இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2

Picture: Goddess Kali

ராம ராம ராம

இராம பாணம் பட்டு உருவினாற்போல
இராமர் இருக்கும் இடம் அயோத்தி
இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
அனுமார் வால் போல நீளுகிறதே
இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? (110)
இரா முழுதும் இராமாயண்ம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதை)
இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராவண சந்யாசி போல இருக்கான்
இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது
போலும்

சந்நியாசி புராணம்

சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சமுசாரம் மேலிட்டது போல
சந்நியாசி கோவணம் கட்டினது போல
சந்நியாசம் சகல நாசம்
சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது
சந்நியாசிக்கு சாதி மானம் போகாது (120)
சந்நியாசி பயணம் திண்ணையை விட்டுக் குதிப்பது தான்
சந்நியாசி பூனை வளர்த்தது போல
சந்நியாசியைக் கடித்த நாய்க்கு பின்னாலெ நரகமாம், சந்நியாசிக்கு முன்னாலெ மரணமாம்
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலெ நரகமாம்
சந்நியாசி வீடு திண்ணைல
சபையிலெ நக்கீரன் அரசிலே விற்சேரன்
சப்தப் பிரம்மத்திலே அசப்த பிரம்மம் பிரகாசிக்கிறது
சப்தப் பிரம்மம் பரப் பிரம்மம் இரண்டையும் அறிய வேண்டியது
பழமொழிகளில் அவதாரம்
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது (வாமன அவதாரம்) (130)
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் (நரசிம்ம அவதாரம்)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (காகாசுரன் கதை-ராமாவதாரம்)
சாத்திரம் கற்றவன் தானே காசு
சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்
சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு
சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்
சாபமிட்டருண்டோ? தலையில் திரு எழுத்தோ? வேக விட்டருண்டோ? எழுத்தின்படி தானோ?
சுவர்க்கத்திலே தோட்டியும் சரி, தொண்டமானும் சரி
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே கூத்தியரா?
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே ஒரு பிள்ளை ஏன்?
சுவர்க்கத்துக்குப் போனாலும் கக்கதிலே அட்சய பாத்திரமா?
சுவாமி வரங் கொடுத்தாலும் முன்னடியான் வரங் கொடான்
சூட்சுமத்தில இருக்குது மோட்சம்
சூட்சுமம் அறியாதவனுக்கு மோட்சம் இல்லை

14 லோகங்கள்

கீழேழு லோகமும் மேலேழு லோகமும் கண்ட காட்சியா?
குபேர பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றுமில்லை
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனது போல
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது (150)
ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு
காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா?

ஏகாதசி மஹிமை

ஏகாதசிக்கு மா இடித்தாற் போல
ஏகாதசித் திருடியை ஏற்றடா ரததின் மேலே
ஏகாதசி மரணம் துவாதசி தகனம்
ஏகாதசி மரணம் நல்லதென்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும் நாராயணன் என்னை காப்பாற்ற மாட்டானா?
ஓமப் பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல
வடக்கே போன வாலியும் வரக் காணோம்
அவன் தம்பி அங்கதன் (160)
ரிஷிப் பண்டம் ராத்தங்காது
ஆண்டியே அன்னத்துக்கு அலையறச்சே லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்
ஆதி முதல்வனே பாய்ந்தோடும் போது ஐயர் மணி ஆட்டுவாரா?
ஆத்தாள் அம்மணம், அன்றாடம் கோ தானம்
ஆயிரம் உளிவாய்ப் பட்டுத்தான் ஒரு லிங்கம் ஆகவேண்டும்
சரியான சாப்பாட்டு ராமன்
அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?
அண்ணாமலையாருக்கு 64 பூசை, ஆண்டிகளுக்கு 74 பூசை
அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிர் பிடுங்குமா?
வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி (170)
பகீரதப் பிரயத்தனம் செய்தான்
அகாரியத்திலே பகீரதப் பிரயத்தனம் ஆகாது
அகோர தபசி, விபரீத நிபுணன்
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
அக்கினி தேவனுக்கு அபிடேகம் செய்தது போல இருக்கிறது
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூறு வழியாக வரும்
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
வீட்டுக்கு வந்த வரலெட்சுமி
லெட்சுமி இருக்கும் இடத்தில சரசுவதி இருக்க மாட்டாள்
பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது (பாவம் செய்தவர்கள் நிலை) (180)
பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல
வைகுண்டம் என்பது திரு மாநகரம்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில்

