அக்பரின் சாப்பாட்டில் 40 வகை உணவுகள் (Post No.5931)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:13 JANUARY 2019
GMT Time uploaded in London –19-42
Post No. 5931
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

tags அக்பர், உணவு, புறா, குரங்குக் கோவில்

2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)

Akbar worshiping Sun

Written by London swaminathan

Date: 17 August 2018

 

Time uploaded in London – 7-34 AM  (British Summer Time)

 

Post No. 5331

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கிருக்க நிழலாகாதே –

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

இனிமை மிக்க பனையின் ஒரு பழத்தை விதையாக ஊன்றி அது வானோங்கி செழித்து வளர்ந்தாலும் ஒருவர்கூட நிற்கக் கூடிய நிழலை அது தராது.

மொகலாய மன்னனான ஷாஜஹானின் புதல்வனான அவுரங்கசீப் , கல்வி கேள்விகளில் சிறந்தவன்; ஆனால் மஹா மூர்கன். மதவெறியன்; பேராசை பிடித்த கொலைகாரன். தனது மூன்று சஹோதர்களை அவர்களின் புதல்வர்களோடு கூண்டோடு கொலை செய்து சிங்காதனம் ஏறினான். ஷாஜஹானை நீ கட்டிய தாஜ்மஹலை பார்த்துக்கொண்டே செத்துப்போ என்று சாகும் வரை சிறையில் அடைத்தான். ராஜ்யத்தை சரியாக ஆளத் தெரியாமல் குடிமக்களையும் சிற்றரசர்களையும் பகைத்துக் கொண்டான். அனைவராலும் வெறுக்கப்பட்டு, முடிவில் உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு செத்தான். அவனோடு மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெயரளவுக்கு அரசர் என்று ஓரிருவர் இருந்தனர். அரச சம்பத்து கோடிக்கணக்கில் இருந்தும் அவனோ அவனது குடிமக்களோ மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவன் பனை விதபோல ஓங்கி வளர்ந்தான். ஆனால் ஒருவருக்கும் நிழல் தர முடியவில்லை.

xxx

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

தெள்ளி எடுக்கத்தக்க ஆல மரத்தின் சிறு விதையானது, தெளிந்த நீர்க்குளத்தில் உள்ள சிறிய மீனின் முட்டையை விடச் சிறிதானாலும், பெருமை பொருந்திய யானையோடு அழகிய தேரும், குதிரையும் காலாட் படைகளும் கொண்ட மன்னரோடு தங்குவதற்கு நிழல் தரும்.

 

பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் நிழல் தரும். ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.

 

ஹுமாயூன் புத்திரனான அக்பர் நிராதரவற்ற நிலையில், தாயாரான ஹாமிடாவுக்கும் சாப்பாடு போட முடியாத நிலையில் ஸிந்து தேச காட்டுப் பகுதியில் பிறந்தார். அவர் பட்ட கஷ்டம் சொல்லத் தரமன்று; தனது 18ஆவது வயதில் வளர்ப்புத் தந்தையான பைராம்கானை அடக்கிவிட்டு தானே சிங்காதனம் ஏறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து வட இந்தியா முழுதையும் வசப்படுத்தி ஆட்சி புரிந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் போர்கள் நடந்தன; ஆனால் மக்கள் கலகம் என்பது கிடையாது. அவரும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி, கேள்விகளில் சிறந்தோருக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தார்.

மக்களின் சௌகரியங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தார். எப்போதும் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அறிஞர் குழுவால் சூழப்பட்டு கீர்த்தி பெற்றார். அவர் கூட்டிய தர்பாரில் பொதுமக்கள் யார் சிபாரிசு இன்றியும் மனுக்களைத் தரமுடிந்தது. உடனே அதற்கு நடவடிக்கையும் எடுத்து புகழ் பெற்றார். மக்கள் அவரை பழமரத்தை நாடும் பறவைகள் போல நாடினர்.

 

-SUBHAM-

அக்பரின் மந்திர சக்தியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் (Post No.5243)

WRITTEN by London swaminathan

Date: 21 JULY 2018

 

Time uploaded in London – 16-48  (British Summer Time)

 

Post No. 5243

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மொகலாய மன்னன் அக்பர் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகள்!

 

அபுல் பாசல் (1551 – 1602 பொது ஆண்டு) என்பவர் அக்பர் என்ற மொகலாய மன்னரின் அரசவையில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவர் அக்பரின் வாழ்ககையை மூன்று புஸ்தகங்களாக எழுதினார். அந்தப் புஸ்தகத்தின் பெயர் அக்பர் நாமா; அதன் மூன்றாவது புஸ்தகத்துக்கு அயினி அக்பரி என்ற பெயரும் உண்டு.

அவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.

 

இத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

 

கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ!

 

  1. அக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.

 

2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.

 

3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.

 

4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.

 

5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்

 

6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.

 

7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.

 

8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்

 

9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.

 

10.பழைய சம்பிரதாயங்களை முரட்டுத்

தனமாகப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.

 

11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ   ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்

12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.

 

13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.

 

  1. காலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.

 

15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.

 

  1. மல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.
  2. தஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.

 

18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்

 

19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.

 

20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.

 

21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையாலும் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.

 

22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் காணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில்  அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.

 

23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.

 

24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.

 

  1. ஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.

 

26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.

 

27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.

 

  1. இவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.

 

29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் எழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.

 

30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்

 

  1. ஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)

 

  1. தானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது. கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.

இவ்வாறு அபுல் பாஸல்,  அயினி அக்பரியில் செப்புகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

–சுபம்–

 

அக்பர் பற்றிய 3 சுவையான சம்பவங்கள் (Post No.3989)

Translated by London Swaminathan

Date: 10 June 2017

Time uploaded in London- 14-58

Post No. 3989

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

contact: swami_48@yahoo.com

ரெவரெண்ட் ஆஸ்பார்ன் மார்டின் என்பவர் 1914 ஆண்டில் ‘இந்தியாவின் கடவுள்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் ஆங்கிலத்தில் தந்துள்ள மூன்று சம்பவங்களைத் தமிழில் தருகிறேன்.

All the three stories are summarised from ‘The Gods of India’ by Rev E Osborn Martin, London, year 1914.

 

 

அக்பர் பூர்வ ஜன்மத்தில் இந்து சந்யாசி!

ஆக்ரா கோட்டையில் முகுந்தா என்பவரின் சிலை உள்ளது. இந்த முகுந்தனின் கதை என்ன வென்றால் அவர் முன் ஜன்மத்தில் ஒரு இந்து சந்யாசி. ஒரு நாள் அவர் பசும்பால் குடிக்கையில் பசுவின் ஒரு முடி (ரோமம்) அவர் வயிற்றுக்குள் சென்றுவிட்டது; பாலை வடிகட்டாமல் குடித்ததால் நேரிட்ட தவறு இது. ஆகவே பிராயச்சித்தமாக ஆக்ரா கோட்டையினை ஒட்டி ஓடும் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார். எவ்வளவோ பெயர்கள் தடுத்தும் தனது தவறுக்கு தனக்குத் தானே தண்டனையும் கொடுத்துக்கொண்டார்.

 

இவர் எவ்வளவுதான் தண்டனை கொடுத்துக் கொண்டாலும், யமனின் கணக்குப்படி, அது போதவில்லை. ஆனாலும் இவர் தவம் செய்த நல்ல சந்யாசி. ஆகவே இவரை அடுத்த ஜன்மத்தில் மொகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியாக– அக்பர் சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார்.

அக்பரிடம் வந்த இந்துப் பேய்!

காலரா, அம்மை முதலிய நோய்கள்  தெய்வக் குற்றங்களால்தான்   வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகவே நோய் வரும் பருவத்தில், அதைத் தடுக்க பிரார்த்தனை, விழாக்கள் ஆகியன செய்வர். ஆனால், சாதாரண மனிதனை கும்பிடும் வழக்கம் அபூர்வமே; அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது.

 

பண்டல்கண்ட் பகுதியில் ஒரு ராஜா இருந்தார். அவர் பெயர் வீர சிம்ம தேவன். அவருக்கு இரண்டு புதல்வர்கள்; அவர்களுடைய பெயர்கள் ஹரதர், ஜாஜர். அகபரின் மகன் ஜஹாங்கீர்,  ஹரகரரைக் கொண்டு அபுல் பாசல் என்ற பெரிய இலக்கிய கர்த்தாவைக் கொலை செய்யச் செய்தார். அபுல் பாசல் அக்பரின் அரசவையை அலங்கரித்த எழுத்தாளர். அயினி அக்பரி என்ற பெயரில் அக்பரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்.

 

காலம் உருண்டோடியது; வீர சிம்மன் இறந்தான்; உடனே இரு புதல்வரில் ஒருவரான ஜாஜர் பதவிக்கு வந்தான். தனது சகோதரன் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தான். உடனே தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி ஹரதருக்கும் அவனது தோழர்களுக்கும் ஒரு விருந்து வைத்து அதில் விஷத்தைக் கலக்கச் செய்து கொன்று விட்டான். இது நடந்தது கி.பி.1627ல்.

