அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் (Post No.9162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9162

Date uploaded in London – –19 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 VOICE RECORDING IS IN GNANAMAYAM PAGE; FACEBOOK, YOU TUBE

லண்டனிலிருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 18-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை!

அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம்                                      

  ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் பற்றி இன்று காண்போம்.

மந்திரம், யந்திரம், தந்திரம் மூலமாக எதையும் அடைய முடியும் என்று ஹிந்து மத சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றனஉரிய வழிகளைக் காட்டுகின்றன!

யந்திரம் என்பது பல்வேறு வடிவங்களை அமைத்து அதில் மந்திரங்களைப் பிரயோகித்து ஒரு சக்தியை உருவாக்கி விரும்புவதை அடைய வழி வகுப்பதாகும்.

உலகில் வாழும் மனிதர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நோக்குடன் அருளாளர்கள் ஆலயத்தில் மூல விக்கிரகத்தின் – பீடத்திலோ அல்லது ஆலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியிலோ யந்திர பிரதிஷ்டை செய்து வந்தனர். திருப்பதியில் ஜன ஆகர்ஷண, தன ஆகர்ஷண யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாலேயே அங்கு மக்கள் திரள் திரளாகக் குவிகிறார்கள், ஏராளமான செல்வமும் வந்து குவிகிறது என்று பெரியோர் கூறுவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் யந்திரமும் பிரசித்தி பெற்றது.

யந்திரங்களுள் சிறந்தது அளப்பரிய ஆற்றல் கொண்டது ஸ்ரீயந்த்ரம்

இதை ஸ்ரீசக்ரம் என்று சொல்வது வழக்கம். இது இருக்கும் இடமே மங்களகரமானது.

இதன் மூலமே மஹா சக்தியை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர். அண்ட சராசரத்தின் அடையாளச் சின்னமே ஸ்ரீசக்ரமாகும். ஸ்ரீசக்ரம் உள்ளிட்ட பல்வேறு யந்திரங்கள் பிரக்ஞையின் பல்வேறு நிலைகளை எட்ட உதவுகின்றன.     ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

மந்திரத்திற்கு மஹிமை உண்டா என்று ஒலி அலைகளை அறிவியல் பூர்வமாக ஆராய, ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஜென்னி (Hans Jenny) (1904-1972) முனைந்தார்.

பொறுமையாக ஒவ்வொரு ஒலி அலையையும் அவர் பத்து ஆண்டுக் காலம் பரிசோதித்தார். க்ளிசரின், பாதரஸம், ஜெல் பவுடர், இரும்பு போன்றவற்றில் ஒலி அலைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் உன்னிப்பாக ஆராய்ந்தார். குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் (Low Frequency Sound Waves) சாதாரணமான ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்டபோது இந்த சாதாரண படங்கள் சிக்கலான படங்களாக மாற ஆரம்பித்தன!

“ஓ என்ற ஒலி அலை, ஒரு வட்டத்தை உருவாக்கியது. உடனே “ஓம் என்ற ஒலி அலையை அவர் உருவாக்கினார். அதிலே ஸ்ரீசக்ரம் உருவானது!

     ஹான்ஸ் ஜென்னி ஆச்சரியப்பட்டுப் போனார். பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீசக்ரம் வழிபடப்பட்டு வருகிறது. ஓம் உச்சரிக்கப்பட்டு வருகிறது!

ஜென்னி தன் ஆய்வுகளின் மூலம் ஒலி அலைகள் உருவங்களை உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு வந்தார். அத்தோடு மனித உடலில் செல்கள், திசுக்கள், உறுப்புகள் அதற்கு உரித்தான ஒலியைக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கும் அவர் வந்தார். “ஓம் என்று உச்சரிப்பதும் அதைப் போற்றி வழிபடுவதும், ஸ்ரீசக்ர வழிபாடும் உடலுக்கும் மனதிற்கும் எல்லையற்ற சக்திகளையும் இதர நலன்களையும் நல்குகிறது என்று அவரது ஆய்வு சிறப்பான முடிவைத் தெரிவிக்கிறது!

ஸ்ரீசக்ரத்தின் பெருமையைக் கேட்ட உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதை ஆராய ஆரம்பித்து விட்டனர். மாஸ்கோ பல்கலைக் கழக இயற்பியல் விஞ்ஞானியான அலெக்ஸி குலைச்சேவ் (Alexie Kulaichev) மற்றும் ரஷிய நாட்டு விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த கோவலான் சென்கோ என்ற இருவரும் ஸ்ரீசக்ரத்தை ஆராயப் புகுந்தனர். அவர்களது ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு எல்லையற்ற பிரமிப்பையும் வியப்பையும் தந்தது,

கம்ப்யூட்டராலேயே ஸ்ரீசக்ர கோணங்களையும் அமைப்பையும் ஆராய முடியவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

“இன்றைய கணினி தொழில்நுட்பத்தால் ஸ்ரீசக்ரத்தை ஆராய முடியவில்லை என்றும் அதை ஆராய்வதற்குச் சிக்கலான அல்ஜீப்ரா சமன்பாடுகள் உள்ளன; அது தற்போதைய கணினியின் செயல்திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது (Their analysis involved a complex system of algebraic equations and a complicated computations which are beyond the capability of the present generation of computers) என்று அவர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த சக்கரத்தை எப்படி முன்னோர்கள் அமைத்தனர், ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டும் போது அதன் பல்வேறு வெட்டுப் புள்ளிகள் ஒரே இடத்தில் சேர்வதை எப்படி அவர்களால் அறிய முடிந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்!

“How did people come to know that nine triangles arranged in such a way intersect each other, their numerous crossing points coinciding!”

