சோம லதையின் அபூர்வ மருத்துவ குணங்கள்! (Post No.7070)

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com

Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-33 am
Post No. 7070

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Jambunathan’s Translation
Griffith’s Tanslation

MYSTERIOUS MEDICINAL PROPERTIES OF THE SOMA PLANT IN RIG VEDA (Post No.7069)

WRITTEN by London swaminathan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-19
Post No. 7069

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

வேதத்தில் தங்கப் பல் வைத்தியம்! (Post No.7008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-19 am

Post No. 7008


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

gold tooth

தங்கம் 4 வகை, பெண்கள் 4 வகை, பிரளயம் 4 வகை! (Post No.6405)

Written  by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 18 May 2019


British Summer Time uploaded in London –  16-19

Post No. 6405

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

சங்க இலக்கியத்தில் யூபம்- பகுதி 2 (Post No.5187)

RESEARCH ARTICLE by London swaminathan

 

Date: 6 JULY 2018

 

Time uploaded in London –   7-26 am

 (British Summer Time)

 

Post No. 5187

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

நேற்றைய கட்டுரையில் புறநானூறு, அகநானூறு, பெரும்பாணாற்றுபடை முதலிய சங்ல நூல்களில் காணப்படும் யூபம் எனும் வேள்வித் தூண் பற்றிய செய்திகளைக் கண்டோம். ரிக் வேத ஸம்ஸ்க்ருதச் சொல்லை புறநானூற்றுப் புலவர்கள் தயக்கமின்றி தமிழ் பாக்களில் அள்ளித் தெளித்திருப்பதையும் சுவைத்தோம். இன்று எண்-17 க்கும் யூபத்துக்கும் உள்ள தொடர்பையும் ராவணன் மகன் மேகநாதன் நூற்றுக் கணக்கில் யூபங்கள் நட்டதையும் காண்போம்.

 

முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிய நெட்டிமையார், “நீ வென்ற பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நீ செய்த யாகங்களும், அதன் காரணமாக நட்ட யூபத் தூண்களும் அதிகமா? என்று வியந்தார். அவனுக்குப் போட்டி ராவணன் மகன் மேக நாதன். அவனூடைய யாக பூமியில் நூற்றுக் கணக்கான யூப ஸ்தம்பங்கள் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் செப்பும்.

யூபம் என்பது இருவகைப்படும் ஒன்று அலங்காரத்துக்காக யாகப் பந்தல்களில் நடப்படும் தூண்கள். மற்றொன்று வேள்விக்காக நடப்படும் யூபம். இது 17 முழம் அளவு உடையது.

ஏன் 17 முழம்?

இது ஒரு மர்மமான எண்; வேதத்தில் பல இடங்களில் இது காணப்படுகிறது. வாஜபேய யாகத்தில் 17 குதிரை ரதங்களின் போட்டி நடைபெறும் ஏனெனில் 17 என்பது பிரஜாபதியின் எண் என்றெல்லாம் விளக்கப்படுகிறது (எனது முந்தைய கட்டுரைகளில் விளக்கம் உளது)

அது மட்டுமல்ல இந்த 17-க்கும் அடி முதல் நுனி முடிய 17 பெயர்களும் இருக்கின்றன. (எனது ஆங்கிலக் கட்டுரையில் பெயர்கள் உள; கண்டு மகிழ்க)

 

 

 

பால காண்டத்திலும் (14-22) யூபம் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.

பால காண்டத்தில் அஸ்வமேத யாகம் பற்றிய செய்திகளில் 21 கம்பங்கள் நடப்பட்டதாக வால்மீகி பாடுகிறார். அதன் உயரம் 21 முழம் என்பார்.

 

ஏன் 21?

பிராஹ்மணர்கள் முத்தீ வழிபடுவோர். அதாவது ஆஹவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்னி என்ற முத்தீயை வழிபடுவதால் ஒவ்வொன்றுக்கும் ஏழு ரிஷிகள் வீதம் (ஸப்த ரிஷி 3×7= 21) 21 நடப்பட்டதாம்.

யூபஸ்தம்பத்தை– வேள்வித்தூணை– புத்தாடை கட்டி அலங்கரித்து அதன் மேல் பழக்குலைகள், இலை தழை தோரணங்கள் கட்டுவராம். யூப ஸ்தம்பத்தின் இடை, நடு, அடி, முடி ஆகியவற்றுக்குப் பிரத்யேக மான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

 

முதல் கட்டுரையில் யூபம் நட்ட தமிழ் மன்னர்களின் பெயர்களைக் கண்டோம். இந்தோநேஷியவில் மூலவர்மன், அஸ்வ வர்மன், குண்டுங்கா பெயர்களைக் கண்டோம். ராஜஸ்தான், உத்தரப் பிரதேச யூபங்களில் குஷாண, மாளவ, மோகாரி அரச குடும்பங்களின் பெயர்களும் விக்ரம, குஷாண, க்ருத யுக ஆண்டுகளின் பெயர்களும் காணப்படுகின்றன.

 

பொது ஆண்டு 102 முதல் மூல வர்மனின் பொ.ஆ.400 வரை ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இந்துக்களின் வரலாற்று உணர்வைக் காட்டும்.

 

இதில் பிராஹ்மணர்களுக்குக் கொடுத்த தக்ஷிணையும் இடம்பெறுகிறது. இந்தோநேஷியா நாட்டில் மூல வர்மன் நடத்திய யாகத்தின் பெயர் பஹுசுவர்ணகம். இதில் ஐயர்களுக்கு தங்கம் தரப்படும்.

 

இது வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும் (1-95) உளது; ஆக வால்மிகீ ராமாயணம் சொல்வதும் கல்வெட்டு சொல்வதும் வரலாற்று உண்மைகளே!

 

யூபம் என்ற சொல்லை யாதவ ப்ரகாஸரின் ‘வைஜயந்தி’ எனும் ஸம்ஸ்க்ருத அகராதி நன்கு விளக்குகிறது.

யூபம் பற்றிய அலங்காரம், தோற்றம், எண்ணிக்கை, அதன் தாத்பர்யங்கள் ஆகியவற்றைக் காண்கையில் இது யாக பலிக்கான தூண் அல்ல, பெரிய தத்துவங்களை விளக்க வந்த வேள்வித்தூண் என்பது குன்றிலிட்ட விளக்கு போல விளங்கும். பலிக்கான மிருகம் தூணிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட பின்னரே யாகம் நடந்ததையும் மாவு ரூபத்தில் மிருக பொம்மைகள் யாகத்தீயில் இடப்பட்டதையும் வியாக்யானங்கள் விளக்குகின்றன.

 

அவையனத்தையும் மெய்ப்பிக்கிறது 17, 21 முதலான மர்ம எண்கள். வெறும் பலிக்கு ஒரு தூண் என்றால் இவ்வளவு விளக்கம் வந்திராது.

