Compiled by London swaminathan
Date:17 July 2016
Post No. 2979
Time uploaded in London :– 9-16 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நாலடியார் என்னும் நூலில் ஒரு அருமையான பாடல் வருகிறது. இது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
யமன், ஒரு அளவு கோல் வைத்திருக்கிறானாம். நாம் படி, அல்லது லிட்டர் என்ற அளவுகளை பயன்படுத்துவது போல அவன் தினமும் சூரியன் உதிப்பதை ‘நாழி’ என்னும் அளவாகப் பயன்படுத்தி தினமும் நம் வாழ்நாளை அளந்து கொண்டிருக்கிறானாம். இதைப் படித்தும் கூட நம் வாழ்நாள் தினமும் கழிந்துகொண்டிருப்பதை பலரும் உணருவதில்லை.
இதோ அந்தப் பாடல்:-
தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் – ஆற்ற
அறஞ்செய் தருடையீஇர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்
பொருள்:–
எமன் ஒளிமிக்க சூரியனை, ‘நாழி’ என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாளை நாள் தோறும் அளந்து, ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருள் உடையவராக ஆகுங்கள்! அப்படி ஆகாதவர்கள் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே ஆவர்!
நாலடியாரில் இன்னொரு பாட்டில்,
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணராதார்
பொருள்:-
நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர்.
ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)
பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.
முந்தைய கட்டுரைகள்
உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? (10 ணொவெம்பெர் 2013)
கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969), Date:14 July 2016
ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)
உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876), Date: 7 June 2016
–Subham–
You must be logged in to post a comment.