நீர் மேல் நடக்கும் அற்புத வித்தை! (Post No.5032)

WRITTEN by London Swaminathan 

 

Date: 21 May 2018

 

Time uploaded in London – 10-31 AM (British Summer Time)

 

Post No. 5032

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

அஷ்டமா சித்தி (எட்டு வகை அற்புத சக்திகள்) பெற்றவர்களுக்கு நீர் மேல் நடக்கும் வித்தை மிகவும் எளிது. ஹடயோகம் பயின்றவர்களுக்கு இது இயலும்.

 

கண்ணன் பிறந்தவுடன் வசுதேவர், அக்குழந்தையைக் கூடையில் வைத்துக்கொண்டு சென்றபோது யமுனை நதி திறந்து வழிவிட்டதை நாம் அறிவோம். இந்துக்களின் கணக்குப்படி இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பின்னர் இது போன்ற தண்ணீர் அற்புதங்களை பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளிலும் புத்த மத நூல்களிலும் அலெக்ஸாண்டரின் வரலாற்றிலும், ஆதி சங்கரர் வரலாற்றிலும் காண்கிறோம்.

 

இதற்கெல்லாம் ஆதி மூலமாக இருப்பது ரிக் வேதக் கவிதையாகும் (3-33). அந்தக் கவிதை விஸ்வாமித்ர மஹரிஷிக்கும் இரண்டு நதி தேவதைகளுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். கவிதை என்ற கண்ணோட்டத்திலும் மிக அற்புதான கவிதை. நதிகளைப் பெண்களாகப் போற்றும் கவிதை; உவமைகள் மிக்க கவிதை. அந்த ‘’தண்ணீர் அற்புதக்’’ கவிதையைக் காண்பதற்கு முன்னர் நீர் வித்தைகளை வில்லியம் நார்மன் பிரவுன் என்பவர் எப்படிப் பிரித்துள்ளார் என்பதைக் காண்போம்.

தண்ணீர் வித்தைகள் ஆறு வகையானது:-

1.ஒருவர் தனது அற்புத சக்தியினால் கடல் அல்லது ஆறுகளை இரண்டாகப் பிரியும் படி செய்து காய்ந்த தரையில் நடந்து போவது.

 

2.அற்புத சக்தியினால் நீரின் ஆழத்தைக் குறைத்து அதில் நடந்து செல்வது.

 

  1. தண்ணீர் அப்படியே நிற்க, அதன் மேல் நடந்து செல்வது

 

4.தண்ணீரில் விரைந்து செல்ல காற்றோ அலைகளோ அல்லது தாமரை போன்ற பொருள்களோ உதவுவது

 

  1. அல்லது தண்ணீர் மேல் HOVERCRAFT ஹோவர்கிராஃட் போன்று பறந்து செல்வது

 

  1. மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ இரண்டோ கலந்து உதவுவது.

 

ஆதி சங்கரரின் சீடரான பத்மபாதரை எதிர்க்கரையில் இருந்த சங்கரர் அழைத்தார். உடனே அவர் நீர் என்றும் பாராது விரைந்து செல்ல அவர் நீர் மீது கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர் தோன்றி அவரைத் தாங்கிச் சென்றது. இதனால் அந்த சிஷ்யருக்கு பழைய பெயர் மறைந்து போய் தாமரைக் காலன் (பத்மபாதர்) என்ற புதுப்பெயர் தோன்றியது.

 

புத்தர் கடல்மேல் பறந்து வந்து இலங்கைக்கு வந்ததாக புத்த மத நூல்கள் இயம்பும். புத்தர்களின் சீடர்கள் அற்புத சக்தியால் ஆற்று வெள்ளத்தைக் கடந்ததையும் அவைகள் விளம்பும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களுக்கும் மோஸசுக்கும் செங்கடல் திறந்து வழிவிட்டதாகப் பகரும்

 

ஏசுவின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான பீட்டர் நீரின் மேல் நடந்த கதையை பைபிள் நுவலும்.

 

இப்படி ஏராளமான கதைகளைப் பழங்குடி மக்களும் பகர்வர்.

