அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை (Post No.9741)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9741

Date uploaded in London – –16 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை

ராம பிரானுக்கு முடி சூட்ட தசரதன் ஏற்பாடு செய்கிறார். ஊர்ப் பெரியோர்கள் மற்றும் மந்திரிசபைகுல குரு  ஆகிய மக்களை ஜன நாயக முறையில் கருத்துக் கேட்டு அப்படி முடிவு  செய்கிறார். எல்லோரும் Yes, Yes யெஸ் யெஸ்‘  என்று தலையை அசைத்துவிட்டனர். அப்போது தசரத மா மன்னன் குல குரு  வசிஷ்டருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். ராம பிரானைச் சந்தித்துக் கொஞ்சம்  அரசியல் விஷயங்களைக் கதைத்து விட்டு வாருங்கள். எதுஎது தர்மம் என்று கற்பியுங்கள் , ‘ப்ளீஸ்‘ Please என்கிறான்.

வசிட்டனும் ராமனைச் சந்திக்கிறார். அவருக்குச் சொல்கிறார்.

அன்பரே அந்தணர் /பார்ப்பான் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரும்.

அவர்கள்  நினைத்தால் அது அப்படியே நடக்கும்

ஆவதும் ஐயராலே அழிவதும்  ஐயராலே ! கபர்தார்உஷார்ஜாக்கிரதை!’ என்கிறார்.

இதோ கம்பன் வாய் மொழி மூலம் அறிவோம்.

ஆவதற்கும் அழிவதற்கும்  அவர்

ஏவ ,நிற்கும் விதியுமென்றால்இனி

ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்

தேவரைப் பாரா வுந்துணை  சீர்த்ததே

மந்தரை சூழ்ச்சிப் படலம்அயோத்யா காண்டம்கம்ப ராமாயணம்

பொருள்

ஒருவரை உயர்த்துவதற்கும் தாழ்த்துவதற்கும் விதி கூட அந்தணப்  பெருமக்களின்

கட்டளைக்குக் காத்திருக்கும் என்றால் இப்பிறப்பிலும் மறு  பிறப்பிலும்  பூலோக

தேவர்களாக விளங்கும் பார்ப்பனர்களை போற்றுவது சிறப்புடையது ஆகும்  .

 இதனைவிட மேலான பொருள் வேறு எதுவும் இல்லை “.

(இங்கு அந்தணர் என்பதற்கு ஒழுக்கம் உடைய அறிஞர்கள் என்பது பொருள். ‘வெளுத்தது எல்லாம் பால் அல்ல’. ‘மின்னுவதெல்லாம் பொன் அல்ல’பூணுல் போட்ட எல்லோரும் பார்ப்பனர் அல்ல. மனம்மொழிமெய் என்ற மூன்றிலும் சுத்தம் உடைய- திரி கரண சுத்தி உடைய — பெரியோர் அந்தணர். அந்தக்காலத்தில் அப்படி இருந்தனர் நூற்றுக்கு 99 சதம் பிராமணர்கள்!)

இதில் அந்தணர் என்ற சொல்லே இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.

அதற்காக முன்னிரு பாடல்களையும்  தருகிறேன் .

அந்தணாளர் முனியவும் ஆங்கவர்

சிந்தையால் அருள் செய்யவும் தேவரில்

நொந்துளாரையும் நொய்து உயர்ந்தா ரையும் ,

மைந்த! எண்ண வரம்பும் உண்டு ஆங்கொலோ

பொருள்

டேய் சின்னப்பையா (ராமா ) கேள் !

ஐயர்கள் நினைத்த மாத்திரத்தில் சிலர் பதவி இழந்து அதல பாதாளத்தில் விழுந்தனர் ஐயர்கள் நினைத்த அளவில் சிலர் ‘பிரமோஷன்’ Promotion பெற்று பெரிய பதவியை அடைந்தார்கள் . இந்த விஷயத்தைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவலோகத்திலேயே கணக்கற்றவர்கள் இருக்கிறார்கள்!

