ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது?- PART 2 (Post No.10,045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,045

Date uploaded in London – 2 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19. எண்களைக் குறிப்பிடும் ரிஷிகள் எனக்கு நூறு செல்வங்களை, 1000 செல்வங்களை அல்லது பசு மாடுகளை தா என்று வேண்டுகிறார்கள் . எப்போது பார்த்தாலும் இவர்களுக்கு டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM  நினைப்புதானா ? நல்ல வேளை . இவர்கள் இதைக் கண்டுபிடித்திராவிடில், பசு மாடுகள் மற்றும், பாலின் பயனைக் கண்டுபிடித்திராவிடில் , உலக ஆரோக்கியமும் இராது; கம்ப்யூட்டர், ராக்கெட், விண்வெளிப் பயணமும் நடந்திராது ! வாழ்க  ரிக் வேத ரிஷி முனிவர்கள் .

20.எல்லா முனிவர்களும் நாங்கள் உனக்காக தர்ப்பைப் புல்லை வெட்டி பரப்பி இருக்கிறோம்; இதன் மீது அமர்க என்று பாடுகிறார்கள் ! என்ன அதிசயம்! இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதோடு இன்றும் பிராமணர்களும் , ஏனைய  ஜாதியினரும் (ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும்)  தர்ப்பை மீது அமரும்படி இறந்தோரை அழைத்து நீரும் எள்ளும் வார்க்கிறார்களே ! இது இந்துக்கள் ஒரே சமுதாயம், நீண்ட கால பாரம்பர்யத்தைப் பின்பற்றும் சமுதாயம் என்பதைக் காட்டுகிறது.

21.’வ்ருத்ரன்’ என்ற அசுரனையும் ‘அஹி’  என்னும் பாம்பையும் இந்திரன் கொன்றதை பத்து மண்டலங்களில் உள்ள ரிஷிகளும் பாடுகின்றனர். ‘வ்ருத்ர’னும் ‘அஹி’ யும்  இயற்கைச்  சக்திகள் என்பதை வெள்ளைக்காரனும் புரிந்து கொண்டுள்ளான் .

22. என்ன அதிசயம் ! ‘பதி’ என்பதை ஆணுக்கும் ‘வதி’, ‘மதி’ என்பதை பெண்ணுக்கும் ரிக்  வேதம் முழுதும் காண முடிகிறது; இன்றும் என் நண்பர்கள் பெயரில் சரஸ் வதி, இந்து மதி , கண பதி, பார் வதி, வசு மதி, லட்சுமி பதி என்ற பெயர்கள் உள்ளன. கட்டாயம் சிந்து  சமவெளி முத்திரைகளில் (ஜாடி அல்லது மீன் வடிவ முத்திரை)இது இருக்க வேண்டும் !

23.வேதம் முழுதும் ‘கடவுளருக்கு  எல்லாம் தாய் அதிதி’ என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதிலும் பெண்ணுக்கே முதலிடம். இளா ILA , பாரதி BHARATI , சரஸ்வதி SARASVATI  (அலைமகள், கலைமகள், மலைமகள்) என்றும் போற்றுகின்றனர் . 20+++ பெண் கவிஞர்கள் , 30 பெண் தெய்வங்கள் முதலியோரை முனிவர்கள் பாடுகின்றனர் ; உலகில் பெண் தெய்வங்களை வழிபடும் பழைய மதம் இந்து மதம் என்பதற்கும் இன்றுவரை பெண்களை தெய்வமாகப் போற்றி வழிபடும் மதம் இந்துமதம் ஒன்றே  என்பதற்கும் வேதமே  சான்று

24.தானம், ஈகை முதலியவற்றைப் போற்றும் பாடல்களைப் பார்க்கையில் திருக்குறள், நாலடியார், பழமொழி நூல்கள் நினைவுக்கு வருகின்றன.

25.எப்போதும் வானத்தில் செல்லும் குதிரை, தேர் பற்றியே பாடுகின்றனர். அந்தக் காலத்தில் அவர்கள் விண்  கப்பலில் பூமிக்கு வந்தார்களோ! இதை கற்பனை என்று யாராவது கருதினால், உலகில் முதலில் விஞ்ஞான புனைக் கதைகளை SCIENCE FICTION எழுதியவர் இந்துக்கள்தான் என்பதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் ‘ததிக்ராவண்’ என்னும் பறக்கும் குதிரை பற்றிப் பாடுகின்றனர்/ மந்திரம் சொல்கின்றனர். 

26.அட அதிசயமே ! 100 இடங்களில் கடல் பற்றிப் பாடுவதோடு ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்கிறார்களே

27.இவர்கள் சிந்து – சரஸ்வதி சமவெளியில் மட்டும் இல்லாமல் ‘மலை’ ‘கடல்’ பற்றியெல்லாம் பாடுகின்றனர். சிந்து முதல் யமுனை வரையுள்ள பிரதேசத்தை ஒரே மந்திரத்தில் சொல்லுகின்றனர் . அப்படியானால் வட இந்தியா முழுதும் இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்!

28.ஏராளமான பறவைகள், மிருகங்கள் பற்றிப் பாடுகின்றனர். சிங்கம், யானை, ஒரே இடத்தில் புலி பற்றி எல்லாம் பாடுகின்றனர். நிறைய இடங்களில் ஓநாய்- ஆடு உவமை வருகிறது ; இயற்கையை ரசித்த மக்கள் போலும் .

29.போர், பகைவர், தாசன், தஸ்யூ சிம்யூ, பாணி , ராக்ஷஸ, கந்தர்வர், சித்தர் பற்றி எல்லாம் பாடுகின்றனர். இவர்களில் பலர் ‘மனிதர்களை அடித்து உண்ணுவோர்’ CANNIBALS  என்றும், இரவில் தாக்குவோர் என்றும், கடவுளை வணங்காதோர் (GODLESS) என்றும் சொல்லுகின்றனர் இப்படி சில கும்பல்கள் இன்றும் இருப்பதைக் காண்கிறோம்

30.குகையில் மறைத்துவைக்கப்பட்ட பசுக்கள் பற்றியும் அவற்றை இந்திரன் மீட்டது பற்றியும் நிறைய ரிஷிகள் பாடுகின்றனர் . இதற்கு மறைபொருள் உளது. புறநானூறு , மஹாபாரதம் ஆகியவற்றில் ‘ஆநிரை கவர்தல்’ வந்தாலும் இதை இரு பொருள்பட ரிஷிகள் உபயோகித்தனர் போலும். சாயனர் என்ற உரைகாரரும் பசு என்பதற்கு பல அர்த்தம் கற்பிக்கிறார்.