 

காஞ்சி சுவாமிகள் 400 வகை யாகங்கள் இருப்பதாக்ச் சொன்ன விஷயத்தை தனிக் கட்டுரையில் முன்னர் தந்தேன். இதோ மேகநாதன் செய்த 7 யாகங்கள்:

அக்னிஷ்டோம

அஸ்வமேத

பஹுஸுவர்ணக

ராஜசூய

கோமேத

வைஷ்ணவ

மஹேஸ்வர

(வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் 25-8)

வாழ்க யூப ஸ்தம்பம்! வளர்க தமிழ்!!

OLD ARTICLE

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and …

tamilandvedas.com/2017/05/17/mysterious-number…

 

 

  1. 400 Types of Yagas (Fire Ceremonies) | Tamil and Vedas

tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas…

Prince Charles and Camilla Parker with Swami Chidananda Saraswati at Rishikesh taking part in a Yajna. “The Brahmin spoiled himself and spoiled others. By …

 

  1. Pancha Maha Yajnas | Tamil and Vedas

tamilandvedas.com/tag/pancha-maha-yajnas

Posts about Pancha Maha Yajnas written by Tamil and Vedas. about; … Prince Charles doing Yajna in … called also Veda-yajnah,Sacrifice to Brahman or the Vedas.

 

–சுபம்–

 

நீர் மேல் நடக்கும் அற்புத வித்தை! (Post No.5032)

WRITTEN by London Swaminathan 

 

Date: 21 May 2018

 

Time uploaded in London – 10-31 AM (British Summer Time)

 

Post No. 5032

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

அஷ்டமா சித்தி (எட்டு வகை அற்புத சக்திகள்) பெற்றவர்களுக்கு நீர் மேல் நடக்கும் வித்தை மிகவும் எளிது. ஹடயோகம் பயின்றவர்களுக்கு இது இயலும்.

 

கண்ணன் பிறந்தவுடன் வசுதேவர், அக்குழந்தையைக் கூடையில் வைத்துக்கொண்டு சென்றபோது யமுனை நதி திறந்து வழிவிட்டதை நாம் அறிவோம். இந்துக்களின் கணக்குப்படி இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பின்னர் இது போன்ற தண்ணீர் அற்புதங்களை பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளிலும் புத்த மத நூல்களிலும் அலெக்ஸாண்டரின் வரலாற்றிலும், ஆதி சங்கரர் வரலாற்றிலும் காண்கிறோம்.

 

இதற்கெல்லாம் ஆதி மூலமாக இருப்பது ரிக் வேதக் கவிதையாகும் (3-33). அந்தக் கவிதை விஸ்வாமித்ர மஹரிஷிக்கும் இரண்டு நதி தேவதைகளுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். கவிதை என்ற கண்ணோட்டத்திலும் மிக அற்புதான கவிதை. நதிகளைப் பெண்களாகப் போற்றும் கவிதை; உவமைகள் மிக்க கவிதை. அந்த ‘’தண்ணீர் அற்புதக்’’ கவிதையைக் காண்பதற்கு முன்னர் நீர் வித்தைகளை வில்லியம் நார்மன் பிரவுன் என்பவர் எப்படிப் பிரித்துள்ளார் என்பதைக் காண்போம்.

தண்ணீர் வித்தைகள் ஆறு வகையானது:-

1.ஒருவர் தனது அற்புத சக்தியினால் கடல் அல்லது ஆறுகளை இரண்டாகப் பிரியும் படி செய்து காய்ந்த தரையில் நடந்து போவது.

 

2.அற்புத சக்தியினால் நீரின் ஆழத்தைக் குறைத்து அதில் நடந்து செல்வது.

 

  1. தண்ணீர் அப்படியே நிற்க, அதன் மேல் நடந்து செல்வது

 

4.தண்ணீரில் விரைந்து செல்ல காற்றோ அலைகளோ அல்லது தாமரை போன்ற பொருள்களோ உதவுவது

 

  1. அல்லது தண்ணீர் மேல் HOVERCRAFT ஹோவர்கிராஃட் போன்று பறந்து செல்வது

 

  1. மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ இரண்டோ கலந்து உதவுவது.

 

ஆதி சங்கரரின் சீடரான பத்மபாதரை எதிர்க்கரையில் இருந்த சங்கரர் அழைத்தார். உடனே அவர் நீர் என்றும் பாராது விரைந்து செல்ல அவர் நீர் மீது கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர் தோன்றி அவரைத் தாங்கிச் சென்றது. இதனால் அந்த சிஷ்யருக்கு பழைய பெயர் மறைந்து போய் தாமரைக் காலன் (பத்மபாதர்) என்ற புதுப்பெயர் தோன்றியது.

 

புத்தர் கடல்மேல் பறந்து வந்து இலங்கைக்கு வந்ததாக புத்த மத நூல்கள் இயம்பும். புத்தர்களின் சீடர்கள் அற்புத சக்தியால் ஆற்று வெள்ளத்தைக் கடந்ததையும் அவைகள் விளம்பும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களுக்கும் மோஸசுக்கும் செங்கடல் திறந்து வழிவிட்டதாகப் பகரும்

 

ஏசுவின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான பீட்டர் நீரின் மேல் நடந்த கதையை பைபிள் நுவலும்.

 

இப்படி ஏராளமான கதைகளைப் பழங்குடி மக்களும் பகர்வர்.

 

ஆனால் உலகிலேயே பழமையான நூலில் — ரிக் வேதத்தில் – இவைகளைக் காணும்போது நாம்தான் இந்தக் கலையை உலகிற்குக் கற்பித்தோமோ என்றும் தோன்றும். ரிக் வேதத்தின் காலம் கி.மு 1500 முதல் 6000 வரை என்று அறிஞர்கள் செப்புவர்.

 

ரிக்வேதக் கவிதை 3-33

 

விபாசா (வியாஸ), சுதுத்ரி (சட்லெஜ்) இரண்டு பஞ்சாப் நதிகள் இப்பாடலில் இடம் பெறுகின்றன.

 

விஸ்வாமித்ரர்–

அடடா! என்ன அற்புதம் ! மலைகளில் பிறந்து கடலுக்குப் போகும் உங்கள் அழகே, அழகு! போட்டி போடும் இரண்டு குதிரைகளப் போல பாய்கிறீர்களே. கன்றுகளை அன்பாக நாவால் நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசு போல இரு கரைகளையும் அலைகள் என்னும் நாவால் தொடுகிறீர்களே.

 

இந்திரனுடைய கட்டளைக்குப் பணிந்து தேரில் விரைந்து செல்லும் தேவர்கள்  போலப் பிரகாஸிக்கிறீர்கள். அதே வேகத்தில் கடலை நோக்கி ஓடுகிறீர்கள்! அலைகள் ஒன்றன் மீது ஒன்று புரள்வது ஒருவரை ஒருவர் நாடுவது போல உளதே!

