நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ் (Post No.9795)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9795

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்

நாற்பது நகைச்சுவை நாடகங்களை 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி ‘நகைச் சுவை நாடகங்களின்  தந்தை என்ற புகழுரை பெற்றவர் (Aristophanes) அரிஸ்டோபனிஸ் . ஆயினும் சாக்ரடீஸைக் குறை சொல்லி அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்ற இகழுரையும் இவருக்குண்டு. இவர் எழுதிய ஒரு கிண்டல் நாடகம் தவளைகள் பற்றியது . அதை கம்ப ராமாயண, ரிக்வேதத் தவளைப்பாட்டுட ன்   ஒப்பிட்டு முன்னரே எழுதினேன் இணைப்பை கட்டுரையின் இறுதியில் காண்க

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

இன்றைய தினம் நாம் டெலிவிஷனிலும் திரைப்படங்களிலும் நிறைய முழு நீள நகைச் சுவைப் படங்களை பார்க்கிறோம். இவைகளுக்கு வித்திட்டவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அரிஸ்டோபனீஸ் ஆவார். சம்ஸ்க்ருத நாடகங்களில் பிராமணர்களுக்கு விதூஷகன் (comedian)  என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தைக் கொடுப்பது 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்திய வழக்கம். காளிதாசனின் நாடகங்களில் இதைக்காணலாம். ஆகையால்தான் தற்கால திரைப்படங்களிலும் பிராமணரைக் கொண்டு பிராமணர்களைக் கிண்டல், கேலி, நக்கல், பகடி செய்யும் காட்சிகள் இடம்பெறுகின்றன.ஆனால் கிரேக்க நாட்டில் முழு நீள காமெடிக்கள்  (comedies) இருந்தன. சம்ஸ்க்ருதம் போல எல்லா நாடகங்களிலும் விதூஷகன் என்னும் கதாபாத்திரம் இருந்ததாக, அதுவும் ஜாதி அடிப்படையிலான நகைச் சுவை நடிகர் இருந்ததாகத் தெரியவில்லை.  சங்க இலக்கியத்திலும் கூட பிராமணர்தான் பிராமணர்களைக் கிண்டல் அடிக்கமுடியும். இதைக் கபிலர் என்னும் புலவர் செய்கிறார். காண்க- குறிஞ்சிக் கலி , கலித்தொகை.

அரிஸ்டோபனிஸ் எழுதிய சுமார் 40 நாடகங்களில் நமக்கு இப்போது 11 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஒன்று ‘மேகங்கள்’ (The Clouds) என்ற நாடகம் ஆகும். இதுதான் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ (Plato) குற்றம்சாட்டுகிறார்.

அரிஸ்டோபனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரமான ஏதன்ஸில் பிறந்தார்.  இருபது வயதுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம், கிரேக்க நாட்டில் எல்லாத் துறைகளிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்த காலம் ஆகும் .அப்போது (Athens) ஏதென்ஸ் நகரம் அதன் பரம வைரியான ஸ்பார்ட்டா (Sparta) நகர அரசு மீது போர் தொடுத்தது. இந்தப் போர் 27 ஆண்டுகளுக்கு நீடித்தது.

