இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்! (10,171)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,171

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்!

ச.நாகராஜன்

இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக அழகுற இருப்பதைக் கண்டு உலக நாடுகள் கவலைப் படுகின்றன. தங்களின் ஆதிக்கம் உலகில் குறைந்து விடுமோ என்ற பயம் பல வளர்ச்சியுற்ற நாடுகளுக்கு இருக்கின்றன.

இந்த நிலையில் வரலாற்றைக் கவனித்தால் ஒரு உண்மை நன்கு நமக்குப் புரியும் – “எப்பொழுதெல்லாம் தர்ம வழியில் இந்தியா செழித்து ஓங்குகிறதோ அப்போதெல்லாம் அது தலை நிமிர்ந்து உலகிற்கு வழி காட்டி இருக்கிறது”

.

இந்தியாவை எல்லை ரீதியாக ஆக்கிரமித்துக் குழப்பம் விளைவிக்க சீனா துடிக்கிறது.

காஷ்மீரில் பிரச்சினை உருவாக்கி ஆதாயம் தேட நினைக்கிறது பாகிஸ்தான்.

தீவிரவாதத்தின் மூலம் ஆப்கானிஸ்தானை அக்கிரமாக ஆக்கிரமித்திருக்கும் தாலிபான்கள் தங்கள் பங்கிற்கு தீவிரவாத சக்திகளை இந்தியாவில் ஊக்குவிக்கின்றனர்.

கோவிட் வைரஸ் மூலமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இந்தியா சங்கடத்தில் ஆழ்ந்து விடாதா என்ற அரை மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் பல உலக நாடுகள் உள்ளன.

இந்து மதத்தை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மதமாற்ற வெறியர்களான கிறிஸ்தவ பாதிரிகள் இந்தியாவில் செய்யும் அக்கிரமத்திற்கு ஒரு எல்லையே இல்லை.

எல்லை ஓரமாக இருக்கும் மாநிலங்களில் இவர்களின் ஜரூர் வேலைக்கும் , கடற்கரை ஓரமாக உள்ள மீனவர் குடியிருப்புகளில் கன்னிக் குமரியிலிருந்து கடல் எல்லை நெடுகிலும் இவர்கள் செய்கின்ற ஜரூர் வேலைக்கும் கோடி கோடியாக பல நாடுகள் பணத்தை அள்ளிக் கொட்டுகின்றன.

மதமாற்றத்திற்கு பெண் ஆசை, மண் ஆசை, அதிகாரம், பதவி ஆசை, பண ஆசை என பல விதங்களிலும், ‘தீண்டாமை எங்களிடம் கிடையாது’ என்ற பொய் வார்த்தை மூலமும் கிறிஸ்தவ மத மாற்றப் பிரசாரம் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

பிரபல நடிகர்களுக்கு ஏராளமாகப் பணம் கொடுத்து இந்து மதத்தை இழிவு படுத்தும் காட்சிகள் ஒரு புறம்;

டைரக்டர்களுக்குப் பணம் கொடுத்து கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக காட்சி அமைக்கச் சொல்வது ஒரு புறம்;

விளம்பரக் கம்பெனிகளுக்குப் படம் கொடுத்து இந்து மத சின்னங்களை இழிவு படுத்தி விளம்பரத்தில் காட்டுவது ஒரு புறம்;

அழகிகளான நடிகைகளை கண்டபடி ட்வீட் செய்ய வைத்து இந்திய இறை ஆண்மை ஆட்சியை அசைக்க நினைப்பது ஒரு புறம்.

ஓய்வு பெற்ற அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் செல்லாக் காசான நிலையில் அவர்களுக்குப் பணம் கொடுத்து யூடியூப் மூலம் கண்டபடி பேசச் சொல்வது ஒரு புறம்:

இப்படி ஏராளமான வழிகளை மிஷனரிகள் கடைப்பிடிக்கின்றன.

தீவிரவாதிகளோ தமிழகத்தில் நன்கு காலூன்றி பிரிவினை வாதத்தை விதைக்க நினைக்கின்றன.

திராவிடம் என்று பேசும் நாத்திகர்களும், கொள்ளைக் கும்பலும் கோவில்களை அழித்து ஒழித்து அதன் சொத்துக்களை சூறையாட நினைக்கின்றன.