Picture: Kneeling figure from Cambodia

வேத மகிமை

வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்
வேதத்தில் நாலு விதம் உண்டு
வேதத்திற்கு உலகம் பகை, உலகத்திற்கு ஞானம் பகை
வேதத்திற்கும் விக்ரகபக்திக்கும் பகை
வேதத்தை அறியாத கிழவன் வீண்
வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை
வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரம் கள்ளருக்கு (190)
வேதம் ஒத்த மித்திரன்
வேதம் கேடவரை, வேதம் கேடவர் என்பான் ஏன்?
வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது
உருத்திராக்கப் பூனை உபதேசம் பண்ணினது போல
ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை
ஐயர் ஒன்றே கால் சேர் அவர் அணியும் லிங்கம் அரை சேர்
ஐயானாரே வாரும், கடாவைக் கொள்ளும்
ஐயனார் கோவிலிலே ஆனை பிடிக்க வேண்டும் (200)
ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தங்கம்
ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திரகாளி
கஞ்சி வரதப்பா என்றால் வாயில் வாரப்பா என்றானாம்
காசிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்
கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும்
சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்தான் (ஸ்மசான வைராக்யம்)
தவசிச்சிக்கு தயிரும் சோறும் விசுவாசிக்கு வென்னீரும் பருக்கையும்
தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்
தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை (210)
தவத்திலிருதால் தலைவனைக் காணலாம்
தவத்துக்கொருவர் கல்விக்கிருவர்

Picture: Ganesa in US Museum

உன்னையே நீ அறிவாய்
எல்லாம் தலை விதி (கர்ம வினைக் கொள்கை)
உடலில் உள்ள அழுக்கைப் போக்கிடலாம் உள்ளத்திலுள்ள
அழுக்கைப் போக்குவது கஷ்டம்
ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்
மலையத்தனை சுவாமிக்கு கடுகத்தனை கற்பூரம்/ சாம்பிராணி

பெருமாள்

பெருமாளைச் சேர்ந்தோருக்குப் பிறப்பில்லை, பிச்சைச் சோற்றுக்கு எச்சல் இல்லை
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு
பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?
பெருமாள் என்கிற பெயரை மாற்றி பெத்த பெருமாள் ஆச்சு (220)
பெருமாள் செல்கிற வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்
பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரம்மா நினைத்தால் ஆயுசு குறைவா?
பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார்
பிச்சை எடுக்கிறதாம் அதைப் பிடுங்குகிறதாம் அனுமார்
பிள்ளையாரைப் பிடிச்ச சனி அரசமரத்தையும் பிடிச்சதாம் (225)

(பழமொழிகளில் இந்துமதம் என்ற எனது கட்டுரையில் கண்ட 14 பழமொழிகளையும் சேர்த்துக் கொள்க)

இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்-Part 1


Picture: Lord Ganesh

( முன்னர் ஏற்றப்பட்ட (1) 20,000 தமிழ் பழமொழிகள், (2) யானை பற்றிய 100 பழமொழிகள், (3) பழமொழிகளில் இந்துமதம் ஆகிய மூன்று கட்டுரைகளையும் (4) Amazing Collection of 20,000 Tamil Proverbs கட்டுரையும் காண்க ).

இந்து மதத்தின் மாபெரும் தத்துவங்களை, ஒரு சில சொற்களைக் கொண்டே பழமொழிகள் விளக்குகின்றன. இத்தகைய 14 பழமொழிகளை விளக்கி 2009ஆம் ஆண்டில் எழுதிய எனது கட்டுரை இலண்டன் தென் இந்திய சங்க தீபாவளி மலரிலும் பல பிளாக்குகளிலும் வெளியாகியது இப்போது மேலும் சில நூறு பழமொழிகளை மட்டும் பார்ப்போம்.
கங்கை நதி ,காசி பற்றி மட்டுமே பத்துப் பதினைந்து பழ மொழிகள் இருக்கின்றன. ராமனும் கண்ணனும், அரியும் சிவனும், கங்கையும் காசியும் சுவர்க்கமும் நரகமும், கோவிலும் சுவாமியும் தமிழர்கள் வாழ்வில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்ற பேருண்மையை பழமொழிகள் பட்டவர்த்தனமாகப் பறை சாற்றுகின்றன.

பழமொழிகள்

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது
அரசன் அன்றேகொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
கல்லைக் கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டால் கல்லைக் காணும் ( மரத்தை மறைத்தது மாமத யானை……….என்பதும் அதுவே)
லங்கணம் பரம ஔஷதம் (ருக்மாங்கனின் ஏகாதசி விரதக் கதை)
தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?
சட்டியில் இருந்தால் தானே அகப்பைஅயில் வரும் (கந்த சஷ்டி பற்றிய பழமொழி)


Picture: Tripura Vijaya from Tamilartsacademy.org

இது என்ன வேத வாக்கா?
அவன் சரியான பிரஹஸ்பதி (காலப்போக்கில் பொருள் மாறிய மொழி)
அவன் சரியான அசமஞ்சன் (புராணக் கதை)
இது என்ன பிரம்ம வித்தையா?
காலம்–கலி காலம், நாம் என்ன செய்ய?
கெடுவான் கேடு நினைப்பான் (விநாச காலே விபரீத புத்தி)
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
இருக்குதே தண்ணீர் வண்டி, இல்லாவிட்டால் தம்பிரான் பதவி
என்ன ரொம்ப வேதாந்தம் பேசுகிறாய்?
அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை பாடுவேனா?
அடியைப் பிடியடா, பாரத பட்டா
அவனின்றி ஒரு அணுவும் அசையாது (20)

