நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523)

IMG_9051

Research Article written by london swaminathan

Post No. 2523

Date: 9th February 2016

Time uploaded in London காலை 10-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2345

(பழங்குடி மக்கள்- இந்துக்கள்  இடையேயுள்ள கருத்தொற்றுமைகளைக் காணும் மூன்றாவது கட்டுரை இது. நேற்றும், அதற்கு முதல் நாளும் வெளியிட்ட கட்டுரைகளையும் காண்க)

 

 

இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

 

அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.

IMG_9039

எதையும் வீணடிக்காதே

நான் சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவை பார்த்துக் கொண்டிருக்கையில் எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.

 

இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி  மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.

IMG_9041

நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!

 

என் கவனத்தை ஈர்த்த மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆக நாம் மற்றவர்களைக் காப்பார்ரினால், அனத தர்மமே நம்மைக் காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

 

ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது.

அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது. இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதை காணலாம். ஆயினும் 40,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

 

அடுத்த கட்டுரையில் , ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சில விநோத நம்பிக்கைகள், பழக்க, வழக்கங்களை சுருக்கி வரைவேன்.

IMG_8996

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!

durga in MBPuram
Durga (Mahishasura Mardhani) in Mahabalipuram,Tamil Nadu

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 945 தேதி- 31st March 2014.

முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.

சிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர்.

தொல்காப்பியக் கடவுளரைக் காண்போம்:–

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயதீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)

என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.

முல்லை= திருமால்
குறிஞ்சி = முருகன்
மருதம் = இந்திரன்
நெய்தல் = வருணன்

durga from indonesia

Durga from Java, Indonesia in US Museum.

கீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.

கொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

three_fires_1

புறநானூற்றில் பிராமணர் வீட்டு மூன்று தீ

இந்த தருணத்தில் வேறு ஒரு முத்தீயை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம். இதோ புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:

“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)

((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))

சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது? என்று திகைத்தார்.

இமய மலை, பொதிய மலை, விந்திய மலை என்று புகழலாமா? அதுவும் பொருத்தம் இல்லை. ஏனெனில் மூன்றும் ஒரே இடத்தில் இல்லை. கன்னியாகுமரி சரியான பொருத்தம். ஏனெனில் மூன்று கடல்களும் ஒருங்கே கூடுகின்றன. ‘’அடா, அடா, உப்புக் கடல்களைப் போய் இந்த தருணத்தில் ஒப்பிடுவது பொருந்தாதே’’– என்று எண்ணிக் கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. மூன்று மன்னர்களும் க்ஷத்ரிய வம்சத்தினர்; சூரிய, சந்திர, அக்னி குலத்தைச் சேர்ந்தவர்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியர் ‘ஸ்டைலில்” ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் அதைவிட உயர்வாக எதையாவது சொல்ல வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் அவ்வையார்.

பிராமணர் வீடுகளில் முத்தீ – அதாவது ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கினீயம் — என்று மூன்று தீ எரியும். உடனே சேர சோழ பாண்டியர்களை—- “ஐயர் வீட்டு முத்தீ போல அருமையாக ஒருங்கே இருக்கிறீர்களே!! நீங்கள் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக வாழ்நாட்களோடு வாழுங்கள்”— என்று வாழ்த்தினார். மேலே கொடுத்த பாட்டை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Caves

கண் இமைக்காத தேவர்கள்

தேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.
தேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.

இதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோ ருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–

“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)

இதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும். எனது முந்திய கட்டுரையில் முழு விவரம் காண்க.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi (Jharkahand)

தென்புலத்தார் வழிபாடு

இறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
இது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–

1.காட்சி= கல்லைக் கண்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)
2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்
3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)
4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்
5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்
6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம்!. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி!!)

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)

என்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாட்டுக்குப் பாட்டு இந்துமதக் கடவுளர்கள் பவனி வருவதைக் காணலாம்.. சிவன் என்ற சொல் திருமுறை-தேவார காலம் வரையில் கையாளப்படாவிடினும், தொல்காப்பியத்தில் இல்லாவிடினும், புறநானூற்றின் மிகப்பழைய பாடல்களில் நீலகண்டனையும் முக்கண்ணனையும் காண்கிறோம்.

