ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் காசு! (Post No.4244)

Research article written by London Swaminathan

 

Date: 26 September 2017

 

Time uploaded in London-  7-18 am

 

 

Post No. 4244

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

 

(இது பற்றி சின்னாட்களுக்கு முன் நான் ஆங்கிலத்தில் எழுதி, இங்கு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வேத மந்திரங்களின் எண்களைக் குறிப்பிட்டதால், இங்கு அவைகளை எழுதாமல் விஷயத்தை மட்டும் சுருக்கி வரைகிறேன். முழு விவரம் வேண்டுவோர் எனது ஆங்கில கட்டுரையைப் பார்க்கவும்; படிக்கவும்.)

 

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம்; அண்மைக்கால சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சியானது இதை மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்துக்கும் முந்தையது என்று காட்டிவிட்டது; அதை நாஸா விண்கலப் புகைப்படமும் உறுதி செய்தது; இதற்கு முன்னரே துருக்கியில் வேதக் கடவுளர் பெயர் பொறித்த க்யூனிபார்ம் களிமண் கல்வெட்டு கிடைத்ததால், வேத மந்திரம் கி.மு.1380 ஆம் அண்டிலேயே துருக்கி-சிரியா சென்று விட்டதை தொல் பொருட் துறை உறுதி செய்தது. அதற்கு முன்னரே கார்த்திகை நட்சத்திர ஆராய்ச்சியானது, வேதங்கள் கி.மு 4500 க்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் நிரூபித்தனர்.

 

இவ்வளவு பழமை பொருந்திய ரிக் வேதத்தில், வியாச மஹரிஷியால் கி.மு 3100-க்கு முன் நான்காகப் பிரிக்கப்பட்ட வேதத்தில்,தங்க நகைகள், தங்கக் காசு பற்றி உள்ள விஷயங்கள் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு என்பதையும், வேத கால மக்கள் செல்வச் செழிப்பிலும் நாகரீ கத்திலும் வானத்தைத் தொட்டுவிட்டனர் என்பதையும் காட்டுகிறது.

 

இது மாக்ஸ்முல்லர் வகையறாக்களுக்கும் கால்டுவெல் தொகையறாக்களுக்கும் செமை அடி கொடுக்கும்; ஏனெனில் அவர்கள் “வேத கால மக்கள் நாடோடிகள், மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவுக்குள் புகுந்த நாடோடிகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், பெரும்பாலும் வேதத்தில் சிறுபிள்ளைத்தனமான (mostly childish)  பாடல்கலைளையே காண இயலும்” என்றெல்லாம் உளறிக்கொட்டி கிளறி மூடியிருந்தார்கள்; தாங்கள் வாங்கிய கூலிக் காசுக்கு ஏற்ப தாளம் போட்டார்கள். மாறடித்தார்கள்; ஆனால் வேத கால  இலக்கியத்தில் வரும் தங்கக் காசு, தங்கத்துக்கான சொற்கள், நிஷ்கா என்னும் உலகின் முதல் தங்க நாணயம் ஆகியவற்றைப் படிப்போர் வியந்து மகிழ்வார்கள்; அவர்கள் தட்சிணையா க வாங்கிய தங்க நாணயங்களைப் பார்ப்போருக்கு அடக் கடவுளே இவ்வளவு செழிப்புள்ள காலத்தில் நாமும் வாழ மாட்டோமா என்று சிந்திக்க வைக்கும்.

 

சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை போலப் பொழிந்த பாடல்கள் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் உள்ளன. செங்குட்டுவன் தனது உடல் எடையான 50 கிலோவுக்கு நிகரான தங்கத்தை துலாபாரம் மூலம் மாடல மறையோன் என்ற பிராமணனுக்கு வழங்கிய செய்தி ‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகார காவியத்தில் வருகிறது. பராசரன் என்ற பார்ப்பனன், திருத்தங்கலில் வேதம் சொல்லிய ஒரு சிறு பிள்ளையிடம் தனது தங்க நகை மூட்டையைக் கொடுத்துவிட்டுப் போன செய்தியும் சிலம்பில் காணக்கிடக்கிறது. அப்போதாவது, ரோமானிய சாம்ராஜ்யம், கேரளத்துக்குள் தங்க மழை பொழிந்த செய்தி சங்க இலக்கிய நூல்களிலும் ரோமானிய எழுத்தர் நூல்களிலும் உள்ளன. ஆனால் வேத கால மக்களுக்கு எங்கிருந்து தங்கம் கிடைத்தது? அதுவும் வேத கால துதிகளில் இருக்கிறது. நதிப் படுகைகளில் இருந்து அவர்கள் தங்கத்தைச் சலித்து எடுத்து தூய்மைப் படுத்திய செய்தியும் வேதத்தில் உள்ளது.

பிற்காலத்தில் தர்மபுத்திரன், அர்ஜுனன் ஆகியோர் இமய மலையிலுள்ள உத்தரகுருவில் தங்கம் எடுத்தசெய்தி உள்ளது. மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் புகழ்கின்றனர். உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரடோட்டஸோவெனில் இந்தியாவில் இராட்சத எறும்புகள் பூமிக்கடியில் இருந்து தங்கத்தைக் கொண்டுவந்த்த அதிசயச் செய்தியை எழுதி வைத்துள்ளார். இந்தியா= தங்கம்!!!

 

தங்கத்துக்கும், தங்க நகைகளுக்கும் வேதத்தில் உள்ள சொற்கள் எல்லோரையும் மலைக்க வைக்கும்:

ஜாத ரூபம், ஹரிதம், ஹிரண்யம், ஸ்வர்ணம், நிஷ்கா, சந்த்ர — இப்படி பல பெயர்கள்!

மேலும் அண்மைக்காலம் வரை நம்மவர்கள் பயன்படுத்திய குந்துமணி எடை (கிருஷ்ணல) வேத கால நூல்களில் உள்ளது. ஆகவே தங்கத்துக்கு எடை போடும் வழக்கமும் அப்போது இருந்ததால் நல்ல தங்கநகைக் கடைகள் இருந்திருக்க வேண்டும்

 

ரஜத என்ற வெள்ளி பற்றியும் வெள்ளிக் காசுகள் பற்றியும் வேதங்கள் பாடுகின்றன.

உலகிலேயே மிகப் பணக்கார நாடு இந்தியாதான்! இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து ஆறு கட்டுரைகளை இதே பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது வேதத்தில் இன்னும் ஒரு வியப்பான செய்தியைக் கண்டேன்.

 

நான் பழங்கால நாணயங்களை ஆராய்பவன். என்னிடமுள்ள ஆங்கில நூல்கள் அனைத்திலும் முதல் முதலில் உலகில் நாணயங்களை வெளியிட்டவர்கள் கிரேக்கர்கள் என்றும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதலே இவை கிடைகின்றன என்றும் எழுதியுள்ளனர். அந்த நாணயங்களும் மியூசியங்களில் உள்ளன.

 

நிஷ்கா என்னும் தங்க நாணயம்!

 

ஆனால் உலகிலேயே முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் இந்துக்கள் என்ற செய்தி வேதத்தில் உள்ளது (ஆங்கிலக் கட்டுரையில் பாடல் எண்களைக் கொடுத்துள்ளேன்). அந்த நாணயத்தின் பெயர் நிஷ்கா. இதற்கு இரு பொருள் உண்டு: 1. நாணயம்/ காசு, 2. கழுத்தில் அணியும் ஆபரணம்.

 

இது உண்மையே; இதில் முரண்பாடு எதுவும் இல்லை; ஆதிகாலத்தில் காசு மலை செய்வது எளிதாக இருந்தது. மேலும் இது அழகானது. இன்றும் கோவில்களிலும் இந்து மாதர்களின் கழுத்திலும் காசு மாலை ஜ்வலிப்பதைக் காணாலாம். ஆக நிஷ்கா என்பது இரு பொருளிலும் வழங்கி இருக்கலாம்.

 

பிற்கால இலக்கியங்களில் நிஷ்கா என்பது தங்க காசு என்பது எல்லோரும் அறிந்ததே.மேலும் ஒரு பொருளை கரன்ஸி (நாணயம்) என்று அறிய அதனுடன் எண் அளவு இருக்க வேண்டும். அப்படி அஷ்ட புத் என்ற எண்ணுடனும், சதமானம் (100) என்ற எண்ணுடனும் காசுகள் கையாளபட்டுள்ளன. இன்றும் கூட கல்யாணங்களில் பரிசுகளை ஓதிவிடும் போது பிரமாணர்கள் சதமானம் பவது என்ற மந்திரத்தைச் சொல்லி லட்சம் கட்டி வராஹன் என்று மிகைப்படுத்தி பரிசை அளிப்பர் ( மாமா கொடுத்தது, அத்தை கொடுத்தது என்பதால்)

 

ஆக உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை வெளியிட்டது வேத கால இந்துக்களே. ஆனால் பெரிய துரதிருஷ்டம்! சிந்து வெளியிலோ, வேத கால புதை பொருள்களிலோ இப்படி ஒரு நாணயம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு இந்துப் பெண்களின் குணமே காரணம். அடிக்கடி தங்கத்தையும் தங்க நகைகளையும் உருக்கி புதுப் புது டிசைன்களில் நகை செய்து கழுத்தில், காதில், காலில் பூட்டி பெருமை அடித்துக்கொள்வர். குப்தர் காலத்தில் லட்சக் கணக்கில் தங்க நாணயங்கள் அடித்ததால் இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் (லண்டன்) அவைகளைக் காண முடிகிறது. நம் ஊரில் கிடைத்தன வெல்லாம், பெண்களின் கழுத்தில் தொங்குகின்றன. ஒரு வேளை பத்மநாப சுவாமி கோவில் போன்ற இடங்களில் பழங்கால நாணயங்கள் இன்னும் இருக்கலாம்.

ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட பெருமை நம்மையே சாரும்!

 

 

தட்சிணையில் தங்க ரதம்!!!

 

இதைவிட மிக மிக வியப்பான விஷயம் பிராமணர்கள் பெற்ற தங்க தட்சிணையாகும்!

 

ஆறு வகையான தங்க தட்சிணைகளைப் பட்டியல் இடுகின்றனர்.

யாக யக்ஞங்களில் யாக குண்டங்களை அமைப்பதற்குப் பயன்படும் செங்கற்கள் போல தங்க செங்கற்கள் தட்சிணையாக கொடுக்கப்பட்ட விஷயமும் உளது.

 

தங்க ஏர் (சீதா) கொண்டு மன்னர்கள் ஆண்டுதோறும் நடத்தும் சடங்கு பற்றியும் உள்ளது இப்படி ஜனகன் உழச்சென்றபோது கிடைத்தவள்தான் சீதாதேவி (ஏர்ப் பெண்)!

 

சேதி என்னும் மன்னனின் மகனான காசு அளித்த ஆயிரக்கணக்கான பசுமாடுகள் குதிரைகள் ஒட்டககங்கள் பற்றிய செய்தி ரிக் வேதத்தில் எட்டாம் மண்டலத்தில் இருக்கிறது.

 

கனிதன் என்பவனின் மகனான ப்ருதுஸ்ரவஸ் தங்க ரதமும் ஆயிரக்கணக்கில் பசுமாடுகளும் கொடுத்ததாக வாச அசவ்ய என்ற ரிஷி பாடுகிறார்.

