இலங்கை அரக்கன் மீது  ஞான சம்பந்தர் கடும் தாக்கு (Post No.10,352)

WRITTEN BY LONDON SWAMINATHAN AND

Post No. 10,352

Date uploaded in London – –   18 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


“கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே….”

புறம் 378  ஊன்பொதி பசுங்குடையார்

Purananuru , Sangam Literature, verse 378

Xxx

அரனுறை தருகயிலையை நிலைகுலைவது  செய்த தசமுகனது

கரமிருபது நெரி  தரவினி றுவிய கழலடியுடையவன்

–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை

xxx

மலையான் மகளஞ்சவ்  வரை எடுத்தவ் வலியரக்கன்

றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்

–திருவேணுபுரம்

xxx

இசைகயிலை யையெழுதரு வகையிருபது  கரமவை நிறுவிய

நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி

இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER  (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்

–திருச்  சிவபுரம்

இலங்கையில் இராவணன்  விமானம் பற்றி ஆராய்ச்சி  நடப்பதாக ஒரு நல்ல செய்தியை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. வரவேற்கத் தக்க ஆராய்ச்சி. அத்துடன் சில அசிங்கமான செய்தியும் வந்துள்ளது. இலங்கை ஒரு விண் கோளுக்கு ராவணன் பெயரை சூட்டி இருப்பதாகவும் அந்தப் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அது உண்மையானால் இலங்கை  அரசு சொல்லும் செய்தி இதுதான் : “பொம்பளைப் பொறுக்கி இராவணன் வாழ்க ; எல்லோரும் அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு வாங்க” . இது நல்லதல்ல. இதைத்தான் தமிழ் நாட்டு திராவிடங்கள் சொல்லுகின்றன. இதை இலங்கை அரசு பின்பற்றுவது ஆபத்தானது உடனே  மாற்ற வேண்டும்.

தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் ஒவ்வொரு பதிக்கத்திலும் ராவணனை தாக்குவதும் ஆழ்வார்கள், இலங்கை அரக்கனைக் கண்டித்ததும் தமிழர்கள் நன்கு  அறிந்ததே. இதற்கு நேர் எதிரானது புத்த மத வெறியர்களின் போக்கு. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய வெறியை இலங்கை இன்றும் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது

மேலும் சில விஞ்ஞான உண்மைகளை ஆராய்வோம்:

இராவணன் விமானம் விட்டானா? இது என்னடா புதுக்கதை ?

உலகில் 3000 வகை ராமாயணங்கள் உண்டு (ராமன் பற்றிய பஜனைப் பாடலில் வரும் , கீர்த்தனைகளில் வரும் புதிய செய்திகளையும் சேர்த்து). புறநானூறு, அகநானூறு, ஆழ்வார் பாடல்களில் வரும் பல செய்திகள் கம்பன், வால்மீகி ராமாயணத்தில் இல்லை!) ஆனால் ராவணன் கொடியவன், ராமன் நல்லவன் என்ற அடிப்படை விஷயங்களில் மாற்றம் இராது.

உலகில் வால்மீகி எழுதிய ராமாயணம்தான் ORIGINAL ஒரிஜினல்; கம்பனும் தனக்கு கிடைத்த மூன்று ராமாயணங்களில், வால்மீகியையே தான் பின்பற்றுவதாகவும் சொல்கிறான். வால்மீகி ராமாயணத்தில் குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை இராவணன் பறித்துக்கொண்ட செய்தியும், பின்னர் அதை விபீஷணன் ராமணனுக்கு அயோத்தி செல்ல கொடுத்ததும் தெளிவாக உள்ளது. மேலும் அது அமெரிக்க , ரஷ்ய விஞ்ஞானிகளை பிரமிக்க வைக்கும் விமானம். ஆட்கள் ஏற ஏற  விரிவடையும்; THOUGHT POWERED எண்ணத்தால் பறக்கும். ஐன்ஸ்டைன் தோற்றுப்போனார். அப்படிப்பட்ட விமானத்தை செய்தவன் இமயமலையில் வாழும் குபேரன். . இதை மறைக்கிறது இலங்கை அரசின் ராவண விண்கோள் செய்தி. !

சங்க இலக்கியத்தில் ராமன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

4 Jun 2014 — Tagged with சங்க இலக்கியத்தில் ராமன் … தமிழ் ராமாயணம் வால்மீகி, கம்பன் சொல்லாத …



பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர் …

https://tamilandvedas.com › பிரா…

13 Nov 2017 — அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் … ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

18ஆவது நூற்றாண்டில் ஏதோ சிங்களர்கள் எழுதிய சுவடியில் மயில் போன்ற வடிவில் விமானம் இருப்பதாகவும் அது பற்றி ஆராய்வதாகவும் ஒரு புதுக்கதை! அதுவும் ஒரிஜினல் அல்ல. படிக்காத மூடர்களுக்கு இதை மட்டும் காட்டினால் உண்மைகள் மறைக்கப்படும்; மறக்கவும்படும்.

அது என்ன மறக்கப்படும், மறைக்கப்படும் உண்மைகள்?

ரிக் வேதத்திலேயே மனிதர்கள் ஒளி வடிவில் பறக்கும் செய்திகள் உள்ளன. ராமாயணத்துக்குப்  பின்னர் வந்த மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனன் வெளி உலகிற்குச் சென்று வந்த செய்தி விரிவாகவே உள்ளது. எண்ணத்தின் மூலம் விமானம் பறக்க முடியும் என்ற செய்தியை உலகப் புகழ்பெற்ற நரம்பியல் பொறியியல் NEURAL ENGINEERING பத்திரிக்கை வெளியிட்டதை 2013ம் ஆண்டில் இதே பிளாக்கில் நான் வெளியிட்டுள்ளேன்.

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? – Tamil …

https://tamilandvedas.com › ராமர…

·

22 Jun 2013 — ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் …



விமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் …

https://tamilandvedas.com › விம…

·

31 Jan 2019 — ….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து … ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

How did Rama fly his Pushpaka Vimana/ Plane? – Tamil and …

https://tamilandvedas.com › 2013/06/22 › how-did-ram…

22 Jun 2013 — Ramayana wonders part -8. How did Rama fly his Pushpaka Vimana/ Plane? 1.This is the first time a flying robot has been controlled by human …

XXXX

LORD SHIVA IN PEACOCK PLANE, HOUSTON FINE ARTS MUSEUM, USA
XXXX

புத்த மதத்தினர் என்ன செய்தார்கள் ?

2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உலவி  வந்த எல்லா பஞ்ச தந்திரக் கதைகள், புராண இதிஹாஸக் கதைகளை, போதிசத்துவர் பெயரில் ஏற்றி, ஜாதகக்கதைகள் என்ற பெயரில் கொடுத்தனர். அதில் தசரத ஜாதகம், பாண்டவர் பற்றிய ஜாதக்கதைகளும் உண்டு. அதுமட்டுமல்லாமல் இந்து விக்ரகங்கள் வழிபட்ட இடங்களில் புத்தர் சிலையை வைத்து மாற்றினார்கள். இது அதிகம் நடந்ததும் இலங்கையில்தான் .

அசோகன் என்ற மாமன்னன் நல்ல எண்ணத்தின் பேரில் தனது மகன் மஹேந்திரனையும் மகள் சங்க மித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தான். ஆனால் அந்த நல்ல எண்ணம் புத்த  பிட்சுக்களின் மண்டையில் ஏறவில்லை. இன்றும் சீனாக்காரன் வாழ்க என்று சொல்லும் அளவுக்குப் போய்விட்டது!

