ஐந்து இன இந்துக்கள் குடியேறிய நாடுகள் (Post No.10,519)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,519

Date uploaded in London – –    2 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 6

அதர்வண வேத 12-ஆவது காண்டத்தில் முதல் துதி பூமி சூக்தம் ; 63 மந்திரங்களைக் கொண்ட அந்த அற்புதமான துதியைத் தொடர்ந்து காண்போம்.

மந்திரம் 13

யஸ்யாம் வேதிம் பரிக்ருஹணந்தி பூமியாம் யஸ்யாம் யக்ஞம் தன்வதே விஸ்வகர்மாணஹ

யஸ்யாம் மீயந்தே ஸ்வரவஹ ப்ருதிவ்யா மூர்த்வா சுக்ரா  ஆஹுத்யாஹா புரஸ்தாத்

ஸா நோ பூமிர் வர்தயத்  வர்தமானா –13

எந்த பூமியில் மனிதர்கள் யாக மேடைகளை நிறுவி, பலரும் சேர்ந்து வேள்வி என்னும் துணியை நெய்கிறார்களோ , பிரார்த்தனைக்கு முன்னர் எங்கு உயரமான, ஒளிமிக்க கம்பங்களை நாட்டுகிறார்களோ அந்த பூமாதேவி வளம் பெறட்டும் ; எங்களையும் வளம் பெறச் செய்வாளாகுக — 13

வேள்வி என்னும் கிரியையை ஆடையாக  உருவகப்படுத்தி பலரும் நெய்யும் சித்திரம் இதில் உளது. எங்களுக்கு வளம் தருக என்ற கூட்டுப் பிரார்த்தனையும் இருக்கிறது  ஒளி மிகுந்த யாக ஸ்தம்பங்களையும் புலவர் போற்றுகிறார்.

வர்த்த = வளர்க  (வளம் பெருகுக) என்ற வினைச் சொல் பாஸிட்டிவ் /ஆக்கபூர்வ எண்ணத்தின் பிரதி பலிப்பு  ஆகும்

Xxxx

மந்திரம் 14

யோ நோ த்வேஷத் ப்ருதிவி யஹ ப்ருதான்யாத் யோ அபிதாஸான் மனஸா யோ வதேன

தன் நோ பூமே ரந்தய  பூர்வகுருத்வரி –14

பூமாதேவியே ! எங்களுக்குஆயுதங்களாலும் எண்ணங்களாலும்  தொல்லை தரும் விரோதிகளை நாங்கள் வெல்வோமாக.. முன்னரே நீ உதவிய வாறு செய்வாயாகுக .

எதிரிகள், அவர்களுடைய  மனதாலும் தொல்லை  தருவதாகக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. சைக்கலாஜிக்கல் பிளாக்மெய்ல் PSYCHOLOGICAL BLACKMAILING  என்று சொல்லலாம். இது புதிதல்ல. முன்னரே நடந்தவைதான். நீ அப்போது உதவியது போலவே இப்போதும் உதவுக என்கிறார் புலவர்  – 14

Xxx

மந்திரம் 15

த்வ ஜாதா ஸ்த்வயி சரந்தி  மர்த்யாஸ்த்வம்  பிபர்ஷித்வி பதஸ்த்வம்  சதுஷ்பதஹ

தவேமே ப்ருதிவி பஞ்ச மானவா  யேப்யோ ஜ்யோதிரப்ருதம்

மர்த் யேப்ய  உத்யந்த் ஸூர்யோ  ரஸ்மிபிராத நோதி – 15

இரு கால், நான்கு கால் பிராணிகள் அனைத்தும் உன் மீது தோன்றின. அவற்றை நீ தாங்கி வளர்க்கிறாய் . உன் மீது ஐந்து இன  மக்கள் தோன்றினார்கள்.  சூரியன்  உதயமாகி அமுத மயமான ஒளியை உன் மீது பரப்புகிறான்.

ஐந்து இன  மக்கள் என்பது ரிக் வேதம் முழுதும் பல இடங்களில் வருகிறது. அவர்களை ஐந்து பெரிய குழுக்கள் என்று வியாக்கியான க்காரர்கள் வருணிக்கிறார்கள் . இவர்கள் சிந்து சமவெளியிலிருந்து ஐரோப்பா முழுவதையும் சென்றதை ஸ்ரீகாந்த் தலகரி எழுதிய புஸ்தகத்தில் காணலாம்.

அவர் அனு , யது, துர்வாச, புரு, த்ருஹ்யு என்ற ஐந்து குழுக்களைக் குறிப்பிட்டு, அவர்களில் த்ருஹ்யு என்னும் இனமும் அனு என்னும் இனமும் ஆசியா மற்றும் ஐரோப்பா  முழுதும் சென்றதைக் காட்டுகிறார்

ANU, DRUHYU, YADU, TURVASA, PURU.

Xxxx

மந்திரம் 16

தா நஹ ப்ரஜாஹா  ஸம் துஹதாம் சமக்ரா வாச்சோ  மது ப்ருதிவி  தேஹி  மஹ்யம் -16

எல்லா உயிரினங்களும் சேர்ந்து எங்கள் மீது ஆசிகளை பொழியட்டும் ;

பூமா தேவியே எனக்கு தேனினும் இனிய வாக்கினை- பேச்சிநை அருளுக –16

‘இனிய உளவாக இன்னாது  கூறல் கனியிருப்பக்

காய் கவர்ந்தற்று’ என்பான் வள்ளுவன்.

அதற்கு இணையாக தேன் போன்ற வாக்கினைக்  கேட்கிறான் புலவன்.

தேன் போன்ற சொற்கள் என்ற தொடர் ரிக் வேதத்திலும் வருகிறது. அஸ்வினி தேவர்கள் பற்றிக் குறிப்பிடும் இடமெல்லாம் தேன் வருகிறது.

