
Written by London Swaminathan
Post No.7676
Date uploaded in London – 10 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
எல்லோரும் தனிமையில் வாழ முடியாது ; எப்பேற்பட்ட தலைவனாக இருந்தாலும் ஒருவரில் உதவியால்தான் அவன் சோபிக்க முடியும். பெரிய அரசனாக இருந்தாலும் அவனுக்கு சரியான ஆலோசனை வழங்கும் அமைசர் தேவை என்பது நமக்குத் தெரிந்ததே. அறப்பளிஸ்வர சதகத்தில் அம்பலவாண கவிராயர் கொடுக்கும் பட்டியலைக் காண்போமா ?
ஒருவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அவனைவிட புத்தியுடையோரின் கருத்துக்களைச் செவிமடுக்க வேண்டும் . ஒரு மன்னன் மஹா சூரனாக இருந்தாலும் அவனுக்கும் ஆயுதம்தாங்கிய தளகர்த்தர்களின் துணை வேண்டும். தான் பெரிய படிப்பு படித்திருந்தாலும், மெத்தப் படித்தவர்களின் சகவாசம் தேவை. அவர்களைப் போற்ற வேண்டும்

நன்றாகப் பாடக்கூடிய இசை மேதை ஆனாலும் பக்கத்தில் சுருதி சேர்த்து, சுருதி கூட்ட ஒரு சுருதிகாரன் தேவைப்படுவான்.
பூமியை ஒருகுடையின் கீழ் ஆளும் மன்னரானாலும் அவனுக்கு ஆலோசனை வழங்க ஒரு அமைச்சன் தேவை.நல்ல ஒளிவீசும் விளக்கானாலும் அந்த தீபத்தைத் தூண்டிவிட ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது.
அனல் வீசும் நெற்றிக் கண்ணுடைய படிக நிற வண்ணனே ! இறைவனே; அறப்பளிஸ்வரனே ! அருள்வாயாக.




tags – சுருதிகாரன், சங்கீத வித்வான், அமைச்சர்
–subham —