திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் (Post No.9747)

திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் (Post No.9747)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9747

Date uploaded in London – –  –18 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கொங்குமண்டல சதகம் பாடல் 66

திசை தப்பி வந்த அழகிக்குப் புகலிடம் கொடுத்துக் காத்த பண்பாளன்!

ச.நாகராஜன்

பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்த செட்டி குலத்துப் பெண்மணி ஒருத்தி தன் கணவனுடன் காஞ்சிபுரத்திற்கு ஒரு முறை தல யாத்திரையாக வந்தாள். சற்று சித்தப்பிரமை உடைய அவள் வழி தப்பி, கணவனைப் பிரிந்து தன் போக்கில் சென்று குன்றவர்த்தனம் என்னும் ஊரை அடைந்தாள்.

அங்கு ஒரு வேளாளப் பெருமகன் வீட்டில் அவள் அடைக்கலம் புகுந்தாள். அவள் வரலாற்றைக் கேட்ட வேளாளன், “பயப்படாதே, தங்காய், இங்கேயே நீ இருக்கலாம். உன் கணவன் வருமளவும் இது தான் உன் தாய் வீடு” என்று சொல்லி அவளை உபசரித்துப் பாராட்டினான். அவளது கணவனோ தன் மனைவியை எங்கு தேடியும் காணாமல் கடைசியில் வேளாளன் அனுப்பிய செய்தியைக் கேட்டு குன்றவர்த்தனம் ஊருக்கு வந்தான். அவனைத் தங்கையின் கணவன் என்பதால் மைத்துனன் முறை கொண்டாடி அளவளாவி அந்த இருவருக்கும் முறைப்படி ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வழங்கி அவர்களுடன் கூடவே அவர்கள் வீடு வரை சென்று அவர்களை விட்டு விட்டு வந்தான் அந்த வேளாளன்.

இப்படிப்பட்ட உயர் பண்புகளை உடைய வேளாளர் கொண்ட தொண்டைமண்டலத்தின் சிறப்பைச் சொல்லவும் முடியுமா?

செண்டுகொண்டு குன்றை மோதி யன்று வென்ற பாண்டியன்

றேசவாச மாதுளந்தி கைத்துசுற்றி சுற்றரை

விண்டுதொண்டை மண்டலத்தை கண்டுகுன்ற வர்த்தனம்

மேவி வாடி தேம்பி நின்ற மின்னையன்னை வீடெனக்

கொண்டுகொண்ட பதிபின்வந்து கூடகூட னாடதிற்

கொண்டுபோய்நற் சீதனங் கொடுத்துசீர் நடத்தியே

பண்டு போலிருத்தி தங்கை முறைமைபெற்ற சீலன்பூ

பாலர் தங்கு லத்தில் வந்த பாலகிருஷ்ண சாமியே

என்ற தனிப்பாடல் அழகுற இந்த சம்பவத்தை எடுத்துரைக்கிறது.

இப்படிப்பட்ட அருமையான வேளாளர் பெருமக்களைக் கொண்டது தொண்டைமண்டலம் என்று தொண்டைமண்டல சதகம் தனது 66ஆவது பாடலில் பெருமையுறக் கூறுகிறது. பாடல் இதோ:-