 

சங்கத்தமிழ் இலக்கியத்தில் பரிசு பெற்ற புலவர்கள் மற்றவர்களை ஆற்றுபடுத்தும்போது கூறும் விஷயங்கள் போல ஒவ்வொரு பிராமணரும் பெற்ற பரிசுகள் (தட்சிணையாக) தான துதிகள் என்ற துதிகளில் வருகிறது. இதில் நம்புவதற்கரிய மிகப் பெரிய எண்ணிக்கையில் பரிசுகள் உள்ளன. வேத கால மக்களின் செல்வச் செழிப்பு அளவிடற்கரியது.

 

 

 

பெண்கள் அணிந்த ஆபரணங்களின் பெயர்களும், தங்க நகைகளுடன் அவர்கள் பவனி வந்த செய்தியும் வேதங்களில் உள்ளன.!

 

தங்கமோ தங்கம்! அவ்வளவும் சொக்கத் தங்கம்!

 

TAGS:- முதல் தங்கக் காசு, வேதத்தில், தங்க நகை, தங்கத் தேர்

–சுபம்–

 

மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்! அணுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி! (Post No.4217)

Written by London Swaminathan

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 16-51

 

Post No. 4217

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேதத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட மாக்ஸ்முல்லருக்கு பாம்பு போல இரட்டை நாக்கு; சில இடங்களில் வேதத்தைப் புகழ்வார்; சில இடங்களில் வேதத்தை இகழ்வார்; அவர் செய்தது கூலி வேலை. முதலில் கிழக்கிந்திய கம்பெனியும் அப்புறம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவருக்கு கூலி கொடுத்தன. அதாவது கூலிக்கு மாரடித்த குப்புசாமி! கூலி போட்டவர்களின் நோக்கம் என்ன? எப்படியாவது இந்துமதத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் பாச்சா பலிக்வில்லை. வேதத்தில் உள்ள துதிகள் உலகையே வியக்கவைத்தன. பிக் பேங்(Big Bang) பற்றியும் உலக சமாதானம் பற்றியும், பூமித் தாய் பற்றியும், நதிகள் பற்றியும், இயற்கையின் விந்தைகள் பற்றியும், காலைக் கதிரவனுக்கு முன்னர் தோன்றும் உஷா தேவி பற்றியும்’ அளவற்ற வளம் படைத்த அதிதி தேவி பற்றியும், மாயாஜாலம்  புரிந்து கடலில் சென்றவர்களை மீட்ட அஸ்வினி தேவர்களைப் பற்றியும், அக்கினி தேவன், வௌணன், உலக மஹா வீரன் இந்திரன் ஆகியோர் பற்றியும் சரமா என்ற நாய் பற்றியும், கணித வரிசைப்படி யாப்பு இலக்கணம் ( மீட்டர்) பற்றியும், டெஸிமல் ஸிஸ்டம் பற்றியும் வேத கால ரிஷிகள் பாடிய பாடல்கள்- அதுவும் மாக்ஸ்முல்லர் கணக்குப்படி 3200 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் எல்லோர் மூக்கிலும் விரல்களை வைத்து வியக்க வைத்தன.

 

 

துப்புகெட்ட மாக்ஸ்முல்லர் ஒரு தப்புக் கணக்குப் போட்டார். வேதத்துக்கு காலம் நிர்ணயிக்கிறேன் என்று கடலாழம் தெரியாமல் காலைவிட்டார்; உலகில் எல்லா மொழிகளும் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். புத்தமத வாசனையே இல்லாத உபநிஷதங்களுக்கு கி.மு 800 என்று காலம் சொல்வேன். அதற்கு முந்தைய ஆரண்யக, பிராமண நூல் களுக்கு கிமு.1000 என்று காலம்  சூட்டுவேன்; அதற்கு முந்தைய சம்ஹிதையிலுள்ள துதிகளுக்கு கி.மு 1200 என்று முத்திரை குத்துவேன் என்றார்.

 

மொழிகள் மாறுமென்பது உண்மையே. புற நானூற்றுத் தமிழ் இன்று இல்லை; தொல்காப்பிய விதிகளை நாம் இன்று பின்பற்றுவதில்லை. ஆனால் மண்டு மாக்ஸ்முல்லர் தெரிந்தும் மறைத்த உண்மை- வேத மொழி மாறாதது; மாற்ற முடியாதது; அதில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் ரிஷிகள் சொன்னது சத்தியம் என்று சொல்லி யாரும் அதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக உலகம் வியக்கும் அதிசயமான கண பாடம், ஜடா பாராயணம் என்றெல்லாம் சொல்லைப் புரட்டிப் புரட்டி பாடம் கற்பித்தனர். உலகில் இந்த அற்புதத்தை வேறு எந்த மொழியிலும் காண முடியாது.

அது மட்டுமல்ல; திருட்டு மாக்ஸ்முல்லர், நுழை நரிக்குப் பிறந்த தந்திரசாலி மாக்ஸ்முல்லர், இன்னொரு உண்மையையும் மறைத்தார். அவர் சொன்ன 200 ஆண்டு மொழிமாற்றக் கணக்கை வேறு எந்த பழைய மொழிக்கும் ஒப்பிட்டுக் காட்டவில்லை. எடுத்துக் காட்டாக தமிழ இலக்கியத்தில  இந்தக்கொள்கையை புகுத்தினால் பழைய நூல்களின் காலம் உல்டா (அந்தர் பல்டி) அடிக்கும். சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம், திருக்குறள் அதிகாரம் ஆகியன ஆறாம் நூற்றாண்டுக்குத் தவ்விக் குதிக்கும்! ஆக மாக்ஸ்முல்லர் போட்டது குத்து மதிப்பான பால்காரிக் கணக்கு!

 

மாக்ஸ்முல்லர் கி.மு 1200 என்று ரிக் வேதத்துக்கு முத்திரை குத்தியவுடன் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய வேதம் படித்த வெள்ளையர்கள் அவர் மீது பாய்ந்து குதறினர். உடனே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னது இதற்கும் கீழாக எவரும் ரிக் வேத காலத்தைக் குறைக்க முடியாது என்பதே; உண்மையில் ரிக்வேத காலத்தை எவரும் சொல்ல முடியாது. அது 5000 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருக்கலாம் என்று பின்வாங்கினார்.

விஞ்ஞானிகள் நிரூபணம்

 

கடந்த 25 ஆண்டுகளில் பாபா அணுசக்தி ஆய்வுக் கேந்திர விஞ்ஞானிகள், நிலத்தடி நீர்க் கமிஷன் விஞ்ஞானிகள், பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் ஆகியோரும், விண்வெளி விண்கல புகைப்படமும் காட்டிய பேருண்மை, மாக்ஸ் முல்லருக்கும் இந்துக்களை மட்டம் தட்டும் மார்கசீய வாதிகளுக்கும் செமை அடி– அடி மேல் அடி — வகையடி- தொகையடி– கொடுத்தது. அதாவது ரிக்வேதம் 50-க்கும் மேலான இடங்களில் விதந்து ஓதும் பிரம்மாண்டமான, கடல் போன்ற சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் வட மாநிலங்க களை ள வளப்படுத்தி பாய்ந்தது என்றும் அது மறைந்த பின்னரே ஹரப்பா மொஹஞ்சதாரோ நாகரீகம் உச்ச கட்டத்தை அடைந்தது என்றும் காட்டினர்.

 

இது மேலும் ஒரு புதிரைப் போட்டது. சரஸ்வதி நதி ஆய்வுக்கு முன்னர், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு முறையில் கால வரிசைப்படுத்தினர். இப்பொழுது அவர்களுக்கும் அடி விழுந்தது. ஏனேனில் சரஸ்வதி நதியைப் புகழும் பகுதிகள் பல மண்டலங்களில் பரவி விரவிக் கிடக்கின்றன. ஆகவே அவை அனைத்தும் கி.மு.2000க்கு முன்னரே — அல்லது மிகமிக முன்னரே பாடப்பட்டிருக்க வேண்டும். நல்ல ஆராய்ச்சியளர்கள் சரஸ்வதி நதிக் குறிப்பு களைக் கொண்டே வேதத்துக்கு காலம் நிர்ணயிக்க முடியும்.

 

போகிறபோக்கைப் பார்த்தால் வியாசர் கி.மு 3102 வாக்கில் (கலியுக துவக்கம்) வேததங்களை நான்காக வகுத்ததாக இந்துக்கள் நம்புவது விஞ்ஞான உண்மையே என்று முடிவு செய்து விடுவார்கள்.

 

 

வானவியல்

வேதத்தில் உள்ள வானவியல் குறிப்புகளைக் கொண்டு ரிக்வேதத்துக்கு கி.மு4000 என்று திலகரும், கி.மு 4500 என்று ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் கால நிர்ணயம் செய்தனர். இதை ப்யூலர், பார்த், வின்டெர்நீட்ஸ், ப்ளூம்பீல்ட் ஆகியோர் ஏற்றதாகவும் அவர்களுடைய கணக்கீட் டில் எந்த தவற்றையும் எவரும் காணவில்லை என்றும் திரு சட்டோபத்யாயா கூறினார். பேராசிரியர் சென் குப்தா பழங்கால இந்திய காலவரிசை என்ற நூலில் ரிக் வேதத்துக்கு கி.மு 4000 என்று காலம் காட்டினார்.

 

ஆக பாபா அணுசக்தி கேந்திர நிலத்தடி நீர் ஆய்வு, ஐசடோப் ஆய்வு, கார்பன் 14 தேதி நிர்ணயம் — எல்லாம் சரியே; அவை அனைத்தும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னரே சரஸ்வதி நதி ஓடியது என்று காட்டுகின்றன.

 

 

இந்தியாவுக்கு 3 சாபக்கேடுகள்/ பரிசுகள்

 

சீன, எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, மாயன் நாகரீகத்துக்கும் இந்திய நாகரீகத்துக்கும் ஒரு பெரிய வேறு பாடு உண்டு.

 

இந்திய நாகரீகத்தை தடயங்களை மூன்று விஷயங்கள் அழித்தன

 

பருவக்காற்று- தென் மேற்குப் பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் ஆண்டுதோறும் மழையைக் கொட்டி, நதிகளை வெள்ளப் பெருக்கெடுக்க வைத்து பல ஊர்களை அழித்தன. நாம் அசோகர் காலத்துக்கு முன்னர் கல்லில் எதையும் வடிக்காததால் தடயங்கள் அழிந்தன. பருவக்காற்றுகளை இயற்கை தந்த பரிசு என்றும் சொல்லலாம். ஜீவநதிகளால் பாசனம் பெருகியது

இரண்டாவது சாபக்கேடு; நில அதிர்ச்சி/ பூகம்பம்

 

நமது காலத்திலேயே தென்னாட்டில் தனுஷ்கோடி கடலுக்குள் போனதைப் பார்த்தோம். நேபாளக் கோவில் கோபுரங்கள் உருண்டோடி மொட்டைக் கோபுரம் ஆனதைக் கண்டோம். 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை உண்டாக்கும் மாபெரும் பூமி அதிர்ச்சி நதிகளைப் பிறட்டி,உருட்டி அட்டஹாசம் செய்தன. ஆகையால் நமது நாகரீக தடயங்கள் அழிந்தன. மொஹஞ்சதாரோவில் கல்லில் முத்திரை களை உருவாக்காவிடில் நாம் முக்கிய தடய ங்களை  இழந்திருப்போம்.