மொழி வெறியைத் தூண்டி விட்டு மொத்த இந்துப் பண்பாட்டை அழிக்க நினைப்பதும் இவர்களின் பல வழிகளில் ஒன்று.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும் காட்டலாம் இங்கு:-

ஒரு பேராசிரியர் – ரிடயர்டு ஆசாமி – விவேகானந்தரைப் பற்றிக் கூறுகிறார் மிக சீரியஸாக –

“விவேகானந்தர் கீதையைப் படிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

கால் பந்து விளையாடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.” இதை மாற்றி மாற்றி வெவ்வேறு விதமாக அவர் சொல்வதைப் பார்த்தால் போப்பை விட விவேகானந்தர் தான் கீதையின் முதல் விரோதி என்று தோன்றும். அவர் சொல்கின்ற தொனியில் திராவிட நாத்திகர்களின் தலைவர் விவேகானந்தர் தான் என்பதை இளம் பிஞ்சு உள்ளங்கள் நம்பி விடும்!

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுங்கள்; உடலில் உரம் ஏற்றுங்கள்; அப்போது தான் கீதை நன்கு புரியும் ; எதிரிகளை ஒழிக்கலாம் -க்லைப்யம் மாஸ்ம கம: உத்திஷ்டோத்திஷ்ட பரந்தப – பேடித்தனத்தை அடையாதே; எழு. புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடு – இதுவே விவேகானந்தரின் மெஸேஜ். இதை மாற்றி கீதையைப் படிக்காதே கால் பந்து விளையாடுங்கள் என்று கால்பந்து வெறியராக அவரை மாற்ற முனைவது எவ்வளவு அயோக்கியத் தனம்.

புத்தர் கூறினார் -“நூறு ஆண்டுகள் சோம்பேறியாக, சுணங்கி அறிவற்றவனாக வாழ்வதை விட ஒரு நாள் வீரனாக அறிவு பெற்றவனாக வாழ்வது மேல்”

இதை இந்த முட்டாள் எப்படிச் சொல்வான்? புத்தர் அனைவரையும் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் ; நூறு ஆண்டுகள் வாழவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்றல்லவா திரித்துப் புளுகுவான். அதாவது ஒரு நாள் வாழ்ந்து அடுத்த நாள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இந்த முட்டாள் பேராசிரியரிடம் புத்தர் இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை!!!

இந்த பேராசிரிய முட்டாளின் உரையைக் கேட்டு நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். ஒரு பேராசிரியர் விவேகானந்தரைப் பற்றி இப்படிப் பேசுவாரா என்று. பிறகு தான் பல யூ டியூப் பதிவுகளைப் பார்த்து வரும் போது இவர் ஒரு கிறிஸ்தவ வெறியர் என்று தெரிந்து கொண்டேன். அங்கு இவர் ‘மாட்டிக் கொண்டார்’- அவருக்கு வரவேண்டிய பணம் வரவே அதற்காகப் பேசுகிறார்!

இதே போல, ஊடகங்களில் இன்னின்னாருக்கு இவ்வளவு பணம் என நிர்ணயிக்கப்பட்டு கட்டிங் கரெக்டாக போகப் போக அவர்கள் பதிவிடும் பதிவுகள் காணொளியில் காண்பதற்குச் சகிக்க முடியவில்லை.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் எதை வேண்டுமானாலும் வெளியிடலாமா?

இதற்கு ஒரு கட்டுப்பாடு கிடையாதா? தவறு செய்பவர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு அமைப்பு சட்ட ரீதியாக கிடையாதா? இருக்கிறது என்றால் அவர்கள் செயல்பட வேண்டும்.

இல்லையென்றால் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.

இதுவே ஒட்டு மொத்த ஹிந்துக்களின் இன்றைய கோரிக்கை!

***

tags- இந்தியா, வளர்ச்சி, கவலை ,உலக நாடுகள்!

ஒரே ஒரு குடும்பம் தான் இந்தியாவை ஆண்டதோ?! (Post No.10,166)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,166

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே ஒரு குடும்பம் தான் இந்தியாவை ஆண்டதோ?!

ச.நாகராஜன்

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,166

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I    ஒரே ஒரு  குடும்பம் தான் இந்தியாவை ஆண்டது!

