தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி

tolkappian-katturai

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1369; தேதி அக்டோபர் 25, 2014.

( கேள்விகள் –சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-தொல்காப்பியத்திலிருந்து )
1.ஒல்காப் புகழ் தொல்காப்பியனாரே! தமிழனுக்கு கடவுள் யார்?
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.துவக்கமே சுபமாக இருக்கிறது. விஷ்ணு, முருகன், இந்திரன், வருணன் நம் கடவுள்கள்.— வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்று பனம் பாரனார் கூறுகிறாரே?

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழா அமை இசைக்கும் சொல்லே (398)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி (சூத்திரம் 400)

3.ஆம், புரிகிறது. செந்தமிழ் நிலத்தில் பேசும் இயற்சொற்கள் மாறாது– பக்கத்திலுள்ள 12 பகுதிகளிலிருந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள். இது தவிர திரி சொல், வட சொல் ஆகியனவும் உண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, மிருகம், மரம், பறவை, முரசு, தொழில், இசை ஆகியவும் உண்டா?

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (பொருள் 1-18)

4.சரி. அதைப் பட்டியலில் பார்த்துக்கொள்கிறேன். மனிதர்களுக்கு ஆறு அறிவு என்றால் மற்ற உயிரகளுக்கு எவ்வளவு அறிவு?

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

15FR-_TOLKAPPIYAM__1120361e

5.அது சரி, 1610 சூத்திரங்களில் 68 இடங்களில் ‘’என்மனார்’’ என்றும், 15 இடங்களில் ‘’வரையார்’’ என்றும் இன்னும் பல இடங்களில் ‘’என்ப, மொழிப’’ என்றும் கூறுகிறீர். இதைப் பார்த்தால் உமக்கு முன்னரே நிறைய விதிகள் இருந்து நீவீர் அவைகளத் தொகுத்தது போல் அல்லவோ இருக்கிறது?
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (சொல் 402)

6.யான் பெற்ற இன்பம் இவ் வையகம் என்றும் ‘’லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து’’ — என்றும் பெரியோர்கள் கூறுகிறார்களே. நீங்கள். . . . ..

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்

7.உங்களுடைய உண்மைப்பெயர் த்ருணதூமாக்கினி என்று சிலர் சொல்லுகிறார்கள். நீங்கள் வேதம் கற்ற பார்ப்பனரா?
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற்கோடல் அந்தணர் மறைத்தே
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென

8.கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழரும் உங்கள் நூலைப் புகழ்கிறார்கள். நீரோ ‘’தர்மார்த்த காமம்’’ என்பதையும் கடவுளையும் பற்றிப் பேசுகிறீர். உண்மை என்ன?
கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை

10.அட, நீரும் வள்ளுவனைப் போல அறம், பொருள் இன்பம் (தர்ம அர்த்த காம) பற்றிப் பேசிவிட்டீர் — பெண்கள் வாழ்க — என்பது உமது கொள்கையாமே?
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான

11.தமிழில் மாற்றங்களை ஏற்க வேண்டுமா?
உணரக் கூறிய புணரியல் மருங்கிற்
கண்டு செயற்குரியவை கண்ணினர் கொளலே

tolkappaima

12.சரி. நீர் மாற்றங்களை ஆதரிப்பதற்கு நன்றி. ‘’பசுப் பாதுகாப்பு இயக்கம்’’ பற்றியும் நீர் பேசினீராமே?
வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்தோம்பல் மேவற்றாகும் (1003)

13.போர் வேண்டாம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். உமது கருத்து என்னவோ?
இரு பெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகை நிலை

14.நன்றி. நீரும் போரை எதிர்ப்பதற்கு நன்றி. வள்ளுவன் சுருங்கs சொல்லி விளங்கி வைத்தான். நீர் எதிர்பார்ப்பது என்ன?
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே

15.அற்புத மாகச் சொன்னீர்கள். கண்ணாடியில் பார்ப்பது போல தெளிவு வேண்டும். அடடா, அருமை, அருமை. நன்றி! தொல்காப்பியனாரே!

முந்தைய 60 வினாடி பேட்டிகள்
இவைகளையும் படிக்க வேண்டுகிறேன்

1.அப்பருடன் 60 வினாடி பேட்டி
2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி
3.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி
4.இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி
5.கம்பனுடன் 60 வினாடி பேட்டி
6.கண்ணதாசனுடன் 60 வினாடி பேட்டி
7.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி
8.சாக்ரடஸுசுடன் 60 வினாடி பேட்டி
9.சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி
10..சுந்தரருடன் 60 வினாடி பேட்டி
11.தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி
12.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி
12.திருஞானசம்பந்தருடன் 60 வினாடி பேட்டி
13.திருமூலருடன் 60 வினாடி பேட்டி
14.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி
15.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
16.பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி
17.மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி
18.வள்ளுவருடன் 60 வினாடி பேட்டி
19.ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி
20.சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி
21.தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி
22.திரிகூடராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி

English 60 second Interviews:
60 second Interview with Swami Vivekananda
60 second Interview with Socrates
60 second Interview with Adi Shankara
60 second Interview with Sri Sathya Sai Baba

contact swami_48@yahoo.com

பாரதியுடன் 60 வினாடி பேட்டி

12TH_Bharati_GJ_12_1295977e

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
Post No.1278; Dated 10th September 2014.
September 11 is Bharati Memorial Day.
(( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ))

கேள்விகள் – கற்பனை, பதில்கள் – உண்மை!

* வணக்கம் பாரதியாரே, உமது தொழில்?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்

* உமது ஜாதி?

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(அடடா, என்ன பரந்த மனப்பான்மை!)

* உமக்குப் பிடித்த நூல்?

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே

bharati kutty

* உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை

(உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை!)

* நீர் ஒரு தீர்க்கதரிசி. நாடு விடுதலை பெறும் முன்னரே நீர் சுதந்திரப் பள்ளு பாடினீர். இனி நடக்கப் போவதை உம்மால் சொல்ல முடியுமா?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

(பலே.. பலே!)

* மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டும் என்று தேவியிடம் வேண்டினீர், கிடைத்தது. எங்களுக்கும் அந்த தந்திரத்தைக் கற்றுத்தரக் கூடாதா?

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

(அட, இதுதான் ரகசியமா?)

bharati new, fb

* சரி, நாளைக்கு உமக்கு பிரதமர் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்?

இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்

(அப்பாடா, இன்னும் உம் பேச்சில் புரட்சிக் கனல் பறக்கிறதே!)

* இந்தியா வல்லரசு நாடாகுமா?

எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

(கேட்கவே இனிக்கிறதே! உம் வாயில் ஒரு மூட்டை சர்க்கரை போட வேண்டும்!!)

* இன்றைய இளைஞருக்கு உமது அறிவுரை?

உடலினை உறுதி செய்,
பணத்தினைப் பெருக்கு,
வையத் தலைமை கொள்

(அம்மாடி, ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும்!)

bharati family

* கற்காமல் அறியக்கூடிய கலை ஏதேனும் உண்டா?

சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை.

(அருமை, அருமை!)

* நீர் இறைவனிடம் வேண்டுவது என்னவோ?

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்

* சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
நமக்கு ஒரு தீங்கு வரலாகாது பாப்பா

bharati

* இந்தியருக்கு நீவீர் கூற விரும்புவது?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

* உமது கவிதை பற்றி உமது மதிப்பீடு?

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை

அதுவே எங்கள் மதிப்பீடும்.

bharathy statue

* அனுமனுக்கு மயிர்க்கால் தோறும் ராம நாமம் ஒலிக்குமாம், உமக்கு?

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(அடடா, கேட்கவே மயிர்க் கூச்சிடுகிறதே!)

* கடைசியாக ஒரு கேள்வி. இப்போது எல்லா சாமியார்களும் காயத்ரி மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். இதை நீர் முன்னமே தமிழில் சொன்னதாக எனக்கு நினைவு?

செங் கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

நன்றி! உமது தேமதுரத் தமிழோசை என்றும் எங்கள் காதில் ஒலிக்கும்.

kutti bharathi

I have done 25 more 60 second Interviews in Tamil and English with all the famous people including Socrates, Vivekananda, Buddha, Sathya Sai baba, Kamban, Ilango, Appar, Sundarar, Samabandar, Manikavasagar, Andal, Pattinathar, Thayumanar, Tirumular, Tiruvalluvar and Lord Krishna.
Contact swami_48@yahoo.com

Pictures are taken from various websites;thanks.

பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி

bharatidasan
April 29 is the birth day of Poet Bharatidasan (1891—1964)

By London Swaminathan
Post No.1009; Date:29 April 2014.

கேள்விகள் எனது கற்பனையில் பிறந்தவை; பதில்கள் பாரதிதாசனின் பாடல்களில் ஏற்கனவே இருப்பவை!!

கேள்வி: பாரதிதாசன் அவர்களே, குரு பக்தியில் யாருக்கும் சளைக்காத நீவீர் உங்கள் குரு தேசிய கவி சுப்பிரமணிய பாரதி பற்றி……….

பாரதிதாசன் பதில்:

“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

கே: அருமையான பதில்; பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர் நீங்கள்; நினைவில் நின்ற ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாமே!

பதிள்: ஒரு நாள் நம் பாரதியார் நண்பரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்திருந்தார், அங்கே
ஒரு மன்னன் விஷமருந்தி மயக்கத்தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்த இடந்தனிலிருந்தே எழுந்துலாவி
‘’என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே
வருகுதையோ’’ என்ற பாட்டைப் பாடலானான்;
வாய்பதைத்துப் பாரதியார் கூவுகின்றார்;
மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்கு பாட்டா என்றார்!
தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை!

கே: அது சரி, உங்களுக்கு பிடித்த ஒரே பார்ப்பனர் பாரதியார். பிடிக்காத பார்ப்பனர்கள் யார், யார்?

ப: குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்
குருநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்
படியேறும் சமண் கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலைப் புரிந்திட்ட பல்லாயிரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்

Bharatidasa Uni

கே: போதும், போதும்! அடுத்த கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தீபாவளிப் பண்டிகை பிடிக்காதாமே?
ப:- நரகனைக் கொன்ற நாள் நல்விழா நாளா?

நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப் பெயரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச் சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?

கே: ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்” என்று பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. அழகிய இள மகளிரை “தமிழ் தழீய சாயலவர்” என்று திருத்தக்க தேவர் சிந்தாமணியில் புகழ்கிறார். உங்கள் கருத்து என்னவோ?

ப: தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தில் விளைவுக்கு நீர்!

கே: அற்புதமான பாடல்; நீங்கள் ஏதோ போர் இல்லாத உலகம் பற்றி எல்லாம் கனவு காண்பதாகக் கேள்வி?
ப:- புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்.

கே: தமிழ் சினிமா பற்றி உங்கள் கருத்து?

ப: என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக
ஒன்றேனும் தமிழர் நடையுடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை; உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

கே: நீங்கள் நிறைய காதல் பாட்டுக்கள் பாடி இருக்கிறீர்கள். சில வரிகளைக் கேட்க ஆசை……………….

ப: பாழாய்ப் போன என் மனம் ஒரு நாய்க்குட்டி- அதைப்
பறித்துக்கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூந்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி
***
ஆவணி வந்தது செந்தேனே – ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே – எனைப்
போவென்று சொன்னாய் நொந்தேனே – செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே!