இந்தப் போரில் மகத்தான ஏதென்ஸ் நகர அரசு தோல்வி அடைந்தது. இதனால் புகழோங்கிய கிரேக்க கலாசாரம் ஆட்டம் கண்டது. நாட்டில் அராஜகம் நிலவியது. ‘அ+ராஜகம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். ஆள்பவன் வலுவாக இல்லாவிடில் ‘தடி டுத்தவன் எல்லாம் தண்டல் நாயகம்’ ஆகிவிடுவான். இப்படி ஒரு நிலை ஏதன்ஸில் ஏற்படவே சர்வாதிகாரிகள் ஆட்சி உண்டாகியது . தன்னைச் சுற்றி ஏற்படும் நிகழ்ச்சிகளை நாடகமாக வடித்தார் அரிஸ்டோபனிஸ்;  அவர் எழுதிய நாடகங்களில் அரசியல்வாதியை முட்டாளாகவும் சாதாரண குடிமகனை அறிவாளியாகவும் சித்தரித்தார். அதாவது சாதராணக் குடிமகன் அரசியல் தலைவர்களைத் தோற்கடித்து விடுவான்.தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும் குறை சொன்னார். எல்லா இடங்களிலும் நிலவிய ஊழலை எடுத்துக் காட்டினார். இரு பொருள்படும்படி  (Satires) அங்கதங்களை இயற்றினார். இதில் அவர் மஹா மேதையான சாக்ரடீஸையும் விடவில்லை. சாக்ரடீஸுக்கு எதிரான குற்றம்சாட்டிய ஏதென்ஸ் அரசு அரிட்டாபனீசின் வசனங்களையும் பயன்படுத்தியது. சாக்ரடீசை அவர் பைத்தியக்காரன் என்றும் அவர் கிரேக்க (Greece)  நாட்டில் விஷ- விஷமக் கருத்துக்களை வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் சாக்ரடீஸ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .

ராமன் பெயர் உள்ளவரை ராவணன் பெயரும் இருக்கும். சாக்ரடீஸ் பெயர் உள்ளவரை அரிஸ்டோபனிஸ் பெயரும் நீடிக்கும்.

Publications

The Acharnians

The Knights

The Clouds

The Wasps

The Peace

The Birds

Lysistrata

Thesmophoriazusae

The Frogs

Plutus

xxxxxxxxxxxxxxxxx

ரிக்வேதத்திலும் கம்ப … – Tamil and Vedas

https://tamilandvedas.com › ரிக்…

  1.  

15 Dec 2016 — ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! … ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் பாடிய தவளைப் …

அரிஸ்டோபனிஸ் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

8 Aug 2017 — Written by London Swaminathan. Date: 8 August 2017. Time uploaded in London​- 20-46. Post No. 4140. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks …

Aristophanes | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › aristophanes

  1.  

15 Dec 2016 — Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies …


Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

https://tamilandvedas.com › 2016/12/15 › aristophanes-…

  1.  

15 Dec 2016 — 3452) | Tamil and Vedas …


Posts about Fish God on Tamil and Vedas | Ancient sumerian …

https://www.pinterest.es › pin

  1.  

Jun 5, 2016 – Posts about Fish God written by Tamil and Vedas. … In Plato’s Symposium (189–190 AD), Aristophanes displays knowledge of an ancient myth of …

Tags- அரிஸ்டோபனிஸ் , கிரேக்க , நாடகங்கள், நகைச்சுவை ,

சாக்ரடீஸை கிண்டல் அடிக்கும் கிரேக்கர்கள்! (Post No.4140)

Written by London Swaminathan

 

Date: 8 August 2017

 

Time uploaded in London- 20-46

 

Post No. 4140

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நம்முடைய கண்ணோட்டத்தில் சாக்ரடீஸ் ஒரு சிந்தனைச் சிற்பி; பேரறிஞர்! ஆனால் அவர் காலத்திய கிரேக்க அறிஞர்கள் அவரை பைத்தியக்கரப் பயல் என்று சித்தரித்துள்ளனர். நான் ஏதென்ஸ் நகரில் ஆவலோடு வாங்கிய சீட்டுக் கட்டில் ஜோக்கர் கார்டில் சாக்ரடீஸ் உள்ளார். ஆனால் வேறு ஒரு கார்டிலும் சாக்ரடீஸ் படம் இருந்தது எனக்குக் கொஞ்சம் திருப்தி. இதைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பற்றி இரு வேறு கருத்துகள் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதி புகழ் சேர்த்த அரிஸ்டோபனிஸ் என்பவர், எல்லா தத்துவ அறிஞர்களும் தீய கருத்துக்களைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் சாக்ரடீஸை பைத்தியக்காரன் என்கிறார்.

