நூறு ஆண்டு ஆயுளை ஆரோக்கியத்துடன் தரும் அதர்வ நிதி! (Post.10,247)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,247

Date uploaded in London – 24 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஹெல்த்கேர் பத்திரிகையில் அக்டோபர் 2021 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!

நூறு ஆண்டு ஆயுளை ஆரோக்கியத்துடன் தரும் அதர்வ நிதி!

ச.நாகராஜன்

நவீன அல்லோபதி மருத்துவம் உலகை ஆண்டு வரும் இந்தக் காலத்தில் அது சமாளிக்க முடியாமல் திணறும் கொரானா போன்ற பிரச்சினைகளைக் கண்டு திகைக்கிறோம்.

நாளுக்கு ஒரு நாள் மாறுபட்ட கருத்துக்களையும் அறிக்கைகளையும் மருத்துவ ஆய்வுகள் வெளியிடுவதால் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் விழிக்கிறோம்.

வியாதிகளுக்குப் புதுப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன, மருந்துகள் மாற்றப்படுகின்றன!

நம்மைப் பாதிக்க வரும் இயற்கைச் சீற்றங்களுக்கு – புயல்களுக்குப் புதுப் புது பெயர்கள் சூட்டுவது போல (சூட்டி மகிழ்வது போலவோ?!!) வைரஸுகளுக்கும் புதுப் புதுப் பெயர்கள் தரப்படுகின்றன. கோவிட், நிபா…..

இந்த நிலையில் தான் மேலை நாட்டு மருத்துவ முறை பற்றி ஆய்வு செய்து விமரிசித்த ஐயான் கென்னடியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    நவீன மருத்துவமானது ஒரு எதிர்மறை அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது. அது வியாதிகளின் நிவாரணம் பற்றியே முதலிடம் கொடுத்து வருகிறது. மனிதனின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி அதைப் பாதுகாத்து நீடித்து இருப்பதற்கு அது முதலிடம் கொடுக்கவில்லை.

இது தான் உண்மை.

ஐயான் கென்னடி (லீத் சொற்பொழிவுகள் 1980) தனது சொற்பொழிவில் கூறினார் இப்படி:-

“நவீன மருத்துவம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.உடல்நலக் குறைவு அல்லது வியாதி – இது தான் நவீன மருத்துவத்தின் மையக் கவலையாக உள்ளது. நவீன மருத்துவம் பற்றிய ஒரு புதிய மாடலை திருப்பவும் உருவாக்க எண்ணுவோமேயானால் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து அதற்கான வழிமுறைகளைக் காணும் ஒன்றையே தேர்ந்தெடுப்போம். ஆனால் இப்போது நம்மிடம் இருப்பது அதற்கு நேர் எதிரிடையான ஒன்று. அது உடைந்த சிறு சிறு துண்டுகளைப் பொறுக்க விரும்புவதைப் போல உள்ள ஒன்று தான். அது வியாதியைப் பற்றியே நினைக்கிறது, ஆரோக்கியத்தை அல்ல! ஒரு கணம் நினைத்துப் பார்த்தாலேயே போதும், இந்த முட்டாள்தனம் நமக்குப் புரிந்து விடும்.”

[Ian Kenndedy (Leith Lectures 1980) said :”Modern medicine has taken the wrong path. Illness or disease has become the central concern of modern medicine. If we start all over again to design a model for modern medicine, most of us, I am sure, would opt for a design which concerned itself far, far more with the pursuit and preservation of health, of well being. What we have instead is the very opposite : a system of medicine which reacts, which responds, which wants to pick up the broken pieces – a form of medicine, in short concerned with illness not health. A moment’s thought demonstrates the folly of this.”]

சரி, இதற்கு மாற்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் போது தான் ஆயுர்வேதம் நம் முன்னே தலை நிமிர்ந்து நிற்கிறது.

ஆயுர்வேதம் இந்தியப் பண்பாட்டின் ஆணிவேரான வேதங்களின் அங்கங்களுள் ஒன்று. அது ஒரு ஆணோ, பெண்ணோ நூறு வயது எப்படி ஆரோக்கியமாக நிறைவாழ்வு வாழ முடியும், வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கிறது.

அதர்வ வேதத்தில் காணப்படும் ஆயுர்வேத நெறிமுறைகள் அதர்வ நிதி என அழைக்கப்படுகிறது.

தேய்ந்து குறைந்து போகும் இதர செல்வங்களை விட நிஜமான செல்வம் ஆரோக்கியம் என்னும் செல்வம் அல்லவா. அது தானே உண்மையான நிதி –

அதர்வ நிதி!

