அழுக்காறு என ஒரு  பாவி – அதர்வண வேதமும் வள்ளுவனும் (Post 10,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,408

Date uploaded in London – –   4 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!

வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்

அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண  வேதத்துக்குள் நுழைவோம்.

வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

XXXX

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்

மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION  ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.

அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே  இல்லை.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்து மத அறிஞர்கள்  மகாநாடு கூட்டி மந்திரங்களை தலைப்பு/ விஷயம்/ சப்ஜெக்ட்/ டாபிக் வாரியாக பகுத்து ஆராய்ந்தால் மிக நல்ல விஷயங்கள் கிடைக்கும்.

TWO STORIES ON JEALOUSY

வள்ளுவன் கதை: அழுக்காறு என ஒரு பாவி (Post No …

https://tamilandvedas.com › வள்…

15 Feb 2018 — அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்துவிடும் – குறள் 168.

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும் – Tamil …

https://tamilandvedas.com › எனக்…

5 Sept 2015 — ஒரு வேண்டுகோள்: எனது கட்டுரைகளை உடனே “ரீபிளாக்: – செய்யாதீர்கள்.

–SUBHAM—

TAGS-  அதர்வண வேதம் , நிம்பிரி, பொறாமை, அழுக்காறு, அவ்வியம் , பாவி, மூ தேவி

வள்ளுவன் கதை: அழுக்காறு என ஒரு பாவி (Post No.4747)

Date:15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-12

 

Written by London swaminathan

 

Post No. 4747

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

பொறாமை பற்றிய ஒரு சுவையான கதையைப் படியுங்கள்.

 

வள்ளுவன் பத்து குறட்பாக்களில் அவ்வியம் பற்றிப் பாடுகிறான். பொறாமை எனப்படும் தீய குணத்தினால் செல்வம் அழியும் என்கிறான். அழுக்காறு இல்லாதவனுக்கு அது ஒரு பெரிய வரம் என்கிறான்

 

இதோ சில வரிகள்:

 

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

 

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

 

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 

பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

 

ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி ஜோடி. கணவனுக்கு வேலை இல்லை. குடும்பம் வறுமையில் வாடியது. மனைவியின் நச்சரிப்பு தாங்கவில்லை. திரை கடலோடியும் திரவியம் தேடு என்கிறார்களே. நீங்கள் கடல் தாண்டிக் கூட செல்ல வேண்டாம்; அடுத்த ஊருக்காவது போய் வேலை தேடுங்கள் என்றாள்; அவனும் நச்சரிப்பு தாங்காமல் சரி என்றான்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அவளுக்கு ஏக சந்தோஷம்; அறு சுவை உண்டி சமைத்தாள். பெரிய பித்தளை பாத்திரத்தில் (சம்புடம்) கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தாள். அவனும் வழி நடந்தான். மாலை நெருங்குகையில் களைப்பு மேலிடவே ஒரு மரத்தடியின் கீழ்ப் படுத்தான். அதற்கு முன் உணவு சம்படத்தை ஒரு மரக்கிளையில் கட்டித் தொங்கவிட்டான்.

 

களைப்பில் நன்றாகக் கண் அயர்ந்தான். இவனது அதிர்ஷ்டம் அந்தப் பக்கமாகப் பார்வதி பரமேஸ்வரன் பூமி வலம் வந்தார்கள்.

இவனுடைய உணவுப் பாத்திரத்தில் இருந்து புறப்பட்ட நறுமணம் ஈரேழு உலகங்களையும் வியாபித்து  நின்றது.

பார்வதி: நாதா! வாசனை மூக்கைத் துளைக்கிறது; நாக்கில் ஜலம் ஊறுகிறது. அங்கே படுத்திருப்பவன் சாப்பாட்டைக் கொஞ்சம் ருசிப்போமே என்றாள்.

சிவனும் அப்படியே ஆகட்டும் என்றார். சுவைக்கப்போன இருவரும் முழு உணவையும் சாப்பிட்டு முடித்தனர். மரத்தடியில் தூங்கினவன் எழுந்தால் ஏமாறக்கூடாதென்பதற்காக பித்தளை சம்புடத்தை தங்கமாக மாற்றி நினைத்த போதெல்லாம் உணவளிக்கும் அக்ஷய பாத்திரமாகச் செய்து மரத்தின் கிளையில் தொங்க விட்டனர்.

 

அவன் தூங்கி எழுந்ததபோது பசி  வயிற்றைக் கிள்ளியது.  இலையை விரித்தான்,பாத்திரத்தைத் திறந்தான். ஒன்றுமில்லை. அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பருக்கைகளாவது கிடைக்கட்டும் என்று அதை கவிழ்த்தான். என்ன அற்புதம்? அறு சுவை உணவு இலையில் விழுந்தது சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிராமத்துக்கு ஓடினான். உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து தனது கதைகளை விஸ்தாரமாய்ச் சொல்லி சாப்பாடு போட்டான்.

 

அப்படிச் சாப்பிடவர்களில் அடுத்த வீட்டுக் காரியும் இருந்தாள்; அவளோ பொறாமையின் ஒட்டுமொத்த வடிவம்; அவளும் இரவோடு இரவாகத் திட்டம் போட்டாள். கணவனுக்கு தலையணை மந்திரோபதேசம் செய்து அவனை மறு நாளே அயலூருக்கு அனுப்பிவைத்தாள்; மந்திரோபதேசத்தின் முக்கிய அம்சம்—அடுத்த வீட்டுக்காரன் செய்தது போலவே எல்லாம் செய்யவேண்டும். இவனும் நடைவழிப் பயணத்தின் பாதியில் ஓய்வு எடுத்தான்; மரக்கிளையில் பித்தளைப் பாத்திர உணவைத் தொங்கவிட்டான். கண்ணயர்ந்து எழுந்தபோது சம்படம் மாறி இருந்தது. ஆயினும் இருட்டு நேரம் ஆதலால்     அ ப்படியே வீட்டுக்கு ஓடி வந்த மனைவியிடம் கொடுத்தான்.

 

அவளோ அவசரக்காரி; ஆத்திரக்காரி; பாத்திரத்தில் என்ன இருக்கிறது, என்ன பாத்திரம் என்பதைப் பார்க்காமல் ஊரையே அழைத்தாள் விருந்துக்கு.

உண்மையில் நடந்தது என்ன வென்றால் அவன் உறங்கியபோது பார்வதி பரமேஸ்வரனுக்குப் பதிலாக ஒரு பிரம்ம ராக்ஷஸ் (பேய்) தம்பதியினர் அந்தப் பக்கம் வந்து அவனுடைய அறுசுவைச் சாப்பாடு எல்லாவற்றையூம் சாப்பிட்டுவிட்டு, அவனது தீய எண்ணத்தை உணர்ந்து அந்த பாத்திரத்தில் ஒரு மூக்கறுப்பு கருவியை வைத்துச் சென்றனர்.

 

ஊரே கூடியபோது மனைவி அதைத் திறக்கவே, அதனுள்ளே இருந்த பேய் அவளுடைய மூக்கையும் அருகில் சாப்பிட உட்கார்ந்த எல்லோருடைய மூக்கையும் அறுத்துத் தள்ளியது.

ஆக ‘அழுக்காறு என்னும் பாவி’, அந்த பொறாமைக்கார மனைவியையும் அவளுடன் சேர்ந்தோரையும் தண்டித்தது.

நீதி- அவ்வியம் பேசேல்

 

–சுபம்–

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும்; அடுத்த வீட்டுக்காரனுக்கு…………..

dice

ஒரு வேண்டுகோள்: எனது கட்டுரைகளை உடனே “ரீபிளாக்: – செய்யாதீர்கள். ஒரு வாரம் இடைவெளி விடுங்கள். படங்கள் என்னுடையவை அன்று. ஆகையால் பயன்படுத்தாதீர்கள். கட்டுரை எழுதியவர் பெயர், பிளாக்-கின் பெயருடன் வெளியிடுங்கள்; மாற்றாதீர்கள்.

Compiled by London swaminathan

Date : 5 September  2015

Post No. 2127

Time uploaded in London : -7- 29 am

அழுக்காறு உடையார்க்கு அது சாலுமொன்னார்

வழுக்கியும் கேடீண்பது – குறள் 165

பொருள்:பொறாமை உடையார்க்கு அழிவினைத் தருவதற்கு வேறு எதிரியே தேவை இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அந்த ஆளை அழித்துவிடும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘எனக்கு ஒரு கண் போனாலும் சரி, எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்’ என்று. பொறாமையாலோ, பழிவாங்கும் குணத்தாலோ இப்படி எண்ணம் வரலாம். இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளது!

ஒரு ஊரில் அடுத்தடுத்து இருவர் வசித்தனர். ஒருவருக்கு நல்ல, பெரிய, அழகான வீடு; அவர் மிகவும் நல்லவர். அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு சிறிய வீடுதான் இருந்தது. அவன் பொறாமைக்காரன். அடுத்தவர்களைப் பார்த்தே அவன் குடல் வெந்தது; கண்கள் கருகின. எப்படியாவது நாமும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று எண்ணி காட்டுக்குத் தவம் செய்யப்போனான். அவர்கள் வீடுகள் காட்டை ஒட்டியிருந்தன.

காட்டில் தவம் செய்யப் போனவுடன் ஒரு முனிவர் வந்தார். “என்னப்பா, காட்டில் தவம் செய்கிறாயே, எதற்காக?” என்றார். அவன் தனக்கு அடுத்த வீட்டுக்காரனைப் போல பெரிய வீடு, வாசல், நில புலன்கள் வேண்டும் என்றான். இப்படிச் சொன்னவுடன் அவனுடைய பொறாமைக் குணம் அவருக்குப் புரிந்துவிட்டது.

“அன்பனே! உனக்கு ஒரு தாயக்கட்டை தருவேன். அதை நீ மூன்று முறை மட்டுமே உருட்டலாம். ஒவ்வொரு முறை நீ உருட்டும்போதும், ஒரு கோரிக்கை நிறைவேறும். ஆனால் அடுத்தவீட்டுக்காரன் மீதுள்ள பொறாமை போகாவிட்டால், நீ வேண்டுவது எல்லாம், அவனுக்கு உன்னைப் போல, இரண்டு மடங்கு கிடைக்கும் என்றார்.

susidence

பொறாமைக்காரனுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி சொல்லிவிட்டு, தாயக் கட்டையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அடுத்த வீட்டைப் பார்த்தவுடன் பொறாமை கொப்புளித்தது. எனக்கு அவனைப் போல பெரிய வீடு வாசல், மாட மாளிகை வேண்டும் என்று சொல்லி காயை உருட்டினான். என்ன அதிசயம்? அவனுக்கு கேட்டதெல்லாம் கிடைத்தது. ஆனால் பொறாமை போகாததால், அடுத்தவீட்டுக் காரனுக்கு இரு மடங்கு பெரிய வீடு கிடைத்துவிட்டது.

இப்பொழுது அவனது பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது. அப்படியா சேதி! எனது அறிவை அந்த முனிவன் குறைத்து எடை போட்டுவிட்டான். இதோ பார் என்று சொல்லிக்கொண்டே இரண்டாவது முறை தாயக்கட்டையை உருட்டினான். எனக்கு ஒரு கண் போகட்ட்டும் என்றான். ஒரு கண் குருடாய்ப் போயிற்று. அடுத்தவீட்டுக் காரனுக்கு இரு மடங்கு கிடைக்கும் அல்லவா? அவனுக்கு இரண்டு கண்களும் போயிற்று. பொறாமைக்காரன் கைகொட்டிச் சிரித்து ஆனந்த நடனம் ஆடினான்.

சரி, வேறு எப்படி அடுத்த வீட்டுக் காரனை நாசமாக்கலாம் என்று யோசித்தபோது, திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. எடுத்தான் தாயக் கட்டையை; என் வீடு பாதிப்பகுதி நிலத்தில் ஆழக் கடவதாகுக! என்றான். அப்படியே ஆயிற்று. அடுத்தவீட்டுக் காரனுக்கோ முழு வீடும் நிலத்துக்கு அடியில் போனது.  பொறாமைக்காரனுக்குப் பேரானந்தம். கைகொட்டிச் சிரித்தான். வரம் கொடுத்த முனிவனையே முட்டாளாக்கிவிட்டேன் என்று கொக்கரித்தான்.

blind Argentina1132 (2)

தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டு வேலையாட்கள், இவை எல்லாம் பொறாமைக்காரனோடு வேலைதான் என்பதை அவனது ஆட்ட,பாட்டத்தால் உணர்ந்து பொறாமைக்காரனை அடித்து நொறுக்கி அவனது செல்வங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டனர்!

உள்ளதும் போச்சுடா லொள்ளைக் கண்ணா! என்று அவன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

பொன்மொழிகள்:—-

1.ஔவியம் பேசேல் – ஆத்திச்சூடி

(ஔவியம்=பொறாமை, அழுக்காறு)

2.ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு – கொன்றைவேந்தன்

(ஔவியம்=பொறாமை, அழுக்காறு; ஆக்கம் = செல்வம்)

3.அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்னினிது – இனியவை நாற்பது.

(நான் எழுதிய முந்திய பொறாமைக் கதையையும் படிக்கவும்)

–சுபம்–