 

தாய் போன்ற சுதுத்ரி நதியே! சௌபாக்கியவதியான விபாஸையே! கன்றுகளை நாடும் தாய் போல ஒருமித்துப் பாய்கிறீர்களே!

 

 

இரண்டு நதிகளும் சொல்லுகின்றன

நாங்கள் நீரினால் நிலத்தை வளப்படுத்தி இறைவனால் படைக்கப்பட்ட கடலுக்குப் போகிறோம். எங்களை எவராலும் தடுக்க இயலாது. நீவீர் எம்மை அழைத்த காரணம் யாதோ?

விஸ்வா:-

 

நான் ஸோம லதை எனப்படும் அற்புத மூலிகையை எடுக்க செல்கிறேன். நான் குஸிகனின் புதல்வன்; ஏ, சுதுத்ரி நதியே ஒரு கணப்பொழுது  ஓடாமல்தான் நில்லேன்.

 

நதிகள் பதில்

விருத்திரன் எங்களைத் தடுத்து நிறுத்திய போது வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் அந்த விருத்ரனைக் கொன்றான். நல்ல கைகள் உள்ள ஸவிதா எங்களை இந்த வழியில் செலுத்தினான். அவன் கட்டளைபடி வெள்ளப் பிரவாஹம் எடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

 

விஸ்வா

நல்லது; இந்திரன் அந்த அஹி என்னும் பாம்பைக் கொன்று செய்த நற்செயல் என்றும் போற்றப்பட வேண்டியதே தடை செய்தவர்களை அவன் வஜ்ர ஆயுதம் கொண்டு அழித்தான்

 

நதிகள் பதில்

 

ஓ, துதிபாடும் முனிவா; எதிர்கால சந்ததியினர் உன்னுடைய இந்தக் கவிதையைப் போற்றுவார்கள் ; நீயும் மறந்து விடாதே; ஆனால் மக்களுக்கு முன்னர் எங்களைத் தாழ்திவிடாதே.

விஸ்வா:

சஹோதரிகளான நதிகளே! நான் சொல்லுவதை அன்போடு செவிமடுங்கள்; நான் தொலை தூரத்தில் இருந்து தேரோடும் வண்டிகளோடும் வந்து இருக்கிறேன். கொஞ்சம் தாழ்வாகப் பாய்ந்து செல்லுங்கள் உங்கள் நீரோட்டம் காளை மாட்டு வண்டியின் அச்சுக்குக் கீழே பாயட்டும்

நதிகள் பதில்

ஓ, கவிஞரே! நீ தொலைவில் இருந்து தேர், காளை மாட்டு வண்டிகளோடு வந்ததாகச் சொல்லுவது எங்கள் காதில் விழுந்தது குழந்தைக்குப் பால் ஊட்டும் தாய் போலவும் காதலனைக் கட்டித் தழுவ ஓடிவரும் காதலியின் அன்பு போலவும் நாங்களும் உன்னைத் தாழ்ந்து வணங்குவோம்.

விஸ்வா:–

நதிகளே; என்னைக் கடக்க உதவினீர்கள்; அதைப் போல பரதர்களும் படைகளும் கடந்து செல்ல உதவுங்கள்; பின்னர் பிரவாஹம் எடுத்துப் பாய்ந்து செல்லுங்கள்; உங்களைப் போற்றுவேன்

 

பரதர்களும் பசுக்களை நாடிக் கடந்து சென்றனர்.  உங்கள் அன்பு எனக்குக் கிடைத்தது; உங்கள் அலைபோல செல்வத்தைப் பொழியுங்கள்;  உணவு தான்யம் பெருகட்டும்; வளம் கொழிக்கட்டும்; பாய்ந்து செல்க.

 

எங்கள் மாட்டு வண்டியின் நுகத்துக்கு கீழே பாயுங்கள். எங்கள் காளை மாடுகள் ஒரு பாவமும் அறியாத ஜந்துக்கள் அவைகளுக்குத் தீங்கு செய்துவிடாதீர்கள்.

 

 

இது போல பல அற்புதக் கவிதைகள மந்திர சக்தியால் நதிகளைக் கட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றன (குறிப்பாக 10-136)

இந்தக் கவிதையில் என்ன அற்புதம் இருக்கிறது?

விஸ்வாமித்ரன் வேண்டியவுடன் நதிப் பிரவாஹம் குறைந்தது. வண்டியின் அச்சுக்குக் கீழே பாய்ந்தது. உடனே அவரும், பரதர்களும்  கடந்து சென்றனர்.

 

பாடலில் உள்ள உவமைகள் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற மாணிக்க வாசகரின் பாடலை நினைவு படுத்தும்

நதிகளைத் தாயாக போற்றுவதையும் பூமியைத் தாயாக போற்றுவதையும் உலகம் நம்மிடம் கற்றது.

காளை மாடுகளுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற அன்புப் பிரவாஹம் நதிப் பிரவாஹம் போல உளது.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் தெரியாது என்று பிதற்றும் பித்துக்குளிகளுக்கு  இந்த நதிக் கவிதையும் ஸரஸ்வதி நதிக் கவிதையும் சாட்டை அடி கொடுக்கிறது. மலைமீது தோன்றி கடல் வரை செல்லும் நதிகள் பற்றிய மாபெரும் பூகோள அறிவு அக்காலத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல கவிதையில் காணும் உவமைகள் அமைதியான ,நனி நாகரீகம் மிக்க வேத காலத்தை நம் கண்களுக்கு முன்னால் கொணர்கிறது.

 

‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’– பாரதி.

 

-சுபம்-

 

ரிக் வேதத்தில் தீர்கதமஸ் புதிர்! அறிஞர்கள் திணறல்! (Post No.4452)

Written by London Swaminathan 

 

Date: 2 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-38

 

 

Post No. 4452

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக்வேதம் எவ்வளவு புதிர்கள் நிறைந்த து; யாருக்கும் எட்டாத கனி; எல்லோரையும் திணறடிக்கும் விடுகதை; சங்கேத மொழியில் விளையாடும் புலவர்களின் சொர்கம் — என்பதை முதல் மண்டலத்திலுள்ள 164-ஆம் எண் துதியைப் (RV 1-164) படித்தால் போதும். இதை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் தீர்கதமஸ் என்னும் முனிவர். அவர் அந்தகர்; அதனால் அவர் பெயர் ‘நீண்ட இருள்’! அவர் மமதா என்ற பெண்மணிக்குப் பிறந்தவர் என்பதால் தீர்கதமஸ் மாமதேயா என்பர். அவருடைய மகன் கக்ஷிவான் அவரும் கவிஞர். தீர்கதமஸ் பற்றிப் பல சுவையான கதைகள் உண்டு; இவரை ஆற்றில் தூக்கிப் போட்டதாகவும் பின்னர் வேறு ஒருவர் காப்பாற்றியதாகவும் சொல்லுவர். நூறு ஆண்டுகள் வாழ்ந்த  வர் என்று வேதம் விளம்புகிறது.