சங்க காலத்துக்குப்பின் வந்த சிலப்பதிகாரத்தை இந்து மத ‘என்சைக்ளோபீடியா’ (கலைக் களஞ்சியம்) என்று சொல்லும் அளவுக்கு இந்து கலாசாரம், கடவுளர்கள் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book

Contact swami_48@yahoo.com

அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்

indian-missiles

India’s Brahmos Missiles

அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்

ச.நாகராஜன்

விஞ்ஞானி ஃப்ராங்க்ளின் ரூஹெல்

விண்ணில் தோன்றும் பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆராயும் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஃப்ராங்க்ளின் ரூஹெல் என்பவர். இவர் ஒரு சிறந்த க்ரிப்டோஜூவாலஜிஸ்டும் கூட. கொள்கை ரீதியான இயற்பியலில் பி,ஹெச்.டி பட்டம் பெற்றவர்.

பல அறிவியல் தொலைக்காட்சி தொடர்களுக்கும் திரைப்படங்களுக்கும் ஆலோசகராகப் பணியாற்றிய இவரது புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கும் பரபரப்புடன் விற்பனையாகியுள்ளன.

இவர், தான் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சிகள் மூலமாக இந்திய இதிஹாஸங்களான ராமாயணமும் மஹாபாரதமும் அணு ஆயுதங்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் விரிவாக விளக்குகின்றன என்கிறார்.

“இந்திரனுடைய விமானங்களைப் பற்றி 32 விளக்கங்கள் உள்ளன. விமானம் இயக்கும் விதம், அதன் வடிவமைப்பு, ஒளி விளக்குகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சூரியனுடைய ஆற்றலால் இயங்கும் விமானங்கள் இவை. லேசர் ஒளி ஆயுதங்கள், ராடார் திரைகள் ஆகியவை இந்த விமானங்களில் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது” என்று அவர் வியந்து கூறுகிறார்.

 

அனுமனின் வேகத்தைக் கணக்கிட்ட கோல்ட்மேன்

பெர்க்லி பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியரான ஆர்.பி.கோல்ட்மேன் அனுமனின் வேகத்தையே கணக்கிட்டு விட்டார்.சஞ்சீவி மலை இருந்த இடத்திற்குச் சென்று அதைப் பெயர்த்து இலங்கைக்கு வான்வழியே வந்து திருப்பி அதை எடுத்த இடத்திலேயே வைக்க அவர் பறந்த வேகம் சுமார் மணிக்கு 660 கிலோமீட்டர் இருக்க வேண்டும் என்பது அவரது கணிப்பு.

 

அர்ஜுனன் கண்ட வான் உலகங்கள்

சந்திரனில் காலடி பதித்தவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று நவீன அறிவியல் கூறுகிறது. ஆனால் மஹாபாரத கதாநாயகனான அர்ஜுனனோ இந்திரனின் புத்திரன். ஆகவே இந்திரனின் தேரில் அவன் வானுலகம் சென்றது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்திரனின் சாரதியான மாதலி அர்ஜுனனைத் தேரில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது வழியில் தென்படுகின்ற உலகங்களைக் கண்டு அர்ஜுனன் ஆச்சரியப்படுகிறான். அவற்றையெல்லாம் பற்றி ஏராளமான கேள்விகளைக் கேட்கிறான். இவை அனைத்திற்கும் மாதலி விரிவாக பதில் கூறுகிறான்.

 

இந்த விவரங்களையெல்லாம் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் புராதன பாரதத்தில் அணு ஆயுதங்களும் அதி வேகமாகப் பறக்கும் பறக்கும் தட்டுகளும் இருந்ததை அறியலாம். முதல் அஸ்ட்ரானட் அல்லது விண்வெளி வீரனாக அர்ஜுன்னையே கூறலாம்.

agni_0parade

India’s Agmi Missiles

டபிள்யூ ரேமாண்ட் ட்ரேக்கின் ஆய்வுகள்

இது பற்றி ஆராய்ந்த இன்னொரு அறிஞர் பிரிட்டனைச் சேர்ந்த டபிள்யூ..ரேமாண்ட் ட்ரேக் என்பவர். (1913-1989) இவர் புராதன விண்வெளி வீரர்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் ஒன்பது புத்தகங்கள் எழுதியுள்ளார்.மிகவும் அறிவார்ந்த உயிரினங்கள் அல்லது தேவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பூமி வாழ் மக்களுக்குத் தந்ததாகக் கருதுகிறார். Gods and Spacemen in the Ancient East என்ற தனது புத்தகத்தில் மஹாபாரதத்தில் வரும் ஏராளமான அஸ்திரங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அவர் மேற்கோள்கள் காட்டி விளக்குகிறார்.