கே: நீங்கள் தமிழ் இளைஞருக்கு விடுக்கும் செய்தி…………………..
ப: தமிழன் எலி அன்று
தாவும் புலி என்று – நீ
தாரணி அறியச் செய் இன்று.

barathidasan_(sega_graphi_) (1)

கே: நீங்கள் எழுதிய விடுகதைக் கவிதையில் ஒரு சில வரிகள் சொல்லுங்கள்;
ப: ஆமை, அருமை, பெருமை, சிறுமை
அடிமை, கடுமை, மடமையே
ஊமை, உண்மை, இன்மை, இளமை
உரிமை, திறமை, இவைகளில்,
தீமை செய்து பாரதத்தைச் சீரழிப்பது எது சொல்வாய்?
நாமடைய வேண்டுவதையும் நன்கு பார்த்துக் கூறுவாய்.
(விடைகள்:- சீரழிப்பது- அடிமை; அடைய வேண்டியது: உரிமை)

கே: இறுதியாக உங்களின் இயற்பெயர்?
பதில்:–என் பெயர் சுப்புரத்தினம், என் தாய் பெயர் லெட்சுமி அம்மாள், என் தந்தை பெயர் கனகசபை முதலியார்.
நன்றி கவிஞரே. 60 நொடிகளுக்குள் புதுமைக் கருத்துக்களச் சொல்லி சிந்திக்கவைத்தீர். உம் புகழ் தமிழ் போல் வாழ்க!!!

இதே வரிசையில் ஏற்கனவே நான் எழுதிய கற்பனைப் பேட்டிகளையும் படியுங்கள். இதோ பட்டியல்:
இதுவரை வெளியான 60 வினாடி பேட்டிகள்
அருணகிரிநாதர் (posted 17-1-12), அப்பர், ஆண்டாள்(20-1-2012), பாரதியார், கண்ணதாசன், கம்பன் (posted 17-1-12), கிருஷ்ணன், சாக்ரடீஸ் (Eng & Tam), மாணிக்கவாசகர் (posted 15-1-12), ராமலிங்க சுவாமிகள், தாயுமானவர், பட்டினத்தார், , சிவ வாக்கியர் (posted 22-1-12), திருவள்ளுவர், திருமூலர், திருஞான சம்பந்தர், திரிகூட ராசப்ப கவிராயர், இளங்கோ, ஒரு நிமிட பகவத் கீதை, சீத்தலைச் சாத்தனார், தியாகராஜர், சுந்தரர் ( posted 21-2-12),
bharathidasan

In English:—
60 Second Interviews with Swami Vivekananda15-1-12, Sathya Sai Baba, Adi Shankara posted on 16-1-12,Buddha, Socrates, ONE MINUTE BHAGAVAD GITA (Eng and Tam)

contact swami_ 48@ yahoo.com
*******

காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி

உங்கள் பாடல்களில் பக்திச் சுவையும் தமிழ் சுவையும் நனி சொட்டச் சொட்ட இருக்கிறது. தமிழ் பெண்கள் அப்போது மொழிப் பயிற்சி பெற்றார்களோ?

பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்:- நிறந் திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே !

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?

நீங்கள் தினமும் இறைவனிடம் வேண்டுவது?

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க என்றார்

ஒரே பாட்டில் சங்கர நாராயணனையும் அர்த்த நாரீஸ்வரரையும் பாடி “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்று காட்டிவிட்டீர்களே!

ஒருபால் உலகளந்த மால் அவனாம்; மற்றை

ஒருபால் உமையவளாம் என்றால்- இருபாலும்

நின்னுருவமாக நிறந்தெரிய மாட்டோமால்

நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

சுவையான மாம்பழத்தைப் படைக்கப் போய், கணவரால் பக்திப் பெண்மணி என்று பயந்து கைவிடப்பட்டு, பேய் உருவை விரும்பிப் பெற்று, சிவபிரானால் “ வரும் இவர் நம்மைப் பேணும் அம்மை, காண்” என்று பார்வதிக்கு அறிமுகப்படுத்தப் பட்டீரே. உமது திரு ஆலங்காட்டில் காலால் நடக்ககூட சம்பந்தர் தயங்கினாரே உமது அன்பு பயன் கருதாப் பேரன்பு அல்லவோ!

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும்—சுடர் உருவில்

என்பறாக் கோலத் தெரியாடுமமெம்மனார்க்கு

அன்பறாது என் நெஞ்சு அவர்க்கு.

கீதையில் கண்ணன் “பிரம்மார்ப்பணம் பிரம்மஹவிர் ப்ரம்மஹ்னௌ ப்ரம்மனாஹுதம்” என்ற ஸ்லோகத்தில் அர்ப்பணம் பிரம்மம், அர்ப்பிக்கப்படும் பொருளும் பிரம்மம் என்பது போல நீங்களும்…….

அறிவானும் தானே; அறிவிப்பான் தானே,

அறிவாய் அறிகிறான் தானே;- அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே; விரிசுடர் பார் ஆகாயம்

அப்பொருளும் தானே அவன்.

உங்களுக்கு இசைப் பயிற்சியும் உண்டோ? 7 பண்களும் 11 இசைக் கருவிகளும்

உங்கள் சொற்களில் நடம் புரிகின்றனவே!

துத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண்  கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன் கை மென் தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடாடும் எங்கள்

அப்பன் இடம் திருவாலங்காடே

பிறவிப் பெருங் கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடி சேராதார் என்று வள்ளுவன் கூறுகிறான். நீங்கள் அதை எதிரொலிப்பது போல உள்ளதே!

வினைக் கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்

கனைக் கடலை நீந்தினோம் காண்.

நீங்கள் ஆண்டாளுக்கு முந்தியவர். எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் என்று அவர் பாடியது உம்மைப் பார்த்துத் தானோ!

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்; என்றும்

அவர்க்கே நாம் அன்பாவது அல்லாமல்- பவர்ச் சடை மேல்

பாதுகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்கு

ஆகாப்போம்; எஞ்ஞான்றும் ஆள்.