 

மூன்றாவது சாபக்கேடு வெளி நாட்டினரின் படை எடுப்பும் அவர்களின் அழிவு வேலைகளும் ஆகும். நமது கண்ணுக்கு முன்னாலேயே முஸ்லீம் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியன் குகை புத்தர் சிலைகளை — மிக உயரமான புத்தர் சிலைகளை –அழித்ததைக் கண்டோம். கிமு ஆறாம் நூற்றாண்டு டேரியஸ் (Darius) காலம் முதல் 2600 ஆண்டுகளாக இந்தியா தாக்குதலுக்கு உள்ளானது; கஜினி முகமதுகளும் மாலீக்காபூர்களும் உலகிலேயே செல்வச் செழிப்புள்ள நாடு இந்தியா  என்பதை அறிந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்துச் சென்றனர். இது வெள்ளையரின் கோஹினூர் வைரக் கொள்ளை வரை நீடித்தது.

 

 

உலக மஹா எஞ்சினீயர் பகீரதன், அகத்தியன்!

 

இவ்வாறு சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயே (கி.மு3102) வற்றி பூமியில் மறையவே கங்கை என்னும் நதி புனிதம் பெற்றது. அதன் தடைபட்ட பாதையை மாற்றி அதை உத்திரப் பிரதேச, வங்காள பூமியில் திசை திருப்ப பல இந்து மன்னர்கள் முயன்றனர். இறுதியில் உலகப் புகழ்பெற்ற — உலகின் முதல் நதி நீர் பொறியியல் வல்லுனன்– பேரரசன் பகீரதன் அந்த கங்கை நதியை மாற்றினான். அதைக் கடல் வரை- வங்காள விரிகுடா சாகர் தீவு வரை பாய வைத்தான். அவனது எஞ்சினீயரிங் வேலலைகளை நாம் இன்றும் புராணக் கதைகளாகப் படிக்கிறோம். இதைப் பார்த்து அகத்தியர் என்னும் எஞ்சினீயர்/ முனிவர் காவிரி நதியையும் திசை திருப்பி கர்நாடகம், தமிழ் நாடு வரை பாயவைத்தார். விந்திய மலை மீது முதல் முதல் நில மார்க்க சாலைகளைப் போட்டார் அகத்தியர். இதை விந்திய கர்வபங்கம் என்ற புராணக்  கதைகளாக நாம் படிக்கிறோம். மூன்றாவதாக தென் கிழக்காசியாவுக்கு கடல் வழி மூலம் இந்து நாகரீகத்தை எடுத்துச் சென்றார். இதனால் அவரது சிலைகள் தென் கிழக்காசியா முழுதும் பரவிக்கிடக்கின்றன.

மார்கஸீயத் திருடர்கள்!

இந்திய கல்வித்துறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு அடிவருடிகள்– மார்கஸீயத் திருடர்கள் கைகளில் இருந்ததால் பல தொல்பொருத்துறை உண்மகைள் எழுதப்படவில்லை. போர்னியோவில் மனிதரே நுழைய முடியாத காட்டில் நாலாம் நூற்றாண்டு மூலவர்மனின் யூபஸ்தம்பம் இருந்தது. துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கோய் நகரத்தில் வேத மந்திரம் எழுதிய க்யூனிபார்ம் கல்வெட்டு கண்டுபித்தது, தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களில் சிரியா-துருக்கியை இந்து மன்னர்கள் ( மிடன்னி நாகரீகம்) ஆண்டது முதலியவைகளை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உரைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டும் கூட கல்வித்துறை கயவர்கள் நமது சரித்திரப் புத்தகத்தில் அதைச் சேர்க்கவே இல்லை. வெள்ளைத் தோல் அறிஞர்களும் மிட்டனி நாகரீகம் குறித்தோ இந்திரன், மித்திரன், வருணன் ஆகிய வேத கால தெய்வங்களின் பெயரில் உடன்படிக்கை கைச்சாத்திட்டதையோ பேசாமல் ‘கப் சிப்’ என்று வாய் மூடி இருந்தனர்.

 

கிக்குலி என்பவன் துருக்கி நாட்டில் (துரகம்= குதிரை) வடமொழியைப் பயன்படுத்தி கி.மு 1400ல் குதிரைப் பயிற்சி கொடுத்த நூல் கிடைத்துள்ளது.

 

இது தவிர எகிப்திய மன்னன் மூன்றாவது அமெனோபிஸ்ஸுக்கு தசரதன் மகளை மணம்புரிவித்து, அவன் எழுதிய தசரதன் கடிதங்கள் இன்னும் எகிப்தில் உள்ளன. இவை அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சிக்கால கயவர்கள்- திருடர்கள் – வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்காமல்- மார்கஸீயவாதிகள் எழுதிய அசிங்கங்களையும் வெள்ளைக்காரர்கள் தங்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து எழுதிய விஷயங்களையும் மட்டும் சிலபஸில் சேர்த்தனர்.

 

ராமாயாண  தசரதனையும் இந்த தசரதனையும் குழப்பிக்கொண்டு விடாதீர்கள் மாமன்னர் அசோகனின் பேரன் பெயர் கூட தசரதன்தான்.

 

மேற்கூறிய கட்டுரையின் சாரம்:–

 

பாபா அணுண்சக்தி ஆராய்ச்சியாலரின் அறிவியல் கூற்றுகளும்

திலகர் ஜாகோபியின் வானவியல் கூற்றுகளும்

பொகஸ்கோய் க்யூனிபார்ம் கல்வெட்டு தரும் தொல்பொருத் துறை ஆதாரங்களும்

எகிப்திலுள்ள தசரதன் கடிதங்களும்

ரிக் வேதத்திலுள்ள சரஸ்வதி நதியின் பிரம்மாண்ட வர்ணனைகளும்

 

மாக்ஸ்முல்லரின் வேத காலக் கொள்கைகளைப் பொடிப் பொ டியாக்கி பொய்யாய் பழங்கதையாய்ச் செய்துவிட்டன.

 

வேத காலம் என்பது வியாசரின் காலத்துக்கும் (கி.மு.3102) முந்தையது என்பது நிரூபிக்கப்ப ட்டுவிட்டது.

 

வேத காலத்துக்கு இந்திய அறிஞர்களால் கொடுக்கப்பட்ட தேதி

ஜி.கே பிள்ளை- கி.மு4000 முதல் கி.மு 3000 வரை

ராஜேஸ்வர் குப்தா- கி.மு 4000

உ.வி.ராவ்- கி.மு.5000

 

வெளிநாட்டு அறிஞர்கள்

எஹ்.டி.கிரிஸ்வால்ட்- கிமு 1200 முதல் கி.மு 4000

டி.பர்ரோ- கி.மு 1200

 

இவர்களுக்கு எல்லாம் அ ண்மை க் கால சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சிகள் தெரியாததால் அறியாத பிள்ளைகளை மன்னித்துவிடலாம்.

 

சிலர் குதிரை, இரும்பு பற்றிய குறிப்புகள் இருப்பதால் வேதங்களை கி.மு1500 க்கு முன்னர் வை க் கமுடியாதென்று வாதிடுவர். ஆனால் அந்த குதிரைக்கும் இரும்புக்கும் தேதி நிர்ண யிப்பது வெள்ளைத் தோல், உள் நோக்கப் பேர்வழிகள். இவை இரண்டும் இந்துக்களின் கண்டுபிடிப்பு; உலகம் முழுதும் சென்றது இந்தியாவில் இருந்துதான். நாம் நிர்ண யிக்கும் தேதியே சரி. மேலும் அஸ்வ (குதிரை) அயஸ் (பொன்) என்பது பல பொருள் உடைத்து.

 

இதையெல்லாம்விட மிக முக்கிய சான்று சங்கத் தமிழில் உள்ளது. புற நானூற்றின் முதல் பாடல் முதல் கடடைசி பாடல் வரை வேதக் குறிப்புகள், வேதச் சடங்கு குறிப்புகள் உள. இவை 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாட்டில் இமயம் முதல் குமரி வரை – போர்னியோவின் மூல வர்மன் ஆட்சி வரை- வியட் நாமின் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் வரை ஒரே கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வேண்டும் என்றால்– போக்குவரத்தும் இன்டெர்நெட்டும் மொபைலும் இல்லாத காலத்தில் பரவ வேண்டுமானால் – அதற்கு 1000 அல்லது 1500 ஆண்டுகளாவது ஆகும்.

எல்லாவித தடயங்களையும் சான்றுகளை யும் ஒட்டு மொத்த முகமாக நோக்குமிடத்து பாபா அணு சக் தி ஆய்வுகளும் வியாசரும் சொல்லுவதே சரி.

TAGS: மாக்ஸ்முல்லர், வேத காலம், தேதி

–சுபம்—

வேத கால அரசர்கள் பற்றிய விநோதச் செய்திகள்! (Post No.4145)

Written by London Swaminathan

 

Date: 10 August 2017

 

Time uploaded in London- 11-08 am

 

Post No. 4145

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வெள்ளைக்காரன் எழுதிய இந்திய சரித்திரம் அசோகரின் தாத்தா காலத்தில் இருந்து துவங்குகிறது. அதாவது நமது சரித்திரம் எல்லாம் 2400 ஆண்டு மட்டுமே பழமையானவை! அதற்கு முன் நம்மை ஆண்ட மன்னர்கள் யார் என்று எம்.ஏ. சரித்திரப் புத்தகம் வரையிலும் கிடையாது!! (கட்டுரை ஆசிரியர் மதுரை பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பட்டதாரி). ஆனால் ரிக்வேதத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் பெயர்களும், ஈரானை ஆண்ட மன்னர்கள் பெயர்களும் மஹாபாரதத்தில் சிந்துசமவெளியை ஆண்ட மன்னர்கள் பற்றியும் உள்ளன. சிரியாவை ஆண்ட பிரதர்தனன், தசரதன் (1350 BCE) பற்றிய கல்வெட்டு பற்றி 1935 ஆம் ஆண்டிலேயே காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் உரையாற்றியது உலகம் முழுதும் மிட்டனி நாகரீகப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் இந்திய சரித்திரப் புத்தகத்தில் கிடையாது. என்ன விநோதம்? நாமின்றும் அடிமைகளாகவே வாழ்கிறோம்! சரித்திரப் புத்தகமா? தரித்திரப் புத்தகமா? உடனே மாற்றி எழுதுவது நமது தலையாய கடமை.

 

வேதங்களில் உள்ள மந்திரப் பகுதிகளை சம்ஹிதை என்பர். அவை முழுதும் துதிப் பாடல்கள். அதற்குபின் பாதி உரை நடையிலும் கொஞ்சம் பாடல்களாகவும் உள்ளது பிராமணங்கள். இதற்கு வெள்ளைக்காரன் போட்ட தேதி சுமார் கி.மு 1000 அல்லது 800. ஆனால் இந்துக்கள் போடும் தேதி கி.மு.4000. சங்கத் தமிழ் நூல்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகளும் நீண்ட நெடுங்கால வரலாறு ப ற்றிப் பேசும். புராணங்களில் சுமார் 150 அரசர்களின் பெயர்களை வரிசைக் கிரமமாக கொடுத்துள்ளனர். இது பற்றி நிறைய எழுதிவிட்டேன். இப்பொழுது பிராமண நூல்களில் படித்த சுவையான விஷயங்களைச் சொல்லுவேன்:-

 

இந்திய அரசியல் சாசனம் “இந்தியா என்னும் பாரத நாடு…………………….” என்று துவங்குகிறது ஏன்? தபால்தலைகளில் ஆங்கிலத்தில் ‘இண்டியா’ என்றும் ஹிந்தியில் ‘பாரத்’ என்றும் உள்ளது. ஏன்?

 

உலகமே வியக்கும் வண்ணம் ஆண்டான் பரதன் என்ற மன்னன், அவன் நூறு அலக்ஸாண்டர்களுக்குச் சமமானவன். ஆயிரம் நெப்போலியன்களுக்குச் சமமானவன். புலிக்குட்டிகளும் சிங்கக்குட்டிகளும் அவன் நண்பன். அஞ்சாத நெஞ்சன்; அதி சூரன்; மஹா வீரன்; மாபெரும் பேரரசன்.

 

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்

தட்டி விளையாடி – நன்று

உகந்ததோர் பிள்ளை பாரத ராணி

ஒளியுறப் பெற்ற பிள்ளை

என்று சொற்தேரின் சாரதியாம் பாரதியால் பாடப்பெற்றவன்; பாராட்டப் பெற்றவன்.

அதே பாட்டில்

தெய்விகச் சாகுந்தலமெனும் நாடகம்

செய்த தெவர் கவிதை? – அயன்

செய்த தனைத்தின் குறிப்புணர் பாரத

 

தேவி அருட்கவிதை என்றும் பாடுகிறார்.

அப்பேற்பட்ட சாகுந்தல நாடகத்தில் உலகப் புகழ்பெற்ற காளிதாசன் பரதனின் புகழைப் பாடுகிறான். இந்தப்பிள்ளை உலகம் முழுதும் ஆள்வான் என்கிறான். இதற்கு முன்னர் மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் பரதன் புகழ் இருக்கிறது.

 

இந்த பூமியில் பரதனுக்கு முன்னால் பிறந்த அனைவரும்

அவனுக்குப் பின்னால் பிறந்த அனைவரும்  அவனது பெயராலேயே அழைக்கப்படுவர்

–ம.பா. 1-69-49

இவனைப் பற்றி சதபத பிராமணம் ஐதரேய பிராமணம் என்ன செப்புகின்றன என்பதைக் காண்போம்:–

தீர்கதமஸ் என்ற ரிஷி துஷ்யந்தன் மகனான பரதனுக்கு முடி சூட்டியதாக ஐதரேய பிராமணம் பேசும் (8-39). அவன் இந்த பூமி முழுதையும் வசப்படுத்தி 133 அஸ்வமேத யாகங்களைச் செய்ததாகவும் கூறும். 78 குதிரைகளை யமுனை நதிக்கரையிலும் 55 குதிரைகளை கங்கை நதிக்கரையிலும் கட்டி வைத்து அஸ்வமேதம் செய்தான் பரதன்.

 

அஸ்வமேதம் செய்த ஒவ்வொருவரையும் பாராட்டும்  பாடல் உண்டு.  அதில் ஆயிரம் குதிரைகளுடன் அஸ்வமேதம்செய்தான் என்று போற்றுகிறது அதாவது அலங்கரிக்கப்பட்ட அவனது குதிரை எங்கெல்லாம் சுற்றித் திரிகிறதோ அந்த இடமெல்லாம் அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதி. ஒருவரும் அதைத் தடுக்கவோ பிடிக்கவோ முன்வரவில்லை. ஆகையால் இந்த பூமி முழுதும் அவன் வசமானது.

தங்க நகைகளுடன் 10000 பெண்கள் பரிசு

 

எந்த ரிஷி அஸ்வமேதம் செய்விக்கிறாரோ அவருக்கு தானம் அளிப்பது மன்னர் மரபு.

அங்க என்னும் அரசனை அத்ரியின் மகனான உதமன்ய பட் டாபிஷேகம் செய்வித்தார். அவருக்கு அங்க மன்னன்

10,000 யானைகள்

10,000 தங்க நகை அணிந்த பணிப்பெண்கள்

ஒரு கோடி பசு மாடுகள்

87,000 வெள்ளைக் குதிரைகள்

கொடுத்தான். ( கவிஞர்கள் மிகைபடக்கூறல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. ஆகையால் இவைகளை ஆயிரத்தால் வகுப்பது சரி என்று தோன்றுகிறது. மேலும் ஆயிரம் என்பதை “எண்ணற்ற” (innumerable, uncountable) என்ற பொருளிலும் வேத காலத்தில் பயன்படுத்தினர். ஆகவே நாம் ஒவ்வொரு எண்ணையும் ஆயிரத்தாலோ அல்லது நூறாலோ வகுக்க வேண்டும். இது நான் சொல்லுவதல்ல. மஹாபாஷ்யமெழுதிய பதஞ்சலி முனிவரே ராம ஆண்ட ஆயிரக் கணக்கான ஆண்டுகளை 365ஆல் வகுத்து இத்தனை ஆண்டுகள் ஆண்டான் என்று எழுதி இருக்கிறார்.

 

இன்றும் கூட பிராமண வீடுகளில் கல்யாணம், ஆயுஷ் ஹோமம், சீமந்தம்-வளைகாப்பு ஆகியவற்றில் நெருங்கிய உறவினர்கள் என்ன தொகை ஓதிவிட்டாலும் அதை உரத்த குரலில் மந்திரம் ஓதி அளிக்கும் புரோகிதர்கள் “லட்சம் கட்டி வராஹன்” என்றே சொல்லித் தருவர். ஆக இந்த நடைமுறை அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

இறையனார் களவியல் உரையில் மூன்று தமிழ்ச் சங்ககங்களுக்குக் கொடுத்த ஆண்டுகளை வையாபுரிப் பிள்ளை போன்ற அறிஞர்கள் 37-ஆல் வகுத்தனர். நான் வேறு ஒரு கணக்குக் காட்டி இருக்கிறேன். (மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுகதையா என்ற எனது  பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

இனி வேத கால அரசர் பெயர்களும் அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்வித்த முனிவர் பெயரையும் காண்போம். யமுனை நதி முதல் சிந்து-சரஸ்வதி வரை பிரம்மாண்ட பூமியில் வேத கால அரசர்கள் வாழ்ந்தனர்; ஆண்டனர். அவர்கள் செல்வம், உலகம் வியக்கும் வண்ணம் இருந்தது. வேதம் முழுதும் தங்கம் பற்றி வரும் குறிப்புகளைப் பார்த்தால் கஜினி முகமதுவும் அலெக்ஸாண்டரும், கொலம்பசும் ஏன் இந்தியாவை நோக்கிப் பயணம் செய்தனர் என்பது விளங்கும்.

 

வேத காலத்தில் இந்தியாவில் தங்கம் ஆறாக ஓடியது என்பதை “ஹிரண்யம்” என்ற சொல் வரும் இடங்களை ஆராய்ந்தால் விளங்கும்.

துஸ்தரிது பௌம்சாயன என்ற மன்னன், தான் தொடர்ந்து வரும் ஆட்சியில் பத்தாவது மன்னன் என்று பெருமை அடித்துக் கொள்கிறான் (சதபத. 12-9-3-1) ஒரு மன்னக்கு 35 ஆண்டு சராசரி வைத்தாலும் இவனது வம்சம் 350 ஆண்டுகள் ஆண்டதை பிராமண நூல்கள் செப்புகின்றன.

 

பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயனை துர காவசேய என்ற ரிஷி பாட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

இது கலியுக துவக்கத்தில் கி.மு 3100ல் நடந்திருக்க வேண்டும். அதாவது மாபாரத யுத்தத்துக்குப் பின்னர் வந்த அரசர்கள்.

 

மனு வம்சத்தில் வந்த சார்யாத என்ற மன்னனை சியாவன பார்கவ முனிவர் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

சதானீக சாத்ராஜித என்ற மன்னனை  வாஜ ரத்னனின் மகனான சோமசுமா பட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

அமவாஸ்த்ய மன்னனையும் யுதாம் ஸ்ரௌஸ்தி ஔக்ரசேன்ய மன்னனையும் பர்வத, நாரத முனிவர்கள் பட்டாபிஷேகம் செய்வித்தார்கள்.

 

விஸ்வகர்மா பௌவன மன்னனை காஸ்யப மஹரிஷி பட்டாபிஷேகம் செய்வித்தார்.

சுதாஸ பௌஜாவனனை வசிஷ்ட மஹரிஷி பட்டாபிஷேகம் செய்வித்தார்.

மருத்த ஆவிக்ஷித மன்னனை சம்வர்த ஆங்கிரஸ் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

இது போல அஸ்வமேதம் செய்த மன்னர்களின் நீண்ட பட்டியலும் உளது.

ரிக்வேத மன்னர்கள், பிராமண நூல் மன்னர்களை வரிசைப் படுத்தும் ஆராய்ச்சியைத் துவக்க வேண்டும். சிரியா-துருக்கி மிட்டனி (Mitannian Civilization)  சாம்ராஜ்யத்தில் தசரத பிரதர்தன மன்னர்களின் பெயர்கள் கி.மு 1350ல் கிடைப்பதாலும் ரிக்வேத மந்திரத்தில் உள்ள அதே ஆர்டரில் (in the same order as in Rig Veda) இந்திர-மித்ர- வருணன் பெயர்கள் கியூனிFஆர்ம் (Cuneiform inscription) கல்வெட்டில் கிடைப்பதாலும் வேத கால மன்னர்கள் அதற்கும் முற்பட்டவர்களே. பாஞ்சாலம் முதலிய தேசங்கள் குறிப்பிடப்படுவதாலும் மஹாபாரத யுத்தத்தில் சிந்துசமவெளி மன்னர்கள் கலந்து கொண்டது பற்றீய குறிப்பு உளதாலும் ராமாயணத்தில் ராமனின் சகோதர்கள் சிந்து சமவெளி பகுதியை வென்ற குறிப்பு உளதாலும் சரஸ்வதி-சிந்து சமவெளி நாகரீகமும் வேத காலத்துக்குட்பட்டது என்பது எனது துணிபு.

 

ஆனால் கால வரிசைக் கிராமத்தை அறிய மேலும் ஆராய்ச்சி தேவை. தற்போது வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புராண, இதிஹாச, வேத மன்னர் பட்டியலைத் தர வேண்டும். காலக் கணிப்பீட்டை எதிர்கால ஆராய்ச்சியாளருக்கு விட்டுவிடலாம்.

 

சுமேரிய, எகிப்திய, சீன,மாயன் நாகரீகங்களை கி.மு3000ல் துவங்கிவிட்டு அதற்கு முந்தைய பாரத நாகரீகத்தை கி.மு 300ல் துவக்குவது நியாயம் இல்லை. வரலாற்றை மாற்றி எழுதுக!

 

–Subham–

வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு, சிவப்பு! (Post No.4063)

Written by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 22-29
Post No. 4063

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர். பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Image of Varuna (sea)

வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

 

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

 

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.

 

ஆண் முதலில் தோன்றினானா? பெண் முதலில் தோன்றினாளா? என்ற கேள்விக்கு விடை காண முடியாது; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண ஜோடி.

 

என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும்.

