தொல்காப்பியர் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? (இலக்கணம் ) எழுதினாரா? (Post.9227)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9227

Date uploaded in London – –4 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியர் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் எழுதி விட்டேன். இப்பொழுது அவர் பற்றிய மேலும் சில உண்மைகளை அவரே தன து நூலில் காட்டுகிறார். அதை ஆதாரங்களுடன் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் ஒரு  ஜோக்.. திருவள்ளுவர் உருவத்தைக் காட்டும் பழந்தமிழ் நூல் களில் அவர் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி இருக்கும். 1967ல் திராவிடக் கடசிகள் ஆட்ச்சிக்கு வந்தவுடன் அவர் நெற்றியில் இருந்ததை அழித்து விதவை போல ஆக்கிவிட்டனர்.ஆனால் தொல்காப்பியர் படத்தை எந்த நூலிலும் காண முடியாது. தொல்காப்பியர் காப்பியக் குடியில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர் என்றும் அவருடைய உண்மையான பெயர் த்ருண தூமாக்கினி என்றும் பழைய உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் என்சைக்ளோபீடியாவான ‘அபிதான சிந்தாமணி’யிலும் இந்த விஷயம்தான் இருக்கிறது.

காப்பியக் குடி – காவ்ய கோத்ரம் – கவி = ரிக் வேதமும் கிருஷ்ணனும் (பகவத் கீதையில்) புகழும் உஷனஸ் கவி. ரிக் வேத காலத்திலேயே அவர் மிகப் பழைய கால கவி என்பப்படுகிறார்!!!

மீசை வைத்த பிராஹ்மணன் !

ஜமதக்கினி முனிவரின் மகன், பரசுராமனின் சகோதரன். அத்தகைய பெருமை மிகு குலத்தில் உதித்தவர் என்பதே பொருந்தும் இதற்கு இன்னும்  இரண்டு  எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன்  கேரளத்தைக் கடலிலிருந்து மீட்டுக் கொடுத்த பரசுராமன் ‘ஒரிஜினல்’ Original அல்ல. அந்தக் குலத்தில் வந்த , அவரைப் போன்ற சிறப்பு மிக்கவர். இதே போல ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பரசுராமன் (கர்ணனின் குரு ) வருகிறார். மஹாபாரத பரசுராமன் ‘ஒரிஜினல்’ அல்ல. அகத்தியர் என்பதும், பரசுராமன் என்பதும் கோத்திரப் பெயர்கள். நாம் மதுரைக்காரன் என்றவுடனே அவன் செந்தமிழ் பேசுவான் மதராஸ்காரன் என்றால் சம்ஸ்கிருதம் பேசுவான் (வாடா , கஸ்மாலம்; கஸ்மலம் = பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்ட கண்ணன் பயன்படுத்திய சொல் – கஸ்மலம் ) என்றெல்லாம் பொதுப்படையாகக் கொள்வதை போன்றதே இதுவும்.

தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் நட்டு மலர்களை வெளியிட்டபோது தொல்காப்பியருக்கு மீசை வைத்து படங்களை வெளியிட்டது! பாவம் அவர் பிராமணர் இல்லை என்று காட்ட இந்த முயற்சி. ஆனால் சிவபெருமானுக்கே மீசை உள்ள பழைய படங்கள் இருப்பது அந்த திராவிட கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை. போகட்டும் . சப்ஜெக்ட் subject டுக்கு வருவோம் .

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் உண்டு (அதிகாரம் என்பது தொல்காப்பியம், திருக்குறள் , சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதால் இவை மூன்றும் சமணர் ஆடசிக் காலத்தில் — சுமார் 4, 5ம் நூற்றான்டில் தோன்றியவை என்றும்  முன்னரே காட்டிவிட்டேன்)

தொல்காப்பியத்தின் சிறப்பே பொருள் அதிகாரம்தான். தொல்காப்பியருக்கு சுமார் 1000  அல்லது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் பல்வேறு விஷயங்களை கதைத்தாலும் இப்படி தனி அதிகாரமாக எழுதவில்லை. ஆனால் இந்தப் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை என்பது சிலர் கருத்து. ஏனெனில் இதன் சொல் அமைப்பும் , பொருளடக்கமும் அப்படிப்பட்டவை என்பது அவர்கள் வாதம். இந்திரன், வருணன் ஆகியோரை தமிழ்க் கடவுள் என்று பாடிவிட்டார் தொல்காப்பியர் . அதுமட்டுமல்ல பலராமனின் பனைக்கொடி முதலிய விஷயங்களையும் தொல்காப்பியர் காட்டுகிறார். சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத பதத்தையும் பயன்படுத்திவிட்டு நான்கு ஜாதிகள் பற்றியும் பாடுகிறார். அதில் அந்தணரை முதலில் வைக்கிறார். அது மட்டுமல்ல தர்மார்த்த காம மோக்ஷ என்ற வரிசையை அப்படியே தமிழில் திருக்குறள் போலவே அறம்,பொருள், இன்பம், வீடு என்று பேசுகிறார்.