இதற்குச் சில காலத்துக்குப் பின்னர் ஜாஜரின் சகோதரி, இளவரசி கம்சவதிக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவரது தாய் எல்லோருக்கும் பத்திரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தாள்;

“அட! செத்துப் போன சகோதரனுக்கும் ஒரு பத்திரிக்கை வைக்க மறந்துவிடாதே”– என்று கிண்டல் தொனியில் சொன்னான் ஜாஜர்.

ஆனால் கம்சவதி உண்மையிலேயே ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹரதரின் சமாதிக்குப் போய் புலம்பினாள்

திடீரென்று கல்லறைக்குள்ளிருந்து ஒரு கை நீட்டி அந்தத் திருமணப்  பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு கல்யாணத்துக்கு வருவதாக உறுதியும் கூறியது.

திருமண நாளில் ஹரதர் (பேய்) வந்த அடையாளங்களும் தெரிந்தன. தக்க மரியாதைகளுடன் ஹரதர் வரவேற்கப்பாட்டார். அன்று இரவு அந்தப் பேய் அக்பரின் படுக்கை அறைக்குச் சென்று “எனக்கு ஊர் தோறும் சின்னம் ஏற்படுத்து. உனது நாட்டில் இயற்கை சேதம் ஏதும் வராமல் காப்பேன்” என்று ((பேய்)) உறுதி கூறியது. அதன்படி அக்பர் சாம்ராஜ்யத்தில் பல இடங்களிலும் ஹரதர் ( பேய்க்கு) நினைவுச் சின்னங்கள் எழுப்பபட்டன. இன்றும் கிராம மக்கள் பலரும் அந்த சின்னங்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கதையில் கொஞ்சம் உதைப்பது கால வழுவமைதி ஆகும். அதாவது ஹரதர் இறந்தது 1627 ஆம் ஆண்டில். ஆனால் அக்பரோ அவருக்கு முன்னதாக 1605 ஆண்டில் இறந்தார். ஆகவே பேய் வந்தது அக்பரின் படுக்கை அறையாக இருக்க முடியாது. ஒரு வேளை  ஜஹாங்கீரின் படுக்கை அறையாக இருக்கலாம்.

சூர்ய நமஸ்காரப் பிரியன்!

அக்பரின் மனைவியரில் பலர் இந்துக்கள்; அவருக்கு சர்வ சமய ஒற்றுமையில் ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அவருக்கு சூரிய நமஸ்காரத்தில் ஆர்வம் ஏற்படவே சூரியனின் 1001 பெயர்களை எழுதி தினமும் படித்து வந்தார் (சூர்ய சஹஸ்ரநாமம்)

 

காலை, நன்பகல், மாலை நள்ளிரவு ஆகியவற்றில் சூரிய தேவனை வழிபட்டார். மக்களும் கும்பிடுவதற்கு வசதியாக 4 காலங்களில் பாண்டு வாத்ய இசையை முழங்கச் செய்தார். அவர் எப்படி தலையில் குட்டிக் கொண்டார், காதைப் பிடித்துக் கொண்டார் என்ற விவரங்களையும் சேர்த்து அபுல்பாசல், தனது அயினி அக்பரி புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்பர் 1605ஆம் ஆண்டில் இறந்தார்.

 

-சுபம்–

ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும் (Post No. 2531)

viveka lanka

Written by S Nagarajan

 

Date: 12  February 2016

 

Post No. 2531

 

Time uploaded in London :–  8-01  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

akbar-1

Picture of Akbar

12-2-2016 பாக்யா இதழில் வெளியாகி உள்ள கட்டுரை

 

ச.நாகராஜன்

 

 

 

முகலாய மன்னர்களிலேயே வித்தியாசமானவர் அக்பர். அவர் வாழ்நாள் இறுதி வரை கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார்.

அவர் பயணப்படும் போதெல்லாம் கங்கை ஜலம் குடம் குடமாகப் போதுமான அளவு கூடவே எடுத்துச் செல்லப்பட்டது.

அக்பருக்கு சூரியனிடத்தில் அளவு கடந்த பக்தி. தினமும் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம்.

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்து வந்ததால் மிக்க ஆரோக்கியத்துடன் அவர் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட அக்பரிடம் ஸ்வாமி விவேகானந்தருக்கு அலாதி ஈடுபாடும் மரியாதையும் உண்டு.

 

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிக்குப் பின்னர் ப்ரிவ்ராஜகராக தன்னந்தனியே தான் யார் என்று சொல்லாமல் ஸ்வாமி விவேகானந்தர் பாரதம் முழுவதும் சுற்றி வந்தார்.

அவரது புத்தி கூர்மையையும் வேதாந்தத்தை அவர் விளக்கும் விதமும் அவரது பரந்த அறிவையும் கண்டு வியந்து அவரிடம் மரியாதை கொண்ட சமஸ்தான மன்னர்கள் பலர்.