 

ஆனால் உலகிலேயே பழமையான நூலில் — ரிக் வேதத்தில் – இவைகளைக் காணும்போது நாம்தான் இந்தக் கலையை உலகிற்குக் கற்பித்தோமோ என்றும் தோன்றும். ரிக் வேதத்தின் காலம் கி.மு 1500 முதல் 6000 வரை என்று அறிஞர்கள் செப்புவர்.

 

ரிக்வேதக் கவிதை 3-33

 

விபாசா (வியாஸ), சுதுத்ரி (சட்லெஜ்) இரண்டு பஞ்சாப் நதிகள் இப்பாடலில் இடம் பெறுகின்றன.

 

விஸ்வாமித்ரர்–

அடடா! என்ன அற்புதம் ! மலைகளில் பிறந்து கடலுக்குப் போகும் உங்கள் அழகே, அழகு! போட்டி போடும் இரண்டு குதிரைகளப் போல பாய்கிறீர்களே. கன்றுகளை அன்பாக நாவால் நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசு போல இரு கரைகளையும் அலைகள் என்னும் நாவால் தொடுகிறீர்களே.

 

இந்திரனுடைய கட்டளைக்குப் பணிந்து தேரில் விரைந்து செல்லும் தேவர்கள்  போலப் பிரகாஸிக்கிறீர்கள். அதே வேகத்தில் கடலை நோக்கி ஓடுகிறீர்கள்! அலைகள் ஒன்றன் மீது ஒன்று புரள்வது ஒருவரை ஒருவர் நாடுவது போல உளதே!

 

தாய் போன்ற சுதுத்ரி நதியே! சௌபாக்கியவதியான விபாஸையே! கன்றுகளை நாடும் தாய் போல ஒருமித்துப் பாய்கிறீர்களே!

 

 

இரண்டு நதிகளும் சொல்லுகின்றன

நாங்கள் நீரினால் நிலத்தை வளப்படுத்தி இறைவனால் படைக்கப்பட்ட கடலுக்குப் போகிறோம். எங்களை எவராலும் தடுக்க இயலாது. நீவீர் எம்மை அழைத்த காரணம் யாதோ?

விஸ்வா:-

 

நான் ஸோம லதை எனப்படும் அற்புத மூலிகையை எடுக்க செல்கிறேன். நான் குஸிகனின் புதல்வன்; ஏ, சுதுத்ரி நதியே ஒரு கணப்பொழுது  ஓடாமல்தான் நில்லேன்.

 

நதிகள் பதில்

விருத்திரன் எங்களைத் தடுத்து நிறுத்திய போது வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் அந்த விருத்ரனைக் கொன்றான். நல்ல கைகள் உள்ள ஸவிதா எங்களை இந்த வழியில் செலுத்தினான். அவன் கட்டளைபடி வெள்ளப் பிரவாஹம் எடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

 

விஸ்வா

நல்லது; இந்திரன் அந்த அஹி என்னும் பாம்பைக் கொன்று செய்த நற்செயல் என்றும் போற்றப்பட வேண்டியதே தடை செய்தவர்களை அவன் வஜ்ர ஆயுதம் கொண்டு அழித்தான்

 

நதிகள் பதில்

 

ஓ, துதிபாடும் முனிவா; எதிர்கால சந்ததியினர் உன்னுடைய இந்தக் கவிதையைப் போற்றுவார்கள் ; நீயும் மறந்து விடாதே; ஆனால் மக்களுக்கு முன்னர் எங்களைத் தாழ்திவிடாதே.

விஸ்வா:

சஹோதரிகளான நதிகளே! நான் சொல்லுவதை அன்போடு செவிமடுங்கள்; நான் தொலை தூரத்தில் இருந்து தேரோடும் வண்டிகளோடும் வந்து இருக்கிறேன். கொஞ்சம் தாழ்வாகப் பாய்ந்து செல்லுங்கள் உங்கள் நீரோட்டம் காளை மாட்டு வண்டியின் அச்சுக்குக் கீழே பாயட்டும்

நதிகள் பதில்

ஓ, கவிஞரே! நீ தொலைவில் இருந்து தேர், காளை மாட்டு வண்டிகளோடு வந்ததாகச் சொல்லுவது எங்கள் காதில் விழுந்தது குழந்தைக்குப் பால் ஊட்டும் தாய் போலவும் காதலனைக் கட்டித் தழுவ ஓடிவரும் காதலியின் அன்பு போலவும் நாங்களும் உன்னைத் தாழ்ந்து வணங்குவோம்.