(இந்த இடத்தில் உரைகாரர்கள் மூன்று எடுத்துக்காட்டுகளை இயம்புகின்றனர்: தேவர்களை விட அந்தணர்கள் உயர்ந்தோர் ஆவர். அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அது அப்படியே நடந்து விடும். அவர்கள் ஆற்றல் மிக்க நிறைமொழி (மந்திரம்) மாந்தர்கள். இந்திர பதவியில் இருந்த நகுஷன் அகத்தியன் சாபத்தினால் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். துருவாசருக்கு ஒரு தேவ லோகப் பெண் ஒரு மாலை அளித்தாள் . அதை அந்தப் பக்கம் ஐராவத யானை மேல் பவனி வந்த இந்திரன் மீது துர்வாசர் எறிந்தார். அவன் அதை வாங்கி யானையின் தலை மீது வைத்தான். அது மலரிலுள்ள மது வாசனையால் அதைத் தூக்கி கீழே எறிந்தது கோபத்தின் சின்னமான துருவாசர் இந்திரா! பிடி சாபம்! இந்த மாலை கீழே விழுந்தது போல நீயும் உன் பதவியிலிருந்து விழ க்கடவாய் ! என்றார் . இந்திரன் பதவியும் போச்சு. இன்னொரு எடுத்துக்காட்டு பிருகு- விஷ்ணு மோதல் ஆகும். பிருகு முனிவர் மும்மூர்த்திகளையும் சோதிக்க ஓவ் வொருவரையாக இன்டர்வியூ interview செய்யக் கிளம்பினார் . ஒவ்வொருவரும் அவரைக் கவனிக்காததால் ஒவ்வொரு சாபம் பெற்றனர். விஷ்ணு எப்போதும் அறிதுயிலில் இருப்பவர். தன்னைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து அவருக்கு சாபம் இட்டார். நீவிர் பூமியில் அவ்வப்போது மனிதனாக அவதாரம் எடுத்து யான் பெற்ற துன்பம் பெறுக என்று சபித்தார்)

அந்தணர் என்போர் துறவியரா அல்லது பார்ப்பனரா என்ற கேள்வி சிலருக்கு எழும். ‘நான் மறை அந்தணர்’ என்று சங்க இலக்கியமே பல இடங்களில் பேசுவதால் மறை  ஓதும் அந்தணர் பார்ப்பனர் என்பதில் சந்தேகமில்லை. ‘நான்மறை அந்தணர்’ என்ற சிலப்பதிகார மணிமேகலை வரிகளாலும், ‘நான்மறை முதல்வர்’ என்ற புறநானுற்றுச் சொற்களின் உரைகளாலும் வேதம் ஓதும் அந்தணர்களேதான் அவர்கள் என்பதில் ஐயம் வராது

இதோ கடைசி பாடல்

அனையர் ஆதலின் ஐய! இவ்வெய்ய தீ

வினையின் நீங்கிய மேலவர் தாளிணை

புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி ;

இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

அந்தணர்கள் சொன்னபடி நடந்தே தீரும் என்பதால் கொடிய பாபத்தினின்று

நீங்கிய அந்த அந்தணர்களின் திருவடிகளைப்ப போற்றிப் புகழ் ந்து துதிப்பாயாக . மேலும் அவர்கள் ஏவிய பணிகளையும் மனமுவந்து செய்வாயாக.

ஆக அந்தணரைப் பணிவதோடு இல்லாமல் அவர்கள் சொன்னதையும் செய்க என்பது வசிட்டன் வாய் மூலம் கம்பன் தரும் கட்டளை.