கீழ்க் கண்ட சம்பவங்கள் 2014ஆம் ஆண்டு முடிய நடைபெற்றவை.

  1. 600க்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்களுக்கு நேரு- காந்தி வமிசத்தினரின் பெயர்கள் சூட்டப்பட்டன.
  2. இரண்டு விளையாட்டு டோர்ணமெண்டுகள், 22 கல்வி நிறுவனங்கள், மூன்று அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஜவஹர்லால் நேரு பெயர்கள் சூட்டப்பட்டன.
  3. நான்கு விளையாட்டு டோர்ணமெண்டுகள், 21 கல்வி நிலையங்கள், 27 மாநில அரசுத் திட்டங்கள், 8 மத்திய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்திரா காந்தி பெயர்கள் சூட்டப்பட்டன.
  4. 23 விளையாட்டு டோர்ணமெண்டுகள், 55 கல்வி நிறுவனங்கள், 23 மாநில அரசுத் திட்டங்கள், 16 மத்திய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ராஜீவ் காந்தி பெயர்கள் சூட்டப்பட்டன.
  5. அதுமட்டுமின்றி, 74 சாலை மற்றும் இடங்கள், 51 விருதுகள், 38 மருத்துவ நிறுவனங்கள், 15 கல்வி உதவித் தொகை, 15 தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காங்கள் ஆகியவற்றிற்கு அவர்கள் பெயரே சூட்டப்பட்டன.

இப்படியாகத் தான் ஒரு அரசியல் குடும்பம் இந்தியாவை தனது சொந்த சாம்ராஜ்யமாக நடத்தியது!

II

ஒரு சாம்பியனின் நல்ல குணம்!

மீராபாய் சானு மணிப்பூரில் 150 லாரி ஓட்டிகளைச் சந்தித்தார். அவர்களுக்கு விருந்தும் அளித்தார். ஏனெனில் அவர்கள் தாம் அவரை அவரது கிராமத்திலிருந்து இம்பாலிற்கு அவரது பயிற்சிக்காக தினமும் பல வருடங்களாக தங்கள் டிரக்குகளில் அழைத்துச் சென்றனர். நன்றி என்பது அருமையான ஒரு உணர்வு. அது நமது சாம்பியனிடம் நிறையவே இருக்கிறது.

III

ஜம்மு, காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீர் அரசு 75 பள்ளிகளுக்கும் 75 சாலைகளுக்கும் வீரகதி அடைந்த வீரர்களின் பெயரைச் சூட்டப் போகிறது.

75வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பெயர் மாற்றம் இதுவரை போற்றிப் புகழப்படாத உள்ளூர் வீரர்களுக்கு புகழாரம் சூட்டப்படும் ஒன்றாக அமையும்.

இப்படித் தான் நமது சுதந்திரம் கொண்டாடப்பட வேண்டும்!

நன்றி, ஆதாரம் : Truth Vol 89 No 23 dated 17-9-21

இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:

SNIPPETS

I Only one family ruled India!

The following incidents happened till 2014:

  1. Over 600 government schemes were named after Nehru-Gandhi dynasty.
  2. Two Sports tournaments, Twenty-two educational institutions and three Government schemes are named after Jawaharlal Nehru.
  3. Four Sports tournaments, Twenty-one educational institutions and twentyseven State Government schemes and eight Central Government schemes are named after Indira Gandhi.
  4. Twentythree Sports tournaments, Fifty five educational institutions and twenty five State Government schemes and Sixteen Central Government schemes are named after Rajiv Gandhi.
  5. Also 74 places and road, 51 awards, 39 Medical institutions, 15 Scholarships, 15 National Museums and Parks had been named after their names.

This is how one political family treated India as its own empire.

II  Champion’s Behaviour:

Mirabai Chanu met and treated 150 truckers in Manipur as they had given her a lift from her village to Imphal for her training every day for years. Gratitude is one of the  most beautiful emotion. A kind gesture by our Champion.

III Jammu and Kashmir :

Jammu and Kashmir government to rename 75 schools and 75 roads after persons, who attained Veergati.

The name change would be a tribute to the local unsung heros on the occasion of 75 year of Independence.

That is how AZADI should be celebrated.