கொத்தலர் கோதை வியன்பாண்டி மண்டலக் கொம்பைத் தன்பால்

வைத்திருந்தாங்கவ டன்கேள்வன்றேடி வரவவற்கே

யுய்த்திருவோர்க்கும் வரிசையுமாற்றி யுடனுஞ்சென்று

மைத்துனக்கேண்மை படைத்ததன்றோ தொண்டை மண்டலமே

பாடலின் பொருள் :- தெற்கின் கண் உள்ள பாண்டிய மண்டலத்தில்ருந்த கொத்தாகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பூங்கொம்பு போலும் அழகுடைய பெண் ஒருத்தி திசை தப்பி வந்து ஒரு வேளாளன் வீட்டில் அடைக்கலம் புக, அந்த வேளாளன் அவளைத் தன் சகோதரியாகப் பாவித்து உபசரித்து ஆதரித்து வைத்திருந்து, அந்தப் பெண்ணைத் தேடி வந்த அவள் கணவனையும் தன் மைத்துனன் முறை கொண்டு உபசரித்து அவ்விருவருக்கு ஆடை ஆபரணம் உடைய வரிசை கொடுத்து, அவர்களுடன் தானும் உடன் சென்று அவர்களை அவர் ஊரில் அவர்களைச் சேர்ப்பித்து விட்டு வந்தான். இவ்வாறு அறநெறி வழுவாது நின்று பிறர் கற்பையும் மானத்தையும் சிதையாமல் காத்து ஆதரிக்கும் நல்லொழுக்கம் உடைய வேளாளர்க்கு இருப்பிடமாக அமைவது இந்தத் தொண்டைமண்டலமே!

***

tags- திசை, அழகி, புகலிடம்,

அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம் ?! (Post No.8694)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8694

Date uploaded in London – – 17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

விதவையின் நெற்றியில் குங்குமப் பொட்டா?!

ச.நாகராஜன்

புதிரைக் கொண்டுள்ள விசித்திரமான ஒரு சுபாஷிதத்தை இப்போது பார்ப்போம்.

கிம் பூஷணம்  சுந்தரசுந்தரீணாம்

      கிம் தூஷணம் பாந்தஜனஸ்ய நித்யம் |

கஸ்மின் விதாதா லிகிதம் ஜனானாம்

      சிந்தூரபிந்து விதவாலலாடே ||

ஒரு அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம்?

சிந்தூரப் பொட்டு ( நெற்றியில் இடும் குங்குமப் பொட்டு)

ஒரு யாத்திரைக்குக் கிளம்பும் போது கெட்ட சகுனம் எது?

விதவை ஒருத்தி எதிரில் வருவது! (விதவா)

பிரம்மா தலைவிதியை எங்கு எழுதி இருக்கிறான்?

நெற்றியில் (லலாடே)

இந்த சுபாஷிதத்தின் கடைசி வரி விசித்திரமான நையாண்டியான ஒரு வரியைத் தருகிறது. ஆனால் அதில் தான் மூன்று கேள்விகளுக்கும் தனித் தனியே விடையை அளிக்கிறது.

கடைசி வரி : ஒரு விதவையின் நெற்றியை அலங்கரிக்கும் சிந்தூரப் பொட்டு!

இது வழக்கத்திற்கு மாறான விநோதமான ஒரு செய்கை அல்லவா?

ஆனால் இந்த சிந்தூரபிந்து விதவா லலாடே என்ற வரியை சிந்தூர பிந்து, விதவா. லலாடே என்ற மூன்று வார்த்தைகளாகப் பிரித்தால் மூன்று கேள்விகளுக்கும் விடை வருகிறது.

இது கவி சமத்காரம்!

What is the ornament to highly charming women?

Sindura – bindu  (the mark of saffron on the forehead.

What is always inauspicious to one who sets out on a journey?

Vidhava (The sight of a widow)

Where has Brahma inscribed his letters of fate?

Lalate (On the forehead)

(The last line which gives the answers, by itself gives an absurd meaning : “The mark made by saffron on the forehead of a widow!’)

                    – Translation by A.A.R

*

இதையே சற்று மாற்றித் தருகிறார் இன்னொரு கவிஞர்!

கிம் பூஷணம் வா ம்ருகலோசனாயா:

    கா சுந்தரி யௌவனதுக்கபாரா: |

தாதா லிலி வாஅ வித்தாதி குத்ர

     சிந்தூரபிந்து விதவா லலாடே ||

மான்விழியாளுக்கு எது ஆபரணம்?

சிந்தூர பிந்து.