பறவைகளும் மிருகங்களும் கூட அருள் மழை பொழியட்டும் என்று வேண்டுவது இயற்கை மீதும் புறச் சூழல் மீதும் உள்ள மதிப்பையும்  மரியாதையையும் காட்டுகிறது —

To be continued………………………………….

tags- ஐந்து இன மக்கள், பஞ்ச ஜனா , இந்து, குடியேற்றம்

கணிதம்- இந்துக்களின் மஹத்தான 3 கண்டுபிடிப்புகள்! (Post No.6976)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 4 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –13-26 am

Post No. 6976

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

-subham–

இந்துக்களின் நரபலி யக்ஞம்! 179 பேர் ‘படுகொலை’? (Post No.4270)

Written by London Swaminathan

 

Date: 4 October 2017

 

Time uploaded in London- 11-07 am

 

Post No. 4270

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகில் ரிக் வேதத்தை அலசி ஆராய்ந்தது போல வேறு எந்த மத நூலையும் எந்த வெள்ளைக்காரர்களும் மார்கஸீய வாந்திகளும் ஆராய வில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி! இவர்கள் எல்லா சமய நூல்களையும் இப்படி அணுகி இருந்தால் இவர்கள் ‘யோக்கியர்’கள். ஆனால் மற்ற சமய நூல்களில் சொன்னவற்றை நியாயப்படுத்தி எழுதினார்கள் (குத்து, வெட்டு, கொலை செய், கற்பழி) அவைகளைக் குறைகூறவில்லை. சுமார் 50 வெள்ளைத் தோல்களும் , நூற்றுக்  கணக்கான மார்கஸீய வாந்திகளும் இந்திய வரலாறு பற்றி எழுதியதை இன்றுவரை பாட புத்தகத்தில் வைத்துள்ளனர். நான் மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சரித்திரப் பட்டம் வாங்கியவன். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவமிகளின் உபந்யாசங்களில் உள்ள சரித்திரம் எதுவும் அதில் இல்லை. மார்கஸீய, காங்கிரஸ் தில்லுமுல்லுகள் எழுதிய — வெள்ளைக்கார்கள் எழுதிய —-டல்ஹௌசி பிரபுவின் சீர்திருத்தம், ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றுவது ஏன்? என்று பல பாடங்களைப் படித்துதான் பட்டம் வாங்கினேன்.

ஆனால் 70 வருடங்களுக்கு முன் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் பேசிய உரைதனில் பேசிய போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மனின் நாலாவது நூற்றாண்டுக் கல்வெட்டு கண்டு  பிடிக்கப்பட்டதும், துருக்கியில் கி.மு 1380 ஆண்டு வேத கால தெய்வக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டதும் எந்த சரித்திரப் புத்தகத்திலும் இல்லை. மத் தியப்பிரதேசத்தில் தாரா என்னும் இடத்தில் மசூதிக்குள் சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் அவர்களுடைய சொற்பொழிவு மூலம் அறிந்ததே!

 

அயோக்கியர் எழுதிய வரலாற்றை விட்டு விட்டு வெள்ளைத் தோல் எழுதியவற்றுக்கு வருவோம். வேத கால இலக்கியங்களை சுமார் 50 வெள்ளையர்கள்– இல்லை இல்லை கொள்ளையர்கள்—- ஆராய்ந்து பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன் மொழிகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் நூற்றுக் கணக்கான நூல்களையும் எழுதிக் குவித்துள்ளனர். அவைகள் ஆங்கிலத்தில் உள்ளதால் அவை எல்லாம் பெரிய ஆராய்ச்சி நூல்கள் என்று அக்காலத்தவர் கருதினர் (ஆனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்; அவைதான் எனக்கும் பயன்படுகின்றன! அவற்றைப் படித்தபின்னர் அவர்களே அவர்களை முட்டாள் என்று காட்டிவிட்டனர் என்பதாவது எனக்குத் தெரிந்தது)

 

வேதங்கள் நான்கு: ரிக், யஜூர், சாமம், அதர்வணம்.

அவற்றை அடுத்து வந்தவை பிராமணங்கள் எனப்படும் உரைநடை இலக்கியம். இவை பிரம்மாண்ட அளவில் இருக்கின்றன. அப்போது மோசஸ் பிறக்கவில்லை . இதுவரை மோஸசுக்கு வரலாற்று ஆதாரம் தொல்பொருட்துறை ஆதாரம் கிடைக்கவில்லை ஆனால் அவர்தான் மூன்று மதங்களுக்குத் தலைவர்!!!

 

வெள்ளைக்கார  “யோக்கியர்” இதை எல்லாம் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். விக்கிபீடியாவைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மூர் திராவிட தத்துப் பித்துகளுக்கும் “கெக்கெப் பிக்கே”க்களுக்கும் இது புரியாது. அவ்வளவு மூளை!!!!

பிராமண்ட பிராமண நூல்களை அடுத்து வந்தவை ஆரண்யகங்கள் ( காட்டு நூல்கள்) அவற்றை அடுத்து வந்தவை உலகப் புகழ் பெற்ற உன்னத உபநிஷத்துகள்.

 

சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு வரலாற்று, தொல்பொருட்டுறை ஆதாரங்கள் இருக்கின்றன; கி.மு 1400 முதல்; சரஸ்வதி நதியின் விஞ்ஞானச் செய்திகள், வேதங்களை கி.மு 2000க்கு முந்தியவை என்று காட்டிவிட்டன. சுருங்கச் சொன்னால் வேதங்களோ பிராமணங்களோ தோன்றிய காலத்தே  உலகில் தமிழ் மொழி இல்லை, கிரேக்க மொழி இல்லை, லத்தீன் மொழி இல்லை; கொஞ்சம் சீன மொழியும், ஹீப்ரூ /எபிரேய மொழியும் இருந்தன. மற்ற மொழிகள் இன்று மியூசியங்களில் உள்ளன.