விஸ்வா:–

நதிகளே; என்னைக் கடக்க உதவினீர்கள்; அதைப் போல பரதர்களும் படைகளும் கடந்து செல்ல உதவுங்கள்; பின்னர் பிரவாஹம் எடுத்துப் பாய்ந்து செல்லுங்கள்; உங்களைப் போற்றுவேன்

 

பரதர்களும் பசுக்களை நாடிக் கடந்து சென்றனர்.  உங்கள் அன்பு எனக்குக் கிடைத்தது; உங்கள் அலைபோல செல்வத்தைப் பொழியுங்கள்;  உணவு தான்யம் பெருகட்டும்; வளம் கொழிக்கட்டும்; பாய்ந்து செல்க.

 

எங்கள் மாட்டு வண்டியின் நுகத்துக்கு கீழே பாயுங்கள். எங்கள் காளை மாடுகள் ஒரு பாவமும் அறியாத ஜந்துக்கள் அவைகளுக்குத் தீங்கு செய்துவிடாதீர்கள்.

 

 

இது போல பல அற்புதக் கவிதைகள மந்திர சக்தியால் நதிகளைக் கட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றன (குறிப்பாக 10-136)

இந்தக் கவிதையில் என்ன அற்புதம் இருக்கிறது?

விஸ்வாமித்ரன் வேண்டியவுடன் நதிப் பிரவாஹம் குறைந்தது. வண்டியின் அச்சுக்குக் கீழே பாய்ந்தது. உடனே அவரும், பரதர்களும்  கடந்து சென்றனர்.

 

பாடலில் உள்ள உவமைகள் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற மாணிக்க வாசகரின் பாடலை நினைவு படுத்தும்

நதிகளைத் தாயாக போற்றுவதையும் பூமியைத் தாயாக போற்றுவதையும் உலகம் நம்மிடம் கற்றது.

காளை மாடுகளுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற அன்புப் பிரவாஹம் நதிப் பிரவாஹம் போல உளது.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் தெரியாது என்று பிதற்றும் பித்துக்குளிகளுக்கு  இந்த நதிக் கவிதையும் ஸரஸ்வதி நதிக் கவிதையும் சாட்டை அடி கொடுக்கிறது. மலைமீது தோன்றி கடல் வரை செல்லும் நதிகள் பற்றிய மாபெரும் பூகோள அறிவு அக்காலத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல கவிதையில் காணும் உவமைகள் அமைதியான ,நனி நாகரீகம் மிக்க வேத காலத்தை நம் கண்களுக்கு முன்னால் கொணர்கிறது.

 

‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’– பாரதி.

 

-சுபம்-

 

அரச்சலூர் இசைக் கல்வெட்டில் ஒரு அற்புதம்! (Post No.4095)

Written by London Swaminathan


Date: 19 July 2017


Time uploaded in London-8-50 am


Post No. 4095


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

என்ன அற்புதம்?

முதல் இரண்டு கல்வெட்டுகளையும் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் (Palindrome) காணலாம். இவை இசைத் துறையிலும், கூத்துத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

 

சங்க இலக்கியத்திலும் வண்ணக்கன், தேவன் , சாத்தன் முதலிய பெயர்கள் வருகின்றன.

 

தேவன், சாத்தன் (சாஸ்தா) முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் புழங்கின. வால்மீகி, கண்ணதாசன், காமாக்ஷி, விஷ்ணுதாசன் (கண்ணந்தாயன், காமக்கண்ணி, விண்ணந்தாயன்) என்ற பெயர்கள் புறநானூற்றில் இருப்பதால் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இசைத் துறையிலும் நாடகத் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

 

எங்கே உள்ளது?

ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் பாதையில் 12 மைல் தொலைவில் அரச்சலூர் இருக்கிறது.

ஊரின் எல்லை ஓரமாகவுள் ள நாக மலையில் ஆண்டிப்பாறையில் பாண்டியர் குழியில் (குகை) உள்ளது. அங்கேதான் இக் கல்வெட்டுகள் உள. சில வரிகள் சிதைந்து உள்ளன.