XXX

மீண்டும் விஞ்ஞானச் செய்திக்கு வருவோம்

ராமாயண மஹாபாரத விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தால், போஜன் எழுதிய வைமானிக சாஸ்திரம் முதலியன உள்ளன. உதயணன் முதலியோர் மயில் வடிவ விமானத்தில் பறந்த செய்தி  உளது. அது சீவக சிந்தாமணியிலும்  உளது. ஆக மயில் வடிவ விமானம் என்பதும் சிங்கள ஒரிஜினல்  அல்ல. கள்ளக் காப்பி! யாரோ ஒருவர் சிங்கள மொழியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூலை வைத்து, உண்மையைத் திரித்து ,இராவணன் ஜிந்தாபாத்; பொம்பளைப் பொறுக்கி ஜிந்தாபாத்; என்று சொல்லும் இலங்கை ‘ மக்கு’-களுக்கு நல்ல புத்தி வர இராமபிரானை வேண்டுவோம் .

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை

https://tamilandvedas.com › ராவ…

24 Jun 2014 — Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் கட்டுரை …


ராவணன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ர…

· 

this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. வீணைக் கொடியுடைய வேந்தனே!

இராவணன் யார் ?

இராவணன் சிவ பக்தன் ; வீணை வாசிப்பதில் மன்னன்; உலகம் சுற்றும் வாலிபன்; அடிக்கடி கோதா வரிக் கரை க்குச் சென்று பெண்களிடம் சில்மிஷம் செய்தவன், கார்த்த வீர்ய அர்ஜுநன் என்பவானால் நை யப் புடைக்கப்பட்டவன் ; எங்கெங்கு அழகிகள் கிடைத்தார்களாளோ அவர்களை எல்லாம் கடத்திக் கொண்டு வந்தவன். அராஜகத்தின்  சின்னம்; அடக்கமின்மையின் மறு உரு ; சிவபெருமானின் கயிலை மலையை ஆட்டலாம் என்று நினைத்து முயன்று கை நசுங்கிக்  கதறியவன் ; 50 சதவிகித பிராஹ்மணன்; 50 சதவிகித அரக்கன்; அகஸ்தியருடன் வீணைப் போட்டியில் தோற்றவன். பாண்டிய மன்னனுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவன்.

இவ்வளவு செய்திகளைச் சொல்லும் தமிழ் சம்ஸ்கிருத நூல்கள், நச்சினார்க்கினியர் உரைகள் எல்லாம் சிங்கள படைப்புக்கு முன்னர் வந்தவை. வால்மீகி ஒருவர்தான் அவன் விமானம் பற்றிய செய்தியையும், குபேரனிடமிருந்து அதை அவன் பறிமுதல் செய்ததையும் தெளிவாகக் கூறுகிறார்.

ஆகவே குபேரன் வைத்திருந்த புஷ்பக விமானத்தை அவன் பறித்து வந்ததை மறைக்கக்கூடாது ; மயில் வடிவ விமானம் முன்னரே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதை மறைக்கக் கூடாது

அமெரிக்காவில் ஹூஸ்டன் நுண்கலை மியூசியத்தில் கூட சிவபிரான் மயில் வடிவ விமானத்தில் பறக்கும் ஓவியம் உளது 

எல்லாவற்றுக்கும் மேலாக இராவணனை வலியகை அரக்கன் என்று சங்க காலப் புலவர் சாடுவதை மறைக்கக் கூடாது. இராமனை 2000 ஆண்டுப் பழமை உடைய சங்க இலக்கியப்  பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய காவியங்கள்  பாராட்டுவதை மறைக்கக்கூடாது  ;  எல்லா தமிழ்ப் புலவர்களாலும் கண்டிக்கப்பட இராவணன் பெயரை விண் கோளில் இருந்து நீக்க வேண்டும். இந்தியா போல வேத, புராண இதிஹாச பெயர்களை சூட்ட வேண்டும்; தொலைந்து போகட்டும்; புத்தர் பெயரையாவது வைத்து மகிழட்டும்.

–subham–

NEWS PAPER REPORT FROM NOVEMBER 16,2021

ராவணனின் விமானம் குறித்து ஆய்வு; இந்தியாவும் இணைந்துகொள்ள இலங்கை அழைப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள், வரலாற்றாச்சியர்கள், தொல்லியலாளர்கள், அறிவியலாளர்கள், புவியியலாளர்கள் பங்கேற்ற மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. அதில், அந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான யோசனை பிறந்தது. அந்த மாநாட்டில் ராவணன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளான் என்று முடிவுக்கு வந்தனர்.

அந்த மாநாட்டுக்குப் பிறகு, இதுதொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு 5 மில்லியன் இலங்கை ரூபாயை முதற்கட்ட நிதியாக அப்போதைய அரசு ஒதுக்கியது. இதுகுறித்த பேசிய இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அதிகாரி ஷாஷி தனதுங்கே, ‘கொரோனா ஊரடங்கின் காரணமாக அந்த ஆய்வு அப்போது நிறுத்தப்பட்டது. தற்போதைய ராஜபக்ச தலைமையிலான அரசும் இந்த ஆய்வை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி இதனைத் தொடர்வதற்கு தற்போதைய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டுகள் தொடங்கும் என்று கருதுகிறேன்’ தெரிவித்தார். ஷாஷி வரலாற்றின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். ராவணன் காலத்துக்கு விமான நிலையம் குறித்து ஆய்வு செய்வதற்கு இலங்கை முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார்.


தொடர்ந்து இதுகுறித்து டனதுங்கே பேசும்போது, ‘ராவணன் புராணக் கால கதாப்பாத்திரம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். அவர் நிஜ அரசன். அவர் உண்மையில் விமானம் மற்றும் விமான நிலையம் வைத்திருந்தார். அது தற்போதைய காலத்து விமானம், விமான நிலையம் போன்றதல்ல. பழங்கால இலங்கை மக்கள் மற்றும் இந்தியர்கள் சிறப்பான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்துள்ளனர். இதுதொடர்பாக நாம் சிறப்பான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் இந்த ஆய்வில் இந்தியாவும் பங்கற்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவைத்துள்ளார். இந்த ஆய்வுக்கு ஆதரவாக ஷாஷி மட்டும் பேசவில்லை. இலங்கையின் முக்கியமான சுற்றுச்சூழல் கட்டிடக் கலைஞர் சுனிலா ஜெயவர்த்தனே எழுதிய த லைன் ஆஃப் லங்கா – தீவின் கட்டுக்கதைகள் மற்றும் நினைவுகள் என்ற புத்தகத்தில் ராவணனின் விமானச் சேவை குறித்து எழுதியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த சுனிலா, ‘தற்போதைய உலகில் ராவணனின் விமானம் என்பது கற்பனையானது. தற்போதுள்ள படித்த இளைஞர்கள் எல்லாருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் கடந்த நூற்றாண்டில் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியும். ஆனால் மேற்கத்திய நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நம் மனதில் பதிந்துள்ளது. பண்டைக் கால விமானம் குறித்த எழுத்துகள் மிகவும் விரிவானவையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உள்ளது. ஆனால், அது கட்டுக்கதை என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். அவருடைய மாமா இலங்கையின் நவீன விமானி மறைந்த ரே விஜிவர்த்தனேவும் ராவண கால விமானப் போக்குவரத்து என்ற கருதுகோளை நம்புவதாக தெரிவித்தார். சுனிலாவின் கூற்றுப்படி, தொட்டுபொலகந்தா, உசன்கோடா, வீஹீரங்கதோடா, ருமசல்லா, லகீகலா ஆகிய பகுதிகளில் விமானநிலையம் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார். ராவணன் மற்றும் அவனுடைய ஆட்சி குறித்து இலங்கையில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ராவணனை பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய பெயரில் செயற்கைக்கோளை ஏவி ராவணனுக்கு பெருமை சேர்த்துள்ளது இலங்கை அரசு.