வணிகர் குலத்தில் புனிதவதியாக அவதரித்து, பேய் என்று உங்களையே அழைத்துக் கொண்டீர்கள்.ஆனால் இறைவனோ உம்மை அன்பாக அம்மையே என்று அழைக்க அழியாப் புகழ் பெற்றுவிட்டீர்கள். சொற் சிலம்பம் ஆடும் பக்தர்களை வேத வாத ரதா: என்று கண்ணன் பரிகசிக்கிறாரே?

நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக !

நீலமணிமிடற்றோன் நீர்மையே-மேலுவந்தது;

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வாருக்கும்

அக்கோலத்து அவ்வுருவே ஆம்.

நீங்களும் அதையே சொல்கிறீர்கள். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை முதலிய பாடல்கள் பாடினீர்கள். இதைப் படிப்பதால் என்ன பயன்?

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்

கரைவினால் காரைக்கால் பேய் சொல்-பரவுவார்

ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்றேத்துவார்

பேராத காதல் பிறந்து.

தமிழர்களுக்கு என்று ஒரு கின்னஸ் சாதனை நூல் இருந்தால் 1.மண்டல முறையில் அந்தாதி பாடியது, 2.பதிகம் பாடியது, 3.கட்டளைக் கலித் துறையில் பாடல் பாடியது, 4.கயிலை மலைக்கு தலையால் நடந்து சென்றது,5. பதிகத்தில் கடைக்காப்பு வைப்பது, 6.பதிகத்தில் இயற்றியவரின் பெயரைக் கூறி முத்திரை வைப்பது 7.முதலில் இரட்டை மணி மாலை பாடியது 8. பேய் பற்றி விரிவாக வருணித்தது 9.கம்போடியாவில் சிலை உடைய தமிழ் பெண் ஆகிய ஒன்பது தலைப்புகளில் உங்கள் பெயரைப் பதிவு செய்துவிடுவார்கள்! நன்றி அம்மையாரே!

 

சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி

(Questions are imaginary, Answers are from Manimekalai)

மணிமேகலை காப்பியம் படைத்த புலவரே, பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று அவ்வையார் கூறுகிறாரே!

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;

பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;

நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்;

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)

 

அட,உங்கள் கருத்தும் அதுதானா ! சோழ மன்னன் காந்தமன் வேண்டியதால் அகத்தியர் தனது தண்ணீர் கலசத்தைக் கவிழ்க்கவும் காவிரி உற்பத்தியானதாமே!

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட

அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)

காவிரி நதி ஜீவ நதியா?

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

 

அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?

அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்

மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல் (மணி 25-228)

 

Food, Shelter and clothing are three essential things என்று இன்று எல்லோரும் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன பேரறிஞரே, பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று காந்தன் என்னும் சோழனை அகத்தியர் ஒளிந்துகொள்ளச் சொன்னாரா?

மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்

தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்

கன்னி ஏவலிற் காந்த மன்னவன்

அமர முனிவன் அகத்தியன் ரனாது

துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25

 

உங்கள் காலத்தில் யவனர்களும் தமிழர்களுடன் வேலை செய்தார்களா?

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்

அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி

 

செல்வத்தின் பயனே ஈதல் என்று புலவர்கள் கூறுகின்றனரே? அதிலும் தானத்தில் சிறந்தது அன்ன தானமா?

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

 

அருமையான வாசகம். சரியான அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?

கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்

கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்

மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை

மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்

தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த

அவத்திறம் ஒழிக (மணி 7-8)

 

தொல்காப்பியர் ஆறு அறிவு படைத்த மனிதன் பற்றிக் கூறுகிறார். நீங்களும் உயிர்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறீர்களா?

பல்லுயிர் அறுவகைத் தாகும்

மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்

தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)

கோவலன் கொலையுண்டவுடன் மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்?

 

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்

பற்றின் உறுவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிக (2-64)

 

அகத்திய முனிவன் வேண்டியதால் சோழ மன்னன் 28 நாள் இந்திர விழாவை பூம்புகாரில் ஏற்பாடு செய்தது உண்மைதானா?

ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று

மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்

மேலோர் விழைய விழாக் கோளெடுத்த

நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே

அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39

 

அமுத சுரபி என்னும் அற்புத கலசத்தால் ஏழை எளியவர்களுக்கு உணவளித்த மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?

காணார், கேளார், கால் முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்

யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)

 

அற்புதம், அற்புதம் ! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக சேவை என்ன என்பதை தமிழன் தான் உலகுக்கே கற்பித்தான் போலும்!

சுந்தரருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதன் கற்பனை; பதில்கள்: சுந்தரர் தேவாரத்திலிருந்து. இது போல கம்பன் முதல் கண்ணதாசன் வரை மேலும் 25 பேட்டிகள் உள்ளன. படித்து மகிழ்க)

வாழி திருநாவலூர் வன் தொண்டரே ! இறைவனே உமக்கு அடி எடுத்துக் கொடுக்க, உம் வாயிலிருந்து மலர்ந்த, பொன்னான பாடல் என்னவோ?

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா

எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்

அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ என்று அவ்வையாரும் முடிசார்ந்த மன்னரும் பின்னர் பிடிசாம்பராய்ப் போவர் என்று பட்டினத்தாரும் கூறுகின்றனர், உங்கள் கருத்து……?

வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக் கடல் பசி நோய் செய்தபறிதான்

தாழாது அறம் செய்யின் தடங் கண்ணான் மலரோனும்

கீழ்மேலுற நின்றான் திருக் கேதார மென்னீரே.

ஆதி சைவர் குலத்து உதித்தீர். மன்னர் நரசிங்க முனையரையரால் வளர்க்கப் பெற்றீர். ருத்ர குல கணிகை பரவை, வேளாளர் குலப் பெண் சங்கிலி ஆகியோரையும் மணந்தீர். 1300 ஆண்டுக்கு முன்னரே புரட்சித் திருமணம் செய்தீர். நம்பி ஆரூரரே, சிவனைப் பாடவா இவ்வளவும்……?