 

சிதைந்த எழுத்துக்களை அடைப்புக்குறிக்குள் காணலாம். எளிதில் ஊகிக்க முடியும்.

எந்தக்காலம்?

இக்கல்வெட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த (பிராமி) தமிழி எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது

 

முதல் கல்வெட்டு

 

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

இரண்டாம் கல்வெட்டு

தை த தை த தை

த தை (த) தை த

தை த தை த தை

த தை (த) தை த

(தை த தை த தை)

மூன்றாம் கல்வெட்டு

எழுத்துப் புணருத்தான் மணிய்

வண்ணக்கன் தேவன் சாத்தன்

xxxx

 

புணருத்தான் = தொகுத்தான்

 

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் இசையில் எப்படி எழுத்துக்கள் நீட்டித்தும், தனித்தும் உச்சரிக்கப்படும் என்பது உரை ஆசிரியர்களால் விளக்கப்பட்டுள்ளது. இன்றும் சங்கீதக் கச்சேரிகளில் இப்படிச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

 

கன்யாகுமரியில் என்பதை , கன்னியாக்கு…………… மரியிலே………. என்று முழங்கும் பாடல் என் நினைவுக்கு வருகிறது!

 

உதவிய நூல்

கல்வெட்டு – ஓர் அறிமுகம்

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு 1976

TAGS:– அரச்சலூர், இசை, கல்வெட்டு, அற்புதம்

–Subham–

தமிழ் இளவரசி செய்த அற்புதம்! (Post No.3704)

Written by London swaminathan

 

Date: 8 March 2017

 

Time uploaded in London:- 10-21 am

 

Post No. 3704

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிமந்தி – ஆட்டனத்தி காதல் கதை பழந்தமிழ்க் காலத்தில் பெரிதும் பேசப்பட்ட விஷயம். தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் இதை ஒரு அற்புதச் செயலாகவே காட்டுகிறது. கண்ணகி பட்டியலிடும் ஆறு அற்புதச் செயல்களில் ஆதி மந்தி– ஆட்டன் அத்தி கதையும் ஒன்றாகும்.

 

ஆதி மந்தி என்பவள் கரிகால் சோழனின் அருந்தவப் புதல்வி; அவள் ஒரு கவிஞரும் கூட. அவள் பாடிய பாடல், சங்க இலக்கிய நூலான குறுந் தொகையில் இடம் பெற்றுள்ளது. சங்க காலத்திலேயே அவள் புகழ் பரவியதால் பரணரும் வெள்ளிவீதி வீதியாரும் பாடி இருக்கின்றனர். அவ்விருவரும் காவிரி நதி விபத்து பற்றி மட்டும் குறிப்பிடுவர். ஆனால் சங்க காலத்திற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோ அடிகள் இதை ஒரு அற்புதச் செயலாக வருணிக்கிறார்.

கதை இதுதான்:-

 

காவியில் புதுப் புனல் வந்தது. எல்லோரும் ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். சோழன் மகள் ஆதி மந்தியும், சேர நாட்டரசனும், ஆதியின் கணவனுமான ஆட்டன் அத்தியும் நீரில் குதித்தான். இருவரும் குடைந்து குடைந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரெனப் பெரு வெள்ளம் வந்து அத்தியை அடித்துச் சென்றது. சோழன் மகளின் கணவன் அல்லவா?  உடனே எல்லோரும் உதவிக்கு ஓடோடி வந்தனர். ஆனால் காவிரியின் வெள்ளத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அத்தி இரு கைகளையும் உயர்த்தியவாறே ஆற்றில் சென்று கொண்டிருந்தான்.

 

ஆதிக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. நதிக்கரை ஓரமாகக் காப்பாற்றுங்கள்! என் கணவன் அத்தியைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக்கொண்டே ஓடினாள். அவள் கதறலைக் கேட்டு உருகிப்போன காவிரித்தாய் கணவன் அத்தியைக் கரை சேர்ப்பித்தாள் ஆதி, அவனை ஆரத்தழுவி மனம் மகிழ்ந்தாள்.