ஸ்ரீசக்ரத்தின் மஹிமையைப் பல்வேறு விதமாகவும் அவர்கள் ஆராய்ந்தனர். ஸ்ரீசக்ரம் உளவியல் சம்பந்தமான அனைத்து மனநோய்களையும் போக்க வல்லது என்று அவர்கள் அதிகாரபூர்வமாகக் கூறுகின்றனர், மிக மிக சரியான அளவுகளுடன் அதை எப்படி வரைவது என்று தெரிந்து கொண்டு அந்த முறையில் அமைக்கப்படும் ஸ்ரீசக்ரம் மட்டுமே இந்த விதமான சக்தியைப் பெறுகிறது. அலெக்ஸி குலைச்சேவ் தனது ஆராய்ச்சியில் ஸ்ரீசக்ரம் போன்ற ஒரு போலி யந்திரத்தைச் செய்து அதை ஆய்வு செய்த போது அது எந்த நோயையும் குணப்படுத்தவில்லை. ஆக உரிய அளவுகளுடன் உரிய முறையில் உள்ள ஸ்ரீசக்ரமே சக்தி வாய்ந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலமாக உறுதிப் படுத்தினார் அவர். அவரது ஆய்வுரையை அங்கீகரிக்க அவரது திட்டத் தலைவருக்கு அது சமர்ப்பிக்கப்பட்ட போது அவரும் இப்படிப்பட்ட பலன்களை உறுதி செய்து கொண்ட பின்னரேயே அந்த ஆய்வை அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

ஸ்ரீசக்ரத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ளன. நடுவில் பிந்துவும் (புள்ளி), சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ள அமைப்பு என்று ஒரு வரியில் சுலபமாக ஸ்ரீசக்ரத்தை விவரித்துச் சொல்லி விட்டாலும் எல்லையற்ற பிரபஞ்சத்தின் மர்மத்தை அது உள்ளடக்கி இருக்கிறது என்றே அதன் ஆற்றலை உணர்ந்தோர் கூறுவர்.

ஒன்பது முக்கோணங்களில் மேல் நோக்கிய நான்கும் சிவனையும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன,

மஹா திரிபுரசுந்தரியின் வழிபாடாக ஸ்ரீசக்ர வழிபாடு அமைகிறது. எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, முக்திப் பேறு என இப்படி இக பர நலன்கள் அனைத்தையும் தரும் அற்புத யந்திரம் ஸ்ரீசக்ரமாகும்!

சௌந்தர்ய லஹரிக்கு விரிவுரை எழுதிய லக்ஷ்மிதரர் பதினொன்றாம் சுலோக விரிவுரையில் ஸ்ரீசக்ரத்தை மதம், இனம், வர்ணம், பால், வயது, அந்தஸ்து, கல்வி பாகுபாடின்றி அனைவரும் வழிபடலாம் என்று உரைக்கிறார்.

அகஸ்திய மாமுனிவர் அம்பாளின் அணுக்க பக்தையான தனது மனைவி லோபாமுத்ராவிடம் திரிபுரசுந்தரியின் அருளைப் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அப்படிப்பட்ட லோபாமுத்ராவை “லோபாமுத்ராவால் அர்ச்சிக்கப்படுபவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் 648வது நாமத்தில் கூறி அவரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது!

பவிஷ்யோத்தர புராணத்தில் அவர், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு காட்டிலும் சக்தி வழிபாட்டில் ஆர்வமுள்ளோர் இதை வழிபடலாம் என ஆணித்தரமாகக் கூறுவதால் அனைவருக்கும் ஏற்ற வழிபாடு ஸ்ரீசக்ர வழிபாடு என்பது பெறப்படுகிறது.

திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஐந்தடி உயரம் உடையவள். அங்கே கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப் போன அர்ச்சகர்கள் வீடு திரும்பாமல் அன்றே இறந்து போவது வழக்கமாக இருந்தது. இதை எண்ணி அனைவரும் சொல்ல மாளாத துக்கம் அடைந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஆதி சங்கரர் அங்கே வந்து நான்கு அங்குலம் உள்ள பூப்ரஸ்தார சக்கரத்தைத் தங்கத்தில் செய்து அதில் வைரம் பதித்து அம்மனின் இரு காதுகளிலும் அணிவித்தார். அம்மனின் கடும் உக்கிரத்தைத் தணிவித்து அம்மனை அர்ச்சிக்க அனுமதியும் தந்தார். அம்மன் அர்ச்சனையை ஏற்றதுடன் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் இதர சௌபாக்கியங்களையும் அருள ஆரம்பித்தாள்.

ஸ்ரீசக்ர ஆராய்ச்சியில் தன் வாழ்நாளை ஈடுபடுத்திய பலருள்ளும் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்வாமி ப்ரணவானந்தர். (14-1-1896 அன்று பிறந்த இவர் தநனது 93ஆம் வயதில் 17-5-1989 அன்று இறைவனுடன் கலந்தார். 1976ஆம் குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் அவர்.

பிரபல ஆங்கில எழுத்தாளரான பால் ப்ரண்டன் அவருடனான தனது அனுபவங்களை ‘ஹெர்மிட் இன் தி ஹிமாலயாஸ் என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.

சுமார் 180க்கும் மேலான ஸ்ரீசக்ர பிரதிஷ்டைகளை நேரில் கண்டு ப்ரணவானந்தர் அவற்றை ஆராய்ந்தார். ஸ்ரீசக்ரத்தின் அனைத்து அம்சங்களையும் நலங்களையும் விளக்கும் அவர் ஸ்ரீசக்ர வழிபாடு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்கிறார்.

சென்னையில் திருவேற்காட்டிலும் மாங்காட்டிலும் உள்ள ஸ்ரீசக்ரம் மிக்க சக்தி வாய்ந்தவை. மாங்காட்டில் உள்ள கோயில் ஒன்றே பாரதம் முழுவதிலும் ஸ்ரீசக்ரத்திற்காக அமைந்துள்ள ஒரே கோவில் ஆகும். தஞ்சாவூர் அரண்மனையில் மரகதத்தால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.சென்னையில், வேளச்சேரியில் தண்டீஸ்வரர் கோவிலில் அப்பைய தீக்ஷிதர் ஸ்தாபித்த பூப்ரஸ்தார யந்திரம் மிக்க சக்தி வாய்ந்தது.

