அழகு என்பது என்ன? (Post No.8957)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8957

Date uploaded in London – – 22 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

அழகு என்பது என்ன? அதை எப்படி சூக்ஷ்மமாக விவரிப்பது?

‘ரமணீயதாம்’ என்பது அழகைக் குறிக்கும் சொல்!

எது க்ஷணத்திற்கு க்ஷணம் புதியதைக் காட்டி சோபிக்கிறதோ அந்த உருவமே அழகின் உருவம்!

க்ஷணே க்ஷணே யத் நவதாம் உபைதி தத் ஏவ ரூபம் ரமணீயதாயா:

                                                    சிசுபால வதம் 4-17

That is beauty which every moment strikes a new pleasing form.

“A thing of beauty is a joy forever; its loveliness increases” said the poet; its loveliness changes producing new pleasant sensations every time  a sense organ dwells on it.                   

English description by Sri N.V.Nayudu

***

அழகியின் குண லக்ஷணங்கள் யாவை?

தாக்ஷிண்யம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயார்த,

சுரூபாமபி அதாக்ஷிண்யம் தூஷயந்தி |

பார்க்க அழகாய் இல்லையென்றாலும் கூட, நளினம், உபசரிக்கும் பண்பு, மென்மையான நடை, உடை, பாவனைகள் ஆகியவையே ஒரு பெண்ணை அழகுள்ளவளாக ஆக்குகிறது. இந்த குணங்கள் இல்லையெனில் அவள் உருவத்தில் அழகாக இருந்தாலும் கூட உண்மையில் அழகி இல்லை!

Grace, Courtesy, and gentle manners adorn a woman even if she does not have good looks; lack of these qualities fouls her even if she is beautiful.

English description by Sri N.V.Nayudu

***     

ஊர்வசியின் அழகே அழகு!

அஸ்யா: சர்கவிதௌ ப்ராஜபதி: அபூத, சந்தோ நு காந்திப்ரத:

ச்ருங்கார – ஏக – ரஸ: ஸ்வயம் து மதனோ, மாஸோ நு புஷ்ப -ஆகர: |

வேதாப்யாஸ – ஜட: கதம் நு விஷய – வ்யாவ்ருத்த – கௌதூயிலோ

வே நிர்மாதும் ப்ரபவேத் மனோஹரம் இதம் ரூபம் புராணோ முனி: ||

                  காளிதாஸன் இயற்றியுள்ள விக்ரமோர்வசீயம் 1-8

அவளை எது உருவாக்கி இருக்கக் கூடும்?

ப்ரம்மா, அனைத்தையும் படைப்பவரா? அனைத்திலும் கவர்ச்சியைத் தரும் சந்திரனா?

புலனின்பம் தூண்டும் சாரம் அனைத்தையும் தரும் காதலின் தேவன் தானோ?

மலர்களைப் புஷ்பிக்கும் வசந்த காலமோ?

வேதம் விதிக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி மனதை அடக்கி, புலன்களை உள்ளிழுத்து வைத்திருக்கும் ஒரு முனிவர் இப்படிப்பட்ட ஒரு அழகிய உருவத்தை எப்படி உருவாக்கி இருக்க முடியும்?

காளிதாஸனின் இந்த கவிதையில் உள்ள நயம் அபாரமானது. ஒவ்வொரு வரியிலும் நு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது அவனால். தனது எண்ணத்தைச் சொல்வதற்கு முன்னால் அவன் சந்தேகப்படுவதைச் சுட்டிக் காட்டுவது அந்த ‘நு’!

மஹாகவி பாரதியார், குயில் பாட்டில் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல் இங்கு காளிதாஸனின் கவிதை நயத்துடன் ஒப்பு நோக்கத் தக்கது!

“ஓர் வார்த்தை

கற்றவர்க்குச் சொல்வேன், கவிதைக் கனி பிழிந்த

சாற்றினிலே பண், கூத்து எனும் இவற்றின் சாரமெலாம்

ஏற்றி அதனோட இன்னமுதைத் தான் கலந்து

காதல் வெயிலிலே காய வைத்து கட்டியினால்

மாதவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பேன்” (குயில் பாட்டு-360,361,362)

Who could have created her?