எனது முடிவு

கீழேயுள்ள இணைப்புகளில் தொல்காப்பியர் 300 இடங்களுக்கும் மேலான வரிகளில் ‘என்மனார்’, ‘என்ப’, ‘மொழிப’ எந்றெல்லாம் பாடியிருக்கிறார். இது பத்திரிகையாளர் பயன்படுத்தும் (Journalists Jargon) வழக்கு. ‘அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்’, ‘என்று சொல்லப்படுகிறது’, ‘என்று அறியப்படுகிறது’, ‘பேசப்படுகிறது’ என்ற வகையைச் சேர்ந்தது.  முதல் சூத்திரமே “எழுத்தெனப்படுவது ……………………… “ என்று துவங்குகிறது —

சிலர் , எங்கெங்கு தனக்குப் பிடிக்காத விஷயங்கள் வருகின்றதோ அவற்றை எல்லாம் இடைச் செருகல் (Interpolation)  என்று சொல்லி விட்டனர் . சில வெளிநாட்டுக்காரர்கள் மூன்றாவது அதிகாரமான பொருள் அதிகாரம் பிற்பாடு வந்தது என்றும்  கூறிச் சென்றனர் (Kamil Zvelebil )கமில் சுவலபில் கூட இப்படிச் சொன்னதாக நினைவு.)

ஆனால் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை அல்ல என்பதை அவர் ‘என்ப’, ‘மொழிப’ , ‘என்மனார்’ என்பதை ஒரே வேகத்தில் , ஒரே மூச்சில்  (cogently, uniformly) பாடுவதை 300 இடங்களையும் கவனிப்போருக்கு விளங்கும் .

தொல்காப்பியர் காலத்தை அறியவும் இது உதவுகிறது. ‘என்ப’ என்பதை இவரைப் போலவே திருவள்ளுவரும் அதிகம் பயன்படுத்துகிறார். சங்கப் புலவர்கள் இதை அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்குக் கிடைத்த தொல்காப்பியம் – மூன்று அதிகாரங்களும் – ஒரே காலத்தவை – களப்பிரர்  காலத்தவை – களப்பிரர் எனப்படும் மர்ம (கர்நாடக சமணர்?? ) ஜாதி ஆட்சி முடிந்த காலத்தவை. அதாவது 4 அல்லது 5ம் நூற்றாண்டு .

இன்னொரு விஷஜ்யத்தையும் சொல்ல வேண்டும். தொல்காப்பியர் ‘ஒரிஜினல்’ வேறு. நாம் மனதிற் கற்பனை செய்யும் தொல்காப்பியர்  வேறு. அதாவது இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது

உண்மையானால், அவர் கஜபாகு (கிபி.132) காலத்தில் வாழ்ந்தவரே. ஆனால் அவர் பெயரிலுள்ள சிலப்பதிகாரம் அந்த இளங்கோ யாத்தது இல்லை. அது போலவே தொல்காப்பியர் என்பவர் அ கத்தியர் மாணாக்கர் என்றால் அவர் வேறு; அவர் பெயரில் நாம் படிக்கும் தொல்காப்பியம்  வேறு.சங்க இலக்கியத்திலும் காண முடியாத நீண்ட உவமை உரு பு பட்டியலைக் கொடுப்பதால் இவர் பழங்கால விதிகளை, சூத்திரங்களை, நமக்கு 5ம் நூற் றாண்டில் தொகுத்துத் தந்தார் என்று சொல்லுவதே  பொருந்தும்.

சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் தொல்காப்பியர்  மிகப் பழங்காலத்தவர். ஆனால் தொல்காப்பிய நூல்  பிற்காலத்தது.

