கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா இந்து மதம்! (9940)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9940

Date uploaded in London –  6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா இந்து மதம்!

ச.நாகராஜன்

ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம் – கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இது தான் இணையிலா இந்து மதத்தின் தலையாய சிறப்புகளில் ஒன்றாகும்.

எந்த ஒரு சாஸ்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் அதற்கு ஆதி கர்த்தாவாக ஒருவர் இருப்பதையும் அவர் தான் கற்று உணர்ந்ததை வழுவாது அதை உண்மையுடனும் பக்தியுடனும் சிரத்தையுடனும் கேட்பருக்கு உபதேசிப்பதையும் காணலாம்.

நைமிசாரண்யத்தில் அல்லது அது போன்ற ஒரு தூய்மையான இடத்தில் பல முனிவர்கள் ஒன்று கூடி இருக்கும் தருணத்தில் சுகரை நோக்கி அவர்கள், எங்கள் முன்னோர்களின் சரிதத்தைச் சொல்லுங்கள் என்று வினயத்துடன் கேட்பதையும் மடை திறந்த வெள்ளம் போல வரலாறுகள் வந்து குவிவதையும் பார்த்து வியக்கிறோம் – பல புராணங்களில்!

ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களில் தான் எத்தனை கேள்விகள்!

நாரத மஹரிஷியைப் பார்த்து வால்மீகி முனிவர் கேட்கிறார் பல கேள்விகளை!

அதிலிருந்து தான் ராமாயணம் பிறக்கிறது.

இப்பூவுலகில் நற்குணம் உள்ளவனும், வீரியமுடையவனும், தர்மம் அறிந்தவனும், சத்தியம் பேசுபவனும், விடாமுயற்சியும் உடையவன் எவன்?

எல்லாப் பிராணிகளுக்கும் நன்மை நாடுபவன் எவன்?

எல்லாம் அறிந்தவன் எவன்?

முடியாத காரியங்களையும் முடிக்க வல்லவன் எவன்?

காண்பதற்கு இனியவனும், ஒப்பில்லாதவனுமாக இருப்பவன் எவன்?

தைரியமுடையவன் எவன்?

கோபத்தை அடக்கி தேஜஸ் உடையவனும் பொறாமை அற்றவனுமாக இருப்பவன் எவன்?

எவனுடைய யுத்தத்தினால் தேவர்களும் பயன் அடைவர்?

சரமாரியான இந்தக் கேள்விகளுக்கு நாரதர், “

இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனைஸ்சுருத: |

-இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராமனே அவ்வித குணங்களை உடையவன்” என்கிறார்.

பிறகு வரிசையாக ராமனின் நற்குணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

வியக்கிறோம், பிரமிக்கிறோம்.

வால்மீகியும் தனது பங்கிற்கு வியப்பதுடன் அல்லாமல் உலக நன்மைக்காக ராமாயணத்தை – ஆதி காவியத்தை – இயற்றுகிறார்.

மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும் போது ஸ்ரீ

கிருஷ்ணர் தர்மரிடம் கேட்க வேண்டியவற்றை எல்லாம் இந்த ஞானச் செல்வத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்.

அதன் விளைவாக தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும், அதில் நுட்பமான பல விஷயங்களையும் நாம் பெறுகிறோம்.

பார்வதி பரமேஸ்வரை நோக்கி, “ ஆயிரம் நாமங்களைப் படிக்க முடியாதவர்களுக்கு லகுவான உபாயம் (கேன லகு உபாயம்?) எதாவது இருக்கிறதா” என்று கருணை ததும்பிய உள்ளத்துடன் கேட்கிறார்:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் |

பட்யதே பண்டிதை நித்யம் ஸ்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ ||

சிவபிரான்,

‘ஸ்ரீராம ராமராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” –

‘ராம நாமம் ஒன்றே ஆயிரம் நாமங்களுக்குச் சமம்’ என்று கூறி அருளுகிறார்.

மஹாபாரதத்தில் பார்வதி, பரமசிவனை நோக்கி, ஜென்மப் பிறப்புகள் பற்றியும் நல்வினை, தீவினை பற்றியும் கேட்க சிவபிரான் கர்மபலன் ரகசியங்களை அற்புதமாக எடுத்துரைப்பதைக் காண்கிறோம்.