Brahma, the supreme creator? The moon who bestows charm on every object?

The god of love himself with the essence of sensuality?

Spring with all its flowers bloom?

How could an old ascetic, with mind dulled by the austerities of Vedic practices and senses withdrawn from all objects, produce such a beautiful form?

Note the use of ‘NU’ in every line indicating doubt, about the assumption he starts with.

Bharathi, the Tamil poet, speculate on a lady’s body:-

“The juice crushed out of a masterly poetic composition, infused with the essence of song, dance and drama, with divine nectar added and warmed in the gentle sunshine of love – with these elements did the creator fashion her form?”

English description by Sri N.V.Nayudu

நன்றி :English rendering by Sri N.V,Nayudu –  from the book ‘Subhasita Collection Anthology’, published in 1992.

*******

tag–அழகு

புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு! (Post No.5370)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 28 August 2018

 

Time uploaded in London – 5-15 AM (British Summer Time)

 

Post No. 5370

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு!

 

ச.நாகராஜன்

 

புத்தரின் தேஜஸ் எல்லையற்ற ஒன்றாக இருந்தது. அத்துடன் அவர் முகத்தில் ஜொலித்த அழகு எல்லையற்ற ஒன்றாக இருந்ததால் அனைவரும் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.

 

வக்கலி என்று ஒரு இளைஞன் ஒரு நாள் புத்தரைப் பார்த்தான். அவ்வளவு தான்! அவர் தோற்றத்தாலும் அழகாலும் அவன் ஈர்க்கப்பட்டான். அவரையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அதைத் தவிர அவனுக்கு வேறெதுவும் வேண்டியிருக்கவில்லை.

 

அவரது உபதேசங்களோ அல்லது நிர்வாண நிலையை எய்துவதோ அவன் குறிக்கோளாக இல்லை.

சும்மா, புத்தரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான் அவன் ஆசை!

 

புத்தர் போகும் இடமெல்லாம் அவனும் கூடவே தொடர்ந்து போனான். தூரத்தில் இருந்து கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான்.

 

இதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்த புத்தர், ஒரு நாள் அவனை அருகில் அழைத்தார்.

“வக்கலி, வக்கலி! இது என்ன? போ! போய் விடு! இந்த அழுக்கான உடலைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் என்ன பயன்?” என்று கூறிய புத்தர் அவனை அங்கிருந்து போகச் சொன்னார்.

 

இப்படி விரட்டப்பட்ட பின்னர் தான் அவன் புத்தரின் ஆன்மீக உபதேசங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

நாளடைவில் உபதேசங்களைப் பின்பற்றி அவன் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைந்தான்.

 

*

குரு தேசத்தில் மாகந்தி என்று ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தா. அவனது மனைவி பெயரும் மாகந்தி தான். பெண் பெயருர்ம் மாகந்தி தான். பெண்ணின் மாமாவின் பெயரும் மாகந்தி தான்.

 

எல்லையற்ற பேரழகு கொண்ட அவளுக்கு ஈடான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

 

ஆகவே பிராம்மண மாகந்தி அப்படி ஒரு பேரழகனைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

அவளது அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட பல பிரபுக்களின் குடும்பங்கள் அவளை எப்படியாவது தங்கள் இல்லங்களைச் சேர்ந்த ஒருவனுக்கு மணம் முடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் பிராம்மணரோ அவர்களை, எனது மகளுக்கேற்றவன் நீ இல்லை” என்று வந்தவரை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் புத்தர் உலகின் போக்கைத் தன் தியானத்தின் மூலம் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பிராமணன் மாகந்தியும்  அவது மனைவியும் உயர் நிலையை அடையத் தகுதி உடையவர்கள் என்பது தெரிந்தது.

 

தனது பிக்ஷா பாத்திரத்துடன் அவர் மாகந்தி இல்லம் ஏகினார்.

மாகந்தி அக்னிக்குக் கொடுக்க வேண்டிய ஆஹுதியை தன் இல்லத்தின் முன் செய்து கொண்டிருந்தார்.