 

ஆக இவ்வளவு பழமையான பிராமண இலக்கியங்களில் என்சைக்ளோபீடியா போல பல விஷயங்கள் உள்ளன அவற்றின் சப்ஜெட்களை- பொருளடக்கம், இன்டெக்ஸ் போட்டாலே அவர்கள் பிரஸ்தாபிக்கும் விஷயங்களின் பட்டியல் கிடைத்துவிடும்! கணிதம், வான சாத்திரம், அரசனின் பட்டாபிஷேகம் முதலியன குறித்து அவர்கள் சிலாகிக்கும் விஷயங்களைக் கண்டால், வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் நல்ல ஜோக் புக்ஸ் JOKE BOOKS என்று நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; பசுமரத்தாணி போலப் பதியும்.

 

179 பேர் படுகொலை! நரபலி!!

பிராமண நூல்களில் அஸ்வமேத யாகம், ராஜ சூய யாகம், புருஷமேத யாகம் குறித்துப் படித்த வெள்ளைக் காரர் களுக்கு ஒரே குஷி; மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய கூலிகள், இது என்னத் தத்துப் பித்து உளறல் என்று பரிகசித்தனர். இதை வைத்தே இந்துமதத்தை கோழிகளைக் கூடைக்குள் அமுக்குவது போல ஒரே அமுக்காக அமுக்கிவிடுகிறேன் பார் என்று கொக்கரித்தார்கள்; மெக்காலே போன்றோர் இந்த வேகத்தில் ஆங்கில கல்வி பரவினால் இந்தியாவும் இராது; இந்துமதமும் இராது என்று எழுத்தில் வடித்தனர். நம்மூர் திராவிடங்களும் ஜஸ்டிஸ் கட்சிகளும் பலமாக மண்டையை ஆட்டின.பரிதபக் கேஸுகள்!!!

 

சோழன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் செய்தது புற நானூற்றில் உள்ளது. பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது புறநானூற்றிலும் காளிதாசனின் ரகுவம்சத்திலும் — குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சோழப் பேரசன் கரிகால் பெருவளத்தான் பருந்து வடிவ யாக குண்டம் நிறுவி வேள்வி வேட்டதும், ரிக் வேதம் சொல்லுவது போல எல்லோரையும் ஏழு அடி நடந்து வழியனுப்பியதையும் புற நானூறும் ஏனைய சங்க நூல்களும் செப்புகின்றன. வருணனையும், இந்திரனையும், விஷ்ணுவையும் தமிழ்க்கடவுள்கள் என்று ‘ஒல்காப்புகழ் தொல்காப்பிய’னும் செப்பி விட்டான். இந்த 2000 ஆண்டுக்கு முந்தைய விஷயங்கள் வெள்ளைக்காரர்

களுக்குத் தெரியாது!

 

கால்டுவெல் போன்றோர் உளறிய உளறல்களை மரத் (மறத்) தமிழர்கள் ஆங்காங்கே மறுத்து அடிக்குறிப்பு சேர்த்தனர்.

 

பிராமண நூல்களில் சதபத, ஐதரேய , தைத்ரீய பிராமணங்கள் யாக யக்ஞ்ங்களை விரிவாக எடுத்துரைக்கின்றன. அதில் தைத்ரீய பிராமணம் யஜூர் வேதத்தைச் சேர்ந்தது. அதில் புருஷமேத யக்ஞம் எனப்படும் நரபலி யக்ஞத்தில் 179 பேர் தீயில் ஆகுதி அளிக்கப்பட்டதாக பட்டியல் உள்ளது அதைப் அடித்த வெள்ளைகளுக்கு ஒரே ஆனந்தம்! இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்று போதுமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்!

 

மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற அரை வேக்காடுகள்– மான் தோல் போர்த்திய புலிகள்  — சாயனர் சொன்ன வியாக்கியானத்தைச் சொல்வதாக சொல்லி — அவர் சொல்லாத விஷயத்தையும் சேர்த்தனர்-

 

 

‘ஆரிய’ என்ற சொல்லின் பொருளை ‘ரிஷி முனிவர்கள்’, ‘வடக்கில் இமயத்தின் அடிவாரத்தில் வாழ்பவர்கள்’- ‘சம்ஸ்கிருத மந்திரங்களில் வல்லவர்கள்’- ‘பண்பாடு மிக்கவர்கள்’- ‘நாகரீகம் தெரிந்தவர்கள்’- ‘மாண்புமிகு’– என்ற உண்மைப் பொருளைப் பாரதி பாடல்களிலும் புற நானுற்றிலும் காணலாம்– மாக்ஸ்முலர் வகையறாக்கள் ஆரியர் என்பது ஒரு இனம் என்றும் அதில் தானும் ஒருவன் என்றும்- அவர்கள் ஜெர்மனி முதலிய இடங்களில் வாழ்ந்தனர் என்றும் இந்தியாவுக்குள் கி.மு 1500 வாக்கில் நுழைந்திருக்கலாம் என்றும் கதை கட்டினர். இவை எல்லாமின்று ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப்’ போய்விட்டன.

 

ஏனெனில் சரஸ்வதி நதியின் விஞ்ஞான ஆராய்ச்சியும் நாஸா NASA புகைப்படங்களும் வெள்ளைத் தோலை உரித்துவிட்டன.