Image of Mitra (sun)

பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்:-

 

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;

உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்

கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி

உருவம் எரி கார்மேனி ஒன்று

 

நாமம்/பெயர்– சிவன், நாராயணன்

 

வாகனம் – ரிஷபம், கருடன்

நூல்கள் – ஆகமம், வேதம்

வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்)

தொழில்/கருமம் – அழித்தல், காத்தல்

ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம்

உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு

ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம் மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

 

விஞ்ஞான உண்மைகளை நாம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் அவை என்றும் இருக்கும் அழியாது— நியூடனும் ஐன்ஸ்டைனும் இல்லாவிட்டாலும் அந்த உண்மைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். வேதகால ரிஷிகள் தன் அருட் பார்வையால் மித்ர– வருணனை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் கண்டுபிடிக்காவிடிலும் வேத உண்மைகள் வானில் முழங்கிக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் வேதங்கள் சத்திய மானவை; நித்தியமானவை.

 

—சுபம்–

 

சோம பானம் பருகுவோம் வாரீர்! (Post No.4018)

Written by London Swaminathan
Date: 20 June 2017
Time uploaded in London- 17-14
Post No. 4018
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

 

இந்துக்கள் இழந்த சொத்துகள், பொக்கிஷங்கள் ஏராளம்.

அக்ஷய பாத்திரம் போச்சு;

அமுத சுரபியும் போச்சு;

சங்கப் பலகையைக் காணோம்;

கோஹினூர் பிரிட்டனுக்குப் போச்சு;

மயிலாசனம் ஈரானுக்கு போச்சு;

கொலைகார சியமந்தக மணி அமெரீக்காவுக்குப் போச்சு;

உலவாக் கிழியைக் காணோம்.

 

இதை எல்லாம் விட அரிய, பெரிய பொக்கிஷம் சோம லதை என்பட்டும் அரிய அதிசய மூலிகை.

 

இந்துக்கள் மனது வைத்தால் இப்பொழுதும் அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடலாம்.

 

இதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது இந்துக்களின் கடமை. ஏனெனில் இந்த மூலிகைக்கு அபூர்வ சக்தி உண்டு. இதைப் பற்றிய ரிக் வேதப் பாடல்களின் முக்கிய அம்சங்களை மட்டும் சொல்கிறேன்.

 

உலகின் பழமையான நூல் ரிக் வேதம்; சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்த நூல் 6000 ஆண்டுகளுக்கு (கி.மு.4500) முந்தையது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்ட நட்சத்திரங்களின் நிலையை வைத்து புத்தகம் வெளியிட்டுள்ளனர். விட்னி (Whitney) போன்ற அறிஞர்கள் கி.மு 2000 க்கு முந்தையது என்பர். மாக்ஸ்முல்லர் இந்த வேதத்தை  கி.மு.1200-க்கும், கி.மு 3000 க்கும் இடையே வைப்பர். எப்படியாகிலும் எகிப்திலோ, பாபிலோனியாவிலோ, சீனாவிலோ இதையும் விட பழைய புத்தகம் இல்லை. கிரேக்கத்தில் கி.மு 800 முதல் ஹோமர் முதலானோர் எழுதிய நூல்கள் உண்டு. லத்தீனிலும் தமிழிலும் கி.மு. 200 முதல் நூல்கள் உண்டு.

இவ்வளவு பழமையான ரிக்வேதத்தில் ஒரு மண்டலம் முழுதும் சோமபானம், சோம ரஸம் பற்றிப் பாடியுள்ளனர்.

 

சோமம் என்னும் மூலிகை குறித்து வெளிநாட்டினர் நிறையவே பிதற்றி உள்ளனர். காரணம் என்னவெனில் இதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்திருந்தால் அதைப் பயிரிட்டு, சோம ரசத்தைப் புட்டியில் அடைத்து கோடி கோடியாகச் சம்பாதித்திருப்பர். ஆகையால் காளான் என்பர்; கொடி என்பர்; இல்லை செடி என்பர்; உளறலுக்கு அளவே இல்லை.

 

ஒரு மண்டலம் முழுதும் ரிக் வேதம் பாடியும் , வேதத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் வெள்ளைக்கார்கள் வெட்டி முழக்கியுள்ளனர்.

 

 

இந்தியாவில் இருந்து ஈரானுக்குச் சென்று பார்ஸி மாதத்தை ஸ்தாபித்த ஜொராஸ்தரும் இதைப் புகழ்ந்து பேசியுள்ளார் பழங்கால உலகில் இவ்வளவு கீர்த்தி பெற்ற செடி கொடி வேறு எதுவும் இல்லை. தென் புற ஆந்திரம், தமிழ் நாடு, கீழ்ப்புற கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை இதன் புகழ் பரவியது

 

 

சோம பானத்தின் நன்மைகளை தமிழ்க் கல்வெட்டிலும் காணலாம். ஒருவரை “மனோ சுத்த சோம யாஜி” என்று அழைக்கிறது.

இதன் பொருள் மனதைச் சுத்தப்படுத்தும் சோம யாகம் செய்தவர்.

 

வேதம் சொல்வதாவது

  1. சோம பானம் ஆயுளைக் கூட்டும்

2.மனதைச் சுத்தப்படுத்தும்

3.உற்சாகத்தைத் தரும்

4.இது ஒரு தெய்வீக மூலிகை

 

  1. இதைக் கருடன் கொண்டு வந்து கொடுக்கும்
  2. இது முஜாவத் பர்வதத்தில் விளையும்

 

சோம பானம் பற்றிய 114 துதிகளையும் படித்தவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்; இது போதைப் பொருள் அல்ல என்பது விளங்கும்

 

உலகில் போதைப் பொருளைப் போற்றி ஆயிரம் ஆண்டுகள் குடித்து/ சாப்பிட்டு வளர்ந்த எந்த இனமும் கிடையாது. இது போதை தரும் குடியாக இருந்தால் இந்துக்களும் அவர்கள் பாடிய வேதமும் அழிந்து போய் இருக்கும். மேலும் கள் போன்ற சுரா பானத்தையும் சோம ரசத்தையும் ஒரு பாடல் ஒப்பிட்டுவேறு காட்டுகிறது.

 

((சோம பானமும் சுரா பானமும் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/சோம-பானமும்-சுரா…

 

10 May 2013 – குடிகாரர்கள் அருந்துவது சுரா பானம், அதாவது, கள் மது பான வகைகள். வேதத்தை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டு “அறிஞர்கள்” இவ் …))

 

 

தேனுக்கும் மது என்று பெயர்; மது பானத்துக்கும் மது என்று பெயர்; ஆயினும் இந்தச் சொற்கள் சம்ஸ்கிருத அறிஞர்களையோ தமிழ்   அறிஞர்களையோ குழப்பாது.

“மது நமக்கு, மது நமக்கு

மதுரம் மிக்க தமிழ் நமக்கு”– என்று பாரதியார் பாடிக் கூத்தாடுவார்

 

வெள்ளையர்களோவெனில் பரம்பரைக் குடிகாரர்கள்; போதை மருந்து மன்னர்கள் அடிமைகள்; பாவம் அவர்களுக்கு வேறு பொருள் தெரியவில்லை.அவ்வளவு துதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு அவர்களே வேண்டிய ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்வர்.

சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும். காலையில் சூரியன் உதவுவது போலத் தாவரங்களுக்கு இரவில் சந்திரன் உதவுகிறான் என்று வேதம் பாடுகிறது. இது வெள்ளைக்காரர்களுக்கு விளங்கவில்லை.. ஏன் ஒரே சொல் ஒரு மூலிகையையும்  நிலவையும் குறிக்கிறது என்பது விளங்காததால் அதைத் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் விட்டு விடுவர். நிலவுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பை இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.

 

7.சோம லதை களைப்பை நீக்கும்

8.மனத் தொய்வை நீக்கும்

 

9.இது சாவின்மையை—மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும்

 

இதை மூன்று காலங்களில் மந்திரம் சொல்லிப் பிழிய வேண்டும்

மந்திரம் சொல்லி யாகத்தில் விட வேண்டும்; மந்திரம் சொல்லி சாப்பிடவேண்டும்

 

இதெல்லாம் குடிகாரர்களோ, போதை மருந்து அடிமைகளோ செய்வதில்லை.

10.சோம மந்திரம் ஒன்று சொல்கிறது:

“எல்லா சக்திகளும் அவனுடையதே

நிர்வாணமாக உள்ளோருக்கு ஆடை அணிவிப்பான்

நோயாளிகளைக் குணப்படுத்துவான்

கண் பார்வையற்றோருக்கு கண் பார்வை அளிப்பான்

ஆண்மை குறைந்தோருக்கு ஆண்மை தருவான்

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் முக்தி தருவான்”

 

11.”ஓ, பவமான, அழியாத, என்றுமுள உலகில் என்னை வைப்பாயாக. எந்த இடத்தில் அழியாத ஒளியும், புகழும் உள்ளதோ அந்த இடத்தில் என்னை வைப்பாயக.”

பிரார்த்தனை முழுதும் பாஸிட்டிவ் எண்ணங்களுடன் கூடியது.

 

லண்டனிலும் நியூயார்க்கிலும் ரோடுகளில் புரளும் போதை அடிமைகளும், பெரிய பணக்கார நடிகர் நடிகையர், பாடகர்கள் ஆகீயோரும் மாட மாளிகைகளில் கூட கோபுரங்களில் வாயில் நுரைகக்கி இறக்கும் செய்திகளை நாம் வாரம் தோறும் படிக்கிறோம். வேதத்திலோ, வேறு எந்த இந்து மத நூல்களிலோ இப்படி ஒரு இழிவுதரும் பரிதாபக் காட்சி இல்லை. ஆக வெள்ளையர்கள் சொல்லுவது வெள்ளைப் பொய் என்பதும் நமக்கு விளங்குகிறது.

சோம லதை பற்றி பல “மறை” பொருளுடைய கதைகளும் உள. இதுவும் வெள்ளைகளுக்கு விளங்காமல் பேந்தப் பேந்த முழிக்கின்றன.

பிரம்மாவின் மனைவியான காயத்ரீ ஒரு பறவை வடிவத்தில் சென்று அதைக் கொண்டுவரச் சென்றாள். ஆனால் அதைக் காக்கும் கந்தர்வர்கள் தடுத்து விட்டனர். பின்னர் “வாக்” தேவதை சென்றாள் கந்தர்வர்களுக்கு பெண்கள் மீது ஆசை உண்டென்பதால் தாம் செல்வதாக வாக்கு தேவதை சொன்னாள். நீ எப்படி திரும்பி வருவாய் என்று தேவர்கள் கேட்டதற்கு நீங்கள் அழைத்தால் நான் வருவேன் என்றாள் வாக் (சொல்) தேவதை.

 

இதெல்லாம் அடையா பூர்வ கதைகள்

 

சோமக் கொடியை முதலில் பார்த்தபோது யார் முதலில் சாப்பிடலாம் என்று போட்டி ஏற்பட்டது. ஒரு பந்தயம் வைப்போம்; முதலில் யார் ஓடிச் செல்கிறார்களோ அவருக்கே என்று முடிவு செய்தனர். வாயுதேவன் முதலிலும் இந்திரன் இரண்டாவதாகவும் வந்தான். முதலில் இந்திரன், நிறைய பங்கு கேட்டான். வாயு மூன்றில் இரண்டு பங்கைச் சாப்பிட்டது. இந்திரனுக்கு நாலில் ஒரு பங்கு கிடைத்தது.