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

 

சிறுவரும் புரிந்து கொள்ளும் அருமையான பாடல். ராமா நீ நாமமு ஏமி ருசிரா என்று பத்ராசலம் ராமதாஸ் பாடினார். சிவ நாமத்தின் சுவை பற்றி…

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய்

நல்ல சுவையான பாடல். சேக்கிழார் பெருமான் தமிழர்களுக்கு வழங்கிய மாபெரும் கொடை பெரிய புராணம். அதைப் பாடுவதற்கு அச்சாரம் போட்டதே உம்முடைய திருத் தொண்டர் தொகையாமே?

தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திரு நீலக் கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளயான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப் பொருளுக்கு அடியேன்

விரி பொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்

அல்லி மென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

நல்ல துவக்கம். இசையும் தமிழும் இணைந்ததோ. நீரே நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்று புகழக் காரணம்?

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்குடனாகி

மாழை ஒண்கண் பாவையைத் தந்து ஆண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆருர் இறைவனையே

குற்றம் செய்தவர்களை எல்லாம் மன்னிப்பவன் என்பதால்தான் சிவ பெருமானைத் தஞ்சம் அடைந்தீரோ?

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்

நாவினுகரையன் நாளைப்போவானும்

கற்ற சூதன் நற் சாக்கியன் சிலந்தி

கண்ணப்பன் கணம் புல்லன் என்றிவர்கள்

குற்றம் செயினும் குணம் எனக் கருதும்

கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன்

பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்

பொய்கை சூழ் திருப்புன்கூர் உளானே

உம்மைச் சிவன் படாத பாடு படுத்திவிட்டாரே. உம்மை அடிமை என்று வழக்காடு மன்றத்தில் ஆவணம் எல்லாம் காட்டி ஆட்கொண்டாரே…..

கற்பகத்தினைக் கனக மால் வரையைக்

காமகோபனைக் கண்ணுதலானைச்

சொற்பதப் பொருள் இருள் அறுத்தருளும்

தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்

அற்புதப் பழ ஆவணம் காட்டி

அடியனா வென்னை ஆளது கொண்ட

நற்பதத்தனை நள்ளாறனை அமுதை

நாயினேன் மறந்தென் நினைக்கேனே

காஞ்சியில் இழந்த பார்வையைப் பெற்றபின் பாடிய பதிகம்:

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும்

சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தையுளானை

ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாரே

“அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு” என்று இறைவனே உம்மைப் பணித்தார். உமக்கும் பசியோடு வந்த பக்தர்களுக்கும் சோறிட்டு சிவன் மறைந்தவுடன் பாடியது—-

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறர் எல்லாம்

முத்தினை மணி தன்னை மாணிக்கம் முளைதெழுந்த

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

 

முதலை வாயில் போய் மாண்ட சிறுவனையும் மீட்டுக் கொடுத்தீர்கள். சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த பொருளை உம்மிடமிருந்து வேடர் பறித்தவுடன் மீட்கப் பாடிய பாடல்——

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்

…..

எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரான் நீரே

தங்கக் கட்டிகளை ஆற்றில் போட்டுவிட்டு குளத்தில் தேடிய பெருந்தகையே.திருமுதுகுன்றில் ஆற்றில் இட்ட பொன்னைத் திருவாருர்க் குளத்தில் தேடி அதை அள்ளிக் கொண்டு போனபோது பாடிய பதிகம்

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முது குன்றமர்ந்தீர்

மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே

என்செய்த வாறடிகேள் அடியேன் இட்டளங்கெடவே..

சுந்தரத் தமிழில் பாடிய சுந்தரரே நன்றி.

தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ!  13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?

நமோ நமோ  ராகவாய

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை  ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர்.  “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா”

என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?

மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ

நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே

சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின——–

( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட———– ராமா, உன் நாமமே சுகம் தரும்)

அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?

முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)

(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா—-)

ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?

பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)

திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?

சிவ சிவ சிவ யனராதா,  பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)

உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்.

சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்………

நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)

இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!

அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா……..

(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே………..என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)

உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்…….

சாந்தமுலேக சவுக்கியமுலேது —–(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை)

நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில்  சில……

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).

வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)

18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?

பிரஹலாத பக்தி விஜயம், நவ்க சரித்திரம், சீதாராம விஜயம்

புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?

நா ஜீவாதார நாநோமு பலமா

ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி

நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா

நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)

(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)

திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம்  சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு  முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?

கிரிபை நெல (சகானா ராகம்)

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக

ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா

கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர

வராளி ராகத்தில் – கன கன ருசிரா

ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு

கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)

60 second interview with Socrates

 

(Questions are Imaginary; answers are from Plato’s Dialogues and Xenophon’s writings)

Sir , Who are you?

 

“I am not an Athenian nor a Greek, but a citizen of the world.”

Socrates, you were accused by the authorities in Athens that you spoiled the youths. The second accusation against you was that you denied the established gods and introduced strange divinities. What did you say in the court?

 

“Esteemed friend, citizen of Athens, the greatest city in the world, so outstanding in both intelligence and power, aren’t you ashamed to care so much to make all the money you can, and to advance your reputation and prestige–while for truth and wisdom and the improvement of your soul you have no care or worry?”

 

Did you corrupt the youth by your teachings?

I cannot teach anybody anything. I can only make them think. To find yourself, think for yourself.

The only good is knowledge and the only evil is ignorance.

 

You are one of the greatest philosophers. The Oracle of Delphi told that you were the wisest.

Did you agree?

 

I know one thing, that I know nothing.

 

Did you learn Hindu Upanishads? Your philosophy sounds similar to our philosophy.

 

Wonder is the beginning of wisdom. Know thyself.

All men’s souls are immortal, but the souls of the righteous are immortal and divine
An honest man is always a child.
We understand that your wife was very rude to you. One day she scolded you for lecturing. When you did not stop, she poured on you a bucket full of water. Shakespeare in his play “Taming of the Shrew” mentions your wife’s rudeness. What did you say to your friends then?