 

இவர் பற்றிய சுவையான கதைகளைக் காண்பதற்கு முன்னர், இவர் போட்ட புதிர் என்ன என்பதைக் காண்போம்.

 

  1. இவர் சொன்ன கவிதைதான் ரிக் வேதத்தில் மிக நீண்ட கவிதை; 52 மந்திரங்கள் (கண்ணிகள்) கொண்டது

2.இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க அந்தகக் கவி ஹோமருக்கும் முன்னால் புகழ்பெற்ற அந்தகக் கவிஞர் இவர். பெரும்பாலான புலவர்கள் தந்தையின் பெயரை இணைத்துக் கொள்வர். ஆனால் இவரோ தாயின் பெயரை இணைத்துப் பெண்ணினத்துக்குப் புகழ் சேர்த்தவர். இவர் தனக்கு முன்னால் வாழ்ந்த புரா ண புருஷர்களைப் பற்றிக் கதைப்பதால் இவரை பிற்காலத்தவர் என்றும் அறிவோம்

  1. இவர் எண்களுடன் விளையாடும் விளையாட்டு– அதாவது கவிதையில் எண்களைப் பயன்படுத்தும் முறை – நம் நாட்டு வேத பாஷ்யக்காரர் சாயனரையும், வெளி நாட்டு போலி சாயனர்களையும் திணறடிக்கச் செய்கிறது. வெள்ளைத்தோல் போலி சாயனர்கள் ஏழு என்ற எண்ணுக்குச் சொல்லும் பொருளைப் பார்த்தால் அவர்கள் குழப்பவாதிகள், பாஷ்யக்காரர் கள் அல்ல; உரைகாரர் கள் இல்லை என்பதை உணர்வோம்.

 

4.திருமூலர், சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார் போன்றோர் எண்களை சகட்டு மேனிக்குப் பயன்படுத்தி பாடல்களுக்குப் பொருள் விளங்காமற் அல்லது எளிதில் பொருள் சொல்ல முடியாமற் செய்தது எல்லாம் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்தது. ஆனால் தீர்கதமஸோ இவர்களுக்கு எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து எண்க            ளை  பாடலில் பயன்படுத்தினார் என்றால் பொருள் விளங்குவது கடினமே!

 

  1. தீர்க தமஸ் ஏழு என்ற எண்ணைப் பல இடங்களில் பயன்படுத்துகையில் அது ஏழிசையா? வாரத்தில் 7 நாட்களா, சூரியனின் 7 குதிரைகளா (VIBGYOR), ‘செவென் சிஸ்டர்ஸ்’ seven sisters என்று அழைக்கப்படும் பறவை வகைகளா என்று வியந்து ஒவ்வொருவரும் ஒரு விதமாகப் பொருள் கற்பிப்பர்.
  2. இவர் மூன்று என்னும் போதும் ஆறு என்னும் போதும் பருவ காலம் என ஆண்டை (வருடத்தை) வெவ்வேறு விதமாகப் பிரிப்பர் சாயனர்.

 

  1. தீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு இந்த மந்திரத்தில் வரும் “ஏகம்சத் விப்ராஹா பஹுதா வதந்தி” என்ற வரிகளே காரணம்; அதாவது வேத காலரிஷிகளு கே தெரியும்– பல்வேறு கடவுள் பெயர் சொன்னாலும் அவை எல்லாம் ஒரே பரம்பொருளைத்தான் குறிக்கும் என்று!

 

இதன் பொருள் “உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் பகர்வர்”.

 

 

  1. தீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு மற்றொரு காரணம், இவர் கதையை பைபிள் திருடியயதாகும். பைபிளின் முதல் அத்தியாயத்திலேயே ADAM AND EVE ஆடம் அண்ட் ஈவ் கதை வருகிறது. ஆடம்=ஆத்/ட்மா; ஈவ்= ஜீவ்+ ஆத்மா இதை ஆடம் ADAM ஈவ் EVE என்று சொல்லிவிட்டனர். ஒரு பறவை பழத்தை உண்டது மற்றொன்று பழம் சாப்பிடவில்லை என்று ஒரே மரத்தில் உள்ள இரண்டு பறவைகள் பற்றிப் பாடியுள்ளார். இதை சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது உபந்யாசத்தில் விளக்கியுள்ளார் (பைபிளில் சம்ஸ்கிருதம் என்ற எனது கட்டுரையிலும் விளக்கியுள்ளேன்)

  1. தீர்கதமஸின் 52 மந்திரங்கள் அடங்கிய இந்தத் துதியைப் படிப்போர் வியப்பர்; வேதம் என்பதை வெள்ளைக்கார ‘தோழான், துருத்தி’ எல்லோரும் “தத்தக்கா புத்தக்கா இரண்டு காலு, தடுக்கி விழுந்தா நாலு காலு” என்று மொழி பெயர்ப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உமாபத சென் என்பவர் இந்தத் துதியில் சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், சூரியனின் பயணம், பூமியின் சுழற்சி, விஷ்ணுவின் மூன்றடி முதலியன சொல்லப்படுகிறது என்பார்.

12.சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழிபெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.

 

13.மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.

 

14.சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடை செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.

 

15.ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள்,  ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது  ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்

 

16.காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.

கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக  வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.

 

17).1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டைட காண்பது சுவையாக இருக்கும்.

 

 

18.இதில் வானியல், வானிலையியல், பறவையியல், கணிதம், சமயம், சங்கேத மொழி (coded language) , காலக் கணக்கீடு, தத்துவம் என்று பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

ரிக் வேதம் 1-164

ஒரு சில மந்திரங்களைக் கொடுத்துவிட்டு இரண்டாம் பகுதியில் தீர்க தமஸ் பற்றிய சுவையான கதை சொல்லுகிறேன்:-

 

“தெரியாமல்தான் கேட்கிறேன் ஓ முனிவர்களே! தெரிந்தவர்கள்தான் சொல்லுங்களேன்!

அறியாமையால் வினவுகிறேன்; அறிந்துகொள்வதற்காகத்தான்!

பிறவாத அந்த ஒன்று எது? (பிறவா யாக்கைப் பெரியோன் எவன்)

இந்த உலகத்தின் ஆறு பிரிவுகளைத் தாங்கி நிறுத்துகிறதே, அந்த ஒன்று!