திராவிட ரகஸியம்

தொல்காப்பியத்துக்கு சொல்லடைவு (Word Index)  வெளியிட திராவிடர்கள் பயப்படுகிறார்கள் . ஏனெனில் அவர் யார், எக்காலத்தவர் என்பது  வெளிப்பட்டுவிடும். அதாவது அவர் சொல்லும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் முதலியன வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும். திருவள்ளுவர் துணிச்சலாக குணம், காமம், காலம், தானம், என்றெல்லாம் சம்ஸ்கிருத்ச் சொற்களை முதலில் வைத்தே கவி பாடினார். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவன் காமத்துப் பால் என்று ஒரு அத்தியாத்துக்கு சம்ஸ்கிருதப் பெயர் வைத்தார். இதைப் போலவே த்ருண தூமாக்கினி என்ற பெயர்படைத்த பார்ப்பன தொல்காப்பியரும்  உவம இயல் என்று ஒரு பிரிவுக்கே சம்ஸ்கிருதத் சொல்லை பயன்படுத்துகிறார். ஏனெனில் இவர்கள் அனைவரும் உலகப் புகழ் பெற்ற உவமை மன்னன்  காளிதாசன் காலத்துக்குப் பிற்பட்டவர்கள். சங்கப்  புலவர் சிலரும் வள்ளுவனும் உவமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் கையாளுகின்றனர் .

முதல் இரண்டு அதிகாரங்களில் வேத கால மக்கள் எழுத்தின் பிறப்பிடம் பற்றிப் பாடியதை தொல்காப்பியர் நமக்குத் தருகிறார். கர , கார (அ -கர, உ-கார )  என்பதை பற்றி பாணினி சூத்திரம் செய்தது போலவே இவரும் சூத்திரம் செய்கிறார் . இவர் காலத்தில் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்குவது இருந்ததால் அதுபற்றியும் சூத்திரம் செய்கிறார். மேலும் சம்ஸ்கிருத நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதால் அது பற்றியும் பாடுகிறார்.

இதற்கெல்லாம் மேலாக இவருக்கு ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து நூலை உலகிற்கு அளித்தது நான்கு வேதங்களில் கரைகண்ட பார்ப்பனன் அதங்கோட்டு ஆச்சார்யா என்பதை பனம்பாரனார் பாடிவிட்டார். அக்கால மன்னர் பெயர்கள் மஹா கீர்த்தி! நூல்களின் பெயர்கள் பூதபுராணம்!! , ஊரின் பெயர் கபாடபுரம்!!! , அவர் படித்தது ஐந்திரம்!!! என்றெல்லாம் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதம் வருகிறது. அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்களாக விளங்கின.

305 இடங்களில் “மொழிப , என்ப, என்மனார்” என்பதெல்லாம் அகத்தியர் சொன்னதை இவர் திரும்பிச் சொல்கிறார் என்று உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். “முந்து நூல்” என்று பனம்பாரானார் சொல்லுவதும் அகத்தியமே என்பது ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரின் துணிபு

ஆக முடிவுரை —

தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒருவரால் இயற்றப்பட்டதே.

ஒரே காலத்தில் — திருக்குறள் காலத்தை ஒட்டி – 4, 5-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டதே .

தொல்காப்பியர் பெயரில் இந்த நூல் இருந்தாலும் இதை தொகுத்து நமக்குத் தந்தவர்கள் பிறகாலத்தவரே.

வாழ்க தமிழ், வளர்க தொல்காப்பியன் புகழ்

–subham—

tags தொல்காப்பியர், காப்பி அடித்தாரா?, தொகுத்தாரா ?, இலக்கணம் , எழுதினாரா? 

குரு யார்? ஆசிரியர் யார்? என்ன வேறுபாடு? (Post No.2907)

mdu school

Compiled by London swaminathan

 

Date: 19  June 2016

 

Post No. 2907

 

Time uploaded in London :– 9-51

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

devakottai school

தமிழிலும் ஆங்கிலத்திலும் குரு, ஆசிரியர் (டீச்சர்), உபாத்யாயர் போன்ற சொற்கள் வேறுபாடின்றி வழங்கப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொன்றுக்கும் தெளிவான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

டீச்சர், ஆசிரியர் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருதச் சொல்லான ‘ஆசார்ய’ என்பதிலிருந்து வந்தவை.

 

வட இந்தியாவில் இப்பொழுது பல்கலைக்கழகத் துணைவேந்தரை குலபதி என்று அழைக்கின்றனர். வேத காலத்தில் 10,000 மாணவர்களைக் கொண்ட ஆசிரியருக்கு மட்டுமே குலபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

உலகின் முதல் சட்டப்புத்தகமான மனு ஸ்மிருதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்.

