31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)

tolkappian-katturai

Written by London swaminathan

Date: 27 September 2016

Time uploaded in London:8-17 AM

Post No.3194

Pictures are taken from various sources; thanks.

 

 

அக்டோபர் (துர்முகி வருஷம், புரட்டாசி/ஐப்பசி) 2016 காலண்டர்

திருவிழா நாட்கள்:-அக்1.-நவராத்திரி ஆரம்பம்;அக்.2-காந்தி ஜயந்தி

அக்.10-சரஸ்வதி பூஜை; அக்.11- விஜயதசமி, தசரா; அக்.29/30- தீபாவளி

அக்.31- கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.

 

அமாவாசை- 30, பௌர்ணமி-15, ஏகாதசி-12,26, முகூர்த்த நாட்கள்-28

 

tolkappaima

அக்டோபர் 1 சனிக்கிழமை

Tamil alphabet

அகரம் முதல் ன கரம் இறுவாய்

முப்பஃது என்ப;

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே (1)

 

அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை

Special letter :three dots

அவைதாம்

குற்று இயல் இகரம் , குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன (2)

 

அக்டோபர் 3 திங்கட்கிழமை

Vaisya: Business community

வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை -1578

 

அக்டோபர் 4 செவ்வாய்க்கிழமை

Brahmins and Kshatriyas

அந்தணாளர்க்குரியவும் அரசர்க்கு

ஒன்றிய வ ரூஉம் பொருளுமார் உளவே -1572

 

அக்டோபர் 5 புதன்கிழமை

What is mantra?

நிறைமொழி மாந்தர்  ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப – 1434

IMG_3212.JPG

 

அக்டோபர் 6 வியாழக்கிழமை

Brahmins can’t become kings

அந்தணர்க்கு அரசு வரைவு இன்றே -1574

 

அக்டோபர் 7  வெள்ளிக்கிழமை

Women’s Virtues

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும், நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல்  முகைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய -1098

 

 

அக்டோபர் 8 சனிக்கிழமை

God

வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ -1367

 

அக்டோபர்  9 ஞாயிற்றுக்கிழமை

Botanical Classification

புறக் காழனவே புல் என மொழிப

அகக் காழனவே மரம் என மொழிப -1585

 

அக்டோபர் 10 திங்கட்கிழமை

Devaloka

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மையான -1194

 

dance-in-shade

அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை

8 feelings; not Navarasa!

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப –1197

 

அக்டோபர்  12 புதன்கிழமை

Bhagavad Gita:Paritranaya sadhunam vnasaya ca duskrtam

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் -1099

 

அக்டோபர் 13 வியாழக்கிழமை

Dharma, Artha, Kama: Hindu Concept

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே-1038

 

 

அக்டோபர் 14  வெள்ளிக்கிழமை

Sati : wife mounting funeral pyre of husband

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்

சொல்லிடைஇட்ட பாலை நிலையும் -1025

 

அக்டோபர் 15 சனிக்கிழமை

Look at Brahmin’s Vedas

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்து எழு வளி இசை அரில்தப நாடி

அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே

(102)

 

img_3224

அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை

Brahmins of Six tasks

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

…………….. 1021

அக்டோபர்  17 திங்கட்கிழமை

Literary and World approach

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

உரியதாகும் என்மனார் புலவர் – 999

 

அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை

Dhana/donation

கொடுப் போ ர் ஏத்திக் கொடா அர்ப்ப ழி த்தலும் -1036

 

அக்டோபர் 19 புதன்கிழமை

What is a Sutra/formula?

அவற்றுள்

சூத்திரந்தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே-1425

 

அக்டோபர் 20 வியாழக்கிழமை

Women should not go abroad

முந்நீர் வழக்கம் மகடூஉ இல்லை -980

 

img_4925

அக்டோபர் 21  வெள்ளிக்கிழமை

Six Levels of living beings (Theory of Evolution)

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே-1527

அக்டோபர் 22 சனிக்கிழமை

Borrow from Sanskrit

வடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே -884

 

அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை

சிதைந்தன வரினும்  இயைந்தன வரையார் – 885

 

அக்டோபர் 24 திங்கட்கிழமை

Upama from Sanskrit

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாதாகும் திணை  உணர் வகையே -992

 

அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை

Indra and Varuna: Tamil Gods!