 

You heard thunder and now it is raining.

 

It looks like you wouldn’t advise any youth to get married. Is it correct?

 

By all means marry; if you get good wife, you will become happy; if you get a bad one, you will become a philosopher.

 

Socrates, you had a sense of humour. Out of the 501 juries in the court only 281 supported your conviction and death sentence. What did you say about it in your three speeches?

 

“Death may be the greatest of all human blessings. To fear death, my friends, is only to think ourselves wise, without being wise: for it is to think that we know what we do not know. For anything that men can tell, death may be the greatest good that can happen to them: but they fear it as if they knew quite well that it was the greatest of evils. And what is this but that shameful ignorance of thinking that we know what we do not know?”

 

“I am surprised that only by a small majority I was convicted and sentenced to death. I knew the outcome already. My conviction was a foregone conclusion. I am old. I have to die soon. I am not scared of death.”

 

O, philosopher, you have not left us any book written by you. Whatever we know is through the writings of your friends Plato, Crito and Xenophon. What did you think about friendship?

 

Be slow to fall into friendship, but when you are in, continue firm and constant.

Socrates, you said something about the youths of your time 2500 years ago. That is what we also say today. What did you say?

 

Our youth now love luxury. They have bad manners, contempt for authority; they show disrespect for their elders and love chatter in place of exercise; they no longer rise when elders enter the room; they contradict their parents, chatter before company; gobble up their food and tyrannise their teachers.

 

Socrates, you must visit our university campus and see how my colleagues use the mobile phones. You are absolutely right. My teachers will give you a rousing welcome for this statement. What is your view on poverty and suffering?

 

“If you don’t get what you want, you suffer; if you get what you don’t want, you suffer; even when you get exactly what you want, you still suffer because you can’t hold on to it forever. Your mind is your predicament. It wants to be free of change. Free of pain, free of the obligations of life and death. But change is law and no amount of pretending will alter that reality.”

What is your advice to our people?

“Do not do to others what angers you if done to you by others.”

“Envy is the ulcer of the soul.”

“When the debate is lost, slander becomes the tool of the loser.”

“Thou should eat to live; not live to eat.”

“The secret of happiness, you see, is not found in seeking more, but in developing the capacity to enjoy less. He is richest who is content with the least, for content is the wealth of nature”.

O, You sound like our Gandhi. He also advised us to live with minimum needs. What did you say to Crito before you died?


Crito, I owe a cock to Asclepius; will you remember to pay the debt?

 

**************

 

சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை- பதில்கள் பிளாட்டோ நூல்களிலிருந்து)

சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் உரையாற்றும்போது அவள், உம்மீது வசை மாரி பொழிந்து ஒரு வாளி தண்ணீரையும் கொட்டினாளே, அப்போது என்ன சொன்னீர்?

இதுவரை இடி இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது.

 

அட, பொறுமையின் இலக்கணமே ! கிரேக்க நாடு பெற்றெடுத்த தவப் புதல்வா! அப்படியானால் நங்கள் எல்லாம் கல்யாணமே கட்டக் கூடாதோ?

வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். கல்யாணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவ ஞானி ஆகிவிடுவீர்கள்.

இப்போது புரிகிறது, நீங்கள் எப்படி தத்துவ வித்தகர் ஆனீர்கள் என்று. எங்கள் உபநிடத்தில் கூறியதை நீரும் கூறினீரா?

உன்னையே நீ அறிவாய்

நல்ல வாசகம், சாக்ரடீஸ், நீவீர் வறுமையில் வாழ்ந்தீர், ஆனால் ஞானச் செல்வத்துக்குக் குறைவில்லை. இளஞர்களில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டீர். இதுதான் உம் மீதுள்ள பெரும்பழி.

நான் யாருக்கும் எதையும் சொல்லித்தர முடியாது. சிந்தனை செய்யத் தூண்டுவதே என் பணி. உன்னை நீ அறிய சிந்தி, நன்றாகச் சிந்தித்துப் பார்.

 

தெய்வவாக்கில் உமக்கு நம்பிக்கை அதிகம். டெல்பியில் குறி சொல்லும் தெய்வத்திடம் மிகப் பெரிய அறிவாளி யார் என்று கேட்டதற்கு உம்முடைய பெயரை அது கூறியது.அப்போது என்ன தோன்றியது?

என்னை விடச் சிறந்த அறிவாளி யாரையாவது நான் தேடிக் கண்டுபிடிப்பேன். உடனே தெய்வத்திடம் போய் ஏன் என்னைச் சொன்னாய் என்று கேட்பேன்

 

அஞ்சாத சிங்கம்,ஆனால் ஒரு ஞானி, எங்கள் ஊர் ஜனக மகாரஜா போல,

அறிவாளி யாரையாவது கண்டுபிடித்தீர்களா?

(பல அரசியல்வாதிகளையும் தத்துவ அறிஞர்களையும் பார்த்தபின்)

அவர்களை விட நான் சிறந்தவனே, தெய்வம் சொன்னது பொய்யன்று.

 

உமக்கு எப்படி இவ்வளவு துணிவு பிறந்தது?

நல்ல செயலைத் துவங்கும்போது அது நேர்மையானதா என்றுதான் பார்ப்பேன். உயிருக்கு ஆபத்து விளையுமா என்று சிந்திப்பது கோழைத் தனம்.

 

உமது புகழ்பெற்ற பொன்மொழி எங்கள் சரஸ்வதி தேவி “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பதைப் பிரதிபலிக்கிறதே:

எனக்கு ஒன்று தெரியும் ,அது என்னவென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது

I know one thing, that I know nothing.