–SUBHAM—

TAGS- ராவணன் விமானம், ஆராய்ச்சி , விண்கோள் ,இலங்கை அரக்கன், சம்பந்தர் ,கடும் தாக்கு, 

பெண்கள் வாழ்க – பகுதி-2 ; பெண் புலவர்கள் பற்றி ஆராய்ச்சி (Post No.9414)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9414

Date uploaded in London – –23 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்கள் வாழ்க – பகுதி-2 ; பெண் புலவர்கள் பற்றி ஆராய்ச்சி

சங்க கால பெண் புலவர்கள் :-

1.அவ்வையார்

2.காமக்கணி பசலையார்

3.குறமகள் குறி எயினி

4.நக்கண்ணையார்

5.நல்வெள்ளியார்

TAGS – பெண்கள் வாழ்க – 2 , பெண் புலவர்கள்,  ஆராய்ச்சி ,

இரட்டைக் குழந்தை ஆராய்ச்சி (Post No.7394)

Written by london Swaminathan

Date – 28th December 2019

Post No.7394

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

இக்கட்டுரையை நான் தினமணியில் 1992ல் எழுதினேன்.

ஆயினும் இன்றுவரை தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு  தடவையும் புதிய, சுவையான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அவைகளைத் தனியே காண்போம்.

twinsuk.ac.uk



TwinsUK – The biggest twin registry in the UK for the study of …

Twin research for a healthy future. Researching the link between our genes, the environment, and common diseases. 14,274 Twins; 76 Studies; 800+ …

Contact Us · ‎About Us · ‎Twins Zone · ‎Research Areas

  1.  

www.kcl.ac.uk › Schools › twin-research-and-genetic-epidemiology



Department of Twin Research … – King’s College London

The Department of Twin Research & Genetic Epidemiology at King’s College London.

  1.  

www.guysandstthomas.nhs.uk › research › studies › twins



Twin research – Guy’s and St Thomas’ NHS Foundation Trust

by D User – ‎2012

Our twin registry. Our registry of 12,000 adult twins is the largest in the UK. Working with the Department of Twin Research and Genetic Epidemiology at King’s …

  1.  
  2.  

en.wikipedia.org › wiki › Twin_study



Twin study – Wikipedia

Twin studies are studies conducted on identical or fraternal twins. They aim to reveal the importance of environmental and genetic influences for traits, …

History · ‎Methods · ‎Criticism

—subham—

வீணான ஒரு ஆராய்ச்சி! வேனன் கதை!(Post No.4303)

Written by London Swaminathan

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 10-40 am

 

 

Post No. 4303

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேனன் என்ற புராண புருஷன் பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது. அந்த வேனன் கதையைப் படிக்கும் போதெல்லாம் ‘வீண்’ என்ற சொல்லே இவன் பெயரில் இருந்துதான் வந்ததோ என்று எண்ணினேன்.

 

 

“ஏண்டா வீண் வம்பு பேசுகிறாய்? ஏண்டா இப்படி வீணாப் போற” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

 

பழைய ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் பார்த்த போது,

வீண்= பயனின்மை

என்று ஒரே சொல்லில் முடித்துவிட்டனர்.

 

சங்க இலக்கிய சொற்களஞ்சியத்தைப் பார்த்தபோது, வீண் என்ற சொல்லோ, வீணை என்ற சொல்லோ இல்லை!

 

திருக்குறள் சொல்லடைவைப் பார்த்தபோதும் ‘வீண்’ என்ற சொல்லே இல்லை. இதை எல்லாம் பார்தவுடன் என் ஊகம் சரிதான் என்று தோன்றியது. மேலும் ‘வீண்’ பற்றி ஆராய்ச்சி செய்தேன். கழகப் பழமொழி அகரவரிசையில் ‘வீண்’ என்ற சொல்லில் பிறந்த சில பழமொழிகள் இருந்தன. அதில் வீண் என்ற பெயர்ச் சொல்லில் பிறந்த “வீணன் (வெட்டிப்பயல், துட்டன்)” என்ற சொல்லைக் கண்டேன்.

சரிதான்! நான் ஊகித்தது நூற்றுக்கு நூறு சரியே என்று சொல்லியது போல இருந்தது “வீணன்” என்ற சொல்.

 

அதாவது, வீண் என்ற சொல் திருவள்ளுவர் காலத்திலோ, அதற்கு முந்தைய சங்க காலத்திலோ  தமிழில் இல்லை! அந்தச் சொல்

தோன்றக் காரணமான வீணன்/ வேணன் என்னும் துட்டன் பற்றிய கதை சுவையான கதை.

 

அது என்ன கதை?

விஷ்ணு புராணத்தில் வேனன் என்னும் கதை வருகிறது. வேனன் என்ற மன்னன் மிகவும் கொடியவன்; துஷ்டன். ஹிரண்யகசிபு போல எல்லா சமயச் சடங்குகளுக்கும் தடை போட்டான். ரிஷி முனிவர்களுக்குக் கோபம் வந்தது; அவனைக் கொன்றுவிட்டனர். ஆனால் அது “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கியது போல” ஆயிற்று. அரசன் இல்லாத நாட்டில் “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற காட்டு நீதி நிலவியது.

 

அதை சம்ஸ்கிருதத்தில் அ+ராஜகம்= அராஜகம்= அரசன் இல்லாத நிலை என்பர். இன்று கூட தமிழிலும் அராஜகம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்த சொல்; எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கும் சொல்!

 

அராஜக நிலையை மாற்ற ரிஷி முனிவர்கள் மஹாநாடு கூட்டினர்; சரி வேனனின் இடது கையைக் கடைந்து ஒரு அரசனை உருவாக்குவோம் என்று முயன்றனர். ஒரு கோரமான கருப்பு பூதம் வந்தது; அடச் சீ! நீ போ!! என்று விரட்டி விட்டனர். பின்னர் வேனன் சடலத்தில் வலது கையைக் கடைந்தனர். பிருது என்ற அழகிய ஆண் மகன் வந்தான். அவனை அரசனாக நியமித்தனர். ஆனால் அராஜக நிலையால் யாரும் வேலைக்குப் போகவில்லை; விவசாயம் நடக்கவில்லை; உடனே பிருது பூமியை மிரட்டினான். அது பசு வடிவம் கொண்டு பிரம்ம லோகம் வரை சென்றது; விடவில்லை பிருது; பின்னர் அந்தப் பூமி சொன்னது:

“இதோ பார்; இந்துக்கள் பெண் கொலை, பிராமணக் கொலை இரண்டும் செய்ய மாட்டார்கள்; நானே பசுவாகப் பாலைப் பொழிகிறேன்” என்று பாலைப் பொழிந்தது. இந்தப் பூமி முழுதும் வளம் கொழித்தது; பயிர்கள் செழித்தன. அன்று முதல் பூமிக்குப் ‘பிருத்வீ’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

 

இந்தக் கதை அருமையான தத்துவம், சங்கேத மொழி (CODED LANGUAGE, SYMBOLIC) நிறைந்த சிம்பாலிக் கதை!

