அயோக்கியன் யார்? (Post No.5204)

Written by London swaminathan

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London – 8-41 am  (British Summer Time)

 

Post No. 5224

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்காவில் இரண்டு செனட்டர்களுக்கு (SENATE MEMBERS) இடையே கடும் விரோதம்; ஒருவர் பெயர் ஹென்றி க்ளே; மற்றொருவர் பெயர் ஜான் ராண்டால்ப் (HENRY CLAY AND JOHN RANDOLPH).

 

இருவரும் எலியும் பூனையும் போல; கீரியும் பாம்பும் போல! ஒருவரை ஒருவர் குதறி, கடித்துத் தின்ன தயாராக இருப்பர்; எங்கு சந்தித்தாலும் பேசுவதில்லை; முகத்தைத் திருப்பிக்கொள்வர்.

ஒரு நாள் ஓரிடத்தில் சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடந்தன. ஒத்தையடிப் பாதை. ஒருவர்தான் சகதி படாமல் நடக்க முடியும்.

 

கடவுளின் சித்தம்; அன்று இருவரும் எதிர் எதிர் திசையில் வர நேரிட்டது. ராண்டால்ப் நினைத்தார்–அருமையான வாய்ப்பு, நழுவவிடக்கூடாது என்று கொக்கரித்தார்.

“நான் அயோக்கியர்களுக்கு வழிவிடுவத்தில்லை!” என்றார்

 

க்ளே மஹா புத்திசாலி! அப்படியா!

“நான் (அயோக்கியர்களுக்கு) வழி விடுவதுண்டு” என்று சொல்லி சகதியில் இறங்கி நின்றார்.

 

ராண்டால்ப் பேசவா முடியும்? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்!

XXXX

 

இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!

 

ஜெர்மனியின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவர் ஜொஹன்னஸ் பிராம்ஸ் (1833-1897). இவரையும் பாக் (JOHAN BACH) என்பவரையும் பீதோவனையும் (BEETHOVEN) சேர்த்து மும்மூர்த்திகள் என்று அழைப்பர்; மூன்று பெயர்களிலும் முதல் ஆங்கில எழுத்து பி B என்பதால் மூன்று பெரிய பி (THREE BIG ‘B’s ) என்று சங்கீத உலகில் பிரஸித்தமானவர்கள்.

 

ஒரு நாள் ப்ராஹ்ம்ஸ் குசும்பு எல்லை மீறிப்போனது; அவர், பீதோவன் விஷயத்தில் மிகப்பெரிய அறிஞரான குஸ்டாவ் நாட்டிபாமுடன் (GUSTAV NOTTEBHOM) நடந்து சென்றார்; குஸ்டாவோ மஹா ஏழை; ரோட்டில் வண்டி தள்ளூவோனிடம் தள்ளிப்போன, ஆறிப்போன ரொட்டித் துண்டுகளை சீஸ் CHEESE SANDWICH உடன் வாங்கிச் சாப்பிடுவார்.

 

ஒரு நாள் வண்டிக்காரனை ப்ராஹ்ம்ஸ் அணுகி ‘இந்தா, நான் கொடுக்கும் பேப்பரில் இந்த ரொட்டித் துண்டைப் பொட்டலம் கட்டி அந்த குஸ்டாவிடம் விற்க வேண்டும்’ என்றார். பாவம் குஸ்டாவ்; வழக்கம்போல ரொட்டித் துண்டை வாங்கிப் பிரித்தார்: ஒரே வியப்பு; முகம் எல்லாம் சஹஸ்ர கோடி சூர்யப் பிரகாசம்! ஏனெனில் அது பீதோவனின் பாடல்; அவர் கையெழுத்தில்! யாருக்கும் தெரியாமல் ரொட்டித் துண்டை பெரும் பசியுள்ளவன் போல அவசரம் அவரசமாகக் கடித்து குதறிவிட்டு பிரம்மானந்தத்தில் திளைத்தார்.

பெரிய புதையலைக் கண்டுபிடித்தவன் சும்மா இருக்க முடியுமா? மெதுவாக ஸப்ஜெக்டுக்கு வந்தார்; ‘எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது’. பீதோவன் எழுதிய பாடல் கிடைத்து இருக்கிறது! என்று சொல்லி சட்டைப் பைக்குள் இருந்த சீஸ் CHEESE கறை படிந்த காகிதத்தைப் பிரித்தார். அது ப்ராஹ்ம்ஸ், பீதோவன் போல எழுதிய பாடல்! அவர் பலர் முன்னிலையில் குட்டைப் போட்டு உடைத்தார். பாவம் குஸ்டாவ்!

 

பெரியவர்களுக்கும் குசும்பு உண்டு! நெருங்கிய நண்பன் இளிச்சவாயனாக இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

 

பழமொழி- இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

 

XXX-சுபம்-XXXX