Thanks and Source : Truth weekly from Kolkata Vol 80 No 23 Dated 17th September 2021

***

tags -இந்தியா, ஒரே, ஒரு,  குடும்பம்

நடிகையின் காலில் சுட்ட பின்னர் கூறப்பட்டது : இது இந்தியா இல்லை! (9834)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9834

Date uploaded in London – 10 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன்

1   

அவள் ஒரு நடிகை. தனது சொந்த நாட்டில் நடித்து அந்த மக்களின் பணத்தாலேயே வாழ்ந்து கொண்டு பிரபலமான நடிகை அவள். கஷ்டமான ஒரு சூழ்நிலையில் சொந்த நாடு இருக்கும் போது நாட்டின் எதிரிகளுக்கு ஆதரவாக தன் சொந்த தேசத்திடமே தேசத்திற்கு விரோதமான சில கேள்விகளைக் கேட்டாள் அவள்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவள் காலைக் குறி பார்த்துச் சுட்டனர்; சுட்டு விட்டுச் சொன்னார்கள் – “இது ஒன்றும் இந்தியா இல்லை!”

இந்தியாவில் தேச துரோகம் செய்து கொண்டே பிரபலமாகவும் இருக்கலாம்; தேசத்திற்கே துரோகம் விளைவிக்கும் கேள்விகளும் கேட்கலாம்! எப்படி இருந்தாலும் கவலை இல்லை.

ஆனால் இஸ்ரேல் அப்படி இல்லை; தகுந்த தண்டனையை அந்த நடிகைக்குக் கொடுத்தது – வாழ்நாள் எல்லாம் ஞாபகம் இருக்கும் தண்டனை!

இஸ்ரேலே, உனக்கு ஒரு சல்யூட்!

2  

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் – மீடியாக்கள்! ஆனால் அந்த அருமையான தூணை கேலிக் கூத்தாக்கும் சேனல்கள் உலகெங்கும் (இந்தியாவில் எண்ண முடியாத அளவில்!) உள்ளன.

அல் ஜஜீரா ( Al Jazeera) என்று ஒரு சேனல்! இந்த அல் ஜஜீரா இஸ்ரேலைப் பற்றித் தொடர்ந்து அவதூறான செய்திகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பிக் கொண்டே இருந்தது. இஸ்ரேல் ஒரே ஒரு மணி நேரத்தில் அந்த சேனலின் தலைமையகத்தைப் பொடி பொடியாக்கியது. அது மட்டுமல்ல, இஸ்ரேல், இந்தியா அல்ல என்ற ஒரு செய்தியையும் தந்தது. இந்தியாவில் எவன் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் தேசத் துரோகக் கருத்தைச் சொல்லலாம். பிரிவினை வாதத்தைத் தூண்டலாம், சொல்லலாம்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லலாம்; ஜெய்ஹிந்த் என்பதை கவர்னர் உரையிலிருந்து நீக்கலாம்; அதை சபாஷ் போட்டு ஒரு எம்.எல்.ஏ.சபையில் பேசலாம். என்ன வேண்டுமானாலும் இந்தியாவில் நடக்கும்.

இந்திய அரசு இஸ்ரேலின் வழியில் நடக்க வேண்டும்.

நடந்தால் பல நடிக, நடிகையர், டைரக்டர்கள் நொண்டிக் கொண்டு தான் நடக்க வேண்டி வரும் – வாழ் நாள் முழுவதும்!!

3

யாஸர் அராஃபத், தீவிரவாதி இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்தவுடன் அதற்கு ஆதரவு தெரிவித்தது யார் தெரியுமா?

சவூதி அரேபியாவா – இல்லை!

பாகிஸ்தானா – இல்லை!

ஆஃப்கானிஸ்தானா – இல்லை!

இராக்கா – இல்லை!

துருக்கியா – இல்லை!

நன்கு யோசித்துப் பாருங்கள்? யார் உடனே அதை அங்கீகரித்து ஆதரவு தெரிவித்தது.

நாம் தான் இருக்கிறோமே, செகுலர் கண்ட்ரி என்று!

இந்தியா தான் அங்கீகரித்தது!

இந்திரா காந்தி வழக்கம் போல முஸ்லீம்களை தாஜா செய்ய பாலஸ்தீனை அங்கீகரித்தார். ராஜீவ் காந்தியோ அராஃபத்துக்கு ப்ன்னாட்டு புரிதலுக்காக ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru Award for International Understanding) பரிசை அளித்தார்.

