்தமாக மொழி பெயர்த்தும் இருக்கலாம்.புலவர் மஹாதேவன் புறநாநூறு தொகுக்கப்பட்ட நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இதற்குப் பின்னரும் பல சான்றுகள் உள்ளன. திருவிளையாடல்  திரைப்படத்தில் வரும் ‘தருமி கவிதை சம்பவம் எல்லோருக்கும் தெரியும். இதை அப்பரும் தேவாரத்தில் பாடியிருப்பதால் அவருக்கு குறைந்தது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னராவது வாழ்ந்திருக்கவேண்டும் .

அப்பர் பாடலில் தருமி என்ற பிராமணனின் சம்ஸ்கிருதப் பெயரும் வருகிறது. ‘சங்கம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் வருகிறது .

சங்கம் என்ற சொல்லை வைத்துத்தான் இன்று வரை தமிழர்கள் பெருமை பேசுகிறோம். இறையனார் களவியல் உரை யின்படி மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து. ஆனால் இந்த சங்கம் என்பது சம்ஸ்கிருதச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே யில்லை .தொல்காப்பிய விதிப்படி “ச” எழுத்தில் தமிழில் சொற்களே துவங்க முடியாது  சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் பரிபாடலில் ஒரே இடத்தில் ‘சங்கம்’ வருகிறது.

இதைவைத்து சங்கம் இல்லவே இல்லை அது பிற்காலக் கற்பனை என்று எவரும் சொல்வதில்லை.

ஆக உண்மையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒருவனின் இரு கண்கள் போல விருப்பு வெறுப்பின்றி பயிலப்பட்டன.

இன்னொரு எடுத்துக் காட்டையும் பார்ப்போம். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் பிராமணர் அல்ல. அவர் சொல்லும் எல்லா பாண்டிய மன்னர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதைப் பார்க்கையில் தமிழ்ப் பெயர்களும் சம்ஸ்கிருதப் பெயர்களும் ஏக காலத்தில் வேறுபாடின்றி வழங்கின என்றே தெரிகின்றது. ஆக எவரோ ஒருவர் வந்து வேண்டுமென்றே அங்கயற்கண்ணி என்ற அழகான தமிழ்ப் பெயரை மீனாட்சி என்று மாற்றியதாக குற்றம் சாட்டுவதில் பசை இல்லை.

மேலும் பிராமணர் அல்லாத அப்பர், காரைக்கால் அம்மையார் கதைகளில் வரும் பெயர்கள் எல்லாம் புனிதவதி, திலகவதி, பரமதத்தன் என்று சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. ஆக 1600 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரும் இரு கண்களைப் போன்ற தமிழ்- சம்ஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டனர் . சங்க இலக்கிய புலவர் பட்டியலில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள  உள்ளன . சிலர் மட்டும் காமாக்ஷி என்பதை காமக்க்கண்ணியார் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை தாயங்கண்ணன் என்றும் மாற்றிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

63 நாயன்மார் கதைகளைப் பார்த்தால் இன்னும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்ற. இதுவரை வரலாற்று ஆதாரம் கிடைக்காத ஒரு மன்னரின் பெயர்  மூர்த்தி நாயனார். அவர் களப்பிரர் ஆட்சியை ஒட்டி வாழ்ந்தவர். அதாவது 1600 ஆண்டுகளுக்கு முந்தையவர்.

மேலும் இதற்குப்பின்னர் ஜடா வர்மன் என்ற அழகிய சம்ஸ்கிருதப் பெயர், சடையவர்மன் என்று கல்வெட்டுகளில் தமிழ்மயமாக்கப்படுவதைக் காண்கிறோம்.

முடிவுரை

1.தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் விருப்பு , வெறுப்பின்றி பயன்பட்டன.

2.சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை பாதி மட்டும் மொழிபெயர்த்தோ, முழுதும் மொழி பெயர்க்காமலோ பயன்படுத்தினர்.

3.ஆக அங்கயற்கண்ணியை மீனாட்சியாக மாற்றியதெல்லாம் ‘சூழ்ச்சி’ , ‘சதி’ என்று சொல்வதெல்லாம் பிதற்றலே. மேலும் மீனாட்சியின் தாயார் காஞ்சனமாலை, தந்தை மலையத்வஜன் , காஞ்சன மாலை யாதவ குலத்தில் வந்தவள் (சூரசேன மகாராஜன் புதல்வி)– என்று ஆராய்ச்சியை நீட்டிக்கொண்டே போகலாம்.

4.இரு மொழிகளும் இரு கண்களைப் போன்றவையே !

வாழ்க சம்ஸ்க்ருதம் ! வளர்க தமிழ் !!!

Tags  —  கடவுள் வாழ்த்து, பெருந்தேவனார், புறநாநூறு

—subham–

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2 (Post No.7607)

WRITTEN BY S Nagarajan

Post No.7607

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சென்ற கட்டுரையின்  தொடர்ச்சி (சென்ற கட்டுரை எண் : 7517 வெளியான தேதி :31-1-2020)

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத பத்திரிகை ஹெல்த்கேர்  பிப்ரவ்ரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

புத்தகச் சுருக்கம் : Perfect Digestion by Deepak Chopra

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2

(தீபக் சோப்ரா எழுதியுள்ள ‘பெர்ஃபெக்ட் டைஜெஸ்ஷன்”)

ச.நாகராஜன்

ஆயுர்வேதம் கூறும் பழைய அறிவுரை ஒன்று உண்டு! அது இது தான் :

சரியான உணவுத் திட்டம் இல்லாத மருந்து பயனற்ற ஒன்று; சரியான் உணவுத்திட்டம் இருந்தாலோ மருந்திற்கான அவசியமே இல்லை!