 

அதாவது ராஜா இல்லாவிடில் — நல்ல ஆட்சியாளர் இல்லாவிடில் — அ ராஜகம் தாண்டவம் ஆடும்; மக்கள் ஸ்டிரைக் செய்வர்; பயிர்கள் விளையாது; பஞ்சம் ஏற்படும் அவனே கடுமையான விதிகளைப் பின்பற்றி அராஜகப் பேர்வழிகளை ஒடுக்கி நல்லாட்சி செய்தால் பூமி பாலாய்ச் சொறியும்; அதாவது மக்கள் வேலை செய்வர்; பலன் கிடைக்கும். அருமையான சிம்பாலிக் ஸ்டோரி Symbolic Story!

 

இந்து மதத்தில் புராணங்களில் இப்படித்தான் அடையாள பூர்வ, சங்கேத மொழியில், மறை மொழியில் கதைகள் இருக்கும்; வேதங்களில், பிராமணங்கள் என்னும் நூலில் எல்லாக் கதைகளும் சங்கேத மொழிக் கதைகள்தாம்; அவைகளைப் புரிந்து கொள்ள முடியாத வெள்ளைத்தோல் வெளிநாட்டாரும், மார்கஸீய வாந்திகளும், ஆங்கிலம் மட்டுமே படித்த அரை வேக்காட்டு அறிவிலிகளும் இந்து மதத்தை எள்ளி நகை ஆடினர்.

“வீண்” என்ற சொல்லைக் கொடுத்ததே வேனன் கதைதான்!!

வேனன்= வீணன்= வீண்

 

இதனால்தான் சங்க காலத்தில் இல்லாத இச் சொல், வள்ளுவர் பயன்படுத்தாத இச் சொல் பிற்காலத்தில் தமிழில் வந்தது என்பது எனது ஊகம்; புதிய சான்று– எதிர்ச் சன்றுகள் இல்லாதவரை- எனது ஊகம் சரியே!

 

அகத்தியர் விந்திய மலையை கர்வபங்கம் செய்தது, கடலைக் குடித்தது, பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டது, பகீரதன் ஊசிமுனையில் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்தது, காக்கை கவிழ்த்த கமண்டலம் மூலம் அகத்தியர் காவிரியை உருவாக்கியது — முதலியன எல்லாம் பிரமாண்டமான பொறியியல்- எஞ்ஜினீயரிங் அதிசயங்கள் (Engineering Marvels) , பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம்! ஒலி அலைகளையும் தண்ணீரையும் பயன்படுத்தி பிரம்மாண்டமான சக்தியை உருவாக்கலாம், மனோவேகத்தில் சென்று பல வெளி உலகங்களை அடையலாம்; ஐன்ஸ்டைனின் கொள்கையை மாற்றலாம் – என்று நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளையும் படிக்கவும்.

TAGS:— வேனன் கதை, வீண், விஷ்ணு புராணம், ஆராய்ச்சி

-சுபம்-

மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி! (Post No.4002)

Written by S NAGARAJAN

 

Date: 15 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.4002

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 26-5-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

 

by ச.நாகராஜன்

 

 

கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

 

 

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

 

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

 

 

இவற்றை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி இந்த மூளைக்குச் சொந்தக்காரர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிரது.

2017, ஜூன் மாதம் துவங்கி மூன்று ஆண்டு காலம் 15 லட்சம் யூரோ (ஒரு யூரோ என்பது சுமார் 70 ரூபாய்) செலவில் இந்த பிரம்மாண்டமான ஆய்வு தொடங்க உள்ளது

இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

 

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

 

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 

 

இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 

மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் ப்ரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

 

 

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 

1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 

எழுபது ஆண்டுகள் கழித்து செய்யப்பட இருக்கும் இந்த மூளை ஆராய்ச்சி மிக பிரம்மாண்டமானது.

 

இதில், கொல்லப்பட்டோரை அடையாளம் கண்டு பிடித்து அவர்கள் பெயருடன் உரிய விதத்தில் அந்த மூளைகளைப் புதைப்பதும் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்புவதும் இந்த ஆய்வின் முடிவில் செய்யப்படும்.

 

எதிர்காலத்தில் யாரும் இப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை விஞ்ஞானத்தின் பெயரால் செய்யக்கூடாது என்பதற்கும் வரலாற்றை முறைப்படுத்துவதற்குமான ஒரு ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது.

 

உலகம் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வந்து விட்டது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மர்யா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Sklodowska)  என்ற இயற் பெயருடைய பெண்மணி தான் பின்னால் நோப பரிசு பெற்று பிரபலமான விஞ்ஞானி மேடம் க்யூரி (1867-1934) ஆவார். இளமையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பின்னால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்.

 

 

சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம் செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.

 

படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன முட்டாள்தனமான் காரியம் செய்திருக்கிறாய் என்பது தான் அவரது ஒரே கமெண்ட்..

 

மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் 1891இல் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பாரிஸில் தான் தன் எதிர்காலக் கணவரான பால் அபெல்லை (Paul Appelll) அவர் சந்தித்தார். தனது பரிசாக அவர் இளம் பெண்மணியான கியூரிக்கு அவர் தந்தது எலக்ட்ரோ மாக்னெடிஸம் பற்றிய ஒரு கட்டுரை தான்!

 

க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை. லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்ப்ட்ட டேவி மெடலை தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள் விளையாடுவதற்காகத் தந்தனர். (ஐரீன் பின்னால் தன் கணவருடன் இணைந்து ஒரு நோபல் பரிசைப் பெற்றவர்). அதை ஐரீன் பிக் கோல்ட் பென்னி – பெரிய தஙகத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.

1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம் கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க விருப்பமா என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க விரும்பவில்லை.

 

தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த இந்த மேதை.

****

 

 

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி (Post No 2563)

la-parapsicologa-y-sus-pr

Written by S Nagarajan

 

Date: 22  February 2016

 

Post No. 2563

 

Time uploaded in London :–  8-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

19-2-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

.நாகராஜன்

 

 

hans-bender-2

சந்தேகப் பேர்வழிகள் ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கவில்லையே அதனால் தான்!

                                 – ஜேஸன் ஹாஸ்

சாதாரணமாக இயற்பியல், இரசாயனம்,உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்திய விஞ்ஞானிகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஆனால் பேய்கள், ஆவிகள் உலகம் போன்றவற்றை ஆராயும் விஞ்ஞானிகளுக்கு விளம்ப்ரமும் கிடைக்காது, பரிசுகளும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை. என்றாலும் பல விஞ்ஞானிகள் தங்கள் ஆர்வம் காரண்மாக இப்படிப்பட்டவற்றை ஆராய்வது உண்டு.

 

அப்படிப்பட்டவர்களுள் பேயை முறைப்படி ஆராய்ந்து ஏராளமான ஆவணங்களை உருவாக்கிய ஒரே விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுபவர் ஹான்ஸ் பெண்டர் (Hans Bender) என்ற  ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 5-2-1907 மறைவு 7-5-1991). ஜோதிடத்திலும் இவருக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. அவரது நண்பரான தாமஸ் ரிங்குடன் ஜோதிடம் கேட்காமல் இவர் எந்த விஞ்ஞான மற்றும் சொந்தக் காரியங்களில் ஈடுபடுவதில்லை.

 

இவர் ஆராய்ந்த பேய் கேஸ்களில் உலகப் புகழ் பெற்ற ஒரு கேஸுக்கு ரோஸென்ஹெய்ம் கேஸ் என்று பெயர்.

 

 

பவேரியாவின் தெற்குப் பகுதியில் ரோஸென்ஹெய்ம் என்ற நகரில் சிக்மண்ட் ஆடம் என்ற ஒரு வக்கீல் வாழ்ந்து வந்தார். அவர் அலுவலகத்தில் 1967ஆம் ஆண்டு திடீரென்று அமானுஷ்யமான பல காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.