அது மட்டுமல்ல, அவர் உலகம் முழுவதும் சுற்ற ஒரு போயிங்கை வேறு பரிசாக அளித்தார்.

அதே அராபத் நன்றி கெட்டு, காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியே தான் என்று ஓ ஐ சியில் – இஸ்லாமிய நாடுகளுக்கான நிறுவனத்தில் (Organisation of Islamic Countries) கூறினார். எப்படிப்பட்ட நன்றி உணர்வு பாருங்கள்!

அது மட்டுமல்ல, அவர் சொன்னார் :” எப்போது பாகிஸ்தான் வேண்டுகிறதோ அப்போது எனது வீரர்கள் காஷ்மீரின் சுதந்திரத்திற்காகப் போரிடுவார்கள்”.

இந்த அராஃபத் 103 நாடுகளில் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒரு ஆள்!!

6 விமானங்களை கடத்தியவர். 2000 அப்பாவிகளைக் கொன்று குவித்தவர். அப்படிப்பட்ட ஆசாமிக்குத் தான் நமது இண்டர்நேஷனல் அவார்ட்!

எப்படிப்பட்ட நாடு இந்தியா பாருங்கள்!! ராஜீவ் காந்தி, ‘நேரு புரஸ்காரை’ (புரஸ்கார் – பரிசு) தந்தார். அதாவது அதற்கு உரித்தான ஒரு கோடி ரூபாயை அளித்தார். 200 கிராம் தங்கத்தினால் ஆன ஒரு ஷீல்டு வேறு அவருக்குக் கொடுக்கப்பட்டது!

1988இல் அளிக்கப்பட்ட அதன் இன்றைய மதிப்பை சும்மா ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள் – எவ்வளவு? விழி பிதுங்குகிறதா!.

4

இதே அராஃபத் காஷ்மீருக்காக பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக இருப்பவரை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும். பாலஸ்தீனத்திலும் இந்தியாவிலும் முஸ்லீம் அல்லாதோரால் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆகவே இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்றார் அஃராபத்.

5

இப்படிப்பட்ட சமீப கால சரித்திரத்தைக் கொண்ட காங்கிரஸ்காரர்கள் இன்றைய அரசுக்கு நமது வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித் தர விழைகிறார்கள்!

அட பரிதாபமே!

நன்றி :புதுராஜன் ஸ்ரீதரன், ஐ பிஎஸ்(Puthurajan Sridharan, IPS)

Source : Thanks to Truth Weekly magazine, Vol 89 Issue 10 Dated 18-6-2021

***

tags-  நடிகை, இந்தியா, ,அல் ஜஜீரா, இஸ்ரேல்

‘நான் இந்தியாவின் திரண்ட வடிவமே’!- விவேகானந்தர் (Post No.9133)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9133

Date uploaded in London – –12 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 12 1863 ஸ்வாமி விவேகானந்தர் அவதரித்தார்.

இன்று ஜனவரி 12. அவரது நினைவைப் போற்றி அவரை வணங்கித் துதிப்போமாக!

ஸ்வாமி விவேகானந்தர் : ‘நான் இந்தியாவின் திரண்ட வடிவமே’!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை கூறினார் இப்படி  : தான் ஒரு ‘Condensed India’ என்று! (தான் இந்தியாவின் திரண்ட வடிவம்  என்று)

உண்மை தான்! அவரது நினைவெல்லாம் இந்தியாவின் சிறப்பையும் வளத்தையும் பற்றி மட்டுமே இருந்தது.

இந்தியாவைப் பற்றியும் அதன் வளமான எதிர்காலத்தையும் பற்றி அவர் பலரிடமும் கூறியுள்ளார்.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:

தனது சீடர்களிடம் இந்தியாவின் பண்டைய புகழோங்கிய காலத்தைப் பற்றி கூறுவது அவரது வழக்கம். ஒரு முறை அவர் இந்தியாவின் பழம் பெருமைகளைக் கூறிவிட்டு, “ஆனால் எதிர்காலத்தில் இந்தியா இதை விட அதிகப் புகழைப் பெறும்” என்றார். தொடர்ந்து அவர், “நான் சொல்வதை நம்புங்கள், இன்னும் நானூறு ஐந்நூறு ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கப் போகிறது என்ற காட்சியை நான் கண்டேன்” என்றார்.