31. ஈற்றடிகள் ஒரே மாதிரியாக முடியும் நிறைய துதிகள் பத்து மண்டலங்களிலும் உள . இதே போல நாடகத்துக்கு முன்னோடியான உரையாடல் பாடல்களும் உள . இவை எல்லாம் இலக்கிய கலை வளர்ச்சியைக் காட்டுகின்றன.

32. இந்திரனை ‘’பாடல்களை விரும்புவோன் LOVER OF SONGS  என்று எல்லா ரிஷிகளும் பாடுகின்றனர். சாம கானம் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. ஏழு என்ற எண் சப்த ஸ்வரங்களைக் குறிப்பிடலாமென்ற தொனியிலும் மந்திரங்கள் உள்ளன. இந்திரனை நாட்டியக்காரன் dancer என்றும் போற்றுகின்றனர். கந்தர்வர் என்னும் பாடும் பாணர்கள் பற்றியும் மந்திரங்கள் உள்ளன. பாடலும் ஆடலும் போற்றப்பட்ட சமுதாயம் வேத கால சமுதாயம்

33. விவசாயம், பார்லி/யவம் , அரிசி, தானியம், அப்பம்,கஞ்சி போன்றவை வருவதால் விவசாய சமூகம் என்பது தெரிகிறது.அபால என்ற பெண் தனக்கு தோல் வியாதி நீங்கி முடி வளரவேண்டும், தன் தந்தைக்கு வழுக்கைத் தலையில் முடிவளரவேண்டும், நிலத்தில் பயிர்கள் வளரவேண்டும் என்று பாடுகிறார். இன்னொரு புலவர் அரிவாள், அறுவடை, நிறைய தானியம் பற்றிப் பாடுகிறார். வேதம் முழுதும் விவசாயம் உளது.

34.மிகவும் அதிசயம் ! ருதம்TRUTH  என்னும் இயற்கை விதியும் /ஒழுங்கும், சத்தியமும் முழுதும் போற்றப்படுகிறது.

35. கவசம் போன்ற பாடல்களின் ‘மூலம்’ ரிக்வேதம், மற்றும் அதர்வ வேதத்தில் உளது

36. உலகில் தினசரி வழிபாட்டில் யாப்பு இலக்கணத்தைப் பயன்படுத்தும் ஒரே சமுதாயம் இந்துக்களே. காயத்ரீ , பிருஹதி , 7 வகை யாப்புகள் குறித்து ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன. பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் 7 வகை யாப்புகளையும் சொல்லி வழிபடுகின்றனர். இலக்கணத்தை வழிபடும் சமுதாயம் என்றால் எந்த அளவுக்கு கல்வி அளவு இருக்க வேண்டும்! அதைப் பெண்களுக்கும் பெயராகச் சூட்டுவது அதை விட அருமை !!

To be continued…………………………

 tags – ரிக் வேத,  அதிசயம் , part 2

xxxxxxxxxxxxxxxxxxxxx

ஆட்டுப்பால் அதிசயம்! (Post No.7389)

ஆட்டுப்பால் அதிசயம்! (Post No.7389)

Written by London Swaminathan

Date – 27th December 2019

Post No.7389

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

மார்ச் 8, 1992ல் தினமணியில் அதிசய ஆட்டுக்குட்டி பற்றி எழுதினேன்.

பின்னர் வந்த செய்திகளின்படி அது 1997ல் இறந்ததும் அது போல பல

ஆட்டுக்குட்டிகள் குளோனிங் (அச்சுப் பிரதி) செய்யப்பட்டதும் தெரிகிறது .

இணைக்கப்பட்ட செய்திகளில் மேல்விவரம் காண்க.

Bottom of Form

Tracy, a transgenic sheep, Scotland, 1999

Thumbnail5
Thumbnail6
Thumbnail7

Click the thumbnails to enlarge

‘Tracy’ the sheep (1990-97) was genetically modified to produce a human protein, alpha antitrypsin, in her milk. The protein is being clinically tested by PPL Therapeutics, who also donated Tracy to the Science Museum, with the aim of finding a treatment for the symptoms of cystic fibrosis. Tracy was born in 1990 after human DNA was inserted into fertilised sheep embryos at the Roslin Institute near Edinburgh, Scotland. In an attempt to reproduce animals such as Tracy, the Roslin Institute later cloned Dolly the sheep.

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-32 am

Post No. 6925

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

–subham–

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்! (Post No.4276)

Written by London Swaminathan

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 19-26

 

Post No. 4276

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

 

அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான். அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)

சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

 

அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர். இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

 

திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு

சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.

நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர். சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது

பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன. சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள். முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன்   சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

 

 

பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின. அப்படி ஒரு குளிர்ப்  பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்

 

பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர். இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.

 

(சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)

சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது. உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன்  குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது. சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

 

இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

 

இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர். நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை  வழிபடுவர்.

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN)  நாகரீகத்தை நிறுவியது; ( எனது பழைய ஆய்வுக் கட்டுரையில் முழு விவரம் காண்க) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

நான் லண்டன் மாநகரில் தேம்ஸ் நதி தீரத்தில் தினமும் இரு முறை  மட்டுமே சந்தியா  வந்தனம் செய்கிறேன். மதிய வேளைகளில் வெளியே இருப்பதால் செய்ய இயலவில்லை. ஒருநாள், நாம் எவ்வளவு பெயர்களை இதில் சொல்கிறோம் என்று கூட்டல், கழித்தல் கணக்குப் போட்ட போதுதான் 100 பேருக்கும் மேலாக வந்தது தெரிந்தது. அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை அடைந்தேன்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் “பிராமணர்  இல்லையேல் தமிழ் இல்லை” (No Brahmins, No Tamil) என்று சங்க காலம் பற்றி ஒரு கட்டுரையும், பிராமணர்களை கின்னஸ் நூல் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஒன்பது கட்டுரைகளையும் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இதையும் படிக்க வேண்டுகிறேன்.