 

ஆஹா, புரிகிறது. எங்கள் வள்ளுவரும் “ அறிதோறு, அறியாமை கண்டற்றால்” என்றுதான் சொல்வார்.படிக்கப் படிக்கத்தான், அடடா, இவ்வளவு நாள் கிணற்றுத் தவளையாக இருந்தோமே என்று நினைக்கிறோம்

கிரேக்க மக்கள் தொழுதுவந்த தெய்வங்களை நீர் புறக்கனிக்கச் சொன்னதாக உம் மீது பழி சுமத்தப் பட்டுள்ளது, இளைஞர்களை ஒழுக்கத்திலிருந்து தவறச் செய்தீர்களாமே?

புதிய தெய்வங்களை உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மற்றொரு புறம் நான் நாத்தீகம் பேசியதாகச் சொல்கிறீர்கள். இது முரணாக இல்லையா? வெறுப்பும் பொறாமையும் தான் உங்கள் குற்றச் சாட்டுகளுக்குக் காரணம்.

 

எழுபது வயது, மூன்று பிள்ளைகளுக்கு தந்தை. நீதி மன்றத்தில் மூன்று சொற்பொழிவுகள் செய்தீர்கள்.முதல் சொற்பொழிவில் என்ன சொன்னீர்கள்?

வீண் கர்வத்தாலும், அறியாமையாலும் கஷ்டப்படும் மக்களைத் திருத்துவதே ஆண்டவன் எனக்கு இட்டிருக்கும் பணி. அறம் தவறாது நீதி நிலை நாட்டப்படவேண்டும். இதுவே என் விருப்பம். என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்பேன்.

 

உமக்கு மரண தண்டனை விதித்த நீதி மன்றத்தில் 501 பேர் இருந்தனர்.ஒரு கவிஞனும் தோல் வியாபாரியும் உமக்கு எதிராக நின்றனர். இவர்களில் 220 பேர் உமக்கு ஆதவளித்தபோது இரண்டாவது உரையில் என்ன சொன்னீர்?

உங்கள் தீர்ப்பு எனக்கு வியப்பளிக்கவில்லை. முன்கூட்டியே குற்றவாளி என்று முடிவுகட்டி விட்டீர்கள். ஆனால் இத்தனை குறைந்த வாக்குகள் தான் எனக்கு மரண தண்டனை அளித்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 

நான் குற்றமற்றவன் என்று என் மனச் சாட்சி சொல்லுகிறது எனக்கு நீங்கள் பசியும் பிணியும் ஏற்படாதவாறு மானியம் தந்திருக்க வேண்டும். ஆனால் நான் சிறையில் அடிமாடு போல வாழ விரும்பவில்லை நான் வேறு நாட்டுக்கு சென்று வசிக்கவும் விரும்பவில்லை. நான் ஒரு ஏழை, அல்லது அபராதத் தொகை கொடுத்திருப்பேன். எனக்கு பொருளை இழப்பதில் ஒரு கஷ்டமும் இல்லை.

 

மேலை நாட்டு வள்ளுவா, நீயோ வள்ளுவனுக்கும் கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாய்,மூன்றாம் சொற்பொழிவு பற்றி…….

ஏதன்ஸ் நகர மக்களே! நீங்கள் எனக்கு மரண தண்டனை விதித்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. நான் வயதானவன். இந்தத் தண்டனை இல்லாவிட்டாலும் குறுகிய காலத்துக்குள் நான் இறக்கத்தான் போகிறேன் போர்ககளத்தில் ஒரு வீரன் எப்படி நடந்துகொள்வானோ அப்படியே நீதிமன்றத்திலும் நடக்கவேண்டும். மனிதனுக்கு மரணம் ஆபத்தல்ல. அதர்மமே ஆபத்து தர்ம வழியில் நடப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பமில்லை.

 

எனக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நான் எப்படி செல்வர்களையும் பிறரையும் கேள்விகள் கேட்டு துளைத்தேனோ அப்படியே நீங்களும் செய்ய வேண்டும்.அவர்கள் போக்கில் விட்டு விடாதீர்கள். காலம் அதிகரித்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். நானோ இப்போதே உங்களை விட்டுப் போகிறேன். விடை கொடுங்கள்.

 

(விஷம் கொடுத்து கொல்வதற்கு முன் சிறைச் சாலையில் நடந்தது: நம் ஊரில் கோவில் திருவிழாவுக்கு கொடி ஏற்றிய பிறகு முக்கிய காரியங்களை நிறுத்திவைப்பது போல, ஏதன்ஸ் நகர மக்கள் அருகிலுள்ள தீவின் விழாவுக்கான கப்பல் புறப்பட்டுவிட்டால் அது திரும்பும் வரை எதையும் செய்ய மாட்டார்கள். இதனால் சாக்ரடீஸின் மரண தண்டனை சிறிது தடைப்பட்டது)

நண்பர் :கெட்ட செய்தி கொண்டுவந்திருக்கிறேன்

சாக்ரடீஸ்: கப்பல் வந்து விட்டதா?

நண்பர்: நாளை வரப்போகிறது. நாளை உமது ஆயுள் முடியும்

சாக்ரடீஸ்: நண்பரே நான் தூங்குவதால் என்னை எழுப்பாமல் காத்திருந்தீர். அப்பொழுது நான் ஒரு கனவு கண்டேன்.மங்கை ஒருத்தி மங்கல உடை தரித்து என் முன் தோன்றினாள். இன்றைக்கு மூன்றாம் நாள் நீர் அழகிய சொர்க்கத்திற்கு வந்து விடுவீர் என்றாள்.

 

விஷம் அருந்தும் முன் நீர் என்ன சொன்னீர்?

உடல் நமக்கு இறைவன் தந்த சிறைச் சாலை; இதிலிருந்து நாமாகத் தப்பிவிடக்கூடாது. ஆண்டவனே நம்மை விடுதலை செய்யவேண்டும் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

 

விஷ பானம் உடலில் வேலை செய்யத் துவங்கியவுடன் நீர் கடைசியாகச் நண்பரிடம் சொன்ன வார்த்தைகள்…….?

நான் ஒரு கோவிலுக்கு பலிக் கடன் செய்ய வேண்டும். அதை எனக்காக நீர் செலுத்திவிடும்.