உபநீயது ய: சிஷ்யம் வேதமத்யாபயேத் த்விஜ:

சகல்பம் சரஹஸ்யம் ச தமாசார்யம் ப்ரசக்ஷதே (மனு 2-140)

உபநயனம் (பூணூல்) செய்வித்து வேத வேதாந்தங்களை ஓதிவைப்பவன் ‘ ஆசார்யன்’ என்று அழைக்கப்படுகிறான்.

xxx

 

SCHOOL CHILDREN jr

ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்கான்யபி வா புன:

யோ அத்யாபயதி வ்ருத்தர்தமுபாத்யாய: ச உச்யதே

பணம் (தட்சிணை) வாங்கிக் கொண்டு வேத வேதாங்கங்களைக் கற்பிப்பவன் உபாத்யாயன் என்று சொல்லப்படுகிறான்.

xxx

நிஷேகாதினி கர்மாணி ய: கரோதி யதா விதி

சம்பாவயதி சான்னேன ச விப்ரோ குருர் உச்யதே

விதிப்படி, கர்ப்பாதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப்பவன் குரு என்று அழைக்கப்படுகிறான்

xxx

பிதா மாதா ச ததாசார்யோ மஹாகுருரிதி ச்ம்ருத:

தந்தை, தாய், ஆசிரியர் ஆகியோர் மஹா (பெரிய) குருக்கள் என்று கருதப்படவேண்டும்.

xxx

 

school tree

முனீனாம் தசசாஹஸ்ரம் யோ அன்னதானாதி போஷணாத்

அத்யாபயதி விப்ரர்ஷிரசௌ குலபதி: ஸ்ம்ருத:

10,000 சிஷ்யர்களுக்கு உணவு அளித்து, போதிக்கும் (கற்பிக்கும்), ரிஷிக்கு ‘குலபதி’ என்று பெயர். (பத்தாயிரம் முனிவர்களுடைய கூட்டத்துக்கு எவன் அன்னதானம் முதலியன கொடுத்து ஆதரிக்கிறானோ அவன் குலபதி என்று அறியப்படுகிறான்)

xxxx

ஆசிரியனின் இலக்கணம்:  ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்றும் இந்துமத நூல்கள் செப்புகின்றன:–

 

ஜிதேந்த்ரிய ஜித த்வந்த்வஸ் தபோ தான பராயணா:

சத்யவாக் ஊர்ஜித: ராக்ஞோ மேதாவீ நியதஸ் சுசி:

புலனடக்கம், இருமைகளை (வெற்றி தோல்வி, சுக துக்கம் போன்றவை இருமைகள்) வென்றவன், தானம்-தவம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவன், உண்மை விளம்பி, வீர்யமுடையவன், கற்றறிந்தவன், புத்திகூர்மையுள்ளவன், ஒழுங்கு கட்டுப்பாடு உடையவன், தூய்மையானவன் (ஆசிரியன் ஆவான்)

xxxx

நிஸ்சம்திக்த: குலீனஸ்ச ஸ்ரௌதகர்மணி தத்பர:

நிக்ரஹானி க்ரஹேதக்ஷஸ் சர்வ தோஷ விவர்ஜித:

காயத்ரீமந்த்ர குசல ஆசார்ய ஸமுதாஹ்ருத:

 

அப்பழுக்கற்ற குலத்தில் பிறந்தவன், வேத அனுஷ்டானம் உடையவன், செய்யத் தக்கது-செய்யத்தகாதது எது என்ற விவேகம் உடையவன், மாசுமருவற்ற ஒழுக்கம் உடையவன், எல்லாம் அறிந்தவன், காயத்ரீ மந்திரத்தில் தேர்ச்சியுடையவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

xxxx

Skt at school level

Sanskrit instructor conducting a contact class for professionals at Rashtriya Sanskrit Sansthan on Tuesday. Photo by K Asif 26/09/12

ஆசினோதி ஹி சாஸ்ரார்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி

ஸ்வயமாசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே

சாத்திரங்களை அறிந்து பிறரையும் அனுசரிக்கச் செய்பவனே ஆசார்யன்.

(சாத்திர நூல்களின் பொருளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அறிந்துஆராய்பவன், பிறரையும் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபடச் செய்பவன், தானும் அதைக் கடைப்பிடிப்பவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

–சுபம்–

 

 

 

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்?

india.1

Article No.1972

Date: 4  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 16-46

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. உலகிலேயே அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரே மொழி இதுதான். அதுவும், இலக்கணம், இலக்கியம், அகராதி, சொற் பிறப்பியல், சாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றிலும் முதல் நூல்களைத் தந்த மொழி. 2750 ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கு பாணினி என்னும் முனிவன் எழுதிய இலக்கணத்தைப் பார்க்கையில் அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்மொழியில் இலக்கியம் தோன்றின என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம் ஒவ்வொரு இந்தியனும்.

இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை – என்பது தமிழர் வாக்கு. ஆகையால் பாணினி இலக்கணம் வரும் முன்பு வேதம் தவிர வேறு பல நூல்களும் இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பாணினிக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர் பெயர்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்தம் நூல்கள் நமக்குக் கிடைத்தில.

ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காட்டினால் சம்ஸ்கிருத கட்டமைப்பு உங்களுக்கே விளங்கும்.

சம்ஸ்கிருதச் சொற்கள் எல்லாம் வேர்ச் சொல் ஒன்றிலிருந்து பிறந்தவை. இந்த வேர்ச் சொற்கள் எப்படி வளர்ந்து மலரும் என்பதை பாணினி விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு சொல்லிலும் முன்னொட்டுகளைச் சேர்த்தால் அதன் பொருள் மாறிக் கொண்டே வரும். இதோ பாருங்கள்:-

தமிழில் நாயகன், நாயக்கர், விநாயகர் என்று எவ்வளவோ சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். இதற்கெல்லாம் மூலச் சொல், வேர்ச்சொல் நீ= தலைமை தாங்கு, வழிகாட்டு

நயதி = அவன் வழிகாட்டுகிறான்

அநயத் = வழி நடத்தினான்

நயது = அவனே வழி காட்டட்டும்

நயேத் = அவன் வழிநடத்தலாம்

நிநாய = அவன் வழிநடத்தியிருந்தான்

அநைசித்= முன்னொரு காலத்தில் வழிநடத்தினான்

நேஸ்யதி = வழிநடத்துவான்

அநேஸ்யத்= அவன் வழிநடத்தியிருப்பான்

நீயதே = அவன் வழிநடத்தப் பட்டான்

நாயயதி= அவன் வழிநடத்த வைப்பான்

அநாயயத் = அவன் வழிநடத்த வைத்தான்

நயயது= அவன் வழிநடத்த வைக்கட்டும்

நனனேத்= அவனை வழிநடத்த வைக்கச் செய்யலாம்

நினாயயிசதி= அவன் வழிநடத்தச் செல்ல வைக்க விரும்புகிறான்

நினீசு = வழிநடத்த விரும்புகிறான்

நினீசா = வழிநத்டதிவைக்க விருப்பம்

நேனீயதே = அவன் அதிரடியாக வழிநடத்துகிறான்

manuscript

இந்த வேர்ச் சொல்லுக்கு முன், சில முன்னொட்டுகளைச் சேர்த்தவுடன் எப்படி பொருள் மாறுபடுகிறது என்று பாருங்கள்:

அனு நயதி = வேண்ட

அப நயதி = எடுத்துச் செல்ல

அபி நயதி = மேடையில் நடிக்க ( அபிநயம் செய்)

ஆனயதி = அழைத்து வர

உத்நயதி =எழுப்ப

உபநயதி=  கொடுக்க

நிர்நயதி = முடிவு செய்ய ( நிர்ணயம் செய்ய)

பரிநயதி = கல்யாணம் செய்ய ( உஷா பரிணயம்)

விநயதி = அகற்ற, நீக்க

சம்நயதி = ஒன்று சேர்க்க

புத்தி, போதி மரம், போதனை, புத்தர் முதலிய சொற்கள் நமக்கு நன்கு தெரியும். புத்=அறிதல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து

போத, போதன, புத்தி, போதக, பௌத்த, புத்திமத்(மான்), புத்யதே, போபுத்யதே, போதி தர்ம, போதி சத்வ, புதன் (கிரகம்), புதன் (கிழமை), புத்தர் எல்லாம் வந்தன.

panini_

இதுவே

அனு போத்யதே

அவ போத்யதே

உத் போத்யதே

ப்ர போத்யதே

ப்ரதி போத்யதே

வி போத்யதே

சம் போத்யதே என்றும் பல பொருள்களைத் தரும்.