 

சிலர் நர்மதை நதி பற்றிய மந்திரம் சொல்லுவதில்லை; வடக்கத்தியர் நகக்கிரஹ தர்ப்பணம் செய்வதில்லை. ஆகாயால்தான் கூட்டல் கழித்தலுக்குப் பின்னர் நூற்றுக்கு மேலான பெயர்கள் என்று சொன்னேன். யமனுக்கு மட்டுமே பத்து பெயர்கள் வரை சொல்லுகிறோம்.

 

சந்தியாவந்தனம் பற்றிய இன்னொரு வியப்பான செய்தி– காயத்ரி தேவியை  “உன்னுடைய மலை உச்சியில் உள்ள வீட்டுக்குப் போகலாம்” என்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த “சிகர” என்ற வார்த்தையை (ZIGGURAT) ஜிக்குராட் என்று அழைத்தனர். சுமேரியர்களும் மலை உச்சியில் தெய்வத்தை வைத்தனர். ஆனால் அது எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. மோசசும் ஜீசசும் தோன்றும் முன்னர் துவங்கிய சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.

 

தினமும் மூன்று முறை சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனைக் கண்டால் ஒரு பெரிய கும்பிடும் போடுங்கள்.

நிற்க; இதோ பிராமணர் சொல்லும் தெய்வங்கள், புனிதர்களின் பட்டியல்:-

ஓம், அச்யுதா, அனந்தா, கோவிந்தா, விஷ்ணுவின் 12 பெயர்கள்- கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ச்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா,

கணேச தியானம், (ஆதி சைவர்களாக இருந்தால் சில மாறுபாடுகள் உண்டு)

 

ஏழு லோகங்கள்- பூர், புவ, சுவர், மஹ, ஜன, தபோ, சத்ய லோகங்கள்

காயத்ரீ மந்திரம் பல இடங்களில் வருகிறது

பரமேஸ்வர (ப்ரீத்யர்த்தம்); வைணவர்கள் வேறு பெயர் சொல்லுவர்.

ஆப: (நீர்), சூர்யன், அக்னி,

பிரம்மன் (பிரும்மா அல்ல), நவக்கிரஹங்கள்- சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ர, சனைச்சர, ராஹு ,கேது

பிரம்மா, பரமாத்மா,

சப்த ரிஷிகள்: அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட,கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ்

 

யாப்பிலக்கண அணி: காயத்ரீ, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி

ஏழு வேத காலக் கடவுளர்: அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விச்வே தேவா, தேவதா:

 

வாமதேவ ரிஷி, காயத்ரீ, சாவித்ரீ, ஸரஸ்வதீ, விச்வாமித்ர ரிஷி

அபிவாதயே என்னும் மந்திரத்தில் ஒருவருடைய கோத்ரம், ரிஷிகளின் பெயர்கள் வரும். எடுத்துக் காட்டாக எனது குலத்தில், வைஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌசிக, ஆபஸ்தம்ப, ஸ்வாமிநாத: (My name)

 

சந்தியா, சாவித்ரி, காயத்ரீ, சரஸ்வதி, சர்வ தேவதா:

(சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும்; கூட்டல் கழித்தலுக்குப் பின்னரும் 100 பெயர்களுக்கு மேல்!)

 

4 திசைகள் – கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளுக்கு வந்தனம்

மேல், கீழ், இடைவெளி,பூமி, ம்ருத்யவே,

யமன்

 

(யமன், வருணன், சூரியன், காயத்ரீ முதலிய தெய்வங்களுக்கு பத்து, பதினைந்து சிறப்புப் பெயர்கள் வரும். அவைகளையும் சேர்த்தால் 150 பெயர்கள் வரை செல்லும்)

 

எடுத்து க்காட்டாக யமன் பற்றிய பெயர்களை மட்டும் தருகிறேன்:

யமன், தரமராஜன்,ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்தாய, காலாய, சர்வபூதக்ஷயாய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.

 

பின்னர் க்ருஷ்ண பிங்களம் ( சங்கர நராயணன்= ஹரிஹரன்)

 

நர்மதை நதிக்கு வணக்கம்- ஜனமேஜய, ஆஸ்தீக மகரிஷி- ஜரத்காரு- பன்னகேப்ய:-

சூரியன் பற்றிய நீண்ட மந்திரம்

நாராயணனுக்கு எல்லாம் சமர்ப்பணம்

 

சவித்ரு தேவன்

ஓம் தத் சத்

90 பெயர்களுக்கு மேல் வரும் தெய்வங்களோடு யமன் பற்றி வரும் 13 பெயர்கள் மற்றும் இது போல ஒவ்வொரு மந்திரத்திலும் வரும் பெயர்களைச் சேர்த்தால் 150 பேருக்கும் மேலாக வரும்!

 

வாழ்க பிராமணர்! வளர்க சந்தியாவந்தனம்!!

 

Please read my old articles:-

Brahmins deserve an entry in to Guinness Book of Records …

tamilandvedas.com/2012/01/26/327

Brahmins deserve an entry in to Guinness Book of … That is why I say Brahmins deserve a mention in the Book of Records. 32. … by Tamil and Vedas on January 26, …

Brahmins deserve an entry in to Guinness Book of Records -Part 5

  • Brahmins | Tamil and Vedas
  • tamilandvedas.com/category/brahmins
  • … Asoka mentioned Brahmins first and … //tamilandvedas.com/2017/05/30/about-brahmins-buddha-and … “Brahmins deserve an entry in to Guinness Book of …

·         No Brahmins, No Tamil!! | Tamil and Vedas

tamilandvedas.com/2012/01/14/no-brahmins-no-tamil

No Brahmins, No Tamil!! … political parties in Tamil Nadu has misled the public to a great extent that they really believed Brahmins were aliens to Tamil culture.