இதை சிலப்பதிகாரத்தில் காணலாம். வெற்றிக் களிப்பில் மிதந்த செங்குட்டுவனைத் தட்டி எழுப்புகிறான் மாடல மறையோன் என்னும் பார்ப்பனன். “ஏய் ! போதும் உன் போர்கள். இனி போகும் வழிக்குப் புண்ணியம் சேர். யாக யக்ஞங்களைச் செய் ! என்று சொன்னவுடன் அப்படியே செய்கிறான் சேரன் செங்குட்டுவன். அது மட்டுமின்றி அந்தப் பார்ப்பனனுக்கு எடைக்கு எடை தங்கமும் பரிசாகத் தருகிறான் (காண்க- சிலப்பதிகாரம்)

–subham–

tags — அந்தணர் , கம்பர்,  எச்சரிக்கை,

திருக்குறளில் அந்தணரும் வேதமும்! (Post No.9542)

Hindu Saivite Valluvar

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9542

Date uploaded in London – –  –28 APRIL  2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

ச.நாகராஜன்

Hindu Valluvar from Englishman’s book

உலகம் முழுமைக்கும் வாழ்வாங்கு வாழும் வழியைச் சொல்லும் திருக்குறள் இந்து மதத்தின் அற நூலே ஆகும். அது இந்து மதம் பெரிதும் போற்றும் வேதத்தைப் போற்றும் நூல். ஆகவே வேதம் மற்றும் இந்து மதத்தின் கொள்கைகளான வேதமே அறத்தின் அடிப்படை, புனர்ஜென்மம் உண்டு போன்றவற்றை மறுக்கும் பகுத்தறிவுவாதிகளும் புனர்ஜென்மத்தை மறுக்கும் செமிடிக் மதங்களைச் சார்ந்தோரும் அதைத் தங்களுடையது என்று சொல்வது முடியாத காரியம் – உண்மையின் அடிப்படையில் – திருக்குறளின் அடிப்படையில்!

அந்தணர் என்ற சொல்லை இரு முறையும் அந்தணன் என்ற சொல்லை ஒரு முறையும் 1330 குறள்களில் திருவள்ளுவர் கையாளுகிறார்.

குறள் எண் 8 – அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

                பிறவாழி நீந்தல் அரிது

அறவாழி அந்தணன் என்பது இங்கு இறைவனைக் குறிக்கிறது. அவனது தாளைப் பணியாதார்க்கு பிறவிக் கடலைக் கடப்பது அரிது.

குறள் எண் 30 – அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

                 செந்தண்மை பூண்டொழுகலான்

எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருள் கொண்டு இருக்கும் அறநெறி வழி நிற்போர் அந்தணர் எனப்படுவர்.

குறள் எண் 543 – அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

                  நின்றது மன்னவன் கோல்

அந்தணர் போற்றும் வேதத்திற்கும் அறத்திற்கும் அடிப்படையாக நின்று அமைவது மன்னவனின் செங்கோலே!

‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல்என்ற மணிமேகலை வரிகளை பரிமேலழகர் தனது உரையில் சுட்டிக் காட்டுகிறார்.

இது தவிர பார்ப்பார் கண் என்ற சொல்லை ஒரு இடத்தில் -குறள் எண் 285இல் – எதிர்பார்ப்பவரிடத்தில் –  என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.

அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார் கண்

அடுத்து குறள் எண் 134. இதில் பார்ப்பான் என்ற சொல் பார்ப்பனன் என்ற பொருளிலும் ஒத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல் என்ற பொருளிலும் மிகத் தெளிவாக அமைகிறது.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற வேதத்தை ஒருவேளை மறந்து விட்டான் என்றாலும் கூட அதை மீண்டும் ஓதிக் கொள்ளலாகும். ஆனால் பார்ப்பானின் பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெட்டு விடும். இங்கு பரிமேலழகர் தனது உரையில், “அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும் என்கிறார்.

ஆக வேதம் ஓதுதலை மறப்பினும் கூட பிறப்பு ஒழுக்கத்திலிருந்து ஒரு நாளும் ஒரு பார்ப்பான் விலகக் கூடாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

அடுத்து மறைமொழி என்று வேதத்தை ஒரு குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். குறள் எண் : 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

Brahmin Valluvar with Punul/ Sacred thread

சான்றோரின் பெருமையை நிலவுலகில் அவரால் கூறப்படும் மறைமொழி காட்டி விடும். மறைமொழி என்பது வேதம்.