 

இப்படிப் பல அடையாள பூர்வ கதைகள்.

எங்கு எங்கு விளங்கவில்லையோ அங்கு எல்லாம் விநோத வியாக்கியானம் செய்வர் வெள்ளையர்.

 

சங்கத் தமிழ் நூல்களில் அமிர்தம் பல இடங்களில் வருகிறது. அருந்ததி, இந்திரன், வருணன் முதலியோரைக் குறிப்பிடுகிறது. ஆனால் சோம லதை பற்றிய பேச்சே இல்லை. ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதற்குப் பின் எழுந்த சங்கத் தமிழ் நூல்களில் சோம லதை பற்றி எதுவும் சொல்லவில்லை. வேள்வி தொடர்பான வேறு பல சொற்கள் காணப்படுகின்றன.

 

இந்து இளைஞர்கள் இந்த சோம லதையைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்; இதன் மூலம் உய்வும் பெறலாம்; பணமும் கிடைக்கும்.

 

–Subham–

வேத காலம் கி.மு.4500 ஏன்? எப்படி? திலகர் விளக்கம் (Post No.4007)

Written by London Swaminathan
Date: 16 June 2017
Time uploaded in London- 15-49
Post No. 4007
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

பால கங்காதர திலகர் பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்; பத்திரிகையாளர்; சம்ஸ்கிருத அறிஞர்; எழுத்தாளர். அவர் 1856-ல் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 1920ல் பம்பாயில் உயிர்நீத்தார். அவர் எழுதிய கீதா ரஹஸ்யம் என்ற நூலும்  ஓரியன் அல்லது வேத காலம் குறித்த ஆராய்ச்சி என்ற (The Orion or Researches into the antiquity of the Vedas) நூலும் மிகவும் புகழ்பெற்ற நூல்கள். அவர் வேத இலக்கியத்தில் குறிப்பிடப்படும் நட்சத்திரங்களின் நிலைகளை ஆராய்ந்து அவை கி.மு.4500-ஐ ஒட்டி எழுதப் பட்டிருக்க வேண்டும் என்கிறார். பெரும்பாலான பாடல்கள் கி,மு 3500-க்கும் 2500-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பட்டிருக்க லாம் என்பது அவரது துணிபு.

அவர் ஏன் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார் என்பதை அவரே தனது வேத கால ஆராய்ச்சிப் புத்தகமான ஓரியனில் (அரையன் என்றும் சொல்லுவர்) சொல்கிறார்

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் திருவாதிரை, மிருகசீர்ஷம் முதலிய நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நூலின் முகவுரையில் திலகர் சொல்லுவதாவது:–

 

 

1893 ஆம் ஆண்டில் அவர் எழுதுகிறார்:- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தேன். அதில் “மாதங்களில் நான் மார்கழி” –  என்று கிருஷ்ணர் சொல்லுவதிலிருந்து வேத காலம் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைக்கலாம் என்று எண்ணினேன். ஆதிகால காலண்டர் வேதங்களில் உள்ளது. அதுபற்றி லண்டன் மஹாநாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அதுவோ கட்டுரை அளவுக்கு நிற்காமல் புத்தகம் அளவுக்கு விரிந்தது.

அங்கே சுருக்கத்தை மட்டும் அனுப்பிவிட்டு புத்தகத்தை சில  மாறுதல்கள், பிற்சேர்க்கைகளுடன் வெளியிடுகிறேன்.

கட்டுரையின் தலைப்பிலிருந்தே நான் எதைப் பற்றி ஆராய்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது கி.மு.2400க்கு முன் வேத காலத்தைத் தள்ளுவதற்கு ஒரு தயக்கம் காணப்படுகிறது. ஆனால் வேதங்களில் குறித்துள்ள விஷயங்கள் இதை கி.மு.4000-க்குப் பின்னர் என்று சொல்லமுடியாத தெளிவான குறிப்புகளாக உள்ளன.

சம இரவு நாள் எனப்படும் Vernal Equinox வெர்னல் எக்வினாக்ஸ் அப்பொழுது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் இருந்தது. இது தொடர்பாக வேத கால இலக்கியத்தில் உள்ள கதைகள், பாடல்களைக் காட்டுகிறேன். அவைகளை அறிவுபூர்வமாக விளக்குகிறேன். இதன் மூலம் வேதங்களில் உள்ள கதைகளுக்கு விளக்கமும் கிடைக்கிறது. மேலும் ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகளில் உள்ள புராணக் கதைகளுடன் இது ஒத்து இருக்கிறது இது இறுதியான ஒரு முடிவு என்று சொல்ல முடியாது. ஆனால் நான் புராணக் கதைகளையோ, சொல் ஆராய்ச்சி அடிப்படை யிலோ  என் வாதங்களை எழுதவில்லை . ஆகையால் அக்கதைகளை தவறு என்று காட்டினாலும் வேதகால இலக்கியம் முழுதும் சிதறிக்கிடக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது  வாதங்களைப் பாதிக்காது.

 

என்னால் முடிந்த அளவுக்கு புரியாத வானியல் (Technical) பதங்களைத் தவிர்த்துள்ளேன். ஆயினும் காலக் கணக்கீடு பற்றிய இந்திய முறைகளை அறியாதோருக்கு, இது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். என்னுடைய வாதங்களை ஏற்று,  ஒருவேளை இரண்டாவது பதிப்பு தேவைப்பட்டால் அப்பொழுது இந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கி எழுதுவேன்.

 

நான் வானியல் தொடர்பான விஷயங்களையே எழுதினாலும் பெண்ட்லியின் (Bentley) புத்தகத்தைப் பார்த்தவர்களுக்கு இது வான சாத்திரம் கூட அல்ல, சுலபமான ஒரு கட்டுரை என்று புரியும்.

ரிக்வேத காலத்தை நான் மிகவும் பழைய காலத்துக்குத் தள்ளுகிறேனோ என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வரலாற்று அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் உண்மையைக் கண்டுபிடிப்பதே நோக்கம் ஆதலால் அத்தகைய அச்சங்கள் தேவையற்றது.

 

ஏற்கனவே கோல்ப்ரூக், பெண்ட்லி (Colebrook, Bentley and others) முதலியோர் போன வழியில்தான் நானும் போகிறேன். ஆயினும் நான் சொல்லும் சம்ஸ்கிருத விளக்கங்கள் சரியா இல்லையா என்பதை சம்ஸ்கிருத அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.

 

இன்னொரு விஷயம், இந்தப் புத்தத்தில் சேர்க்கப்படவில்லை. ராமனின் ஜாதகம், மஹாபாரதப் போர்க்கால கிரஹ நிலைகள் ஆகியவற்றைக் கொண்டு சிலர் ராமாயணம், மஹாபாரதம் ஆகியன கி.மு.5000 அல்லது 6000 என்று கணித்து, வேதங்கள் அதற்கும் முந்தையவை என்று வாதிடுகின்றனர். அதே குறிப்புகளை வைத்து ராமரின் ஜனனம் கி.மு. 961 என்று பெண்ட்லி காட்டுவதால் இந்த வகையான கணக்குகளும் அறிக்கைகளும் எவ்வளவு லேசானவை என்பதை அறியலாம். இப்போது நம்மியையே உள்ள முரணான விஷயங்களைக் கொண்ட புராணங்கள் முந்தைய பழைய வடிவத்தில் நம் கைகளில் தவழாமல் இருக்கலாம். மேலும் மஹாபரத போரின்  போதான கிரஹ நிலைகள் குழப்பமாக உள்ளன. நல்ல அல்ல கெட்ட கிரஹ நிலைகளைக் காட்ட அவர்கள் இப்படிச் சொல்லி இருக்கலாம்.

 

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்து காத்திருந்ததை வைத்து அவர் கிருத்திகை நட்சத்திர காலத்தில் (Krithika Period)  வாழ்ந்தது தெரிகிறது. ஆனால் இப்போது நம்மிடமுள்ள பாரதம் போர் முடிந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டதாகும்

 

இதற்குப் பின்னர் திலகர் மாக்ஸ்முல்லர் முதலியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஒரு சம்ஸ்கிருதப் பழமொழியைத் தருகிறார் “ஒரு தங்கம் தூயதா இல்லையா என்பதை நெருப்பில் புடமிட்டுப் பார்த்தால் தான் தெரியும்”. இந்த வாசத்துடன் என் ஆராய்ச்சிப் புத்தக த்தை உங்கள் கைகளில் தருகிறேன். என்னுடைய மற்ற பணிகளால் (சுதந்திரப் போராட்டம்) எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆயினும் நியாயமான ஓரச் சார்பில்லாத ஒரு விவாதத்துக்கு என் ஆய்வுக்கட்டுரை வழி செய்தால் அதுவே எனக்கு திருப்தி தரும். நம்முடைய நாகரீகத்தின் மிகப் பழைய பதிவுகள் நம்முடைய புனித நூலகளில் உள்ளன. அவற்றின் பழமையை ஆராய இது துணை புரியட்டும்.

 

புனா, அக்டோபர் 1893  பி.ஜி. திலக்

 

–Subham–

 

 

‘தஸ்யூ’ என்றால் திருடன்: காளிதாசன் (Post No.3983)

Research article Written by London Swaminathan

 

Date: 8 June 2017

 

Time uploaded in London- 21-14

 

Post No. 3983

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ரிக் வேதத்தில் ‘தஸ்யூ’ (Dasyu) என்ற சொல் பல இடங்களில் வருகிறது; அதன் பொருள் குற்றம் இழைத்தவன், திருடன் , கொள்ளையன் என்பதாகும். ஆனால் இந்து மதத்தை அழித்து, இந்தியாவைப் பிளக்க வேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அந்தச் சொல்லுக்கு பழங்குடி மக்களாக ‘இருக்கலாம்’ அல்லது திராவிடர்களாக ‘இருக்கலாம்’ அல்லது ஆப்கனிஸ்தான்/பாகிஸ்தான் பகுதியில் வாழும் பிரஹுயி மொழி பேசுவோராக ‘இருக்கலாம்’ என்றெல்லாம் கதை கட்டிவிட்டனர். இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதை ரிக் வேதத்துக்குப் பின் எழுந்த ஐதரேய பிராமணம் என்னும் நூலும், நமக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் பறை அறிவித்துள்ளனர்.

 

உலகிலேயே அதிகம் சண்டை போட்டவர்கள் தமிழர்கள்தான். உலக வரலாற்றைப் படித்தோருக்குத் தெரியும் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் போரிட்ட இனம் உலகில் தமிழ் இனம் மட்டுமே. சங்க இலக்கியப் பாடல்களில் இப்படி சண்டை போட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வீரர்கள் என்றும் புலவர்கள் போற்றியுள்ளனர். ஆனால் அந்த மூன்று வேந்தர்களையும் யாரும் ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று சொல்லுவதில்லை. இவ்வளவுக்கும் அவர்களிடையே ஜன்மப் பகை! ‘சூ’ என்றால் சண்டைக்கு வருவர். எதிரி மன்னர்களின் மனைவியரின் கூந்தலைக் கத்தரித்து கயிறு திரித்து வெற்றிபெற்ற மன்னரின் ரதத்தை இழுத்துவந்ததாகவும், அவனது அரண்மனைகளைத் தரைமட்டமாக்கி கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது அவமானப் படுத்தியதாகவும் புறநானூற்றுப் புலவர் பாடுவர். அப்படிப் பாடிய போதும் அவர்களை

எவரும் வேற்றினமாகப் பார்க்கவில்லை.