அரண்டு போன அவர் விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டரை நாடினார்.

 

அலுவலகம் வந்த பெண்டர் என்ன நடக்கிறது என்று கேட்டார். அந்த அலுவலகத்தில் நான்கு போன்கள் உண்டு. திடீர் திடீரென போன் அழைப்புகள் ஒலிக்கும். ஆனால் போனை எடுத்தால் மறுமுனையில் பதிலே வராது.  போனில் ஏதோ பழுது இருக்கிறதென்று நினைத்து ஆடம் எல்லா போன்களையும் புதிதாக மாற்றினார். ஆனால் மர்மமான போன் அழைப்புகள் தொடர்ந்தன. உடனே டெலிபோன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்த எஞ்ஜினியர்கள் வந்து எல்லா வயர்களையும் ஆராய்ந்து அனைத்தும் சரியாகவே இருக்கின்றன என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

 

ஜெர்மனியில் 0119 என்ற நம்பர் அனைத்து அழைப்புகளையும் துல்லியமாகக் குறித்து எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும், இதை டாக்கிங் க்ளாக் (TALING CLOCK)  என்று அழைப்பர்.

 

இந்த பேச்சைக் குறிக்கும் கடிகாரத்தின் படி ஆடம்ஸுக்கு பில் அனுப்பப்பட்டது. அவர் அரண்டு போனார். அதாவது ஒரு நிமிடத்திற்கு அவர் 6 ‘கால்’களைப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது! யாராலும் செய்ய முடியாத ஒரு அரிய காரியம் இது! ஒரு எண்ணை டயல் செய்து அடுத்தவர் மறுமுனையில் எடுக்கும் காலத்தைச் சற்று கவனித்தாலே நிமிடத்திற்கு ஆறு கால்களை யாராலும் பேச முடியாது.

1967 அக்டோபரில் கட்டிடத்தில் உள்ள பல்புகளும் பல்புகள் பொருத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகளும் ஆட ஆரம்பித்தன. திடீரென 90 டிகிரிகள் அவை திரும்பும்!

 

உடனே மீண்டும் மின் இணைப்பு சரி பார்க்கப்பட்டது. ஒரு வோல்டேஜ் மீட்டரும் புதிதாக பொருத்தப்பட்டது. பெரிய அளவிலான வோல்டேஜ் மாறுதல்கள் ப்யூஸை போக்கி விடும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை!  அங்கிருந்த போட்டோகாப்பி மெஷினிலிருந்து மின்சாரம் கசிய ஆரம்பிக்கவே மின் இணைப்பையே துண்டித்து விட்டு ஜெனரேட்டர் மூலமாக மின் சக்தி பெறப்பட்டது. ஆனால் அப்போதும் இவை தொடர்ந்தன.

 

அனைத்தும் விசித்திரமாக இருந்தன. இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெண்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவை நிகழ்வதை அவரது குறிப்பேடுகள் சுட்டிக் காட்டின.  தற்செயல் ஒற்றுமை போல ஆன்னி மேரி என்ற இளம் பெண் அங்கிருக்கும் போது மட்டுமே இவை நிகழ்ந்தன.

 

அவள் உள்ளே வந்தவுடன் இந்த அமானுஷ்ய செயல்கள் ஆரம்பிக்கும். அவள் சென்ற பின்னர் இவையும் நின்று விடும். ஆன்னியை விசாரிக்க ஆரம்பித்தார் பெண்டர். அவள் ஒரு உணர்ச்சிகரமான பெண் என்பதையும் தனது எஜமானனைக் கண்டால் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதையும் அறிந்தார் பெண்டர்.

 

1967 டிசம்பர் மற்றும் 1968 ஜனவரியில் இந்த அமானுஷ்ய செயல்கள் தீவிரமாக அதிகரித்தன. சுவரில் தொங்கும் காலண்டரின் பக்கங்கள் தாமாக டர்ரென்று கிழிந்து விழுந்தன! சுவரிலே தொங்கும் வண்ண ஓவியங்கள் தாமாகவே திரும்பிக் கொண்டன. 400 பவுண்டு எடையுள்ள ஓக் மரத்திலான ஒரு அலமாரி – சாதாரணமாக யாராலும் அசைக்கக் கூட முடியாதது –  சில அடிகள் தானாகவே நகர்ந்தது. ஆனால் கீழே பொருத்தப்பட்டிருந்த லினோலியம் சேதமடையாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது. மேஜை டிராயர்கள் தாமாகவே திறந்து கொண்டன. பின்னர் டப்பென்று சத்தத்துடன் மூடிக் கொண்டன!

 

இதெயெல்லாம் படமாகவும் பிடித்தார் பெண்டர். அன்னி மேரி அந்த வேலையிலிருந்து நின்றவுடன் அனைத்து அமானுஷ்ய செயல்களும் நின்றன!

 

தான் சேகரித்த ஏராளமான ஆவணங்கள் மூலமாக இந்த அமானுஷ்ய செயல்கள் அனைத்தும் மர்மமான ஒரு ஆவியின் வேலை தான் என்று பெண்டர் கூறினார்.  அன்னி மேரியின் வெறுப்பும் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் அவர் இருக்கும் போது அவர் மூலமாக இந்த சக்திகள் தூண்டப்பட்டன என்றும் அவர் கூறினார்.

 

இந்த கேஸைப் போல அறிவியல் ரீதியிலான ஆவணங்களுடன் கூடிய கேஸ் வேறொன்றும் இல்லை என்ற புகழுடன் படமாக பிடிக்கப்பட்ட கேஸும் இது தான் என்பதும் ஹான்ஸ் பெண்டருக்கு புகழை அள்ளித் தந்தது. 84 வயது வரை வாழ்ந்த பெண்டர் தன் வாழ்நாள் இறுதி வரை இந்த பேய் ஆராய்ச்சியை விடவில்லை!

IMG_3431

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

ஆங்கிலேய பிரபுக்கள் பலர் கூடியிருந்த கூட்டம் ஒன்றில் ஒரு விஷயத்தின் மீது அலர்ஜியாக கடும் வெறுப்பைக் கொண்டிருக்க முடியுமா என்பதைப் பற்றிய பேச்சு வந்தது. இயற்பில விஞ்ஞானியான ஜிம்மர்மேன் (Zimmermann)  அப்படி இருப்பது ஒரு வகையான வியாதி என்று கூறினார். அங்கிருந்த பார்படோஸ் என்ற நகரின் கவர்னரின் மகனான வில்லியம் மாத்யூஸ் அப்படிப்பட்ட ஒரு வியாதி கொண்டிருப்பவர். அவருக்கு சிலந்தி என்றாலே அலர்ஜி. ஜிம்மர்மேன் அதைச் சுட்டிக் காட்டிய போது அனைவரும் சிரித்தனர. அதெல்லாம் ஒரு வியாதியே கிடையாது என்றனர். உடனே அதை நிரூபித்துக் காட்ட விஞ்ஞானி விழைந்தார். மனதில் எழும் இந்த வெறுப்பை ஒரு இயந்திர விளைவால் நிரூபிக்க முடியும் என்பது அவர் முடிவு.

அங்கிருந்தவர்களில் ஒருவரான லார்ட் ஜான் மர்ரே என்பவரை கறுப்பு நிற மெழுகில் ஒரு சிலந்தியைச் செய்யச் செய்தார். அந்தச் சிலந்தியை அனைவரும் பார்க்கும் படி செய்து விட்டு அவர் வெளியே சென்றார்.