Picture: Sri Krishna

பிள்ளையார் சுழி போட்டாயிற்று
பிள்ளையார் பிடிக்க குரங்கானது
உரு ஏறத் திரு ஏறும்
ஒன்றாகக் காண்பதே காட்சி
ஆருமில்லார்க்கு தெய்வமே துணை (அகதிக்குத் தெய்வமே துணை)
தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் (தனக்கும் மிஞ்சியதுதான் தானம்)

அரியும் சிவனும்

சிவ பூஜையில் கரடி புகுந்தது போல
சிவனொடுக்கும் தெய்வம் தேடினும் இல்லை (சிவாத் பரதரம் நாஸ்தி)
அரன் அதிகம் அரி அதிகம் என்போருக்கு பரகதி இல்லை (கம்பன்)
அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு
தோத்திரத்துக்கு திருவாசகம் சாத்திரத்துக்கு திருமந்திரம்
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
சித்தம் போக்கு சிவம் போக்கு, ஆண்டி போக்கும் அதே போக்கு
கல்லாடம் படித்தவனிடம் சொல்லாடாதே
அன்பே சிவம்
சிவத்தைப் பேணிற் தவத்திற்கழகு
சிவனே என்று கிட
சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்
எறும்புக்கும் படி அளப்பான் ஈசன் (சிவநி ஆக்ஞாலேக சீம கறவது: தெலுங்கு)


Picture: Sri Nataraja

பிச்சைச் சோற்றிற்குப் பிறப்பு இல்லை (40)
என் கடன் பணி செய்து கிடப்பதே (அப்பர்)
நீரில்லாத நெற்றி பாழ்; நெய் இல்லாத உண்டி பாழ்
சும்மா இருப்பதே சுகம் (சும்ம இரு, சொல்லற)
தருமம் தலை காக்கும்
வானத்துக்கு வால்மீகி போருக்கு வியாசர்
காணாமற் கோணாமற் கண்டு கொடு (முக்கால சந்தியா வந்தனம் செய்யும் நேரம் பற்றிய பழமொழி )
வயிறு நிறைந்தால் வாய் வாழ்த்தும் (அன்ன தானப் பெருமை)
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தது போல

வேலும் மயிலும்

வேலை வணங்குவதே எமக்கு வேலை (பாரதி)
வேலுண்டு வினை இல்லை; மயிலுண்டு பயமில்லை
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
குன்று தோராடும் குமரன் (50)
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வதாற்போல்
கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்
நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு
கடவுளை நம்பினார் கைவிடப் படார்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போக
கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
பசித்திரு, தனித்திரு, விழித்திரு
நாலாம் பிறை பார்த்தவன் கதி நாய் பட்டபாடு தான்
ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண்பேச்சு
கருடா சவுக்கியமா என்றதாம் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு
கருடா சவுக்கியமா என்று கேட்டதற்கு அவரவர் இருக்கிற இடத்தில் இருந்தால் சவுக்கியம் என்றதாம்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது
அவன் ஒரு ருத்திராட்சப் பூனை (65)

கோவிலோ கோவில்

Picture: Madurai Meenakshi Temple

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் பாப விநாசம்
கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்
கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்

கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்?
கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா?
கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும்
கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?
கோவில் விளங்கக் குடி விளங்கும்
கண்ட இடம் கைலாசம்
கண்ட கண்ட கோவில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யறது
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது (கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
ஒரு மனப் படு, ஓதுவார்க்குதவு (80)
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

கங்கையும் காசியும்


படம்: சிவனும் பார்வதியும் (Shiva and Parvati)

கங்கா ஸ்நானம் துங்கா பானம்
கங்கைக்குப் போன கடாவின் கதை போல
கங்கை ஆடப் போன கடாவை கட்டி அழுதானாம்
கங்கையிலே படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமற் செய்த பாவம் தொலையாது
கங்கையிலே பிறந்த நத்தை சாலக்கிராமம் ஆகாது
கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
வைகைக் கரைக்கு வார்த்தையும் கங்கைக் கரைக்குக் கீர்த்தியும்
கங்கையிலுள்ள மீன் எல்லாம் சொர்க்கத்துக்குப் போகாது (ரா.கி.பரமஹம்சர்

காசி இரண்டு எழுத்துத் தானே காண எத்தனை நாள் செல்லும்?
காசிக்குப் போயும் கரும தொலையவில்லை
காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா?
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது
காசிக்குப் போனாலும் அகப்பை அரைக் காசு
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை
காசிக்குப் போனேன் காவடி கொண்டு வந்தேன்
காசி முதல் ராமேசுவரம் பரியந்தம்
காசி முதல் ராமேசுவரம் வரையில் தெரிந்தவன் (100)
காசியில் இருந்தவன் கண்ணைக் குத்த காஞ்சீபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போனானாம்