அவர் புத்தரைப் பார்த்தார். பிரமித்தார்.

புத்தரின் உடலில் உள்ள சிறப்பான 32 அங்க அடையாளங்களைக்  கண்டு அவர் வியப்பின் உச்சிக்கே சென்றார். அத்துடன் புத்தரின் உடலில் இருந்த எண்பது அங்க லக்ஷணங்களையும் கண்டு அவர் பிரமித்தார்.

 

“இவரை விட ஒரு பெரிய மஹா புருஷர் இந்த உலகத்தில் மனிதப் பிறவியில் இருக்க முடியாது. இவரே எனது பெண்ணுக்கு ஏற்ற கணவர்” என்று  சிந்தித்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

 

“ஓ! மஹானே! எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்ற கணவன் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் அவளை எனது பாதுகாப்பில் என் இல்லத்திலேயே வைத்திருக்கிறேன். ஆனால் உங்களை இங்கு பார்த்தவுடன் நீங்களே அவளுக்கு ஏற்றவர் என்று கண்டு கொண்டேன். அவளை உங்களுக்கே இப்போதே மண முடிக்க நான் தயார். சற்றுப் பொறுங்கள். அவளை அழைத்து வருகிறேன்” என்றார் மாகந்தி.

புத்தர் இதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. அவர் பேசாமலிருந்தார்.

மாகந்தி வீட்டிற்குள் ஓடி தன் மனைவியிடம், “ ஓ! அதிர்ஷ்டசாலிப் பெண்ணே! உன் பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளையை இதோ இப்போது தான் கண்டேன். அவர் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அவரைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறி இருக்கிறேன். நீ உன் பெண்ணை அலங்கரித்து அழைத்து வா” என்றார்.

 

மனைவி பெண்ணை அலங்கரிக்க மனைவியையும் பெண்ணையும் மாகந்தி வெளியே அழைத்து வந்தார்.

நடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தார் செய்தியைப் பரவ விட காட்டுத் தீ போல செய்தி பரவி நகரமே அங்கு குழுமியது.

 

“அங்கம், மகதம், காசி, கோசலம், வஜ்ஜி, மல்லா போன்ற இடங்களிலிலிருந்தெல்லாம் எத்தனை செல்வந்தர்கள் இங்கு வந்து நின்றிருக்கின்றனர்! அவர்களை எல்லாம், “ நீங்கள் என் பெண்ணுக்கு ஏற்றவர்கள் இல்லை” என்று துரத்தி அடித்த இவர் இப்போது யாரைக் கண்டு இப்படி மாப்பிள்ளை ஆக்கப் போகிறார்” என்று பேசிக் கொண்ட மக்கள் திரள் பிராமணர் வீடு முன் குழுமியது.

 

ஆனால் புத்தர் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாரோ அங்கு இல்லை. அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருந்தார்.

 

அவரது காலடித் தடங்கள் அவர் சென்ற பாதையைக் காட்டின. தன் மனைவி மகளுடன் புத்தர் இருக்குமிடம் சென்று அவரைப் பார்த்த மாகந்தி, “ ஓ!மஹானே! இதோ என் புதல்வி! இவளை ஏற்றுக் கொள்வீராக!” என்று வேண்டினார்.

புத்தர் பேச ஆரம்பித்தார்:

“ ஓ! பிராமணரே! ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபட நான் கபிலவாஸ்து அரசைத் துறந்தேன். யசோதரா போன்ற ராணியைத் துறந்தேன். ராகுல் போன்ற மகனையும் துறந்தேன். அரசாளும் அதிகாரத்தையும் விரும்பவில்லை. நாற்பதினாயிரம் அழகிய பணிப்பெண்கள் கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்பவர்கள் – அவர்களையும் விட்டு விட்டு நள்ளிரவில் அரண்மனையை விட்டு வெளியேறிய நான் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். மரணதேவனாகிய மாரன் என்னை ஆறு வருடங்கள் இடைவிடாமல் பின் தொடர்ந்து அலுத்துப் போய் என்னை விட்டான். போதி மரத்தின் அடியில் அமர்ந்து  ஞானத்தை அடைந்தேன். மாரனின் புதல்விகள் மூன்று பேரும் தன் தந்தையை அலைய விட்டதற்காகப் பழி தீர்க்க என்னிடம் வந்தனர்.  ஆரத்தி, ரதி, ராகா என்ற அந்த மூவரிடம் அனிக்கா (நிலையற்ற தன்மை) துக்கம்,அனத்தா ( ஆன்மா இல்லாமை) ஆகிய மூவரையும் அனுப்பினேன்.புலனின்பத்தின் உச்ச கட்ட இடமான ஆறாம் சொர்க்கத்திலிருந்து இறங்கிய அவர்களிடமே எனக்கு புலனின்பம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றவில்லை. அப்படிப்பட்ட எனக்கு அசுத்தம் நிரம்பிய குடம் போன்ற உன் பெண்ணிடமா மனம் செல்லும்?”

 

புத்தரின் இந்தப் பேச்சைக் கேட்டு மக்கள் வியந்தனர்; மாகந்தியின் குடும்பமும் வியந்தது.

 

அனைவரும் அவரைப் பணிந்து வணங்கினர். மாகந்திக்கும் அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவருக்கும் புத்தர் தன் உபதேசத்தை நல்கி அருளினார்.

 

புத்தரின் உடலும் அழகு; மனமும் அழகு என்பதை அவர் உடலிலிருந்து வெளிப்படும் ஜோதி காட்டியது!

இப்படிப்பட்ட அங்க லக்ஷணங்களைக் கொண்ட ஒரு அழகிய மகானை உலகம் கண்டதில்லை என்கிறது புத்த மத வரலாற்று ஏடுகள்!

***

 

பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்! (Post No.4381)

Written by London Swaminathan 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 14-25

 

 

Post No. 4381

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வள்ளுவன் பாடிய முப்பாலில், அதாவது தமிழ் வேதமான திருக்குறளில், கடைசி பாலான காமத்துப் பாலை மொழிபெயர்க்க கிறிஸ்தவ பாதிரிகள் மறுத்து விட்டனர். இதென்னடா! அபசாரம், அபசாரம்; ஹராம், ஹராம்! இதெல்லாம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று மறைத்து விட்டனர். இதெல்லாம் சுமார் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இந்துக்களோவெனில் வேத காலம் முதல் ‘செக்ஸ்’ SEX உவமைகளை, சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். ரிக் வேதத்தில் உள்ள சில மந்திரங்களை மிகவும் செக்ஸியானது SEXY– குறிப்பாக பிராமண நூல்களில் உள்ள சில விஷயங்கள் “அசிங்கமானவை” என்று வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்க்காமல் விட்டதை பழைய புத்தகங்களைப்  படிப்போர் அறிவர்.

உலகில் இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் முதன்மை என்பதைப் பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அது போல காம நூல் விஷயத்திலும் 2000 ஆண்டுக்கு முன்னர் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரம்தான் அவ்வகையில் முதன்மையானது.

 

இதோ வள்ளுவன் குறளும் ஒரு ஆங்கில சம்பவமும்:

வள்ளுவன் அதிசயப் படுகிறான் ‘ஏ பெண்ணே! நான் இப்படி ஒரு தீயைக் கண்டதே இல்லை. நீ அருகில் வந்தால் குளிர்ச்சியாக இருக்கிறது. தூரத்தில் போய்விட்டாலோ உடம்பே உன்னை நினைத்து நினைத்து பற்றி எரிகிறது (காமத் தீயால்)’ என்கிறான்.

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் ( குறள் 1104)

 

பொருள்

இவளை விட்டு நீங்கினால் சுடுகிறது; அருகில் வந்தால்

குளிர்கிறது: இந்த புதுவகைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

கண்களில் தீ

இங்கிலாந்தில் டெவன்ஷைர் என்னும் பகுதியின் பிரபுவுடைய மனைவி (Duchess of Devonshire) பேரழகி. ஒரு நாள் அவள் தான் சென்ற வாஹனத்தில் இருந்து இறங்கினாள். அந்த நேரம் பார்த்து குப்பை வண்டிக்காரன் (Dustman) தெருவிலுள்ள குப்பைகளை அள்ள நின்று கொண்டிருந்தான்; வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்கத் திரும்பினான்.