1-164-6

 

(இங்கு ஆறு பிரிவு என்பதற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு)

 

“பொருள் விளங்காமல் வேதத்தின் துதியைப் பாடுவோரே! அதை வைத்து என்ன செய்வீர்– தேவர்கள் உறையும் பரலோக சாம்ராஜ்யத்தில் உள்ளவனை (அறியவில்லையே)

அவனை உணர்ந்தோரே அறிஞர்கள்/பூரணம் நிறைந்தோர்”

“இரண்டு பறவைகள் நண்பர்களாக ஒரே மரத்தில் அடைக்கலம் புகுந்தன. ஒரு பறவை பழங்களைத் தின்றன. மற்றொ          ன்று சாப்பிடவில்லை. 164-20

 

(பரமாத்மா- ஜீவாத்/ட்மா= ஆடம் – ஈவ் )

 

“அவர்கள் இந்திரன் மித்திரன், வருணன், அக்னி என்று அழைக்கின்றனர்; இறக்கைகள் உடைய ‘கர்த்மன்’ என்பர்.

ஒரே உண்மைப்பொருளை முனிவர்கள் அக்னி என்றும் யமன் என்றும் மாதரிஸ்வான் என்றும் அழைக்கின்றனர்.

(கடவுள் ஒருவரே)” 164-46

(இன்னும் ஒரு புதிர்! இந்திரன் மித்ரன், வருணன் எல்லாம் தெரியும் ; இவர் சொல்லும் கருத்மான் யார் என்பதாகும்.

 

“கடவுளர், யாகம் மூலம் எல்லாவற்றையும் அடைந்தனர். பழமைச் சிறப்புடைய சாத்யர்கள் வசிக்கும் வானமண்டலத்துக்கு — சுவர்கத்துக்கு — இந்த தேவர்கள் சென்றனர்.” 164-50

 

(சாத்யர்கள் என்பதை சிறு கடவுள்கள் என்று 2000 ஆண்டுக்கு முந்தைய அமரகோசம் சொல்லும். சாயனர் காலத்தில் இச் சொல்லுக்குப் பொருள் விளங்காமல் போய்விட்டதென்று வில்சன் விமர்சனம் செய்கிறார்.

 

“செல்வம் தரும், புதையல் அளிக்கும், நற்பலன் தரும் சரஸ்வதியைக் கொண்டாடுவோம்”. 164-49

 

“வாக் (பேச்சு) என்பதை, விஷயம் அறிந்த பிராமணர்கள் நான்கு வகையாகப் பிரிப்பர். மூன்று ரஹசியமானவை; மனிதர்கள் கதைப்பதோ நாலாம் வகை”. 164-45

 

 

(இதில் மூன்று என்பதை மூன்று வேதம் என்று சிலரும் நாலு வகைப் பேச்சுகளில் மூன்று என்றும் உரை அளிப்பர். நாலு வகைப் பேச்சு: பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி.

 

சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழி பெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.

 

மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.

 

சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடைச்செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.

ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள் என்றும்,  ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது  ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்

 

காயத்ரி முதலான 7  யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.

கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.

 

1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டை காண்பது சுவையாக இருக்கும்.

தொடரும்……………..

 

—-சுபம், சுபம்—-

ரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன! (Post No.4401)

Written by London Swaminathan 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-29

 

 

Post No. 4401

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக் வேதம் இப்போதுள்ள வடிவில் உருவாக  பல நூற்றாண்டுகள் ஆனது அதிலுள்ள பல துதிகள் மூலம் தெரிகின்றன. முதல் மண்டலத்திலும் கடைசி மண்டலத்திலும் உள்ள பெரும்பாலான துதிகள் காலத்தால் பிந்தியவை என்றும் இடையிலுள்ள ஆறு மண்டலங்கள் காலத்தால் முந்தியவை என்பதும் பொதுவாக உள்ள கருத்து. 500 ஆண்டுக் காலத்தில் தோன்றிய  பாடல்கள் இருக்கலாம் என்பது பலர் கருத்து.

 

ரிக்வேதம் என்பது கவிகளால் இயற்றப்பட்டது அன்று; வானத்தில் எப்போதுமுள்ள ஒலிகளை ரிஷிகள் கண்டு (மந்த்ர த்ருஷ்டா:) அளித்தனர் என்பது இந்துக்கள் ஏற்கும் கொள்கை; ஆயினும் அதை அவர்கள் வெவ்வேறு காலங்களில் கேட்டு அல்லது கண்டு அளித்தனர் என்பதை வேதத்தில் உள்ள குறிப்புகளாலும் இலக்கண அமைப்புகளாலும் அறிய முடியும்; இதை ஒப்புக்கொள்வதால் வேதத்தில் புதியதும் பழையதும் உண்டு என்று அறிந்து அவைகளில் எது எது புதியது என்று சொல்ல முடியும்; அதற்குச் சில உத்திகள் உள்ளன.

இதனால் வேதம் பற்றிய நம்பிக்கை பாதிக்கப்பட மாட்டாது என்றே நான் கருதுகிறேன். “உண்மையே உலகில் வெல்லும் – சத்யம் ஏவ ஜயதே” – என்பதை யார் எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் , புதிய இலக்கணத்துடன் சொன்னாலும் பழைய இலக்கண விதிகளின்படி சொன்னாலும், வெவ்வேறு மொழிகளில் சொன்னாலும் அந்த மந்திரத்தின் பொருள் மாறாது. இதனால்தான் வேதம் அனாதியானது; என்றுமுளது என்று நாம் சொல்கிறோம். அதாவது அழியாத தர்மங்கள், கொள்கைகள், பண்புகள் அதிலுள்ளன.

 

ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் 2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் (2- க்ருத்சமடர்  3-விஸ்வாமித்ரர், 4- வாமதேவர், 5- அத்ரி, 6-பரத்வாஜர், 7-வசிஷ்டர்) எனப்படும்; அதாவது ஒரு ரிஷி பரம்பரையில் வந்த தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பவர்கள் கண்டு (கேட்டு) நமக்கு அளித்தது. வேதத்தில் “மிகப் பழங்காலத்தில்”, “முன்னோர்கள் சொன்னது” என்றெலாம் வாக்கியங்கள் வருகின்றன. அப்படியானால் அந்த ரிஷிகளுக்கு முன்னதாகப் பல தலைமுறைகள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம்.

சுமார் 450 புலவர்கள் இயற்றிய சுமார் 2500 பாடல்களை உடைய சங்கத் தமிழ் இலக்கையமும் 300, 400 ஆண்டுகளில் உருவானவையே என்பர் அறிஞர் பெருமக்கள். ஏனெனில் கடை எழு வள்ளல்களைத் தனித் தனியாக பாடிய புலவர்களை நாம் புற நானூறு முதலிய நூல்கள் மூலம் அறி வோம். மலைபடுகடாம் போன்ற நூல்களில் அவர்களை “கடை எழு வள்ளல்கள்” என்று படிக்கும்போது , அவ்வாறு அவர்களை ஒரு அணி சேர்த்துப் பாடுவதற்கு சில நூற்றாண்டுக் காலமாவது ஆகியிருக்கும்; தற்காலம் போலத் தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்களை ஒரு தொகையில் சேர்த்து “கடை எழு” என்று சொல்லுவதால் இதுதான் காலத்தால் பிந்தியது என்று நாம் கருதுகிறோம்.