எந்த அழகிய பெண் யௌவன வயதிலேயே துக்கத்தில் ஆழ்கிறாள்?

விதவையான இளம் பெண்

விதி எந்த இடத்தில் தன் எழுத்தை எழுதுகிறது?

நெற்றியில்

கடைசி வரி : ஒரு விதவையின் நெற்றியை அலங்கரிக்கும் சிந்தூரப் பொட்டு!

சென்ற சுபாஷிதத்தைப் போலவே அதே வரி தான்!

இந்த சிந்தூரபிந்து விதவா லலாடே என்ற வரியை சிந்தூர பிந்து, விதவா. லலாடே என்ற மூன்று வார்த்தைகளாகப் பிரித்தால் மூன்று கேள்விகளுக்கும் விடை வருகிறது.

What is the ornament to a gazelle-eyed damsel?

Sindura-binduh (the mark made of saffron on the forehead)

Which beautiful woman is burdened by sorrow in her youth?

Vidavah (Widow)

Where does fate inscribe its letters?

Lalate (on the forehead)

(The last line, which gives the answers to all the three questions, by itself absurd; “The mark made of saffron on the forehead of a widow”)

  • Translation by A.A.R

     *

அழகு பிறக்கும் இடம் எது?

கிமன்யஸ்தி ஸ்வபாவேன சுந்தரம் வாப்யசுந்தரம் |

யதேவ ரோசதே  யஸ்மை  பவேத் தத் தஸ்ய சுந்தரம் ||

ஸ்வபாவமாகவே – அதாவது இயற்கையாகவே – ஏதாவது ஒன்று அழகுடையதா அல்லது இல்லையா? எது மனதிற்கு ஒருவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அவனுக்கு அது அழகு தான்!

Is anything naturally beautiful or not beautiful? Whatsover is indeed is pleasing to anyone, to him that will be beautiful.

  • Translation by F. Johnson

மிக மிகப் பழைய காலத்தில் கூறப்பட்ட இந்தக் கருத்தை கிரேக்க நாடும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், Beauty is in the eye of  the beholder’ – பார்ப்பவனின் கண்ணில் தான் அழகு இருக்கிறது  கூறி இருக்கிறது!

tags- அழகி,  பெண், ஆபரணம், விதவை, நெற்றி,, 

          ***

அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு …….. ஒரு புதிர் பாடல்! (Post No.7545)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7545

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு மார்பகங்கள், ஏழு கண்கள் – ஒரு புதிர் பாடல்!

ச.நாகராஜன்

மதுரகவிராயரின் பல பாடல்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் பார்த்து விட்டோம்.

இன்னும் ஒரு பாடல் இது.

புதுமையான புதிர் பாடல் இது.

துரைரங்கன் என்னும் ஒரு பிரபுவின் மீது அவர் பாடிய இந்தப் பாடலில் அவரை, பாடலில் உள்ள புதுமையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிறார் கவிராயர் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

பாடல் இதோ:

துங்கவரை மார்பா துரைரங்க பூபதியே

இங்கோர் புதுமை யியம்பக் கேள் – பங்கயக்கை

ஆயிழைக்கு நான்குநு தலைந்துகுழை யாறுமுலை

மாயவிழி யேழா மதி

பாடலின் பொருள் :

துங்கம் – பரிசுத்தமாகிய

வரை – மலை போன்ற

மார்பா – மார்பினை உடையவனே

துரைரங்க பூபதியே – துரைரங்கன் என்னும் பூபதியே

இங்கு  – இவ்விடத்தில்

ஓர் புதுமை இயம்பக் கேள் – ஒரு புதிய செய்தி உண்டு; அதைச் சொல்கிறேன்; கேட்பாயாக (அது என்னவெனில்)

பங்கயக் கை – தாமரை மலர் போன்ற கைகளை உடைய

ஆயிழைக்கு – அழகிய பெண்ணுக்கு

நான்கு நுதல் – நான்கு நெற்றிகள்

ஐந்து குழை – காதணி ஐந்து tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆறு முலை – மார்பங்கள் ஆறு

மாய விழி ஏழாம் – வஞ்சமுள்ள (மயக்கும்) கண்கள் ஏழு

மதி – தேர்ந்து நீயே ஆலோசித்து இதை அறிவாயாக!