 

அந்த நேரத்தில் அவன் இந்த பேரழகியைக் கண்டான். அவனோ குப்பை அள்ளுபவன்; இவளோ பிரபுவின் மனைவி. I Love You ‘ஐ லவ் யூ’ என்றா சொல்ல முடியும்?

 

அவன் சொன்னான்,

“அடக் கடவுளே! எத்தனை அழகு! கடவுள் காப்பாற்றட்டும்; கொஞ்சம் நில்லுங்கள்; கண்களில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!”

 

அவள் கண்களில் அத்தனை ஒளியாம்; இதைக் கேட்டதி ,,,ருந்து இந்தச் சொற்கள் அவள் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. யார் அவளை என்ன புகழ்ந்தாலும் அவளுக்கு ருசிக்கவில்லை; “இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் குப்பைக்காரன் நெஞ்சைத் திறந்து சொன்னானே அதுதான் உண்மையான வருணனை” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

xxxx

 

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

பிரெஞ்சு மொழியில் கதைகள் எழுதும் ஆசிரியரும் மூன்று கல்விக் கழகங்களின் தலைவருமான ஃபாண்டநெல் (Fontenelle), ஒரு அழகியை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த அழகியும் , அவருடைய காதல் மொழிகளை ரசித்துக் கேட்பாள்.

ஃபாண்டநெல்லுக்கு வயது 97; ஒரு நாள் ஒரு பொது இடத்தில் வேகமாகச் சென்று  — அதாவது அழகியையும் பார்க்காமல்– வேறொரு இடத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

 

இந்த அழகிக்குக் கோபம் வந்துவிட்டது; “அடச்சீ! இவ்வளவுதானா? உங்கள் காதல் வசனங்கள். பாராமுகமாகப் போகிறீர்களே? இதற்கு என்ன அர்த்தமாம்! என்றாள்

அவர் சொன்னார்,  “அன்பே உண்மைதான்; உன்னைப் பார்த்துவிட்டால் — பார்த்திருந்தால் அச்சுப்போல நின்றிருப்பேனே! நகரவா முடியும்?” – என்றார்.

 

அந்தப் பெண்ணும் உச்சிகுளிர்ந்து போய் அப்படியே  சிலை போல நின்றுவிட்டாள்.

 

பெண்களின் அழகிற்கு ஆண்கள் அடிமை!

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

 

xxxx

 

ஒரு பெண் பேச்சில் கில்லாடி; அழகிலோ லம்பாடி!

அவளைப் பற்றி புகழ்பெற்ற ஒரு அறிஞர் சொன்னார்:

ஓ, அவளா! பேசிப் பேசியே அழகை உருப்பெறச் செய்துவிடுவாளே!

-என்று

xxxx

 

ஆப்ரஹாம் லிங்கனின் அழகு!!!

 

ஆப்ரஹாம் லிங்கனுக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்; இதை ஊரே அறியும்; ஆகையால் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வர்.

 

ஆப்ரஹாம் லிங்கன், குணத்தில் உயர் குன்று; அழகிலோ சிறு மணல் மேடு.

 

 

இதுபற்றி வீட்டில் அங்க்கலாய்க்கும் ஒருவர் தனது  மகளை–பள்ளிக்கூடச் சிறுமியை– ஆப்ரஹாம் லிங்கனைக் காண அழைத்துச் சென்றார்.

 

லிங்கனும் அந்தச் சிறுமியை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு தந்தை கொஞ்சுவது போலக் கொஞ்சிப் பேசினார். அவள் லிங்கனின் முகத்தைப் பார்த்து விட்டு படீரெனச் சொன்னாள்:

அப்பா! ஆப்ரஹாம் லிங்கன் ஒன்றும் அவலட்சணமாக இல்லையே!

 

பிறகு என்ன? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்; சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.

 

xxxx

 

டேய்! போண்டா மூக்கு!