 

(சாக்ரடீஸ் எந்த புத்தகமும் எழுதவில்லை. அவரது சீடர்கள் ,குறிப்பாக பிளாட்டோ எழுதிய நூலிலிருந்தும் சாக்ரடீஸை கிண்டல் செய்து அரிஸ்டபனீஸ் எழுதிய நாடகத்திலிருந்தும் பல விஷயங்களை அறிகிறோம்.)

அப்பருடன் 60 வினாடி பேட்டி

 

 

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-அப்பர் தேவாரத்திலிருந்து)

 

வாகீசரே, கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற வரியுடன் பதிகம் பாடியவுடம் உமது தீராத சூலை நோய் திர்ந்தது. உமது  பணிதான்  என்ன?

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்

தன் கடன் அடியேனையும் தாங்குதல்

என்கடன் பணி செய்து கிடப்பதே

 ‘கொலவெறி’ யானையை உங்கள் மீது பல்லவ மன்னன் ஏவிவிட்டானே, எப்படி சமாளித்தீர்கள்?

சுண்ணவெண் சந்தனச்சாந்தும் சுடர் திங்கட் சூளாமணியும்

…………………………………………….

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை

 

இதைப் பாடியவுடம் மத யானை உங்களை வலம் வந்து வணங்கியதை உலகமே அறியும். மனிதகுலத்துக்கு ஒரு அறைகூவல் விடுத்தீர்களோ?

மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே

புனிதன்  பொற்கழல் ஈசன் எனும் கனி

இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே

 

பெற்றோர்கள் மருள்நீக்கியார் என்றும், சம்பந்தர் அப்பரே என்றும், சிவ பெருமான் நாவுக்கரசு என்றும் அழைத்தனர். கடும் விதியையும் தூக்கி எறியலாம் என்று பாடினீரா?

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்கு கன்னன்

பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் பல்லாண்டிசைப்ப

திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் சில பாடச் செங்கன் விடை ஒன்றூர்வான்

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வினையைக் கழற்றலாமே.

 

சமணர்களின் சொற்கேட்டு மகேந்திர பல்லவ மன்னன் உம்மை சுண்ணாம்புக் காளவாயில் போட்டபோது என்ன பாடினீர்?

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிளவேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

 

அற்புதம் பல செய்த பெரியாரே, இதைப் பாடியவுடன் அந்த வெப்பம் எல்லாம் தணிந்து வெளியே வந்தீர். கல்லைக் கட்டி உம்மைக் கடலில் போட்டானே, அப்பொழுது என்ன செய்தீர்கள்?

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே

 

திரு அங்க மாலைப் பாடலில் எல்லா உடல் உறுப்புகளையும் சொல்லி பாடல் செய்தீர். மற்றொரு பதிகத்தில் பழமொழி ஒவ்வொன்றையும் வைத்து பாடல் செய்தீர்.ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை வைத்து பாடல் செய்தீர்.நால்வரில் உம் பாட்டில்தான் அதிக தமிழ் மணம் வீசுகிறது.

 

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்

போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்

 

கங்கைகொண்ட சோழபுர வெளிப் பிரகார புற நடராஜர் சிலை, உம் பாட்டில் உள்ளது போலவே சிரிக்கிறாரே!

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

 

மனமே படகு, அறிவே துடுப்பு, கோபமே சரக்கு, நமது செருக்கே பாறை என்று உருவகப்படுத்தி பாடினீர்களே, அது என்ன பாட்டு?

மனம் என்னும் தோணி பற்றி மதி என்னும் கோலை ஊன்றி

சினம் என்னும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மதனெனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணா

துனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தர் சொன்னார்.

துன்பமில்லாமல் வாழ முடியுமா?

 

துன்பமின்றித் துயரின்றி என்றும் நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு

அன்பனாயிடும் ஆனைக்கால் அண்ணலே

“நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”

 

“ஞாலம் நின் புகழே மிக வேண்டும்” என்று சிவனைப் பாடிய நீங்கள் யார் யாரை வணங்குவீர்கள்?

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து

தரணியொடு வான் ஆளத் தருவரேனும்

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்

மாதேவர்க் ஏகாந்தர் அல்லாராகில்

அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்

ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

 

“தோன்றாத் துணைவன்” என்றும் “நினைப்பவர் மனம் கோயிலாகக்கொண்டவன்” என்றும் “ஞானப் பெரும் கடலுக்கு ஓர் நாவாய்” என்றும் சிவனை அற்புதமாக வருணித்த வள்ளலே, கோவில் கோவிலாகச் சென்று செடி கொடிகளை அகற்றி உளவாரப் பணி செய்த உத்தமரே, சிறுவயது விளையாட்டிலும், இளம் வயது காதலிலும் கழிகிறது என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில் பாடியதை——-

 

பாலனாய்க் கழிந்த நாளும் பனி மலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்ட்டீச் சுரத்துளானே

 

புனித நீராடலால் மட்டும் பலன் இல்லையா??

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்

கொங்கு குமரித் துறை ஆடில் என்

ஓங்கு மாகடல் ஓத நீராடில் என்

எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே

 

நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை நீவீர் பாடியதன் மூலம் மாணிக்கவாசகர் உங்கள் மூவருக்கும் முன் வாழ்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொன்னீர்கள். “சங்கரா செய போற்றி” என்ற வரிகள் மூலம் ஆதி சங்கரரும் உங்களுக்கு முந்தியவர் என்பதைக் கூறிவிட்டீர்கள். கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே  காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் என்பதால் நீவீர் ஜீவன் முக்தர் என்பதையும் எங்களுக்குக் காட்டிவிட்டீர்கள். உங்களைப் பல கோடி முறை வணங்கி வழிபடுகிறோம்.

(மேலும் இருபது பெரியார்களுடன் 60 வினாடிப் பேட்டிகள் உள்ளன. படித்து இன்புறுக)

*************************