Post No. 10,187
Date uploaded in London – 8 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் உலகத்திலேயே பழைய புஸ்தகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெள்ளைக்கார சுள்ளான்களும் இப்போது கி .மு.2000-ஐ ஒட்டி என்று பேசத் துவங்கி விட்டனர். அப்பேற்பட்ட ரிக்வேதத்தில் கண் பற்றிய அதிசயமான விஷயங்களை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் ‘கள்ளக் காப்பி’ copy அடித்துப் பாடியுள்ளனர்.
நம்ம ஊரு வள்ளுவர் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என்றார் . ஆனால் ரிக் வேத முனிவர்களோ கண் என்பது சூரியன் என்கின்றனர். இதை உருவக ரீதியில் பார்த்தால் சரி என்போம். அதாவது கண்ணும் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியனும் எல்லாவற்றையும் பார்க்கிறான். கண்ணை மூடினால் இருள்; சூரியன் அஸ்தமித்தால் இருள். கண்ணில் எதையும் காண ஒளி அவசியம்; அதை இயற்கையாகவே உமிழ்ப்பவன் சூரியன்;
இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் உடையவை . கண் இமைகளைப் பார்க்கையில் அது சூரிய கிரணங்கள்/ கதிர்கள் போலத் தோன்றுகின்றன என்றெல்லாம் சிலர் தத்துவ விளக்கம் சொல்லக்கூடும். ஆனால் இந்துக்கள் அதைவிட முன்னேறிச் சென்று அதிசயமாக சில விஷயங்களை இயம்புகின்றனர் .
Xxx
RV 10-90
எல்லா கோவில்களிலும், சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பிராமணர் வீடுகளிலும் தினமும் ஒலிக்கும் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-90).
இதில் ‘கண் என்பது சூரியனிடமிருந்து பிறந்தது’ என்றும் ‘மனம் என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் ஒரு மந்திரம் வருகிறது.
“சந்திரமா மனஸோ ஜாதக; சக்ஷ்ஓர் ஸூர்யோ அஜாயத”
பிரபஞ்சம் முழுதும் வியாபித்துள்ள புருஷனிடமிருந்து (கடவுளிடமிருந்து) – “கண்களிலிருந்து சூரியன் வந்தது. அவனுடைய மனதிலிருந்து சந்திரன் பிறந்தது” என்பது இந்த வரியி ன் பொருள் .
இன்னொரு மந்திரத்தில் யமனுடைய மகன் ரிஷி தமனன் பாடுகிறார்:-
10-16-3
(இறந்த) உன்னுடைய கண் சூரியனுக்குச் செல்க ; மூச்சுக் காற்று, காற்றுடன் கலக்கட்டும்; நீ எவ்வளவு புண்ணியம் செய்தனையோ அதற்குத்தக பூமிக்கோ சொர்க்கத்துக்கோ செல்க;உன் கரும பலனுக்கு ஏற்ப தாவரமாகவோ நீர்வாழ் பிராணியாகவோ போ .
இதை மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சிவபுராணத்தில் சொல்லிவிட்டார்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
—சிவபுராணம் – திருவாசகம்
xxx
இந்துக்கள் சொன்ன 3 அதிசயங்கள்
மனது , கண் பற்றி விஞ்ஞானிகளுக்கும் இதுவரை தெரியாத மூன்று விஷயங்களை முதலில் காண்போம்.
1. சந்திரனையும் தாவரங்களையும் தொடர்புபடுத்தி இந்து மத நூல்கள் அனைத்தும் பேசுகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை. சூரிய ஒளி மூலம் நடக்கும் போட்டோசிந்தசிஸ் photosynthesis என்னும் ஒளிச் சேர்க்கை மூலம் மட்டுமே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் நாம் சொன்ன உண்மையை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.
