மன்னர் படுகொலைகள்! எகிப்திய அதிசயங்கள் -20 (Post No.3729)

Picture of Ramesses III with Gods Horus and Seth

Written by London swaminathan

 

Date: 16 March 2017

 

Time uploaded in London:- 10-57 am

 

Post No. 3729

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திய வரலாற்றில் இரண்டு மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எகிப்திய மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் யாரும் வரலாற்றை எழுதவில்லை. அவர்களுக்கு  3000 ஆண்டுகளுக்குப் பின் — மனீதோ என்பவர் எழுதிய வரலாற்றைத் தான் நாம் நம்பவேண்டி இருக்கிறது. அந்த மனீதோவின் புத்தகமும் முழுதாகக் கிடைக்கவில்லை. அவர் சொன்னார் என்று பின்னர் எழுதிய குறிப்புகளில் இருந்தே வரலற்றைப் பிழி ந்து எடுக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் இரண்டு மர்மக் கொலைகள் துப்பறியும் கதைகள் போல இருக்கும்.

 

பழங்கால இந்திய வரலாற்றைத் தவிர வேறு எந்த நாட்டிலும் மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புராண வரலாற்றில் மட்டும் இப்படி மன்னர் படுகொலைகள் கிடையாது. ரோமானிய, மொகலாய வரலாறுகளில் ஒருவரை ஒருவர் கொன்று அரசாட்சியைப் பிடிப்பது சர்வ சாதாரணமாக நிகழ்ந்தது. (பழங்கால இந்தியாவில் கிரேக்கர்கள் புகுந்த காலம் முதல் படுகொலைகள் நிகழ்ந்தன)

 

மூன்றாம் ராம்செஸ் (RAMESSES III )

 

மூன்றாம் ராமசெஸ் Ramesses III (1183-1154 BCE) (ராமசேஷன் அல்லது ரமேசன்) மன்னர் படுகொலை செய்ப்பட்டிருக்கலாம் என்பது எகிப்தியவியல் (Egyptologists) அறிஞர்களின் கருத்து.

 

மூன்றாம் ராமசெஸ் புதிய ராஜ்யத்தின் கடைசி அரசர்; எகிப்தின் எல்லைகளையும், கோவில்களையும் பாதுகாத்த பெருமையுடையவர். ஆனால் இவர் அகால மரணம் அடைந்தவர் என்பது பின்னால் வந்த குறிப்புகளில் இருந்து தெரிகிறது. சதிகாரர்கள் விசாரிக்கப்பட்டது  தண்டிக்கப்பட்டது பற்றிய ஒரு பேப்பர் கிடைத்துள்ளது.

 

( Papyrus பபைரி என்ற புல்லில் எகிப்தியர் எழுதியதால் பிற்கலத்தில் PAPER பேப்பர் என்ற ஆங்கிலச் சொல் வந்தது)

 

அரசனுக்கு பல மனைவியர் உண்டு. ஆயினும் இந்தியா போல ஒருவள்தான பட்டத்து மஹிஷி (மஹாராணி). இது பிடிக்காத ஒரு அந்தப் புரத்து அழகி (குட்டி ராணி) அரண்மனை அதிகாரிகளுடன் சேர்ந்து  மன்னனுக்கு எதிராக சதி செய்தாள். மன்னரின் ஒரு மகனைப் பதவியில் அமர்த்துவது அவர்களுடைய திட்டம். அவர், சதிகாரர்களின் கைப்பாவையாகச் செயல்படுவார் என்று நினைத்தனர்.