பிராமண நூல்களில் புருஷமேத யக்ஞத்தில் பலியிடப்பட்ட, அல்லது பலியிடப்பட வேண்டிய 179 பேரின் பட்டியல் உள்ளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் — மூன்று கட்டுரைகளில் – 179 பேரின் பட்டியலையும் கொடுத்துவிட்டதால் இங்கே தரப்போவதில்லை..

 

அதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மைகளை மட்டும் விண்டுரைப்பேன்!

 

1.தீயில் தூக்கிப் போட வேண்டிய முதல் ஆள் பிராமணன் என்று பட்டியல்  துவங்குகிறது. இதைப் படித்தவுடன் வெள்ளைத்தோல்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. சூத்திரன், ராக்ஷசன், அசுரன் என்று சொல்லி இருந்தால் , பார்த்தீர்களா பிராமணர்களின் அட்டூழியங்களை என்று எழுத முடியும்.

2.இதற்குப் பின்னர் போர் வீரன், வணிகப் பெருமகன், சூத்திரன் ஆகியோர் வருகின்றனர்.

 

  1. இந்தப் பட்டியல் மறை மொழியில் உள்ளது. அதாவது ஒரு சமுதாயம் என்பது இவர்கள் இல் லாமல் இல்லை என்று உணர்த்த எழுதப்பட்டது போல உளது. காரணம் என்னவெனில் இப்படி ஒரு யாகம் நடந்ததாக எங்குமே தகவல் இல்லை. பல நூறு ராஜாக்களில் ஒருவரான ஹரிசந்திரன் காலத்தில் சுனஸ்சேபனைப் பலிகொடுக்க முயன்றபோது புரட்சித்தலைவர் விசுவாமித்ரர் தடுத்துவிட்டதாத இருக்கிறது. சிறுத்தொண்டர் (பெரிய புராண) ஆதி சங்கர நரபலி முயற்சிகளும் காபாலிகர்களால் முயலப்பட்டதே அன்றி புருஷ மேத யக்ஞத்தின் பகுதியாகாது. மேலும் சங்கரர், சிறுத்தொண்டர் கதைகளும் தமிழ்த் திரைப்படங்கள் போல இனிதே- சுபம் – என்றே முழுமை பெறுகின்றன.

 

  1. 179 பேர் பட்டியலில் பல சொற்களுக்கு வெள்ளைகளுக்கே அர்த்தம் புரியவில்லை; விளக்கம் இன்றி அப்படியே எழுதிவிட்டனர்.

 

  1. இந்தப்படியலில் டாக்டர், வான சாத்திர அறிஞன், பொற்கொல்லன் ரதகாரன், கொல்லன், இசை துறை கலைஞர்கள், நாட்டிய சிகாமணிகள், இசைக்கருவி வாசிப்போர், மன்னருக்கு வரிவசூல் செய்வோர், மன்னருக்குப் பட்டாபிஷேகம் செய்வோர் ஆகியோரும் உள்ளது. அதாவது, இவர்கள் ஒவ்வொருவராக தீயில் போடப்பட வேண்டும்

 

ஆக இந்தப் பட்டியலை இலக்கிய பூர்வமாக, எழுத்துக்கு எழுத்து அர்த்தம் செய்ய முடியாது என்று கண்ட வெள்ளைகளும்  மார்கஸீய வாந்திகளும் பேசாமடந்தை ஆகிவிட்டன. இதைப் பற்றி பிரஸ்தாப்பிபதைவிட இதை தொட்டும் தொடாமலும் பட்டும் படாம லும் சொல்லிவீட்டு அந்தக் காலத்தில் — ஆதிகாலத்தில் — இருந்த நரபலியின் எச்சம் -சொச்சம்- மிச்சம்- மீதி என்று ஒரு வரி எழுதி விட்டு ஓடிப்போய் விட்டார்கள்

 

வெடிகுண்டு வெடிக்கலாம் என்று வந்த பயங்கரவாதிகளுக்கு புஸ்வாணமே கிடைத்தது!!!!!

 

  1. இதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால் 50 வெள்ளைகளும் 100 மார்கஸீயங்களும் 1000 திராவிடங்களும் ஒரு மந்திரக் கருத்திலும் ஒருமித்த கருத்து கொள்ளவில்லை. ஆரியர் கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று மட்டும் சொன்னால் போதும்– காட்டினால் போதும்– 300 வருஷம் நம்மை ஆண்ட வெள் ளையன் தயவும் ரொட்டித் துண்டும் கிடைக்கும் என்று வா லாட்டின.

7. இதைவிடப் பெரிய விசயம் என்ன வென்றால், கி,மு.1200ல் படிப்பறிவற்ற –மாடு மேய்க்கும்—அநாகரீகக் கும்பல் கைபர் கணவாய் வழியாக நுழைந்தது என்று சொல்லிவிட்டு- கிமு. 1000ல் அவர்கள் பிராமணங்களில் சொன்ன விஷயங்களைப் பட்டியல் போடுவது – “சூடான ஐஸ்க்ரீம்” என்று சொல்லுவது போல இருந்தது. உலகில் எந்த நாகரீகமும் இப்படி வளர்ந்ததாக சாட்சியம் இல்லை. நாம் சுமேரிய, எகிப்திய நாகரீகம் பற்றிப் படிப்பதெல்லாம் 5000 ஆண்டு வரலாறு. ஆக அதே அளவுகோலை இந்துக்களுக்கும் வைத்தால் நாம் 10,000 ஆண்டு வரலாறு உடையவர் ஆகி விடுவோம். அது எப்படி?

