
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9242
Date uploaded in London – –8 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கட்டுரையை எழுதியவர் ஞானமயம் ப்ரொட்யூஸர் லண்டன் சுவாமிநாதன்
வாசிப்பவர் வைஷ்ணவி ஆனந்த் (Gnanamayam Broadcast on 7-2-2021)
அருணகிரி நாதர் 3 விடுகதை போட்டார் ;அது நான்கு ஆன
சுவையான கதை இதோ !
சில வாரங்களுக்கு முன்னர் இதே அரங்கத்தில் அருணகிரிநாதர், பாடிய திருப்புகழில் , அவர் போட்ட மூன்று விடுகதைகளை உங்களுக்கு வழங்கினோம். அந்த 3 விடுகதைகளில் ஒன்றை விடுவிக்க நமது ப்ரொட்யூசர் திரு கல்யாண சுந்தர சிவாசார்யார் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை எனக்கு அனுப்பினார் . அது புதிரை விடுவிக்காமல் நாலாவது புதிரை — விடுகதையை – உருவாக்கிவிட்டது . இதோ 4 புதிர்களையும் கேளுங்கள்; விடை கிடைத்தால் எமக்கு எழுதுங்கள் அல்லது ஆடியோ, வீடியோ பதிவுகளில் பேசி அனுப்புங்கள்
இதோ 4 புதிர்கள்
அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை முந்தைய எட்டு கட்டுரைகளில் கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.
- திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.
- சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.
- பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?
மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

மாங்கனியா? மாதுளங்கனியா?
திருவிளையாடல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு முருகன் – பிள்ளையார் இடையே நடந்த போட்டி தெரியும். கலகம் செய்வதையே பொழுது போக்காகக் கொண்ட நாரத மாமுனிவன் ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து அதை வெட்டாமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். உலகம் சுற்றும் வாலிபனுக்கே அந்தப் பழம் என்று போட்டி வைக்க, முருகன் மயில் மீது பறந்து சென்றார். கெட்டிக் கார பிள்ளையார் அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவந்து உலகத்தையே சுற்றிவிட்டதாகச் சொல்லி பழத்தை வென்றார்., முருகன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறினார். ஆனால் அது மாம்பழக் கதை. அருணகிரிநாதர் சொல்வதோ மாதுளம்பழம். இது புதுக் கதையா? பழைய கதையில் செய்யப்பட்ட ஒரு சிறிய மாற்றமா?
இதோ மாதுளங் கனி திருப்புகழ்:
உவகாரியன்பர்பணி கலியாணி எந்தை இடம்
முறைநாய கங்கவுரி சிவகாமி
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை
ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா
Xxxxx
இப்போது புதிய புதிர் – விடுகதை என்ன என்று காண்போம்.
மாதுளம் பழம் என்று சம்ஸ்க்ருதத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தை அனுப்பி இதில் விடை கிடைக்குமா என்று பாருங்கள் என்று திரு கல்யாண சுந்தர சிவாசார்யார் அனுப்பியிருந்தார். அது சிவ ரஹஸ்யம் என்னும் புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. மிகவும் ஆவலுடன் ஒரு கட்டுரை தீட்டுவதற்குத் தயாரானேன். அப்பொழுது மாதுளம் பழம் என்பதற்கு சம்ஸ்க்ருத அகராதியில் பொருளைக் கண்டுபிடிக்கத் திருப்பினேன். பச்சை எலுமிச்சம் பழம் என்று போட்டிருந்தது . பின்னர் நாம் மாதுளம்பழம் என்று சொல்லும் பழத்துக்கு என்ன பெயர் என்று பார்த்தால் தாடிம (Dadima) என்று போட்டிருக்கிறது. இன்றும் வட இந்திய மொழிகளில் மாதுளம் பழத்தை — அதாவது POMEGRANATE போம்கிரனேட் என்று — ஆங்கிலத்தில் சொல்லும் பழத்தை – தாடிம என்றே அழைக்கின்றனர். ஹிந்தியில் அனார் (ANAR) என்றும் சொல்லுவார்கள்