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’- 951

 

kuthu-vilakku

அக்டோபர் 26 புதன்கிழமை

12 places adjacent to Chaste Tamil Land

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி -883

 

 

அக்டோபர் 27 வியாழக்கிழமை

Thousand from Sanskrit Sahsram

அத்தொடு சிவணும்  ஆயிரத்து இறுதி

ஒத்த எண்ணு முன்வரு காலை -317

 

அக்டோபர் 28  வெள்ளிக்கிழமை

Matra , winking, snapping

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே  (7)

 

அக்டோபர் 29 சனிக்கிழமை

Mysterious Kandazi!

கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே- 1034

 

அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை

Deiva: God

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.-964 (பொருள் 1-18)

 

அக்டோபர் 31 திங்கட்கிழமை

Mantra again!

பெயர்நிலைக்கிளவியின் ஆஅகுநவும்

திசைநிலைக்கிளவியின் ஆஅகுநவும்

தொல்நெறி மொழிவயின் ஆஅகுநவும்

மெய்ந்நிலை மயக்கின்  ஆஅகுநவும்

மந்திரப் பொருள்வயின்  ஆஅகுநவும்

அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே -932

IMG_4930.JPG

–Subham—

 

அக்டோபர் 2015 காலண்டர்

arunagiri annamalai

அருணகிரிநாதர் சிலையின் படம்

(மன்மத வருடம் புரட்டாசி/ஐப்பசி)

இந்த மாதக் காலண்டரில், அருணகிரிநாதர் பாடிய, சந்தத் தமிழ் திருப்புகழ் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 28  September 2015

Post No: 2195

Time uploaded in London :– 16-10

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2 காந்தி ஜயந்தி, 12 மஹாளய அமாவாசை ,13 நவராத்திரி ஆரம்பம்,21 சரஸ்வதி பூஜை, 22 விஜயதசமி, 24 மொகரம்;

8, 13 ஏகாதசி , 27 பௌர்ணமி

முகூர்த்த நாட்கள்: 19, 22,25, 26

amman gold

அக்டோபர் 1 வியாழக்கிழமை

முத்தமிழடை வினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா.

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை

தினைவேடர் காவல் தங்கு மலை காடெலாமுழன்று

சிறுபேதை கால் பணிந்த குமரேசா

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசனை வென்ற

திருமால் முராரி தங்கை  அருள்பாலா.

அக்டோபர் 3 சனிக்கிழமை

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலந்துஞ்சித் திரியாதே

கந்தனென்றுற் றுனைநாளும்

கண்டுகொண் டன்புற்றிடுவேனோ.

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

இரவுபகல் மோகனாகியபடியில் மடியாமல் யானுமுன்

இணையடிகள் பாடி வாழ என்நெஞ்சிற் செஞ்சொல் தருவாயே.

அக்டோபர் 5 திங்கட்கிழமை

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி

உனையெனதுள் அறியும் அன்பைத் தருவாயே

amman lakshana

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

மங்கை அழுது விழவே யமபடர்கள்

நின்று சருவமலமே யொழுக வுயிர்

மங்கும் பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.

அக்டோபர் 7 புதன்கிழமை

மதித்துச் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்

மறத்திற் றந்தைமன் ரினிலாடி

மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண்

டமிழ்சொற் சந்தமொன்  றருள்வாயே.

அக்டோபர் 8 வியாழக்கிழமை

புரக்கைக்குன் பதத்தைந்தெனக்குத் தொண்டுறப்பற்றும்

புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ் பாடும்

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

மங்கைமார் கொங்கைசேரங்க மோகங்களால்

வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்சொரூபம் ப்ரகாசங்கொலே

வந்து நீயன்பில்  ஆள்வாய்.

அக்டோபர் 10 சனிக்கிழமை

துன்பநோய் சிந்த நற்கந்தவேள் என்றுனைத்

தொண்டினால் ஒன்றுரைக்க  அருள்வாயே

a o maa

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

அறிவால் அறிந்து இருதாளிறைஞ்சும்

அடியார்  இடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாயுகந்த பெருமாளே

அக்டோபர் 12 திங்கட்கிழமை

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரிபாகா  நமோ நம  –அருள்தாராய்.

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

அபகாரநிந்தைப் பட்டுழலாதே

அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

உனை நான் நினைந்தருட் பெறுவேனோ.

அக்டோபர் 14 புதன்கிழமை

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள்ஞான இன்பமது புரிவாயே.