பிரம்மாண்டமான வேத இலக்கியமும் பிராமணங்களும் உருவான போது உலகில் வேறு எந்த இலக்கியமுமே இல்லை. எகிப்திய, பாபிலோனிய இலக்கியம் எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. ஆனால் ரிக்வேதச் சொற்களை, கொட்டாம் பட்டி காய்கறிக்கூடைக் கிழவி முதல் இமயமலை ரிஷிகேஷ் பண்டிதர்வரை இன்று வரைப் பேசி வருகின்றனர்; போற்றி வருகின்றனர். நமக்குத் தெரிந்த தமிழ், லத்தீன், கிரேக்கம் ஆகியவற்றுக்கு அப்போது இலக்கியமே இல்லை. ஹீப்ருவீல் அதற்குப் பின்னர்தான் மோசஸ் கதைக்கத் துவங்கினார். அவருக்கும் வரலாற்று ஆதாரம் இல்லை. இலக்கிய ஆதாரம் மட்டுமே உளது. சீன மொழிக் கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உளது. அழிந்து போன எகிப்திய, பாபிலோனிய  கவெட்டுகளும் ஜில்காமேஷ் போன்ற பிதற்றல்களும் உப்பு புளி எண்ணை விற்ற கணக்குகளுமாக உளது. 1,20,000 களிமண் கல்வெட்டுகள் கிடைத்தன. ஆயினும் ரிக்வேதம் போல ஒரு கவிதைத் தொகுப்பு கிடையாது. நாமோ அதை வியாசர் கி.மு 3102-க்கு முன் தொகுத்ததாகப் படிக்கிறோம்.

 

ஆக, நரபலி யாகம் நடக்கவில்லை. அதில் பிராமணன் முதலான 179 பேரைத் தீக்கிரையாக்கவும் இல்லை. அவர்கள் வேள்வி என்று சொன்ன சொல் பிறகாலத்தில் பகவத் கீதையில் வேள்வி என்ற சொல் பல விஷயங்களுடன் இணைக்கப்பட்டது போலப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

 

நானே வெள்ளைக்கரன் மொழிபெயர்ப்பை வைத்துதான் இவ்வளவையும் எழுதுகிறேன். அவன் எத்தனை தப்பு விட்டானோ? திரித்து எழுதினானோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்து அறிஞர்கள் மஹா நாடு கூட்டி ரிக் வேதத்தில் உள்ள 10,000 மதிரங்களுக்கும் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும் அல்லது கான்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற பெரியோர்கள் சொல்லுவது போல அவைகளை அர்த்தம் பாராமல் மந்திரங்களாக உச்சரிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் ஆதிசங்கரர்களும் வியாச மகரிஷிகளும் நமக்கு விளக்கம் தருவர் என்று நம்புவோமாக.

 

TAGS: இந்து, நரபலி, யக்ஞம், புருஷமேதம், 179 பேர் படுகொலை

 

-சுபம்—

 

இந்துக்களின் மூன்று உலக மஹா கண்டுபிடிப்புகள்!!! (Post No.4200)

Written by London Swaminathan

 

Date: 10 September 2017

 

Time uploaded in London- 17-10

 

Post No. 4200

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதத்தில் இந்துக்கள் கேட்பது என்ன?

 

ரிக் வேதத்தில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உண்டு. சில துதிகளைப் படித்தால் அவர்கள் (ரிஷிகள்) என்ன வேண்டினார்கள் என்பது தெரியும்:

 

ஒவ்வொரு துதியும் இறைவனின் மகத்தான சக்தியைப் போற்றும் . இறைவனின் சாதனைகளைப் பட்டியலிடும். பின்னர் செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகளை வேண்டும். சில நேரங்களில் பாவ மன்னிப்பு, நோயிலிருந்து விடுதலை ஆகியனவும் இடம்பெறும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:–

இந்திரனுக்கு (கடவுளுக்கு) துதி:

ஓ இந்திர த்யௌஸ் அசுரன் உனக்கு அடி பணிந்தான்; நீண்ட நிலப்பரப்புடைய பிரம்மாண்டமான பூமி உன் வசமாயின.

 

எல்லா கடவுளரும் இந்திரனை முன்னிலையில் வைத்தனர்-1-131-1

 

உனக்கு இரண்டாவது (ஈடு, இணை) என்பதே இல்லை 1-32-12

 

முப்பது சால்களில் இந்திரன் சோமபானம் குடித்தான்.7-66-4

பின்னர் இந்திரன் சொல்கிறான்:

நான் ஆகாயத்தையே தூக்கினேன்; மஹா பலசாலிகளில் மிகப்பெரியவன்; நான் சோம பானத்தைப் பருகவில்லையா?

 

சோமபானத்துக்கு அவ்வளவு சக்தி! (சுரா பானம் என்பது மதுபானம்; அதை வேதம் நிந்திக்கிறது)

 

அக்னிக்கு ஒரு துதி:

 

அக்னியே! நீ ஒரு தூதன்; நன்மை செய்பவன்; கருணையின் வடிவம்;  பலத்தின் மகன்; உனக்கு உயிர்வாழும் அனைத்தையும் தெரியும்.

அக்னிக்கு, நான் ஒரு புதிய சக்திவாய்ந்த துதிப் பாடல் பாடுவேன்; என்னுடைய சொற்களையும் பாடலையும் கொண்டுவருகிறேன்.

விலை மதிப்புடைய பொருட்களை உடைய தண்ணீரின் மகனே!