அதர்வன் என்ற சொல் புத்திகூர்மையுடன் தொடர்பு கொண்ட ஒரு சொல்லாகும். வசிஷ்டர் என்ற பெரும் முனிவரே அதர்வ வேதத்தை நன்கு அறிந்த மகா முனிவர் ஆவார். இவரையே காளிதாஸன் அதர்வ நிதியின் களஞ்சியமாகக் குறிப்பிடுகிறான். ரிக், யஜூர், சாமம் ஆகிய மூன்று வேதங்கள் மனிதனின் வாழ்க்கை லக்ஷியத்தையும் அவனது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் அதர்வண வேதமோ இந்த வாழ்க்கையிலேயே இப்போது உயிரோடு இருக்கும் போதே எதிரிகளிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் அரசர்கள், அவர்களது நீதி, வழிமுறைகள் ஆகியவை பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது பற்றியும் எடுத்துரைக்கிறது.  ஆனால் அதே சமயம் மனிதன் காண வேண்டிய மெய்ப்பொருள் எது என்ற தத்துவத்தையும் கூடவே அது சுட்டிக் காட்டி விளக்குகிறது.

அதர்வ வேதமே ஆயுர்வேத வைத்தியத்திற்கான ஆதார நூல். ஜுரங்களைப் போக்குவது எப்படி, தொழுநோயைத் தீர்ப்பது எப்படி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களை உடனடியாகப் போக்குவது எப்படி, இருமல், தலையில் வழுக்கை விழுதல், கண் சமபந்தமான வியாதிகள் உடலில் ஆண்மைச் சக்தி குறைதல், எலும்பு முறிதல், பல்வேறு காயங்கள், விஷக்கடி,

உள்ளிட்டவற்றிற்கான தீர்வுகள் யாவை என்பன போன்றவற்றை ஆயுர்வேதம் தருகிறது. அற்புதமான எளிய அதிகச் செலவில்லாத, உடனுக்குடன் பயன் தரும் வழிமுறைகளை அது அற்புதமாக விவரிக்கிறது.

உடலை அக்கு வேறு ஆணி வேறாகப் பகுத்துப் பிரித்து ஆராய்ந்து அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அதன் செயலையும், செயல் திறனையும் நன்கு விளக்குகிறது. இந்த வகையில் உலகின் முதல் மருத்துவ நூலாக அதர்வண வேதமே – அது தந்துள்ள ஆயுர் வேதமே திகழ்கிறது.

கருப்பை, கருவின் தோற்றம், உடல் தூய்மை என்பன பற்றியெல்லாம் ஆயுர்வேதத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வேத ரிஷிகள் இயற்கை வைத்தியத்தையே முதன்மையாகக் கொண்டிருந்தனர். நீர், காற்று, சூரிய ஒளி, பூமி ஆகியவற்றைப் பயன்படுத்தி நூறு சதவிகித ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆயுர்வேதத்தில் மட்டுமே உள்ளது.

உடலின் எந்த பாகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆயுர்வேதத்தை அணுகுங்கள், அது தெள்ளத் தெளிவாக அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கிறது.

பற்களா? –  மேல் வரிசை, கீழ் வரிசை, ஈறு, பல் இடுக்குகள் என நுட்பமாக அதில் காணலாம். இதே போல இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல், ஜனன உறுப்புகள், தசை, எலும்பு, இரத்தம் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் – அது பற்றித் தெளிவாக அது தகவல்களைத் தருகிறது.

துரதிர்ஷ்டவசமாக முகலாயப் படை எடுப்பாலும் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்டதாலும் சிறுகச் சிறுக அதன் மஹிமை நமது நாட்டில் குறைக்கப்பட்டது; அதன் அருமை பெருமை மறைக்கப்பட்டது.

இன்றைய அல்லோபதி டாக்டர்கள் தங்கள் மருத்துவத்துடன் இதையும் சற்று நுணுகி ஆராய்ந்து இதன் அருமை பெருமைகளையும் அறிந்து, ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் தங்கள் வழிமுறைகளில் இணைத்துக் கொண்டால் சில ஆண்டுகளிலேயே நமது டாக்டர்களினாலேயே ஆயுர்வேதம் ஒரு புத்துயிரைப் பெறும்; அனைவருக்கு எளிய, இனிய சிகிச்சையைத் தந்து செலவைக் குறைத்து, நீடித்த ஆரோக்கியமான வாழ்வைத் தரும். இதில் ஐயமில்லை. சிந்திப்போம், செயல்படுவோம்!