அக்டோபர் 15 வியாழக்கிழமை

பிணிபட்டு உணர்வற்று அவமுற்றியமற்

பெறுமக் குணமுற் றுயிர்மாளும்

பிறவிக்கடல் விட்டுயர் நற்கதியைப்

பெறுதற்கு அருளைத் தரவேணும்

kolu3

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

கமல விமல மரகதமணி

கனகமருவும் இருபாதங்

கருத அருளி எனது தனிமை

கழிய அறிவு தரவேணும்.

அக்டோபர் 17 சனிக்கிழமை

வானே காலே தீயே நீரே

பாரே பருக் குரியோனே

மாயா மானே கோனே மானார்

வாழ்வே கோழிக் கொடியோனே.

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

நானே நீயாய் நீயே நானாய்

நானா வேதப் பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே

நாயேன் மாயக் கடவேனோ.

அக்டோபர் 19 திங்கட்கிழமை

ஓதம் பெறுகடல் மோதுந்திரையது

போலும் பிறவி  லுழலாதே

ஓதும் பல அடி யாருங் கதிபெற

யானுன் கழலினை பெறுவேனோ.

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

ராவிக்கள் மாள்வித்து மடியாதே

ஆலித்து மூலத் டேயுட்கொ ளாதிக்கு

மாம்வித்தை யாமத்தை யருள்வோனே

original

அக்டோபர் 21 புதன்கிழமை

ஏறு தோகை மீதேறி யாலித் திடும்வீரா

ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே

சீறு சூரர் நீறாக மோதிப் பொரும்வேலா

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

அக்டோபர் 22 வியாழக்கிழமை

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி

ஆண்மையுயுட னிற்கு முருகோனே

ஆதியர ரனுக்கு வேதமொழி முற்றி

யார்வம்விளை வித்த அறிவோனே

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

செருக்கழியத் தெழித்துதிரத்

திரைக்கடலிற் சுழித்தலையிற்

றிளைத்த  அயிற் கரக்குமரப் பெருமாளே

அக்டோபர் 24 சனிக்கிழமை

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட

மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் வென்றிவாய

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட

மட்டித் திட்டுயர் கொக்கைக்குத்திம லைந்தவீரா

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை

பருகுத லரியது கந்த தீதிது

உளதென குறளிகள் தின்று மேதகு

பசிகெட வொருதனி வென்ற சேவக மயில்வீரா

Navaratri2

அக்டோபர் 26 திங்கட்கிழமை

மயிலு மியலறி புலமையு முபநிட

மதுர கவிதையும் விதரண கருணையும்

வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

கால சங்கரி சீலா சீலித்ரி சூலிமந்த்ர சுபாஷா பாஷனி

காள் கண்டிக பாலீ மாலினி கலியாணி

காமதந்திர லீலா லோகினி வாமதந்திர நூலாய் வாள்சிவ

காமசுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

அக்டோபர் 28 புதன்கிழமை

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதியருணாசலம்  அமர்ந்த பெருமாளே

அக்டோபர் 29 வியாழக்கிழமை

முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் களிவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமளே

அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

வெற்றிசத் திக்கரக முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

விட்டபச் சைச்சரண மயில்வீரா

kolu1

அக்டோபர் 31 சனிக்கிழமை

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்

டூரசூர் கெட்டுகப் பொரும்வேலா

நேசமாய் நித்தநிற் றாலைநீ ளச்சமற்

றோதநீ திப்பொருட் டரவேணும்

–Subham–

பட்டினத்தாரின் 31 முக்கிய பாடல்கள்

patti.temple
Sri Pattinathar Temple at Tiruvotriyur, Chennai

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 அக்டோபர் மாத காலண்டர்
(( பட்டினத்தாரின் முக்கிய பாடல் மேற்கோள்கள் ))

Post No. 1316; Date: 29 செப்டம்பர் 2014
Prepared by London swaminathan (copyright)

பட்டினத்தார் பாடல்களிலிருந்து முக்கிய 31 மேற்கோள்கள் இந்த அக்டோபர் மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2: சரஸ்வதி பூஜை, 3 விஜய தசமி/தசரா; 22, 23 தீபாவளி (தமிழ் நாட்டில் 22, வடக்கில் 23).
அமாவாசை:23; சுபமுஹூர்த்த நாள்:– 30; பௌர்ணமி – 8, ஏகாதசி- 4, 19