 

எமனுடன் போராடி கணவன் உயிரை மீட்டு வந்த சாவித்ரியை அறியாத இந்தியன் இல்லை. ஆதி மந்தி “தமிழ் சாவித்திரி” ஆவாள்.

 

அற்புதமா? கட்டுக்கதையா?

 

இந்த நதி விபத்து பற்றி சங்க காலத்தில் பாடிய பரணரும், வெள்ளி வீதியாரும் இதை ஒரு விபத்தாகவே காட்டினர். அத்தி உயிர் மீண்டது பற்றி எதுவும் சொல்லவில்லை. இது பரணர் காலத்துக்கும் முன்னால் நடந்த விபத்து. கரிகால் சோழனின் ஆட்சிக்காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிதுறது. சிலப்பதிகரம் இதற்கு 300, 400 ஆண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்படிருக்கலாம். அதற்குள் இது அற்புத ‘வடிவு’ பெற்றிருக்கலாம். ஆனால் அற்புதம் நிகழாவிடில் இந்த விபத்தை எத்தனையோ விபத்துகளில் ஒன்றாகக் கருதி பாடாமலேயே விட்டி ருக்கலாம். சிலம்போ இதை 6  அற்புதங்களில் ஒன்றாகக் காட்டுகிறது.. ஆகவே அற்புதம் என்று இல்லாவிடினும், யாரோ சில மீனவர்கள் அவரைக் காப்பாற்றி ஒப்படைத்திருக்கலாம்.

 

இதோ சிலப்பதிகாரச் செய்யுள்:–

 

………………………………………………………………………….உரைசான்ற

மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன்

தன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பின்சென்று

கன்னவில் தோளாயோ!” என்னைக் கடல் வந்து

முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு,

பொன்னங்கொடி போலப்போந்தாள்

வஞ்சின மாலை, சிலம்பு.

பொருள்:-

 

புகழ் மிக்க பேரரசன் கரிகால் வளவன், அவன் மகள் ஆதி மந்தி, வஞ்சிக் கோமானான ஆட்டனத்தியை மணந்தாள். அவனை ஒரு சமயம் காவிரிப் பெருவெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது அவள் நீரோட்டத்தின் வழியே கரை மீது தொடர்ந்து சென்றாள். இறுதியில், கடற்கரையில் நின்று அவன் கடலுள் அடித்துச் செல்லப்பட்டது கண்டு,  ‘மலையொத்த தோளாயோ!’ என்று கதறினாள். கடல் அவனைக் கொண்டுவந்து அவள் முன்னர் நிறுத்திக் காட்டியது. அப்படிக் காட்டவும், அவனைத் தழுவிக்கொண்டு பொலிவுபெற்ற பூங்கொடி போல ஊர் திரும்பினாள்”

 

வெள்ளி வீதியார் பாடுகிறார்:

 

இன் இசை ஆர்ப்பினும் பெரிதே, யானே

காதலர் கொடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து

ஆதிமந்தி போல், பேதுற்று

அலந்தனென் உழல்வென்கொல்லோ – பொலந்தார்

–அகநானூறு, பாடல் 45

 

தோழிக்குத் தலைமகள் சொல்லியது: ” தலைவர் பிரிந்து சென்றார். என் மாமை நிற மேனியில் பசலை உண்டாயிற்று. இதனால் அலர் (Gossip) எழுந்தது. அவரைப் பிரிந்த நான், கரிகால் சோழன் மகள் ஆதிமந்தியைப் போல் வருந்துவேனோ! நான் இறந்து படுவேன்! திண்ணம்!”

பரணர் பாடியது:

 

……………………………………’அந்தில்

கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்

வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்

சுரியல் அம் பொருநனனைக் காண்டிரோ?’ என

ஆதிமந்தி பேதுற்று இனைய

சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்

அம் தண் காவிரி போல

கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின், யானே

அகம்.76

 

வேறு ஒருத்தியின் கணவனைக் கைப்பற்றுவேன் என்று பரத்தை, மற்றவர் காதில் விழும்படி சூளுரைத்தது:–

 