***

tags- அதர்வ நிதி,  ஆயுர்வேதம்

சவூதி அரேபிய கல்வித்திட்டத்தில் ராமாயணம், மஹாபாரதம் (Post.9682)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9682

Date uploaded in London – –  –3 JUNE   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

சவூதி அரேபியா ராமாயண, மஹாபாரதத்தைத் தனது கல்வித்திட்டத்தில் சேர்க்கிறது!

ச.நாகராஜன்

சவூதி அரேபியா ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றைத் தனது கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளது! (ஆர்கனைஸர், 23-4-2021 இதழ்)

சவூதி அரேபியா ஹிந்து இதிஹாஸங்கள், பழக்க வழக்கங்கள், அதன் நடைமுறைகள், மற்றும் புராணங்கள் ஆகியவற்றை தனது கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இனிமேல் அங்கு குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.

மத சம்பந்தமான பாட புத்தகங்களில் புத்தமதம், இதரமதங்கள் பற்றிய பாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இளவரசர் முஹம்மது பின் சல்மானின் வழிகாட்டுதலின் படி 2030 தொலைநோக்கு காட்சி பற்றிய ஆவணத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இளவரசர் சல்மான் தனது தொலைநோக்கு காட்சியின் படி அதிரடி மாறுதல்களுடன் எப்படி தனது அரசு செயல்படப் போகிறது என்பது குறித்து பரவலான மாறுதல்களை கொள்கை ரீதியாக செய்து வருகிறார். சவூதி அரசு எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒன்று.  இளவரசர் பன்முகம் சார்ந்த பொருளாதாரத்தை விரும்புகிறார்.

உலகமயமாக்கப்பட்ட உலகை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக, ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதியைச் சேர்ந்த யோகா மாஸ்டர் நௌபஃப் அல்மொர்வாய், ஏப்ரல் 15 தேதியிட்ட தனது ட்வீட்டில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டில் ஹிந்து மதம் புத்தமதம் பற்றிய வினாத்தாளைக் காண்பித்துள்ளார். சவூதி அரேபியாவில் யோகாவைப் பரப்பியதற்காக அல்மொர்வாய்க்கு பத்ம ஸ்ரீ விருது 2018இல் வழங்கப்பட்டது.

**

இந்தியா ராணுவத்திற்கென உலகில் அதிகம் செலவழிக்கும் மூன்றாவது நாடு!

ராணுவத்திற்கென அதிகம் செலவழிக்கும் மூன்றாவது பெரிய நாடாக உலகில் இந்தியா திகழ்கிறது. 72900 கோடி டாலரை 2020இல் இந்தியா செல்வழித்துள்ளது. இருப்பினும் அது அமெரிக்காவை ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியே தான் உள்ளது. அமெரிக்கா இந்தியாவை விட 10 மடங்கு அதிகமாகவும் சீனா நான்கு மடங்கு அதிகமாகவும் ராணுவத்திற்கென செலவழிக்கிறது. உலகளாவிய ராணுவச் செலவை எடுத்துக் கொண்டால் அது 2020இல் 198100 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.6% அதிகமாகும்.

(டைம்ஸ் ஆஃப் இந்தியா 27-4-2021 இதழ்)

நன்றி : Truth, Vo 89 Issue 4 Dated 7-5-2021

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:-

Snippets 

I. Saudi Arabia Introduces Ramayana, Mahabharata, Yoga and Ayurveda in its curriculum : (The Organiser, 23.04.2021) 

The Kingdom of Saudi Arabia has introduced Hindu epics, customs, practices and mythology in its curriculum. 

Henceforth, children would also be taught about Ramayana, Mahabharata, Yoga and Ayurveda. 

The religious study texts would also include chapters about Buddhism and other religions too. It’s all part of the vision 2030 document prepared under the guidance of Prince Mohammad Bin Salman. 

Prince Salman, under his vision to bring dramatic changes in how the Kingdom operates, has been implementing widespread change in its policies. 

The Kingdom has an overly oil-dependent economy. Prince wants a more diversified economy. 

And to prepare the younger generation for a more globalised world, English language has been made compulsory. 

Nouf Almorwaai, a Saudi-based Yoga teacher tweeted on April 15 a screenshot of her child’s question paper, which has questions about Hinduism and Buddhism. 

Almorwaai was conferred Padma Shri in 2018 for popularising Yoga in Saudi Arabia. 