 

இது போலவே ரிக் வேதத்திலும் சில குறிப்புகள் உள்ளன.

இது பற்றி உரையாற்றிய  டாக்டர் கடே என்பார் சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்; அவைகளைத் தொட்டுக் காட்டுவன்:-

 

எட்டாவது மண்டலத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ள 11 துதிகள் வாலகில்ய துதிகள் என்று அழைக்கப்படும். இது பொருந்தாத ஒரு இடத்தில் இருப்பதாலும், இதற்கு சாயனர் உரை (பாஷ்யம்) எழுதாததாலும் இதை பிற்சேர்க்கை எனக் கருதுவாரும் உளர். ஆயினும்  காத்யாயனர் தனது அனுக்ரமணியில் (Index) இவைகளைக் குறிப்பிடுவதால் இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னையது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

 

 

மேலும் தைத்ரீய ஆரண்யகத்திலேயே (1-23) வாலகில்யர் பற்றிய விஷயங்கள் காணப்படுகின்றன.

 

ஆப்ரி துதிகள்

 

ஆப்ரி துதிகள் என்பனவும் பல கேள்விக ளை எழுப்பும் விநோதத் துதிகள் ஆகும்.

சாம வேதம், யஜூர் வேதம் ஆகியவற்றில் இருக்கும் துதிகள் போலுள்ளதால் இவைகளும் யாக நோக்கங்களுக்காக இயற்றப்பட்டதாக இருக்கலாம். பத்து மண்டலங்களிலும் பத்து துதிகள் விரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் 11 மந்திரங்கள்/ பாடல்கள் இருக்கும். 11 கடவுளரை நோக்கி, ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் மந்திரங்கள் இருக்கும். அவையாவன: 1.அக்னி, 2. தனூனபாத் அல்லது நராம்சச (இவை அக்னியின் இரு வேறு அம்சங்கள்), 3. ஈலா (தானம்), 4.பர்ஹி: (யாகத்துக்கான புல்), 5. தேவீ: த்வார: 6.உஷசானகௌ 7.தைவ்யௌ ஹோதாரௌ (அக்னி, ஆதித்யன் முதலானோர்), 8.ஸரஸ்வதீ, ஈளா, பாரதீ , 9.த்வஷ்ட (படைப்போன்), 10. வனஸ்பதி 11.ஸ்வாஹாக்ருதி

ரிக் வேதத்தின் துதிகள் இரு வடிவங்களில் கிடைக்கின்றன: 1. சந்தி பிரிக்காமல், இலக்கணப்படி உள்ள சம்ஹிதை, 2.பத பாடம். பத பாடம் என்பதில் சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

ஆறு துதிகளுக்குப் பத பாடம் இல்லை: 7-59-12; 10-20-1; 10-121-10; 10-190-1/3. இவைகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிஞர் பெருமக்கள் கணிப்பர்.

 

புதியது, பழையது பற்றி  துதிகளிலேயே சில சான்றுகள் கிடைக்கின்றன; ஒரு மண்டலத்தில் மட்டும் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:

 

7-18-1

த்வே ஹ யத்பிதர ஸ்ரவன்ன இந்த்ர விஸ்வா வாமா ஜரிதாரோ அசன்வன்

 

7-22-9

யே ச பூர்வே ருஷய; யே ச நூத்னா: ப்ரஹ்மாணி ஜனயந்த விப்ரா:

7-29-1

உதோ கா தே புருஷ்யா இதாசன் யேஷாம் பூர்வேஷாம் ச்ருணோர் ருஷீணாம்

7-53-1

தே சித்தி பூர்வே கவயோ க்ருணந்த:

7-76-4

த இத் தேவானாம் சதமாத  ஆசன் க்ருதாவான: கவய: பூர்வ்யாச:

7-91-4

புரா தேவா அனவத்யாச ஆசன்

இவைகளில் புரா (முன்பு), பூர்வ கவய: (முன்னாள் கவிஞர்கள்) என்ற சொற்றொடர்கள் வருவதைக் ‘கொஞ்சம்’ சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களும் கண்டுபிடித்துவிடலாம்.

 

புதிய கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் 7-56-23, 7-15-4, 7-59-4, 7-61-6, 7-98-1 ஆகியவற்றில் காணலாம். இதில் நவ (புதிய) என்ற சொல் வருகிறது. வேதங்களை நன்கு அறிந்தவர்கள் கண்டுபிடித்தவை இவை.

இலக்கணமும் , சில சொற்றொடர்களும் கூட புதிய செய்யுட்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பெயர் சொற்கள், வேற்றுமை உருபுகள், வினைச் சொற்களை ஆராய்ந்தோர் குறைந்தது 16 வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

 

சொற்களைப் பொருத்தமட்டில் ‘அக்து’, அத்ய (வேகம்), அம்பிஷ்டி (உதவி)க்ஷிதி (இருப்பிடம்) சன: (ஆனந்தம்) முதலிய பழைய சொற்கள் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே காணப்படும்.

 

மாயாஜாலம், நோய்கள், சடங்குகள், தத்துவம், தொழில்நுட்பச் சொற்கள் முதலியன புதிய துதிகளிலும், அதர்வ வேதத்திலும் மட்டுமே காணப்படும்.

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்ட பல சொற்களை மத்திய கால இலக்கியத்தில் காணமுடியாது. சங்க காலத்தில் நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம் என்ற மூன்று காலங்கள் கிடையா. பல உவமை உருபுகள் தொல்காப்பியப் பட்டியலில் உள்ளன. ஆனால் சங்க காலத்தில் கூட 2500 பாடல்களில் அவை இல்லை! இதை ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். உலகில் எல்லா மொழிகளும் மாற்றத்துக்குட்பட்டவை. சந்தி இலக்கணமும் வேத காலத்திலும் பாணினி காலத்திலும் வேறு வேறு.

 

யாபிலக்கணமும் வேதத்தில் மாறிக்கொண்டே வருகிறது. உஷ்ணிக், ககுப, ப்ருஹதி, சதீப்ருஹதீ ஆகியன ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

 

அதர்வ வேதத்தில் காணப்படும் ரிக்வேதப் பாடல்களும் புதியவை.

 

இன்னொரு பொதுவான வித்தியாசம்:- பழைய துதிகள், இறைவனை மட்டும் துதித்தன. பிற்காலத்தில் சடங்குகள், சமயத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் முதலியன விவாதிக்கப்பட்டன.