ஆனால் சிலரோ இதைத் திரித்து பழமொழி என்கின்றனர். பழமொழியை யார் வேண்டுமானாலும் கூறலாம் என்பதால் மறை மொழி என்பதற்கு வேதம் என்ற பொருளே சிறந்தது.

மணக்குடவர் தன் உரையில் “ கல்வி உடைய மாந்தரது பெருமையை அவரால் சொல்லப்பட்டு நிலத்தின் கண் வழங்கும் மந்திரங்களே காட்டும் என்கிறார்.

பரிமேலழகரும் மந்திரங்கள் என்ற பொருளையே கூறுகிறார். ஆக மறைமொழி என்பது வேத மந்திரங்கள் என்பது தெளிவாகிறது.

அடுத்து மறை என்ற சொல்லை ஏழு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

குறள் எண் 847இல் அருமறை சோரும் அறிவிலான் என்று வள்ளுவர் கூறுவதற்கு பொருளாக பரிமேலழகர் “பெருதற்கு அரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன் என்கிறார். ஆக இங்கு மறையை உபதேசப் பொருள் என்றே கொள்ளலாம்.

குறள் எண் 590இலும் 695இலும் மறை என்பது ரகசியம் என்ற பொருளில் வருகிறது. குறள் எண் 1076இலும் “தாம் கேட்ட மறை என்பதற்கு தாம் கேட்ட இரகசியங்களை எல்லோருக்கும் சொல்லும் கயவரை, ‘பறை என்கிறார்.

குறள் எண் 1138இலும்1254இலும் ‘மறை இறந்து மன்று படும் காமமானது மறைத்திருத்தலையும் மீறி ஊர் உலகிற்கு வெளிப்படும் என்கிறார்.

குறள் எண்1180இலும் (காமத்துப் பால் கண்விதுப்பழிதல் அதிகாரத்தில்) ‘மறைபெறல் என்ற வார்த்தை மறைத்து வைத்திருத்தல் என்ற பொருளில் வருகிறது.

அடுத்து அவி என்ற வார்த்தையை இரு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

குறள் எண் : 259

அவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று

வேள்வித் தீயில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அவி என்பது நெய் முதலிய வேள்வியில் இடுவனவாம். அந்த வேள்வியினால் வரும் பயனை விட இந்த விரதத்தால் வரும் பயன் பெரிது என்பது

பரிமேலழகர் உரை.

இன்னொரு குறள் : எண் 413

செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்                     ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

இந்த பூமியில் செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் அவியை உணவாகக் கொண்ட ஆன்றாரோடு – தேவர்களோடு – ஒப்பாவார்.

அறிவால் நிறைந்தவர் என்பதால் ஆன்றார்; துன்பம் அறியாதவர் என்பதால் தேவர் – இது பரிமேலழகர் உரை.

(தேவரை மனம் போன போக்கில் நடக்கும் கயவரோடு ஒப்பிடும் ஒரு குறளும் உண்டு. குறள் எண் 1073 – “தேவர் அனையர் கயவர்!”)

ஆக திருவள்ளுவர் காட்டும் சமுதாயம் வேதம் நிறைந்த தமிழ்நாடு என்பதை அறிகிறோம். அதில் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றாமல் வாழ வேண்டும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். அந்தணர் என்போர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் அருளாளர் என்பதையும் அறிகிறோம்.

வேள்வி, அவி சொரிதல்,  ஆகிய வேத கால பழக்கங்களையும் தேவர் பற்றியும் கூட வள்ளுவர் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.

வள்ளுவர் பாரதீய பண்பாட்டின் அடிப்படையில் குறளைப் படைத்திருக்கிறார் என்பதற்கான சான்றுகளில் மேலே காட்டும் குறள்களும் நல்ல சான்றாகும்.