முற்காலத்தில் ஒரு நாள் ஆதி மந்தி என்பவள் தன் கணவனைக் காணாமல், “கச்சினை உடையவனும், கழலை அணிந்தவனும், தேன் ஒழுகும்  மாலை அணிந்த மார்பை உடையவனும், பல்வேறு வகை சிறந்த மாலைகளையும், சுருட்டை முடியுள்ள தாடியையும் உடையவனுமான என் கணவன் ஆட்டனத்தியை நீவீர் கண்டதுண்டோ?” என்று வினவினாள். ஆயினும் விடை பெறவில்லை. அதனால் பெரிதும் மயங்கி வருந்தினாள்.. அணையை அழித்துக் கரைகளில் பரவி நேர் கிழக்காகப் பாயும் அழகிய குளிர்ந்த காவிரிப் பேராறு ஆட்டனத்தியை கைக் கொண்டது போல இப்போது யான் சூளுரைக்கிறேன். அவனை முழுதும் கைப்பற்றப் போகிறேன். அவனுடைய காதலி என்ன செய்வாளாம்?

 

 

—சுபம்—

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876)

amazing 1

Translated by London swaminathan

 

Date: 7 June 2016

 

Post No. 2876

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், வியாச பகவான், கண்ண பிரான், திருவள்ளுவர், உலக மஹா கவிஞன் காளிதாசன், மற்றொரு சம்ஸ்கிருதப் புலவன் ஆகிய பலர் உலக அதிசயம் எது? அத்புதம் எது? ஆச்சரியம் எது? என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமான, சுவையான பதில்களைத் தந்துள்ளனர்!

 narayana

1.நாராயணன் என்ற சப்தம் இருக்கிறது. வாயில் சொல் இருக்கிறது. எளிமையாக வசப்படுத்தலாம். அப்படியும் கோரமான நரகத்தில் மனிதர்கள் விழுகிறார்களே!! இதுவே அத்புதம்!!!

நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வசவர்தினீ

ததாபி நரகே கோரே பதந்தீதி ஏதத் அத்புதம்

–ஒரு சம்ஸ்கிருதக் கவிஞன்

 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதி, இங்கே வெளியிட்ட கட்டுரை இதோ:–

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? ( 10 நவம்பர் 2013)

 

2.கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

3.வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

4.காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

5.வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

 wow

6.காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

–சுபம்–

 

அய்யங்கார் செய்த அற்புதம்! (Post No 2687)

sriranaga

Compiled  by london swaminathan

Date: 2 April, 2016

 

Post No. 2687

 

Time uploaded in London :–  9-02 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம் பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தந்துள்ள விவரத்தின் சுருக்கம் இதோ:-

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், வேதியர் குலத்தில் உதித்து, வேத வேதாங்கங்களில் புலமை பெற்று வருணாசிரம தருமங்களை வழுவாது அனுசரித்து வருங்காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் அரசாட்சி செய்து வந்தார். அவரது ராஜாங்க சேவையில் ஈடுபட்ட அய்யங்கார் ஒரு நாள் அனைவர் முன்னிலையிலும் தனது (உத்தரீயத்தின்) மேல்துண்டின் முனைகளை சரசரவென்று தேய்த்தார்.

அனைவரும் இது கண்டு நகைத்து, ‘ஐயன்மீர் ஏன் இப்படித் தேய்த்தீர்?’ என்று வினவ அவர் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில், தீவட்டி ஏந்தி வந்தவர்களின் தீச்சுவாலைபட்டு, தேர்த் திரைச் சீலை தீப்பற்றியதாகவும் அதை அணைக்கவே அவ்வாறு செய்ததாகவும் பதில் தந்தார்.

srirangam row of towers

இதைக் கேட்ட பலரும் அய்யங்காருக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது என்று நாயக்க மன்னரிடம் தெரிவித்தனர்.

மன்னரோ, அய்யங்கார் மீதுள்ள மதிப்பு காரணமாக, திருவரங்கத்திற்கு ஒரு ஆளை அனுப்பி, தீரவிசாரித்து வருமாறு உத்தரவிட்டார். அவர் திருவரங்கம் அர்ச்சகர்களைக் கண்டு தேரின் திரைகள் தீப்பிடித்ததா என்று கேட்டனர். அவர்கள், ஆம் தேர்த்துணிகள் தீபிடித்தவுடன், அருகிலிருந்த அய்யங்கார் அவைகளை அவித்தார் என்றும் சொன்னார்கள்.