தான துதிகளும் பெரும் சடங்குகளுக்குப் பின்னரே, பெரிய யாகங்களுக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.

சமபாஷணை/ உரையாடல் உள்ள துதிகளும் பிற்காலத்தியவை; எடுத்துக்காட்டுகள்

புரூருவஸ் — ஊர்வசி உரையாடல்

யமா- யமீ உரையாடல்

அகஸ்தியர் – லோபாமுத்ரா உரையாடல்

முதலியன.

எனது கருத்து:

 

இவை எல்லாம் வெள்ளைக்காரர் வாதங்கள்; அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்திய வேத பண்டிதர்களும் பேசிய உரை இது; நாம் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; பல பழைய கொள்கைகளை புதிய ஆராய்ச்சி உத்திகள் பொய்யாக்கிவிட்டன. மேலும் மொழி வேறு பாடு என்பதும் மொழிக்கு மொழி வெவ்வேறு வேகத்தில் நடைபெறக்கூடும்.

 

ஆக இவை எல்லாம் ஆராய்சிக்கு ‘வித்து’ என்று வைத்துக்கொண்டு மற்ற பழங்கால மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்று மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வைத்துக்கொண்டு ரிக் வேதத்துக்கு காலம் கற்பித்தார். ஆனால் உலகில் வேறு எந்த மொழிக்கும் இப்படிக் காலம் நிர்ணயித்ததாகத் தெரியவில்லை.

 

இந்தியப் பண்பாட்டில் ஊறித் திளைத்த பால கங்காதர திலகர்,  அரவிந்தர் போன்றோரின் வேதக் கொள்கைகளை நாம் பின்பற்றுவது நல்லது.

 

சுபம்–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 6 (Post No.4355)

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-08 am

 

 

Post No. 4355

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4367 – வெளியான தேதி 23-10-2017 ;

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 6

 

ச.நாகராஜன்

9

The Life and Letters of Friedrich Max Muller – First Published in 1903 (London and New York; Reprint in USA

1903ஆம் ஆண்டு ‘தி லைஃப் அண்ட் லெட்டர்ஸ் ஆஃப் ஃப்ரெடிரிக் மாக்ஸ் முல்லர் என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படும் கடிதங்களையே இங்கு நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்து அவர் செவாலியர் புன்சென்னுக்கு 1856ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 25ஆம் தேதி எழுதிய கடிதத்தில் புனிதர் பால்  வாழ்ந்த காலத்தில் இருந்த கிரேக்கம் மற்றும் ரோமை விட இந்தியா கிறிஸ்தவ மயமாக நன்கு காலம் கனிந்திருக்கிறது என்று எழுதுகிறார்.

இந்தப் புனித காரியத்திற்காக நான் எனது வாழ்வையே அர்ப்பணிப்பேன் என்று சூளுரை புகல்கிறார். 1856இல் இந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவர் வயது 33.

கடிதத்தின் ஒரு பகுதியை கீழே காணலாம்:

TO CHEVALIER BUNSEN 55, ST. JOHN STREET, OXFORD, AUGUST25, 1856.

 “India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle. Dhulip Singh is much at Court, and is evidently destined to play a political part in India.”

இதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னர் புன்சென் மாக்ஸ் முல்லரை அவரது மத சம்பந்தமான கட்டுரை பற்றி வெகுவாகப் புகழ்கிறார். அவர் ராஜதந்திரியாக சேவை ஆற்ற வேண்டியவர் என்று அவர் கூறுவதன் உள்ளர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

கடிதத்தின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்:

 On April 17, 1855, Bunsen wrote to thank Max Müller for an article on his
Outlines.

“You have so thoroughly adopted the English disguise that it will not be easy for any one to suspect you of having written this ‘curious article.’ It especially delights me to see how ingeniously you contrive to say what you announce you do not wish to discuss, i.e. the purport of the theology. In short, we are all of opinion that your cousin was right when she said of you in Paris to Neukomm, that you ought to be in the diplomatic service!”

1868, டிசம்பர் 16ஆம் தேதி அவர் ட்யூக் ஆஃப் ஆர்ஜில்-க்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறுவது:

இந்தியா ஒரு  முறை ஏற்கனவே ஜெயிக்கப்பட்டது. அது இரண்டாம் முறையாக ஜெயிக்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது வெற்றி கல்வி மூலமாக ஏற்பட வேண்டும். கல்வி பற்றி ஏராளமாகச் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நிதி உதவியானது மூன்று மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அது போதுமானதாக இருக்கும். … மேலை நாட்டுக் கருத்துக்கல் தோய்ந்த ஆனால் உள்ளூர் மண்வாசமும் குணாதிசயமும் அப்படியே இருக்கும்படியாக உள்ள ஒரு புது தேசீய இலக்கியம் எழும். ஒரு புது தேசீய இலக்கியம் ஒரு புது தேசீய வாழ்க்கையைத் தன்னுடன் கொண்டு வரும். ஒரு புதிய நல்லொழுக்க சக்தியும் வரும். மதம் என்று எடுத்துக் கொண்டால், அது தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். மிஷனரிகள் தாங்கள் என்ன செய்தோம் என்பதை உணர்ந்ததற்கும் அதிகமாக செய்திருக்கின்றனர்.”

இந்தியாவின் புராதன மதம் அழிந்து விட்டது. இப்போது கிறிஸ்தவம் உள்ளே நுழையா விட்டால் அது யாருடைய தவறு?”

இந்தக் கடிதத்தை அவர் எழுதும் போது அவருக்கு வயது 45.

TO THE DUKE OF ARGYLL. OXFORD, December 16, 1868.

“India has been conquered once, but India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough… A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character… A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.

“The ancient religion of India is doomed, and if Christianity does not step in, whose fault will it be?”

இந்தக் கடிதங்களிலிருந்து இளைஞரான மாக்ஸ் முல்லரின் தெளிவான ஒரே நோக்கம் “உயிரைக் கொடுத்தாவது” இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க வேண்டும்; ஹிந்து மதம் அழிந்து படும்” என்பது தெளிவாகத் தெரிகிறது. 22 வயதிலிருந்து 45 வயது வரையிலான அவரது நோக்கம், ஆசை, பணி ஆகியவற்றை மேற்கூறிய கடிதங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

***   (தொடரும்)

 

 

 

 

 

 

 

 

ரிக் வேதத்தின் அற்புத அமைப்பு-Part 1 (Post No.4310)

Written by London Swaminathan

 

Date:17 October 2017

 

Time uploaded in London- 21-28

 

 

Post No. 4310

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

5000 ஆண்டுகளுக்கு முன்னர், வியாச மஹரிஷி, வேதங்களைக் காப்பாற்ற, அவைகளை நான்காகப் பிரித்து நாலு சீடர்களை அழைத்து இதைப் பரப்புங்கள் என்றார். எழுதாக் கிளவியாக (கிளவி= சொல்) 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அது ஒலிப்பது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது. வியாசர் உலக மஹா ஜீனியஸ் GENIUS; பேரறிவாளன்! தனது காலத்தில் இருந்த அத்தனை கதைகளையும் நீதி வாக்கியங்களையும் உலகிலேயே மிகப் பெரிய இதிஹாசமான மஹாபரதத்தில் இணைத்தார். 20,000 மந்திரங்களை உடைய 4 வேதங்களையும் தொகுத்தார். இனி உலகில் இப்படிப்பட்ட பணியைச் செய்ய எவரால்  முடியும்?