.2.இரண்டாவது விஷயம் மனதுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை ரிக்வேத மந்திரம் (10-90) வெளிப்படையாகவே பேசுகிறது. இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. ஆயினும் கடல் பொங்கக் கூடிய அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பைத்தியங்களின் மனமும் கொந்தளிப்பதை மருத்துவ மனை ரிகார்டுகள்/ பதிவேடுகள் hospital records காட்டுகின்றன. பூமியில் 70 சதம் நீரால் மூடப்பட்டுள்ளது. மனித உடலிலும் 70 சதம் நீர் உள்ளது. ஆகையால் இப்படி ரத்தத்திலும் பாதிப்பு இருக்கலாமே என்பது நம்புவோர் வாதம்; ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் ஒன்றும் அந்த நாட்களில் மன நோயாளிகளுக்குக் கூடுதல் மருந்து கொடுக்கவில்லையே என்பது சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRISTS மருத்துவர்களின் பிடிவாதம் !
3.கண்ணுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பினை மேலே இரண்டு ரிக் வேத மந்திரங்களில் கண்டோம். இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை ; ஆனால் இக்கருத்து எகிப்து, கிரீஸ் வரை சென்றுவிட்டது.அவர்களும் இதைப் பாடி வைத்துள்ளனர் . இன்றும்கூட லட்சக் கணக்கானோர் அதிகாலையில் , குறிப்பாக R S S ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். ஜோதிடத்திலும் சூரியனே ஆரோக்கியகாரகன். கண்ணுக்கும் பகலவனுக்கும் உள்ள தொடர்பினை ஏற்காத விஞ்ஞானிகள், சூரிய ஒளியிடமிருந்து vitamin D வைட்டமின் டி கிடைக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். அத்தோடு மேலை நாடுகளில் சூரிய ஒளி குறைவானதால் இப்போது வைட்டமின் டி சாப்பிடுங்கள் என்று ஆலோசனை வழங்கத் துவங்கிவிட்டனர். வருங்காலத்தில் இந்துக்கள் சொன்னதை அவர்கள் 100 சதம் ஏற்பார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
xxx
கிரீஸ்
கிரீஸ் எனப்படும் கிரேக்க Greece நாட்டில், எல்லா கலைகளும் நமக்கு பின்னர் தோன்றின. ஆனால் வெள்ளைக்கார சுள்ளான்களுக்கு இந்திய இலக்கியம் தெரியாது. ஆகையால் உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் கிரேக்க நாடுதான் ஆதாரம் என்று உளறிவிட்டார்கள். சாக்ரடீசும், அவர் சிஷ்யர் , பிளாட்டோவும், அவர் சிஷ்யர் அரிஸ்டாட்டிலும், அவர் சிஷ்யர் அலெக்ஸ்சாண்டரும் இந்து மத தத்துவங்களையே சொன்னார்கள் என்று கிரேக்கர்களே எழுதிவைத்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மூத்த பிதகோரஸ் Pythagoras Theorem தியரம் முதலியன இந்தியாவில் இருந்து சென்றதே. அவரும் ஒரு வெஜிட்டேரியன் என்றெல்லாம் இப்போது தெரிகிறது; சாக்ரடீஸ் விஷம் குடித்து சாவதற்கு முன்னர், கிரீட்டோ என்ற சிஷ்யனை அழைத்து ‘காளி ஆத்தாவுக்கு கோழி அடிச்சு கும்பிட மறந்துடாதே’ என்று சொல்லிட்டு செத்துப்போனார். அந்த அளவுக்கு இந்து மதத்தில் நம்பிக்கை.
ஒரு கிரேக்க புலவர் Theia தேவியை நோக்கி பாடுகிறார்
There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-
“Thou beam of the sun
Far seeing mother of the eyes”.
தேவி என்பதை அவர்கள் தெய்யா , தேவி , தெய்வி என்று அழைப்பர்
அம்மா நீயே சூரியனின் ஒளி
தொலை நோக்கு பார்வை உன்னுடையது.