சம்ஸ்கிருதத்தை – சம்ஸ்கிருத இலக்கணத்தைப் படிக்கப் படிக்க வியப்பும் ஆர்வமும் அதிகரிக்கும். உலகில் இன்று காணும் செம்மொழிகள் இல்லாத காலத்தே— அம் மொழிகள் வளர்ச்சியடையாத காலத்தே – ஏனைய மொழிகளில் நூல்களே எழுதாத காலத்தே – இவ்வளவு இலக்கண விதிகள் இருந்திருந்தால்  — 2750 ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால்— அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அம்மொழி இருந்திருக்க வேண்டும் என்று வெளிநாட்டினரும் உள்நாட்டு அறிஞர்களும் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கின்றனர். கோல்டுஸ்டக்கர் மற்றும் இந்திய சம்ஸ்கிருத அறிஞர்கள் அனைவரும் பாணினியை கி.மு 750 என்று காலம் கணித்துள்ளனர்.

2000 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. பாணினி வினை சொற்களை பத்து வகுப்புகளாகப் பிரித்தார். அவைகல்ளுக்கு அவர் கொடுத்த பெயர்களைப் பாருங்கள்:

sanskrit village

Sanskrit speakers in Karnataka village

பத்து ‘ல’-காரங்கள்!

லட், லன், லிட், லுன், லுட், ல்ருட், லொட், லின், லெட், ல்ருன்.

இவைகளையும் ‘ட்’ –டில் முடிபவை, ‘ன்’ –னில் முடிபவை என்று பிரிக்கலாம். எவ்வளவு மஹா மேதையாக இருந்தால் இப்படியெல்லாம், எளிமைப் படுத்த முடியும்.. சுருக்கி வரைதல் என்பதற்கு உலகில் ஒரே இலக்கணம் பாணினிதான். இவர் இவ்வளவு சுருக்கியதால் கி.மு.நாலாம் நூற்றாண்டிலேயே வரருசி உரை எழுதினார். அதற்குப் பின் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி மஹாபாஷ்யம் என்னும் மிகப் பெரிய விளக்கவுரை எழுதினார். நாம் திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்பது போல இவர் பகவான் பாணினி என்று போற்றித் துதிக்கிறார்!

யாராவது ஒருவன் சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் படிக்காமல் வரலாறோ, கலை விமர்சனமோ, பண்பாட்டுக் கட்டுரைகளோ எழுதப் புகுந்தால் ஏதேனும் ஒரு இடத்தில் வாழைப்பழத் தோலியில் வழுக்கி விழுந்தது போல, சறுக்கியிருப்பதை காணலாம்— நமக்கும்

இலக்கியத்தில் நகைச் சுவை வேண்டுமல்லவா!!!.

நான் முன்னர் எழுதிய “பாணினி மாஜிக்” என்ற கட்டுரையையும் (ஏப்ரல் 7, 2015) படிக்கவும்.

பாணினி மாஜிக்!! Panini Magic!!

panini better

Compiled by London swaminathan

Post No. 1783; Date 7th April 2015

Uploaded from London at   8-58 am

பாணினியை ஏன் உலகமே புகழ்கிறது? அவர் அப்படி என்ன செய்தார்?

பாணினி கி.மு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அதாவது இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன் இப்பொழுது பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊரில் பிறந்தார். சம்ஸ்கிருதத்துக்கு இலக்கணம் செய்தார். அவருக்கு முன்னரும் அந்த மொழி இருந்தது. அவரே நிறைய இலக்கண வித்தகர்களின் பெயர்களைப் பட்டியல் இடுகிறார். ஆனால் இவர் செய்த புதுமை ஒரு கன கச்சிதமான இலக்கணம் எழுதியது ஆகும். அவர் செய்த ஒவ்வொரு புதுமையையும் விளக்க அல்லது விளங்கிக் கொள்ள நமக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

பின்னர் எப்படி அவர் பெருமையை உணர்வது?

பாரதியார் பாட்டில் படிக்கிறோம்:

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞால மீதில் இலக்கணம் கண்டதும்…..

 

உலகில் யாரும் நம்பமுடியாத திறமையுடன் இலக்கணம் செய்தார் என்கிறார் நம்முடைய மதிப்பைப் பெற்ற பாரதியார்.அவரோ காசியில் சம்ஸ்கிருதம் கற்றவர்.

அது சரி, ஒரு எடுத்துக்காட்டாவது காட்ட முடியுமா?