நீ பூமியின் மீது உரிய பருவத் தி ல் அமர்ந்து இருக்கிறாய். 1-143-1

 

மருத் (காற்று) தேவனுக்கு ஒரு துதி:

மின்னலைச் சுமக்கும் தேர்களில் விரைந்து வருவாயாக; குதிரைகளில் ஈட்டிகளை ஏந்தி, இனிய பாடல் பாடிக்கொண்டு வருக  1-88-1

 

கடவுளின் அழகையும் ரிஷிகள் போற்றினர்:

இந்திரனின் ஒரு அடைமொழி சுசிப்ரா= அழகான கன்னம்/ மூக்    குடையோன்

 

அக்னியின் ஒரு அடைமொழி= அழகிய தோற்றம் உடையோன்

சீனிவாலி என்னும் தேவி மீதான துதி:

அழகிய விரல்கள், அழகிய கைகள், பல மகன்களை ஈன்றெடுத்த தாயே! அகலமான கூந்தல் உடையோய்! ஆண்களின் ராணியே! அந்த சீனீவாலிக்கு புனித அன்பளிப்புகளைத் தருவோம் 2-32-7

 

செல்வம் வேண்டும்1

எல்லோரும் விரும்புவது செல்வமே.

இதோ சில துதிப்பாடல்கள்

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொணர்க; அதையே விரும்பி நிற்கிறோம் 8-45

 

இந்திரனுக்கு ஒரு துதி:

ஓ, சோமபானப் பிரியனே! உங்கள் உண்மையுள்ள, ஆனால் ஒன்ர்ருக்கும் உதவாதவர்கள் நாங்கள்

ஆயிரக்கணக்கில் அழகான குதிரைகளை அளிப்பாயாக! ஓ செல்வச் சீமானே!

பலத்தின் தேவதையே! உனது தாடைகள் வலுவானவை; சக்திவாய்ந்தவன் நீ.

ஆயிரக்கணக்கான அழகான குதிரைகளையும் பசுமாடுகளையும் அருள்வாயாக 1-29

மேலும் ஒரு துதி

ஓ!இந்து, சோமா! எல்லா பக்கங்களிலும் செல்வத்தைக் குவிப்பாயாக

ஆயிரக்கணக்கான மடங்கு பொக்கிஷங்களை அள்ளித் தருக–9-40

அளவற்ற தனத்தை அருள்க; ஓ இந்து செல்வத்தைத் தா.

தங்கத்தையும் குதிரைகளையும் பசுக்களையும் தா 9-41-4

 

ஓ மருத்துக்களே! செல்வத்தை அருள்க; நிலயான, குன்றாத செல்வத்தை அருள்க

நூறு ஆயிரம் படங்கு, இன்னும் எப்போதும் பெருகட்டும் 1-64-15

 

 

ஓ அக்னி எங்கள் பிரபுக்களுக்கு அதிகம் செல்வத்தைக் கொடு 8-1-24

அற்புத இந்திரனே! அற்புதமான செல்வத்தை எங்களுக்குக் கொண்டு வா 7-20-7

 

நிலத்தை உழுவதற்கு முன் சொல்லும் மந்திரம்:

சுபமான உழுகலனே( சீதாவே), அருகில் வருக; உன்னை மதிக்கிறேன்; உன்னை வணங்குகிறேன்

 

நீ எங்களை ஆசீர்வதி; எங்களுக்கு வளத்தைக் கொடு; அளவற்ற உணவுதானியங்களை அள்ளிக் கொடு 7-57-6

வருணனுக்கு ஒரு துதி:

பாவத்திலிருந்து எங்களை விடுவி

அரசனே! எனக்கு என்றும் திடமான செல்வம் குறையவே கூடாது 2-2-8

 

வேதங்களில் உள்ள துதிகள் இந்துக்களின் மகத்தான மூன்று கண்டுபிடிப்புகளைக் காட்டும்!

மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட அரிய பெரிய கண்டு பிடிப்புகள் அவை!

வேதத்தின் எல்லா துதிகளிலும் இவை இழையோடி நிற்கும்!

 

மனித இனத்தையே மாற்றிய மூன்று இந்துக்களின் கண்டு பிடிப்புகள்

1.பசு மாடு

காட்டில் எவ்வளவோ மிருகங்கள் பால் கொடுத்தும் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரே மிருகம் பசு என்பதைக் கண்டுபிடித்து அதற்கு வேத காலத்திலேயே கோ மாதா, காம தேனு என்று பெயரிட்டு மனித குலத்துக்கு அளித்தான்

உலகில் எகிப்திய, பாபிலோனிய, மாயன் நூல்களில் எங்குமே இப்படி ஒன்றைக் காண இலயவில்லை.

2.குதிரை

காட்டில் வேகமாகச் செல்லும் சிறுத்தை முதலியன இருந்தும் சாக பட்சிணியான குதிரையே மனிதனுக்குப் பயன் படும் என்று அதை வசமாக்கி தேரில் பூட்டி உலகிற்கு அளித்தவன் இந்து!

வேதத்தில் துதிக் குத் துதி பசுவும் குதிரையும் பாய்ந்தோடும்!

உலகில் எந்த நாட்டு பழைய நூல்களில்ம் இத் தகைய போற்றுதலைக் காண இயலவில்லை.

 

3.டெசிமல் சிஸ்டம்! தசாம்ச முறை

 

மனித குல அறிவியல் முன்னேற்றத்துக்கு, ராக்கெட்டுகள் பறந்ததற்கு, கம்ப்யூட்டார்கள் செயல்பாட்டூகு எல்லாம் அடித்தளமிட்டது தசாம்ச முறை! இந்துக்கள் உலக மஹா மேதாவிகள்! அதி சூர கணிதப் புலிகள்! வேதத்தில் துதிக்குத் துதி 100, 1000, 10000, 1000000, கோடி என்று அடுத்தடுத்து வரும்.

உலகம் காணாத விந்தை இது. நாம் இல்லாவிடில் உலகம் விஞ்ஞானத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேறியிராது.

 

இன்றுவரை உலகில் பசும்பாலோ, பால் பொருட்களோ இல்லாவிடில் மனித இனம் மறு நிமிடமே நோயில் வாடி அழியும்.