·         No Brahmins, No Tamil!! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2012/01/no-brahmins-no-tamil.html

No Brahmins, No Tamil!! By S Swaminathan … literature would find out that without Brahmins Tamilwould have died or at least become poorer two thousand years ago.

–SUBHAM—

 

TAGS: பிராமணன், அதிசயம், சந்தியவந்தனம், 100 கடவுள்

 

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876)

amazing 1

Translated by London swaminathan

 

Date: 7 June 2016

 

Post No. 2876

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், வியாச பகவான், கண்ண பிரான், திருவள்ளுவர், உலக மஹா கவிஞன் காளிதாசன், மற்றொரு சம்ஸ்கிருதப் புலவன் ஆகிய பலர் உலக அதிசயம் எது? அத்புதம் எது? ஆச்சரியம் எது? என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமான, சுவையான பதில்களைத் தந்துள்ளனர்!

 narayana

1.நாராயணன் என்ற சப்தம் இருக்கிறது. வாயில் சொல் இருக்கிறது. எளிமையாக வசப்படுத்தலாம். அப்படியும் கோரமான நரகத்தில் மனிதர்கள் விழுகிறார்களே!! இதுவே அத்புதம்!!!

நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வசவர்தினீ

ததாபி நரகே கோரே பதந்தீதி ஏதத் அத்புதம்

–ஒரு சம்ஸ்கிருதக் கவிஞன்

 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதி, இங்கே வெளியிட்ட கட்டுரை இதோ:–

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? ( 10 நவம்பர் 2013)

 

2.கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

3.வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

4.காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

5.வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

 wow

6.காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

–சுபம்–

 

ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்! (Post No.2612)

Microsoft-HoloLens-Skype-RGB

Written by S Nagarajan (written for Bhagya Magazine)

 

Date: 9 March 2016

 

Post No. 2612

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 11-3-2016 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை
இனி யார் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்!

ச.நாகராஜன்

 

“நமது தொழில்நுட்பம் மனிதகுலத்தையும் மீறி விட்டது” – ஐன்ஸ்டீன்

 

18ஆம் தேதி,  பிப்ரவரி மாதம், ஆண்டு 2016.

இடம் : TED2016 மாநாடு வான்கூவர், கனடாவில் உள்ள ஒரு அரங்கம்.

இங்கு உலகின் அதிசயமான அறிவியல் நிகழ்வு ஒன்று நடந்தது.

ஹாலோ லென்ஸ் என்ற புதிய லென்ஸ் ஒன்றைத் தயாரித்த அலெக்ஸ் கிப்மேன் என்பவர்,  நாஸா விஞ்ஞானியான ஜெஃப் நோரிஸை டெலிபோர்ட் செய்து கனடா அரங்கத்தில்  செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அவரை நிற்க வைத்துக் காண்பித்தார்.

“ஆஹா, அந்த லென்ஸ் வேலை செய்கிறது” என்று உற்சாகமாக உரக்கக் கூவினார் .அலெக்ஸ்.

 

நாஸா விஞ்ஞானி நோரிஸ் அப்போது ஒரே சமயத்தில் நிஜமாக மூன்று இடங்களில் இருந்தார்.

 

முதலாவதாக அவர் தனது அறையிலேயே இருந்தார். ஹாலோகிராம் முறைப்படி ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் மாற்றப்படவே அவர் கனடாவில் உள்ள அரங்கத்தில் இருந்தார். அந்த அரங்கத்திலும் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரக பரப்பு அமைக்கப்பட்டிருந்ததால் அந்தப் பரப்பின் மீது அவர் நின்று கொண்டிருந்தார்.

 

ஆக, ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் அறிவியல் சாதனை மூலம் நோரிஸ் இருந்தார். இந்த நிகழ்வுக்குப் பெயர் ஹாலோகிராபிக்       ட்ரான்ஸ்போர்டேஷன் என்று பெயர்!

 

முதன் முறையாக உலகில் இது நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது.

ஹாலோகிராபி என்ற இந்த புதிய உத்தியானது ஒரு பொருளின் மீது பட்ட ஒளியைப் பதிவு செய்து கொண்டு அதை இன்னொரு இடத்தில் மூன்று பரிமாணமும் கொண்டதாக வழங்குகின்ற புது அறிவியல் உத்தியாகும்.

ஸ்டார் வார்ஸ் படத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் கதாபாத்திரங்களை திரையில் கண்டு களித்திருக்கிறோம். அதை உண்மையாக நடத்திக் காண்பித்தார் அலெக்ஸ்.

இது இனி உலகத்தையே மாற்றப் போகும் ஒரு உத்தியின் ஆரம்ப விழா.

 

இனி யார் வேண்டுமானாலும் தான் இருந்த இடத்தை விட்டு நகராமல் இன்னொரு இடத்தில் காட்சி தரலாம்!

holo lens

மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதிய சாதனம் உலகில் பெரும் புரட்சியைச் செய்யப் போகும் ஒன்று. இதுவரை தொலைபேசியின் மூலமாக பேசுகின்ற போது ஒருவருக்கு அருகில் இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இனி நிஜமாகவே இன்னொரு இடத்தில் நமக்கு வேண்டியவர் அருகில் மூன்று பரிமாணமாக  இருப்பது போல  யார் வேண்டுமானாலும் தோன்றலாம்

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஒரு சிறிய லென்ஸ், ஏராளமான சென்ஸர்கள், ஒரு ஹாலோகிராபிக் யூனிட் ஆகியவை உள்ளன.

நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் அதே கணத்தில் உள்ளது உள்ளபடியே இன்னொரு இடத்தில் காட்சி தர வைக்கும் இது நாளைய அற்புதம்!

 

இதன் ஒரு பகுதி இப்போதே பல இடங்களில் அனுபவத்துடன் உணரப்படுகிறது. இதற்கு தேவையானது ஒரு ஹெட் செட் தான்!