பாணினி எழுதிய புத்தகத்தின் பெயர் அஷ்டாத்யாயி (அஷ்ட அத்யாயங்கள் = எட்டு பகுதிகள்). அதில் முதலாவது மஹேஸ்வர சூத்திரம் என்று இருக்கிறது– சிலர் இதை பாணினி புத்தகத்தில் இருந்து வேறாகவும் கருதுவர். ஆனால் 2700 ஆண்டுகளாக வழங்கும் கதை என்ன வென்றால், சிவபெருமான் உடுக்கை அடித்து ஆடியபோது அந்த ஒலியில் இருந்து எழுந்த 14 சூத்திரங்களே இவை. இதை அவர் தனது புத்தகத்தில் பயன்படுத்தியதில் இருந்து இதற்கும் அவருக்கும் உள்ள தொடர்பு தெள்ளிதின் விளங்கும்.

panini fdc

சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:

14 சூத்திரங்கள்:

அ இ உண்

ருலுக்

ஏ ஓங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞம ஙணநம்

ஜபஞ்

கடத ஷ்

ஜபகடதஸ்

க ப ச ட த சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

–“இதி மாஹேஸ்வராணி சூத்ராணி”.

இவைதான் அவருடைய உடுக்கையில் இருந்து எழுந்த ஒலிகள்.

சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் இதில் உள. ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியிலும் உள்ள எழுத்து புள்ளிவைத்த மெய் எழுத்து. அது அடையாளத்துக்காக உள்ளது. விதிகளைப் பயன்படுத்தும்போது, அதைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது – அதாவது அது உப்புக்குச் சப்பை ஊருக்கு மாங்கொட்டை.

ஒரு எடுத்துக் காட்டு:—

உயிர் எழுத்துக்கள் சம்பந்தமான ஒரு விதியைச் சொல்ல வேண்டுமானால் “அச்” என்று சொன்னால் போதும். மேலே உள்ள சூத்திரத்தில் “அ” என்பது முதல் எழுத்து; பின்னர். நாலாவது சூத்திரத்தில் “ச்” என்று முடிகிறது. அ – முதல் ச் – வரையுள்ள எழுத்துக்கள் எல்லாம் உயிர் எழுத்துக்கள். முன்னர் சொன்னது போல ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை ( ச் ) மறந்துவிடுங்கள்.

விடை:–

அ இ உ ((ண்))

ருலு  ((க்))

ஏ ஓ ((ங்))

ஐ ஔ ((ச்)),

உயிர் எழுத்துக்கள் (Vowels) அ, இ, உ, ரு, லு, ஏ, ஓ, ஐ, ஔ

Panini,_

இன்னொரு விதியும் இதில் அடக்கம். அது என்ன?

ஒரு குறில் எழுத்தைச் சொன்னால் அது தொடர்பான நெடிலும் அடக்கம். அ என்றால் ஆ, இ என்றால் ஈ, உ என்றால் ஊ என்று சேர்த்துக்கொண்டே போக வேண்டும்.

அட, இது என்ன பிரமாதம்? “அச்” என்று சொல்லுவதற்கு பதில் தமிழில் உள்ளது போல “உயிர் எழுத்து” என்று சொல்லி விடலாமே. இதற்காகவா, பாணினியைப் புகழ்கிறார்கள்? என்று கேட்கலாம்.

இதே போல “ஹல்: என்றால் அது மெய் எழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். ஐந்தாவது சூத்திரத்தில் ஹ என்னும் எழுத்தில் சூத்திரம் துவங்கி 14-ஆவது சூத்திரத்தில் “ல்” என்ற எழுத்தில் முடிகிறது. அது வரை உள்ள எழுத்துக்கள் எல்லாம் மெய் எழுத்துக்கள் (Consonants) — (ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை மறந்துவிடுங்கள்).

அட, இது என்ன பிரமாதம், “ஹல்” என்று சொல்லுவதற்குப் பதிலாக ‘மெய் எழுத்துக்கள்’ என்று சொன்னால் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடும்? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் மெய் எழுத்து, உயிர் எழுத்து என்பதற்கு மட்டும் இன்றி, எந்த இரண்டு எழுத்துக்கள் இடையேயும் உள்ள எழுத்துக்களை இப்படி எடுத்துக் கொண்டு விதி செய்யலாம். சம்ஸ்கிருதத்தில் சந்தி விதிகளை விளக்க இப்படிப் பல சூத்திரங்கள் தேவைப்படுகின்றன.

இந்த 14 சூத்திரங்களை வைத்து 281 ‘காம்பினேஷன்’ போடலாம் என்று அறிஞர்கள் சொல்லுவர்!  இதனால் இதை பிரத்தியாஹார சூத்திரம் என்றும் சொல்லுவர். பிரத்தியாஹாரம் என்றால் முன்னர் குறிப்பிட்ட “அச்”, “ஹல்” போன்ற கூட்டு எழுத்துக்கள் (காம்பினேஷன்) ஆகும். சிவ அல்லது மாஹேஸ்வர சூத்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி 44 பிரத்தியாஹார சூத்திரங்களை பாணினி பயன்படுத்தியுள்ளார்.