 

ரிக் வேத மந்திரங்களைத் தொகுத்த வியாசர், அதை மனம் போன போக்கில் அவியல் போலச் செய்யாமல், அழகாகச் செய்து கொடுத்தார். இதோ சில சுவையான தகவல்கள்:-

 

ரிக்வேதம் என்பது ஒரு புத்தகம் இல்லை; ஒரு கவிதைத் தொகுப்பு.

 

இது பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் ‘கண்டுபிடித்த’ மந்திரங்கள்; அதாவது அவை எப்போதும் இருக்கும்; ஞான த்ருஷ்டி உடைய முனிவர்கள் அதைக் கண்டு பாடுவர். அதனால் அவர்களுக்கு மந்திரங்களைப் பார்த்தவர்கள் — மந்த்ர த்ருஷ்டா — என்று பெயர்.

 

இது கவிதைத் தொகுப்பு; பல வகை யாப்பு அணிகளில் அமைந்துள்ளது. இலக்கணமும், மொழியும் கூட மாறுபடும்.

ரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள்; பின்னர் இதை எட்டு அஷ்டகங்களாகவும் பிரித்தனர்.

 

இரண்டாவது மண்டலம் முதல் ஏழாவது மண்டலம் வரையுள்ள மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் என்று அழைக்கப்படும் அதாவது 2, 3, 4, 5, 6,7 ஆகிய ஆறு மண்டலங்களும் ஆறு மஹரிஷிகளின் குடும்பத்தினர் பாடியவை/ கண்டுபிடித்தவை.

 

வியாசர் பிரித்த மண்டலங்களின் உட்பிரிவுகள் அனுவாகம், சூக்தம்.

 

அஷ்டக முறையில் உட்பிரிவுகள்:- அத்யாயம், வர்கம்

 

ஒவ்வொரு வர்கமும், ஒரு (Lesson) பாடத்துக்கு வசதியாக இருப்பதால் இந்த அஷ்டக முறை வைதீகர்களிடையே பிரசித்தம்.

 

பத்து மண்டல அமைப்பு

முதல் மண்டலம்- 24 அனுவாகங்கள்

இரண்டாவது மண்டலம் – 4 அனுவாகங்கள்

மூன்றாவது, நாலாவது மண்டலம் – 5 அனுவாகங்கள்

5,6, 7 ஆவது மண்டலம் – 6 அனுவாகங்கள்

எட்டாவது மண்டலம் – 10 அனுவாகங்கள்

ஒன்பதாவது மண்டலம் -7 அனுவாகங்கள்

பத்தாவது மண்டலம் – 12 அனுவாகங்கள்

 

அனுவாகங்களின் உட்பிரிவு சூக்தம்; ஒவ்வொரு சூக்தத்துக்கும் ஒரு ரிஷி, தேவதை, சந்தஸ் உண்டு. இது தெரிந்தால்தான் முழுப் பொருளும் விளங்கும்.

 

6 குடும்ப மண்டல ரிஷிகள்

இரண்டாவது- க்ருத்சமட

மூன்றாவது- விஸ்வாமித்ர

நாலாவது- வாமதேவ

ஐந்தாவது- அத்ரி

ஆறாவது- பரத்வாஜ

ஏழ்ழாவது- வசிஷ்ட

 

இந்தக் குடும்ப மண்டலங்களில் இன்னொரு அற்புதமும் உண்டு. முதல் மந்திரம் அக்னி தேவனைப் பற்றியது.

 

உலக எழுத்துக்களுக்கு எல்லாம் முதல் எழுத்து ‘அ’

ரிக் வேதத்தின் முதல் துதியும் அ- வில்தான் துவங்கும் இதனால்தான் வள்ளுவர் ‘அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார். பகவத் கீதையில் எழுத்துக்களில் நான் ‘அ’ என்று கிருஷ்ணன் சொன்னார்.

 

அக்னிக்கு அடுத்தபடியாக இந்திரன்  துதிகள் வரும்.

பின்னர், மற்ற தெய்வங்களின் துதிகள் வரும்

 

இது மட்டுமல்ல; முந்தைய துதிகளை உடைய அடுத்த துதியில் மந்திரங்கள் குறைந்து கொண்டே வரும் (ஆனால் சில விதி விலக்குகள் உண்டு)

 

எட்டாவது மண்டலத்தில் இப்படி ஒரு வரிசை

முறையைக் காண முடியாவிட்டாலும் கண்வர் குடும்பத்தினரின் மந்திரங்களை அதிகம் காணலாம்.

 

ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானத்தைப் பற்றியவை.

 

இரண்டு முதல் ஏழு மண்டலம் வரை உள்ள ரிஷிகளே இவைகளைப் பாடியுள்ளனர். ஆனால் வியாசர் இதிலும் ஒரு அழகைப் புகுத்தியுள்ளார்.

1-67 வரையுள்ள மந்திரங்கள்/சூக்தங்கள் காயத்ரி அணியிலும்

68-86 வரையுள்ளவை ஜகதி அணியிலும்

87-97 வரையுள்ளவை த்ருஷ்டுப் அணியிலும்

98-144 வரையுள்ளவை மற்ற அணிகளிலும் உள்ளன.

 

முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் இளைய ரிஷிகளின் தொகுப்பாகும். பத்தாவது மண்டலத்திலும் வியாசர் ஒரு ஒழுங்கு முறையை வைத்துள்ளார். இறங்கு வரிசையில்— மந்திரங்கள் குறைந்து–கொண்டே வரும்.

2-7 வரையுள்ள 6 மண்டலங்களும் பழமையானவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் அதற்குள் முதல் எது? கடைசி எது? என்பதில் கருத்து வேறுபாடு உளது.

எட்டாவது மண்டலத்தின் கடைசியில் ஒட்டுப்போட்டுள்ள 11 சூக்தங்கள் ‘வாலகில்ய’ சூக்தம் எனப்படும். இவை பிற் சேர்க்கை என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்வர். சாயனர், இதற்கு உரை எழுதாவிடினும் காத்யாயனரின் அனுக்ரமணியில் (இண்டெக்ஸ் INDEX) இவை கணக்கிடப்பட்டுள்ளன.

 

–தொடரும்