 

இந்துக்கள் வாழ்க! வேதங்கள் வெல்க!!

NUMBERS IN SANSKRIT

एकं सत् विप्रा बहुधा वदन्ति

एकम् = 1

दशकम् = 10

शतम् = 100

सहस्रम् = 1000

दशसहस्रम् = 10000

लक्षम् = 100000

दशलक्षम् = 10^6

कोटि = 10^7

अयुतम् = 10^9

1010 से अधिक परिमाण

नियुतम् = 10^11

कंकरणम् = 10^13

विवर्णम् = 10^15

परार्धः = 10^17

निवाहः = 10^19

उत्संगः = 10^21

बहुलम् = 10^23

नागबलः = 10^25

तितिलम्बम् = 10^27

व्यवस्थान – प्रज्ञापतिः = 10^29

हेतुहीलम् = 10^31

कराहुः = 10^33

हेतविन्द्रीयम् = 10^35

सम्पत-लम्भः= 10^37

गणनागतिः= 10^39

निर्वाद्यम्= 10^41

मुद्राबलम्= 10^43

सर्वबलम्= 10^45

विषमग्नागतिः= 10^47

सर्वाग्नः= 10^49

1050 से अधिक परिमाण

विभूतांगम्= 10^51

तल्लाक्षणम्= 10^53

ஏகம் = 1

த³ஸ²கம் = 10

ஸ²தம் = 100

ஸஹஸ்ரம் = 1000

த³ஸ²ஸஹஸ்ரம் = 10000

லக்ஷம் = 100000

த³ஸ²லக்ஷம் = 106

கோடி = 107

அயுதம் = 109

1010 ஸே அதி⁴க பரிமாண

நியுதம் = 1011

கங்கரணம் = 1013

விவர்ணம் = 1015

பரார்த⁴​: = 1017

நிவாஹ​: = 1019

உத்ஸங்க³​: = 1021

ப³ஹுலம் = 1023

நாக³ப³ல​: = 1025

திதிலம்ப³ம் = 1027

வ்யவஸ்தா²ன – ப்ரஜ்ஞாபதி​: = 1029

ஹேதுஹீலம் = 1031

கராஹு​: = 1033

ஹேதவிந்த்³ரீயம் = 1035

ஸம்பத-லம்ப⁴​:= 1037

க³ணனாக³தி​:= 1039

நிர்வாத்³யம்= 1041

முத்³ராப³லம்= 1043

ஸர்வப³லம்= 1045

விஷமக்³னாக³தி​:= 1047

ஸர்வாக்³ன​:= 1049

1050 ஸே அதி⁴க பரிமாண

விபூ⁴தாங்க³ம்= 1051

தல்லாக்ஷணம்= 1053

-Mahabharat according to Kurukkal

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

ekam1

dasam 10

satam 100

sahasram 1000

ayutham10,000

laksham 100000

parapurvayutham10,00,000

koti 10000000

arpudham 100000000

padmakam 1000000000

karvam 10000000000

nikarvam 100000000000

bruntham 1000000000000

mahasarojam 10000000000000

sangam 100 00 00 00 00 00 000

avaramahasanagam

samudram 1 00 00 00 00 00 00 00 00

madhyam

parartham

samnjak imam sankhyaam vidhu: Pandithaa;

–SUBHAM—

சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723)

Picture of a Traditional Tamil Wedding

 

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 20-55

 

Post No. 3723

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.

 

1.1மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.

 

இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.

 

2.பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.

இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ரா மா யணம், சிலப்பதிகாரம்).

 

3.ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டத்து. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாவிடில் இரண்டாவது மனைவிக்கு அனுமதி உண்டு.

இந்துக்களின் மனு தர்ம சாத்திரமும் இதையே செப்பும். அரசர்கள் மட்டும் அருகாமை நாட்டு உறவு நீடிக்கவும், படைபல உதவிக்கும் என பல மனைவியரை மணந்தனர். ஆனால் ராமன் போன்ற மன்னர்கள் “இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று சொன்னார்கள்.

 

4.முதலில் சம்மதம், பின்னர் கல்யாணம் என்ற நடைமுறை இருந்தது.

பெண்ணுக்கு பணம் (சீதனம்) கொடுக்க வேண்டும்.

 

நிச்சயதார்த்தம் பின்னர் திருமணம் என்பது இந்துக்களின் வழக்கம்.

சங்கத் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

5.திருமண ஒப்பந்தம் எழுத்தில் இருந்தது. ஆனால் வாய்மூலம் சொன்னாலும் அதுவும் ஏற்கப்பட்டது. சுமேரியாவில் திருமணத்தைப் பற்றி சட்ட விதிகள் இருந்தன.

 

இந்துக்களும் நிச்சயதார்த்த்தின்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் உண்டு. இரு தரப்பினரும் அதை கைமாற்றிக்கொள்வர். சில நேரங்களில் இந்தப் பெண், இந்தப் பையனுக்குத்தான் என்று சொல்லிவிட்டால், வார்த்தை மாறாமல் அதை மதித்து நடந்தனர். இந்துக்களின் நீதி நூல்களில் திருமண விதிகள் உள்ளன.

 

6.மெசபொடோமியாவில் இ ருதரப்பாரும் பெண்ணுக்குக் கொடுத்த சீதனம் பற்றி எழுதி வைத்தனர். பெண்ணின் சொத்து குழந்தைகளையே சாரும். குழந்தை இல்லாவிடில் கணவருக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கான  சீதனத்தை குழந்தை பெறும்வரை தவனை முறையில் செலுத்தினர்..

