‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு ! (Post No.10054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,054

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய நூல் ரிக்வேதம். 6000 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகம் என்கிறார்கள் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பலகங்காதர திலகரும். பிரிட்டிஷ் கைக்கூலியாக கிழக்கு இந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட பிரிட்டன் வாழ், ஜெர்மன் ஆள் மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று உளறிவிட்டு , பேராசிரியர் வில்சன் முதலியோர் கொடுத்த அடி தாங்காமல் ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முன் உண்டானது; எவரும் இதன் காலத்தைக் கணக்கிடவே முடியாது என்று கதறினார். இப்போது அமெரிக்காவில் இந்துக்களை  எதிர்த்துப் பேசிவரும் விட்சல் இது கி.மு 1700 என்கிறார். இந்துக்களோவெனில் இதை நாலாக வேத வியாசர் பிரித்தது கி.மு. 3150ல் என்கின்றனர். அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (BARC) மற்றும் அமெரிக்க விண் வெளி நாசா (NASA) நடத்திய அராய்ச்சிகளோ இதில் குறிப்பிடும் சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் ஓடியதாக சொல்கின்றனர். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் 20-க்கும் மேலான பெண் புலவர்கள் இருக்கின்றனர். அதுவும் உலக சாதனை. இவ்வளவு பெண் புலவர்களின் பட்டியல் அக்காலத்தில் வேறு எங்கும் இல்லை.

ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் 91-ஆவது துதியாக வருகிறது (RV.8-91)அபாலா என்னும் பெண்மணி பாடிய கவிதை. அவர் இந்திரனை நோக்கி வேண்டுகிறார்.

இதில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. சோம லதா என்னும் அதிசயக் கொடி மலையில் விளைகிறது, அதை பருந்து கொண்டு தருகிறது என்றெல்லாம் பல புலவர்கள் பாடுகின்றனர் . ஆனால் அபாலா அதை  தான் போகும் வழியில் தண்ணீர் (நீரோடை) அருகில் காண்கிறாள்.அதைச் சாப்பிட்டு குணமும் அடைகிறாள். அவள் தனக்கும் தன்  தந்தைக்கும் இளமை திரும்ப வேண்டுகிறாள் . எப்படி தனக்கும் தத்தையின் வழுக்கைத் தலையிலும் முடி வளருகிறதோ அதே போல பயிரும் செழித்து வளர வேண்டும் என்கிறாள். மூன்று முறை அவளை இந்திரன் தேரின் சக்கரத் துளைகள் வழியாக இழுத்த பின்னர் அவளிடம் இருந்த தோல் வியாதி குணமாகி முடி வளர்ந்தது.

ஆண்டாளும் அபாலாவும்

இங்கு அபாலா  நமக்கு ஆண்டாளை நினைவுபடுத்துகிறார். அபாலாவுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆண்டாளும் தேச பக்தி உணர்ச்சி பொங்க , “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள” என்று வேண்டுகிறார்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!—திருப்பாவை

XXXX

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை மீது அவள் கொண்டுள்ள பாசம் மற்றும் விவசாயத்தில் முனைப்பு. ஆக, வெள்ளைக்காரன் சொன்ன நாடோடி விஷயம் பொய்யாகப் போனது ! வேத கால இந்துக்களை விவசாயம் செய்யாத நாடோடி என்று வெள்ளைக்காரர்கள் ‘கப்ஸா’ விட்டனர். அவர்களது முகத்திரையைக் கிழித்து விட்டது அபாலாவின் ரிக்வேதக் கவிதை

அவளுக்கு தோல் வியாதி இருந்ததால் கணவன் அவளை வெறுத்தான் என்பதும் கவிதையில் வருகிறது. ஆகையால் வியாதியுள்ள பெண்களின் அவல நிலையும் நமக்குத் புரிகிறது .