ஷீர்டி சாயிபாபா அவரது அணுக்கத் தொண்டரான நானாவுக்கு (என்.ஜி.சந்தொர்கர் என்பது இயற்பெயர்) கீதையின் நான்காம் அத்தியாயம் 34வது ஸ்லோகத்திற்கு அற்புதமான விளக்கவுரை கொடுத்து அவரை பிரமிக்க வைத்தார்.

தத்வித்தி ப்ரதிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா மி |

உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிநஸ் தத்வதர்சிந: மிமி ||

ப்ரஸ்ன என்பதற்கும் மேலாக பரி ப்ரஸ்னம் என்ற வார்த்தையை ஏன் வியாஸர் உபயோகப்படுத்துகிறார்?  முன்னேற்றம் மற்றும் முக்தியை அடைவதற்காகக் கேள்வியின் நோக்கம் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் கேள்விகள் மீண்டும் மீண்டும் முழுப்பொருளையும் உணரும் வரை  கேட்கப்பட வேண்டும் அதாவது குடைந்து குடைந்து கேட்கப்பட வேண்டும். இதுவே பரிப்ரஸ்னம்! இப்படிப்பட்ட பரிப்ரஸ்னம் தூய்மையான நோக்கத்திற்காகக் கேட்கப்படும் போது அதற்கு அளிக்கப்படும் விடை பல கோடி  மக்களுக்கு உபயோகமாகிறது!!

சம்வாதங்கள் – உரையாடல்கள் – என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் நமது புராண இதிஹாஸங்களில் அவற்றைக் காண முடிகிறது.

அவை தரும் ரகசியங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன.

முனிவர்களையும் தேவர்களையும் அவதாரங்களையும் உயரிய தெய்வங்களையும் தவத்தினாலும் பக்தியினாலும் சிரத்தையினாலும் கண்டு பலரும் அவர்களிடமிருந்து உபதேசம் பெற்றதைக் காண்கிறோம்.

இவை யுகம் கடந்து வந்து கோடிக்கணக்கானோருக்கு நல்வழி காட்டி அருள் பாலிப்பதைக் காண்கிறோம்.

இன்னும் இந்த சந்திப்புகளில் துதிகள் – ஸ்தோத்திரங்கள் – இடம் பெறுகின்றன.

அவற்றின் மஹிமையோ வர்ணனைக்கு அப்பாற்பட்டது.

உபநிடத ரகசியங்களோ ஏராளம். வேத ரகசியங்கள் இன்னொரு அற்புத களஞ்சியம்.

இவற்றையெல்லாம் தொகுப்பது என்பது மிகப் பெரிய காரியம்.

அன்றாடம் சிறிது நேரத்தைச் செலவழித்து இவற்றைப் படித்து அறிய ,  நலம் பிறக்கும்; வளம் சிறக்கும்!

***

INDEX

ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், நாரதர், வால்மீகி, ஷீர்டி சாயிபாபா, நானா சந்தோர்கர், கீதை, அத் 4 ஸ்லோகம் 34, பரிப்ரஸ்னம்,பீஷ்மர்,          ஸ்ரீ கிருஷ்ணர், தர்மர், வேத, உபநிடத ரகசியங்கள். ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம், ஸ்தோத்ரங்கள்,

TAGS- கேள்விகள், உரையாடல், அருளுரை,

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (Post No.9860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9860

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள்  அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.

ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின்  போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச்  சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.

இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.

***

முதல் கட்டம் கி.மு. 3000

ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

***

இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்

யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.

போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.

****

மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000

திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

****

நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-

பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல்  ஒரு படி செல்கிறார்.

நட = நடிகர்கள்

நர்த்தக – நடனம் ஆடுவோர்

காயக = பாடுவோர்

வாதக = வாத்தியம் வாசிப்போர்

வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்

குசி லவ = பாணர்கள்

ப்லவக = கழைக் கூத்தாடிகள்

செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்

சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்

இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.

சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு  மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .

இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.

உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட  திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.

அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.

****

கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.

கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும்  இந்து  மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர்  பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.

எல்லாக்  கலைகளும் வளர்ச்சி  அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை  மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..