 

பின்னர் திரும்பி வருகையில் தன் கையில் மெழுகிலான சிலந்தியை வைத்துக் கொண்டு கையை மூடியவாறே உள்ளே நுழைந்தார்.

 

அவரது மூடிய கையைப் பார்த்தவுடன் வில்லியம் மாத்யூஸின் கண்கள் சிவந்தன. நரம்புகள் புடைத்தன. மிகுந்த கோபத்துடன் ஆவேசமாக தன் இடையிலிருந்த கத்தியை உருவினார். அந்த சிலந்தியை அவர் கொண்டு வருவதாக எண்ணிய மாத்யூஸ்  மர்ரே மீது பாயப் போனார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அனைவரும் அவர் மீது பாய்ந்து கத்தியைப் பிடுங்கினர்.

 

மாத்யூஸிடம் அவர் பார்த்தது மெழுகிலான ஒரு பொம்மை சிலந்தி தான் என்பதையும் மேஜை மீது வைக்கப்பட்ட சிலந்தியை அவரே தொட்டுப் பார்க்கலாம் என்றும் அனைவரும் கூறினர்.

வேகமாகத் துடித்த அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீரானது. சுயநிலைக்கு அவர் மெதுவாகத் திரும்பினார். ஆனால் சிலந்தியைத் தொட மறுத்து விட்டார்.சிலர் இன்னும் கொஞ்சம் மெழுகை எடுத்து அவர் முன்னாலேயே சிலந்தியைச் செய்து காட்டினர்.

 

இது போல அவரும் பொம்மையினால் சிலந்தியைச் சிறிது சிறிதாச் செய்து பார்த்து பின்னர் நிஜ சிலந்தியைப் பார்த்தால் அவரது அருவருப்பு போய் விடும் என்று ஜிம்மர்மேன் ஆலோசனை கூறினார்.

நமது ஊரில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அருவறுப்பு அடையாத பெண்கள் உண்டா என்ன?

******

 

 

 

ஷீனா ஐயங்காரின் JAM STUDY ஜாம் ஸ்டடி!

 sheena 1

Sheena Iyengar with her husband Garud

டைரக்டர் பாக்யராஜை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழான பாக்யாவில் அறிவியல் துளிகள் தொடர் கடந்த நாலரை ஆண்டுகளாக வெளி வருகிறது. அதில் 23-10-2015 தேதியிட்ட இதழில் வெளி வந்த 244வது அத்தியாயம்.

ஷீனா ஐயங்காரின் JAM STUDY  ஜாம் ஸ்டடி!

 

Written by S NAGARAJAN

Post No.2266

Date: 23 October 2015

Time uploaded in London:10-11 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

தேர்ந்தெடுக்க நிறைய சாய்ஸ் இருந்தாலே குழப்பம் தான்! அது முடிவெடுப்பதை முடக்கி விடும். மகிழ்ச்சியைப் போக்கி விடும்”.   

                                 –      உளவியல் மேதை பேரி ஷ்வார்ட்ஸ்

 jam

உளவியல் துறையில் இன்று பிரசித்தி பெற்று இருப்பவர் ஷீனா ஐயங்கார் என்ற இந்தியப் பெண்மணி. ஷீனா பஞ்சாபியப் பெண். சீக்கியர். கனடாவில் அவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். அவர் ஒரு ஐயங்காரை மணந்த பின்னர் ஷீனா ஐயங்கார் ஆகி விட்டார். அவரைப் பற்றிய வருத்தகரமான ஒரு செய்தி அவர் கண்பார்வை இல்லாதவர். சிறு வயதிலேயே விழித்திரையில் ஏற்பட்ட கோளாறால் அவரால் எதையும் பார்க்க முடியாது. ஆனால் படிப்பில் எல்லோரையும் அசத்தி விட்டார். இன்று கொலம்பிய பிஸினஸ் ஸ்கூலில் வணிகத் துறையில் பேராசிரியர். உளவியல் வேறு அவருக்கு அத்துபடி என்பதால் அந்தத் துறையையும் அவர் கவனித்துக் கொள்கிறார். ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஃபார்சூன், டைம் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் இவர் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவார். இவரது புத்தகமான ‘தி ஆர்ட் ஆஃப் சூஸிங்; விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

சீக்கியப் பெண்மணியான இவர் தனது ஆராய்ச்சிக்காக பல்வேறு மதங்களில் சம்பிரதாயமான பிரிவுகளி உள்ள கடும் ஆசாரத்தைப் பின்பற்றுவோர் மன விரக்தி அடையாமல் இருக்கின்றனரா அல்லது சற்று தாராளமான கொள்கைகளைக் கொண்டோர் மனவிரக்தி அடையாமல் இருக்கின்றனரா என அறிவியல் ரீதியாக ஆராய ஆரம்பித்தார். ஆய்வின் முடிவு இவருக்கே வியப்பைத் தந்தது.

சம்பிரதாயமான குடும்பங்களில் ஆசாரமாக வாழ்பவர்களே சந்தோஷமாக வாழ்க்கையை அணுக முடிகிறது என்பதை இவர் உறுதி செய்தார். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு சரியான கட்டுப்பாடும், தேர்ந்தெடுக்க சில விருப்பத் தேர்வுகளே இருப்பதும் இதன் காரணிகளாக அமைகின்றன.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் ஒவ்வொருவரும் இருப்பதால் அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக ஆகிறது.

இவரது ஜாம் ஸ்டடி (Jam Study) என்ற சுவையான ஆய்வு ஒன்று இவரைப் புகழேணியில் ஏற்றி வைத்தது.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி மாணவியாக அவர் இருந்த போது அங்குள்ள மளிகைக் கடை ஒன்றுக்கு அடிக்கடி செல்வது அவரது வழக்கம். பிரம்மாண்டமான அந்த ஸ்டோரின் பெயர் டையாஜெர். அங்கு கடுகு மற்றும் சுவைச்சாறுகளில் மட்டும் 250 வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்குமாம். கறிகாய்கள், பழங்களிலோ 500 வகைகள் உண்டு. எதை வாங்குவது என்று தெரியாமல் அனைவரும் மலைத்துப் போவார்கள். ஏராளமாகக் குவிந்திருக்கும் காய்கறி, பழ வகைகளைப் பார்த்ததும் பரவசம் அடைவர் அனைவரும்.

ஒரு நாள் கடையின் மானேஜரைப் பார்த்த ஷீனா, “உங்கள் கடையில் எதை வாங்குவது என்று தெரியாமல் எல்லோரும் முழிக்கிறார்களே!” என்றார்.

இதைக் கேட்டு வியப்படைந்த மானேஜர், பஸ்களில் கூட்டம் கூட்டமாக அல்லவா மக்கள் இங்கு வருகிறார்கள், விற்பனை அமோகம் எனக்கு, என்று கூறினார். ஷீனாவோ மக்கள் வாங்குவதில் சிரமப்படுகிறார்களே என்றார்.

ஒரு சின்ன ஆய்வுக்கு மானேஜர் சம்மதித்தார். சோதனை அறை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் ஆறு விதமான சுவையுடைய ஜாம்கள் வைக்கப்பட்டன. இன்னொரு முறை 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்டன. 24 வகையான ஜாம் வைக்கப்பட்டபோது 60 சதவிகிதம் பேர் அந்த அறைக்கு வந்தனர். 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 40 சதவிகிதம் பேரே அங்கு வந்தனர்.