தமிழகத்தில் சிதம்பரத்தில் கோகிலாம்பா கோவில், காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளிட்ட சுமார் 14 இடங்களில் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

யந்திரங்களிலேயே உன்னதமானது என்பதால் இதை ‘சர்வச் ரேஷ்ட யந்திரம் என்பர்.

ஸ்ரீசக்ரத்தை சுவரில் தொங்க விடக்கூடாது. கிடைமட்டமாக வைத்து வழிபட வேண்டும். சரியாக் இதை வழிபடும் முறையை குரு மூலமாகக் கற்று வழிபடுதலே சாலச் சிறந்தது. இதைத் தூய மனதுடன் வழிபடுவோர் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறுவர். தீய நோக்குடன் இதை வழிபட்டால் இது செயலிழப்பதோடு வழிபடுவோருக்குத் தீங்கையே விளைவிக்கும்.

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மஹா பெரியவாள் ஸ்ரீசக்ரத்தைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர் கூறுகிறார்:-

“கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது.  Divine Design! கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.” (தெய்வத்தின் குரல் ஆறாம் தொகுதியில் இந்த விளக்கத்தைப் பார்க்கலாம்). அவர் தரும் எச்சரிக்கையும் ஒன்று உண்டு! :- “இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.” என்கிறார் அவர்.               அனைத்து அதிர்ஷ்டங்களையும் நலன்களையும் ஒருங்கே அள்ளித் தரும் ஸ்ரீசக்ரத்தை அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம் என்றே அழைக்கலாம்.  ஸ்ரீசக்ரத்தை உரிய முறையில் வழிபடுவோமாக; இகபர நலன்களைப் பெறுவோமாக; உயர்வோமாக! நன்றி வணக்கம்! 

***

குறிப்பு:-

ஸ்வாமி ப்ரணவானந்தரின் புத்தகம் கிடைக்குமிடம்:-

A Treatise on Sri Chakra

By Swami Pravananda F.R.G.S (Of Holy Kailas Manasarovar)

240 Pages

Publishers : Sri Swami Pranavananda Trust

Yenuulamahal, East Godavari Dt, Andhra Pradesh Pincode: 533233

TAGS- அறிவியல் , ஸ்ரீசக்ர ரகசியம், ப்ரணவானந்த

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.8959)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8959

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்ரீ சத்ய சாயிபாபா – அவதார தினம் 23-11-1926 சமாதி: 24-4-2011

அவதார தினத்தில் அவரைப் போற்றி வணங்குவோமாக!

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா!

ச.நாகராஜன்

1

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அன்றாட அருள் லீலைகள் அறிவியலை வியக்க வைப்பவை. ஏராளமான விஞ்ஞானிகள் அவரை தரிசித்துள்ளனர். அவரது லீலைகளை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்து பிரமித்துள்ளனர்.

பல விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் உலகெங்குமுள்ள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

அறிவியல் அறிஞர்கள் ஒரு புறம் இருக்க இதர துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் அவரை சமீபத்தில் நெருக்கமாகக் கண்டு அவரது லீலைகளைக் கண்டு அனுபவித்துள்ளனர். சாமானிய மக்களோ எனில், கேட்கவே வேண்டாம்.

சில லீலைகளை இங்கு படித்து மகிழலாம்!

2

ஒரு பக்தர். அவர் ஒரு முறை பாபாவை ‘உயிருள்ள ஒன்றை’ சிருஷ்டித்துக் காட்டுமாறு வேண்டினார்.

பாபா உடனே ஒரு குட்டிக் குரங்கை அவர் முன்னாலேயே சிருஷ்டித்தார்.

அது மட்டுமல்ல; அவர் பையில் வைத்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்தக் குரங்குக்குத் தருமாறு கூறினார். அவரும் அப்படியே வாழைப்பழத்தைக் குரங்குக்குக் கொடுக்க அது மகிழ்ச்சியிடன் அதை உண்டது! பக்தர், அது தனக்கு வேண்டாம் என்றும் அதை பாபாவே திருப்பி அனுப்பி விடலாம் என்று கூறினார்.

பாபா குரங்கை அழைத்து அதைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.

பூ! குரங்கைக் காணோம்!

3

டர்பனில் வாழ்ந்து வந்த பக்தர் கார்டன் செட்டி! (Gordon Chetty – Durban).பஜனைக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவதும் அவர்களை பஜனை முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டு போய் விடுவதும் அவர் மனமுவந்து செய்து வந்த சேவைகளில் ஒன்று.

அவரது ஸ்டேஷன்வாகன் வாகனத்தில் பெட்ரோல் தானாகவே அவ்வப்பொழுது நிரம்பிக் கொள்ளும். அத்துடன் மட்டுமல்ல, அது பெட்ரோல் டாங்கிலிருந்து நிரம்பிக்  கீழே வழிய வேறு ஆரம்பிக்கும்.

அக்கம்பக்கத்தில் வாழும் அண்டை அயலார் ஓடி வந்து அதை தங்கள் கேன்களில் நிரப்பிக் கொள்வர்.

உயிர் பிழைத்து மீண்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற பக்தரைப் பற்றி சாயி பக்தர்கள் அனைவரும் அறிவர். ஒரு முறை அவர் பகவான் பாபாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது காரில் பெட்ரோல் தீர்ந்து போனது. அருகில் எங்கும் பெட்ரோல் பங்க் இல்லை. பாபா டிரைவரை அழைத்து அருகிலுள்ள குளத்திற்குச் சென்று கொஞ்சம் தண்ணீரை எடுத்து வரச் சொன்னார்.

தண்ணீர் வந்தது. பாபா அதைத் தன் கையால் தொட்டார். அதை டாங்கில் நிரப்பச் சொன்னார்.

