கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1369; தேதி அக்டோபர் 25, 2014.
( கேள்விகள் –சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-தொல்காப்பியத்திலிருந்து )
1.ஒல்காப் புகழ் தொல்காப்பியனாரே! தமிழனுக்கு கடவுள் யார்?
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)
2.துவக்கமே சுபமாக இருக்கிறது. விஷ்ணு, முருகன், இந்திரன், வருணன் நம் கடவுள்கள்.— வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்று பனம் பாரனார் கூறுகிறாரே?
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழா அமை இசைக்கும் சொல்லே (398)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி (சூத்திரம் 400)
3.ஆம், புரிகிறது. செந்தமிழ் நிலத்தில் பேசும் இயற்சொற்கள் மாறாது– பக்கத்திலுள்ள 12 பகுதிகளிலிருந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள். இது தவிர திரி சொல், வட சொல் ஆகியனவும் உண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, மிருகம், மரம், பறவை, முரசு, தொழில், இசை ஆகியவும் உண்டா?
தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (பொருள் 1-18)
4.சரி. அதைப் பட்டியலில் பார்த்துக்கொள்கிறேன். மனிதர்களுக்கு ஆறு அறிவு என்றால் மற்ற உயிரகளுக்கு எவ்வளவு அறிவு?
புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
5.அது சரி, 1610 சூத்திரங்களில் 68 இடங்களில் ‘’என்மனார்’’ என்றும், 15 இடங்களில் ‘’வரையார்’’ என்றும் இன்னும் பல இடங்களில் ‘’என்ப, மொழிப’’ என்றும் கூறுகிறீர். இதைப் பார்த்தால் உமக்கு முன்னரே நிறைய விதிகள் இருந்து நீவீர் அவைகளத் தொகுத்தது போல் அல்லவோ இருக்கிறது?
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (சொல் 402)
6.யான் பெற்ற இன்பம் இவ் வையகம் என்றும் ‘’லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து’’ — என்றும் பெரியோர்கள் கூறுகிறார்களே. நீங்கள். . . . ..
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்
7.உங்களுடைய உண்மைப்பெயர் த்ருணதூமாக்கினி என்று சிலர் சொல்லுகிறார்கள். நீங்கள் வேதம் கற்ற பார்ப்பனரா?
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற்கோடல் அந்தணர் மறைத்தே
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
8.கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழரும் உங்கள் நூலைப் புகழ்கிறார்கள். நீரோ ‘’தர்மார்த்த காமம்’’ என்பதையும் கடவுளையும் பற்றிப் பேசுகிறீர். உண்மை என்ன?
கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை
10.அட, நீரும் வள்ளுவனைப் போல அறம், பொருள் இன்பம் (தர்ம அர்த்த காம) பற்றிப் பேசிவிட்டீர் — பெண்கள் வாழ்க — என்பது உமது கொள்கையாமே?
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான
11.தமிழில் மாற்றங்களை ஏற்க வேண்டுமா?
உணரக் கூறிய புணரியல் மருங்கிற்
கண்டு செயற்குரியவை கண்ணினர் கொளலே
12.சரி. நீர் மாற்றங்களை ஆதரிப்பதற்கு நன்றி. ‘’பசுப் பாதுகாப்பு இயக்கம்’’ பற்றியும் நீர் பேசினீராமே?
வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்தோம்பல் மேவற்றாகும் (1003)
13.போர் வேண்டாம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். உமது கருத்து என்னவோ?
இரு பெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகை நிலை
14.நன்றி. நீரும் போரை எதிர்ப்பதற்கு நன்றி. வள்ளுவன் சுருங்கs சொல்லி விளங்கி வைத்தான். நீர் எதிர்பார்ப்பது என்ன?
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே
15.அற்புத மாகச் சொன்னீர்கள். கண்ணாடியில் பார்ப்பது போல தெளிவு வேண்டும். அடடா, அருமை, அருமை. நன்றி! தொல்காப்பியனாரே!
முந்தைய 60 வினாடி பேட்டிகள்
இவைகளையும் படிக்க வேண்டுகிறேன்
1.அப்பருடன் 60 வினாடி பேட்டி
2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி
3.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி
4.இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி
5.கம்பனுடன் 60 வினாடி பேட்டி
6.கண்ணதாசனுடன் 60 வினாடி பேட்டி
7.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி
8.சாக்ரடஸுசுடன் 60 வினாடி பேட்டி
9.சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி
10..சுந்தரருடன் 60 வினாடி பேட்டி
11.தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி
12.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி
12.திருஞானசம்பந்தருடன் 60 வினாடி பேட்டி
13.திருமூலருடன் 60 வினாடி பேட்டி
14.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி
15.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
16.பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி
17.மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி
18.வள்ளுவருடன் 60 வினாடி பேட்டி
19.ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி
20.சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி
21.தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி
22.திரிகூடராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி
English 60 second Interviews:
60 second Interview with Swami Vivekananda
60 second Interview with Socrates
60 second Interview with Adi Shankara
60 second Interview with Sri Sathya Sai Baba
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.