ஒரு சின்ன உண்மை:-

1967க்குப் பின்னர் வந்த திருக்குறளுக்கான உரைகளில் 99 சதவிகித உரைகளை ஒரு நகைச்சுவைக்காகப் படிக்கலாமே தவிர, பொருள் விளங்கிக் கொள்ளப் படிக்கக் கூடாது. எப்படி எல்லாம் வள்ளுவரைத் திரிக்கலாம் என்பதை “கயிறு திரித்துப் பழக்கப்பட்ட “உ.பி.க்களின் உரைகளிலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உ.பி.களுக்கு ஜால்ரா போடும் “தமிழ் அறிஞர்களின் உரைகள் மற்றும் கட்டுரைகளிலும் கண்டு திடுக்கிடலாம்!

வள்ளுவரை இவர்களிடமிருந்து காப்பாற்றுவோம் – நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள!

***

Tamil Valluvar

tags– அந்தணர், அந்தணன், மறைமொழி, பார்ப்பான், திருக்குறள்

பார்ப்பானுக்கு அழகு எது? (Post No.3398)

Written by S NAGARAJAN

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 5-45 AM

 

Post No.3398

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 14

 

இந்தக் கட்டூரையில் அகநானூற்றில்ல் வரும் 24 ஆம் பாடலில் ஒரு அந்தணன் செய்ய வேண்டியது யாகமே என்று குறிப்பிடப்படும் செய்தி இடம் பெற்றுள்ளது.

 

 

 பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

 

                       ச.நாகராஜன்

 

அகநானூறு

அந்தணருக்குத் தொழில் எது என அகநானூறில் ஒரு புலவர் தரும் விளக்கம் 24ஆம் பாடலில் வருகிறது.

பாடலைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.

இவர் வேளாள குலத்தைச் சேர்ந்த பெரும் புலவர். இவரது மகன் தான் பெரும் புகழ் வாய்ந்த சீத்தலைச் சாத்தனார்.

யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடலை புறநானூறு (166ஆம் பாடல்) கட்டுரையில் (கட்டுரை எண் 5) பார்த்தோம்.

கீழே உள்ள பாடலில் புலவர் பிரான், யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கையே தொழிலாகும் என்று இழித்துக் கூறுகிறார்.

வேளாண்  மரபினரான இவர் அந்தணர் மீதும் வேதம் வகுக்கும் யாகங்களின் மீதும் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை இந்தப் பாடல் மூலம் அறிய  முடிகிறது. தலைவன் சொன்னதாகவோ அல்லது படைக்களத்தில் பாசறையில் தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதாகவோ இந்தப் பாடல் அமைகிறது.

பாடல் இதோ:

வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த                            

வளை களைந்து ஒழிந்த கொழுத்தின் அன்ன                 

தலை பிணி அவிழா கரி முகப் பகன்றை                      

சிதரல் அம் துவலை தூவலின்  மலரும்                     

தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்                    

வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை                   

விசும்பு உரிவது போல வியல் இடத்து ஒழுகி                      

மங்குல் மா மழை தன் புலம் படரும்                            

பனி இருங்கங்குலும் தமியன் நீந்தி                                  

தம் ஊரோளே நன்னுதல் யாமே                               

கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து                           

  நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டுச்                            

சிறு கண் யானை நெடு நா ஒண் மணி                             

கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு

தழங்கு குரல்  முரசமொடு முழங்கும் யாமத்து

கழித்து உறை செறியா வாளுடை எறுழத் தோள்                    

இரவு துயில் மடிந்த தானை                                          

உரவுச் சின வேந்தன் பாசறையேமே

 

வேளாப் பார்ப்பான் என்றால் தனக்கு விதிக்கப்பட்ட நியமங்களைச் சரிவரச் செய்யாத அந்தணன் என்று பொருள் வளை அரம் துமித்த என்றால் நன்கு  கூர்மையாக்கப்பட்ட அரம் என்று பொருள் வளை களைந்து என்றால் அந்த அரத்தினால் வளைகளைக் களைந்து சங்கை அறுத்தல் என்று பொருள்.