 

ஆனால் இந்துமதத்தில் விஷ விதைகளை ஊன்ற வந்த மாக்ஸ்முல்லர்களும் கால்டுவெல்களும் சாதாரண ஒரு சொல்லுக்குப் பயங்கரப் பொருள் கற்பித்தனர்.

உலகிலுள்ள எல்லா சமய நூல்களிலும் பழைய இலக்கியங்களிலும் அதே இனத்தைச் சேர்ந்த அல்லது மாற்று இனத்தைச் சேர்ந்த எதிரிகள் வருணிக்கப்படுகின்றனர். இது தவிர திருடர், கொள்ளையர், குற்றவாளிகள் ஆகீயோரும் வருணிக்கப்படுகின்றனர். அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணன் பல இடங்களில் ‘பரந்தப:’ (எதிரிகளை தஹிக்கவைப்பவனே) என்பார் பகவத் கீதையில்; இது போல தமிழ் இலக்கியத்தில் பாலைநில மறவர்கள் எல்லோரையும் கொள் ளையடித்து கொன்ற செய்தியும் உள்ளது ஒன்றுமில்லாத ஒரு பிராமணனைக் கொன்றுவிட்டு ஐயோ இவனைக் கொன்றுவிட்டோமே என்று கையை நொடித்துக் கொண்ட பாடலும் சங்க இலக்கியத்தில் உள்ளது; ஆனால் அவர்களை

வேறு இனமாக நாம் பார்க்கவில்லை. இது போலவே ரிக்வேத காலத்தில் குற்றமிழைத்தவர்களை தஸ்யூக்கள் என்றனர்

 

காளிதாசனில் ஒரு காட்சி

காளிதாசன் எழுதிய சாகுந்தலம் நாடகம் உலகம் முழுதும் பிரசித்தம்; பல ஐரோப்பிய மொழிகளில் நீண்ட காலத்துக்கு முன்னரே மொழி பெயர்க்கப்பட்ட நூல்; 2000 ஆண்டுப் பழமை வாய்ந்தது; அதில் ஒரு காட்சி.

 

ஐந்தாம் காட்சி 21ஆவது ஸ்லோகம்

 

கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை; அவள் உலகப் பேரழகி; கானக ரோஜா; கண்வர், ஆஸ்ரம்த்தில் இல்லாத போது துஷ்யந்தன் என்ற மன்னன் அவளை ரஹசியமாகக் கல்யாணம் செய்துகொண்டு கர்ப்பவதி ஆக்கிவிடுகிறான்; அதுமட்டுமல்ல அவளைக் கானகத்திலேயே விட்டு விடுகிறான்; செய்தி அறிந்த கண்வ மஹரிஷி, உரிய காலத்தில் ஒரு சிஷ்யன் மூலமாக துஷ்யந்தனிடம் அனுப்புகிறார். மன்னனோ ஒன்றும் அறியாத அப்பாவி போல நடிக்கிறான். அப்போது கோபமுற்ற கண்வரின் சீடன, ‘ஐயன்மீர்; திருடன் (தஸ்யூ) கொள்ளையிட்ட சொத்தை அவனிடமே திருப்பித் தரவந்துள்ளேன்’ என்று கடிந்துரைக்கிறான். இங்கே திருடனுக்கு காளிதாசன் பயன்படுத்திய சொல் தஸ்யூ. துஷ்யந்தன் திருட்டுத்தனமாக அவளை அனுபவித்து விட்டுப் போனதால் திருடன் கொள்ளையிட்ட சொத்து என்று சகுந்தலா வருணிக்கப் படுகிறாள்; ஆகவே தஸ்யூ என்பதன் உண்மைப் பொருள் திருடன்.

 

ரிக்வேதத்தில் தஸ்யூ

ரிக் வேதத்தில் தஸ்யூவைக் குறிப்பிடும் இடங்களில், அநாஸ (மூக்கு அற்றவர்), அவிரத (உரிய கருமங்களைச் செய்யாதோர்),அதேவ (கடவுளை வணங்காதோர்), அயஜ்ய ( யாகம் செய்யாதோர்) ம்ருதவாக் (கடுஞ் சொல்லுடையோர்) என்றெல்லாம் வருணிக்கப்பட்டுள்ளனர்.

 

திராவிடர்களை மூக்கு இல்லாதவர்கள் என்று எவரும் சொல்லமாட்டார்கள்; மஞ்சள் நிறத் தோலுடைய மங்கோலாய்ட் (Mongoloid) இனத்தினர் (ஜப்பான், சீனா) சப்பை மூக்குடையோர். ஜப்பானியர்களுக்கு மூக்கு இருப்பதே  தெரியாது; மேலும் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு, சுருட்டை முடி, முட்டைக் கண்கள் என்றெல்லாம் வெள்ளையர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே எதிரிகளைத் திட்டும்போது இப்படிப்பட்ட சொற்கள் வருவது இயல்பே.

 

உண்மையில் தமிழ் அரசர்களை காவல் காத்த யவனர்களைக்கூட ‘கடுஞ்ச் சொல்லுடையோர்’ என்று தமிழ் இலக்கியம் செப்பும்; அது போல இடையர்களைக் கல்லா இடையர் என்று தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர்.

 

ஒரு நல்ல சொல்லும் காலப் போக்கில் அவப் பெயர் பெறுவதும் , ஒரு கெட்ட சொல் காலப் போக்கில் நல்ல பொருள் பெறுவதும் மொழி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயமே.

 

 

பறை அறிவிக்கும் அரசு அதிகாரி= பறையன். ஆனால் காலப் போக்கில் தீண்டத்தகாதவன் என்று பொருள் பெற்றது. இன்றும் அதே அர்தத்தில் உலகம் முழுதும் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும், டெலிவிஷன் ஸ்டேஷன்களிலும் பயன்படுத்துகின்றனர். வேண்டாத நாடுகளையும் தலைவர்களையும் இன்டெர்நேஷனல் பறையா (International Pariah) என்று ஓலமிடுகின்றனர். ஆக ஆங்கில அகராதியில் இடம்பெற்ற தமிழ் சொல்லுக்கு இவ்வளவு துஷ்பிரயோகம்!

 

பழைய காலத்தில் கழகம் என்றால் சூதாடும் இடம்; இன்று பல அரசியல் கட்சிகள் கழகம் என்று பெயர் வைதுக்கொண்டுள்ளன. மேலே குறிப்பிட்ட தஸ்யூவும் இப்படி பொருள் மாறி வந்து திருடன் என்று மென்மைப் பொருள் பெற்று இருக்கலாம். பூர்வ காலத்தில் அது எதிரி, குற்றவாளி, கெட்டவன் என்ற பொருளுடன் இருந்திருக்கலாம்.

 

இந்திரனை வருணிக்கும் ரிக் வேதப் பாடலும் அவனை தஸ்யூவைக் கொல்பவன் என்று சொல்கிறதே தவிர தாசர்களைக் கொல்பவன் என்று சொல்லவில்லை. ஆக தஸ்யூ என்பது கடுமையான குற்றம் இழைத்தோர் ஆவர்.  அதில் இனம் ஏதும் இல்லை. இந்திரன் கொன்ற 30 அரக்கர்களில் மூன்றே பேருக்குத்தான் தஸ்யூ என்ற சொல் சேர்க்கப் பட்டுள்ளது. ஆகவே எல்லோரும்  இப்படி அழைக்கப்படவில்லை. மேலும் வேதங்களில் தென்னகம் குறிப்பிடப்படவில்லை.; வடக்கில் திராவிடர்கள் இருந்ததும் ஊகமே.

 

–Subham–

 

 

 

இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2 (Post No.3207)

chidambaram-1

Picture: சிதம்பரம் தீட்சிதர்

Written by London Swaminathan

 

Date: 1 October 2016

 

Time uploaded in London: 10-12 AM

 

Post No.3207

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டு இரண்டாம் பகுதியைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்.

dikshitar-priests-festival-ceremony

Picture: சிதம்பரம் தீட்சிதர்கள்

கேசம்=முடி

 

கேச என்னும் சொல் மயிர் என்பதைக் குறிக்க அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் ‘கேச’ என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை  அதர்வண வேதத்தில் உள்ளது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயிலப்பட்ட சொல் இன்றும் அதே பொருளில் நம்மிடையே புழங்குவது — தமிழ் நட்டிலும் — புழங்குவது குறிப்பிடத்தக்கது.

 

 

க்ஷுரா= Razor

 

சவரம் செய்தல் என்பது பிளேட் என்று பொருள்படும் க்ஷுரா’ (சவரக் கத்தி) என்ற சொல்லிலிருந்தே வந்தது. இது ரிக் வேதத்தில் மூன்று இடங்களில் வருகிறது. ஆனால் முயல் விழுங்கிய ‘க்சுரா’ என்று ஒரு மந்திரத்தில் வருவதால் அந்த இடத்தில் சவரக் கத்தி என்பது பொருத்தமாக இல்லை.

 

வேதத்துக்கு சங்க கால தமிழர்கள் “மறை” என்ற அழகான சொல்லை தெரிவு செய்துள்ளனர். வேத காலப் புலவர்கள் எதையும் நேரடியாகச் சொல்லாமல் மறை பொருளில் சொல்லுவதால் தமிழன் இச்சொல்லைக் கண்டுபிடித்து வைத்தான். ஆக முயல் விழுங்கிய பிளேடு என்பது ஏதோ ரகசியப் பொருளுடைத்து என்றே நான் கருதுகிறேன்.

 

சங்கத் தமிழ் இலக்கியம் மயிர்குறை கருவி (Scisors or Shaving Razor) என்ற சொல்லைப் பயிலுகிறது (பொரு.29, பலைக் கலி.31,35)

 

தட்சிண கபர்தா Rig Veda (7-33-1) (வலது பக்க குடுமி)

மலையாள தேசத்தில் நம்பூதிரி பிராமணர்களும், சோழ தேசத்தில் முன் குடுமிச் சோழியர், சிதம்பரம் தீட்சிதர்களும் தலை முடி வைத்திருக்கும் தனிப் பாணியை (Style) இன்றும் காணலாம். இது வேத காலத்திலேயே துவங்கியதற்கு தட்சிணதாஸ் கபர்தா என்ற சொல் சான்று தரும். ஒரு வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பது மிகவும் அதிசயமானது. இது தென்னாட்டு பார்ப்பனர்களின் பழமையையும் காட்டும்.

 

nampudiri

படம்: நம்பூதிரி பிராமணர்

பலித (நரைமுடி)

ரிக்வேத (1-144-4, 1-164-1, 3-55.9) காலம் முதல் இச்சொல் பயிலப்படுகிறது. ஜமதக்னி முனிவரின் வழிவந்தோர் நரை அடைவதில்லை என்றும் பாரத்வாஜர் தனது கிழப்பருவத்தில் ஒல்லியாக ஒடிந்து, நரை முடியுடன் காணப்பட்டதாகவும்  வேதங்கள் வருணிக்கின்றன.

 

சதபத பிராமனணம் முதலில் தலிலையில் தோன்றும் நரை முடி பிறகு உடலிலும் கைகளிலும் பரவுவதை பேசும்

 

இந்த நரை முடி பற்றிய விஷயம் புறநானூற்றிலுள்ள (பாடல் 191) புகழ்பெற்ற பிசிராந்தையாரின் பாடலை நினைவு படுத்தும்.