“இப்போது போகலாம், காரை எடு” என்றார் பாபா!

ஓ! கார் கிளம்பியது, அது தான் பெட்ரோல் நிரப்பி ஆயிற்றே! ஓட வேண்டியது தானே!!

4

இரண்டு அமெரிக்கர்கள் புட்டபர்த்தி வந்தனர். நீண்ட நெடும் விமானப் பயணம். பங்களூரிலிருந்து காரில் பயணம் வேறு. தங்கள் அறைகளில் நுழைந்த அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ள மது பாட்டில்களைத் திறந்தனர்.

சியர்ஸ்!

ஆனால் என்ன ஒரு கோளாறு! மது பாட்டிலிலிருந்து வந்த திரவம் தண்ணீர் சுவையுடன் இருந்தது. அடுத்த பாட்டிலை திறந்தனர். அதுவும் தண்ணீர் போலவே இருந்தது.

அதற்குள் தரிசனத்திற்கான நேரம் வரவே அவர்கள் உடனடியாக தரிசனத்திற்கான கியூவில் சென்று சேர்ந்தனர். அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் உட்கார முன் வரிசை கிடைத்தது.

பாபா வந்தார். முதலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று தரிசனம் தந்தார்.

பின்னர் ஆண்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்தவர் நேராக அந்த இரு அமெரிக்கர்க்ள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்.

கண்களைச் சிமிட்டியவாறே அவர்களைப் பார்த்து, “சியர்ஸ்” என்றார்! அங்கிருந்து நகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து தண்ணீரை ஒய்னாக ஆக்கினார்!

ஆனால் இந்த பாபாவோ ஒயினை தண்ணீராக மாற்றினார்!!

5

பாபா மனிதனையே “பேக்ஸில்” அனுப்பிய சம்பவம் அறிவியல் அறிஞர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று.

ஆஸ்திரேலியாவிலிருது வந்த பக்தர் குழாம் ஒன்றை இண்டர்வியூவிற்காக அழைத்தார் பாபா. அங்கு என்ன நடந்தது என்பதை அனில்குமார் மல்ஹோத்ரா தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

நடந்தது இது தான்!

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்களுள் ஒரு இளைஞரும் இருந்தார். அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள தன் வீட்டிற்குப் போகத் துடித்தார்.

பாபா குழுவினரை அங்கிருந்த சுவரைப் பார்க்கச் சொன்னார்.

அதில் வீடியோ காட்சியில் வருவது போல ஆஸ்திரேலியா மேப் தோன்றியது. பிறகு அந்த இளைஞரின் நகரம் தோன்றியது; பின்னர் அவர் வாழும் தெரு, பின்னர் அவரது வீடு தோன்றியது.

அந்த இளைஞரைப் பார்த்து, “உள்ளே போ” என்றார் பாபா. அந்த இளைஞரும் உள்ளே சென்றார்.

ஆஸ்திரேலிய குழுவினர் இண்டர்நேஷனல் கால் சென்டருக்கு விரைந்தனர். தங்கள் நண்பர் வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டனர்.

நண்பர் தான் பேசினார்.”பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன்” என்றார் அவர்.

6

இயற்கையை மீறியவர் பாபா – இயற்கையைப் படைத்தவன் நானே என்பார் அவர்.

என்றாலும் சொல்லால் சொல்வது வேறு; செயலால் அனுபவமாக அதை உணர்ந்து அனுபவிப்பது வேறு, இல்லையா!

நூற்றுக் கணக்கில் இப்படி அழகுற பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

இந்த கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்ட சம்பவங்கள், Dr. Hiramalini Seshadri எழுதிய GOD – IN OUR MIST என்ற புத்தகத்தில் Avatar- The Magnet என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள சம்பவங்கள்!

அவதார புருஷரான பகவான் பாபாவை இந்த பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்!

****

GOD – IN OUR MIST – மூன்றாம் பதிப்பு – திருத்தி வெளியிடப்பட்ட ஆண்டு 2003 நன்றி: திருமதி டாக்டர் ஹீராமாலினி சேஷாத்ரி.

tags– அறிவியல் , சத்ய சாயிபாபா

அறிவியல் வியக்கும் கண் திருஷ்டி! (Post No.6971)

Written by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 3 SEPTEMBER 2019


British Summer Time uploaded in London – 6-08 AM

Post No. 6971

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

subham

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)

b6570-magnet

Research Article Written by London swaminathan

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:-16-54

 

Post No.3445

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் அவனுடைய ஏழு சம்ஸ்கிருதப் படைப்புகளில் கொடுத்த 1200+ அற்புதமான உவமைகளை உலகமே அறியும். உலகத்திலேயே அதிகமான, பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தியதால் “உவமைக்கு காளிதாசன் என்ற  பொன்மொழி உண்டாயிற்று. அவனுடைய 1200க்கும் மேற்பட்ட உவமை, உருவக, உத்திகளில் 200 ஐ சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் பின்பற்றியதால் காளிதாசன் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிறுவியுள்ளேன்.

 

இப்பொழுது அவன் தந்த வியத்தகு அறிவியல் உண்மைகளை அலசுவோம்:

 

காளிதாசன் பேசாத பொருளே இல்லை. அவனைப் போல இலக்கிய நயமும், என்சைக்ளோபீடியா போன்ற அறிவு வீச்சும் காண்பதற்கரிது.

 

இரண்டு விஷயங்களை காளிதாசன் எப்படிச் சொன்னான் என்பது இன்று வரை எவருக்கும் புரியவில்லை.