எடுத்துக்காட்டாகச் சொல்வது என்றால் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஹாலோலென்ஸ் மூலமாக மனித உடலை அங்கம் அங்கமாகப் பார்த்து மருத்துவத்தைப் பயில்கிறார்கள். வால்வோ நிறுவனம் ஹாலோ லென்ஸைத் பயன்படுத்த மைக்ரோசாப்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் புதிய வடிவமைப்பு கார்களை அறிமுகப்படுத்தப்போகிது. நாஸாவோ இந்தத் தொழில்நுட்பத்தை விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படுத்த இருக்கிறது.

 

 

இந்த புதிய தொழில்நுட்பத்தினால் என்னவெல்லாம் நீங்கள் செய்ய முடியும்?

வீட்டில் இருந்து கொண்டே இமய மலை உச்சியில் இருப்பது போலக் காண்பிக்க முடியும். உங்கள் வீட்டில் உள்ள காட்சிகளை தத்ரூபமாக அதே கணத்தில் இன்னொரு இடத்தில் டெலிபோர்ட் செய்ய முடியும்.

ஆக இனி யார் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் இரு இடங்களில் தோன்றலாம்!

 

பூமியின் மேலே நிலை கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இப்போதே ஹெட் செட் மாட்டிக் கொண்டு பூமியில் உள்ளவர்களுடன் மாயாஜாலக் காட்சி பாணியில் தொடர்பு கொள்ளப் போகின்றனர்.

 

இதன் உடனடிப் பயபாட்டைப் பற்றி மைக்ரோசாப்ட் ஒரு விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது.அதில் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தின் மூலமாக ஏற்படும் பயன்கள் விளக்கப்பட்டுள்ளன.

 

பெண்மணி ஒருவருக்கு ஒரு சிறிய பிரச்சினை! அவரது வீட்டில் சமையலறையில் உள்ள நீர்த்தொட்டி ஒழுகுகிறது. ஹெட்செட்டை மாட்டிக் கொண்டுள்ள அந்தப் பெண்மணி தனது நீர்த்தொட்டியை ஹாலோகிராம் மூலமாக இன்னொரு நகரத்தில் உள்ள ஒரு தொழில்நுடப நிபுணரிடம் காண்பிக்கிறார். அவர் உடனே எந்த இடத்தில் எந்த பைப்பை எப்படி செருக வேண்டும் என்று இடத்தைக் குறியிட்டுக் காட்டுகிறார். அந்தக் கணமே ஒழுகல் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. 3 டி எபெக்டினால் பிரச்சினையைப் புரிந்து கொள்வதும் சுலபம்; தீர்ப்பதும் சுலபம். ஹாலோஸ்டுடியோ என்ற கணினியின் புதிய அமைப்பில் இனி நாம் அனுபவிக்கப்போவது பல புதிய விந்தைகளை!

 

உலகம் மாறுகிறது – வேகமாக! விசித்திரமாக!!மாறுதலின் அங்கமாக மாறுங்கள்! மாயாஜாலம் புரியுங்கள்!! மகிழுங்கள்!!!

abdul kalam

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மறைந்த பாரத ஜனாதிபதியும் மாபெரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ எஸ் ஆர் ஓவில் (ISRO), ஆரம்ப காலத்தில், வேலை பார்த்த போது ஒரு சர்ச்சில் தான் விஞ்ஞானிகள் அனைவரும் பணிகளைச் செய்து வந்தனர். அருகில் இருந்த பீச் தான் அவர்களது ராக்கெட் ஏவு தளம். ராக்கெட்டின் பாகங்களோ சைக்கிளில் தான் கொண்டு செல்லப்பட்டன!

 

அவர் இயக்குநராக இருக்கும் போது தான் ஸ்பேஸ் லாஞ்ச் வெஹிகிள் எனப்படும் எஸ் எல் வி (SLV II) ரக ராக்கெட்டுகள் தயாரிக்கபட்டன. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அட்வான்ஸ்ட் மிஸைல் திட்டம் துவங்கப்பட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தி அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

ஒரு முறை ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது அங்கிருந்த மாணவர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். அவர்கள் விருப்பப்படியே ஒவ்வொருவரும் தனித் தனியே தன்னுடன் போட்டோ எடுக்க அவர் அனுமதித்தார். விழா துவங்கும் நேரம் நெருங்கவே அமைப்பாளர் கலாம் அவர்களை நோக்கி, ‘விழாவிற்குப் போகவேண்டும் என்று துரிதப் படுத்திநார்.

அவரை அமைதிப் படுத்திய கலாம் இந்த போட்டோ செஷன் முடிந்தால் தான் விழா துவங்கும் எந்று தீர்க்கமாக அறிவித்து விட்டார்.

 

எல்லா மாணவர்களுடனும் போட்டோ எடுத்து முடிந்த பின்னரே விழா துவங்கப்பட்டது.

 

மாணவர்கள் மீது அவ்வளவு பாசம் கொண்ட மாபெரும் மனிதர் அவர்!

*******

 

ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512)

IMG_2594

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2512

 

Time uploaded in London :– 4-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2597

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் – சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் – கடலோரமாகப் பொங்கும் நீரூற்று இருக்கிறது. இந்த ஊருக்கு கியாம என்று பெயர். இது ஒரு இயற்கை அதிசயம். கடலோரத்தில் குகைகள் இருந்து, அதன் ஒரு வாய் கடலிலும், மற்றொரு வாய் (திறப்பு) நிலத்திலும் இருக்கையில் இதுபோன்ற இயற்கை அதிசயம் உருவாகும் இதை BLOW HOLE என்பர்.

 

கடலின் அலை வீச்சு, காற்றோட்டம் முதலியவற்றைப் பொறுத்து சில நேரங்களில் 60 அடி உயரத்துக்கு வானில் நீர்த்திவலைகள் பீச்சி அடிக்கும். நாங்கள் சென்றபோது சுமார் 20 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் பொங்கியது. இது காணக் கண் கொள்ளாத காட்சி. அருகில் நின்றால், நம் மீது நீர்த்திவலைகள் பட்டு நம்மை நனைத்துவிடும். இதை இரவு நேரத்தில் வண்ண ஒலியில் காண மின் விளக்குகளும் போட்டிருக்கிறார்கள். அருகில் ஒரு அழகான கலங்கரை விளக்கு உள்ளது. ஆண்டுக்கு ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த இடத்தில் அழகான கடற்கரை, படகு சவாரி ஆகியனவும் உண்டு. தொலைதூர பாரைகளில் கடற்பறவைகள் அணிவகுத்து நிற்பதையும் கண்டு களிக்கலாம்.