         “இது தை மாதத்தின் கடை நாள் அன்று குளிர்ந்த மழைத் துளிகள் விழும் போது துளிர்க்கும் பகன்றை அரு,ம்புகளானவை, யாகம் செய்யாத பார்ப்பான் சங்கு அறுத்து அதில் மிகுதியாக இருக்கும் சங்கின் மேல் பகுதிகளைப் போல  (ஒழிந்த கொழுந்தின் அன்ன தலை) இருக்கிறது” என்கிறார் புலவர்.

வேளாப் பார்ப்பான் எனப்படும் யாகம் செய்யாத அந்தணன் சங்கை அறுக்கும் தொழிலைச் செய்வது இங்கு இழுக்காகக் குறிப்பிடப்படுகிறது.

பெரிய கருத்த  மழை மேகங்கள் வானமே உதிர்ந்தாற் போல மழை பெய்விக்க தெற்கே பனி இருளில் நன்னுதல் கொண்ட  அவள் மட்டும் நகரில் தனியே இருப்பாளே நான் இங்கு போர்க்களத்திலுள்ளேன். சினம் கொண்ட  மன்னன் உறையிலிருந்து எடுத்த வாள் உள்ளே போடப்படாமல் உள்ளது என்று அடுத்துக் கூறும் கவிஞர்  பாடலில் போர் நடைபெறும் களத்தின் கடுமையை விரிவாக விளக்குகிறார்.

இந்தப் பாடலைப் பாடியவர் வேதம் ஓதுதலும் அது வகுத்த விதிமுறைப்படி யாகம் செய்தலுமே அந்தணரின் கடமை என்பதைத் தெளிவாக்குகிறார்!

அகநானூறு பாடல்களை இயற்றியுள்ள புலவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஏற்றத் தாழ்வு இல்லை. தமிழால் இணைந்த ஓர் குல மக்கள் இவர்கள்.

அந்தணர், அரசர், எயினர், இடையர்,கூத்தர், தட்டார்,வணிகர், வேளாளர் ஆகியோர் தமிழின் மீதுள்ள காதலால் பல பொருள் பற்றிச் சிறக்கப் பாடியுள்ளனர். ஒரே சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் இலங்கி இருந்தமையை இது காட்டுகிறது.

 

சங்க காலத்தில் அந்தணர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்ததும், வாழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது.

அந்தணர்கள் என்று எடுத்துக் கொண்டால்,

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்,

கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

கபிலர்,

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்,

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்,

நக்கீரனார்,

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்,

மதுரை இளங்கௌசிகனார்,

மதுரைக் கணக்காயனார்,

மதுரைக் கௌணியன் தத்தனார்,

மாமூலனார் ஆகிய புலவர்களை அகநானூற்றுப் புலவர்களாகக் குறிப்பிடலாம். இவர்களின் பாடல்கள் அகநானூறில் இடம் பெற்றுள்ளன. படித்து மகிழலாம்.

இவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பைப் பற்றியும் தனியே தான் எழுத வேண்டும்!

******

 

 

பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள் (Post No.2929)

brahmin vaishnava

Compiled by london swaminathan

Date: 30 June 2016

Post No. 2929

Time uploaded in London :–  5-46 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஜூலை மாத (துன்முகி ஆனி-ஆடி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– 6-ரம்ஜான், 10-ஆனித் திருமஞ்சனம், 19-வியாச பூஜை/குரு பூஜா ( சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)

 

அமாவாசை – 4

பௌர்ணமி – 19

ஏகாதசி – 15

முகூர்த்த நாட்கள் – 6, 10, 11

brahmins, mylai

ஜூலை 1 வெள்ளிக்கிழமை

மனிதகுலத்தின் உதாரண புருஷன் பிராமணன். ஆகையால் எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்துவதே திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால், இதற்கு முன்னரே இப்படிப் பலர் செய்திருப்பது புரியும்- சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 2 சனிக்கிழமை

பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- புத்தர் கூறியது, தம்மபதம், 389

 

ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை

நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.புத்தர் கூறியது, தம்மபதம், 393

 

 

ஜூலை 4 திங்கட்கிழமை

யார் சமய சம்பந்தமில்லாத வேலைகளை எடுக்கவில்லையோ அவன் மட்டுமே பிராமணன். சமய சம்பந்தமற்ற வேலைகள் மற்ற ஜாதிகளுக்கானது. பிராமணத்துவம் என்பது என்ன என்பதை அவர்கள் உணர்வது அவசியம். நற்குணங்களின் உறைவிடமாகப் பிராமணன் திகழ்வதாலேயே அவனுக்கு இவ்வளவு சலுகைகளும், கௌரவங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மனு கூறுகிறார் — சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 5 செவ்வாய்க்கிழமை

காலையில் சூரியனும், மாலையில் சந்திரனும் பிரகாசிக்கின்றன; க்ஷத்ரியன், ஆயுதம்தரிப்பதால் பிரகசிக்கிறான்; பிராமணன் தவ வலிமையால் பிரகாசிக்கிறான். புத்தனோ இரவிலும் பகலிலும் பிரகாசிக்கிறான். விழிப்புணர்வுடையவன் பிரகாசிப்பான் -புத்தர் கூறியது, தம்மபதம், 387

 

 

ஜூலை 6 புதன்கிழமை

பிராமண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு உபநயன கருமம் இருப்பதால், அவர்கள் இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுவர். அது இல்லாதவன் சூத்திரன். ஐந்தாவது ஜாதி/பஞ்சமன் என்று எதுவும் இல்லை- மனு 10-4

 

ஜூலை 7 வியாழக்கிழமை

பிராமணனுக்கு ஞானத்தினாலும், க்ஷத்ரியர்களுக்கு வீரத்தினாலும், வைசியர்களுக்கு செல்வத்தினாலும், சூத்திரர்களுக்கு வயதினாலும் மதிப்பு தர வேண்டும் (Sanskrit Sloka)

brahmins vaishnavite

ஜூலை 8 வெள்ளிக்கிழமை

பிராமணனுக்கு பிழைப்புக்கே வழியில்லை என்றால் கெட்டவர்களிடம் தானம் வாங்கக்கூடாது; கீழே சிந்திய தனியக்கதிர்களையோ, தானிய மணிகளையோ சேகரித்து உண்ணலாம் –மனு 10-112

 

 

ஜூலை 9 சனிக்கிழமை

புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை

முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளரோடு பெருமலை அரசன் – சிலப்பதிகாரம், காட்சிக்காதை (இமயமலையில் அந்தணர்கள் குடுமியுடன், ஈரத்துணியுடன், மூன்று வகையான யாகத் தீயை வளர்த்துக்கொண்டு, முப்புரி நூலுடன் இருப்பர்)

 

ஜூலை 10 ஞாயிற்றுக்கிழமை

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினந் சிலப்பதிகாரம், கால்கோட்காதை (பிராமணர்களின் யாகப் புகை சேரன் செங்குட்டுவனின் மாலையின் நறுமணத்தையும் மிஞ்சிவிட்டது)

 

 

ஜூலை 11 திங்கட்கிழமை

முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே!

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி – சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறநானூறு, 6) (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழிதியின் தலை இரண்டு இடத்தில் மட்டுமே வணங்கும்; சிவபெருமான் கோவிலிலும், ஆசீர்வாதம் செய்யும் அந்தணர் முன்னிலையிலும் மட்டும் தலை தாழ்த்துவான்)

 

 

ஜூலை 12 செவ்வாய்க்கிழமை

ஆவும், ஆன் இயற்  பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறாதீரும்

என்அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின் (புறம். 9)

 

 