நமது தமிழ் அகராதிகளில் என்னிடம் உள்ள பழைய அகராதி 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி ஆகும் .அதில் மாதுளம் பழத்துக்கு வேறு பொருள் உண்டோ என்று கண்டேன்.
தமிழில் மாதுளம் பழத்துக்கு இன்று நாம் சொல்லும் பொருளே உளது. இன்னொரு பெயர் மாதளை என்றும் உளது. சிறிது ள – கரத்தை மாற்றி மாதுல — என்று சொன்னால் ஊமத்தை என்றும் பொருள் உள்ளது. இவை எதுவும் நம்முடைய புதிருக்கு விடை சொல்ல வில்லை .
XXX
திரு கல்யாண சுந்தர சிவாசார்யார் அனுப்பிய
हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको
ஹேமாத்ரி கில மாதுலுங்க பல மித்யாதாய மோதாதிகோ
என்று துவங்கும் அந்த ஸ்லோகத்தில் முதல் வரியில் வரும் ‘மாதுலுங்க பல’ என்பதற்கு எலுமிச்சை என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்லும் . இந்த வரியின் மொத்த பொருள்:–
மேரு மலையையே எலுமிச்சம் பழம் போல கையில் தூக்கும் கணபதியே – என்பதாகும் பின்னர் வரும் வரிகளில் ஜம்பு பழத்தையும் — அதாவது நாவல் பழத்தையும் குறிப்பிட்டு– அத்தகைய கணபதி என்னைக் காப்பாற்றுவாராக என்று முடிகிறது
XXXX

கடைசியில் எஞ்சி நிற்கும் கேள்விகள் ………………………
அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியது போல பிள்ளையார் கையில் ‘மாதுளம் பழம் இருந்ததா? மாம்பழம் இருந்ததா?
அந்த மாதுளம் என்பது தாடிம, அனார் , POMEGRANATE போம்க்ரனேட் என்னும் பழமா சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் வரும் மாதுலுங்கம் அதாவது எலுமிச்சசையா ?
அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் கூட மாதுளம் பூ நிறத்தாளை என்று அம்பிகையைப் பாடுகையில் நாம் அறிந்த மாதுளம் பழத்தின் செந்நிறப் பூ தான், நம் மனக்கண் முன் வரும்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

ஆக புதிருக்கு மேல் புதிர்!!!!
கட்டுரையை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
வாசித்தவர் வைஷ்ணவி ஆனந்த்
XXX
FOR REFERENCE ONLY ………………….
हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको
मौढयान्नाकनिवासिनां भयपरैर्वाक्यैरिव प्रार्थितः ।
नीलीशम्बरनीलमम्बरतलं जम्बूफलं भावयन्
तं मुच्ञन् गिरिमम्बरं परिमृशन् लम्बोदरः पातु मा
May the Lord Ganapati who joyously holds the Mount Meru as if it were berry (CITRON FRUIT) fruit ,who then pleaded by the frightened by celestial beings lets go of only to capture the blue expanse of the sky taking it to be like a jambu fruit -May that lord Ganapati with huge belly protect me
This sloka proclaim god by his Maya sakti can hold up all natural matters within him including smallest to biggest thing
FOR MATULUNGA PALA, PLEASE SEE WISDOMLIB.ORG DICTIONARY
Sanskrit dictionary
[«previous (M) next»] — Matulunga in Sanskrit glossary
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
Mātuluṅga (मातुलुङ्ग).—A kind of citron tree; (bhuvo) भागाः प्रेङ्खितमातुलुङ्गवृतयः प्रेयो विधास्यन्ति वाम् (bhāgāḥ preṅkhitamātuluṅgavṛtayaḥ preyo vidhāsyanti vām) Māl.6.19.
-gam The fruit of this tree, a citron.
Derivable forms: mātuluṅgaḥ (मातुलुङ्गः).
See also (synonyms): mātuliṅga.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary
Mātuluṅga (मातुलुङ्ग).—m.
(–ṅgaḥ) Common citron. f.
(–ṅgā) The sweet lime. E. See the next.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary
Mātuluṅga (मातुलुङ्ग).—v. mātulaṅga.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary
1) Mātuluṅga (मातुलुङ्ग):—[from mātulaṅga] m. and n. = [preceding] m. and n., [Suśruta]
2) Mātuluṅgā (मातुलुङ्गा):—[from mātuluṅga > mātulaṅga] f. another species of citron tree, sweet lime, [ib.]
[Sanskrit to German] (Deutsch Wörterbuch)

XXXX SUBHAM XXXXX
tags–மூன்று புதிர், மாதுளம் பழம், அருணகிரி நாதர், திருப்புகழ்:
You must be logged in to post a comment.