ஒருவருக்கு அதி பயங்கர கோபம்! அவர் மூக்கினை யாரோ நக்கல் அடித்தாராம்.

 

அந்த ஆளும் எதிரில் தென்பாட்டான்.

“ஏய் என்ன தைரியம் உனக்கு; நான் இல்லாதபோது என்னை ‘போண்டா’ மூக்கன் என்று கிண்டல் செய்தாயாமே!

நானா! அப்படிச் சொல்லவே இல்லையே! ஆனால்………….. ஆனால்………… இப்பொழுது உங்கள் மூக்கைப் பார்த்தால், உண்மையில் அது ‘போண்டா’ மூக்குதான்! என்றான்.

பின்னர் நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!!!

 

TAGS:— மூக்கு, கண், அழகு, கண்களில் தீ, லிங்கன் அழகு, குப்பைக்காரன்

—சுபம், சுபம்–

 

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649)

 

 

art of k2

Compiled by london swaminathan

Date: 20 March 2016

Post No. 2649

Time uploaded in London :– 15-59

(Thanks for the Pictures; they are taken from various sources)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

avudaiyar koil pinna alzaki

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது

2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.

3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?

4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

 

2lotus bloom

 

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.

8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.

9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.

10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

bindi, India times

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.

12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!

13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).

14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.

15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

elephant blaring 2

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்

17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.

18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!

19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.

20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

IMG_4358

-சுபம்-

 

 

 

அழகிய பெண்+ பெர்னார்ட் ஷா = அழகான, புத்திசாலிப் பிள்ளை!

Shaw1981CZ

Article No.2019

Written லண்டன் சுவாமிநாதன்

Swami_48@yahoo.com

Date : 26  July 2014

Time uploaded in London :7-07

 

1.இசாடொரா டங்கன் என்ற பெண்மணி, புகழ்பெற்ற கதாசிரியரும் நாடக ஆசிரியருமான பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு “அருமையான” யோஜனை சொன்னார்.

“பாருங்கள் நான் எவ்வளவு அழகு! நீங்களோ பெரும் புத்திசாலி என்று உலகமே பாராட்டுகிறது. என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். நமக்குப் பிறக்கும் குழந்தை என்னுடைய அழகையும், உங்களுடைய புத்திச் சாலித்தனத்தையும் கொண்டிருக்கும். ஏனெனில் மரபியல் கூட, தாய், தந்தையரின் அம்சங்கள் குழந்தையிடம் இருக்குமென்று ஒப்புக் கொள்கின்றது” – என்றார்

பெர்னார்ட் ஷா சொன்னார்: “உண்மைதான்! தாய் தந்தையரின் அம்சங்கள் இருக்கும் என்பது உண்மையே. ஒருவேளை என்னுடைய அழகையும், உன்னுடைய புத்திசாலித்தனத்தையும் கொண்டுவிட்டால் என்ன செய்வது? ஆகையால் திருமணமே வேண்டாம்” என்றார்.

Xxxx

2.தனக்குத் தானே எழுதிய தாக்குதல் பேட்டிகள்!

பெர்னார்ட் ஷா புகழ் பெறாத, ஆரம்ப காலத்தில் அவரைக் கடுமையாகத் தாக்கியும் , அவமதித்தும் மாலைப் பத்திரிகைகளில் பேட்டிகள் வரும். எல்லோரும் அதைப் படித்துவிட்டு இப்படி ஒரு ஆள் இல்லவே இல்லை. கற்பனை செய்து எழுதுகிறார்கள். உண்மையில் ஒரு ஆள் இருந்தால் பேட்டி காண வருபவனை மாடியிலிருந்து உருட்டி விட்டிருப்பார் அல்லது போலீஸையாவது கூப்பிட்டிருபார் என்றெல்லாம் மக்கள் பேசத் துவங்கினார்கள். நல்ல பிள்ளை நாயகமாக நடிக்கிறாரே! இது உண்மையாக இருக்கவே இருக்காது என்றனர்.

உண்மை என்னவென்றால், அந்தப் பேட்டிகள் அனைத்தும் பெர்னார்ட் ஷாவாலேயே எழுதப்பட்டன!!