ஆனால் விற்பனை என்று எடுத்துக் கொண்டால் விளைவு நேர் எதிர்மாறாக இருந்தது. 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 30 சதவிகிதம் பேர் அவற்றை வாங்கினர். ஆனால் 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்ட போதோ வாங்கியவர்கள் 3 சதவிகிதம் பேர்களே!

18home-3-popup

Dr Iyengar with her son Ishan

இதையொட்டிய ஷீனா ஐயங்காரின் கண்டுபிடிப்பு வணிக விற்பனையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது. இந்த பிரபலமான ஆய்வு ஜாம் ஸ்டடி என்று அழைக்கப்பட்டது. சிலர் இதை ஜாம் ப்ராப்ளம் என்றும் கூறுவர்.

இதைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்றவர்கள் தங்கள் பணத்தை எப்படி கையாள விரும்புகின்றனர் என்பதில் அவர் பார்வை திரும்பியது. நிறைய விருப்பத்தேர்வுகள் இருக்கும் போது அவர்கள் திணறுகின்றனர்.

இது வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் ஏன் திருமணத்தில் பார்ட்னரைத் தேர்ந்தெடுப்பது வரை அனைத்திலும் பிரதிபலிக்கிறது.

செஸ் விளையாட்டில் ஒரு காயை நகர்த்த விரும்புவோருக்கு ஏராளமான விதங்கள் இருந்தாலும் தேவைக்கேற்ப அந்த சூழ்நிலையில் தேவையற்ற ‘மூவ்’களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பார்.

அதே போல எண்ணற்ற விருப்பத் தேர்வுகள் இருந்தாலும் நமது நோக்கம் என்ன என்பதை மனதில் உறுதி செய்து கொண்டால் தேர்ந்தெடுப்பது சுலபமாகும் என்கிறார் ஷீனா ஐயங்கார். அமெரிக்க வாழ்க்கை முறையில் சுதந்திரமும் தாராளமும் அதிகம். ஆகவே அங்கு சரியான நோக்கம் கொண்டவர்கள் ஜெயிப்பார்கள். அது இல்லாமல் இருப்பவர்கள் விரக்தி அடைவர்.

வாழ்க்கையில் அணுகுமுறை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. உலகின் பிரபல உளவியல் நிபுணரான ரொபர்டோ அஸாகியோலி சர்வாதிகாரி முஸோலினியால் சிறையில் தள்ளப்பட்டார். அவர் சிறைவாசத்தை சித்திரவதையாகவே எண்ணவில்லை. மாறாக தனித்து தியானம் செய்ய அருமையான இடம் என்று சொல்லியவாறே சிறைக்குள் சென்றார்.பின்னால் சைக்கோசிந்தஸிஸ் என்ற முறைக்கான பள்ளியையே அவர் ஸ்தாபித்தார்.

ஆகவே ஒரு நிலையை எப்படி நாம் மனதளவில் ‘ஃப்ரேம்’ செய்து கொள்கிறோம் என்பது முக்கியம் என்கிறார் ஷீனா. தினமும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விருப்பத்தேர்வுகள் நம் முன் வருகின்றன. நமது இலட்சியத்திற்கு அவை உதவுமா என்ற அணுகுமுறையுடன் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மொத்த வாழ்க்கைக்கும் உதவிகரமாக அமையும் என்கிறார் அவர்.

தான் பார்வையற்று இருந்தாலும், மற்றவர்களின் பார்வையைச் செம்மையாக்க உதவும் ஷீனா ஐயங்காரை வணிக விற்பன்னர்கள், பொருளாதார மேதைகள், ஊடகங்கள் மட்டும் மதிக்கவில்லை; சாமான்ய மக்கள் பெரிதாக மதிக்கின்றனர். எல்லாம் ஜாம் ஸ்டடியினால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?

gustavus3

அறிவியல் அறிஞர் வாழ்வில்

ஸ்வீடன் நாட்டின் அரசரான மூன்றாம் குஸ்டாவஸ் (Gustavus III) பாரிஸுக்கு ஒரு முறை விஜயம் செய்தார். அங்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எல்லோரும் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அப்போது அவர்கள் மன்னரைப் பார்த்து மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீலே (Scheele) அவர் நாட்டைச் சேர்ந்த அவரது குடிமகன் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் இப்படிப்பட்ட சிறந்த விஞ்ஞானியைக் கொண்டுள்ள மன்னரைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

மன்னருக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது. விஞ்ஞானத்தை வளர்க்கத் தான் ஒன்றுமே செய்யவில்லையே, ஷீலே என்பது யார் என்றே தெரியவில்லையே என்று அவர் வேதனைப்பட்டார்.

உடனே தூதுவன் மூலமாக ஒரு அவசரச் செய்தியை தனது நாட்டின் பிரதம மந்திரிக்கு அனுப்பினார்: “உடனடியாக ஷீலேக்கு கவுண்ட் (Count)) அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கவும்.”

பிரதம மந்திரிக்குச் செய்தி கிடைத்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இந்த ஷீலே என்று. ஆனாலும் மன்னரின் ஆணையை நிறைவேற்ற அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். ஷீலேயைக் கண்டுபிடிக்கவும் என்று.

மந்திரிசபையின் செக்ரட்டரி – செயலாளர்- அவசரப் பணியை மேற்கொண்டார். பின்னர், முழுத்தகவலுடன் மந்திரி சபைக்கு வந்தார். “ஷீலே ஒரு நல்ல ஆள். அவர் ராணுவத்தில் லெப்டினண்டாக இருக்கிறார். பில்லியர்ட்ஸ் விளையாடுவதில் நிபுணர்”

மறுநாள் லெப்டினண்ட் ஷீலே, கவுண்ட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லெப்டினண்ட் ஷீலேயோ தனக்கு திடீரென்று கிடைத்த இந்த புதிய அந்தஸ்தைக் கண்டு பிரமித்து அதற்குக் காரணம் புரியாமல் விழித்தார்.

உண்மையான விஞ்ஞானி ஷீலேயைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவரைப் பற்றி யாருக்குமே தெரியவும் இல்லை!

அரசர்கள் இட்ட ஆணை சரியாக நிறைவேறுவது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பொறுத்தது. அன்றிலிருந்து இன்று வரை இது தான் உண்மை!

*********** நன்றி : பாக்யா

(Written by my brother S Nagarajan for Bhagya magazine;swami)

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

Kanna_01

Compiled by S NAGARAJAN

Article No.1900; Dated 31 May 2015.

Uploaded at London time: 6-52 am 

                                                  

இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 3

By ச.நாகராஜன்

சாவுக்குப் பயப்படவில்லைகவிஞர்!

பொன்னுடன் பிறந்தேன்பகுதியில், ‘சாவை மகிழ்ச்சியோடு வரவேற்கும் என்னை விட்டு, சாகவே விரும்பாத அவரைக் கொண்டு போய் விட்டார்எனக் கூறும் தாங்கள், ‘ஶ்ரீ கிருஷ்ணகாந்தன் பாமாலைப்பகுதியில்,

கனிவுடைய வயதிலொரு எழுபது கொடுத்தென்னைக் காத்தருள் கிருஷ்ண காந்தாஎன்றும்,

பதி நினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம் பார்த்தருள் கிருஷ்ண காந்தாஎன்றும்,

 

விவரமறியாத எனை பல வயது வாழ விடு விமலனே கிருஷ்ணகாந்தா

என்றும், முரண்பாடாகக் கூறி இருப்பது ஏன்?

இப்படி உரிமையோடு கேள்வியைக் கேட்ட அன்பரின் பெயர் இர.இலாபம் சிவசாமி.

புங்கம்பட்டியைச் சேர்ந்தவர்.

