அமாவாஸை சிரார்த்தம் பற்றி மநு (Post No.5233)

 

Srardha during Amavasya in Ganges, Kolkata

WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 15-23 (British Summer Time)

 

Post No. 5233

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 22

 

WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 14-39 (British Summer Time)

 

Post No. 5233

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மநு ஸ்ம்ருதியின் மூன்றாம் அத்யாயத்தைத் தொடர்ந்து காண்போம்.

 

இதிலுள்ள சுவையான விஷயங்கள்:

 

யார் யாரை அமாவாஸை சிரார்த்தத்துக்குச் சாப்பிடக் கூப்பிடக் கூடாது என்ற நீண்ட பட்டியலில் டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்கள், சோமலதை (ஆட்டாங்கொடி) விற்போர் உள்ளனர்

 

மநு காலத்தில் சோம லதை கொடி விற்போர் பற்றி அடிக்கடி வருவதால் இவரை வேத காலத்தை ஒட்டியவர் என்றே கருத வேண்டியுள்ளது.

 

 

பணக்காரனாக இருந்தாலும் ஐந்து பேருக்கு மேல் சிரார்த்தச் சாப்பாடு போடக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.

 

நண்பர்களை, சலுகைகளை உத்தேசித்து சாப்பிட அழைப்பது பாவம் என்றும் மநு சொல்கிறார்.

 

மநு ஏழு தலைமுறை பற்றிப் பேசுகிறார் (இது பற்றி நேற்று தனிக் கட்டுரை எழுதிவிட்டேன்)

மநு பயன்படுத்தும் உவமைகள் மிகவும் சுவையானவை

1.ரத்தத்தை ரத்தத்தால் கழுவ முடியாது

 

இது சேக்ஸ்பியரின் மாக்பெத் (MACBETH) நாடக வசனத்தை நினைவுபடுத்து; “கொலைகாரி மாக்பெத்தின் கைகளில் படிந்த ரத்தக் கறையை அரேபியாவில் உள்ள அத்தனை சென்ட்டும் கூட போக்க முடியாது” என்று மாக்பெத் வசனத்தில் வருகிறது.

2.இன்னொரு உவமை- குருட்டு மாடு

3.தண்ணீரில் போட்ட சுடப்படாத களிமண் கலம் (இது குறளிலும் கையாளப்படும் உவமை)

 

4.காய்ந்த புல் எரிவது போல

5.ஆறிய சாம்பலில் அவிஸைப் போடுவது போல

7.கொழுந்துவிட்டு எரியும் இரும்பு குண்டுகளை விழுங்குவது போல

 

8.களர் நிலத்தில் விதைப்பது போல

XXXXX

வேதம் படித்த ஒருவனுக்கு சாப்பாடு போடுவது ஒரு லட்சம் பேருக்குப் போடுவதை விட சிறந்தது என்கிறார் மநு.

 

பெண்களும் மாலைநேரத்தில் மந்திரம் இல்லாமல் வைஸ்வதேவ யக்ஞம் செய்ய வேண்டும் என்பார்.

 

அண்ணன் இருக்கும் போது தம்பி கல்யாணம் முடிப்பது தகாது என்கிறார்

 

குண்டன், கோளகன் என்னும் இருவகை பு த ல்வர்கள் பற்றியும் பேசுகிறார்

 

நான்கு வகை பிராஹ்மணர்கள் (3-144) பற்றியும் விளக்குகிறரர்.

விதியை மீறுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.

 

இதோ ஸ்லோகம் வாரியான மொழி பெயர்ப்பு:-

 

3-121 பகலில் தானும் மாலையில் மனைவி மந்திரம் இல்லாமலும் வைஸ்வதேவம் எனும் உஅணவு படைக்கும் சடங்கை இயற்றல் வேண்டும்

 

3-122 மாதம் தோறும் அமாவாசையன்று பிண்டம் மூலம் முன்னோர்களுக்கு பலி கொடுத்த பின்னர் சிரார்த்தம் செய்ய வேண்டும்

 

3-123 இதற்கு அன்வஹார்யம் என்று பெயர்; இதற்கான விசேஷ உண்வுடன் படைக்க வேண்டும்

 

3-124  என்ன உணவு, எத்தனை பேரை அழைப்பது, யாரை அழைக்கக்கூடாது என்று விள்ம்புவேன்.