 

ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறாரார்:–

 

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 

பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

holy-man-of-india

–subham–

 

 

 

வேதத்தில் சுவையான குதிரைக் கதை! (Post No.3134)

horsehead

Translated by London swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 9-36 AM

 

 

Post No.3134

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதம் என்பதற்கு மறை என்று பொருள்; அதை வெளிநாட்டுக்காரர்கள் -மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்திருக்கிறரார்கள். இவர்களில் 5 வகை உண்டு:–

 

1.மதத்தைப் பரப்ப வந்தவர்கள்

  1. நாடு பிடிக்க வந்தவர்கள்

3.குறைகூறுதல் மூலம் பெயர் பெற விரும்புவோர்

  1. அறியாமையில் ஆராய்ச்சி செய்யும் அரை வேக்காடுகள்

5.சர்வதேச நிறுவனங்கள், புத்தகம் வெளியிடும் கம்பெனிகளிடம் பணம் வாங்குவோர்; அதாவது கூலிக்கு மாரடிப்போர்.

 

ஆகையால் இவர்கள் எழுதிய புத்தகங்களை முதலில் படிக்காதீர்கள். இந்தியர்கள் எழுதிய நூல்களை — திராவிட/மார்கஸீய பேத்தல்  — இல்லாதோர் நூல்களை முதலில் பயிலுங்கள்.

 

பகவத் கீதையையே படிக்காமல், எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்கத் துவங்காதீர்கள்!

 

ராமாயணத்தையே படிக்காமல் வாலியை ராமன் கொன்றது சரியா? – என்று பட்டிமன்றம் பேசாதீர்கள்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்தையே கற்காமல் தமிழின் பெருமையை, தமிழர்தம் பெருமையைப் பேசாதீர்கள்!

 

எந்த ஒரு விஷயத்தையும் அதன் முழுப் பொருளில், அது வந்த கால கட்டத்தில், அதே காலத்தில் மற்றவர் இருந்த நிலையில் வைத்து எடை போட வேண்டும்.

 

polands

இதோ மறை பொருள் உடைய ஒரு வேதக் கதை:–

சுபாஷ் கக் என்பவர் ஆங்கிலத்தில் அஸ்வமேத யக்ஞம் பற்றி எழுதிய புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்த குதிரைக் கதை:–

 

அதர்வணனின் மகன் தத்யாங்க் (பிற்கால இலக்கியத்தில் ததீசி). அவரைப் பற்றி ரிக் வேதத்தில் 1-117-22, 1-84 துதிகளில் செய்திகள் உள.

அவருக்கு யாகத்தின் ரஹசியம்- உட்பொருள்– மறை பொருள் தெரியும்.

 

சதபதப் பிராமன்ணத்தில் (14-1-18/24) இந்தக் கதை வருகிறது:-

 

“தத்யாங்கனுக்கு ஒரு ரகசியம் தெரியும் யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, எப்படி அதன் மூலம் யாகம் நிறைவு பெறும் – என்பது தெரியும்’

 

இந்திரன் சொன்னான்: “இந்த ரஹசியத்தை நீ யாருக்காவது சொன்னால் உன் தலையை வெட்டி விடுவேன்”  என்று

 

அஸ்வினி தேவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

 

அவர்கள் தத்யாங்கனிடம் சென்று, எங்களை மாணவர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் -என்றனர்

 

அவர் கேட்டார், எதைக் கற்க வந்திருக்கிறீர்கள்?

 

அஸ்வினி தேவர்கள் இருவரும் சொன்னார்கள்:- அதுதான்; யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, அதன் மூலம் யாகம் எப்படி நிறைவு பெறும்– என்ற ரஹசியம்.

 

தத்யாங்கன் சொன்னார்: இதை நீ வேறு யாருக்காவது கற்பித்தால் உன் தலையை வெட்டிவிடுவேன் என்று இந்திரன் சொன்னான் ; எனக்கு பயமாக இருக்கிறது. என் தலை போய்விடும்; ஆகையால உங்களை நான் மாணவர்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது.

 

அஸ்வினிதேவர்கள் சொன்னார்கள்: நாங்கள் இருவரும் உங்களைக் காப்பாற்றுவோம்

எப்படிக் காப்பாற்றுவீர்கள்?

எங்களை நீங்கள் மாணவர்களாக ஏற்றுக் கொண்டவுடன் உங்கள் தலையை வெட்டி ஒளித்து வைத்து விடுவோம். ஒரு குதிரையின் தலையைக் கொண்டுவந்து பொருத்துவோம்; ஆதன் மூலம் கற்பியுங்கள்; இந்திரன் வந்து குதிரைத் தலையை வெட்டுவான். பின்னர் உங்களுடைய பழைய தலையை எடுத்து வந்து பொருத்தி விடுவோம்”;அதை ஏற்று தத்யாங்கன் அவர்கள் இருவருக்கும் கற்பித்தார்.

அவரும் கற்பித்தார்; உண்மைத் தலை போய் குதிரைத் தலை வந்தது; இந்திரன் வந்தான்; தலையை வெட்டினான்; பின்னர் நிஜ தலையை தத்யாங்கனுக்கு அஸ்வினி தேவர்கள் பொருத்தினர்.

 

island-horse

தத்யாங்கன் சொல்கிறார் (சதபத பிராமன்ணம் 6-4-2-3:

 

யாகத்தின் முக்கிய வாஹனம் “பேச்சு”; சொற்களுக்குதான் மாற்றம் செய்யும் சக்தி உண்டு; அது பேசுபவரையும் மாற்றிவிடும்; ஒருவர் பேசியவுடன் அதே ஆளாக இருப்பதில்லை.; யாகமானது ஒருவரின் தலையை இழக்கச் செய்துவிடும்; குதிரைத்தலை என்பது இந்த அபூர்வ ஞானத்தின் ஆதாரம் ஆகும்.

 

அதாவது குதிரைத்தலை என்பது அடையாளம்தான். குதிரைத் தலை மாறி உண்மைத் தலை வரும் என்பது பேசுபவர் , மற்றவர்களை மாற்றுவதோடு தானும் மாறிவிடுவார் என்பதாகும். யாகம் என்பது ஒருவர் “தலையை” இழக்கச் செய்துவிடும்.

 

–சுபம்–

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722)

adisesha

 

tsunami snake

 

sesha, pullaboothangudi

Written by london swaminathan

Date: 14 April, 2016

 

Post No. 2722

 

Time uploaded in London :– காலை 6-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ செய்துவிட்டு அடுத்த நிமிடம் ஒரு சுனாமி படத்தைப் பார்த்தவுடன் அசந்தே போய்விட்டேன். ஏனெனில் அதே நாக வாஹனம் அந்த ஆழிப் பேரலைகளில் இருந்தது. இதை கண்கள் காணும் மாயத்தோற்றம் – ஆப்டிகல் இல்லூஷன் OPTICAL ILLUSION – என்பதா அல்லது இந்து மதம் கூறும் விஞ்ஞான உண்மை என்பதா என்பதை கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

15 நாடுகளில் 2004-ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2011 ஆம் ஆண்டிலும் சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தாக்கிப் பல லட்சம் மக்கள் உயிரிழந்தை நாம் அறிவோம். இதில் வரும் ராட்சதப் பேரலைகள் பாம்பு உருவத்தில் வருகின்றன. ஆயிரம் தலையுடைய ஆதி சேஷனின் படுக்கையில், பால் கடலில் பள்ளி கொண்ட பரமனை இந்து மத நூல்கள் துதி பாடுகின்றன. இந்த ஆதி சேஷன் ஒரு கல்பத்தின் முடிவில் விஷம் கக்கி உலகை அழிப்பான் என்று நமது புராணங்கள் சொல்லும். அது மட்டுமல்ல பாதாள உலகத்தின் அரசன் நாக தேவன் என்றும் நமது நூல்கள் செப்பும். (கல்பம் என்பது ஒரு பிரம்மாவின் ஆயுள்).

Wave

உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆஸ்திரேலிய வானவில் பாம்பு—ரெயின்போ ஸ்னேக்- பற்றி எனது ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்தியாவில் அர்ஜுனனும் கிருஷ்ணனுன் காண்டவ வனத்தை (கோண்ட்வானா லாண்ட்) எரித்து வெளியேற்றிய மய தானவன் துவக்கிய கலாசாரம்தான் தென் அமெரிக்க மாயன் பண்பாடு என்றும் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். பைபிளில் பாம்பு உள்ளது; ரிக் வேதத்தில் பாம்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள பாம்பு ராணியைத் தான் மினோவன், சிந்து சமவெளிகளில் அப்படியே படமாகக் காட்டியுள்ளனர் என்று இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

காண்க: (Please read my post Serpent Queen: Indus Valley to Sabarimalai – posted on 17th June 2012)

 

velli naga asana

 

wavesp57arch

 

யுக முடிவில் ஆதி சேஷன் விஷம் கக்கி உலகம் அழியும் என்பதை, சுனாமி பேரலைகள் கக்கி உலகம் அழியும் என்று பொருள் கொண்டு சுனாமிப் படங்களைப் பார்த்தால் இன்னும் நன்கு விளங்கும்.

 

ஏனெனில் உலகில் இது வரை எந்த விஞ்ஞானியும், உயிரியல் அறிஞனும் பல தலைகளைக் கொண்ட பாம்புகளைக் கண்டதில்லை. மிக மிக அதிசயமாக இரண்டுதலை ஒட்டிப் பிறந்த பாம்புகள் மட்டுமே உண்டு. அவையும் உடனே இறந்து விடும். இது மனிதர்களுக்குப் பிறக்கும் சயாமிய இரட்டைக் குழந்தை வகை Siamese Twins. பேஸ்புக், பத்திரிக்கை முதலியவற்றில் நாம் காணும் பல தலை பாம்புகள் வெறும் ரப்பர் பொம்மைகள், கம்ப்யூட்டர் ஏமாற்று வித்தைகள் என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர். பின்னர் ஏன் இந்துமத நூல்கள் ஆயிரம்தலை ஆதிசேடன் பற்றிப் பகருகின்றன? என்னை (ஏனெனில்), சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

 

உலகில் நாகர் பற்றிப் பகராத பண்பாடு இல்லை என்று முன்னரே சொன்னேன். ஆயினும் ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்! ஆயிரம் தலையுடைய வகனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

 

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’ பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. எக்காலத்திலும் இப்படிப்பட்ட பாம்பு இல்லாததால், நமது நூல்களை நாம் விஞ்ஞான முறையில் அனுகினால் அது சுனாமி பாம்பு அலைகள்தான் என்பது விளங்கும். அகத்தியர் கடல் நீரைக் குடித்தது, பகீரதன் கங்கையை திசை திருப்பிவிட்டது முதலிய பல ‘எஞ்சினீயரிங்’ பணிகளையும் மனதிற்கொண்டு பார்த்தால் நமது “மறை”மொழி விளங்கும்

nagadevata,tamil uma,fb

 

tsunami snake2

(எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் புராதன பாரதத்தின் எஞ்ஜினீயர்கள் – அகத்தியன், பகீரதன், பலராமன் – பற்றிப் படிக்கவும்).

–சுபம்–