IMG_2600

 

IMG_2595

 

IMG_9229

 

IMG_3099

 

IMG_2604

 

IMG_9224

(படங்கள்:- லண்டன் சுவாமிநாதன்)

 

 

ஆகாயத்தில் மிதந்த மர்மக் கோட்டை:சீனர்கள் வியப்பு!

CHINA

Compiled by London swaminathan

Post No.2263

Date: 21 October 2015

Time uploaded in London: 20-00

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

வானத்தில் தொங்கிய கோட்டைகளை அழித்து அசுரரை வென்று சுவர்க்கத்தைக் காத்த தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் (சோழன்) கதையை மணிமேகலை காவியத்தின் வாயிலாக அறிவோம். முப்புரம் எரித்த சிவன் கதையை அறிவோம். இப்படி ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டைகள், தங்கம், வெள்ளி, இரும்புக் கோட்டை பற்றிய புராணக் கதைகள் எல்லாம் கற்பனையோ என்று கருதியோருக்கு ஒரு வியப்பான செய்தி!

china_buildings-800x450

லண்டனிலுள்ள எல்லா பத்திரிக்கைகளும் புகைப்படங்களுடன் வெளியிட்ட செய்தி, யூ ட்யூபில் பல லட்சம் பேர் காண்ட காட்சி இது. தென் சீனாவில் ஆகாயத்தில் பெரிய கட்டிடங்களின் மாயத்தோற்றத்தைக் கண்டு மக்கள் வியந்தனர். அதைப் புகைப்படம், வீடியோ படமும் எடுத்து டெலிவிஷன், யூ ட்யூப் ஆகியவற்றில் பகிர்ந்தனர்.

விஞ்ஞானிகள் எப்பொழுதுமே அதிசயங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகவே அவர்கள் இது பருவநிலை காரணமாக நடக்கும் ஒரு அபூர்வ நிகழ்ழ்சி என்கிறார்கள். அதாவது நிலத்தின் மீதோ, நீர் நிலையின் மீதோ காற்றுமண்டலம் வெப்பமானால் தூரத்திலுள்ள கட்டிடங்களை இப்படிப் பிரதிபலிக்கும் என்றும் இந்த அபூர்வ தோற்றத்துக்கு Fata Morgana Fஏடா மோர்கனா என்று பெயர் என்றும் சொல்லுகிறார்கள். ஜியாங்சி, போஷான் ஆகிய  Jiangxi and Foshan,  இரண்டு தென் சீன நகரங்களின் மக்கள் இந்த மாயத் தோற்றத்தைக் கண்டனர். வானளாவிய கட்டிடங்கள் ஆகாயத்தில் இருப்பது போல அவர்கள் பார்த்தனர்.

நாம் வாழும் காலத்திலுள்ள வீடியோ, டெலிவிஷன், பேஸ் புக், யூ ட்யூப் ஆகியவற்றை மறந்து விட்டு இது இல்லாத யுகத்தில் இப்படி நடந்திருந்தால், மக்கள் இப்படி நடந்ததைக்கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏதோ பைத்தியம் உளறுகிறதென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். இப்பொழுது வீடியோ காமெரா முதலியவற்றின் மூலம் உலகிற்குக் காட்ட முடிகிறது.

விஞ்ஞானிகள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், இன்னும் ஐயப்பாடு இருக்கத் தான் செய்யும். அடிக்கடி இப்படி நிகழ்ந்தால் அவர்கள் சொல்லுவதை மக்கள் ஏற்பர். ஏதோ அதிசயமாக இப்படி நடந்தால் பல விதமான கொள்கைகள் உருவாகும் சிலர் இது அமெரிக்கா செய்த வேலை என்றும் அவர்களுடைய Project Blue Beam,”ப்ராஜெக்ட் ப்ளூ பீம் என்பதன் ஒரு சதி வேலை இது என்றும் கருதுவர். மற்றும் சிலர் இது சீனாவே, அவர்களுடைய ஹோலோக்ராபிக் (Holograpgic) டெக்னாலஜி பற்றி மக்களின்  கருத்தை அறிய இப்படி செய்து பார்த்தது என்பர். இது நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் எல்லோரும் ஏற்கும் விளக்கம் கிடைக்கவில்லை.

aliencraft

லண்டனில் பறக்கும் தட்டு! விழுந்து நொறுங்கியது!!

இப்படி சீனச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய அதே நேரத்தில் லண்டன் தெரு ஒன்றில் மர்ம வாஹனம் ஒன்று வந்து விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கிங்ஸ்டன் என்னும் பகுதியில் இரவில் இனம் தெரியாத எந்திரம் போன்ற ஒர் பொருள் பெரிய சப்தத்துடன் விழுந்தது. உடனே மக்கள், போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் டெலிபோன் செய்யவே அவர்கள் பறந்தோடி வந்தனர். அதைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் ஒரு பறக்கும்தட்டு விழுந்து நொறுங்கியது போல இருக்கிறது என்று வருணித்தவுடன் பலருக்கும் மேலும் வியப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கே வெளி உலக மனிதர்கள் எவரும் இல்லை.

alienshipkingston

வேறு சிலர் இது பீட்ஸா கடை அடுப்பு போல இருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுவரை சரியான விளக்கம் இல்லை. சில நேரங்களில் ராணுவம் தொடர்பான சோதனைகள் போன்றவற்றைப் போலீசார் தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். போலீசாரும் குழம்பிப் போயிருப்பதாக லண்டன் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

kingstonpolice

-சுபம்-

புறநானூற்று அதிசயங்கள்

tamil puu parithal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1352; தேதி அக்டோபர் 17 2014.

