Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள்தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 22-3-2021 அன்று ஒளிபரப்பான இசையின் மஹிமை பற்றிய இரண்டாவது உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இசையின் மஹிமை பற்றி உலகம் அறிந்து கொள்ளும் வகையில் சோழ நாட்டில் ஒரு அற்புத சம்பவம் நிகழ்ந்தது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னனின் அரண்மனையில் தேவ கானத்தை ஒரு பெண்ணும் மானுட கானத்தை ஒரு பெண்ணும் இசைத்தனர். சோழ மன்னன் மானுட கானத்தை இசைத்த பெண்ணைப் பாராட்டிப்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இசையும்இசையின்கதையும்!
BY Katukutty
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
பொய்யா மொழிப்புலவர், தெய்வப்புலவர், திருவள்ளுவர் ஒரு் செய்தியைச் சொல்ல ஒரு வார்த்தையை ஐந்து முறை உபயோகப்படுத்தியுள்ளார் என்றால் அதன் பெருமை தான் என்னே!!!
ஐம்புலன்களில் மிகவும் நுட்பமானது “செவி”.
மற்ற நான்கு புலன்களான மெய் – அதிகம் வேலை செய்தால் உடலில்
வலி உண்டாகும். கண் – வெகு நேரம் பார்த்தால், கண் எரியும்.
வாய் – பேசினால் தொண்டை வலிக்கும். மூக்கு – வெகு நேரம் வாசனை அல்லது
துர் நாற்றம் பிடித்தாலோ, கேட்கவே வேண்டாம்.
மூக்கு எரியும், தொண்டை கமரும்.
காது – எவ்வளவு நேரம் கேட்டாலும் சோர்வடையாது.!!!
இந்தக் காதினால் நாம் ஒருவருக்கொருவர் விஷயங்களை பரிமாறிக்
கொண்டு தான் உலகமே நடக்கிறது!!!
காதினால் கேட்டு பயனடையும், வழியை இன்பமடையும் வழியை, நமது முன்னோர்கள் முதன் முதலில் கண்டு பிடித்தார்கள் 5000 வருடங்களுக்கு முன் “வேதம்” மூலமாக!!! இதுதான் இசையின்ஆரம்பம்!!! . மிகப்பழமையான
“ரிக்”வேதம், “உதாத்தம்”,”அனுதாத்தம்”, “ஸ்வரிதம்”, தீர்க்க ஸ்வரிதம் என்று நான்கு உச்சரிப்பு அளவினைக் கொண்டு ஓதப்பட்டது..பின்னர் அந்த ரிக் வேதத்தை வைத்து “சாம வேதம்”பாடப்பட்டது. இப்படியாக வளர்ந்தது தான் “இசை”!!!
ஒலிஎப்படிஉண்டாகிறது???
”ஒலி”ஒரு பொருளின் அசைவினால், காற்று மூலமாக உண்டாவதாகும்.
இதை இரண்டாக பிரிக்கலாம்.
ஒன்று இசை, மற்றொன்று இரைச்சல்.
இசைஎன்றால்என்ன ???
இசை என்றால் கட்டுப்பாடான, ஒழுங்கான, இனிமையான “ஒலி”ஆகும். உள்ளத்திற்கும், உணர்விற்கும் இன்பத்தை செவி மூலமாக கிடைக்கும் ஒலியையே “இசை “என்கிறோம்.. இந்த இசைக்கு
ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, ஏற்றத்தாழ்வுகள், மேலும் அழுத்தமும் உண்டு.
இரைச்சல் – ஒழுங்கற்ற, கட்டுப் பாடில்லத , அதிகமான ஒலியுடன்
பெண்களுக்கென்றே இசையைப் படைத்தது போன்று பெண்களின் குரல் வளையை அப்படி படைத்திருக்கிறான் ஆண்டவன்!!!!
பாடுவதற்கென்றே உண்டான விழா தான் “நவராத்திரி” !!!