II. India 3rd largest military spender :

India remains the third largest militaryspender, doling out $ 729 billion in 2020, though still far behind US, which spends over 10 times and China (Four times). The total global military expenditure rose to $1981 billion in 2020, an increase of 2.6% from 2019. (TOI, 27.4.2021) 

SOURCE : Truth, Vo 89 Issue 4 Dated 7-5-2021

***

tags- சவூதி அரேபியா ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம்

லண்டனில் ஆயுர்வேதக் கண்காட்சி (Post No.4697)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-58 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4697

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

 

லண்டன் மாநகரில் யூஸ்டன் (Euston or Euston Square) ரயில் நிலையம் அருகில் வெல்கம் சென்டர் (Wellcome Centre) என்ற புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிலயம் உள்ளது. இந்தியாவின் ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் தொடர்பான ஏராளமான மருத்துவ பொக்கிஷங்களின் உறைவிடம் இது. இப்பொழுது ஒரு ஆயுர்வேத கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும். ஆனால் திங்கட்கிழமையில் கண்காட்சி மூடப்பட்டிருக்கும்.

 

 

இந்தக் கண்காட்சி பற்றியும் வெல்கம் என்பவர் யார் என்றும் சில செய்திகளைக் காண்போம்.

ஹென்றி வெல்கம் (1853-1936) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் லண்டனுக்கு ஒரு மருந்து விற்பனையாளராக வந்தார். பின்னர் ஒரு பெரிய மருத்துவ தொழில் நிறுவனத்தை அமைத்து வெற்றி கண்டார். அவருக்கு வரலாற்றில்– குறிப்பாக மருத்துவ வரலாற்றில்— பேரார்வம் இருந்தது. அவர் ஒரு தர்ம சிந்தனையாளர், ஆராய்ச்சியாளர், பழம்பொருள் சேகரிப்பாளர். ஆகையால் உலகம் முழுதும் குறிப்பாக இமய மலைப் பகுதி மூலிகைச் செல்வங்கள், ஆயுர்வேத நூல்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். அவர் சேகரித்த நூல்களும், பொக்கிஷங்களும் உலகம் முழுதும் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. அவர் அமைத்த அறக்கொடை நிறுவனமான வெல்கம் ட்றஸ்ட் (Wellcome Trust) இன்று 70  நாடுகளில் ஆரய்ச்சிப் பணிகளுக்கு நிதி உதவி செய்கிறது.

 

வெல்கம் சென்டரில் எப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுடன் புதிதாக ஆயுர்வேத கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. பெரிய புத்தகக் கடை, காப்பிக் கடை, நூலகம் ஆகியன இந்த இடத்தின் சிறப்புகள்; எப்போதும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் கூடி இருப்பர்.

 

ஆயூர்வேதக் காட்சியில் நிறைய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருத பாரசீக, திபெத்திய மொழி நூல்களும் சுவடிகளும் இருக்கின்றன. ஒரு புறம் வீடியோவில் திபெத்திய மூலிகைச் செல்வம் பற்றிய ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். மறுபுறம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன்  மருத்துவ செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்.

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அவதரித்த சுஸ்ருதர் என்ற மஹா மேதைதான் உலகில் அறுவைச் சிகிச்சையின் தந்தை (Father of Surgery)  என்ப போற்றப்படுகிறார். அவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய விஷயங்கள் உலகப் பிரசித்தமானவை.

 

சுஸ்ருதர் செயற்கை மூக்கு எப்படிச் செய்வது எப்படிப் பொருத்துவது (Rhinoplasty) என்று சொன்ன விஷயங்களும், அவர் வருணிக்கும் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளும் (Surgical Instruments) உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. இந்த மருத்துவக் கருவிகள் நம்மிடையே இன்று இல்லாவிடினும், அதன் மாதிரிகளைத் (Replicas) தயாரித்துக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

இந்தக் கண்காட்சிக்கு ஆயுர்வேத மனிதன் என்ற பெயர் சூட்டியதற்குக் காரணமாக அமைந்ததது ஒரு 18ஆவது நூற்றாண்டின் நேபாளி ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வண்ணம் ஒரு மனிதனின் உடலுறுப்புகள் ரத்த நாளங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம் இன்று இந்தியாவுக்கு அப்பாலும் பயிலப்படுகிறது.

கண்காட்சியிலுள்ள வேறு பல சுவையான விஷயங்களைத் தனியாகத் தருகிறேன்.

–Subham–

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070)

Written by S NAGARAJAN

 

Date: 11 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4070

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

 

ச.நாகராஜன்

உணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  • அர்த்த தோஷம்
  • நிமித்த தோஷம்
  • ஸ்தான தோஷம்
  • ஜாதி தோஷம்
  • சம்ஸ்கார தோஷம்

இது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.