இன்னொரு முறை இந்தியாவில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி, தனது வருங்கால உரைக்கும் பண்பின் மூலமாக அவர் கூறினார் இப்படி:

“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று விடும். சுதந்திரம் எதிர்பாராத விதத்தில் வரும். இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய மஹாயுத்தம் வரும். மேலை நாடுகள் தனது உலோகாயதப் போக்கைக் கைவிடவில்லை எனில் இன்னொரு மஹாயுத்தம் வருவதைத் தடுக்க முடியாது.”

இந்தியா பற்றி அவர் கூறினார் : “இந்தியா, சுதந்திரம் அடைந்த பிறகு மேலை நாடுகள் போல உலோகாயதத்தைக் கைக்கொள்ளும். (India, when independent, will embrace the materialism of the West and attain material prosperity to such an extent that it will surpass n past records in that field”). அது கடந்த கால வளத்தை எல்லாம் மிஞ்சி இருக்கும்”.

இத்துடன் அவர் மேலும் கூறியது ;” அமெரிக்கா போன்ற நாடுகள் உலோகாயத வளத்தின் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இது போன்ற லௌகீக வளத்தினால் நிலையான சாந்தியைப் பெற முடியாது என்பதை அறிந்து கொண்டு ஆன்மீகத்தில் அதிகமாக நாட்டத்தைக் கொள்ளும்”.

இன்னொரு முறை அவர் பேசும் போது கூறினார் : “பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போன பின் சீனா இந்தியாவை வெற்றி கொள்ளும் ஒரு அபாயம் நேரிடும்.”

இவை ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். வளமான நாடாக இந்தியா ஆவதும், இந்தியாவின் ஆன்மீக சக்தியை அமெரிக்கா போன்ற நாடுகள் நாடத் துவங்குவதும் இப்போது ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவின் ஏழை எளிய ஜனங்களைப் பற்றி அவர் கவலைப்படாத நாளே கிடையாது.

ஜோஸபைன் மக்லியாட் என்ற சிஷ்யை அவரிடம் ஒரு முறை, “ஸ்வாமிஜி, உங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும்” என்று கேட்டார்.

ஸ்வாமிஜி உடனே, “லவ் இந்தியா – இந்தியாவை நேசி – (Love India) என்று பதில் அளித்தார்.

சகோதரி நிவேதிதை ஸ்வாமிஜியின் அடிப்படையான இந்த உண்மை அன்பைப் புரிந்து கொண்டு தான், இந்தியாவின் எழுச்சிக்காக வெகுவாகப் பாடுபட்டார்.

ரவீந்திரநாத் தாகூரிடம் ரோமெய்ன் ரோலந்து இந்தியாவைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்ட போது, அவர், “இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஸ்வாமி விவேகானந்தரைப் படியுங்க்ள்” என்றார். (Read Swami Vivekananda, if you want to know India.”)

வேதாந்தத்தைப் பற்றி வெகு ஆவலுடன் விவாதிக்க வந்த ஒரு பண்டிதரிடம் ஸ்வாமிஜி, “பண்டிதரே! முதலில் பசியால் வாடி உணவுக்காக ஏங்கி அழும் உங்கள் நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கானோரை முதலில் பார்த்து அவர்கள் பசிப்பிணியைத் தீர்க்க முயலுங்கள். அதன் பின்னர் என்னிடம் வாருங்கள். வேதாந்தம் பற்றி நிறையப் பேசுவோம்” என்றார்.

இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள் இன்னும் உண்டு. இந்தியாவைப் பற்றி நன்கு அறிய வேண்டுமானால் அந்த மஹா புருஷரைப் படிக்க வேண்டும் – கவி ரவீந்திரநாத் தாகூர் சொன்னது போல!

