உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில் (Post no.4883)

Compiled by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  5-42 am (British Summer Time)

 

Post No. 4883

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழ்கண்ட பொருள் பொதிந்த — அர்த்த புஷ்ட்யுள்ள – அக்ஷர லக்ஷம் பெறும் வாசகங்களை யார் சொன்னார்கள்? எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு! செப்படா, தமிழா!

 

1.வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்

தோதி யுலகெங்கும் விதைப்பாள்

xxx

2.இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்

xxxx

3.மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்

xxx

4.ஊன நாடகமாடு வித்தவா

உருகிநானுனைப் பருகவைத்தவா

ஞானநாடகமாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே

xxx

5.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

xxxx

6.வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி

சேணியன் போற்றக், கடல் பள்ளிமுன் தொழ தீங்கரும்பைக்

கோணியன் வாழ்த்தக், கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த

வேணியன்  ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே

xxx

7.இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை

xxx

8.முத்தமிழ்த் துறையின் முறை போகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

xxx

9.பதினோர் ஆடலும், பாடலும் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு

xxxx

10.விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே

xxx

 

விடைகள்

1.பாரதி, பாரதியார் பாடல்கள்; 2. திருமூலர் எழுதிய திருமந்திரம்; 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்; 4. மாணிக்கவாசகர், திருவாசகம்; 5. பாரதிதாசன் பாடல்கள்; 6. காளமேகம்,  தனிப்பாடல்கள்; 7. சங்க கால அவ்வையார் ,புறநானூறு; 8. கம்பன், கம்ப ராமாயணம்; 9. இளங்கோ, சிலப்பதிகாரம்; 10. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை