பாரதி பாட்டில், பகவத் கீதையில், சிலம்பில் சோம பானம் ! (Post.10,429)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,429
Date uploaded in London – – 10 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் முப்பது வெள்ளைக்காரர்கள் நமது நான்கு வேதங்களை மொழிபெயர்த்தனர் ; எல்லோரும் நவக்கிரகங்கள்; நல்ல கோமாளிகள் ; இரண்டு கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டாது என்ற பழமொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். ஒரே சொல்லுக்கு நாலு கோமாளிகள் நாலு விதமாகப் பொருள் சொன்னதோடு எ திரும் புதிருமாக அர்த்தம் செய்தார்கள் . ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தார்கள், பூர்வ குடிமக்களை விரட்டியடித்தார்கள் என்பதில் ஒற்றுமை!! ஏனெனில் உலகம் முழுதும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் குடியேறிய வெள்ளைக்காரர்கள் அங்குள்ள பூர்வ குடிமக்களை குருவி சுடுவது போலவும், வனவிலங்குகளை வேட்டையாடுவது போலவும் கொன்று குவித்து அந்த நாடுகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். இன்று ஆங்காங்கே பெயரளவுக்கு மட்டுமே அவர்கள் உள்ளனர் ; அதே கொள்கையை இந்தியா மீதும் திணித்து, சங்ககால இலக்கியத்தில் இல்லாத, புராண இதிஹாசங்களில் இல்லாத பொய்மைச் செய்திகளைப் பரப்பினார்கள்.

நல்ல வேளை , பாரதி போன்ற யுகபுருஷர்களும், மஹாத்மா காந்தி, அம்பேத்கார், சுவாமி விவேகானந்தர் போன்றோரும் ஆரிய திராவிட வாதத்துக்கு சாவு மணி அடித்தார்கள்


இந்த முப்பது வெள்ளைக்காரர்களும் ஒப்புக்கொண்ட இன்னொரு விஷயம் சோமபானம் என்பது போதைப்பொருள்; அது சாப்பிட்டவுடன் போதை தலைக்கேறும் என்று சொல்லி பல காளான் வகைத் தாவரங்களின் பெயர்களை எல்லாம் உளறிக் கொட்டினார்கள். இது 1895ம் ஆண்டு RALPH T H GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட வேத மொழி பெயர்ப்பிலேயே உள்ளது. மொத்தத்தில் மாக்ஸ் முல்லர் கும்பலும் தேச விரோத, இந்து விரோத மார்க்ஸீயக் கும்பலும் ஒத்துக்கொண்ட விஷயம் இது.

ஆனால் வேதம் முழுதும் சோமபானம் பற்றிவரும் அதிசயச் செய்திகளை மறைத்தோ அல்லது அவை செய்தியே அல்ல என்ற பாணியில் பாராமுகம் காட்டியோ இதைச் செய்தனர். இன்றுவரை அவர்கள் சோம பானத்தை பயன்படுத்தி, அவர்கள் சொன்னதை நிரூபிக்கவும் இல்லை !
XXX
சோமபானம் பற்றிய அதிசயச் செய்திகள்

4 வேதங்களிலும் சோம பானம் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன.

1.சோம லதா என்ற கொடியை அல்லது தாவரத்தை கழுகுகள் கொண்டுதரும்

  1. சோமம் என்னும் மூலிகை, மூலிகைகளின் அரசன்
  2. சோமத்தில் 15 வகைகள் உண்டு
  3. சோமம் என்பது சிவப்பு நிற மரம்
    5.சோமபானத்தைக் குடித்தால் பாவம் போகும்
  4. மனம் சுத்தம் ஆகும்
  5. சக்தி, வீரம் அளிக்கும்
    8.புளிப்பு, இனிப்பு சுவையுடன் இருக்கும்
    9அதைப் பிழியும் மரக் கரண்டிகள், கற்கள் ஆகியன தெய்வம் போன்றவை
    இவைகளை எல்லாம் விளக்காமல் சென்றுவிடுவார்கள்
    .தளவாய்புரம் செப்பேடுகள் 1200 ஆண்டு பழமையானவை. அது சோமயாகம் செய்து மனம் சுத்தமான காடக சோமயாஜியின் புகழைப் பாடுகின்றது . பகவத் கீதை, சிலப்பதிகாரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியன சோம யாகத்தைப் புகழ்கின்றன. ; உலக மகா கவி சுப்ரமணிய பாரதி, நம து நாட்டை ஆரிய நாடு என்று பல இடங்களில் புகழ்வதோடு ஆரிய என்பதை நல்ல பொருளில், உண்மைப் பொருளில், பயன்படுத்துகிறார்.
    இதே போல பாரதியார் சோம ரசத்தைப் புகழ்ந்தும் பாடுகிறார் ; இது பலருக்கும் தெரியாது

அவருடைய படலைப் பார்ப்பதற்கு முன்னர், கீதையும் சிலப்பதிகாரமும் எப்படிப் புகழ்கின்றன என்று பாருங் கள் !
பகவத் கீதை 9-20
“மூன்று வேதங்களையும் கற்றவர்கள் வேள்விகளால் என்னைப் பூஜித்து சோம பானத்தால் பாவம் தோய்ந்தவர்களாய் சுவர்கத்துக்குச் செல்லுவதை வேண்டுகின்றார்கள் .அவர்கள் புண்ய பலத்தின் உறைவிடமான தேவேந்திர உலகத்தை அடைந்து அவ்வானுலகில் ஒளி வீசுகின்ற தேவர்கள் அனுபவிக்கும் சுக போகங்களை அனுபவிக்கிறார்கள் “.

இந்த ஸ்லோகம், சோமபானம் அருந்துவதால் பாவம் போய், அவர்கள் சொர்கத்துக்குச் சென்று ஒளிமயம் ஆகிவிடுவார்கள் என்கிறது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அரசனுக்குரிய வெண் குடை சோமயாஜிகளுக்கு கிடைக்கும் என்கிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு உரை எழுதிய சங்கரரும் சோமபானம் என்பது கடவுளரின் ரத்தத்துக்குச் சமம் என்று ஹரிவம்ச ஸ்லோகத்தின் மூலம் காட்டுகிறார்.
இளங்கோ அடிகள்
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் தமிழர்கள் சோமயாகம் செய்தது பற்றிப் பாடுகிறார் .

“இந்திரனுடைய அமராவதியிலிருந்து சதுக்க பூதங்களை வஞ்சி நகருக்குக் கொண்டுவந்து , மது அருந்துவதற்குரிய சோம வேள்விகளைச் செய்தவன் இன்று இல்லை” என்கிறார்

சதுக்கப்பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
— நடுகல் கதை, சிலப்பதிகாரம்

இதிலிருந்து ஒருகாலத்தில், ஒரு சேர மன்னன், சோம யாகம் செய்தது தெரிகிறது; மது என்னும் சொல் தேன், சோமம் ஆகிய இரண்டுக்கும் வேதத்தில் பயன்பட்டது சுரா பானம் என்பதை கள் , சாராயம் என்று சொல்லி வேதம் கண்டிக்கிறது .
பாரதி இரண்டு பாடல்களில் சோம ரசத்தைக் குறிப்பிடுகிறார்.

மது என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது போலவே சோமம் என்பதற்கு சந்திரன், சோமபானம் என்ற இரண்டு பொருள் உண்டு. அதற்கு உமையுடன் கூடிய சிவன் (ச+உமா=சோம )என்றும் சங்கரர், விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் விளம்புகிறார்.

ஜய ஸோம என்ற பாரதி பாட்டில் இந்திரனையும் சோமனையும் தொடர்பு படுத்திப் பாடுகினறார் .ரிக்வேதம் முழுதும் இந்திரனுடன் சோம ரசம்தான் சம்பந்தப்படுகிறது. அதனால்தான் இந்திரன் சக்தி பெற்று விருத்திரன் முதலியோரைக் கொன்றான் என்றும் வருகிறது.

இந்திர- சோமன் என்று ஜோடியாகப் பாடப்படும் ஓரிரு துதிகளிலும் சோமம் என்னும் மூலிகைப் பற்றித்தான் பேசுகின்றனர் உரைகாரர்கள் ; ஆகவே ஜய சோமம் பாடல் சோம மூலிகை பற்றிதே. ஒருவேளை வேத கால முனிவர் போலவே பாரதியும் இரட்டுற மொழிந்திருக்கலாம் .

சோம ரசம் பற்றிய பாடலைப் படிப்போருக்கு பாரதியின் கருத்து தெள்ளிதின் விளங்கும். அவர் அதன் சிறப்புகளை எடுத்து ஓதுகிறார்; குறை ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ பாரதியின் பாடல்கள்
XXX
சோமதேவன் புகழ் by Bharati
From http://www.lakshmansruthi.com
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய்
— பாரதியார் கவிதைகள்
xxx
சிவசக்தி by Bharati
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்‘ஓம்’என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய்
1

அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
2

உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்
3

தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்
4

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம்
5

கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்!
6

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம்.
7

எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்
From http://www.lakshmansruthi.com
–பாரதியார் கவிதைகள்


xxx SUBAHM xxxx

tags- சோமம், சோம ரசம், பானம் , பாரதி, இளங்கோ , கீதை

இளங்கோவடிகள் சொன்ன முருகன் தலம் எது? (Post No.6587)

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 23 June 2019


British Summer Time uploaded in London –  9-45 am

Post No. 6587

Pictures are taken from various sources. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

கொங்குமண்டல சதகம்

இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலனின் தலம் எது?

ச.நாகராஜன்

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். சேரநாட்டை ஆண்ட மன்னன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன். கண்ணகிக்குச் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்தவன் அவன். அவனது தம்பி இளங்கோ.

கண்ணகியின் காவியத்தை அற்புதமாக சிலப்பதிகாரமாகத் தந்தவர் இளங்கோ அடிகள். அண்ணனே முடி சூட வேண்டும் என்று துரவறம் பூண்ட பெருந்தகை இளங்கோ. சீத்தலைச் சாத்தனாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பர்.

அந்தக் காப்பியத்தில் குன்றக் குரவையில் செங்கோட்டு வேலரைக் குறித்து அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இளங்கோவடிகளின் காலம் சுமார் 1850 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

அப்படிப்பட்ட இளங்கோவடிகள் போற்றிப் புகழ்ந்த திருச்செங்கோட்டுத் தலம் கொங்குமண்டலத்தில் தான் உள்ளது என்று கொங்குமண்டல சதகம் தனது 61ஆம் பாடலில் பெருமையுடன் கூறுகிறது.

பாடல் இது தான்:-

உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற் கோர்துணையாம்

இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத் தேவமுதங்

கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங் கோட்டுவேற் குமரனமர்

வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : மனச்சான்றுக்கு வழுவில்லாது நடக்கும் சேரன் செங்குட்டுவனது ஒப்பற்ற தலைவனான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்துள், சொல்லியருளிய செங்கோட்டு வேலன் வீற்றிருந்தருளும் திருச்செங்கோடு என்னும் திருத்தலமும் கொங்குமண்டலம் என்பதாம்.

திருச்செங்கோடு பண்டைக் காலத்திலிருந்தே பெரும் புகழ் பெற்ற தலமாக இருந்து வந்திருப்பதை எண்ணி மகிழ முடிகிறது.

***

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  11-28 am

 

 

 

Post No. 4616

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது.  தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்

 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட காப்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

 

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

 

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

 

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.

 

ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

 

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன்  4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய  நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

 

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.

சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

 

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

 

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை  ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்

 

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

 

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன்  உரைத்தல்

 

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

 

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக

 

6.பராசரன் தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை

7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

 

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

 

9.பிராஹ்மணர்கள் வண்டமிழ் மறையோர்– கட்டுரைக் காதை

 

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–

நீர்ப்படைக் காதை

நடுகற் காதை

வரந்தரு காதை

 

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

 

12.மாதரி தற்கொலைச் செய்தி

 

  1. கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

 

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

 

  1. மாதவி- மணிமேகலை நிலைமை

16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை

 

  1. ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

 

  1. பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

 

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

 

  1. மாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி

 

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து

 

 

Kannaki Anklet

23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

 

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை

 

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை

 

ஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்

முழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்!!!

 

சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ஐயர் காலில் மன்னன் விழுகிறான்.

 

பேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

 

ஏன்? ஏன்? ஏன்?

 

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

 

இல்லவே இல்லை.

 

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

 

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

 

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dikshitar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965

 

 

–Subahm–

இளங்கோ, பீஷ்மர், தேவாபி செய்த மாபெரும் தியாகம்!

எழுதியவர்-லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண் 1814;

தேதி: 20 ஏப்ரல் 2015

இலண்டனில் பதிவு எற்றிய நேரம் – காலை 9–31

This is already published in English by me.

பீஷ்மர் செய்த தியாகம் எல்லோரும் அறிந்ததே. மகத்தான தியாகம். எப்போதும் குடும்ப சுகம் அனுபவிக்க இளைஞர்களுக்கு பெரியோர்கள் எப்படியாவது உதவுவர். யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தலோ , குழந்தைகள் பிறக்காமல் இருந்தாலோ அந்த இளம் உள்ளங்களுக்காக மனதார கோவில் தோறும் சென்று பிரார்த்திப்பர். ஆனால் இதற்கு நேர் மாறாக நடந்தது மஹாபாரதத்தில்! சத்யவதி மீது சந்தனு என்ற மன்னனுக்கு ஏற்பட்ட திடீர் காதலாலும் அவளுடைய தந்தை போட்ட நிபந்தனையாலும் தேவ விரதன் என்ற பீஷ்மர் தனது வாழ்நாள் முழுதும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க சபதம் செய்தார்.

ஒரு இளைஞன், தனது குடும்ப சுகத்தையே, தனது தந்தையின் குடும்ப (செக்ஸ்) சுகத்துக்காக தியாகம் செய்தது உலக இலக்கியத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத தியாகம். மஹத்தான தியாகம்! இதைக் கண்ட தேவர்கள் வியந்து பீஷ்ம, பீஷ்ம என்று கூச்சல் இட்டனர். “அதி பயங்கரமான சபதம்” என்று இதற்குப் பொருள். அதாவது நம்ப முடியாத அதிசய சபதம். இதனால்தான் ஆண்டுதோறும் பீஷ்மாஷ்டமி அன்று உலக இந்துக்கள் அனைவரும் அவருக்கும் அவரைப் போன்று இறந்த புண்ய பிரம்மசாரிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இனி வருங் காலத்திலும் கூட இப்படி ஒரு அதிசயம் நிகழாது.

இதற்கு இணையான தியாகம் தமிழ் கூறு நல்லுலகத்தில் நடந்தது. சேர மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசவையில் வீற்றிருந்த காலத்தில் ஒரு சோதிடன் வந்து சேர்ந்தான். மன்னர் குடும்ப ஜாதகத்துப் படி அவர் மூத்த மகன் செங்குட்டுவன் மன்னன் ஆக முடியாது என்றும் “இளையவர்தான்” —இளங்கோ தான் — மன்னர் ஆவார் என்றும் சொல்லிவிட்டார். இளங்கோவின் உண்மைப் பெயர் கூட நமக்கு இன்று வரை தெரியாது. இளங்கோ என்றால் இளவரசர் என்று பொருள் (இதே போல மாணிக்கவாசகர் பெயரும் நமக்குத் தெரியாது. அவர் மாணிக்கம் போன்ற ரத்தினச் சொற்களை உதிர்த்ததால் வந்த காரணப் பெயரை மட்டுமே நாம் அறிவோம்).

உடனே இளவரசர் துறவறம் பூண்டார். இந்துக்கள் கணக்குப்படி ஒருவர் துறவறம் பூண்டால் அது மறு ஜன்மம் போல. துறவி என்பதால் அவர் அரசராக முடியாது என்பது மட்டுமல்ல;பின்னர் செங்குட்டுவன் மன்னரானார். ஆதி சங்கரரின் கால்களை முதலை பிடித்தபோது இந்த ஜன்மம் தனக்கு முடிந்துவிட்டதால் சந்யாசம் வாங்க சம்மதித்தால் முதலை காலை விட்டுவிடும் என்றார். அதாவது விதியை வெல்ல – சோதிட விதிகளை மீற – இப்படிச் சில சுருக்கு வழிகள் (ஷார்ட் கட்) உண்டு. இதே போல வித்யாரண்யர் அதிக செல்வம் வேண்டி தவம் இருந்தார். லெட்சுமிதேவி அவர் முன் தோன்றி, ‘டன்’ கனக்கில் தங்கம் தர முடியும் என்றும் ஆனால் இந்த ஜன்மத்தில் அதற்கான யோக ஜாதகம் அவரிடம் இல்லாததால் அடுத்த ஜன்மத்தில் தருவதாகவும் லெட்சுமிதேவி சொன்னார்.

வித்யரண்யரும் ஏமாந்து போய் ‘சரி’ என்று சொல்லிவிட்டார். பின்னர் ஆலோசித்துவிட்டு, இந்த ஜன்மத்திலேயே செல்வம் கிடைப்பதற்காக துறவறம் பூண்டார். லெட்சுமியும் தங்கம் கொடுத்தாள். ஆனால் மலை போலக் குவிந்த தங்கத்தை அவரால் தொடக்கூட முடியவில்லை. ஏனெனில் சந்யாசிகள் தங்கத்தைத் தொடக்கூடாது. அடடா, இவ்வளவு தங்கத்தையும் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தத்தளித்த போது, படை யெடுத்து வந்த வெளித்தேச முஸ்லீம்களின் ஆட்சியை அடியோடு ஒழித்து விஜய நகர சாம்ராஜயம் எழுவதற்கு அந்தப் பணத்தைக் கொடுத்தார். இதுபோலவே இளங்கோவும் சந்யாசியானவுடன் அவர் அண்ணன் செங்குட்டுவனுக்கு அரசு கட்டில் கிடைத்தது. இளங்கோ சந்யாசம் வாங்கியதால் செங்குட்டுவனுக்கு ஒரு தம்பி இருந்ததாகவே பொருள் இல்லை. அப்போது ஒரே மகன் என்ற பெயரில் செங்குட்டுவனுக்கு பதவி கிடைத்துவிடும்.

இளங்கோ அடிகள் படம்

தேவாபி செய்த தியாகம்

சந்தனுவின் அண்ணன் உலக வாழ்வைத் துறந்து கானகம் சென்றார். இதனால் சந்தனுவுக்கு ஹஸ்தினாபுர அரச பதவி கிடைத்தது என்ற செய்தி மஹாபாரத ஆதி பர்வத்தில் உள்ளது. ரிக்வேதத்திலும் (10-98). அந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு வறட்சி நிலவியபோது, தேவாபி ஒரு புரோகிதர் போல செயல்பட்டு யாக யக்ஞங்களை ஏற்பாடு செய்து மழை பெய்ய வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. யாஸ்கர் எழுதிய நிருக்தத்திலும் (2-10) தேவாபி கதை உள்ளது. தேவாபிக்கு தோல் நோய் இருந்ததால் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்று ‘’பிருஹத்தேவதா’’ கூறுகிறது.ஆனால் பல சந்தனுக்கள், பல தேவாபிகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே தீர ஆராய்ந்து எந்த தேவாபி என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இதுதவிர முறை தவறிய ஆட்சி காரணமாக துஸ்தாரிது பௌம்சாயன என்ற மன்னன் ஆட்சி துறந்ததாக சதபத பிராமணம் என்னும் நூல் சொல்லுகிறது (12-9-3-1).

கலிங்க- வங்க நாடுகளை ஆண்டு வந்த விஜயன், முறை தவறிய ஆட்சி செய்த்ததால், நாடு கடத்தப் பட்டதும் அவன் இலங்கையில் போய் இறங்கி புதிய ஆட்சியைத் துவக்கியதையும் நாம் அறிவோம். இது போல நஹுஷன், வேனன், நந்த வம்சத்து அரசர்கள் ஆகியோரும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். அவை தியாகம் என்னும் வரம்பிற்குள் வாரா.

ஆதி சங்கரர்

வித்யாரண்யருக்கு தங்க மழை

தமிழ் நாட்டில் கேட்ட ஒலிகள்! இளங்கோ ‘’சர்வே’’!!

veena
Mr Abdul Kalam on Veena, Former President of India

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1240; தேதி:-18 August 2014

தமிழ் கூறு நல்லுலகை நன்கு சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் இளங்கோ அடிகளும் கவிச் சக்கரவர்த்தி கம்பனும் அங்கே கண்ட காட்சிகளை அற்புதமாக வருணித்துப் பாடியுள்ளனர். அவர்கள் கண்களை ஈர்த்த கவின்மிகு காட்சிகளை விட, காதுகளை ஈர்த்த இசைமிகு ஒலிகள் சிறப்புடைத்தாம். ஒன்று, இரண்டு கவிதைகளோடு நில்லாமல் பத்துப் பதினைந்து என்று பாட்டியற்றி மகிழ்ந்தனர் இருவரும் —- கம்பரைப் பொறுத்த மட்டில் கோசல நாடு பற்றி அவர் பாடியது, தமிழ் நாட்டுக்கும் பொருந்தும். இளங்கோ அடிகள் தமிழ் நாடு பற்றியே இதைக் கூறியுள்ளார்.

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” — என்பர் ஆன்றோர். இதோ அவ்வழியில் சில கவிதைகளை மட்டும் கேட்டு ரசிப்போம்! சுவைப்போம்!!

இளங்கோவின் சிலப்பதிக்காரக் காட்சிகள்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக் குறு வள்ளையும் புனத்தெழு விளியும்
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்
பலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்
கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும்
பயம்பிழ் வீழ் யானைப் பாகர் ஓதையும்
இயங்குபடை அரவமொடு, யாங்கணும் ஒலிப்ப
— காட்சிக் காதை, சிலப்பதிகாரம்

sikkil mala chandrasekar
Sikkil Mala Chandrasekar on Flute

பொருள்:
குன்றுகளில் குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்கள் பாடிய குரவைப் பாட்டு
கொடிச்சியர் பாட்டு
வேலன் வெறியாடும் பாட்டு
உரலில் தினை மாவு இடிப்போர் பாடும் வள்ளைப் பாட்டு
வயல்களில் சாப்பிட வரும் பறவைகளை விரட்டும் பாட்டு
தேன் கூட்டினை உடைத்தவுடன் குறவர் எழுப்பும் ஆராவார ஒலியும்
பறை முழக்குவதுபோல அருவிகள் எழுப்பும் ஓசையும்
புலியுடன் பொருதும் ஆண் யானையின் பிளிற்று ஒலியும்
பரண் உச்சியில் இருப்போர் விலங்குகளை விரட்டும் ஒலியும்
குழியில் விழுந்த யானைகளை பிடிப்போர் ஆரவாரமும்
சேர மன்னனின் படைகள் எழுப்பும் ஓசையும்
எனப் பல்வேறு ஒலிகள் ஒலித்தன என்பார் இளங்கோ.

வேறு ஒரு இடத்தில் பாண்டிய மன்னன் காதில் பார்ப்பனர் ஓதும் வேதமுழக்கமே கேட்கும், புகார் செய்வதற்கான ஆராய்ச்சி மணி ஒலி கேட்டதே இலை என்கிறார் இளங்கோ:

மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே
–கட்டுரைக் காதை

யானை பிடிக்கும் போது வேடுவர் எழுப்பும் ஆரவாரத்தை கம்பரும் இளங்கோவும் குறிப்பிடத் தவறவில்லை.

பாட்டு என்பதற்கு ஓதை (ஓசை), பாணி, பாடல் என்பனவற்றையும், சப்தம் என்பதற்கு ஒலி, விளி என்பனவற்றையும் இளங்கோ பயன்படுத்துகிறார்.

chenda mela,thrissur
Chenda Mela in Thrissur

கம்ப ராமாயணக் கவிதைகள்

வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின்
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல் இயம் துவைக்கும் கம்மையின்
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே (பால காண்டம் 154)

பொருள்:– கடல் ஒலியைத் தோற்கடிக்கும் அளவுக்கு அயோத்தியில் கேட்ட ஒலிகள்: சங்கு, ஊது கொம்பு, மகர வீணை, மத்தளம் கின்னரம் என்னும் இசைக் கருவி, புல்லாங்குழல் ஆகியவற்றின் ஒலிகளாம்.

மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை,
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் முடை வேய் இசை, – கண்ணுளர் ஆடல்தோறும் –
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே.

(வரைக் காட்சிப் படலம் 44)

dusserah festival in Gulbarga
Dusserah Festival in Gulbarga

புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை.

(வரைக் காட்சிப் படலம் 46)

((ஓதை= பாட்டு, ஒலி, முழவு= தோல்கருவி, நரம்பு= யாழ், வீணை, வேய்= புல்லாங்குழல், வேழம்=யானை, மது=கள், மேகலை=ஒட்டியாணம்))

இது தவிர பல இடங்களில் உழவர்கள் மாடுகளை அதட்டி ஓட்டும் ஒலி, வீரர் கால்களில் இருந்து ஒலிக்கும் கழல் ஒலி, மகளிர் கால்களில் இருந்து ஒலிக்கும் சிலம்பு ஒலி, குயில் ஒலி, கிளி மொழி என்று ஏராளமான இடங்களில் ஒலிகளை வருணிக்கிறான் கம்பன்.
gopalakrishna bagavathar
Sri Gopalakrishna Bagavathar on tambura

contact swami_48@yahoo.com

கோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் !!

SriNarayani2
image of Narayani

Research paper written by London Swaminathan
Post No.1213; Dated :- 4 August 2014.

சிலப்பதிகாரத்தை யாத்த இளங்கோவும் காவியத்தின் கதாநாயகனான கோவலனும் சம்ஸ்கிருத அறிஞர்கள் !! இது நான் கூறும் கருத்து மட்டும் அல்ல. சிலப்பதிகாரத்தை அழகிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர் ராமசந்திர தீட்சிதரும், கோவலன் சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்று எழுதி இருக்கிறார்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒரு இந்து மதக் கலைகளஞ்சியம் ஆகும்.1939 ஆண்டில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர். ராமசந்திர தீட்சிதர், பக்கம் தோறும் கொடுத்திருக்கும் அடிக் குறிப்புகளையும் அடியார்க்கு நல்லாரும் அரும்பதவுரையாசிரியரும் எழுதிய நீண்ட உரைகளையும் படிப்போருக்கு இது சொல்லாமலேயே விளங்கும்.

சிலப்பதிகாரம் — புகார், மதுரை, வஞ்சி — என்ற மூன்று மாபெரும் தமிழ் நகரங்களின் பெயரில் 3 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் 30 காதைகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் கண்ணன், இராமன் புகழையும் குன்றக் குரவை என்ற பகுதியில் முருகன் புகழையும் வேட்டுவ வரி என்ற பகுதியில் துர்க்கையின் புகழையும் விதந்து ஓதுகிறார் இளங்கோ.

சங்க இலக்கிய நூலான நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் (பூ பாதௌ….) உள்ளதோ, அதே போல சிலப்பதிகாரத்தில் பல சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப் புகளைக் காணலாம்.

கோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகளை காண்போம்:–
durga mahisa

சான்று ஒன்று:–
குழந்தையைக் கொல்ல வந்த பாம்பைக் கொன்ற ஒரு கீரிப்பிள்ளை பெருமித உணர்வோடு வாசலில் காத்திருந்தது. தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குத் திரும்பிய பார்ப்பனி, கீரியின் வாய் முழுதும் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்து, பதறிப் போய், கீரிதான் குழந்தையைக் கொன்றுவிட்டது என்று தவறாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டுக் கொன்ற பஞ்ச தந்திரக்கதை எல்லோருக்கும் தெரியும்.

இதில் ஒரு சுவையான விஷயத்தை நுழைக்கிறார் நுன்மாண் நுழைபுலம் மிக்க இளங்கோ! அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான். எதற்காக? வடதிசை சென்று புண்ணியம் தேட! அப்படிப் போகையில், வட மொழி வாசகம் எழுதிய ஒரு ஓலையை அந்தப் பார்ப்பனப் பெண்ணிடம் கொடுத்து கற்றவரிடம் (அடைக்கலக் காதை) காட்டி உய்வு பெறு என்று சொல்லிப் போய்விடுகிறான். அந்தப் பிராமணப். பெண் கடைத் தெருவில் நின்று, குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுத போது, கோவலன் வந்து அந்த சம்ஸ்கிருத பாடலைப் படித்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறான். அடியார்கு நல்லார் எழுதிய உரையில் அது என்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் என்பதையும் பஞ்ச தந்திரக் கதையிலிருந்து எடுத்துச் சொல்கிறார்.

இங்கே காலவழுவமைதி உள்ளதைச் சுட்டிக்காட்டிய தீட்சிதர், கோவலனை சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்கிறார். காலவழுவமைதி= கோவலன் காலத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது!!

DurgaS

சான்று இரண்டு:–
கோவலனுக்கு மதுரைக்குப் போகும் காட்டு வழியை ஒரு மாங்காட்டுப் பிராமணன் (காடுகாண் காதை) சொல்வதாகக் கதை அமைத்துள்ளார் இளங்கோ. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் இருந்து காட்டு வழியாக வருகையில் மாதவியின் நண்பி வசந்தமாலா போல வேஷம் போட்ட வனமோகினி கோவலனை இடைமறிக்க, மாங்காட்டு மறையவன் சொன்ன மோகினி விஷயங்கள் கோவலனுக்கு நினைவுக்கு வருகிறது. உடனே துர்க்கா தேவி மந்திரத்தை சொன்னவுடன் அந்த வன தேவதை ஓடிவிடுகிறது. இங்கே இளங்கோ பயன் படுத்தும் சொல் பாய்கலைப் பாவை மந்திரம். அதாவது பாயும் மான் என்னும் விலங்கை வாஹனமாகக் கொண்ட துர்க்காதேவியின் மந்திரம் (காடுகாண் காதை)
இதே பகுதியில் மாங்காட்டுப் பிராமணன் ஐந்தெழுத்து ( நமசிவாய) எட்டெழுத்து (நமோ நாராயண) மந்திரங்களின் பெருமையையும் பகர்கிறான். எல்லா இடங்களிலும் “மந்திரம்” என்னும் வடசொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ!!

pallava
Mahishasuramardani in Mahabalipuram

சான்று மூன்று:–
1008 பெயர்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் எல்லா இந்துக் கடவுளர்க்கும் உண்டு. இளங்கோவுக்கு இந்த எண் மிகவும் பிடிக்கும். இந்திர விழா பற்றிய காதையில் 1008 மன்னர்கள் தங்கக் குடங்களில் புனித நீர் ஏந்தி இந்திர அபிஷேகம் செய்த்தைக் கூறுவார். சமண மதத்தினர் 1008 நாமம் சொல்வதாகக் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி வாயிலாகக் கூறுகிறார். ஊர்காண் காதையில் 1008 பொற்காசுகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ. இதுவும் சம்ஸ்கிருத செல்வாக்கைக் காட்டும்.
சமணத் துறவி கவுந்தி அடிகள் வாய்மொழியாக சமண நாமாவளியில் பல சம்ஸ்கிருத நாமங்களைச் சொல்கிறார். இதில் பல சைவ (சிவன்) பெயர்களும் (நாடுகாண் காதை) உண்டு:

அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகழ்ந்தோன்
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்
தத்துவன், சாதுவன், சாரணன் காரணன்
……………………………………………
சங்கரன், ஈசன், சுயம்பு சதுர்முகன்

dance mahisa

சான்று நான்கு:–
வேட்டுவ வரியில் வேடர்கள் ——– கொற்றவை என்றும் பாய் கலைப் பாவை என்றும் துர்கா தேவி என்றும் அழைக்கப்படும் தெய்வத்தை எப்படி எல்லாம் வணங்கினர் என்று நிறையவே சொல்கிறார் இளங்கோ:

அமரி, குமரி,கவுரி, சமரி
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை (நாராயணி)
ஐயை, செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலைப் பாவை

இதில் கவுரி, நாராயணி என்ற சொற்கள் பல ஸ்தோத்திரங்களில் உள்ளன.

சர்வமங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

என்ற ஸ்லோகம் எல்லோருக்கும் தெரிந்தது.

‘அயிகிரி நந்தினி’– என்ற மஹிஷாசுரமர்தனி ஸ்லோகத்தில் வரும் எல்லா விஷயங்களையும் வேட்டுவ வரியில் சொல்கிறார் இளங்கோ. அத்தனை யையும் காட்ட இடமிருக்காது. இதோ ஒரு சில செய்யுள்கள்:

ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—-
வானோர் வணங்க, மறைமேல், மறையாகி
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

வரிய வளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று,
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்—-
அரி, அரன், பூமேலோன், அகமலர் மேல் மன்னும்
விரிகதிர் அம்சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி
செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்—-
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய், மறை ஏத்தவே நிற்பாய்!
–வேட்டுவ வரி
mahisa1

இதே போல பகவத் கீதையின் தாக்கத்தையும் பல இடங்களில் காணலாம். சம்ஸ்கிருத சொற்களின் ஆதிக்கமும் சங்க இலக்கியத்தைவிட பன்மடங்கு கூடுதலாகக் காணக்கிடக்கிறது. பின்னொரு சமயம் அவை பற்றிக் காண்போம்.

–சுபம்–

சாமியார் வேடத்தில் உளவாளிகள்!

The Spy Who Loved Me

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:—1209; தேதி ஆகஸ்ட் 2, 2014.

இந்தியாவில் சாமியார் வேடத்தில் உளவாளிகள் இருப்பதை எல்லோரும் அறிவர். வெளி நாட்டுக்காரர்களில் உண்மையான பக்தர்களும் உண்டு. ஆனால் பலர் சமயத்தைப் பயன்படுத்தி எளிதாக உளவு வேலைகளில் ஈடுபடுவது வள்ளுவர் காலத்தில் இருந்து நடக்கிறது. வடமொழி நூல்களில் உலகப் பிரசித்தி பெற்ற அர்த்த சாஸ்திரமும் ஒன்று. அதை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன், உளவுக் கலை பற்றி விரிவாக எழுதி இருப்பதை அறிஞர் உலகம் அறியும். ஆனால் மனு, வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோரும் பல சுவையான தகவல்களைத் தருவதை சிலரே அறிவர்.

சிலப்பதிகாரம் தரும் சுவையான தகவல்கள்

1.நான் வட இமயம் வரை என்று கண்ணகிக்கு சிலை செய்ய கல் எடுத்து வரப் போவதை கடிதம் வாயிலாக அறிவியுங்கள். அந்தக் கடிதத்தின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள் என்று வீர உரை ஆற்றுகிறான் செங்குட்டுவன். உடனே அழும்பில் வேல் எழுந்து மன்னர் மன்னா ! அதற்குத் தேவையே இல்லை. இந்த ஜம்பூத்வீப நாட்டின் எல்லா பகுதி உளவாளிகளும் நம் தலை நகர் வஞ்சியில் இருக்கின்றனர். நகர் எங்கும் முரசு அறைந்தால் போதும். நாடு முழுதும் செய்தி பறந்து விடும் என்கிறான்.

நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;
வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப
–(காட்சிக் காதை சிலப்பதிகாரம்)

இதிலிருந்து தெரிவதென்ன? அக்கலத்தில் உளவுத் துறை மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. இன்றும் கூட டில்லியில் உலக நாடுகளைச் சேர்ந்த உளவாளிகள் எல்லோரும் இருப்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் திடுக்கிடும் செய்திகள் தெரிவிக்கின்றன.
THE-SPY-WHO-LOVED-ME-POSTER

2.இரண்டாவது விஷயம் கீரந்தை என்னும் பிராமணன் கதையில் வருகிறது. அந்தப் பிராமணன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக பாண்டிய மன்னன் கையையே இழந்தான். பொற்கைப் பாண்டியன் கதை எல்லோரும் அறிந்ததே. மன்னரே மாறுவேடத்தில் நாட்டை உளவு பார்த்தது இக்கதையில் தெரிய வருகிறது–(கட்டுரை காதை, சிலப்பதிகாரம்)

ராமாயணம் தரும் சுவையான தகவல்கள்
3.வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமாயணத்திலும் ராவணன் அனுப்பிய சுகன், சாரன் என்ற இரண்டு உளவாளிகள் பற்றி விரிவான பகுதி உள்ளது. யுத்த காண்டத்தில் கம்பன் இதற்கு ஒரு பெரிய படலத்தையே ஒதுக்கி உளவுக் கலை பற்றி அலசுகிறான். அந்த இரண்டு உளவாளிகளும் குரங்கு வேடம் போட்டு நடித்த போதும் விபீசணன் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து ராமனிடம் ஒப்படைக்கிறான். ராமனோ அவர்களை மன்னித்து, படை பலம் பற்றிய முழு தகவல்களையும் அளித்து ராவணனிடம் போய்ச் சொல்லுங்கள் என்கிறான். இறுதி வெற்றி ராமனுக்கே என்பது அவனுக்குத் தெரியும்!
asceticdog

புறநானூறு தரும் சுவையான தகவல்கள்

4.சங்க இலக்கிய நூலான புற நானூற்றில் (பாடல் 47) சுவையான சம்பவம் வருகிறது. இளந்தத்தன் என்ற புலவன் நெடுங்கிள்ளியிடம் வந்தான். அவன் அதற்கு முன் நலங்கிள்ளியிடம் பாடிப் பரிசில் பெற்றவன். நலங்கிள்ளியோ அவனுடைய எதிரி. ஆகையால் இந்தப் புலவன் உளவு பார்க்க வந்தான் என்று சொல்லி நெடுங்கிள்ளி, மரண தண்டனை விதித்து விடுகிறான். உடனே புத்திசாலிப் புலவர் கோவூர் கிழார் வந்து உண்மையை எடுத்துரைத்துப் புலவன் உயிரைக் காப்பாற்றுகிறார். “பழுமரம் நாடி ஓடும் பறவைகளைப் போல உன் போன்றவரை நாடி வரும் அப்பாவிப் புலவன் இவன். மறு நாளைக்குக் கூடச் சேர்த்து வைக்காமல் உறவினர்களுக்குக் கொடுத்து மகிழும் ஜாதி புலவர் ஜாதி. இவன் உனக்குத் தீங்கு செய்வானா? இல்லவே இல்லை. இவனை விடுவி” என்கிறார் கோவூர்க் கிழார்.
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ? இன்றே.

6228-000541
வள்ளுவர் தரும் சுவையான தகவல்கள்

5.ஒற்றாடல் என்னும் 59 ஆம் அதிகாரத்தில் பத்தே குறள்களில் இருபதே வரிகளில் உளவுக்கலை விஷயங்களைச் சாறு பிழிந்து கொடுக்கிறான் வள்ளுவன். “புல்லட் பாயிண்ட்” வள்ளுவன் கூறுவது:–
1.துறவி வேடத்தில் நாட்டு எல்லைகளைக் கடந்து உளவு பார் –(குறள் 586)
துறந்தார் படிவத்தராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று
2.மூன்று ஒற்றர்களை நியமி; ஒருவருக்கு மற்றவர் பற்றித் தெரியக் கூடாது. மூவரும் ஒரே மாதிரி சொன்னால் அதை நம்பு —(குறள் 589)
3.எல்லோருக்கும் முன்னால் ஒற்றர்களைப் பாராட்டாதே. உன் குட்டு வெளிப்பட்டு விடும். ‘’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்ற கதை ஆகிவிடும்!! —(குறள் 590)
4.நன்றாக வேஷம் போட வேண்டும். யாராவது சந்தேகமாகப் பார்த்தாலும் சமாளிக்க வேண்டும். ரகசியம் வெளியாகக் கூடாது. அவன் தான் நல்ல ஒற்றன் —(குறள் 585)
5.அரசு அதிகாரிகள், அரசனின் சொந்தக்காரர்கள், வேற்று நாட்டுப் பகைவர் அத்தனை பேரையும் வேவு பார்க்க வேண்டும் –(குறள் 584)
இப்படி முத்து முத்தாக உதிர்க்கிறான் வள்ளுவன்.

220px-Noor_Inayat_Khan
Noor Inayat Khan was Moscow born Indian Muslim, worked as a British agent and executed by Hitler

மனு தரும் சுவையான தகவல்கள்

மனு ஸ்மிருதியில் ஏழாவது ஒன்பதாவது அத்தியாயங்களில் ஒற்றாடல் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மனு சொல்லும் விஷயங்கள்:
1.ஒவ்வொரு ஊரிலும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஒற்றர் மூலம் தகவல் திரட்ட வேண்டும்
2.அந்தப்புரத்திலும், ரகசிய ஒற்றர் விஷயத்திலும் நடப்பனவற்றை நாள்தோறும் ஆராய வேண்டும்.
3.சந்தியாகால பிரார்த்தனைக்குப் பின்னர் ஒற்றர்களை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று ‘’ரிப்போர்ட்’’ வாங்க வேண்டும்.
4.அரசனுக்கு இரண்டு கண்கள் ஒற்ற்ர்கள்தான். தெரிந்த திருடர்கள், தெரியாத திருடர்கள் ஆகியவர்களைப் பிடிக்கும் கண்கள் இவை.
5.குற்றவாளிகளை குற்றம் செய்யுமாறு உளவாளிகள் மூலம் தூண்ட வேண்டும். அப்போது அவர்களை வகையாகப் பிடித்து விடலாம்.
6 தன் வலி, மாற்றான் வலி – இரண்டையும் அறிய ஒற்றர்களப் பயன்படுத்த வேண்டும்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மவர் எழுதியது இன்றும் சாலப் பொருந்தும். தூதர் விஷயத்திலும், உளவுக் கலை விஷயத்திலும் நாம்தான் உலகிற்கே முன்னோடி. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்திலும் உள்ளதைப் போல உலகில் வேறு எங்கேயும் இல்லை. அவர் நூல் எழுதி 2300 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
mata hari executed in 1917
Most famous woman spy executed in 1917 during First World War.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர் போர்வைகளிலும் அறிஞர்கள் போர்வையிலும் உளவாளிகள் ஒளிந்திருப்பர். —-பத்திரிக்கையாளர்களில் பலர் உளவாளிகள்! —மடங்களில் நிறையவே உளவாளிகள் உண்டு. எளிதில் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் அறியும் இடம் மத அமைப்புகள்தான்.— அரசியல் அலுவலகங்களில் உண்மையை உளறுபவர்கள் அதிகம் என்பதால் உளவாளிகளின் சொர்க்க பூமி அது.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு!! ராத்திரியில் அதுவும் பேசாதே !! என்று சும்மாவா சொன்னான் தமிழன்!!
–சுபம்–

வரலாறு எழுதிய முதல் தமிழன்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. கபிலர், பாட்டு எண்ணிக்கையால் (205 பாடல்கள்) முதலிடம் பெறுகிறார். பரணரோவெனில், பாடல்களில் அளிக்கும் வரலாற்றுச் செய்திகளால் முதலிடம் பெறுகிறார். பரணரை தமிழ் கூறு நல்லுலகத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்றால் மிகையாகாது. தேதியையும் ஆண்டையும் குறிக்கவில்லை என்றாலும் ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் கூறுவது பழந் தமிழகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.

 

பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.

 

இரு பெரும் சோழர்களையும், இரு பெரும் சேரர்களையும் நேரில் சந்தித்ததாகத் தெரிகிறது. இது தவிர கடை எழு வள்ளல்களில் பேகன், ஆய், அஞ்சி, காரி, ஓரி ஆகியோரைப் பாடுகிறார். அவர் பாடிய 85 பாடல்களிலும் உவமை வாயிலாகவோ நேரடிக் குறிப்பு மூலமாகவோ ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். எதிர்காலத்தில் வாழ்வோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே நன்கு உணர்ந்து ஒவ்வொரு செய்தியாக அவிழ்த்து விடுகிறார்.

 

நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார். கழார்ப் பெருந்துறை நீர் விழாவில் ஆட்டனத்தியை காவிரி அடித்துச் சென்றது, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் அடைந்த வெற்றியைக் கொண்டாட அவனுக்குப் பெண் கொடுத்த அழுந்தூரில் விழா நடந்தது, ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது, பாழியில் வேளிர் புதையல் செல்வங்களைச் சேர்த்துவைத்தது, தந்தையின் கண்ணைப் பறித்த கோசரை அன்னி மிஞிலி பழிவாங்கியது, மனைவியைப் பிரிந்து பரத்தை வீட்டில் வாழ்ந்த பேகனை மீண்டும் மனைவியுடன் சேர்த்து வைத்தது—இப்படி எத்தனையோ செய்திகளை பத்திரிக்கை நிருபர்கள் போல பிட்டுப் பிட்டு வைக்கிறார். அந்தக் காலத்தில் பத்திரிக்கைகள் இருந்திருந்தால் சிறந்த பத்திரிக்கையாளர் விருது பரணருக்குத்தான் கிடைத்திருக்கும்!

 

மேலே கூறிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவையான நிகழ்ச்சி. இவைகளில் கரிகாலன், நன்னன், பறவை நண்பன் ஆய் எயினன், சேரன் செங்குட்டுவன் போன்றோரின் சுவையான கதைகளை ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழ்கண்ட கட்டுரைகளில் காண்க:

 

1.கரிகாலன் வெள்ளை முடி தரித்ததால்தான் இன்றும் பிரிட்டிஷ் நீதிபதிகள் வெள்ளை “விக்” தரித்து வந்து தீர்ப்பு கூறுகிறார்கள்

2. துலாபாரம் கட்டுரையில்,எடைக்கு எடை தராசில் வைத்து தங்கம் தருகிறேன் என்று ஊர்மக்கள் மன்றாடியும் நன்னன் ஒரு பெண்ணைப் படுகொலை செய்தான் என்பதைக் கூறியிருக்கிறேன்

3. அதிசயப் பறவைத் தமிழன் கட்டுரையில் ஆய் எயினனுக்குப் பறவைகள் கூடி குடை பிடித்த அற்புத நிகச்சியைக் கொடுத்துள்ளேன்

4. கடற்கொள்ளையர்: இந்துக் கடவுள்கள் கடற்கொள்ளையரைத் தாக்கி ஒழித்த கட்டுரையில் கடம்பறுத்த செங்குட்டுவன் பற்றி எழுதினேன்.

5. Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர் கண்டுபிடித்த அரிய விஷயத்தைக் கொடுத்திருக்கிறேன்

 

அறுகை என்ற நண்பனுக்கு உதவுவதற்காக மோகூர்ப் பழையன் மீது படை எடுத்த செங்குட்டுவன், பழையனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் சோழனையும் விரட்டிவிட்டு பழையனை வென்றான். பழையனின் காவல் மரமான வேம்பை வெட்டித் துண்டுகளாக்கி முரசு செய்ய யானைகளால் இழுத்துவந்தான்.  இதற்குப் பழையன் மனைவியரின் முடியைக் கத்தரித்து கயிறு செய்து அந்தக் கயிற்றைப் பயன்படுத்தினான். ஆக தமிழர் செய்த தவறான தவறுகளையும் துல்லியமாகத் தருகிறார். மாங்காய் எடுத்த பெண்ணைக் கொன்ற நன்னனை ஏசுகிறார். கடற்படையைக் கொண்டு கடல் கொள்ளயர்களைச் செங்குட்டுவன் அழித்ததையும் கூறுகிறார்.

 

ஆதிமந்தி—ஆட்டநத்தி

அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட், உதயணன்—வாசவதத்தை, மும்தாஜ்- ஷாஜஹான் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது. கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி. அவள் ஆட்டநத்தி என்ற ஆடல்வல்லானை மணக்கிறாள். ஆட்டத்தில் சிறந்த அவன் பல நீர் விளையாட்டுகளைச் செய்து காட்டுகையில் காவிரி நதி அவனை அடித்துச் செல்லுகிறது. அவன் மனைவி ஆதிமந்தி காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை அவனைப் பின் தொடர்ந்து அலறியவாறே ஓடுகிறாள். இந்த அவலத்தைக் கண்ட சோழ நாடே கண்ணீர் உகுக்கும் வேளையில் மருதி என்பவர் அவனைக் கரை சேர்த்து விட்டு காவிரியால் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிடுகிறார். இந்தச் சோகக் காட்சிகளை பரணரும் வெள்ளிவீதீயாரும் பல பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

 

வடமொழிக்கு இலக்கணம் கண்ட, உலகமே வியக்கும் மேதை பாணிணீயை, பகவான் பணிணி என்று பதஞ்சலி புகழ்வார். நாமும் வள்ளுவனைத் தெய்வப் புலவன் என்போம். பரணரும் இவ்வாறு தெய்வப் புலவன் என்று நக்கீரரால் வணங்கப்படும் செய்தியைத் தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பேராசிரியர் கூறுகிறார்: “முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !

 

இதோ அவரால் பாடப் பட்டோரின் பட்டியலைப் பாருங்கள்:

  1. சோழன் உருவப்பஃற்றேர் இளஞ்சேட்சென்னி 2. சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிரற்கிள்ளி 3. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் 4. சேரன் செங்குட்டுவன் 5. பேகன் 6. ஊனூர் தழும்பன் 7. உறந்தை வெளியன் தித்தன் 8. மோகூர்ப் பழையன் 9. அறுகை 10. மலையமான் திருமுடிக் காரி 11. ஆய் அண்டிரன் 12. அதியமான் நெடுமான் அஞ்சி 13. கண்டீரக் கோப்பெருநள்ளி 14. வல் வில் ஓரி 15. கரிகாலன் 16. ஆட்டனத்தி 17. ஆதிமந்தி 18. நன்னன் 19.அன்னி மிஞிலி 20. அகுதை 21. ஆய் எயினன் 22.பாணன் 23. கட்டி 24. பொருநன் 25. கணையன் 26. பசும்பூட் பாண்டியன் (தலை ஆலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் 27. அதிகன் 28. எவ்வி 29. மத்தி 30. கழுவுள் 31. அழிசி 32. பெரும்பூட் பொறையன் 33. தழும்பன் 34. விரான் 35.விச்சியர் பெருமகன் 36. பழையன் 37. வல்லங் கிழவன் 38. பொதியில் திதியன் 39. வன் பரணர் 40. வெள்ளிவீதியார் 41. மருதி 42. உதியஞ் சேரல் (செங்குட்டுவனின் மகனான உதியன் சேரல் பரணரிடம் பாடம் கற்றான்).

 

தமிழ் வரலாறு கண்ட ஏனையோர்:

பரணரைத் தவிர சங்க காலத்துக்கு முந்திய மௌரியர் காலம் குறித்து தகவல் தருகிறார் மாமூலன் என்ற புலவர். மௌரியர்கள் மலைகளில் சாலைகளை அமைத்து படை எடுத்து வந்தது, வேங்கட மலைக்கு அப்பால் வேற்று மொழிகள் பேசப்பட்டது ஆகிய தகவல்களைத் தருகிறார் (அகம் 251, 281).

சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான காவியம் குறித்து பழந்தமிழ் நூல்களில் எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் மருதன் இளநாகன் என்ற ஒரு புலவர் மட்டும் “முலையைத் தூக்கி எறிந்த பத்தினி” பற்றிப் பாடுகிறார். இது கண்ணகி தன் முலையை பிய்த்து எறிந்து மதுரையைத் தீக்கிரையாக்கிய சம்பவமே என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

 

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய சில வரிகள்தான் தமிழ் இலக்கியத்தின் காலத்துக்கே அடித் தளமாக அமைந்தது. “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்தான் என்று அவர் பாடியதால் இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்திலிருந்து கஜபாகு மன்னரின் காலம் கி.பி.130 என்பதை அறிந்து சேரன் செங்குட்டுவன் காலத்தை அறிந்தோம். இளங்கோவும் ஏனைய புலவர்களும் கூறும் சுனாமி தாக்குதல்கள் , தென் மதுரை முதலியன கடலுக்குள் சென்றது ஆகியன எல்லாம் கி.பி.130க்கு முன் நடந்தன என்பதையும் அறிகிறோம். இவை எல்லாம் சதகர்ணி மன்னர் பற்றிய குறிப்புகளாலும் ரோமானிய வணிகத் தொடர்பு தடயங்களாலும் உறுதியாக்கப்பட்டன.

 

திருவிளையாடல் புராணம் பல வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொன்னாலும் அவைகளைப் புராணக் கதைகள் என்றும் வரலாறு இல்லை என்றும் ஒதுக்கிவத்தனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் (திருநாவுக்கரசு) பெருமான், தருமிக்கு பொற்கிழி கிடைத்த சம்பவத்தைத் தனது தேவாரத்தில் பாடி ஏழைத் தருமிக்கு அழியாத புகழ் வாங்கிக் கொடுத்துவிட்டார். நரியைப் பரியாக்கிய அற்புதத்தைக் குறிப்பிட்டு மாணிக்கவாசகர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர் எனபதையும் சொல்லாமல் சொல்லுகிறார். செய செய சங்கரா போற்றி என்றும் கீதங்கள் பாடிய அடியார்கள் என்றும் பாடி ஆதிசங்கரர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்ததையும் காட்டுகிறார். (ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க).

 

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாட்னா நகரில் ஜைனர்களுடன் அப்பர் வாழ்ந்ததால் கங்கை  பற்றியும் அது வங்க தேசத்தை அடைந்தவுடன் ஆயிரம் பிரிவுகளாகப் பிரிந்து கடலில் விழுவதையும் “ஆயிர மாமுக கங்கை” என்றும் பாடுகிறார்.

 

மருதன் இளநாகன் கண்ணகி பற்றி பாடியது– நற்றிணை 216.

“ஏதிலாளன் கவலை கவற்ற

ஒரு முலை அறுத்த திருமா வுண்ணிக்

கேட்டோர் அனையா ராயினும்

வேட்டோ ரல்லது பிறரின் னாரே”

****

(அப்பர், திருப்புத்தூர் திருத்தாண்டகம் 2-1-2

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கருளினோன் காண்

*****

 

கரிகாலன் வெற்றி பற்றி பரணர் பாடியது:

காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகா

லார்கலி நறவின் வெண்ணி வாயிற்

சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பி

னிழிமிசை முரசம் பொருகளத்தொழியப்

பதினொரு வேளிரொடு வேந்தர் சாய (அகம். 246)

*****

 

சிலப்பதிகாரத்தில் கஜபாஹு:

மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

மெந்நாட்டாங்க ணிமைய வரம்பனி

னன்னாட் செய்த நாளணி வேள்வியில் (சிலம்பு.30-2-159)

*********************