எல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள்! (Post No.3877)

Written by London swaminathan

Date: 4 May 2017

Time uploaded in London: 20-08

Post No. 3877

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

முருகனுக்கு இரண்டு மனைவி – -வள்ளி, தெய்வானை

 

விஷ்ணுவுக்கு இரண்டு மனைவி– ஸ்ரீ தேவி, பூதேவி

 

விநாயகருக்கு இரண்டு மனைவி – – சித்தி, புத்தி

 

கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவி – – ருக்மணி, சத்யபாமா

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இதில் நமக்குத் தெரிவது என்னவென்றால் இரண்டு மனைவியர் வரை “அனுமதி உண்டு” (allowed) ! ஆனால் நீங்களும் விநாயகரைப்போல, விஷ்ணுவைப் போல, முருகனைப் போல, கிருஷ்ணனைப் போல அபூர்வ சக்தி படைத்தவராக இருக்க வேண்டும்; மனைவி விஷயத்தில் மட்டும் இவர்களைப் பினபற்றுவேன் மற்ற விஷயங்களில் “நான் நான்தான்” என்று சொல்லக் கூடாது!!!

 

 

இரண்டுக்குப் பின்னர் எப்போதும் வேண்டாம் (ராம ராஜ்யத்தில்)!

இது ஒரு புறமிருக்க, மகன்கள் விஷயத்திலாவது நாம் கடவுளரைப் பின்பற்றலாம்:

 

சிவனுக்கு இரண்டே புதல்வர்கள் – விநாயகர், கந்தன்/முருகன்

வேதத்தில் வரும் அஸ்வினி குமாரர்கள் இரண்டே புதல்வர்கள்

 

ராமாயணத்தில்தான் அதிசய ஒற்றுமை; எல்லா சகோதர்களுக்கும் இரண்டிரண்டு புதல்வர்கள்! அது எப்படி சொல்லிவைத்த மாதிரி இரண்டு மட்டும் பெற்றார்கள்? ஒருவேளை மரபியல் அம்சமோ (Genetic factor) என்னவோ!

 

ராமனுக்கு இரண்டே புதல்வர்கள்- லவன் குசன்

மனைவி பெயர் – சீதை

 

பரதனுக்கு இரண்டே புதல்வர்கள் – தக்ஷன், புஷ்கலன்

மனைவி பெயர் மாண்டவி

 

லெட்சுமணனுக்கு இரண்டே புதல்வர்கள் –  அங்கதன், சந்திரகேது

மனைவி பெயர் ஊர்மிளை

 

சத்ருக்னனுக்கு இரண்டே புதல்வர்கள் – சத்ருகாதி, சுபாகு

மனைவி பெயர் ஸ்ருத கீர்த்தி

 

லவன், குசன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

 

स तौ कुशलवोन्मृष्टगर्भक्लेदौ तदाख्यया।
कविः कुशलवावेव चकार किल नामतः॥ १५-३२

sa tau kuśalavonmṛṣṭagarbhakledau tadākhyayā |
kaviḥ kuśalavāveva cakāra kila nāmataḥ|| 15-32

 

உலகப் புகழ் பெற்ற கவிஞர் காளிதாசர், அவரது ரகுவம்ச காவியத்தில் சொல்கிறார்:-

 

“கவி வால்மீகி தர்பைப் புல்லினாலும், பசுவின் வால் மயிரினாலும் துடைக்கப்பட்ட , அந்த சீதையின் குமாரர்களை பெயரிடும் விஷயத்திலும், அவைகளின் பெயராலேயே குசன் ,லவன் என்றே செய்தார்” (15-320

 

தர்ப்பைப் புல்லின் பெயர் குச; பசுவின் வால் மயிரின் பெயர் லவ; அதாவது குழந்தை பிறந்தவுடன் தீய சக்திகள் நெருங்காது இருப்பதற்காக, முனி பத்னிக்களின் கையில் இவ்விரண்டு பொருட்களையும் கொடுத்து குழந்தைகள் மீது தடவச் செய்தார். இது காளிதாசன் சொன்னது.

வால்மீகி ராமாயணத்தில் வேறு கதை!

 

ஆனால் ராமாயண உத்தர காண்டத்தில் தர்ப்பத்தின் முனைப் பகுதியினால் ஒருவனுக்கு குச என்றும் மற்றொருவனுக்கு தர்ப்பத்தின் அடிப்பகுதியால்

லவ என்றும் பெயரிடப் பட்டதாக ஸ்லோகம் உள்ளது.

 

குழந்தைகளுக்குப் பெயரிட்ட வால்மீகி அவ்விரு பெயர்களாலும் அவர்கள் பிரசித்தமடைவர் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. இரு குழந்தைகளுக்கும் வேதங்கள்,  சாத்திரங்களைக் கற்பித்ததோடு ராமனின் கதையையும் கற்பித்து பாட வைத்தார்.

 

அக்காலத்தில் சங்கீத உபந்யாசம் எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை லவ-குசனின் பாடல் ராமாயணம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல அது இன்றுவரையும் நீடித்து வருகிறது!

 

-Subahm–