இந்துமத்தில் இது பற்றி விதி இல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைப் போடுவர். ஆடி, கிருத்திகை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, தலை தீபாவளி என்று ஏதேனும் ஒரு சாக்கில் கொடுப்பர். அதை எல்லாம் மொத்த சீதனக் கணக்கில் சேர்ப்பர். இடை க்  காலத்தில் ஆண்களுக்கு கிராக்கி அதிகம் இருந்ததால் ஆண்களுக்கு   வரதட்சிணைப் பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பழங்காலத்தில் இவ்வாறு இல்லை.

 

6.சுமேரிய, பபிலோனிய திருமணங்கள், 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் என்னென்ன சடங்குகள் நடந்தன என்ற விவரம் இல்லை.

 

இந்துக்களின் திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது. இப்பொழுது அது இரண்டு நாட்களாகச் சுருங்கிவிட்டது. இந்துக்களின் 5 நாள் சடங்குகளும் நீதி நூல்களில் உள்ளன.

 

 

7.பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை, மாப்பிள்ளை அகற்றுவது முக்கிய சடங்காக இருந்தது.

 

இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே  – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் உள்ளது. தமிழ்நாடு ஏனைய எல்லா மாநிலங்களையும் விட வெப்பம் அதிகமான இடம் என்பதால் காலப்போக்கில் இந்த வழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். மாப்பிள்ளையும் வேட்டி துண்டுடந்தான் நிற்பார்; வடக்கில் குளிர் என்பதால் ஆணும் கூட உடம்பு முழுதும் மூடியிருப்பார்.

8.பெண்களின் தோழிகள் அந்தப் பெண் கன்னிப் பெண் தான் என்பதை உறுதி செய்யும் வழக்கம் இருந்தது.

 

இந்துக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்தது. முதல் இரவுக்குப் பின்னர் அந்த வேஷ்டி முதலிய துணிகளை நாவிதனுக்குத் தானம் செய்துவிடுவர். அந்தக் காலத்தில் அவர்கள்தான் மருத்துவச்சி; மகப்பேறு வேலைகளைக் கவனித்து வந்தனர். ஆகையால் ஏதேனும் இசகு பிசகு இருந்தால் அவர்கள் மூலம்  கிசு ,கிசு ஊர் முழுதும் பரவிவிடும்.

 

  1. திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி என்று நூஜி (Nuzi) முதலிய இடங்களில் உள்ள களிமண் (Clay tablets) கல்வெட்டுகள்/ பலகைகள் சொல்கின்றன.

 

இந்துக்களின் வேத மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன. காளிதாசனும் ரகு வம்ச மன்னர்களின் 14 குண நலனகளை அடுக்குகையில் சந்ததி விருத்திக்காகவே ரகுவம்ச மன்னர்கள் திருமணம் செய்தனர் (செக்ஸ் இன்பத்துக்காக அல்ல) என்று அடிக்கோடிட்டுக் காட்டுவான்.

 

10.குழந்தையின்மை/ மலட்டுத் தனமை என்பது அக்காலத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது ஹமுராபி (Hammurabi Code) மன்னனின் சட்ட ஷரத்துகளில் ஒரு மணப்பெண், ஒரு அடிமைப் பெண்ணையும் கண்வனுக்கு அளிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

 

இது இந்துமதத்தில் இல்லை. ஆனால் மன்னர்களுக்குக் குழந்தை இல்லையென்றால் உறவினர் மூலம் குழந்தை பெற அனுமதி உண்டு. அம்பா, அம்பாலிகா மூலமே வியாசர், திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறக்க உதவினார்.

 

11.கனவனுடனோ, அல்லது கணவனும் மனைவியும் பெண்ணின் தந்தை வீட்டிலோ வசிக்கும் இரண்டு வகையான ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை இல்லாமல் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால் மாமனார் தனது மகன்களில் வேறு ஒருவனுக்குக் கல்யாணம் செய்யும் ஏற்பாடு இருந்ததை நூஜி களிமண் படிவங்கள் காட்டுகின்றன.

 

அர்ஹல்பா (Arhalba) என்ற மன்னன் தான் இறந்தால் தனது சகோதரனைத் தவிர வேறு எவரையும் தன் மனைவி மணக்கக் கூடாது என்று உயில் எழுதிவைத்ததை உகாரித் (Ugari) களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

 

12.ஹிட்டைட் (Hittite) களிமண் பலகைகள் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே கூடி வாழ்ந்தால், அதை சட்டபூர்வமாக கருதலாம் என்று சொல்கின்றன.

இது இந்துமத்தில் இல்லை

 

14.விவாக ரத்து பற்றி, சொத்து பிரிவினை பற்றி சட்ட விதிகள் இருந்தன. பெண்களுக்கு எதிராகவே பல சட்ட விதிகள் இருந்தன.

இந்து சட்ட நூல்கள் (மனு முதலான நீதி நூல்கள்) விவாக ரத்து, சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றி விரிவாகச் சொல்கின்றன. இது விஷயத்தில் வேற்றுமை பாராட்டவில்லை

.

13.இந்துக்கள் இறைவனுக்கு ஆன்டுதோறும் கல்யாண உற்சவங்கள் நடத்துவது போல ((மதுரை மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், ஆண்டாள் போன்றவை) சுமேரியாவிலும் கடவுளர் கல்யாண மஹோத்சவங்கள் நடந்துவந்தன.

 

 

இப்போது முஸ்லீம் சட்ட விதிகள் இருக்கும் அந்த நாடுகளில் முன்காலத்தில் தலாக், தலாக் விவாக  ரத்து, ஐந்து மனைவி திருமணம் முதலியன இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

Source for Middle East: “ Dictionary of the Ancient Near East” by  British Museum.

 

–Subham–