கொலுவுக்கு வரும் பெண்களோடு துணைக்கு வரும்ஆண்களும்
வித்யாசமின்றி பாடக்கூடிய பாடல் திருவிழா தான் “நவராத்திரி”
மார்கழி மாதமென்றால் கேட்கவே வேண்டாம், குளிரை பொருட்படுத்தாமல் அதி காலையில் தெருவெங்கும் பஜனை பாடல்கள்.இரவு எல்லா சபாக்களிலும் பாட்டுக்கச்சேரி……. பாட ஆரம்பித்தவர் முதல் பத்ம பூஷன் வாங்கியவர்களின் கச்சேரி வரை நடக்கும்!!!
அதில் பாட்டு கேட்க வந்தவர்கள் பாதி, விதம் விதமான பண்டங்கள்
விற்கும் ஓட்டல்களில் சாப்பிட வந்தவர்கள் மீதி!!!
இன்றைய இசையின் “மெயின்” காரணமே சினிமா!!! திரைப்படம்
தோன்றிய நாட்களிலிருந்து இன்று வரை இதை ஆட்டிப் படைப்பது இசைதான்!!!ஆரம்பத்தில 50 அல்லது 60 பாடல்களுடன்
ஆரம்பித்த சினிமா தற்சமயம் 7 அல்லது 8 பாடல்களுடன் நிற்கிறது. பாட்டே பிரதானம் என்று ஆரம்பித்த சினிமா இப்போது நடனத்தையும் சேர்த்துக் கொண்டது. கர்நாடக இசையில்ஆரம்பித்த சினிமா,வட இந்திய இசைக்குசென்று, மேற்கத்திய இசைக்கு சென்று “ஆட்டம்” போட்டது. சாதாரண பாடல்களை விட்டு
“குத்தாட்டத்தையே “ மக்கள் ரசிக்கின்றனர்!!! குடித்துவிட்டு ஆடும் பாடல்கள்
“யு ட்யூபில் ”ஒரு கோடி ஹிட்ஸ்” என்று. பெருமையுடன் பீற்றிக் கொண்டிருக்கிறது!!!
தெருவுக்குத் தெரு காளியம்மன், மாரியம்மன் போன்ற
தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கஞ்சி ஊற்றும் திருவிழாவில்
குத்தாட்ட பாடல்கள் இல்லாமல் நடை பெறுவதே கிடையாது.!!!
ஒவ்வொரு திருமண ரிஸப்ஷன்களிலிலும், கட்சி மீட்டிங் ஆரம்பகளிலும் இந்த “குத்தாட்ட கச்சேரி”நடக்கிறது!!! சில சமயங்களில் “குடி மகன்கள்”, காரணமாக போலீஸ் தடியடியும் உண்டு!!!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Date: 10 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 15-06 Post No. 7079
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திரு ஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.
ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்
“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.
“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”
அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே – என்றார்.
வான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!
XXXX
பிரபல ஜெர்மன் தத்துவ ஞானி (Nietzsche) நீட்ஸே, வாக்னருடன் பேசிக்கொகொண்டிருந்தார்.
“நான் நினைக்கிறேன்; மோசார்ட் எழுதிய F பிகாரொவில் (Figaro) அற்புதமான இசையைக் கண்டு பிடித்து இருக்கிறார்”.
வாக்னர் (Wagner) சொன்னார்: அவர் அற்புதமான இசையைக் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் சொன்னதற்கு நேர்மாறாக நடந்தது. அவர் இசையில் அற்புதத்தைக் கரைத்துவிட்டார்”.
XXX
அற்புத நினைவு சக்தி!
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த குனோட் (Gunod) ஒரு சாஹித்யகர்த்தா (composer) ; பியானோ வாத்யக்காரர். அவர் மற்றொரு மேதையான பெர்லியோஸ் (Berlioz) எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற இசை நிகழ்ச்சியின் ஒத்திகைக்குப் போயிருந்தார். மறுநாள் வீட்டுக்கு பெர்லிசோவை அழைத்தார். முதல்நாள் கேட்ட இசையை அப்படியே அ ட்சரம் பிசாகாமல் பெர்லியோஸுக்கு வாசித்துக் காண்பித்தார்.
அவருக்கு ஒரு பக்கம் வியப்பு; மற்றொரு பக்கம் திகைப்பு.
நன்றாக வாசித்தீர்கள் ஆனால் இதை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்? என்று வியப்புடன் கேட்டார்.