இதைக் கேட்ட நாயக்கர் ஆனந்தப் பரவசப்பட்டு அய்யங்காரை வரவழைத்து, திருவரங்கத்தான் தேர்த் தீபிடித்தபோது நீவீர், இங்கேயல்லவா இருந்தீர், அங்கே போனதாகப் பலரும் சொல்வதெப்படியென வினவ, அவர் தன் மனதளவில் அங்கே என்று எம்பெருமானை சேவித்தேன் என்றார். அருகிலுள்ளவர்களும் ஆமாம், இவர் கிருஷ்ண, கிருஷ்ண என்று சொல்லி உத்தரீயத்தைத் தேய்த்தார் என்றும் அப்போது காரணம் கேட்டதற்கு இதையே சொன்னதாகவும் உறுதி செய்தனர். உடனே நாயக்க மன்னர் அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூஜித்து அனுப்பிவைத்தார்.

 

அன்றிரவு நாயக்க மன்னர் ஒரு கனவு கண்டார். அதில் தான் , காவிரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டுப் பிள்ளைப் பெருமாள் அய்யங்காருடன் சென்று, திருவரங்கப் பெருமானைச் சேவித்ததாகவும், திரும்பி வருகையில் திடீரென்று அய்யங்கார் காணாமற் போனதாகவும் கனவு கண்டார்.

 

நாயக்க மன்னர் மிகவும் விசனப்பட்டு மறு நாள் காலையில் அய்யங்காரை வரவழைத்துச் சேவித்து, ‘தேவரீர்! உங்களைப் போன்ற பெரியோரை நான் லௌகீகத் தொழிலில் இதுவரை ஈடுபடுத்தியது தவறு. நீங்கள் என்னைச் க்ஷமித்து (மன்னித்து) இனி வைதீக காரியங்களில் ஈடுபட்டு காலட்சேபம் செய்ய அடியேன் யாது செய்யவேண்டு’ மென்று இறைஞ்சினார்.

tirumalai nayak1

அய்யங்காரும் தான், திருவரங்கப் பெருமானுக்கு அருகிலிருக்க விரும்புவதாகச் சொல்லவே, கோவிலுக்கு வடமேற்கில் ஒரு திருமாளிகை புதுக்கி, அதில் அவரை எழுந்தருளச் செய்து தானும் அடிக்கடி திருவரங்கம் சென்று அவரை உபசரித்து மகிழ்ந்தனன்.

 

அங்கெழுந்தருளிய அய்யங்கார் நூற்றெட்டு திருப்பதி அந்தாதி, திருவேங்கட மாலை, திருவேங்கட அந்தாதி, அழகர் அந்தாதி, திருவரங்கத்துக் கலம்பகம், திருவரங்க மாலை, அந்தாதி, அஷ்டப் பிரபந்தம், பரப்ரம்ம விவேகம் என்னும் பல நூல்கள் செய்து பகவத் கைங்கரியத்தில் காலம் தள்ளினார். ஒருநாள் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் ஒரு நொண்டிப் பசு இடறி அவர் காலில் விழுந்தது. அதுவே தனது இறுதிக்காலம் என்று ஒரு பாடலில் சொல்லிவிட்டு கொஞ்சம் காலம் கழித்து பரமபதம் சேர்ந்தார்.

எனது முந்தைய கட்டுரைகள்
1.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி (20 ஜனவரி 2012)

2.வங்கக் கடல் கடைந்த ஆண்டாள் தரும் அற்புதத் தகவல்- 9 ஜனவரி 2014

3. ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்! – 28 நவம்பர் 2014

4. Sri Ramanuja’s Favourite Tamil Hymn! (Article No.1443; Dated 28th November 2014.)

 

5. Amazing Andal: Where did she see the Lion? ( 30 -1-2013)

6. Ramanuja and Non Brahmins ( 13-5-2013)

7.காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!! (கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.)