இப்படி அவர் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இதுபோன்ற புத்திசாலித்தனமான உத்தியைப் பயன்படுத்தினால் இவ்வளவு பாராட்டி இருக்க மாட்டார்கள். சம்ஸ்கிருதம் என்ற மொழியே, முழுக்க முழுக்க இப்படி சில விஞ்ஞானபூர்வ விதிகளின் மேல் அமைந்துளது. அதாவது வேர்ச் சொற்களைத் தெரிந்து கொண்டு விட்டால், அகராதியே இல்லாமல் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் புதிய சொற்களை உண்டாக்கலாம். ஒரு வேர்ச் சொல்லுக்கு முன் ஒரு முன்னொட்டு (prefix) அல்லது வேர்ச் சொல்லுக்குப் பின்னர் ஒரு பின் ஒட்டைச் (Suffix) சேர்த்துக் கொண்டால் அர்த்தம் மாறிக்கொண்டே போகும்.

ஆங்கிலத்தில் வண்ணங்களைக் (Colours)  குறிக்க ஏராளமான சொற்கள் உண்டு. பெயிண்ட் விற்கும் கடைக்குப் போய் கேடலாக்- கை (Catalogue) வாங்கிப் பார்த்தால் இவ்வளவு வகையான கலர்கள் உண்டா என்று வியப்பீர்கள். உண்மையில் உலகில் மூன்றே வர்ணங்கள்தான் உண்டு. சிவப்பு, நீலம், மஞ்சள் — இவைகளை வெவ்வேறு விகிதத்தில் கலக்க கலக்கப் புதுப் புது வர்ணங்கள் கிடைக்கும். அதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஆங்கிலப் பெயர். (Different shades of colours). இதே போல சம்ஸ்கிருதத்தில் ஒரு வேர்ச் சொல்லை எடுத்துக் கொண்டு முன்னொட்டு, பின்னொட்டுகளைச் சேர்த்து அர்த்தத்தை மாற்றிக் கொண்டே போகலாம். உலகில் சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றிய மொழிகளில் இதைக் காணலாம். ஆயினும் சம்ஸ்கிருதத்தில் இன்றும் அதற்கான இலக்கணம் உள்ளது. ஒரு நூறு, இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வரை சம்ஸ்கிருதத்தில் துதிகள் எழுதப்பட்டுள்ளன. அவைகளும் இதே விதியைத் தான் பயன்படுத்தின.

பாணினியைப் பயிலப் பயில, சம்ஸ்கிருத அமைப்பைப் பார்க்கப் பார்க்க, வியப்பு மேலே மேலே வந்து கொண்டே இருக்கும். தமிழர்களாகிய நாம் சந்தோஷப் படவேண்டிய விஷயம் நம் முன்னோர்கள் காழ்ப்பு உணர்ச்சி எதுவுமின்றி சங்க காலம் முதல் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சம்ஸ்கிருதம் இல்லாமல் எந்த இந்தியனும் எந்த இந்திய மொழியையும் பேசவே முடியாது! —- இருதயம், மனம், காமம், நீலம் – இது போன்ற நூற்றுக் கணக்கான சம்ஸ்கிருதச் சொற்களை நாம் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தி வருகிறோம். தமிழர்கள் பெயர்கள் பலவும், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் உள்ள சொற்கள்!!!

ஒரே ஒரு எடுத்துக் காட்டு:– யார் யார் பெயர்களில் எல்லாம் ராஜா, இந்திரன், சரஸ்வதி, பாரதி, சோம, சூர்ய, ஆதித்ய, கருணா, நிதி, கீர்த்தி, வீர,மணி, தாச,க்ருஷ்ண, சாந்தி முதலியன வருகின்றனவோ அவை எல்லாம் ரிக்வேதத்தில் உள்ள சொற்கள் என்பதை அறிக.

தமிழுக்கு மிக,மிக, மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம். இந்த அளவு நெருக்கத்துக்கு வேறு எந்த மொழியும் தமிழுக்கு பக்கத்தில் வரவே முடியாது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இருக்கிறதே என்று சொல்லாதீர்கள். அவை எல்லாம் தமிழின் சஹோதர மொழிகள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.

-சுபம்-