3-125 விஸ்வேதேவர்க்கு இரண்டு பிராஹ்மணர்க ள்:, பிதுர்களுக்கு (இறந்து போன முன்னோர்) மூன்று பிராஹ்மணர்கள் வீதம் சாப்பாடு போட வேண்டும். இயலாவிட்டால் ஒவ்வொருவர் வீதம் போதும்; பணக்காரன் ஆனாலும் ஐந்து பேருக்கு மேல் கூடாது.

 

3-126 ஏன் தெரியுமா? 5 காரணங்கள் உள: நல்ல உபசாரம், தகுந்த நேரம், தகுந்த இடம் தேவை, சுத்தம் இருக்க வேண்டும், சாப்பிட வருவோர் இடையே நல்லிணக்கம் நிலவுதல் அவசியம்

 

3-127 இது மிகவும் பிரபலமானது. இதனால் பிதுரர்களுக்கு மறுமையில் பலனும் நமக்கு இம்மையில் சந்ததியும் செல்வமும் கிடைக்கும்.

 

3-128 வேதம் மனப்பாடமாகத் தெரிந்தவர்க்கே சாப்பாடு போடுக; இது நல்ல பலன் தரும்

3-129 வேதம் ஓதாத ஆளுக்கு அளிப்பதை விட வேதம் தெரிந்த ஒவ்வொருவருக்கு — இரு சடங்குகளிலும் — சாப்பாடு போட்டால் போதும்

 

3-130 இதற்காக முன்கூட்டியே பிராஹ்மணர்களைத் தேடி வைத்துக் கொள்; சொந்த கிராமத்தான் ஆனாலும் அவன் விருந்தினனே.

 

3-131 ஆயிரம் ஆயிரம் பேர சாப்பிட்டாலும் ரிக் வேதம் தெரிந்த ஒருவன் சாப்பிடுவதும் திருப்தி அடைவதும் நல்ல புண்ணியம் தரும்

 

3-132 அதிக ஞானம் உடையவனுக்கே முன்னோர்களுக்கான, தெய்வங்களுக்கான உணவை அளிக்க வேண்டும் ரத்தக் கறை படிந்தவன் கைகளை ரத்தம் கொண்டு கழுவ முடியாதல்லவா!

 

 

ஞானமில்லாதவனுக்குக் கொடுப்பது பலனற்றது; பாவகரமானது

 

3-133 வேதம் ஓதாதவன் எவ்வளவு கவளம் உண்கிறானோ அவ்வளவுக்கு இறந்து போன முன்னோர்கள் கொதிக்கும் இரும்புக் குண்டுகளையும், முள் நிறைந்த கம்பிகளையும்      ஈட்டிகளையும் உண்ண நேரிடும்

 

3-134 சிலருக்கு ஞானம் அதிகம்; சிலருக்கு தவ வலிமை அதிகம்; இன்னும் சிலருக்கு வேத அறிவும் தபோ பலமும் சேர்ந்து இருக்கும்; நாலாவது வகையினர் சடங்களைச் செய்விப்பதில் வல்லவராக இருப்பர்.

 

3-135 முன்னோர்களுக்காக கொடுப்பதை ஞானத்தில் மிகுந்தவனுக்குக் கொடு; தெய்வ த்துக்காக கொடுப்பதை நால்வரில் எவருக்கேனும் அளி

 

3-136 ஒரு புதல்வனின் தந்தை வேத வித்து- ஆனால் புதல்வனுகுக்கு வேதம் தெரியாது; மற்றொரு தந்தைக்கு வேதம் தெரியாது ஆனால் புதல்வன் வேதம் ஓதியவன் என்று வைத்துக் கொள் (யாரைக் கவனிப்பாய்?)