சங்க இலக்கியம் எனப்படும் 18 நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற இரண்டு தொகுப்புகளாக உள்ளன. அதில் புறநானூறு என்னும் 400 பாடல்கள் கொண்ட நூல், எட்டுத்தொகையில் இடம்பெறும் ஒரு நூலாகும். தமிழ் மன்னர்கள், சிற்றரசர்கள், போர்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவற்றிலிருந்துதான் அதிகம் அறிகிறோம்.

கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் என்று இப்போது உள்ளன. ஆனால் இது தவிர இன்னொரு பாடல் இருந்திருக்க வேண்டும் என்று சான்றோர் கருதுவர்.

இப்போதுள்ள பாடல் தொகுப்பிலும் 267 மற்றும் 268 என்ற இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. பழைய உரையும் முதல் 266 பாடல்களுக்கே கிடைத்திருக்கிறது. மீதி கிடைக்கவில்லை. பின்னர் வந்தவர்கள் உரை எழுதியுள்ளனர். அதற்கும் முந்திய ஒரு உரை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் உரைகாரர் பெயர்கூடத் தெரியவில்லை.

இனி இது பற்றி சில சுவையான விஷயங்கள்:

1.இதுவும் திருக்குறள் போல அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கப்படலாம் என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் கருதுகிறார். காரணம்? ஒரு இடத்தில் முதல் தொகுப்பு “அறநிலை” என்ற தலைப்புடன் உள்ளது. அவர் கருத்து சரியாகுமானால் இந்து மத நூல்களில் காணப்படும் தர்ம, அர்த்த, காம என்பன இதிலும் இருந்திருக்கிறது எனலாம். தொல்காப்பியத்தில் தர்மார்த்தகாமம்- இருப்பது அறம்,பொருள், இன்பம் என்ற சொற்றொடரால் தெரிகிறது. ஆக இமயம் முதல் குமரி வரை வாழ்க்கை மூல்யங்கள் எனப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றே!

2.பாரதம்பாடிய பெருந்தேவனார் (திரு.மஹாதேவன் = பெருந்தேவன்) அவரது பெயருக்கேற்ப கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் பற்றிப் பாடி இருக்கிறார். இதில் வரும் ‘’பதினெண்கணம்’’ கவனிக்கப்பட வேண்டிய சொல். வெள்ளைகாரர்கள் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு முன் நாம் 18 வகையாகப் பிரித்திருந்தோம். ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றோம். வெளிநாட்டுக்காரகளோ பிரிவினைக் கரடியைப் புகுத்தினர்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளில் கூட “சுர – நர- கக — கோ- போகி- கந்தர்வ—தைத்யை”—என்று வரும். முதல் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதியோர் கூறும் 18 கணங்கள் :— அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், யக்ஷர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர். இது சில உரைகளில் சிறிது மாறுபடும்.

2.இரண்டாவது அதிசயச் செய்தி: பஞ்சபூதங்கள் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாடலாகும். ஐம்பெரும்பூதம் என்ற சொற்றொடரும் பாரதப் பண்பாட்டிற்குச் சான்று பகரும்— நாம்தான் இதை உலகம் முழுதும் பரப்பினோம். மேலும் முதல் ஐந்து வரிகளும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. இதையே முதல் அந்தாதிப் பாட்டு எனக் கொள்ளலாம். இதற்குப் பின்னர் வந்த காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதி, அபிராமி அந்தாதிகளை நாம் அறிவோம். அதற்கெல்லாம் அடிப்படை புறத்தின் இரண்டாவது பாடலே.

tamil-penkal

3.இரண்டாம் பாடலைப் பாடியவர் முடிநாகராயர் என்னும் புலவர் — மிகவும் முற்காலத்தைச் சேர்ந்தவர். அவரால் பாடப்பட்டவனும் நாம் அறிந்த சேரர்களில் மூத்தவன்:–உதியஞ் சேரலாதன். அவரே “பொதியமும் இமயமும்” ஒன்றே என்று பாடுகிறார். ஆக பாரதம் முழுதும் ஒன்றே என்பது இப்பாட்டிலும் 6, 17, 67-ஆம் பாடல்களிலும் வருவது மிகவும் அருமை. அது மட்டுமல்ல.

பொதியம் என்று ஏன் சொன்னார் என்றால் இமயத்தில் முத்தீ வளர்த்து அந்தணர்கள் வளர்க்கும் தீயில் மான்கள் தூங்கும் என்று சொல்பவர் இங்கும் அகத்தியர் அதைச் செய்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அது மட்டுமல்ல. இவர் பாடிய வரிகள் காளிதாசனின் குமார சம்பவ காவியத்தில் காணப்படும் இமயமலை வருணனையும் உள்ளது!

4.பாடல் ஒன்பதில் அந்தக் கால தர்மயுத்த முறை காணப்படுகிறது. போர் செய்வோர் ஊருக்கு ஒதுக்குப் புறமான பொட்டல் வெளியில் காலை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அவரவர்க்குச் சமமான ஆட்களுடன் மட்டுமே மோதுவர்— பசுக்கள், பெண்கள், பார்ப்பனர், நோயாளிகள், தர்ப்பணம், திதி முதலியன செய்வதற்கான ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்க்ப் போய்விடுங்கள் என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி சொல்வதை இப்பாட்டில் காணலாம். பாடியவர் நெட்டிமையார்.

5.புறநானூற்றைத் தொகுத்து நூலாக்கியவர் பெரும்பாடுபட்டு ஒவ்வொரு தலைப்பிலும் தொகுத்திருக்க வேண்டும். வெள்ளி கிரகம்—மழை தொடர்பான பாடல்கள் எல்லாம் கடைசியில் கிட்டத்தட்ட அடுத்தடுத்து உள்ளன.

6. கோபப் பாடல்கள், இரங்கற் பாடல்கள் எல்லாம் நடுவில் உள்ளன. நிலையாமை பற்றிய பாடல்கள் கடைசியில் உள்ளன. போர்க்கள வீரம் பற்றிய பாடல்கள் எல்லாம் ஒரு சேர தொகுக்கப்பட்டுள்ளன. ஆக இதைத் தொகுத்தவர் வியாச முனிவர் போல அரும்பாடு பட்டு ‘வகை’ பிரித்திருக்க வேண்டும்.