 

8. Andal by C.Subrahmanya Bharati (Post No.924 Date: 22nd March 2014.)

9. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன் (Post No. 900 Dated 11th March 2014)

10. Vaishnavite Saint NAMMALWAR (Post no 915 date 18th March 2014)

 

11.ஆழ்வார் முக்கியப் பாடல்கள் (மே சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்) (Post No.1011; Date:30 ஏப்ரல் 2014

 

And more articles about Alvars and other Vaishnavite saints

-subham-

சுவாமிஜிக்கு ஆவிகள் மீதும் பரிவு! (Post No.2583)

coin1

Written by S Nagarajan

 

Date: 29  February 2016

 

Post No. 2583

 

Time uploaded in London :–  5-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

coin2

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (5)

ச.நாகராஜன்

 

 

ஆவிகள் மீதும் பரிவு

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் ஆவிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

சென்னையில் அவர் இருந்த சமயம் சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன.

 

இது நடக்கப் போகிறது, அது நடக்கப் போகிறது என்றெல்லாம் அவை ஸ்வாமிஜியை அடிக்கடி பயமுறுத்தி வந்தன.

இதெல்லாம் பொய் என்பதை ஸ்வாமிஜி நன்கு அறிவார். என்றாலும் தொந்தரவு தொந்தரவு தானே!

 

ஆரம்பத்தில் ஸ்வாமிஜி இவற்றைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த ஆவிகளின் தொந்தரவு கட்டுக் கடங்காமல் எல்லை மீறிப் போனது.

அவர் சற்று கோபம் கொண்டார். இதைக் கண்ட ஆவிகள் இப்போது தங்கள் பரிதாப நிலையைத் தெரிவித்துக் கெஞ்ச ஆரம்பித்தன. தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு வேண்டின.

ஒரு நாள் அவர் மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு அவர் கையில் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்டார். அதையே தர்ப்பணப் பொருளாகப் பாவித்து அந்த ஆவிகளுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

 

அந்த ஆவிகளின் தொந்தரவு அன்றோடு நீங்கியது. அவை நற்கதி பெற்று விட்டன போலும்!

 

ஸ்வாமிஜியின் எல்லையற்ற கருணை ஆவிகளுகும் கிடைத்தது ஒரு அதிசயமே!

coin3

 

கழுத்தில் வெட்டுண்ட ஆவி

 

இன்னொரு சம்பவம் கோபால் லால் என்பவரின் தோட்ட வீட்டில் நடந்தது. ஸ்வாமிஜி ப்ரேமானந்தருடன்  ஒரு முறை அமர்ந்தவாறு அந்த வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவரை நோக்கிய ஸ்வாமிஜி, பாபுராம்!  நீ இப்போது எதையாவது கண்டாயா?” என்று கேட்டார்.

அவர், “இல்லை” என்றார்.

 

“இப்போது நான் ஓரு ஆவியைக் கண்டேன். அதன் கழுத்து அறுபட்டிருந்தது. கெஞ்சும் பார்வையில் அது தனக்கு நற்கதி அருளுமாறு கேட்டது.” என்றார் ஸ்வாமிஜி.

பின்னர் கைகளைத் தூக்கி அந் ஆவிக்காகப் பிரார்த்தித்து அவர் அதை ஆசீர்வதித்தார்.

 

விசாரித்த போது தான் ஒரு உண்மை தெரிய வந்தது.

அங்கே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தான்.

 

பணத்தைக் கடனாகக் கொடுத்து வந்த அவன் கொள்ளை வட்டி வசூலித்து வந்தான்.

 

இந்த வட்டியின் கொடுமை தாங்காத ஒருவன் அந்த பிராமணனைக் கழுத்தை வெட்டிக் கொன்று விட்டான்.

அலைந்து திரிந்த அந்த அந்தணனின் ஆவியே ஸ்வாமிஜியிடம் அருள் வேண்டிக் கெஞ்சியது.

 

அனைவருக்கும் அருள் பாலிக்க வந்த ஸ்வாமிஜி ஆவிக்கா மாட்டேன் என்பார். அருளாசி தர, ஆவியும் நற்கதி அடைந்தது.

இது போல இன்னும் சில நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் உண்டு.

  • தொடரும்
  • தொடரில் முன் நான்கு அத்தியாயங்களைப் படிக்காதவர்கள் படிக்கலாம்..

 

–subam-