 

குமரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில் இமய மலையின் அற்புத அழகை வருணிக்கும் போது அதை உலகத்தின் அளவுகோல் (ஸ்கேல்/ ரூலர்) என்கிறான். இன்று நவீன வசதிகள் இருப்பதால் அதை 1500 மைல் நீளம் உடையது என்பதை நாம் அறிவோம். அது விண்வெளியிலிருந்து தெரியும் விஷயங்களில் ஒன்று என்று விண்வெளிக் கப்பல் விட்டதால் அறிகிறோம். காளிதாசன் கி.மு முதல் நூற்றாண்டில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன் வசித்தவன். எப்படி இது இவ்வளவு நீளமானது? உலகின் அளவுகோல் என்று தெரிந்தது? என்பது வியப்பான விஷயமே. தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டீஸ் மலை சுமார் 4000 மைல் நீளமிருந்தாலும் அதெல்லாம் உலகின் பழைய நாகரீகம் இல்லாத இடங்களில் இருக்கிறது.

ஆனால் இமயமலையோ உலகின் முக்கிய நாகரீகங்களுக்கு இடையில் இருக்கிறது. வேறு யாரும் சொல்லாத விஷயத்தை அவன் போகிற போக்கில் சொல்லிச் செல்லுகிறான்.

 

இவனுடைய பூகோள அறிவுக்கு இது மட்டும் சான்றல்ல. ஈரான் நாட்டில் தேன் அடை போல தாடி வைத்திருக்கும் பாரசீகர் முதல், இந்தோநேஷியத் தீவுகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் வரை இவன் காவியத்தில் உள்ளன. தமிழ்நாடு-கர்நாடகத்திலுள்ள சந்தனமரப் பாம்பு முதல் பாண்டியன் – அகஸ்தியன் உறவு வரை பேசுகிறான். சங்கத் தமிழ் இலக்கியத்தில் கூட அகத்திய-பாண்டியன் உறவு பேசப்படவில்லை!

 

 

இவன் சொன்ன இரண்டாவது விஷயம் இமய மலை விஷயத்தைவிட வியப்பானது. விமானம் ஓட்டப் பயிற்சி செய்யும் பைலட் PILOTடுகள் முதல்தடவை பறக்கும்போதும் தரை இறங்கும் போதும் பயந்து விடுவார்கள். பூமியில் விமானம் வேகமாகத் தரை இறங்கும்போது நம் மீது வெகு வேகமாக மோத வருவது போல பூமி நம்மை நோக்கி விரைந்துவரும். இந்தக் காட்சியை காளிதாசன் வருணிக்கிறான். அவனுக்கு எப்படி இந்த அனுபவம் கிடைத்தது? மேலும் இது பற்றியும் மனதினால் இயங்கக் கூடிய விமானம் பற்றியும் பேசுவதால் அவனுடைய காலத்தில் இதுபற்றி நிறையபேருக்கு நல்லறிவு இருந்திருக்கவேண்டும்.

 

ae12d-gems

ஒளிவிடும் மரங்கள், பறவைகள் குடியேற்றம், இரும்பை இழுத்துக் கவரும் காந்தம், சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உண்டாக்கும் சூரியகாந்தக் கல் (உருப்பெருக்காடி), பலூனில் பறத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பாடுகிறான்.

 

உலகில் இன்று ஏதாவது ஒரு நாட்டிற்குப் போக வேண்டும் என்றால் அந்த நாடு அல்லது நகரம் பற்றிய TOURIST GUIDE டூரிஸ்ட் கைட்-ஐ விலைக்கு  வாங்குவோம். இதை வெளியிட பிரபல கம்பெனிகள் இருக்கின்றன. உலகின் முதல் டூரிஸ்ட் கைட் TOURIST GUIDE  காளி தாசனின் மேக தூதம்தான். நூற்றுக்கும் மேலான பாடல்களில் “மேகமே நீ இதைப் பார் அதைப்பார்” என்று வருணிக்கிறான். அதே போல இலங்கையிலிருந்து சீதையை விமானத்தில் அழைத்துவரும்போது ராமன் வாயிலாக திமிங்கிலம் முதலியவற்றை வருணிக்கிறான். சைபீரியாவிலிருந்து வரும் பறவைகள் இமயமலை மீது பறக்க முடியாது. ஏனெனில் 20000 அடிக்கு மேல் உயரமுடையது. அவை எல்லாம் நீதி பாஸ் என்னும் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழையும். இதையெலாம் பாடுகிறான் நம் கவிஞன்! இவனுடைய இலக்கிய நயத்தையும் சாகுந்தல நாடகத்தின் இனிமையையும் உலகம் அறியும். ஆனால் இவனுக்கு எல்லா துறைகளிலும் அறிவு இருந்தது; அவன் சகல கலா வல்லவன் என்பது பலருக்கும் தெரியாது.

 

திருமணமாகி புதுவீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு அவன் சொல்லும் அறிவுரை சாகுந்தலத்தில் உள்ளது . இவனுக்கு சைகாலஜியும் (Psychology)  தெரியும் என்பதற்கு அதுவே சான்று.

 

இரத்தினக் கற்கள், நகைகள், தங்கம், வெள்ளி, முத்து, பவளம் பற்றியும் இவன் பாடுகிறான்.(இவை பற்றியெல்லாம் தனித் தனி கட்டுரைகளை இதே பிளாக்கில் ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டதால் இங்கு குறிப்புகளை மட்டும் கொடுக்கிறேன்). காளிதாசனைப் படிக்காத ஒருவனுக்கு இந்திய இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ பேச 100 சதவிகித அருகதை கிடையாது. 50 முதல் 60 சதவிகித அருகதையே. இதையே நான் வட இந்தியர்களுக்கும் சொல்லுவேன். நீங்கள் காளிதாசனையும் வால்மீகியையும் வியாசனையும் படித்தாலும் சங்கத் தமிழ் இலக்கியத்தையும் அதற்குப்பின் வந்த திருக்குறள்- சிலப்பதிகாரம் ஆகிய இரண்டையும் படிக்காதவரை உங்கள் அறிவு 50 முதல் 60 சதவிகிதமே என்று சொல்லுவேன்.

a7747-best2bbird2bmigration

 

கீழேயுள்ள குறிப்புகளைக் கொண்டு நீங்களே நான் சொன்ன விஷயங்களை ஆராயலாம்:–

 

ரகுவம்சம்- Rv

குமார சம்பவம்- KS

மேகதூதம் -Mega

விக்ரம ஊர்வசீயம்- VU

மாளவிகா அக்னிமித்ரம் – MA

அபிஞான சாகுந்தலம் – AS

ருது சம்ஹாரம் – RS

 

விமான இயல்

Sakuntalam Act 1—9 (Read my article: Did Kalidasa fly in a space shuttle? Posted on 12 Sept.2014)

Sakuntalam Act 7—7/10; Ks2-45;Rv 13-68;13-76;13-79;14-20

 

 

பறக்கும் பலூன்

Rv 16-68

 

வானத்திலுள்ள மூவழிப்பாதை

 

Flight path Rv 13-18, 13-19

xxx

Picture saved with settings embedded.