 

 

நம்மூர் அரசியல்வாதிகளைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரன்தான். கிரேக்கம் எனப்படும் கிரீஸ் நாட்டில் அக்காலத்தில் தூக்குத் தண்டனை, சிரச் சேதம் முதலியன கிடையா. எவருக்கேனும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் உன் கொள்கைகளைக் கைவிடுகிறாயா? அல்லது விஷத்தைக் குடிக்கிறாயா? என்று கேட்பர். அப்பாவி சாக்ரடீஸ் எனக்கு இருக்கும் ஒரே சொத்து என் கொள்கைதான்; அது என்னுடன் இருக்கட்டும் என்று சொல்லி விஷத்தைக் குடித்தார்.

அவரது ஆத்ம சிநேகிதனான கிரீட்டோ, தப்பித்துச் செல்ல வழிவகைளைக் கூறியும் சிறையிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். கடைசியில் கிரீட்டோவை அழைத்து, “கிரீட்டொ! நான் வேண்டிக்கொண்ட தெய்வத்துக்கு ஒரு கோழியைப் பலி கொடுக்க மறந்து விடாதே” என்று சொல்லிவிட்டு ஹெம்லாக் என்னும் விஷத்தைக் குடித்தார். நிற்க.

 

இவரை நையாண்டி செய்து, நக்கல் அடித்த அரிஸ்டோபனிஸ், 40 நாடகங்களுக்கு மேல் எழுதினார். ஆனால் நம் கைகளில் சிக்கியது 11 நாடகங்கள்தான்.

இவருடைய வாழ்க்கைச் சரிதம் முழுதும் கிடைக்கவில்லை. ஆனால் ஏதென்ஸ் நகரில் பிறந்து 20 வயதுக்குள்ளேயே நகைச்சுவை நாடகங்களை எழுதத் துவங்கினார். இவரது  காலத்தில் ஏதன்ஸுக்கும் ஸ்பார்டாவுக்கும் 27 ஆண்டுகளுக்கு நடந்த போரில் ஏதென்ஸ் தோல்வி அடைந்தது. அத்துடன் மிகப்பெரிய கிரேக்க நாகரீகம் சீரழியத் தொடங்கியது. ஊழல் தலைவிரித்தாடியது. அவைகளக் குறை கூறியும் கிண்டல் செய்தும் நகைச் சுவை நாடகங்களை எழுதினார்.

 

இவருடைய நாடகங்கள் அங்கத நாடகங்கள் இரு பொருள்பட இருக்கும். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்று தவளைகள் பற்றியது. ரிக் வேதத்தில் வரும் தவளைப் பாடலுடன் அதை ஒப்பிட்டு ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

 

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

 

My old article:

 Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

tamilandvedas.com/2016/12/15/aristophanes…

राजेंद्र गुप्ता Rajendra Gupta has left a new comment on your post “Aristophanes, Vashistha and the Frog Song in the R…”

 

XXXX

 

80 நாடகம் எழுதிய ஏஸ்கைலஸ்!

கிரேக்க நாடகத்தின் முன்னோடி இவர். ஏஸ்கைலஸ்– சோக நாடகங்களின் மன்னன். ஏதென்ஸ் அருகில் பிறந்தவர். அடிக்கடி இதாலிக்குச் சொந்தமான சிசிலி தீவுக்குப் போய் வந்தார். அங்கேதான் இறந்தார்.

 

மராத்தன் போரிலும் சலாமிஸ் போரிலும் பங்கேற்றவர்.

 

80 நாடகம் எழுதி 52 முறை முதல் பரிசு பெற்றவர் ஏஸ்கைலஸ் . ஆனால் நமக்குக் கிடைத்தவை ஏழே நாடகங்கள் தான்.

கிரேக்க புராணக் கதைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்திகளை அளித்தார். இவருடைய நாடகம் பற்றிய சிறப்பு என்னவென்றால் 2500 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் இவருடைய நாடகங்கள் மேடையில் நடிக்கப்படுகின்றன (நம்முடைய மஹாபாரத நாடகங்கள் இன்றும் இந்தோநேஷியாவில் நடப்பது போல).

 

இவரது காலத்தில் பாரசீகத்துடன் நடந்த சண்டையில் கிரேக்கம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக போர்க்கால துன்பங்களை இவரது நாடகத்தில் காணலாம்.

பிறந்த ஆண்டு- கி.மு. 524

இறந்த ஆண்டு – கி.மு.456

 

–Subham–