 

அதற்கு கண்ணதாசன் ஜனவரி 1978 இதழில் கவிஞர் இப்படி பதில் அளிக்கிறார்:-

 

நான் வயது கேட்கிறேன். ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். ஆனால் மரணம் வந்து விடுமோ என்று அஞ்சுவதில்லை. நான் இறந்துவிட நேர்ந்து விடும் என்று தோன்றும் போது, மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகி விடுவேன். சுருங்கச் சொன்னால் ஆரோக்கியமாக நடமாட விரும்புகிறேன்; சாவுக்குப் பயப்படவில்லை.

 

நான் நிரந்தரமானவன். எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!

தனது வாக்குமூலமாக அவர் படைத்த ஒரு பாடலில்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                            

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                      

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு   

                                                                   

காவியத் தாயின் இளைய மகன்                                                          

காதல் பெண்களின் பெருந்தலைவன்நான்

காவியத் தாயின் இளைய மகன்                                                          

காதல் பெண்களின் பெருந்தலைவன்

பாமர ஜாதியில் தனி மனிதன்நான்                                             

படைப்பதனால் என் பேர் இறைவன்

 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                            

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                       

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்அவர்                                   

மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்நான்

 

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்அவர்                                   

மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்நான்                                  

நிரந்தரமானவன் அழிவதில்லைஎந்த                                              

நிலையிலும் எனக்கு மரணமில்லை

 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                             

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                      

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                   

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                        

 

நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎன்று முத்தாய்ப்பாகக் கூறிய கவியரசர் இசைப்பாடலில் தன் உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்து விட்டார்.

 

ஆக கண்ணதாசனின் பாடல்கள் இருக்கும் வரை, எங்கேனும் ஓரிடத்தில் ஒலிக்கும் வரை அந்த உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தான் அர்த்தம். அந்தப் பாடல் ஒலிக்கும் வரையில் அவர் நிரந்தரமானவர்.

அந்த நிலையினில்அவருக்கு மரணமில்லை! ரத்த திலகத்தில் திலகமான பாடலைத் தானே பாடினார் கவியரசர்.

 

 அவரே பாடியுள்ள அந்தக் காட்சியில்எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎன்ற வரியைப் பாடும் போது மட்டும் அவர் இமைகளை மூடிக் கொண்டு கைகளை ஆட்டுவதைப் பார்க்கலாம்!

கண்களை மூடினாலும்காலமெல்லாம் ஜீவித்திருப்பதைசிம்பாலிக்காகஉணர்த்தி விட்டாரோ, என்னவோ!

 kanna4

கண்ணனருள் கை கூட கண்ணதாசனின் பாடல்கள்!

நீண்ட ஆயுளைக் கேட்டவர்; அதில் ஆரோக்கியமான வாழ்வைக் கேட்டவர்; அதில் பரமனின் புகழையும் தெள்ளு தமிழ்க் காவியங்களையும் பாட ஆசைப்பட்டவர். இதற்குஆகாத தொடர்பையெல்லாம் அறுக்கஇறைவனை வேண்டியவர் என்ற அளவில் பலப்பல பாடல்களைப் பாடியவர் கண்ணனின் லீலைகளைத் தான் பாடியதைக் கற்றோர்க்கு கண்ணன் அருள் கை கூடும் என்கிறார்:-

 

வடமொழியின் கீதத்தைத் தமிழினிலே வரைகின்றேன்                                   

கீத கோவிந்தமிதைக் கிருஷ்ணனது லீலைகளை                                      

நாதமொழி விளையாடும் நல்ல மணிப் பாடல்களை                             

சொல்லோடு பொருளழகு தோய்ந்து வரும் கவிதைகளை                            

கற்றோர்க்கும் மற்றோர்க்கும் கண்ணனருள் கைகூடும்!”

என்று அவரது கூற்று உண்மையே என்பதைகோபியர் கொஞ்சும் ரமணன்’ (ஜெயதேவரின் ரஸலீலா) என்ற அவரது காப்பியம் படிப்போர்க்குப் புலனாகும்.

 saraswathy ramanathan

டாக்டர் சரஸ்வதி ராமநாதன், கவிஞர் கண்ணதாசன் படல்கள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.(நாங்களாண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மதுரை தினமணி அலுவலகத்தில் நடத்திய மாபெரும் பட்டி மன்றங்களில் கலந்துகொண்டு எங்களை மகிழ்வித்தவர்)

இலக்கியப் பணிஒரு கண்ணோட்டம்

கண்ணதாசனின் இலக்கியப் பணியை

  • அரசியல் சார்ந்த பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் (இதில் பெரும்பாலானவை அபத்தமானவை என்று அவரே பின்னால் கூறி விட்டார்)
  • திரை இசைப் பாடல்கள்
  • கதைகள் மற்றும் நாவல்கள்பொது
  • கட்டுரைகள்பொது
  • ஆன்மீக இலக்கியம் (அர்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்டவை)
  • காப்பியங்கள்
  • சுய சரித்திரம் (இது மிக முக்கியமானதுஏனெனில் இதில் சமகால அரசியல் அடங்கி இருக்கிறது)
  • திரைக் கதை வசனம்
  • மேடைப் பேச்சுக்கள் மற்றும் கேள்விபதில்கள்
  • பொதுவான கவிதைகள்
  • பத்திரிகை மற்றும் அரசியல் அறிவிப்புகள் உள்ளிட்ட இதர எழுத்துக்களும் மொழி பெயர்ப்புகளும்

என்ற பல பெரும் பிரிவுகளில் பிரிக்கலாம்.

எப்படிப் பிரித்தாலும். இவற்றில் எதைப் படித்தாலும் அன்றாட நிர்வாக ரீதியில் அவர் எழுதியவை மற்றும் அரசியல் சார்ந்த தவறான கொள்கையின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகள் ஆகியவற்றைத் தவிர இதர இலக்கியப் பணியில் அவரது பணி மகத்தானது என்பதை உரத்த குரலில் ஓங்கிக் கூறலாம்.

Kannadasan_stamp

தனித் தனியே ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்தால் இந்த உண்மை தெரியவரும்.

ஈர்ப்புள்ள அன்பர்கள் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகலாம்; இறுதியில் கண்ணனைச் சேரலாம்!

  • தொடரின் இப்பகுதி முற்றும்

தாவரங்களின் அறிவு!

ச.நாகராஜன்

 

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

 

தாவரங்களுக்கான ‘ப்ளாண்ட் நியூரோ பயாலஜி’ எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

 

“பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு” என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால்  தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

 

“மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது,எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன” என்று மேலும் அவர் கூறுகிறார்!

 

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

 

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர்.அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

 

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம்.தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ‘ப்ளாண்டாய்ட்’ தான்  செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை  செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.

 

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது.ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

 

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

 

‘தி சீக்ரட் லைப் ஆ·ப் ப்ளாண்ட்ஸ்’ என்ற திரைப்படம்  ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது.தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும்  உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் ‘அறிவுள்ள தாவரங்கள்’ பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

 

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ‘ப்ளாண்ட் நியூரோபயாலஜி’ என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

 

பத்து லட்சம் யூரோக்கள் ( ஒரு யூரோ என்பது சுமார் ஐம்பத்தைந்து ரூபாய்கள்) இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

 

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி,” இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது” என்கிறார்.

 

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று!  இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

 

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது!இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!

 

-தொடரும்

(என் சகோதரர் ச. நாகராஜன் எழுதும் கட்டுரைகளும் இங்கே தொடர்ந்து வரும்)