7.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய (பாடல் 346) சிறுவெண்தேரையார் இந்த பூமியை ஆண்ட மன்னர்கள் “கடல் மணலைவிட அதிகம்” என்று கூறுவது மிகவும் ஆழமாக ஆராய வேண்டிய செய்தி. அந்தக் காலத்திலேயே அவ்வளவு மன்னர்கள் பிறந்து இறந்து இருப்பர் என்றால் தமிழ் இனம் எவ்வளவு பழமையானது என்பதும் புலப்படும். பாடல் 358-ல் இந்த பூமியை ஒரே நாளில் ஏழுபேர் ஆண்ட வியப்பான செய்தி இருக்கிறது. இதைப் பாடியவரின் பெயர் வான்மீகி!! ராமாயணம் இயற்றிய முனிவர் பெயர் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருப்பது வியப்பிலும் வியப்பு.

8.மாங்குடிக் கிழார் பாடிய 335-ஆம் பாடலில்
நான்கு சிறந்த மலர்கள் (குரவு, தளவு, முல்லை, குருந்தம்)
நான்கு சிறந்த குடிகள் (துடியன், பாணன், பறையன்,கடம்பன்),
நான்கு சிறந்த உணவுகள் (வரகு, தினை, கொள்ளு, அவரை)
என்று வகைபடுத்திவிட்டு இதைப்போல நடுகல் ஆகிவிட்ட வீரனை விடச் சிறந்த கடவுள் இல்லை என்கிறார். அந்த நடுகல்லுக்கு நெல்லும் பூவும் தூவி வழிபடும் செய்தியையும் அளிக்கிறார்.

queen

9.சங்க இலக்கியத்தில் சுமார் 20 நாகர்கள் பெயர்கள் இருக்கின்றன. புறநானூற்றில் வெண்ணாகன், மருதன் இளநாகன் முதலிய பல நாகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இதேகாலத்தில் மகாவம்சம் என்ற இலங்கை வரலாறும் பல நாக மன்னர்கள் பெயரைக் குறிக்கின்றன. இதேகாலத்தில் வடக்கில் குப்தர்கால கல்வெட்டுகளும் பல நாக மன்னர்கள், தளபதிகள் பெயரைக் குறிக்கின்றன. யார் இவர்கள் என்று நீண்ட காலமாக விடை எழுப்பியும் முடிவான ஒரு ஆராய்ச்சி நடக்காதது ஒரு பெரும் குறையே!

10.அந்தக் காலத்தில் நாடு முழுதும் தூதர் (ambassador) பதவி, பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படிக் காட்டு வழியாகச் சென்ற ஒரு பார்ப்பனனை கள்ளர்கள் கொன்றுவிட்டு வருத்தப்படும் செய்தியும் மற்றொரு பார்ப்பனனின் (பாடல் 305) திறமையான சொல்லும் செயலும் புறநானூற்றில் உள்ளன. அவன் போய் மன்னனிடம் ஒரு சில சொற்களையே சொன்னான். உடனே அந்த மன்னன் பயந்துபோய் படை எடுப்பு முஸ்தீபுகளை நொடிப் பொழுதில் நீக்கிவிட்டான். இரவு என்று பாராதும் அரண்மனைக்குள் புகுந்தானாம் அந்தப் பார்ப்பனன்! மதுரை வேளாசான் பாடிய பாடல் இது.

11.புறம் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிக் கபிலர் கூறுவதில் இருந்து தமிழர்கள் அதற்கு ஆயிரம் (கி.மு1000) ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியை ஆளத் தொடங்கியது தெரிகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் பல அரிய தகவல்களைத் தருகிறார். தமிழ் இனத்தின் வயது என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கொடுத்துவிட்டேன்.

12.பாடல் 182 இந்திரர் அமிழ்தம் பற்றியும் — பாடல் 191 நரைமுடி வராமல் இருக்கும் மர்மம் பற்றியும் — பாடல் 192 உலகமே ஒரு குடும்பம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்றும் கூறுவதை தமிழ் கூறு நல்லுலகம் அறியும் என்பதால் விரித்துரைக்கும் தேவை இல்லை.

13.பாரி பற்றி கபிலர் பாடிய 109-ம் பாடலில் Point 1- பாய்ண்ட் 1, Point 2 பாய்ண்ட் 2, Point 3 பாய்ண்ட் 3 என்று இந்தக் காலத்தில் பெரும் மேடைப் பேச்சாளர்கள் பேசுவது போலப் பேசி (ஒன்றே, இரண்டே, மூன்றே) மூவேந்தர்களுக்கு சவால் விடுகிறார் அடுத்த பாடலில் பாரியிடத்தில் 300 ஊர்கள் இருந்ததும் அத்தனையையும் பரிசிலர்க்குக் கொடுத்ததையும் கூறுகிறார். ஒரு சிறிய மன்னனிடம் 300 ஊர்கள் என்றால் சேர சோழ பாண்டிய மன்னர்களிடம் எவ்வளவு ஊர்கள் இருந்திருக்கும்?

kannaki cooking

14.புறம் 55, 56, 58 ஆகிய மூன்று பாடல்களில் இந்துமதக் கடவுளரின் கொடிகள், வாகனங்கள், பெயர்கள் ஆகியன வருவது அக்காலத்திலேயே தமிழர்கள் உருவ வழிபாடு செய்ததையும் ஆன்மீகம் கொடி கட்டிப் பறந்ததையும் காட்டும்.

புறநானூற்றில் வானவியல்,சூரிய கிரகணம், விமானி இல்லாமல் பறக்கும் விமானம் முதலிய பல செய்திகள் இருப்பதைத் தனியான கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். புறநானூற்றும் பொன்மொழிகளையும் தனியே தொகுத்து அளித்து இருக்கிறேன். தமிழர்கள் பற்றி அறிய புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் படித்தால் போதும். ஒரு கலைக் களஞ்சியமே (என்சைக்ளோபீடியா) படித்த பலன் கிட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புலவர் பெருமை!!

contact swami_48@yahoo.com