வாழ்க ஸ்வாமிஜி! வளர்க அவர் புகழ்; பின்பற்றுவோம் அவர் போதனைகளை!

tags– விவேகானந்தர், இந்தியா

இந்தியாவின் அதிசய பீரங்கிகள் (Post No.7194)

Jaivana Cannon

Written by  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9  NOVEMBER 2019

Time  in London – 5-51 am

Post No. 7194

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Longest in the world, Kalabhurahi, Karnataka
malik-i- maidan
Bangalore
chennai
Madras Museum

இந்தியா 250,000 ஆண்டு பழமையானது (Post No.5146)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –  15-11 (British Summer Time)

 

Post No. 5146

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

இந்தியாவின் வரலாற்றை அழகாக தேதி வாரியாக பட்டியலிட்டுள்ளார்  ஆசிரியர்—ஜார்ஜ் பௌர்ஸ்டேய்ன். இந்த ஆசிரியர் 14 வயதான போது ஒருவர் பால் ப்ரண்டன்  (A Search in Secret India by Paul Brunton) எழுதிய ‘மர்ம இந்தியாவில் ஒரு தேடுதல்’ என்ற புஸ்தகத்தை ஒருவர் பரிசளித்தார். அது முதல் ரமண மஹரிஷி போன்ற இந்தியப் பெரியோர்களின் ஆன்ம தேடுதல் பணியில் நாட்டம் கொண்டு யோகம் பயின்றார். அமெரிக்காவில் இவரது யோகா ஆராய்ச்சிக் கழகம் உளது. பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் புராதன வரலாறு குறித்து கிடைத்துள்ள பல புதிய தகவல்களைச் சேகரித்து நமது பழமை கி.மு 8000 என்று நிரூபித்துள்ளார்.

கி.மு 250,000 – இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய மனிதர் தடயங்கள்

 

40,000- மத்திய இந்தியாவில் பிம்பெட்கா முதலிய இடங்களில் மக்கள் வரைந்த ஓவியங்கள்

 

கி.மு. 8000 – 5000 ஸரஸ்வதி- சிந்து நதி தீர நாகரீக இடங்கள் கார்பன் கணக்கீடுகள் கி.மு 8000 என்று காட்டுகின்றன. ஆப்கனிஸ்தான் மெகர்காரில் தெளிவான தடயங்கள் உள.

கி.மு 3000 பாலகோர், ஹக்ரா, அம்ரி முதலிய இடங்களில் ஹரப்பா நகர நாகரீகத்துக்கு முந்திய கிராமங்கள்.

 

 

கி.மு 4000- 2000 – ரிக் வேதம், பின்னர் மற்ற மூன்று வேதங்கள், அதையடுத்து புராணங்களின் தோற்றம்.

 

ரிக் வேத தேதியைக் கணக்கிட அதிலுள்ள வானியல் குறிப்புகள் உதவுகின்றன.

மநு வைவஸ்வதர் (கி.மு.3100) எனப்படும் முதல் மநு, சப்த ரிஷிகள், சூர்ய வம்ச- இக்ஷ்வாகு அரசாட்சி துவக்கம்.

 

 

கி.மு-3210 வேனன் என்னும் கொடுங்கோலனை மந்திரங்கள் மூலம் ரிஷிகள் கொன்ற ஆண்டு; முதல் மன்னன் பிருது ( பிருத்வீ= பூமியின் பெயர்க் காரணம்)

 

பிப்ரவரி 18, 3102 கலியுகம் துவக்கம்

.

கி.மு 3000 ஸரஸ்வதி- சிந்து நதி நகரங்கள் உருவாதல்- மொஹஞ்சதாரோ, ஹரப்பா

 

2950– எகிப்தில் முதல் மன்னர் ஆட்சி துவக்கம்

 

 

2600-1900 சிந்துவெளி நகரங்களின் ஆட்சி

 

2600- 1400 யாக யக்ஞங்கள் பற்றிப் பேசும் பிராஹ்மண இலக்கியம் உருவாதல்.