–தொடரும்

–சுபம்—

TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

புராணத்துளிகள் : அருமையான உரையாடல் (Post No.9382)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9382

Date uploaded in London – –  15 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4 கட்டுரை எண் 9293 வெளியான தேதி 22-2-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 5

ச.நாகராஜன்

15. சந்தோஷம், பொறுமை, நேர்மை, தயை … என்றால் என்ன? உத்தவருக்கு  ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு அருமையான உரையாடல் வருகிறது.  ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவரின் கேள்விகளுக்கு

tags – உரையாடல், ஸ்ரீ கிருஷ்ணர், உத்தவர்,புராணத்துளிகள்

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்! (Post No 2551)

IMG_1927

Translated  by London swaminathan

 

Date: 18  February 2016

 

Post No. 2551

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

மழைக் காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. எல்லா ஓடைகளும் தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டின. மறு கரையே தெரியாத அளவுக்குப் பரந்து ஓடியது. அக்கரையில் நின்ற பசுமாட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வித்தியாசம் சொல்ல முடியாத அளவுக்குச் சின்னதாகத் தெரிந்தது. ஆற்றுக்கு ஒரே குஷி! நேராக சமுத்திரதுக்குச் சென்றது. இது வரை தன்னைவிட சிற்றோடை களையே கண்ட, அந்த ஆற்றுக்கு சமுத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஒரே மலைப்பு, திகைப்பு. ஆர்ப்பரிக்கும் கடலைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 

IMG_1928

ஆறு சொன்னது:

“அரை வேக்காடுகளுக்கு முழு உண்மை தெரியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அது உண்மையாகிவிட்டது. கடந்தகாலத்தில் கன்பூசியஸின் கல்வி அறிவையும், ‘போ’வின் வீரதீரத்தையும் குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன். இப்போது விரிந்து பரந்த உன்னைக் கண்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. உன்னை மட்டும் நான் இன்று கண்டிருக்காவிட்டால், என் சிற்றறிவைக் கண்டு, விஷயம் தெரிந்தோர் என்னைப் பார்த்துப் பரிகசித்திருப்பார்கள்.

 

இதற்கு சமுத்திரம் பதில் சொன்னது:

“கிணற்றுத் தவளையிடம் போய் சமுத்திரத்தைப் பற்றிப் பேசினால் புரியுமா? கோடைகால ஈக்களிடம் போய், பனிக்கட்டி பற்றி பேசினால் அதுகளுக்கு விளங்குமா? அதிகம் படித்தவனிடம் சட்டம் பற்றிப் பேசினால் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது நீ, என்னைப் பார்த்துவிட்டதால், உனக்கு பெரியது, சிறியது தெரியும். இனிமேல் நான் உன்னிடம் பெரிய கொள்கைகளை எடுத்துரைக்கலாம். உலகில் சமுத்திரத்தை விடப்பெரியது கிடையாது. உலகிலுள்ள எல்லா நதிகளும் இதில் விழுகின்றன. ஆனால் கடல் நிரம்பி வழிந்ததே இல்லை. இதிலிருந்து எவ்வளவோ தண்ணீர் வெளியேறினாலும் இதற்கு வெள்ளம், வறட்சி என்ற பிரச்சனையே இல்லை. எல்லா ஆறுகளையும் ஓடைகளையும் விடப் பெரியது. ஆயினும் நான் என்னைப் பற்றி பெருமை பேசுவதில்லை. எனது உருவத்தை இந்தப் பிரபஞ்சம் எனக்கு அளித்துள்ளது. ஆக்க சக்தி, அழிவு சக்தி என்னும் பிரபஞ்சம் முழுதும் பரவிய கொள்கையிலிருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. நான், பெரிய பூமியில் ஒரு கூழாங்கல்லைப் போன்றவன்; பெரிய மலையில் ஒரு சின்னப் புதர் போன்றவன். மனிதனைக்கூட ஒரு முடியின் (மயிர்)நுனிதான் என்று ஒப்பிடுகிறார்கள்.

 

அளவுகளுக்கு, உருவங்களுக்கு எல்லையே கிடையாது. காலம் எல்லையற்றது. நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் இடக்கூடிய பெயர்களும் முடிவானவை அல்ல. இப்படி இருக்கையில் ஒரு முடியின் நுனிதான் அளவில் சிறியது என்றோ பிரபஞ்சம்தான் மிகவும் வியாபகமானது என்றும் எப்படிச் சொல்ல முடியும்?”