அவர்களுள் ஒருவர் கேத்ரி மன்னர். ஸ்வாமிஜியிடம் அலாதி பக்தி கொண்ட அவர் தன்னை அவருடைய சீடனாகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பித்தார்.

 

 

ஸ்வாமிஜிக்கும் அவரது அன்னைக்கும் இருநூறு ரூபாயை அவர் மாதம் தோறும் உதவித் தொகையாக அனுப்பி வந்தார் என்றால் அவரது பக்தியை நாம் நன்கு ஊகிக்க முடியும்.

ஆக்ராவுக்கு அடுத்து உள்ள சிகந்தராவில் அக்பர் தான் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென ஒரு அற்புதமான சமாதியை அமைக்கலானார். 119 ஏக்கர் பரப்பில் இது 1600ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. அக்பரே கட்டிடத்தைத் தன் விருப்பப்படி வடிவமைத்தார். 1605இல் அவர் மறையவே அவரது மகன் ஜிஹாங்கீர் அதை 1613இல் முடித்தார்.

 

samadhi of akbar

Picture of Tomb of Akbar

ஆனால் அவுரங்கசீப் காலத்தில் ஜட் ராஜாவான ராஜாராம் ஜட் அநத சமாதியை முற்றிலுமாக அழித்தார். சமாதி முழுவதுமாக  கொளுத்தப்பட்டது. அக்பரின் எலும்புகளையும் அவர் எரித்தார்.

சமாதி சிதிலமடைந்தது. இதை பிரிட்டிஷ் அரசு காலத்தில்  லார்ட் கர்ஸன் பிரபு சிறிது சீரமைத்தார்.

இந்த சிதிலமடைந்த சமாதியை ஸ்வாமிஜி தன் சுற்றுப் பயணத்தின் போது பார்த்தார். அதுவோ கேத்ரி மன்னரின் ஆளுகையில் இப்போது இருந்தது.

 

தொண்டை அடைக்க கண்களில் நீர் அரும்ப, “அக்பரின் சமாதி இந்த நிலையில் இருக்கலாமா? மேற்கூரையில்லாமல் சூரிய வெளிச்சத்திலும் மழையிலும் இதை பார்க்கவே என் மனம் பொறுக்கவில்லையே” என்று அடிக்கடி அவர் கேத்ரி மன்னரிடம் கூறுவார்.

 

 

ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கேத்ரி மன்னரின் மனதில் ஆழப் பதிந்தது. குருநாதரின் ஆசை அல்லவா அது!

விவேகானந்தர் பின்னர் அமெரிக்கா சென்று சர்வமத மகாசபையில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று விட்டார். ஸ்வாமிஜியை அறிந்த மன்னர்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. மக்களிடமோ பெரும் எழுச்சி ஏற்பட்டது.

 

 

யாருமறியாத சாதாரண சந்யாசியாக பாரதத்தை விட்டுச் சென்றவர் அகில உலகப் புகழுடன் திரும்பி வந்தார்.

ஒரு நாள் கல்கத்தாவிற்கு வரும் வழியில் அவருக்கு ஒரு செய்தி வந்தது. கேத்ரி மன்னர் அக்பரின் சமாதியை புனருத்தாரணம் செய்து வந்ததாகவும், ஒரு நாள் சாரம் முழுவதுமாக கீழே சரிந்து விழவே உயரத்திலிருந்த மன்னரும் விழுந்து மாண்டார் என்றும் ஸ்வாமிஜியிடம் தெரிவித்தார்கள்.

மிகவும் மனம் வருந்தினார் விவேகானந்தர்.

 

vivekaa maly

நீண்ட காலமாகத் தான் விரும்பியபடியே சமாதி நன்கு அமைக்கப்பட்டதை நினைத்து மகிழ்வதா? அல்லது தன்னால் உத்வேகமூட்டப்பட்ட தன் சீடர் கேத்ரி மன்னர் இதற்காக உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி வருந்துவதா!

நெடுநாள் அவர் மனம் கலங்கி வருந்தி இருந்தார்.

 

 

“கேத்ரி மன்னர் சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்து இறந்தார். எனவே என்னைச் சுற்றி அனைத்தும் இருளாக உள்ளன”  என்று எழுதினார் அவர்.

 

அக்பரின் சமாதியைப் புனரமைக்க உத்வேகம் ஊட்டிய மாபெரும் வீ ரத் துறவி விவேகானந்தர் என்றால் அந்தப் பணியில் உயிர்த் தியாகம் செய்த மாபெரும் மன்னராக கேத்ரி மன்னர் திகழ்கிறார்!

*******