ஜூலை 13 புதன்கிழமை

பார்ப்பனர் வீட்டுக்குப் போனால், அருந்ததி போன்ற கற்பு வாய்ந்த பெண்மணி உனக்கு மாதுளங்காயைப் பசு வெண்ணையில் பொறித்து, ராஜ அன்னம் என்ற உயர்ந்த அரிசியில் சமைத்த சோற்றை படைப்பாள். பார்ப்பனப் பெண்கள், விருந்தாளிகளுக்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறுவர். – பெரும்பாணாற்றுப்படை (சங்க இலக்கியம்)

 

 

ஜூலை 14  வியாழக்கிழமை

 

பார்ப்பனர் மனைகளில் நாயும் கோழியும் நுழைய முடியாது. கிளிகள் மட்டும், அந்தணர் ஓதும் வேதங்களைத் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருக்கும் – சங்க இலக்கியம், பெரும்பாணாற்றுபடை

 

vedagama exam

ஜூலை 15 வெள்ளிக்கிழமை

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான் -திருக்குறள் 30 (எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாதவர் அந்தணர்)

 

ஜூலை 16 சனிக்கிழமை

மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் -திருக்குறள் 134 (பார்ப்பான், வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை; ஆனால் ஒழுக்கம்போனால், அவனுக்கு விமோசனம் இல்லை)

 

 

ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்-திருக்குறள் 543 (அந்தணர்கள் முறையாக வேதம் ஓதுவதற்கும், முறையான அரசாட்சியே அடிப்படை ஆகும்.)

 

 

ஜூலை 18 திங்கட்கிழமை

பிராமணர்கள் சாப்பாட்டுப் பிரியர்கள் – துஷ்யந்தி போஜனே விப்ராஹா – சாணக்கிய நீதி 6-18

 

 

ஜூலை 19 செவ்வாய்க்கிழமை

க்ஷத்ரியர்களின் பலம்  எல்லாம் பலமே அல்ல; பிராமணர்களின்ம் தேஜஸ்தான் பெரும் பலம்; திக் பலம்  க்ஷத்ரிய பலம், பிரம்மதேஜோ பலம் பலம் – வால்மீகி ராமாயணம் 5-6-23

 

ஜூலை 20 புதன்கிழமை

அந்தணர் கருமங்குன்றில்  யாவரே வாழ்வர் மண்ணில்

–விவேகசிந்தாமணி

 

ஜூலை 21  வியாழக்கிழமை

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் –சைவத் திருமுறை

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்

லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து

vedic brahmins

ஜூலை 22 வெள்ளிக்கிழமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுக – திரிகடுகம்

 

ஜூலை 23 சனிக்கிழமை

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே! –விவேகசிந்தாமணி

 

 

ஜூலை 24 ஞாயிற்றுக்கிழமை

பிரம்மத்தையே உணர்ந்த பிராமணன் மிகவும் பலம் பொருந்தியவன் – சாணக்கிய நீதி 8-10

 

 

ஜூலை 25 திங்கட்கிழமை

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பாரதியார்

 

ஜூலை 26 செவ்வாய்க்கிழமை

ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம  பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்

-தம்ம பதத்தில் புத்தர் – பாடல் 294

 

 

ஜூலை 27 புதன்கிழமை

 

பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் — சிறுபாணாற்றுப் படை

 

 

ஜூலை 28  வியாழக்கிழமை

செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை

அறுதொழிலாளர் அறம்புரித்தெடுத்த

தீயோடு விளங்கும் நாடன் (புறநானூறு  397)

school tree

 

ஜூலை 29 வெள்ளிக்கிழமை

 

ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் – தம்மபதம் 383

 

 

ஜூலை 30 சனிக்கிழமை

எதைக் கொடுத்தாலும்ச் திருப்தியடையாத பிராமணன் அழிந்துபோகிறான்.  அசந்துஷ்டா த்விஜா நஷ்டா: – சாணக்ய நீதி 3-42

 

 

ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை

யாத்திரை செல்லும் பிராமணன் வணக்கத்துக்குரியவன் – சாணக்கிய நீதி 6-43

 

–SUBHAM-