 

2510- சகர மன்னர்- கபில முனி காலம் ரிக் வேதம் சொல்லும் பிரதர்தனன், திவோதஸன் காலம்

 

2450- பரத மன்னன் (பாரதம் எனப் பெயர் காரணம்) ஆண்ட காலம்

 

2371- 2316 பாபிலோனியாவை ஆண்ட ஸர்கோன், இந்திய சகர மன்னன் என்று வாடல் (Waddel)  கூறுகிறார். (Sargon of Babylonia= Sagaera of India)

2050– தஸரதன் ஆட்சி, ராமர் காலம், இலங்கையில் ராவணன் ஆட்சி

1970– சுதாஸ் எனப்படும் ரிக் வேத மன்னன் காலம்

 

 

1900- ஸரஸ்வதி நதி வறண்ட காலம்; ரிக்வேத மன்னன் துர கவசேயன் காலம்

 

1550– ரிக் வேத மன்னன் தேவாபி காலம்- இதுதான் ரிக்வேதத்தின் கடைசி துதி

1500 –பாரத யுத்தம்- மஹா பாரத யுத்த காலம்

 

கி.மு.570 பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் குறிப்பிடப்படும் கடைசி ஆசிரியர் பௌதிமசிபுத்ர. அவருக்கு முன்னர் 50 ஆசிரியர்கள் 1000 ஆண்டுகளுக்கு  உபநிஷத்தைப் பரப்பினர்.

 

563-483 கௌதம புத்தர்- புத்த மத ஸ்தாபனம்

 

550 ஆஜீவக மதப் பிரிவு- ஸ்தாபகர் கோசால மாஸ்கரிபுத்ர + பாணினி+ கானட முதலியோர் காலம்

 

கி.மு 500-400 பகவத் கீதையின் புது வடிவம்

அலெக்ஸாண்டருக்கு முன்னதாக இந்தியாவில் 138 அரசர்கள் ஆண்டதாக கிரேக்கர்கள் எழுதி வைத்துள்ளனர்

 

–SUBHAM–

 

புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686)

purana map1

Compiled  by london swaminathan

Date: 2 April, 2016

 

Post No. 2686

 

Time uploaded in London :–  6-35 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

புராதன இந்தியாவில் 56 தேசங்கள், அதாவது 56 பிரிவுகள் இருந்தன. இவைகளை இப்போதைய மாநிலங்களுக்கு ஒப்பிடலாம். பலம்பொருந்திய மன்னர்கள் ஆளுகையில் எல்லா மன்னர்களும் சக்ரவர்த்தியின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டார்கள். சுயம்வரம், போட்டிகள், பட்டாபிஷேகங்கள் முதலியவற்றுக்கு 56 தேச ராஜாக்களுக்கும் அழைப்பிதழ்கள் சென்றன. அவ்வப்பொழுது சண்டைகளும் போட்டார்கள்; பெண் கொடுத்து, பெண் எடுத்தார்கள்.

 

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர சோழ, பாண்டிய நாடுகளுக்குப் புறம்பாக திராவிட நாடு காட்டப் பட்டிருப்பது பற்றி, திராவிடர்கள் யார்? என்ற கட்டுரையில் முன்னரே எழுதியுள்ளேன் (திராவிடர்கள் யார்? ஜூலை, 2013). இதிலுள்ள வரைபடங்கள் ஓரளவுக்கு நமக்கு, நாடுகளின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுக்கிறது. ஆயினும் அவ்வப்பொழுது அவற்றின் எல்லைகள் விரிந்தும் சுருங்கியும் போனதால் குழப்பங்கள் ஏற்பட்டன.

 

ஒருவர் ஒரு நூலை எழுதும்போது, ஒரு நாட்டின் எல்லை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அதற்கேற்ப அவர்கள், ஊர்கள் பற்றியும் மக்கள் போக்குவரத்த் பற்றியும் எழுதினர். பிற்காலத்தில் நாம் அவைகளை ஒரு சேரப் படிக்கையில் முரண்பாடுகளைக் காண்கிறோம். யவன தேசம் என்பது பல தவறான முடிபுகளைத் தோறுவித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ரோமாபுரி, கிரேக்கம் மற்றும் அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவில் ஆண்டோர், அராபியர் ஆகிய அனைவரையும் குறித்தது!

 

இதோ ஜகதீச அய்யர் எழுதிய புராண இந்தியா – 56 தேச சரிதம். பேஸ்புக்கில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதிலுள்ள வரைபடங்கள், மேலும் ஆராய்ச்சி செய்ய உதவும்:–

purana map2

puranic india2

 

puranic india5

puranic india6

 

 

puranic india 8

puranicindia9

puranic india9

puranic india10

puranic india11

 

purana map3

purana map4

purana map6

purana map8

தொடரும்……. (இரண்டாவது பகுதியில் மீதி தேச விவரங்கள் வரும்)

–subam-