 

3-137 இவ்விருவரில் வேதம் அறிந்தவனுடைய பிள்ளையே சிறந்தவன்; மற்றொரு புதல்வன், வேதம் படித்தமைக்காக தக்க மரியாதை கொடு.

 

3-138 சிரார்த்தத்தில் நண்பர்களை சாப்பிட அழைக்காதே; அவர்களை நீ எப்படியும் வெல்லலாம்; நண்பனும் அல்ல, எதிரியும் அல்ல என்பவரையே அழை

3-139 நண்பர்களைத் திருப்தி செய்யும் சிரார்த்தம் பலன் தரா.

3-140 அறியாமையால் இப்படிச் செய்பவன் தேவலோகம் சென்றாலும் கீழே விழுந்து விடுவான்

 

3-141 மூன்று வருணத்தாரும் இப்படி நண்பர்களைத் திருப்தி செய்ய முயன்றால் அது இருளில் திரியும் குருட்டு மாடு போன்றதாகும் பலன் தராது

3-142 களர் நிலத்தில் விதைப்பவனுக்கு அறுவடை இல்லை; ரிக் வேதம் தெரியாதவனுக்குக் கொடுப்பவனுக்கும் பலன் இல்லை.

 

3-143 வேதம் அறிந்த பார்ப்பானுக்குக் கொடுப்பது இருவர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் பலன் தரும்.

 

 

 

3-144 வேதம் அறிந்த பார்ப்பான் கிடைக்காவிடில் நண்பனையும் அழைக்கலாம்; எதிரி ஞானவானாக இருந்தாலும் அவனுக்கு உணவு போடுவது பலனற்றதே

 

3-145 ரிக், யஜுர், சாம வேதம் ஓதியவர்களை அழை

 

3-146 இவர்களில் ஒருவருக்கு கொடுக்கும் உணவும் இறந்து போன ஏழு தலைமுறையினரை கடைத்தேற்றும்

 

3-147 இதுதான் முக்கிய விதி; சில துணை விதிகளும் உள

 

3-148 தாய்ப்பாட்டன், அம்மான், மருமான், மாமனார், ஆச்சார்யன், பெண்ணின் வயிற்றில் பிறந்தோன், மாப்பிள்ளை, சித்தி, பெரியம்மா, இவர்களின் பிள்ளைகள், சிஷ்யன், ரிக் வேதம் அறிந்தோன் ஆகிய வகையினரும் புசிக்க அருகதை ஆனவர்களே.

 

3-149 தேவ காரியங்களில் சாப்பிட வரும் அந்தணர் பற்றி அதிகம் கேட்கத் தேவை இல்லை; பிதுர் காரியங்களில் சாப்பிட வரும் பார்ப்பனர்களின் ஞானம், மூதாதையர் பற்றி சோதித்து அழை.

 

தொடரும்………..

‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ (Post No.3794)

Written by London swaminathan

 

Date: 6 APRIL 2017

 

Time uploaded in London:- 20-27

 

Post No. 3794

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காளிதாசனும், செம்புலப்பெயநீராரும்

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று குறுந்தொகை. அருமையான காதல் பாடல்கள் உள்ள நூல். அதில் ஒரு அருமையான பாடல். காதலர் மனம் ஒன்றுபடுவதற்கு செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் உவமையாக கூறப்பட்டுள்ளது. செம்மண் நிலத்தில் மழை நீர் புரண்டு ஓடுவதை நேரில் கண்டவர்களுக்கு இந்த உவமையின் பொருள் நூறு மடங்கு கூடுதலாகவே விளங்கும்.