விண்வெளி இயல்

பால்வெளி மண்டலம் (Milky way) Rv 13-2; 1-78; KS 4-37;1-28; Rv 12-85

 

Chitra constellation Rv 1-46, 13-76, 17-35 pole star 18-34;

Comet KS 2-32; AS 4; Mars vu 5-3

Pusya star Rv 18-32;

Venus KS 3-43;

Stars KS 2-19; RV 7-2;

Meteor Rv 16-83; 14-53;

Algol/Arundhati in Ursa Major Constellation: Rv 1-56

Rohini and Moon:AS 7-22; 3-12; VU 3-4; RV 14-40

 

xxx

பறவைகள் குடியேற்றம்

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

 

xxxx

நிலவியல் Geography and Geology

 

KS 1-10 (Description of the beautiful Himalayas)

Sub marine Fire (Vadamukagni/Badava:- AS 3-3; Rv 9-82; 11-75; 13-4;13-7.

Lot of references about rivers, especially Ganga and Yamuna

 

a99ba-iaf2bplane

xxxx

இரத்தினக் கற்கள்

 

Cat’s eye RS 2-15; Coral  RS 6-16; Conch shell RS 3-4; Crystal Purva Megam 54; Emeralds/Rubies-Rv 13-53; Gems-PM 15, KS 1-38, KS 5-43, KS 5-45, Rv 1-4, Rv 3-18, Rv 10-30, Rv 11-59, Rv 11-68, RV 17-63, VU 2-99, MA 5-18, AS 2-7, AS 2-10, AS 6-6, Sapphire Rv 18-42; Pearl Rv 6-7, UM 46, KS 1-44, KS 3-53, KS 6-6KS 7-89, Rv 6-28, Rv 9-44,Rv 13-54, Rv 16-18; Rubies KS 3-53; Sun stone Rv 11-21; Moon stone VU 5-11; Ivory PM 62

 

லென்ஸ் Magnifying Glass (Lens)

Sun stone Rv 11-21; AS 2-7

 

நாகரத்தினம் (Cobra Jewel)

KS 2-38, 5-43; RV 13-12, 6-49, 11-59, 11-68, 17-63, 10-7, 13-12, 17-63

RS 1-20,

xxxx

 
காந்தம் Magnet –

Rv-18-63; KS 2-59;

xxx

 

சுற்றுப்புற சூநிலையியல் Environmental concern

Don’t Cut even a poisonous tree

KS 2-55

xxxx

 

 

ஒளிவிடும் தாவரம் Bio Luminescent Plants-

KS 1-10; Rv 9-70

 

 

உள்ளவியல்/ மனவியல் Human psychology

Advice to newlyweds: AS 4-20; 4-21;4-22

xxx

 

—Subham—

பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

brahma-

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.

இந்துமதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science) இருப்பதை உலகம் வெகு வேகமாக உணர்ந்து வருகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் — என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது.

சிவபெருமானின் நடனத்தில்– பிரபஞ்சத்தின் தாள லயங்கள் (Dance of Shiva) இருப்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஆங்கிலத்தில் புத்தகம் வாயிலாக வெளியிட்டனர். அதை நடராஜர் என்னும் அற்புதமான பஞ்சலோக சிலையாக வடித்த தமிழ் ஸ்பதிகளின் பெருமையை இன்றும் உலகமே வியந்து பாராட்டி வருகிறது. நடராஜர் சிலை இல்லாத மியூசியம் உலகில் இல்லை. நடராஜர் படமோ விக்ரகமோ இல்லாத வெளி நாட்டு இந்தியவியல் அறிஞர் எவரும் இல்லை.

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார்.

இப்பொழுது கருந்துளைகள் (Black Holes) பற்றி உலக விஞ்ஞானிகள் எழுதி வியந்து வருகின்றனர். வானவியலின் புதிய அதிசயங்கள் இவை. யாராவது ஒருவர் நியூ ஸைன்டிஸ்ட் (New Scientist or Scietific American) அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் போன்ற அறிவியல் இதழ்களை வாசித்துவிட்டு பகவத் கீதையைப் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். பிளாக் ஹோல் என்னும் கருந்துளைகள் பற்றிய செய்திகள் அதில் (11ஆவது அத்தியாயத்தில்) உள்ளன!!
ஆனால் பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகளை யாருமே அறிந்து எழுதவில்லை. ஒரு சில அறிவியல் உண்மைகளை மட்டும் பட்டிய லிடுகிறேன்:–