IMG_1926

–சுபம்-

மன்னர் – முனிவர் இடையே சுவையான உரையாடல்!

guru_disciple-336x352

Article No 1729; Date 18th March 2015

Written by London swaminathan

லண்டன் நேரம் காலை 8-15

வைசம்பாயனர் – ஜனமேஜயன் உரையாடல்

ஆதாரம் – சுதந்திராநந்தர் சுப்ரமண்ய சிவா எழுதிய மோக்ஷ சாதன ரஹஸ்யம் – ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னர் மன்னவா! உனக்கு மஹாபாரதம் என்னும் மகத்தான இதிஹாசத்தை அறிமுகப்படுத்த ஆவல். தங்கள் சௌகரியம் எப்படியோ?

மன்னன் ஜனமேஜயன்:

முற்றும் துறந்த முனிவரே! உம்மைப் போன்ற அவகாசம் எமக்கில்லையே. இறைவன் இன்னும் இரண்டு கைகள் கொடுத்து, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்றால் கூட எனக்கு நேரம் போராதே! எனக்கு தலைக்கு மேலே பல வேலைகள் உள்ளன.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னா! கவலை வேண்டாம். மஹா பாரதத்தில் உள்ள 18 பர்வங்களையும் சொல்லாமல் ஒரே ஒரு பர்வம் மட்டும் சொல்கிறேன்.

மன்னன் ஜனமேஜயன்:

வேண்டவே வேண்டாம்; ஒரு நிமிட அவகாசம் கூட எனக்கில்லை.

முனிவர் வைசம்பாயனர்:

(பொறுமைக்கு இலக்கணமானவர் வைசம்பாயனர்; ஆகையால் விடவில்லை) – அதனால் என்ன மன்னா? ஒரு அத்தியாயம் மட்டும் சொல்கிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

முனிவரே, உமக்கு அரசாட்சி என்றால் என்ன என்றே புரியவில்லை, பாரும்! இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும்? எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை. இல்லவே இல்லை!

guru-shishya (1)

முனிவர் வைசம்பாயனர்:

புரிகிறது, புரிகிறது, நன்றாகவே புரிகிறது. மாபாரதத்தில் மொத்தம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு ஸ்லோகம் மட்டும் சொல்லுகிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

சரி, சரி! ஒன்றே ஒன்று. நேரத்தை வீணடிக்காமல் சட்டென்று சொல்லும்.

முனிவர் வைசம்பாயனர்:

துரியோதனன் போய் பசுக்களை அபகரித்து வந்தான் (ஆநிரை மீட்டல்). பெரிய யுத்தம் நேரிட்டது. துரியோதணன் செத்தான். போய்ட்டு வரட்டுமா?

இவ்வாறு சொல்லிக் கொண்டே எழுந்தார்.

மன்னன் ஜனமேஜயன்:

சுவாமிகளே! நில்லுங்கள். துரியோதணன் மாபெரும் மன்னன். அவன் போய், பசுக்களை எதற்காகத் திருட வேண்டும்? புரியவில்லையே. கதையில் ஏதோ தப்பு இருக்கிறது.

முனிவர் வைசம்பாயனர்:

ஓ, அதுவா? அவன் ஏன் பசுக்களைக் கவர்ந்தான் என்றால் …………………………………

இப்படியாக விளக்கம் சொல்லவும், ஜனமேஜயன் மேலும் ஆர்வம்கொண்டு பல துணைக் கேள்விகளைக் கேட்டான். ஒவ்வொன்றுக்காக அவர் பதில் சொல்லச் சொல்ல முழு மஹாபாரதத் தையும் சொல்ல வேண்டிவந்தது.

ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட—இரண்டு லட்சம் வரிகளைக் கொண்ட – பத்து லட்சம் சொற்களைக் கொண்ட — ஏராளமான உபகதைகளைக் கொண்ட – மஹாபாரதம் – காலத்தை வென்ற ஒரு காவியம். கேட்கக் கேட்க தெவிட்டாத இலக்கியம். உலகிலுள்ள எல்லாம் அதில் உள. அதில் உள்ள எல்லாவற்றையும் உலகில் ஒரே இடத்தில் காண்பது அரிது.

வாழ்க மஹா பாரதம்! வளர்க சொற்பொழிவாளர்கள்!!