பிராமணர்கள் தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் இது உள்ளது. அதை விட அவர்கள் மூன்று நேரங்களிலும் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரங்கள் ஏராளம். என்ன அதிசயம்!! உலகில் உள்ள பழங்க்கால கடவுளர் எல்லாம் மியூசியக் கடவுளாகவும் படிம அச்சுக் கடவுளாகவும் Museum Gods and Fossil Gods போய்விட்டார்கள் ; பிராமணர்களும் காயத்ரீ சொல்லும் இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை-சிந்து-சரஸ்வதி நதிக்கரையில் கற்ற மந்திரங்களை இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் எழுத்தில் இல்லாமல் வாய் மொழியாகவே பரப்பி வருகிறார்கள்.
பின்வரும் மந்திரத்தை பார்ப்பனர்கள் தினமும் மதியவேளையில் சொல்லுவார்கள். அதுவும் சூரியனை இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்து அதில் ஒரு இடைவெளி விட்டு அதன் வழியாக சூரியனைப் பார்த்துச் சொல்லுவார்கள். கடுமையான சூரிய ஒளி கண்களைப் பாதிக்கும் என்ற உண்மை, ஐயர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களாக கண்டுபிடித்த Hand Telescope கை டெலஸ்க்கோப் மூலம் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்
பஸ்யேம சரதஸ் சதம்
ஜீவேம சரதஸ் சதம்
நந்தாம சரதஸ் சதம்
மோதாம சரதஸ் சதம்
பவாம சரதஸ் சதம்
ஸ்ருணவாம சரதஸ் சதம்
ப்ரப்ரவாம சரதஸ் சதம்
அஜீதாஸ்யாம சரதஸ் சதம்
பொருள்
சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக
(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக
நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக
நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக
நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக
நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக
நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக
நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக.
(இதை எல்லோருமே தினமும் சொல்லலாம் என்பது என் சொந்தக் கருத்து) .
இதிலும் முதல் மந்திரமே 100 ஆண்டுக் காலம் சூரியனைப் ‘பார்க்க’ வேண்டும் என்ற கருத்து வந்து விடுகிறது.
2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் சோபோக்ளீஸ் Sophocles எழுதிய நாடக ம் ‘ஈடிபஸ் கலோனஸ் ; Oedipus Colonus; அதில் அவரும் இதையே சொல்கிறார் ‘ உலகம் முழுதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியதேவன் என்னைப் போலவே நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் ‘
இதே போல அரிஸ்டோபனிஸ் Aristophanes என்ற அறிஞர் ‘உருண்டோடும் சூரிய தேவன் சக்கரம்’ பற்றி பேசுகிறார். சூரியனை ஒரு சக்கரமுடைய 7 குதிரை பூட்டிய ரதத்தில் செல்வதாகவே வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பாடுகின்றன.
xxx
ரிக் வேதம் 10-37-1 மந்திரத்தைக் காண்போம்
சூரியனை நோக்கிச் சொல்லும் துதி இது .
“மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்களாகத் திகழும் தேவனுக்கு வணக்கத்தைத் தெரிவியுங்கள் .அவன் தொலை நோக்குடையோன். வானத்தில் கொடி (போலப் பட்டொளி வீசிப் பறக்கிறான்). அவன் தேவர்களிடையே பிறந்தவன். மகத்தான அந்த கடவுளுக்கு இந்த வேள்வியைப் படைப்போமாகுக. வானத்தின் மகனான சூரியனின் புகழ் பாடுவோம்”
இவ்வாறு துவங்கி இன்னும் 11 மந்திரங்களில் சூரியனைப் பாடிப் பரவுகின்றார் ரிஷி அபித பவன்
அதில் எட்டாவது மந்திரம் (10-37-8) – கடலின் மீது எழும் உன்னை நாங்கள் தினமும் கண்டு வாழ்த்த நீடுழிக் காலம் வாழ்வோமாகுக. நீதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறாய்
.xxxxx
எகிப்தில்
எகிப்தில் உட் ஜட் கண் Udjat Eye என்று அழைக்கும் தாயத்து உள்ளது. இதை அதிர்ஷடம் அளிக்கும் தாயத்தாகக் கருதி பழங்கால எகிப்தியர்கள் அணிந்தனர்.
ஹோரஸ் Horus என்பது சம்ஸ்க்ருத கருடன் என்பதன் மரூஉ இந்தக் கருடனுக்கும் சேத Seth என்னும் தேவதைக்கும் நடந்த சண்டை கருடர்- நா கர் சண்டையின் வேறு படைப்பாகும். இந்தக் கருடனின் கண்களை உட்ஜட் கண் என்று அழைப்பர். இதற்கு மூன்று குணங்கள் உண்டு ;
1.பாதுகாப்பு 2.குணப்படுத்தும் ஆற்றல் 3. பொதுவான ஆரோக்கியம்.
அதாவது நாம் கருட மந்திரம், கருடன் தாயத்து, கருடன் கிழங்கு ஆகியவற்றுக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறோமோ அவை அனைத்தையும் உட்ஜட் கண் தாயத்தில் காணலாம். இவை அனைத்தும் வேத காலத்துக்குப் பின்னர் வளர்ந்த கதைகள். இந்துக்களைப் போலவே எகிப்திலும் நூற்றுக் கணக்கில் தெய்வங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகளைப்ப பற்றிய கதைகள் நம்முடைய 18 புராணங்கள் போல் வளர்ந்தன. நம்முடைய இலக்கிய அளவைப் பார்க்கையில் எகிப்தின் பழைய இலக்கியம் மிகக்குறைவு. அதில் மகா குழப்பம். காரணம் என்னவெனில் பல தெய்வங்களுக்குப் பல பகுதிகளில் பல கதைகள் உண்டு.
எகிப்தில் இந்த வளர்ச்சிக்கு மாக்ஸ் முல்லர் கும்பலும் திகிடுதத்த மார்க்சீய கும்பல்களும் இனவாதப் பூச்சு பூசவில்லை. ஆரிய-திராவிடம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தியாவில் ஏதேனும் இரண்டு முரணான விஷயங்களைப் பார்த்தால் உடனே அதற்கு ஆரிய -திராவிட பிரிவினை முத்திரைகளைக் குத்தி விடுகின்றனர் . சிந்து சமவெளி முத்திரைகளைத் தோண்டி எடுத்த மார்ஷல், மகே , மார் டிமர் வீலர் போன்றோர் ஆரம்பத்தில் இருந்தே இந்த அயோக்கியத் தனத்தில் இறங்கியதால் இன்றுவரை சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க முடியவில்லை உட் ஜட் கண்பற்றிய கதைகளிலும் இது போல குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எந்த ஒரு விஷயத்துக்கும் பத்து, பதினைந்து விளக்கங்கள் சொல்ல முடியும். திருக்குறளுக்கே நாம் பத்து உரைகள் கண்டோம். ஏன் ? கருத்து சுதந்திரம். ஆயினும் உரை எழுதியோர் பாரதீய மரபுகளை மீறாமல் எழுதினார்கள்,; நேற்று வந்த வெள்ளை-சிவப்பு விஷமிகள் விஷம் கக்கி வைத்துள்ளனர். அவற்றை அகற்றுவது நம் கடமை..
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சக்தியையும் இவர்கள் மீது வீசி எறிந்தாலும் அது சரியான, உரிய தணடனை ஆகாது. பாரதியார் சொன்னது போல ‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’யில் எழுதப்பட்ட விஷமத்தை , விஷத்தை அகற்ற வேண்டும்
–சுபம்–
tags-
உட்ஜட் கண், எகிப்து, கிரேக்கம், ரிக் வேதம், கண், மந்திரம் , பஸ்யேம