மூன்று முறை தேரின் துளை வழியாக இழுத்தனர் என்பது ஒரு சடங்காக இருக்கலாம்.  தேரின் 3 துளை பற்றி ரிக் வேத முதல் மண்டலத்திலும் வருகிறது (1-164)

XXXX

இதோ பாடலின் சுருக்கம் (RV.8-91)

8-91-1.நீரோடைக்குச் சென்ற ஒரு இளம்பெண்  சோம லதை  என்னும் செடியைக் கண்டாள். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் . இந்திரனே உனக்கு இதன் ரசத்தைப் பிழிந்து தருவேன் என்றாள்.

2.நீ வீரன், ஒளியுடன் பிரகாசிப்பவன்; வீடு வீடாகச் செல்பவன். என் பற்களால் கடித்துப் பிழியப்பட்ட  இந்த சோம ரசத்தை யவ /பார்லி பொரியுடனும், கரம்பைக் கஞ்சியுடனும், புரொடச ரொட்டிகளுடனும் சாப்பிடு .

XXXX

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்; இராம பிரானுக்கு சபரி என்னும் வேடுவ குலக் கிழவி இலந்தைப் பழத்தைக் பல்லால் கடித்து ருசி பார்த்துவிட்டு நல்ல கனிகளை மட்டும் கொடுத்தாள்; அது போல இங்கு ஒரு இளம் பெண் தன் பல்லால் கடித்து பிழியப்பட்ட சோம ரசத்தைக் கொடுக்கிறாள் . அது மட்டுமல்ல. அத்தோடு அவள்  கொடுக்கும் எல்லா உணவு வகைகளும் ‘வெஜிட்டேரியன்’ VEGETARIAN DISHES பண்டங்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் .XXXX

3. நாங்கள் உன்னை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் நீயே இங்கு வந்து இருப்பதை அறியவில்லை ; சோம ரசமே முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் பாய்ந்து போ.

4.இந்திரன் எங்களுக்கு அடிக்கடி பலத்தையும் செல்வத்தையும் தருக; கணவனால்  வெறுக்கப்பட்ட பெண்கள் இந்திரன் உதவியை நாடுவோமாகுக.

5. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் அங்கத்தையும் செழிப்பாக்குக ,

6. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக.. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் இடுப்புக்கு கீழேயுள்ள வியாதியுள்ள இடத்தையும் செழிப்பாக்குக ,

8-91-7.சதக்ரதுவே; நீ அபலையின் உடலை சகடத்தின் துளையிலே மூன்று முறை செலுத்தி சுகப்படுத்தினாய். அவளுக்கு சூரியனைப் போல ஒளிவீசும் தோலையும் தந்தாய்.

XXXX

இது ஒரு அருமையான, நிறைய தகவல் உள்ள கவிதை. சோமம் என்பது வெள்ளை க்காரன் சொல்லும் போதை பொருள் அல்ல. நோய் தீர்க்கும் ,மருந்து; ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகை ; தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் .

என்பதையும் இக்கவிதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவிபாடினர். 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய , சீன, பாரசீக ,எகிப்திய நாகரீகங்களில் பெண் கவிஞர்கள் அரிதிலும் அரிது!

இந்தக் கவிதைகளை நமக்குத் தொகுத்தளித்த வியாசருக்கு வணக்கங்கள்; அதைப் பாதுகாத்து வாமொழியாகவே பரப்பி வரும் பிராமணர்களுக்கும் நமஸ்காரம்.

-SUBHAM-

tags- மயிர், பயிர், அபாலா , ஆண்டாள், வழுக்கைத் தலை, ரிக் வேதம், கவிதை , சபரி

திருப்பாவை அதிசயம் 2- ‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா? (Post.9175)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9175

Date uploaded in London – –22 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘திருப்பாவை அதிசயம்-1’ இதே பிளாக்கில் ஜனவரி 18-ம் தேதி வெளியானது.

திருவல்லிக்கேணி தமிழ்ச்சங்க நூறாவது வெளியீடு 1957-ல் வெளியானது. அதன் பெயர் ‘திருப்பாவை மாலை’. அதில் அரிய  விஷயங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன . இதோ மேலும் ஒரு அரிய தகவல்.

பதினோராவது திருப்பாவையில் “புற்றரவல்குல் புனமயிலே” — என்ற வரி வருகிறது.

ஆண்டாள் ஒரு Teen age Girl டீன் ஏஜ் கேர்ல் – பருவப் பெண் ; அவள் அல்குல் (நிதம்பம், பெண்குறி, female genital organ) பற்றிப் பாடலாமா ? அதுவும் மற்ற பருவப் பெண்கள் இடத்தில் ?

திருப்பாவையின் வரிகளின்  பொருள் —

“புற்றிற் கிடக்கும் பாம்பின் படம் போன்ற நிதம்பத்தையும் காட்டில் இஷ்டப்படி திரியும் மயில் போன்ற சாயலையும் உடையவளே” ……………..

சங்கத் தமிழ் பாடல்களில் சுமார் 100 பாடல்களில் ‘அல்குல்’ இடம்பெறுகிறது. தொல்காப்பியரும் விடவில்லை. அவரும் அல்குலைப் பாடுகிறார்.

இதற்கு ‘திருப்பாவை  மாலை’ புஸ்தகம் தரும் விளக்கத்தை முதலில் காண்போம்.

“புற்றரவு அல்குல் புனமயிலே — என்றது மல்லி நாடாண்ட மடமயில் பணிப்பு.

புற்று  அரவு அல்குல்- புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதி படைத்த உடம்புடைத்தாயிருக்கையன்றியே  தன் இருப்பிடந்தன்னிலே கிடக்கும் அரவரசின் படமும் கழுத்தும் போல ஒளியையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையவளே! என்றபடி. இதனால் அவயவ ஸோபை  கூறப்பட்டது .

இங்கு ஆராய வேண்டுவது ஒன்று உண்டு. அதாவது இவர்கள் தாங்களும் பெண்டிராயிருக்கச்செய்தெ இவளுடைய அல்குலை வருணித்தது பொருந்துமா என்பது. அது அவர்கள் நெஞ்சினால் ஆண்மை பூண்டமையால் என்க.

இவர்கள் இத்தனை சொல்லுவான்  என்னென்னில் ?

‘யாஸ் த்ரியோ த்ருஷ்ட வத்யஸ்தா : பும்பாவம் மனசாயுயு:’

என்னும்படியே  பெண்களை ஆண்களாக்கும் அழகிறே ;

‘பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப  ஹாரிணம்’ – என்று அவன் ஆண்களை பெண்ணுடையுடுக்கப்  பண்ணுமாப்போலே ” (மூவாயிரப்படி)

முன்னையது மஹாபாரதம் உத்யோக பர்வத்துள்ளது . தாமரையிதழ் போன்ற கண்களுடையவளாய் பாஞ்சாலத்தேசத்தரசன் மகளான திரெளபதி நீராடுகையில் பெரிதான அவள் அல்குலை எந்த ஸ்த்ரீகள் பார்த்தார்களோ அவர்கள் நெஞ்சினால் ஆண்மை அடைந்தனர்  என்பது முழு ஸ்லோகத்தின் பொருள்.  பின்னையது ஸ்ரீ ராமாயணத்துள்ளது (அயோத்யா காண்டம் 3-28).

சந்திரனை விட மனோகரமான திருமுக மண்டலத்தை உடையவரும் அத்யந்தம் இஷ்டமான தோற்றத்தை உடையவருமான செளந்தர்யாதி குணங்கள் என்ன, தானாதி குணங்கள் என்ன, இவற்றால் புருஷர்களுடைய கண்களையும் நெஞ்சையும் கவரா நின்ற ஸ்ரீ ராம மூர்த்தியை தசரத சக்ரவர்த்தி பார்த்தார் என்பது அம் முழுச்  ஸ்லோகத்தின் பொருள் .

சிந்தாமணியார் இலக்கணையின் அழகைப் புகழுமிடத்து ,

‘பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள் ‘, ‘வாண் மதர் மழைக்க நோக்கி , ஆண் விருப்புற்று நின்றாரவ்வளைத் தோளினாரே ‘ என்றது காண்க

கம்ப நாடர் தாடகை வதைப்  படலத்து

…………… கண்ணிற் காண்பரேல்

ஆடவர் பெண்மையை யவாவுந்  தோளினாய்

(தம் தம் கண்களாற் காண்பார்களாயின் ஆண்மக்களும் பெண் தன்மையை விரும்பும் தோள்களின் அழகையுடைய ஸ்ரீ ராமபிரானே ) என ராமனைக் கோசிகர் கூறியதாகக் கூறினர்.

வாராக வாமனனே அரங்கா வட்ட நேமிவல

வாராகவா உன் வடிவு  கண்டால் மன்மதனு மட

வாராக ஆதரஞ்  செய்வன் …………………………

(வராகவதாரம் செய்தவனே ! வாமன மூர்த்தியானவனே! வட்ட வடிவமான சக்ராயுதத்தைப் பிரயோகித்தலில் வல்லவனே! ரகு குல ராமனாகத்  திருவவதரித்தவனே ! நினது திருமேனியழகைப் பார்த்தால் , எல்லோராலும் காமிக்கப்படும் கட்டழகு  உடைவனான மன்மதனும் தான் உன்னைக் கூடுதற்கு மகளிராய்ப் பிறக்க ஆசைப்படுவன் )

என்பது திவ்விய கவி பிள்ளைப் பெருமாளைய்யங்கார் அருளிச் செய்த திருவரங்கத்தந்தாதி

அங்கனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையேயன்றி  எம் பெருமானுக்கு உரியவளாகும்  ஒரு பிராட்டியின் நிலையை அடையுமாறு எங்கனம் எனில் , கூறுதும் .

பரமாத்மாவினது தலைமையும் , ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா  பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும் புருஷோத்தமனாகிய எம்பெருமானது  பேராண்மைக்கு முன்  உலக முழுதும் பெண் தன்மையாதலாலும் , ஜீவாத்மாவினது சுவாதந்திரியமின்மையும் , பாரதந்திரியமும் , தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும், பிரிவினால் துன்பத்தையும் அடைதலும் அவனையே தம் கரணங்கள் எல்லாவற்றாலும் அனுபவித்து , ஆனந்தத்திலும் முதலிய காரணங்களால் தம்மைப் பிராட்டிமாரோடு ஒக்கக் கூறத்தகும் . சிருங்காரரஜப் பிரதானமான அகப்பொருட் கிளவித் துறைகளை  தோத்திரப் பிரபந்த ரூப மான  ஞான நூல்களிற் கூறுதற்குக் காரணம் , கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கட்டத்  தின்பிப்பார் போலச் சிற்றின்பங் கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர் ஆன்றோர்.”

Xxxx

என்னுடைய விளக்கம் …

ராமாயணம், மஹாபாரதம் , திருப்பாவை, சங்கத் தமிழ் பாடல் அனைத்திலும் ‘அல்குல்’ வருணனை வருகிறது. ஆதிகால இந்துக்கள் ‘செக்ஸ்’ SEX பற்றிப் பேசுவதற்கு (no taboos) தயங்கவில்லை; அஞ்ச வில்லை. வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் புஸ்தகம் எழுதியத்திலிருந்தே இது தெரியும். உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம் அதுதான். அதுமட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இது போன்ற முழு நீள விஞ்ஞான அடிப்படையிலான செக்ஸ் SEX புஸ்தகங்கள் வந்தன.

இரண்டாவது விஷயம்0– ஆண் அழகைப் பார்த்து ஆண்களே பெண்களாக மாறி அவரை  அனுபவிக்க ஆசைப்பட்டதும் , இதே போல பெண் அழகைப் பார்த்த பெண்களே ஆண்களாக மாறி அவரை அனுபவிக்க ஆசைப்ப ட்டதும் கவிகளின் அதீத கற்பனையே. அதாவது அவ்வளவு அழகு.!! இது கவிகளின் கற்பனை.

மூன்றாவது விஷயம் – பக்தி இலக்கியத்தில் இது பொருந்துமா ? நாயக – நாயகி பாவம் என்பது இந்துக்களுக்கே உரிய ஒரு சிறப்பு அம்சம் . அப்பர் பாடல் முதல் மீரா பஜன் வரை காணலாம் . மேம் போக்காக காம ரசம் நிரம்பியதாகத் தோன்றும்; ‘கோபி’யர் செயல்பாடு, ஜெயதேவரின் அஷ்டபதி ஆகியவற்றுக்கு விவேகானந்தர் போன்றோர் அளித்த விளக்கங்களைப் படித்தோருக்கு,இது உடல் ரீதியான வேட்கை அல்ல என்பது விளங்கும்.

நாலாவது விஷயம் —கழிசடைகளை வடி கட்ட இது உதவும். கம்பன் 10, 000 பாடல் பாடினாலும் அதிலுள்ள காமரசப் பாடல்களை மட்டும் ரசித்து கம்பரசம் புஸ்தகம் எழுத்தும் கசடுகளை, கழிசடைகளை இனம்பிரித்துப் பார்க்க இப்பாடல்கள் உதவும்.

ஐந்தாவதாக ஒரு விளக்கம்– அழகாக தன பெண்ணுக்கு தாழம்பூ பூச்சூட்டி பின்னல் பின்னும் தாய்மார்கள் குழந்தையின் மீது கண் பட்டு விட கூடாதென்பற்காக கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டு – திருஷ்டி கழிய — வைப்பார்கள் . இனிப்பு பண்டம் செய்யும் சமையற்காரர்கள் , இனிப்பைத் தூக்கிக் காட்ட கொஞ்சம் உப்பு போடுவார்கள் . எங்கள் லண்டனில்  தயாராகும் சாக்லேட்டுகளிலும் கூட கொஞ்சம் உப்பு இருக்கும். இப்படி சில காமப்பாடல்கள் மூலம் கவிஞர்கள் சுவை கூட்டினர் போலும் . அறிஞர்கள் இந்த இரண்டு மூன்று காமப்பாடல்களில் சிக்காமல் மேலே உயர்வர். கழிசடைகள் இவற்றின் ஆராய்ச்சியில் இறங்கி அதல பாதாளத்துக்கு சென்று உழல்வர்.

–subham—

Tags-  திருப்பாவை, அதிசயம்-2, அல்குல், ஆண்டாள் , நிதம்பம்

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!! (Post No.4683)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 7-17 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4683

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

ஷாக்கிங்! ஷாக்கிங்!!

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!!

 

ச.நாகராஜன்

 

1

நிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஆனால் ஷாக்கிங், ஷாக்கிங்! இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது!

ஆண்டாள் தமிழை ஆண்டாள்;

தமிழ் இதயங்களை ஆண்டாள்! உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.

போலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்!)

 

 

2

மனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.

ராங் டைடில்!

“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே!

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது!

என்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.

மனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று!

“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது…

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்

 

   _ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

 

அடடா, எவ்வளவு ‘இழிமொழி எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.

 

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து

அலகையா வைக்கப்படும்

 

ஆம் இவரை உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று!

சூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது!

 

 

3

இவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா! இல்லை என்று அல்லவா தோன்றுகிறது!!

இலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.

தமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது!

 

 

இவர் சேர்ந்த இடமே சரியில்லை.

போலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.

 

‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;

‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.

‘போதை முடிவுக்கு வந்து விட்டதா?

 

இப்போதைக்கு முடிவு தான்! (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்!)

இப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.

வேசி; தாசி! அடடா, என்ன தமிழ் அறிவு!

வேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர் தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

 

 

4

 

இல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை!

 

அதுவும் கிடைத்து விட்டது!

உலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.

காணாது.

 

 எட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.

ஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக!

இவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்! ஒரேயடியாக தமிழ் …. !!!!

 

 

5

அது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று!

(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா!)

 

ஐயகோ! கலியின் கொடுமையா? காலிகளின் சேர்க்கையா!

தினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே! தினமணிக்கு கிரகண காலம்!!

 

6

ஒரே ஒரு வழி தான்! இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று!

இவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பாருங்கள்!

“அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

என்று எழுதி இருக்கிறார் அல்லவா! (உலகம் கவிதை வரிகள்)

இப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று!

“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்

தரமும் தப்பு; தமிழும் தப்பு

 

 

7

குரைப்பது கடிக்காது!

தெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.

 

 

8

ஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்

    அன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு

நன்று செய்யாதார் நலிந்தே செத்தார்

    நாயகன் தோன்றுவான் யுகம் தோறும்!

 

இப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்

     போட்டாலும் பொட்டென வீ ழ்வார்

எப்போதைக்கும் வெல்வது அறம் தான்!

      ஆண்டாள் என்றுமே ஆள்வாள்!!

***

குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

Written by London Swaminathan

 

Date: 3 October 2017

 

Time uploaded in London-16-07

 

Post No. 4267

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

ஆண்டாள் பாடிய திருப்பாவை அதிகமானோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் பாடிய நாச்சியார் திருமொழி , தமிழ் வைஷ்ணவர்களிடம் பிரபலமான அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலமாகவில்லை. ஒவ்வொரு பாடலிலும் உள்ள பக்திச் சுவை ஒரு புறம் இருக்க, சொல்லழகும் இருக்கிறது. ஓரிரு பாடல்களைக் காண்போம்.

 

திருவரங்கத்து அழகன்மேல் காதல் கொண்ட ஆண்டாள், அவனைப் பலவகையில் வருணிக்கிறாள். குழல் அழகர், வாயழகர், கண்ணழகர், பூவழகர் என்று புகழ்ந்து தள்ளுகிறாள்.

 

எழிலுடைய அம்மனைமீர்!

என்னரங்கத் தின்னமுதர்;

குழல் அழகர் வாயழகர்;

கண்ணழகர்; கொப்பூழில்

எழுகமலப் பூவழகர்;

எம்மானார் என்னுடைய

கழல்வளையைத் தாமும்

கழல்வளையே ஆக்கினரே!

—ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி

 

பொருள்:-

அழகை உடைய அன்னையீர்! எனக்குரிய திருவரங்கத்தே வீற்றிருக்கும் அரங்கநாதர் இனிமை நல்கும் அமுதம் ஒத்த உருவத்தை உடைய அழகர்; அவர் சுருட்டி முடித்த கூந்தலை உடைய அழகர்; புன்சிரிப்பைக் காட்டும் சிவந்த திருவாயை உடைய அழகர். காண்பாரை ஈர்க்கும் கண்ணழகர்; புதிதாக மலர்ந்தெழும் தாமரை மலரின் மென்மையையும்  அழகையும் பெற்ற உந்திச் சுழிகொண்ட திருவயிற்றைப் பெற்ற அழகர்; என்னை ஆட்கொண்ட அழகுருப் பெற்றவராகிய அத் தலைவர் காதல் பித்தேற்றி என்னை மெலிவித்தார். என்னுடைய கழற்றவும் பின் சேர்க்கவும் இயல்புடைய கை வளைகளை கையைவிட்டே கழன்றோடும்படி செய்து விட்டனரே! பார்த்தீர்களா? என்கிறாள்.

இன்னொரு பாசுரத்தில் கொள்ளைக் கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனை என்று வருணிப்பாள்

 

அதாவது, மென்மையான பெண் உள்ளத்தை அழகால் மயக்கிக் கொள்ளை கொள்ளும் குறும்புச் செயல்புரிபவனும் — என்பதாகும்.

 

இதை திருஞான சம்பந்தரின் தேவாரத்தின் முதல் பாடல் வரிகளுடன் ஒப்பிட்டு மகிழலாம்:

உள்ளம் கவர்கள்வன் என்று உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனான சிவ பெருமானை வருணிக்கிறார்.

 

யஜூர்    வேதத்தில் உள்ள ருத்ரத்திலும் தஸ்கரானாம் பதி= திருடர் தலைவன், அதாவது உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் கள்வர் தலைவனாக சிவனை வருணிக்கிறார்கள் வேத கால ரிஷிகள்.

 

ஆண்டாளையும், சம்பந்தரையும் வேத கால ரிஷிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு தனி ஆனந்தம் கிடைக்கும்.

–SUBHAM–

‘வங்கக் கடல் கடைந்த’–ஆண்டாள் தரும் அற்புதத் தகவல்!!!

TAMRALIPTI

bengal map

chola-flag-2

Tamralipti in Bengal is an ancient port.

Please click here for the article:
வங்கக் கடல் கடைந்த

மாதத்துக்கு மூன்று மழை ஏன்?

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்—ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்:

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்

ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் (பாரதி பாடல்- மறவன் பாட்டு)

பாரத நாடு முழுதும் மழை பற்றி ஒரே கருத்து நிலவுகிறது. ஒரு மாதத்தில் மூன்று தடவை மழை பொழிய வேண்டும். இக்கருத்து வேத, புராண, இதிஹாசங்களில் ஏராளமான இடங்களில் வருகிறது. தமிழ் இலக்கியத்தில் வரும் சில குறிப்புகளை மட்டும் காண்போம்.

1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பெண் (கல்லூரி மாணவி வயது—டீன் ஏஜ் கேர்ல்) இருந்தாள். அவள் பெயர் ஆண்டாள். அற்புதமாகக் கவி பாடிய அழகிய நங்கை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. வாரணம் ஆயிரம் உள்ளடக்கிய நாச்சியார் திருமொழியையும் திருப்பாவை முப்பதையும் செப்பிய பருவமங்கை. திருப்பாவையில் தெய்வீக கருத்துக்களை விட்டுவிட்டு ஆராய்ந்தால் வரலாறு, பூகோளம், தமிழ்ச் சங்கம், மழை, பாவை நோன்பு, தை நீராடல் என்று தமிழ் கலாசாரம் பற்றி நிறைய விஷயங்களை ஆண்டாள் அள்ளித்தெளித்திருப்பதைக் காணலாம்.

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

………..

என்று திருப்பாவை பாடினார்

ஆண்டாளுக்குத் தெரிந்தது இன்று நமக்குத் தெரியாமல் போய்விட்டது. மாதத்துக்கு முன்று மழை ஏன்? அதிகம் பெய்தாலும் அவலம், குறைத்துப் பெய்தாலோ வறட்சி. இதைத் திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் பத்துக் குறட் பாக்களில் பெய்துவிட்டார். கெடுப்பதும் மழை, கொடுப்பதும் மழை என்று பிட்டுப் பிட்டுவைத்து விட்டார்.

மூன்று மழை பெய்யக் காரணம் என்ன?

விவேக சிந்தாமணி இதை அழகாக விளக்குகிறது:

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

இப்போதெல்லாம் இப்படிப் பெய்வதில்லையே, ஏன்? என்று அந்தக் கவிஞரைக் கேட்ட போது,

அரிசி விற்றுடும் அந்தணர்க்கோர் மழை

வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை

புருஷனைக் கொன்ற பூவையர்க்கோர் மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே! என்றார்

நல்லாட்சி, நல்ல மதம், நல்ல பெண்கள் இருந்த போது மாதத்துக்கு மூன்று மழை. கெட்ட ஆட்சி, கெட்ட பெண்கள் ( நிமிடத்துக்கு நூறு டைவர்ஸ் செய்யும் பெண்கள்) அறத்தை மறந்த அந்தணர் இருந்தால் வருடத்துக்கு மூன்று மழை என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார்.

வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= பத்தினிப் பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டார்.(இதைப் படித்துப் படித்துப் பெண்கள் சிரிப்பது அவர் காதில் விழுகிறது. ஆகையால் காவிரி நீர் மேட்டுர் அணைக்குள் வராதபடி தடுத்துவிட்டார்!!)

தமிழ் இலக்கணப் படி “கொழுநன் தொழுது எழுவாள்” என்பதை இப்படியும் அர்த்தம் செய்ய முடியும்= கணவர் ‘பெட் காப்பி’யுடன் வந்து மனைவியை தாயே எழுந்திரு, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும், நான் ஆபீசுக்குப் போகவேண்டும் என்று சொல்லும் காட்சி! (குறள் 55, அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்)

வறட்சி பற்றிய கருத்தும் ஒன்றே

வறட்சி பற்றியும் பாரத நாடு முழுதும் ஒரே கருத்து நிலவுகிறது. 12 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வறட்சி பற்றி ரிக் வேதம் முதல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திரு விளையாடல் புராணம் வரை எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. சூரியனில் தோன்றும் கருப்புப் புள்ளிகளுக்கும் இந்த வறட்சிக்கும் தொடர்பு உண்டு. சரஸ்வதி நதி வற்றிப் போனதால் வறட்சியால் சிந்துவெளி நகரங்கள் மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் சுடுகாடாக மாறியது இப்போதைய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.

அந்தக் காலத்தில் அரசர்களைச் சந்த்தித்த ரிஷி முனிவர்கள் கேட்ட முதல் கேள்வி, “மன்னவனே உனது நாட்டில் மாதம் மும்மாரி ( மூன்று மழை) பொழிகிறதா?” என்ற கேள்விதான். மழை பொழியாவிடில் ரிஷி முனிவர்களை நாட்டிற்குள் அழைத்தாலேயே போதும், அவர்கள் வரும் போதே மழை பொழியும். இந்தக் கருத்தையும் ரிஷ்ய ஸ்ருங்கர் கதை முதல் முத்துசாமி தீட்சிதரின் அமிர்த வர்ஷிணி ராகப் பாடல் வரையும் காணலாம். யாக, யக்ஞங்களால் மழை பொழியும் ( காளிதாசனின் ரகு வம்சம் 1-62) போன்ற கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையைக் கட்டுப் படுத்துவது தனி மனிதனின் ஒழுக்கமே என்று இந்துக்கள் நம்பினார்கள். ஒழுக்கம் தவறத் தவற இயற்கை உத்பாதங்கள் அதிகரிக்கும் என்பது கவிஞர்களின் ஏகோபித்த கருத்து.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக”

காலே வர்ஷது பர்ஜன்ய:, ப்ருத்வீ சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மணா சந்து நிர்பயா:

அபுத்ரா; புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண;

அதநா; சதநா; சந்து ஜீவந்து சரதாம் சதம்!

(பொருள்: காலத்தில் உரிய மழை பொழியட்டும் நெல் வளம் சிறக்கட்டும், நாடு மகிழ்ச்சியால் செழிக்கட்டும், பிராமணர்கள் ( ஒழுக்கமுடைய அறிஞர்கள் ) பயமின்றி வாழட்டும், பிள்ளைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உடையோர் பேரன் பேத்திகளை ஈன்றெடுத்து மகிழட்டும்,வறியோர்கள் செல்வச் செழிப்படையட்டும். நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்)