 

பிரம்மாஸ்திரம்,ஆக்னேய அஸ்திரம், நாராயணாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற திவ்ய அஸ்திரங்களின் விளக்கம் பல நூறு அணுகுண்டுகள் வெடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதை ஒத்திருக்கிறது. ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் அழிவையே உலகம் இன்னும் கூட தாங்க முடியவில்லை என்பதை நினைத்துப் பார்த்தால் மஹாபாரத அஸ்திரங்களின் உக்கிரமும் தொழில்நுட்பமும் நம்மை வியக்க வைக்கும்.

துரோண பர்வத்தில் வரும் அணு ஆயுதங்கள் பற்றிய விளக்கம் அனைவரையும் வியப்புறச் செய்யும். எடுத்துக் காட்டாக அஸ்வத்தாமன் எய்த ஆக்னேயாஸ்திரம் பற்றிய ஒரு சிறிய பகுதி இதோ:

 

“அக்னி ஜ்வாலையால் சூழப்பட்ட மழை பொழிவது போன்ற சரங்கள் நெருக்கமாக வானில் தோன்றியது.அவை அர்ஜுனனை நோக்கி வந்தன.கொள்ளிக்கட்டைகள் ஆகாயத்திலிருந்து விழுந்தன.திக்குகள் பிரகாசிக்கவில்லை. பயங்கர இருளானது  விரைவாக அந்த சேனையை வந்தடைந்தது. காற்றும் உஷ்ணமாக வீசியது.” என்று ஆரம்பித்து உலகம் கோரமான அந்த ஆயுதத்தால் என்ன பாடுபட்டது என்பதை வியாஸர் விரிவாக விளக்குகிறார். ஆக மேலை நாட்டு அறிஞர்கள் பலரும் வியக்கும் இந்திய இதிஹாஸங்களைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகள் இந்தியர்களின் புராதன தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகின்றன.

AGNI3

அதுமட்டுமின்றி கோரமான ஆயுதங்களை கோபத்தால் கூட உலகின் மீது பிரயோகிக்கக் கூடாது என்பதையும் இந்திய புராண இதிஹாஸங்கள் விளக்குவது நமது முன்னோர்களின் பொறுப்புணர்ச்சியை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக தர்மர் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்று வந்த அர்ஜுனனிடம் பாசுபத அஸ்திரத்தை தமக்குக் காட்டுமாறு கேட்ட போது அதை விளையாட்டாகக் கூடப் பிரயோகிக்கக் கூடாது என்று கட்டளை வருவதால் அதன் மஹிமையை அவன் அவருக்குக் கூட காண்பிக்கவில்லை.

 

 

இதே போல பிரம்மாஸ்திரத்தை விடுவிக்கும் ஆற்றல் பெற்றிருந்தும் கூட அதன்  மஹிமையை உணர்ந்த அனுமன் அதற்குக் கட்டுப்பட்டிருந்ததையும் ராமாயணத்தின் மூலம் உணரலாம்.

திவ்ய அஸ்திரங்களை எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் இருந்ததை நமது இதிஹாஸ புராணங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 

அறிவியல் வியக்கும் அஸ்திரங்களின் மஹிமைக்கு ஓர் எல்லையே இல்லை!

மக்கள் கோஷம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை: written by Santanam Nagarajan

 

 

Related Topics already available here; please read the following articles written by Santanam (London)  Swaminathan in this blog:

 

Is Brahmashtra a Nuclear Weapon?

Maruti Miracle: 660 Kms per Hour

How Did Rama Fly His Pushpaka Vimana/plane?

Time Travel by Two Tamil Saints

Free Charter Flight to Heaven

Teleportation Miracles in Hindu Scriptures

Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin

God With A Laser Weapon

Hindu God With ‘’An Ipod’’

Scientific Proof for Samudrika Lakshan

Do Hindus believe in ETs and Time Travel?

Bhishma- First Man to Practise Acupuncture

Why Do Hindus Follow Homeopathy?

Hindu Views on Comets

Science Behind Swaymbu Lingams

Aladdin’s Magic in Ramayana

Aladdin’s Magic Lamp and Tamil Saints

What is Special About India?

Science Behind Deepavali ( Two Part Article)

Hindus’ Future Predictions ( Two Part Article)

Lie Detector in Upanishads

Head Towards North is Wrong

Spaceships and Special Prayer Days

Miracles! You Can Do It

Great Engineers of Ancient India

The Amazing Power of the Human Mind

 

To get the above articles, type any of the article titles and add ‘from tamilandvedas.wordpress.com or from swamiindology.blogspot.com

 

For further list contact swami_48@yahoo.com