(Without proper diet medicine of no use, and with proper diet medicine is of no need!)

 ஆயுர்வேதம் அடிப்படையான ஆறு சுவைகளைக் கூறுகிறது.

அவையாவன :

இனிப்பு : ஜீனி, தேன், அரிசி, பாஸ்தா பால், க்ரீம், வெண்ணெய் போன்றவை

புளிப்பு : எலுமிச்சை, சீஸ், யோகர்ட், ப்ளம், வினிகர் போன்றவை

உப்பு : எந்த உப்பு உணவும்

உரைப்பு : மிளகாய், மிளகு, இஞ்சி, உரைப்பான பொருள்கள்

கசப்பு : சில கீரைகள் (பாகற்காய் உள்ளிட்டவை)

துவர்ப்பு : பீன்ஸ், மாதுளை, ஆப்பிள் உள்ளிட்டவை

அறுசுவைகளும் உணவுத்திட்டத்தை சமச்சீராக்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இந்த ஆறு சுவைகளும் இருக்கும்படியான உணவுத்திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆயுர்வேதத்தின் முதல் அறிவுரை.

எந்த உணவை நீக்க வேண்டும்? விடை சுலபமானது. எந்த உணவு உங்களைப் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறதோ, எந்த உணவு உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லையோ, அதை நீக்கி விட வேண்டும்.

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இன்னொரு உத்தி – ஆயில் மசாஜ்.

சரியான எண்ணெயைக் காய்ச்சி சற்று சூடான நிலையில் தலையிலிருந்து கால் வரை தேய்த்து மெதுவாக மசாஜ் செய்தல் வேண்டும்.

உடலில் 107 மர்ம (ஸ்தான) ங்கள் உள்ளன. இவற்றில் மூன்று முக்கியமானவை.

  1. சிர மர்மம் 2) ஹ்ருதய மர்மம் 3) பஸ்தி மர்மம்.

இவற்றுள் மூன்றாவதாக இருக்கும் மர்மம் தான் உடலின் பல இயக்கங்களுக்கு முக்கியமானதாக அமைகிறது.

இந்த மர்மத்தின் அடிப்படையில் தான் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்படும் உத்திகளும் அறிவுரைகளும் உள்ளன.

உடலைச் சீராக வைத்துக் கொள்ள சில உடல் பயிற்சிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

யோக முத்ரா, உத்தியான பந்தம், வஜ்ராசனம், பவன முக்தாசனம், புஜங்காசனம் போன்றவற்றை (குரு மூலமாக) கற்றல் வேண்டும்.

ஜீரணம் என்பதில் உள்ள முக்கியமான அம்சம் உடல் மற்றும் உணர்ச்சி மீதான கட்டுப்பாடாகும்.

நீங்கள் உண்ணும் உணவு மட்டுமல்ல ‘நீங்கள்’ என்பது; உங்கள் உணவு உடலுக்குள் சென்ற பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதும் முக்கியமானது.

உணவையும் அது உண்ணும் அனுபவத்தையும் ஒரு அருமையான விஷயமாகக் கருதி அனுபவித்தல் வேண்டும்.

வாயு சம்பந்தமான அனைத்து தோஷங்களையும், வியாதிகளையும் தவிர்க்க நீங்கள் உங்கள் உணவு மற்றும் உடல் மீதான  முழுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆறு சுவைகளையும் கொண்ட உணவுத் திட்டம் மேலானது.

உடலின் இயக்கங்களின் மீது அழுத்தம் (Strain) இருக்கக் கூடாது. அப்படி அழுத்தம் ஏற்படுத்தும் உணவுகளை இனம் கண்டு தவிர்த்தலும், உடலில் அழுத்தம் ஏற்படும் இடங்களைக் காண்பதும் அதைத் தவிர்த்து வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதும் அர்த்தமுள்ளதாகும்.

இதைச் செய்தால் பூரண ஆரோக்கியம் கொண்டவர்களாக ஆவீர்கள்.

***

First English -Tamil Etymological Dictionary (Post No.7597)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7597

Date uploaded in London – 20 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Prof P Sankara Narayana had done a marvellous job 100 years ago by bringing out an English – Tamil Etymological dictionary. He had already brought out English -Telugu dictionary as well. Probably he is the only one who had done two huge dictionaries in two languages.

Here etymology means the etymology of English words unlike the Dravidian Etymological Dictionary of Burrow and Emeneau which gives etymology of Tamil words.

But P Sankaranarayana’s work is huge with over 1300 pages priced only three rupees in 1911. That was the enlarged second edition. From his titles we know that he worked for the Presidency College in Madras.  Like Mughal Emperor Akbar’s Din- Ilahi , P Sankaranaraya had his own religion called ‘Religion of Truth’. His book list includes his pet theme Religion of Truth. I could not find his profile in any website. Gregory James in his History of Dictionaries mentioned one P.Sankaranarayana Chettiar.

Probably he is a forgotten Chettiyar scholar and not much known lexicographer.

Let us salute him for his marvellous works.

I found the old dictionary in the British Library in London.

Please see the attached picture and some pages from the dictionary.

tags — lexicographer, English- Tamil, etymological, Dictionary, P Sankaranarayana, Chettiyar

–subham–