அவருக்கு ஒரு சந்தேகம்; யாரோ தன்னுடையதைத் திருடிக் கொடுத்து இருக்க வேண்டும்; அல்லது இரண்டு பேர் ஒரே மாதிரி இசை அமைத்த உலக அதிசயம் நடந்திருக்க வேண்டும் என்று.
குனோட் சொன்னார்: “நான் உங்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கு வந்தேனல்லவா?அப்போது கேட்டதைத்தான் நினைவில் வைத்து எழுதினேன்!”
XXX
அருவருக்கத்தக்க இசை!!!
சீஸர் ப்ராங்க் (Caesar Frank) என்பவர் நல்ல இசை அமைப்பாளர்; மிகவும் சாது. அதிகமாக வெளியே வந்தவர் அன்று; இதனால் அவரைப் பலருக்கும் தெரியாது. அவர் அமைத்த இசை முழங்கிய கச்சேரியில் அவர் ரஸிகப் பெருமக்களுடன் உட்கார்ந்திருந்தார். பொதுவாக புதிய இசை அமைப்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும். அவருக்கும் பிற்காலத்தில்தான் அங்கீகாரம் கிடைத்தது.
அவர் உட்கார்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் செல்வச் செருக்குள்ள ஒரு சீமாட்டி உட்காந்திருந்தாள். அவள் அகந்தையின் உறைவிடம். ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி நேரத்தில் அந்தப் பெண் உரத்த குரலில் எந்த மடையன் அருவருக்கத்தக்க இந்தப் பாட்டை எழுதினானோ! என்று நகைத்தாள்.
ஸீஸர் ப்ராங்க் மெதுவாகப் பின்னால் திரும்பி, அம்மணி, இந்தப் பாட்டை எழுதியவன் நான்தான் – என்றார்
TAGS:- இசை ,மேதைகள், நினைவு சக்தி, இளம் வயது, மோசார்ட், குனோட், மடையன்
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
என்ன அற்புதம்?
முதல் இரண்டு கல்வெட்டுகளையும் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் (Palindrome) காணலாம். இவை இசைத் துறையிலும், கூத்துத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.
சங்க இலக்கியத்திலும் வண்ணக்கன், தேவன் , சாத்தன் முதலிய பெயர்கள் வருகின்றன.
தேவன், சாத்தன் (சாஸ்தா) முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் புழங்கின. வால்மீகி, கண்ணதாசன், காமாக்ஷி, விஷ்ணுதாசன் (கண்ணந்தாயன், காமக்கண்ணி, விண்ணந்தாயன்) என்ற பெயர்கள் புறநானூற்றில் இருப்பதால் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இசைத் துறையிலும் நாடகத் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
எங்கே உள்ளது?
ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் பாதையில் 12 மைல் தொலைவில் அரச்சலூர் இருக்கிறது.
ஊரின் எல்லை ஓரமாகவுள் ள நாக மலையில் ஆண்டிப்பாறையில் பாண்டியர் குழியில் (குகை) உள்ளது. அங்கேதான் இக் கல்வெட்டுகள் உள. சில வரிகள் சிதைந்து உள்ளன.
சிதைந்த எழுத்துக்களை அடைப்புக்குறிக்குள் காணலாம். எளிதில் ஊகிக்க முடியும்.
எந்தக்காலம்?
இக்கல்வெட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த (பிராமி) தமிழி எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது
முதல் கல்வெட்டு
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
இரண்டாம் கல்வெட்டு
தை த தை த தை
த தை (த) தை த
தை த தை த தை
த தை (த) தை த
(தை த தை த தை)
மூன்றாம் கல்வெட்டு
எழுத்துப் புணருத்தான் மணிய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்
xxxx
புணருத்தான் = தொகுத்தான்
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் இசையில் எப்படி எழுத்துக்கள் நீட்டித்தும், தனித்தும் உச்சரிக்கப்படும் என்பது உரை ஆசிரியர்களால் விளக்கப்பட்டுள்ளது. இன்றும் சங்கீதக் கச்சேரிகளில் இப்படிச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
கன்யாகுமரியில் என்பதை , கன்னியாக்கு…………… மரியிலே………. என்று முழங்கும் பாடல் என் நினைவுக்கு வருகிறது!
உதவிய நூல்
கல்வெட்டு – ஓர் அறிமுகம்
தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு 1976