Xxx

shaw2

3.வாழைப்பழத்தில் ஊசி!

ஒருமுறை ஒரு நாடகத்துக்கு இவரை விமர்சனம் எழுதச் சொல்லி டிக்கெட் அனுப்பி இருந்தனர். நாடகமோ சுத்த மோசம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி ஒரு விமர்சனம் எழுதினார்:-

“நான் ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டேன். ஒரு நாடகத்துக்குப் போயிருந்தேன். பொதுவாக விமர்சகர்களுக்குக் கொடுக்கப்படும் விஷய அட்டை எதையும் தரவில்லை. ஆகையால் நாடகத்தின் பெயரே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆமை வேகத்தில் நாடகம் நகர்ந்தது. பாதி நாடகத்துக்கு எடுத்துக் கொண்ட நேரத்தை வேறு ஒருவராக இருந்தால் ஐந்தே நிமிடத்தில் அந்த விஷயத்தைச் சொல்லி இருப்பார்கள். இப்ஸென் போன்றோர் , பத்து வருஷத்துக்கு முன்னரே சொல்லியிருப்பார். போகட்டும்.

நாடக இடைவேளை நேரம் வந்தது. சரி! கொஞ்சம் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என்று நடந்தேன். நாடகம் பார்க்கிறோம் என்பதே மறந்து வீட்டுக்கே வந்துவிட்டேன்! நாடகத்தின் முடிவைப் பார்க்கமல் விமர்சனம் எழுதுவது முறையன்றே! அவ்வளவுதான்; நாடகத்தை ஏற்பாடு செய்தோருக்கு ஒரு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்”

(நாடகம் படு சுமார் என்பதை இப்படி அங்கதமாக எழுதினார்)

Xxx

4.இன்னா செய்தாரை ஒறுத்தல்…….

பழைய புத்தகக் கடையில் ஷாவின் நூல்!

ஒரு முறை ஜி.பி.ஷா, ஒரு பழைய புத்தகக் கடையில் நுழைந்தார். அவருடைய நாடகத் தொகுப்பு அங்கு இருப்பதைப் பார்த்துத் திடுகிட்டார். காரணம், இது அவரே கையெழுத்திட்டு அவரது நண்பருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம். உடனே அந்த நண்பரைப் பழிவாங்கத் திட்டமிட்டார். பழைய புத்தகக்காரனிடமிருந்து அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கினார். “மீண்டும் அன்புடன் ஜி.பி.ஷா” என்று கையெழுத்திட்டு, அந்த பழைய நண்பருக்கு அனுப்பிவைத்தார்!

அனுப்பி “வைத்தார்” – என்பதைவிட அனுப்பி வைதார்! என்பதே பொருத்தம்!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல் – குறள் 314

shaw3

Xxx

5.வாங்கிக் கட்டிக்கொண்டார்!

லேடி ராண்டால்ப் என்பவர் இவரை விருந்துக்கு அழைத்திருந்தார். அதற்கு வரமுடியாதென்று சொல்லி, ஷா ஒரு பதில் கடிதம் அனுப்பினார்:–

அன்பரே? என் வழக்கங்களை மாற்றும்படி என் மீது தாக்குதல் தொடுத்தீரே! நான் என்ன தவறு செய்தேன்?

என்று ஷா எழுதினார்.

லேடி ராண்டால்ப் வில்லாதி வில்லி! சூராதி சூரி! அவர் எழுதினார்:-

“அன்பரே; உம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி யான் ஒன்றும் அறியேன். உம்முடைய நடை உடை பாவனை அளவுக்கு அது மோசமாயிராது” — என்று நம்புகிறேன்.

–தொடரும்…………………..

Xxx

எதற்கு எது அழகு?

woman

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 31
ச.நாகராஜன்

Post No 857 Date 22nd February 2014

கவிஞர் அழகற்ற குயிலையும் அவலட்சணமான மனிதன் ஒருவனையும், ஒரு பெண்ணையும்., ஒரு தவ யோகியையும் பார்த்தார். இவர்கள் அனைவரையும் அனைவரும் போற்றிப் புகழ்ந்தவுடன் அவருக்கு எதற்கு எது அழகு, ஏன் அப்படிப் புகழ்கின்றனர் என்பது புரிந்து விட்டது; கூடவே ஒரு நல்ல பாடலும் பிறந்து விட்டது!