 

அர்த்த தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.

உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.

வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

நிமித்த தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.

அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.

அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

 

ஸ்தான தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.

எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்

 

ஜாதி தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

 

சம்ஸ்கார தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.

அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

அதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.

 

இன்றோ…

இப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட  தெரியாத காலம் ஆகி விட்டது.

என்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.

இதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்!

 

***

மூலிகைப் போர்! (Post No 2538)

IMG_6701

Written by S Nagarajan

 

Date: 14  February 2016

 

Post No. 2538

 

Time uploaded in London :–  6-57  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

பாக்யா 12-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

மூலிகைப் போர்!

.நாகராஜன்

 

 

IMG_6703

ஆயுர்வேதத்தில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. பக்க ஆதாயங்களைத் தான் ஏற்படுத்தும்                         – சுப்ரா கிஷன்

                              

கடைசி கடைசியாக, அதிசயமாக நாம் விழித்துக் கொண்டோம். எதில்?  மூலிகைப் போரில்!

பிரம்மாண்டமான இமயமலை வடக்கில் இருக்க விந்தியாசலம், கொல்லி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என்று நம் தேசத்தில் உள்ள மலைகளைச் சார்ந்துள்ள விஸ்தாரமான காடுகள் அபூர்வ மூலிகைகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகைகளின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டு அவற்றை இன்றும் ப்ழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக உப்யோகிக்கின்றனர். பெரிய வியாதிகள் கூட உடனடியாகத் தீருகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்களையும் தனி நபருக்கே உரித்தான பிரக்ருதியையும் அடிப்படையாகக் கொண்டது நமது ஆயுர் வேதம்.

 

இதை நமது விஞ்ஞானிகள் முதல் முறையாக ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளைக் கண்டுபிடித்து உரைத்துள்ளனர்.

ஆனால் நமக்கு முன்பாகவே விழித்துக் கொண்ட சீனா கன்ஃப்யூசியஸ் கூறிய நெறிகளின் படி மூலிகை ஆராய்ச்சியில் இறங்கி திபெத்தில் உள்ள அரிய பெரிய மூலிகைகளை இனம் கண்டு அதிலிருந்து பல்வேறு மருந்துகளைத் தயார் செய்து வருகிறது. உலகின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த மூலிகைப் போரை சீனா ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவோ வெளியில் அல்லோபதி என்று சொன்னாலும் மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்தே உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறது.

 

1820ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ஆய்வாளர்கள் மூலிகையிலிருந்து மலேரியாவைப் போக்கும் கொய்னா மாத்திரையைக் கண்டுபிடித்ததிலிருந்து இந்த மூலிகை வேட்டை ஆரம்பித்தது. சரக சம்ஹிதாவில் சரக முனிவர் கூறிய அற்புதமான சர்ப்பகந்தியை நாம் விட்டு விட அமெரிக்கா அதை எடுத்துக் கொண்டது. அதை உபயோகித்து,  பன்னாட்டு மருந்து நிறுவனமான சிபா-கெய்கி  ரெஸர்பைன் (Reserpine) மாத்திரையைக் கண்டுபிடித்து பெரும்புகழைப் பெற்றது. மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுத்த கதையையும் நாம் அறிவோம்.

 

2009ஆம் ஆண்டு சீனா ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து மூலிகைகளிலிருந்து மருந்துகளைத் தயாரிக்கும் உயர்தர உத்திகளை வகுத்துக் கொண்டது.

இமயமலைப் பகுதியை முற்றிலுமாக ஆராய்ந்து அங்கிருக்கும் அபூர்வ மூலிககைகளை இனம் கண்டு உயர்தர மருந்துகளை சீனா தயாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் மூலிகைப் போரில் அது வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக நமது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இமயமலைப் பகுதியில் கங்கோத்ரி யமுனோத்ரி என கங்கையும் யமுனையும் உருவாகும் பகுதிகளில் அற்புதமான மூலிகை வளம் உள்ளது.

இங்குள்ள துரோணகிரியின் அருகிலே தான் சஞசீவனி மூலிகை உள்ள் சஞ்சீவனி பர்வதம் உள்ளது.