அறிவியல் உண்மை 1
கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களும் அதைச் சுற்றி மில்லியன் கணக்கில் பூமி போன்ற கிரகங்களும் இருப்பதை உலகம் அறியும். அதில் பல்லயிரம் கிரகங்களில் வெளி உலகவாசிகள் (Extra Terrestrials) வசிக்க உள்ள வாய்ப்புகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சத்ய லோகத்தில் வசிப்பதாகக் கருதப்படும் பிரம்மா பற்றிப் படிக்கையில் அவர் ஒரு வெளி உலகவாசியோ என்று வியக்கத் தோன்றும். அவருடைய வாழ்நாளின் காலம் நாம் இந்தப் பக்கத்தில் எழுத முடியாத அளவு பெரிய எண்ணிக்கை. மற்ற கலாசாரங்களுக்கு 1000, 10,000 என்ற எண்கள் கூடத் தெரியாத காலத்ததி , நாம் உலகமே வியக்கும் ஆயுளை பிரம்மாவுக்குக் கொடுத்தோம் அது மட்டுமல்ல இது ஒரு பிரம்மாவின் ஆயுள். அவர் போன பின், அடுத்த ப்ரம்மா வருவார் என்றும் சொன்னோம். இன்னும் விஞ்ஞானிகளுக்கு — காலம் என்பது சுழற்சி உடையது— Cyclical வட்டமானது என்று கூடத்தெரியாது. இப்பொழுது கருந்துளை ஆய்வுகள் நிறைய நடப்பதால் நமது கொள்கையை வெகு விரைவில் உலகம் ஏற்கும்.

hindu-gods-brahma

பிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320,000,000 ஆண்டுகள். இது போல அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் புது பிரம்மா வருவார். இப்பொழுதுள்ள பிரம்மாவுக்கு வயது 51. ஏதோ அறிவியல் புனைக்கதை (Science Fiction) படிப்பது போலத் தோன்றும்.. இது கதை என்று யாராவது நினைத்தாலும் முதலில் அறிவியல் புனைக் கதை எழுதிய பெருமை நமக்கே கிடைக்கும்.

அது மட்டுமல்ல. யுகம் பற்றிய எதைக் கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். இதை சுமேரியர்கள் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு பிரளயத்துக்கு முந்தைய சுமேரிய மன்னர்களுக்கு இப்படி ஆட்சி ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர்!!

அறிவியல் உண்மை 2
பிரம்மாவுக்கு ஒரு பெயர் ஹிரண்ய கர்பன். அதாவது தங்க முட்டை! உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் ஒரு கலீலியோ, ஒரு கோப்பர்நிகஸ் தோன்றும் வரை காத்திருந்தது. ஆனால் நாமோ துவக்க காலம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோள வடிவானவை என்பதை அறிந்து, அண்டம் ( முட்டை வடிவானது), பிரம்மாண்டம், பூகோளம் (புவியியல்) என்று பெயரிட்டோம்.
அதுமட்டுமல்ல. அந்த ஹிரண்யகர்ப்பன் ஒரு நாள் திடீரென வெடித்து வானமும் பூமியுமாகப் பிளந்ததென புராணங்கள் பகரும் இதையே இப்பொழுது மாபெரும் வெடிப்பு Big Bang Theory — பிக் பேங் – என்று சொல்லுகின்றனர். இது ஏன் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. நமது சாத்திரங்கள் மட்டுமே கடவுள் ஒரு சொல்லை நினைத்தார் — அதைச் சொன்னார்- உலகம் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறது. இதை பைபிள் அப்படியே நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது. ஆனால் அதற்கு மேல் விளக்கவில்லை.

நாம் அதற்கும் மேலாக ஒரு படி சென்று மாபெரும் வெடிப்பு —ஒரு நாளைக்கு பலூன் போல ஊதிக்கொண்டே போய் பின்னர் முடிவில் வெடிக்கும் —அப்பொழுது காற்றுப் போன பலூன் போல பிரபஞ்சம் சுருங்கும் Big Crunch — மீண்டும் பலூன் போல ஊதும் — என்று – ஸைக்ளீகல் Cyclical —வட்டமான சுழற்சி உடையது என்று சொல்லியிருக்கிறோம். இந்த பிக் க்ரஞ்ச்Big Crunch – கொள்கையை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் ஏற்கின்றனர்.

அறிவியல் உண்மை 3
தசாவதாரத்தில் முதலில் மீன், பிறகு ஆமை, பிறகு பன்றி, பிறகு பாதி மனிதன் –பாதி சிங்கம் என்பதெல்லாம் டார்வீன் சொன்ன பரிணாமக் (Theory of Evolution) கொள்கையை ஒட்டி இருப்பதை நாம் அறிவோம் ஆனால் முதல் மூன்று அவதாரங்களும் உண்மையில் ஆதி நூல்களில் பிரம்மாவின் பெயரிலேயே (பிரஜாபதி) உள்ளன. ஆக அவரே படைப்புக் கடவுள்—பரிணாம வளர்ச்சிக் கடவுள். இதை சதபத பிராமணம் (Satapata Brahmana) முதலிய நுல்கள் விளக்கும். பின்னர் இதை விஷ்ணுவின் அவதாரங்களாக புராணங்கள் எழுதின. இதை இன்னொன்றாலும் அறியலாம்.

four faced Sumer
Four faced God of Sumer (Brahma?)

அறிவியல் உண்மை 4
வெளிநாட்டுக்காரர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் ஒரு விஷயம் நம் இலக்கியங்களில் உண்டு. அதை எழுதி, எழுதி நம்மை நக்கல் செய்வது—பகடி செய்வது—கிண்டல் செய்வது அவர்களுக்குப் பொழுதுபோக்கு. அது என்ன ‘’பலான’’ கதை என்கிறீர்களா?

பிரம்மா ஒரு மக:ளைப் பெற்றார். அவள் பெயர் சதரூபா (நூறு உருவம்)—அவல் அழகைக் கண்டு பிரம்மா அவளையே உற்று நோக்கினார். அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது- வேறு திசையில் ஓடி ஒளிந்தாள் அங்கேயும் பிரம்மா திரும்பினார். ஒவ்வொரு திசையிலும் ஒரு முகம் வரவே அவருக்கு நாலு முகம் தோன்றி அவர் நான்முகன் ஆனார். அவளோ வெட்கப்பட்டுக் கொண்டு மேலே போனாள். அங்கு ஐந்தாவது முகம் உதித்தது. அவளுடன் ஒன்று கூடிப் (Incestual Intercourse) பின்னர் உலகத்தைப் படைத்தார். இதைச் சொல்லிச் சொல்லி வெளிநாட்டினர் மகிழ்வர். உண்மையில் இந்தக் கதையை நம்மிடமிருந்து பைபிளும் இரவல் வாங்கி முதல் அத்தியாயத்திலேயே எழுதிவிட்டது. ஆதாம் என்பவரின் இடுப்பு எலும்பை கடவுள் முறித்து ஏவாள் என்ற பெண்ணை உருவாக்கவும், ஆதாம் அவளுடன் கூடி (Incest?) மனித இனத்தை உருவாக்கினார் என்பது அக்கதை. ஒரே உடலில் இருந்து ஒருவரைப் படைத்தால் அந்த ஏவாளும் சதரூபா போல ஆதாமின் மகள்தானே!!

இதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் முதலில் பாக்டீரீயா போல இருந்த உயிரினம் ஒரு செல் உயிரினங்களாக மாறி நீரில் நீந்தி பிறகு ஒரே உடலில் ஆண் பெண் உறுப்புகளுடன் பிறந்தன (ஹெர்மாப்ரோடைட் Hermaphrodite). பின்னர்தான் ஆண், பெண் என தனித்தனி உயிர் இனங்கள் தோன்றின. இதை அர்த்தநாரீஸ்வரர் என்னும் சிவனின் வடிவத்துடன் ஒப்பிடலாம்.

முதலில் ஆண் தோன்றினானா? பெண் தோன்றினாளா? முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? (Chicken and Egg question) என்ற கேள்விக்கு விடை கூறும் கதை இது. பெரிய விஞ்ஞான உண்மைகளை, சுவையான கதைகளாகத் தருபவை நம் புராணங்கள்!

Svetovid-Statue-Ruyan-Island-
Four faced Slavic God (Svetonvid)

அறிவியல் உண்மை 5
பிரம்மாவின் தோற்றம் பற்றிய கதை பெரிய பூகர்ப்பவியல் ( Geology ஜியாலஜி) கதையாகும். அவர் நீரில் படுத்து இருந்த நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்து உதித்த தாமரை மலரில் இருந்து தோன்றியதாக ஒரு கதை உண்டு. இது காண்டினென்டல் ட்ரிப்ட் Continental Drift எனப்படும் கண்டங்கள் நகர்ந்த கதை ஆகும். முதலில் பூமி என்பது ஒரே நிலப்பரப்பாக இருந்தது பின்னர் அது தாமரை மலர்வது போல மெதுவாக நகர்ந்து இன்றுள்ளது போல ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பிரிந்தது. இதையே தாமரையில் பிரம்மா தோன்றி உலகைப் படைத்தார் என்போம். புராணத்தில் கூட பிரம்மாண்டம் என்று இருப்பதைக் காணலாம். ‘ப்ரு’ என்னும் வடமொழி வேர்ச் சொல் மூலமே ‘’பெருகுதல், பிரிதல், பெரிய, ப்ருஹத், ப்ரம்ம’’ — முதலிய சொற்கள் வந்தன.

கிரேக்க மொழியில், முதலில் இருந்த சூப்பர் கான்டினென்ட்டை ‘’பங்கேயா’’ Panagaea என்பர். பங்கய என்றால் தாமரை எனப் பொருள். இது பங்கஜம் என்ற வடமொழிச் சொல். பிற்காலத்தில் இந்தப் பொருள் அறியாதோர் கிரேக்க மொழியில் புதுப் பொருள் கண்டனர் ( பேன்+ கயா ). பெண்கள் குழந்தை பெறுவதையும் தாமரை மலரில் இருந்து குழந்தை வந்ததாக வடமொழி இலக்கியங்கள் வருணிக்கும்.

அறிவியல் உண்மை 6
கணித விஷயத்தில், ஒன்பது என்ற எண்ணின் வியப்புறு குணங்களில் பல ஆராய்ச்சி செய்து அதன் பெயரில் பிரம்மாண்டமான எண்களைக் க(ல்)ற்பித்து (கல்பம் என்பதே பிரம்மாவின் ஒரு நாள், பரம் என்பது அவரது 100 ஆண்டு) உலகம் அறியாத புதுமைகளைச் செய்தனர் இந்துக்கள். ஒன்பது என்ற எண்ணின் பரிபூரணத் தன்மையை மனதிற் கொண்டே 108, 1008 என்ற அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றைப் படைத்தார்கள் இது பற்றி நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய எண்கள் 18, 108, 1008 பற்றிய கட்டுரையில் விரிவாகக் கொடுத்து இருக்கிறேன்.

brahma-statue

அறிவியல் உண்மை 7
நாரா (நீரா) அயனன்= நாராயணன், பிரம்மா மற்றும் முதல் இரண்டு அவதாரங்கள் எல்லாம் — நீரில்தான் உயிரினங்கள் தோன்ற முடியும், பரிணாம வளர்ச்சி பெற முடியும் —- என்று காட்டுகின்றன. இன்று வெளி கிரகங்களிலும் நீரின் மூலக்கூறுகள் (water molecules) இரு கின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

அறிவியல் உண்மை 8
உலகின் முதல் அகராதி (Thesaurus/ Dictionary நூலான அமரகோசம் வழங்கும் பிரம்மாவின் 29 வடமொழிப் பெயர்களை மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.

பிரம்மா என்பவர்
வானவியலை (Astronomy/ Cosmology) விளக்கும் கடவுள்
பூகர்ப்பவியலை (Geology) விளக்கும் கடவுள்
உயிரியல், பரிணாம வளர்ச்சியை (Biology / Theory of Evolution) விளக்கும் கடவுள்
கணிதம், பிரம்மாண்ட எண்களை (Mathematics and Amazing Numbers) விளக்கும் கடவுள்
பிக் பேங், பிக் க்ரஞ்ச்(Big Bang and Big Crunch) முதலிய அதி நவீன கொள்கைகளை (Ultra Modern Theories) விளக்கும் கடவுள்!!

—-சுபம்—