குயிலுக்குக் குரல் அழகு
பெண்ணுக்கு கற்பு அழகு
அவலட்சணமானவனுக்கு கல்வி அழகு
தபஸ்விக்கு பொறை அழகு

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் நாரிக்யம் பதிவ்ரதம் I
வித்யா ரூபம் க்ரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம் II

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் – குயிலுக்கு அதன் கூவல் அழகு
நாரிக்யம் பதிவ்ரதம் – பெண்ணுக்கு பதிவிரதம் மேன்மை
வித்யா ரூபம் க்ரூபாணாம் – குரூபமாய் இருந்தாலும் கல்வி அவனுக்கு அழகு
க்ஷமா ரூபம் தபஸ்வினாம் – தவம் புரிவோருக்கோ பொறை அல்லது மன்னித்தல் அழகு

இது சுபாஷித ரத்னாகர பாண்டாகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ள பாடல்!

எது எதை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

சத்யேன தர்மா – சத்தியத்தால் தர்மத்தை ரக்ஷிக்க வேண்டும்
யோகேன வித்யா – பயிற்சியால் கல்வியை ரக்ஷிக்க வேண்டும்
ம்ருஜயா ரூபம் – சுத்தப் படுத்துவதால் அழகை ரக்ஷிக்க வேண்டும்
(உடல் நலம் பேணுதல் வேண்டும்)
வ்ருத்தேன குலம் – ஒழுக்கமான நன்னடத்தையால் குடும்பத்தை ரக்ஷிக்க வேண்டும்.

சத்யேன ரக்ஷதே தர்மோ வித்யா யோகேன ரக்ஷயதே I
ம்ருஜயா ரக்ஷதே ரூபம் குலம் வ்ருத்தேன ரக்ஷயதே II

அழகான சொற்களால் அற்புதமான கருத்து வலிமை பெறுகிறது! இது மஹாபாரதத்தில் விதுர நீதியில் வரும் பாடல்.

யாருக்கு எது எதிரி?

எந்தக் காரணத்தால் எது அழிகிறது என்பதையும் பார்க்கலாம்:

ஸ்ரீ – ரூபம் – பெண் அழகால் அழிகிறாள்

ப்ராஹ்மணன் –ராஜசேவா – பிராம்மணன் அரசனுக்குச் சேவை செய்யப் போவதால் அழிகிறான்

காவா- தூர ப்ராசேரேண – பசுக்கள் தூரத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்திற்குச் செல்வதால் அழிகின்றன.

ஹிரண்யம் – லோபலிப்ஸா – தங்கம் பேராசையால் அழிகிறது.

ஸ்தீரி வினஷ்யதி ரூபேண ப்ராஹ்மணோ ராஜசேவா I
காவோ தூரப்ரசாரேண ஹிரண்யம் லோபலிப்ஸயா II

ஸ்தீரி (வினஷ்யதி) ரூபேண –பெண் அழிவது அழகாலே
ப்ராஹ்மணோ வினஷ்யதி ராஜசேவா – ப்ராம்மணன் அழிவது ராஜசேவையால்
காவோ (தூரப்ரசாரேண) வினஷ்யதி –பசு அழிவது வெகு தூரத்தில் மேய்ச்சலுக்குச் செல்வதால்
ஹிரண்யம் (வினஷ்யதி) லோபலிப்ஸயா – தங்கம் அழிவது பேராசையால்.

இதுவும் சுபாஷித ரத்னாகர பாண்டாகாரத்தில் இடம் பெறும் பாடல். தான்!

எது யாருக்கு அழகு என்பது பற்றியும், பாதுகாப்பது பற்றியும், எதனால் எது அழிகிறது என்பதையும் அமுதச் சொற்களால் தெரிந்து கொண்டோம்.

*******************

Contact swami_48@yahoo.com