 

லக்ஷ்மணனைக் காப்பாற்ற ஹநுமார் சஞ்சீவனி மூலிகையை எடுக்க வந்த பந்தர் பூஞ்ச் பகுதியில் பங்குனி மாதத்தில் ஒரே ஒரு குரங்கு மட்டும் வருகிறது. ஹரித்வார் வழியாக வரும் அந்தக் குரங்கை தரிசிக்க யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பர். பலரும் தரிசிக்கின்றனர். ஒரு வருடம் மலை உச்சியில் வசிக்கும் அந்தக் குரங்கு அடுத்த குரங்கு வந்தவுடன் மலையை விட்டு இறங்கி விடும். இமயமலை தரும் நூற்றுக் கணக்கான அபூர்வங்களில் இதுவும் ஒன்று!

 

உயிரை மீட்டுத் தரும் சஞ்சீவனி மூலிகை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளின் பெயரை சரகர் குறிப்பிடுகிறார்.  உயிரைக் கொல்லும் வியாதியான கான்ஸருக்கு வின்ப்ளாஸ்டைன் (Vinblastiine), மற்றும் வின்கிறிஸ்டைன்(Vincristine) ஆகிய மருந்துகள் மூலிகையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

 

இந்திய அரசின் நிறுவனமான  சென்ட்ரல் ட்ரக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குக்குள் மூலிகையிலிருந்து குக்குளிபிட் மருந்தை 1986இல் தயாரித்தது குறிப்பிடத் தகுந்தது.

 

இந்த வகையில் நமது ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜியைச் (Centre for Cellular and Molecular Biology)  சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் மனித அமைப்பு சரிதானா என்ற சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக  20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 3416 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனம் ஆய்வை ஆரம்பித்தது. இறுதியில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ள 262 பேர்களை தேர்ந்தெடுத்தது.

IMG_6704 - Copy

இவர்களின் மீது மரபணு, புள்ளியியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2கோடி ரூபாய் செலவில் ஆறு ஆண்டுகள் செய்யப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் 2015 வருட முடிவில் முடிந்து விட்டது.

இதன் முடிவுகள் ஆச்சரியமூட்டும் விதமாக நமது ஆயுர்வேத கொள்கைகளை உறுதி செய்கிறது!

 

இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தனது குழுவினர் மரபணுவில் 52 மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்றால் மூன்று தோஷங்களின் உட்பிரிவுகளையும் கண்டு பிடிக்க முடியும். அப்போது ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனித் தனி சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

இந்திய அறிவியல் இதழ்களில் இடம் பெற்று விட்ட இந்த ஆராய்ச்சி மூலிகைப் போரில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

தொன்மமும் நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அவை உறுதிப்படுத்தப் படும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாதல்லவா!

 

ருத்ரமூலிகா, சஞ்சீவனி, சர்ப்பகந்தி உள்ளிட்ட அபூர்வ மூலிகைகளை இந்திய விஞ்ஞானிகள் இனம் கண்டு ஆய்வு நடத்தினால் புதியதோர் வியாதியில்லா உலகைப் படைக்க இந்திய விஞ்ஞானிகள் காரணமாகி விடுவார்கள். புராதனமான அறிவும் நவீன அறிவியலும் ஒன்றிணைந்தால் இந்தியா, ‘மூலிகை நாடு’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்று விடும்!

அந்த நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல் விலங்கியல் அறிஞரும் இயற்கையியலருமான (Zoologist and Naturalist)  ஜார்ஜ் குவியே         ( Georges Cuvier 1769-1832) ஒரு விநாடி கூட நேரத்தை வீணாக்க மாட்டார்.  உலகில் உள்ள சகல விதமான மிருகங்கள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களைப் பற்றி அவருக்கு அத்துபடி. அந்த விவரங்களை எல்லாம் தனது அறையில் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

 

தன் வீட்டிற்குள் வந்து அநாவசியமாக யாரேனும் நேரத்தை வீணடிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிரபலமான ஒரு கனவான் அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க வருவார். ஒருமுறை அதைப் பற்றிக் கூறுகையில், “ அவர் வருவது ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள; அவ்வளவு தான்! யாராவது வந்து இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று என்னிடம் தெரிவிக்கத் தேவையே இல்லை. அவர்கள் கூறுவதை விட எனது தெர்மாமீட்டரும் பாரோமீட்டரும் இன்னும் துல்லியமாக அனைத்தையும் தெரிவிக்கும்.” என்று கூறியவர் தன் அறையைச் சுட்டிக் காட்டி. “இதோ இங்கு இருக்கும் மிருக உலகத்தில் எந்த வகையிலும் சரி, எந்த இனத்திலும் சரி, எப்படி ஆனாலும் சரி என்னை பயமுறுத்தக் கூடிய ஒரு உயிரினமே கிடையாது. ஆனால் வெட்டியாய் நேரத்தைப் போக்கும் சோம்பேறிக்கும் நேரத்தை வீணடிக்கும் வீணரையும் கண்டால் நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றார். ஆகவே அவரைச் சந்திப்பவர்கள் ஒரு வினாடி நேரத்தையும் கவனமுடன் கணித்துக் கொள்வார்கள்.