My Previous Articles on Pattinathar:
1.Alexander and Tamil Saint Pattinathar, Posted on 19th June 2013
2.Miracles at Crematorium, Posted on 11th February 2013
3.God’s Notebook, Posted on 16th March 2014
4.Tamil Saint Pattinathar’s Warning, Posted on 4th April 2014
5.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி Posted on 25 ஜனவரி 2012

அக்டோபர் 1 புதன் கிழமை
பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

அக்டோபர் 2 வியாழக் கிழமை
“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

அக்டோபர் 3 வெள்ளிக் கிழமை
நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)

அக்டோபர் 4 சனிக் கிழமை
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

அக்டோபர் 5 ஞாயிற்றுக் கிழமை
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

pattinathar wrapper0002

அக்டோபர் 6 திங்கள் கிழமை
என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

அக்டோபர் 7 செவ்வாய்க் கிழமை
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

அக்டோபர் 8 புதன் கிழமை
காம்பவிழ்த்துதிர்ந்த கனியுறுக் கண்டு / வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று / புரி‘குழல்தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவர்’’

அக்டோபர் 9 வியாழக் கிழமை
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 10 வெள்ளிக் கிழமை
வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை
போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

pattinathar3

அக்டோபர் 11 சனிக் கிழமை
உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு
அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே
விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்
வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

அக்டோபர் 12 ஞாயிற்றுக் கிழமை
வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

அக்டோபர் 13 திங்கள் கிழமை
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

அக்டோபர் 14 செவ்வாய்க் கிழமை
முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

அக்டோபர் 15 புதன் கிழமை
ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

pattinathar2

அக்டோபர் 16 வியாழக் கிழமை
வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

அக்டோபர் 17 வெள்ளிக் கிழமை
ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்
உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்
விளக்கு இருக்க தீ தேடுவீர்

அக்டோபர் 18 சனிக் கிழமை
நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

அக்டோபர் 19 ஞாயிற்றுக் கிழமை
உளியிட்ட கல்லையும் ஒப்பற்ற சாந்தையும் ஊத்தை அறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்

அக்டோபர் 20 திங்கள் கிழமை
ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் / பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே
குரு மார்க்கம் இல்லா குருடருடன் கூடிக் / கரு மார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல் / பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

pattinathar1

அக்டோபர் 21 செவ்வாய்க் கிழமை
நரிக்கோ கழுகு பருந்தினுக்கோ வெய்ய நாய் தனக்கோ
எரிக்கோ விரையெதுக்கோ விறை வாகச்சி ஏகம்பனே

அக்டோபர் 22 புதன் கிழமை
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 23 வியாழக் கிழமை
சொன்னபடி நில்லார் அறத்தை நினையார் நின் நாமம் நினைவிற் சற்றும் இலார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 24 வெள்ளிக் கிழமை
பட்டப் பகலில் வெளிமயக்கே செயும் பாவையர் மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் விறை வாகச்சி ஏகம்பனே

அக்டோபர் 25 சனிக் கிழமை
உருகி எலும்பு கருகி அடங்கி ஓர் பிடி நீறுமிலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

pattinathartemple19

அக்டோபர் 26 ஞாயிற்றுக் கிழமை
பாவலன் ஒருவன் செந்தமிழ்க்கிரங்கிப்
பரவையாருடைய மாற்ற ஏவலாளாகி இரவெலாம்
உழன்ற இறைவனே ஏக நாயகனே

அக்டோபர் 27 திங்கள் கிழமை
உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்

அக்டோபர் 28 செவ்வாய்க் கிழமை
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி /
பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர் / காப்பதற்கும் வழி அறியீர் கைவிடவும் மாட்டீர் கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே / ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்து உழல அகப்பட்டீரே.

அக்டோபர் 29 புதன் கிழமை
முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

அக்டோபர் 30 வியாழக் கிழமை
ஆசைக் கயிற்றிலாடு பம்பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை
மக்கள் வினையின் மயக்குந் திகிரியை- – – –
அம்பலத்தரசே அடைக்கலம் உனக்கே

அக்டோபர் 31 வெள்ளிக் கிழமை
“தம்மை மறந்து நின்னை நினைப்பவர் / செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்
ஆடும் அம்பல வாண!——————– / நிந்தமர் பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள் / ஆனை வைப்பில், காணொனா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்.”

—-பட்டினத்தாரின் கோயில் நான்மணி மாலை

Pictures are taken from pattinatharkasi.blogspot.com and other sites;thanks.
contact swami_48@yahoo.com