 

இதை எழுதிய புலவர் பெயர் தெரியாததாலோ அல்லது உவமை மிகவும் பிரசித்தமடைந்ததாலோ அவருக்கு செம்புலப் பெயனீரார்  என்றே நூலில் பதிவு செய்துவிட்டனர். இது போல சுமார் 20 புலவர்களின் பெயர்கள் இப்படி அவர்களுடைய சொற்றொடர்களைக் கொண்டே சூட்டப்பட்டுள்ளது. ரிக்வேதத்தைத் தொகுத்தவர்கள் கையாண்ட முறை இது. அதிலும் இவ்வாறு பல புலவர்களின் பெயர்கள் சொற்றொடரின் மூலம் அறியப்படுகின்றது.

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்

 

பொருள்:

காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.

 

 

காதலர்களின் மனம் ஒன்று பட்டதற்கு இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்தியது போல, சங்க காலத்துக்கு முன் வாழ்ந்த காளிதாசரும் மழை நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

 

ஒரே சுவையுடைய மழை நீர் எங்கெங்கு விழுகின்றதொ அந்தந்த நிலத்தின் சுவையைப் பெறுவதுபோல சத்வம் என்ற ஒரே குணமுடைய இறைவன், கைக்கொள்ளும் குணங்களுக்கு ஏற்ப தொழில்களையும் பெயர்களையும் ஏற்கின்றீர் (சத்வ குணம் காரணமாக விஷ்ணுவாகவும், ரஜோ குணம் காரணமாக பிரம்மனாகவும், தமோ குணம் காரணமாக ருத்திரத் தனமையையும் அடைகின்றீர். எப்படி நீர் என்பது ஒன்றுதானோ அதே போல இறைவன் ஒருவனே.

ரசாந்தராண்யேகரசம் யதா திவ்யம் பயோஸ்ச்னுதே

தேசே தேசேகுணேஷு  ஏவம் யதாத்வம்அவிக்ரியஹ

— ரகு வம்சம் 10-17

 

செம்புலப் பெயனீரார் மன ஒற்றுமை பற்றி சொன்னார்; காளிதாசன் மும்மூர்த்திகளும் ஒருவரே என்ற பேருண்மையைச் சொன்னார்; இருவரும் பயன்படுத்திய உவமை– மழை நீர்.

 

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை நீர், முத்துச் சிப்பிகளின் வாயில் விழுந்தால் அது எப்படி முத்தாகி றதோ அது போல ,ஆசிரியர் சொல்லும் சொல், நல்ல மாணவன் காதில் விழுந்தால் முத்தாகும் என்று மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தில் காளிதாசன் சொல்லும் உவமை தமிழில் உள்ளதையும், காடக விதைகள் எப்படி கலங்கிய நீரை தெளிவாக்குமோ அதுபோல முட்டாள்களும்   அறிவாளிகளுடன் இருக்கையில் மனத் தெளிவு பெறுவர் என்ற  உவமை தமிழில் உள்ளதையும் முன்னர் இரண்டு கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.

 

பெண்களின் கொப்பூளை (நாபியை) நீர்ச் சுழலுக்கு ஒப்பிடுவதைக் காளிதாசன் காவியங்களிலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் காணலாம்.

 

காளிதாசன் கையாண்ட 1300 + உவமைகளில் சுமார் 250 உவமைகள் சங்க இலக்கியத்தில் காணப்படுவதால் சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று முந்தைய பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன்.

 

காளிதாசன் சொல்லும் இன்னொரு அருமையான உவமை ரகுவம்சத்தில் வருகிறது (5-54). பிரியம்வதன் என்பது என்பெயர் . என்னை, யானையாகப் போகும்படி மதங்க முனிவர் சபித்தார். நான் அவரை வணங்கிய பின்னர் அவரது கோபம் தணிந்தது. சாந்தமாகிவிட்டார். நீர் என்பது வெந்நீர் ஆவது தீயின் சேர்க்கையாலோ அல்லது சூரிய ஒளியின் சேர்க்கையாலன்றோ! தண்ணீரின் இயற்கையான குணம் குளுமைதானே! (முனிவர்களின் இயற்கைக் குணம் சாந்தம்தானே).

–Subham–

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

valmiki2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி ராமயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

அப்பய்ய தீக்ஷிதரின் உவமை பற்றிய ஸ்லோகத்தை பரிதிமாற்கலைஞர் என்ற பெயர்கொண்ட பேராசிரியர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்:–

உவமை என்னும் வலருங் கூத்தி
பலவகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய அரங்கிற் கவின்பெறத் தோன்றி
யாப்பு அறி புலவர் இதயம்
நீப்பு அறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.

பொருள்:–உவமை என்பவள் ஒப்பற்ற நாட்டிய மங்கை. அவள் பலவேறு கோலங்களைக் கொண்டு காவியம் என்னும் மேடையிலே அழகுபொலியத் தோன்றி, பாட்டின் சுவையை அறியும் ரசிகர் மனத்தில் நீங்காத இன்பம் மலர நடிக்கிறாள்
(காளிதாசன் உவமைகள் —- என்னும் நா.வரதஜுலு நாயுடு எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தது)

கம்பன் அவனது ராமாயணத்தில்

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அப்பெண்தானே ஆயினபோது இங்கு அயல்வேறோர்
ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை நாடி உரை செய்வோம்

—என்பான். எல்லோரும் உவமைக்குப் பயன்படுத்துவது சீதை என்னும் பேரழகியை— குணத்தில் பெண்மைக்கெல்லாம் இலக்கணம் வகுத்தாளை – அப்படிப்பட்ட சீதையை நான் எதைக் கொண்டு உவமை சொல்ல முடியும் – என்று கம்பன் வியக்கிறான். சீதைக்கு உவமை சீதையே!
Valmiki's-Ramayana-

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே ‘’உபமா’’ என்ற சொல் இருப்பதாக (5-34-9; 1-31-15) வேதத்தை ஆராய்ந்தோர் (ஆர்.எஸ்.டே) கூறுவர். கி.மு. 800-க்கு முன் வாழ்ந்த யாஸ்கர் என்பவர் கார்க்யர் எழுதிய இலக்கணப் புத்தகத்தில் ‘’உபமா’’ என்பதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதை மேற்கோள் காட்டுவார்.

மஹாபாரதத்தில் 232 பொருட்கள் அல்லது உபமானங்கள் மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படுவதால் 2299 ஸ்லோகங்களில் அவை திரும்பத் திரும்ப வருகின்றன என்று மஹாபாரத உவமைகள் பற்றிய ஆய்வுகள் (ராம் கரன் சர்மாவின் நூல்) காட்டுகின்றன. உவமைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பவர் இந்திரன். 247 முறை ஒப்பிடப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் வேத கால தெய்வங்களான இந்திரன், சூரியன், அக்னி, யமன் ஆகியோருக்கும் பின்னரே வருவதால் (எண்ணிக்கையின் படி), மஹாபாரதம் மிகவும் பழைய நூல் என்பது தெளிவாகும்.

புராணங்களில் சிவனையும், விஷ்ணுவையும் பெரிய தெய்வங்கள் எனக் கொண்டாடுவர். அதற்கும் முந்தியவை ராமாயண மஹாபாரதம் என்பது உவமை ஆராய்ச்சியில் தெளிவாகிறது.

உலகத்திலேயே காளிதாசன் போல உவமைகளைத் திறம்படப் பயன்படுத்திய கவிஞன் எவனும் இலன். இதனால் ‘’உபமா காளிதாசஸ்ய’’ — என்ற சொற்றொடர் வழங்குகிறது. உவமைக்கு காளிதாசன் என்பது இதன் பொருள். அவனுடைய ஏழு படைப்புகளில் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளைப் படுத்தியதால் இந்தப் பெயர் என்பதல்ல. தகுந்த இடத்தில் தகுந்த உவமைகளைக் கையாண்டதே அவன் சிறப்பு.

abhijnanasakuntalam

காளிதாசன் புள்ளிவிவரம்

உலகப் பெரும் கவிஞர்களின் பட்டியலில் இடம்பெறும் கவிஞர்களில் காளிதாசனும் ஒருவன். அவனுடைய உவமைகளை ஆராய்ந்தோர் தரும் பட்டியல் இதோ:
காளிதாசர் பயன்படுத்திய உவமைகள் –1250
ஏழு நூல்களில் பயன்படுத்திய சொற்கள் – 40,000 -க்கு மேல்!
அவருடைய ஏழு படைப்புகளில் மூன்றுக்கு மட்டும்
எழுதப்பட்ட உரைகள் – 93
ரகு வம்சத்தில் இவன் வரலாறு
சொல்லும் அரசர்களின் எண்ணிக்கை – 29

நாடகம், கவிதை, காவியம், சிறு நூல்கள் எனப் பல எழுதி ஷேக்ஸ்பியருக்கும் மேலான இடம் பிடித்த இந்தியன். ஈரான் முதல் இந்தோநேசியா வரை வருணித்தவன் காளிதாசன். அது மட்டுமல்ல மேக தூதம் என்னும் பயண நூல் மூலம் உலகின் முதல் ‘’டூரிஸ்ட் கைடு’’ என்னும் பெயரையும் பெற்றான். இவனுக்கு இணையான கவிஞன் இதுவரை இந்தியாவில் தோன்றியது. இனி தோன்றப் போவதும் இல்லை! இல்லை. பாரதியால் புகழப்பட்ட கவிஞன்!

வடமொழி அறிஞர்களும், நாணயங்கள் சிலைகளை ஆராய்ந்த டாக்டர் சிவராமமூர்த்தி போன்றோரும் இவன் கி. மு. முதல் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ வழ்ந்ததை உறுதிபடக் கூறுவர். காலத்தாலும் முந்திய கவிஞன்!

காளிதாசனின் ரகுவம்சத்தைப் பின்பற்றி இலங்கை வரலாற்று நூலுக்கு மஹாவம்சம் என்று பெயரிட்டனர். காளிதாசனின் உவமைகளை காதா சப்த சதி என்னும் பிராக்ருத நூலில் ஊர் பேர் தெரியாத கவிஞர்கள் அப்படியே கையாண்டனர் (களவாடினர்!)

சங்க இலக்கியத்தில் காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் இருப்பதை நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதி வருகிறேன். காளிதாசன், விக்ரமாதித்தன் என்ற புகழ் பெற்ற மன்னன் காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த விக்ரமாதித்தன் கி.மு 56-ல் அவன் பெயரில் ஒரு சஹாப்தத்தையே துவங்கிய பெருமை உடையவன். சகரர், யவனர், ஹூணர்களை ஓட ஓட விரட்டியவன்.

மேற்கூறிய தகல்களை உவமைகள் பற்றிய மூன்று ஆங்கில ஆராய்ச்சி நூல்களில் இருந்து திரட்டினேன்.
dr nagaswami

தொல்காப்பியத்தில் உவம இயல்

உவமை என்பது சம்ஸ்கிருதத்தில் ‘’உபமா’’ எனப்படும். தொல்காப்பியரும் கூட இதைத் தமிழ்ப் படுத்தி உவமம் என்கிறார். உவம இயல் என்றே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அவர் 38 உவம உருபுகளைப் பட்டியல் இட்டுள்ளார். அதில் நிறைய உருபுகளை சங்க இலக்கியத்தில் கூடக் காண முடியவில்லை. நமக்கு எல்லோருக்கும் தெரிந்த உவம உருபு ‘’போல’’ என்பதாகும். ரோஜா மலர் போல இதழ், ஆப்பிள் பழம் போலக் கன்னம் என்றெல்லாம் சினிமா வசனங்களில் கேட்கிறோம். ஆனால் தொல்காப்பியர் தரும் பட்டியலைப் பாருங்கள்:–

அன்ன, அங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட,ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வென்ற, வெல்ல. இதில் 14 உருபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. என்றும் சங்க இலக்கியத்தில் 28 கூடுதல் உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் டாக்டர் ரா.சீனிவாசன் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

15FR-_TOLKAPPIYAM__1120361e

–சுபம்–