IMG_6707

மேதைகள் அனைவருக்கும் நேரம் என்பது பொன்னைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டின் சட்ட மேதையும் பிரதான அமைச்சராகவும் விளங்கிய ஹென்றி ப்ராங்கோய்ஸ் டி அகுஸா (Henry Francois de aguesseau 1688-1751)) என்பவர் ஒரு வினாடி நேரத்தையும் வீணாக்க மாட்டார்.

 

தின்சரி உணவு நேரத்தில் மேஜைக்கு சரியான நேரத்தில் அவர் வந்து அமர்வார். ஆனால் அவரது மனைவியோ தினமும் 15 நிமிடம் கழித்தே வருவார். எவ்வளவோ சொல்லியும் அவரது வழக்கம் மாறவில்லை.

 

பார்த்தார் அகுஸா. டைனிங் டேபிளுக்கு ஒரு நோட்டுடன் வந்து அமர ஆரம்பித்தார். 15 வருடங்கள் கழித்து பெரிய நான்கு தொகுதிகளை அவர் வெளியிட்டார். எல்லாம் டைனிங் டேபிள் நோட்புக்கில் எழுதிய நூல் தான்! அது பல பதிப்புகளைக் கண்டு பெரும் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.

 

எல்லா மேதைகளும் முதலில் மற்றவருக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்: நேரத்தை வீணாக்காதே என்பது தான்!

IMG_6708

*******

 

 

 

வேதத்தில் 107 மூலிகைகள்

susrutha statue in Haridwar

Picture of Susrutha statue in Haridwar.

உலகிலேயே மிகவும் பழைய நூல் வேதங்கள். அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. எப்படி சங்கத் தமிழ் பாடல்கள் பழைய செந்தமிழில் உள்ளதோ அப்படியே வேதங்களும் பழைய வைதீக சம்ஸ்கிருதத்தில் இருக்கின்றன. எப்படி உரைகாரர்களின் உரை இல்லாமல் சங்கத் தமிழ் பாடல்களைப் புரிந்துகொள்ளமுடியாதோ அப்படியே, சாயனர் போன்றோரின் உரை இல்லாமல் வேதங்களையும் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ் இலக்கியத்தை விட 1500 ஆண்டுகள் பழமை உடையவை வேதங்கள் என்பதால் சாயனர் உரை கூட முழு அர்த்தெத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் வேதத்தை விளக்கவந்த இதிஹாச புராணங்களும், தேவார திருவாசக திவ்விய பிரபந்தங்களும  அவைகளின் உள்ளார்ந்த கருத்துக்களை நமக்கு புலப்படுத்துகின்றன.

 

 

மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சரகர், சுஸ்ருதர் போன்ற பெரியோர்கள் வடமொழியில் எழுதிய நூல்கள் வேத கால அறிவை அறிய ஓரளவுக்குத் துணை செய்கின்றன. ரிக், யஜூர், சாம ,அதர்வணம் –ஆகிய நான்கு வேதங்களில் மிகவும் பயனுடைய வேதம் அதர்வண வேதம் ஆகும். மனிதன் பிறந்து, வளர்ந்து, மணம் புரிந்து, இறக்கும் வரை உள்ள சடங்குகளுக்கு அதில் பல மந்திரங்கள் உள்ளன.

 

 

உலகிலேயே பழைய சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் 97ஆவது பாடல் முழுதும் மூலிகைகளின் பெருமையைப் பேசுகிறது. உலகிலேயே மிகப் பழைய மூலிகைப் பாடல் இதுதான். இரசாயன ஆயுதத்தால் தாக்குண்ட லெட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் மூலிகை மலையையே எடுத்து வந்ததை ராமாயணம் மூலம் நாம் அறிவோம். உலகின் முதல் மூலிகை மருத்துவன் அனுமன் தான். இதற்குப் பின்னும் முன்னும் அயுர்வேதம் என்ற மிகப் பழைய மருத்துவ முறை இருந்ததை அறிய ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிஹாசங்கள் உதவுகின்றன.