பாடலின் பொருளை துரைரங்க பூபதி அறிந்து கொண்டு மதுரகவி ராயருக்குப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டினார்.

பாடலில் மறைந்திருக்கும் பொருள் தான் என்ன?

ஆயிழை என்றால் கன்னி (ராசி)

மேஷம், ரிஷபம், மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியவை பன்னிரெண்டு ராசிகள் tamilandvedas.com, swamiindology.blogspot.com

இவற்றில் கன்னி ராசிக்கு நான்காவது ராசி  தனுர் ராசி.

தனுர் என்றால் வில் என்று பொருள்

கன்னி ராசிக்கு ஐந்தாவது ராசி மகரம்.

மகரம் என்றால் மீன் என்று பொருள்.

கன்னி ராசிக்கு ஆறாவது ராசி கும்பம். அதாவது குடம்.

கன்னி ராசிக்கு ஏழாவது ராசி மீனம். அதாவது கெண்டை மீன்.

பாடலில் புலவர் கூறிய கருத்து;

அழகிக்கு வில்லை நிகர்த்த நெற்றியும்

மகர மீனுருவை ஒத்த காதணியாகிய மகர குண்டலமும்

குடம் போன்ற மார்பகங்களும்

கெண்டை மீன் போன்ற கண்களும் உள்ளன.

இதை ஆராய்ந்து அறிக.

 ஜோதிடத்தில் அழகியைச் சேர்த்துப் பாடிய சமத்காரப் பாடல் இது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்னொரு சமயம் மதுரகவிராயர் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தார்.

அபார அழகு. அசந்து போனார். பாடினார் ஒரு பாடல் இப்படி :-

மூவென்ப தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்தில்

தாவுந் தனிமிருகந் தானில்லை -நேரே

வளையா நடையில்லை வாரிறுக விம்மும்

முலையாளை யான் முயங்குதற்கு

பாடலின் பொருள் :

வார் இறுக – கச்சு இறுகும்படி

விம்மும் முலையாளை – பருத்த மார்பகங்களை உடையவளை

யான் முயங்குவதற்கு – நான் கட்டித் தழுவுவதற்கு

மூவொன்பது என்பதில் – மூன்று ஒன்பது அதாவது இருபத்தேழு நட்சத்திரங்களில்

ஓர் நாள் இல்லை – ஒரு நட்சத்திரம் இல்லை – உத்தர நட்சத்திரம் இல்லை – அதாவது உத்தரம் இல்லை (பதில் இல்லை – அவளிடமிருந்து)

மொய் வனத்தில் – நெருங்கிய காட்டில்

தாவும் – தாண்டித் திரியும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

தனி மிருகம் இல்லை – ஒப்பற்ற மிருகம் இல்லை (அதாவது வேங்கை இல்லை. வேங்கை என்ற சொல்லுக்குப் பொன் என்ற பொருளும் உண்டு)

நேரா வளையா நடை இல்லை – நேராக வளையா நடையுமில்லை.

நேரா வளையா நடை என்பது அன்னம் அல்லது சோறைக் குறிக்கிறது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

 பேரழகியைக் கட்டித் தழுவுவதற்கு ஆசை. ஆனால் அவளிடமிருந்து பதிலும் இல்லை; என்னிடம் அவளுக்குத் தரப் பொன்னும் இல்லை;  சோறும் இல்லை, எப்படித் தழுவுவேன்?

நல்ல கேள்வி இது? யார் தான் பதில் சொல்ல முடியும்?

***