 

charaka

107 மூலிகைகள்

ரிக் வேதப் பாடல் 107 மூலிகைகள் பற்றிப் பாடுகிறது. துரதிருஷ்டவசமாக நாம் அந்த 107 மூலிகைகள் என்ன என்பதை அறிய முடியவில்லை. ஆயினும் ஆயுர்வேத நூல்கள், வேறு நூற்றுக் கணக்கான மூலிகைகள் பற்றி நமக்கு அறிவுறுத்துகின்றன. பிராமணர்கள் யாக யக்ஞங்கள் செய்ய மிகவும் பயன்படுத்துவது அரச மரமே. இதை ரிக்வேதம் பகழ்கிறது. சிந்து –சரஸ்வதி நாகரீகத்திலும் மிகவும் அதிகமாகக் கானப்படுவது இந்த அரச மரமே.

 

ரிக் வேதம் விளக்காத விஷயங்களை அதர்வண வேதம் விளக்குகிறது. அபூர்வமான பல தாவர தாயத்துக்கள் பற்றிப் பாடுகிறது. இவை வேத கால மக்களின் நம்பிக்கைகளை விளக்குகிறது. வேதகால மக்கள் மூலிகைகளின் மருத்துவப் பலன்களோடு அவைகளை தெய்வீக குணம் உடையவை என்று நம்பினர். அவைகளின் மாய, தந்திர குணங்களிலும் நம்பிக்கை வைத்தனர். அவைகளுக்கும் சந்திரனுக்கும், சோம பான மூலிகைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினர். மூலிகை தாயத்துக்களால் கணவன் மனைவி உறவு பலப்படும் என்றும் நம்பினார்கள்.

 

வேத காலத்தில் தாவரவியல் அறிவு, புறச்சூழல் அறிவு பரவி இருந்தது. நூற்றுக் கணக்கான மூலிகை, மரம் செடி, கொடிகளின் பெயர்களை சம்ஸ்கிருத இலக்கியத்தில் காணுகிறோம்.

 

 

அதர்வ வேத அற்புதங்கள்

நாலாவது வேதமான அதர்வண வேதத்தில் குஸ்ட, ஷிலாச்சி முதலிய தாவரங்கள் பற்றியும், ஜங்கிட மணி, பர்ண மணி முதலிய தாயத்துக்கள் பற்றியும் அபூர்வ விஷயங்கள் காணக்கிடக்கின்றன. பர்ண மணி பலாச மர இலைகளால் செய்யப்பட்டது. இன்று வரை யாகத்தில் பயன்படுத்தப்படும் கரண்டிகள் பலாச மரத்தால்தான் செய்யப்படுகின்றன. இப்போதைய அறிவைக்கொண்டு இவை என்னென்ன என்பதை அறிய இயலாவிட்டாலும் அந்தக் காலத்தில் இருந்த அபூர்வ மூலிகை மணிகளை நாம் அறிய முடிகிறது.

 

 

தாயத்து மூலம் கணவனின் அன்பைப் பெற ஒரு மனைவி முயற்சிக்கும் பாடலும், விஷ அம்பிலிருந்து உடலில் பாய்ந்த விஷத்தை வெளியே ஏற்றும் பாடலும்,ஜங்கித மணி—பர்ண மணியின் அபூர்வ குணங்களைக் கூறும் பாடலும், பல மரங்களின் பெயர்களும் படித்து இன்புறத்தக்கவை. நீண்ட முடி வளர உதவும் ரேவதி என்ற மூலிகையும் பாடப்படுகிறது. அருந்ததி, அகத்தி என்று ரிஷிகளின், ரிஷிபத்தினிகளின் பெயர்களும் மூலிகைகளுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

மனிதர்களுக்கு மட்டுமின்றி இரண்டு கால், நான்கு கால் பிராணிகளுக்கும் நன்மை வேண்டும் பாடல் அதர்வ வேத முனிவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டும். வேதங்களே மிகப் பழையவை. அவை மூலிகை பாற்றிப் பாடுகையில் “புராதனமான” என்ற சொல்லைப் பயபடுத்துவதைக் காண்கையில் இந்த அறிவு பல்லயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பது தெள்ளிதின் விளங்குகிறது.

 

 

(இந்த விஷயம் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரையில்– 107 Miracle Herbs in the Hindu Vedas– பாடல் எண்கள், முழு வாசகங்கள் ஆகியனவற்றைக் காணலாம்).

இந்திய கலாசாரம் பற்றி 650 கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கே  கிடைக்கும் படித்து மகிழ்க.

Contact swami_48@yahoo.com