 

டூரின் பபைரஸ் (Turin Papyrus) குறிப்புகளில் 40 சதிகாரர் பெயர்கள் இருக்கின்றன. உயர் பதவி வகித்த ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். மேற்கு தீப்ஸ் (West Thebes)  நகரில் அரண்மனையில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அவருக்குப் பின்னர் நாலாவது ராமசெஸ் பதவி ஏற்றார். சதிகாரர் கள் 40 பேரும் கொல்லப்பட்டனர். இதில் என்ன வேடிக்கை என்றால் பிடிபட்ட ஆட்களின் பெயர்கள் எல்லாம் கெட்ட பெயர்களாக மாற்றப் பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக நல்ல சாமி, மாடசாமி என்று இருவர் பிடிபட்டால் அவர்கள் பெயரை எழுதும்போது கெட்ட சாமி, மூட சாமி அல்லது மடச் சாமி பிடிபட்டான் என்று எழுதிவைத்துள்ளனர். இது அவர்களுடைய கோபத்தின் வெளிப்பாடா அல்லது அப்படி எழுதும் ஒரு மரபு இருந்ததா என்பதை நாம் அறியோம்.

 

ஒருவன் பெயர் மெரி ரே (ரே என்னும் கடவுளுக்குப் பிரியமானவன்; நாம் ராமப் ப்ரியா என்று பெயர் வைப்பது போல). ஆனால் அதை அவர்கள் மெசூத்ரே (ரேயால் வெறுக்கப்படுபவன்) என்று மாற்றி எழுதியுள்ளனர். பபகேனமுன் (அமன் என்னும் கடவுளின் தாசன்) என்பதை பபகாமன் (குருட்டு தாசன்) என்று எழுதிவைத்துள்ளனர். இப்படி சதிகாரகளின் பெயர்கள் எல்லாவற்றையும் திரித்து எழுதி இருக்கின்றனர்.

 

“அந்தப்புர அழகிகளுடனும் தியா (Tiye) என்ற ராணியுடனும் சேர்ந்து சதி செய்த குற்றத்திற்காக பெரும் எதிரி பபகாமன் கொண்டுவரப்பட்டான். எஜமானருக்கு எதிராக ‘மக்களே ஒன்று சேருங்கள், விரோதமாகப் போங்கள்’ என்று அவன் குரல் கொடுத்தான். ஆகையால் அவனை விசாரணை மன்றத்திலுள்ள நீதிபதிகள் முன் நிறுத்தினர். அவர்கள் அதைத் தீர விசாரித்து அவன் குற்றம் இழைத்ததைக் கண்டுபிடித்தனர். அவனுக்கு அதற்குரிய தண்டனை கிடைத்தது” — என்று தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன.

 

சாக்ரடீஸ் போல அவர்களை விஷம் குடிக்க வைத்தனர் என்று ஊகிக்கப்படுகிறது. அவனுடன் சேர்ந்த உப சதிகாரகளின் மூக்கும் காதும் வெட்டப்பட்டன.

 

சதி பற்றிச் சொல்லும் பேப்பர் குறிப்பு சதி வெற்றி பெற்றதா, அதனால்தான் மன்னன் இறந்தானா என்பதை தெளிவாகச் சொல்லவில்லை.

 

 

உலகின் முதல் ஸ்டிரைக்

 

உலகிலேயே நடந்த முதல் தொழிலாளலர் வேலை நிறுத்தமும் ராமசெஸ்  (கி.மு.. 1184- 1153-க்கு இடைப்பட்ட காலம்)  காலத்தில்தான் நடந்தது. தேரி எல் மெடினா (Deir El Medina) என்ற இடத்தில் தொழிலாளர்கள் ஸ்டிரைக் செய்ததை எழுதி வைத்துள்ளனர்.

Picture of Amenemhet I

அமனெம்ஹேத் Amenemhet (சமணகேது)

 

இதைவிட மர்மமான மரணம் அடைந்தவன் அமனெம்ஹேத் . இவன் 12 ஆவது வம்ச ராஜா.  கி.மு.1985 முதல் 1985 வரை ஆண்டவன். இவனும் அந்தப்புர அழகிகளின் சதியால் உயிரிழந்தான். அவனுக்குப் பின்னர் அவன் மகன் சம்வர ச்ரேஷ்டன் (Senwosret) பதவிக்கு வந்தான். முதலில் 11ஆவது வம்ச ஆட்சியில் பெரிய அதிகாரியாக (Vizier) இருந்தவன். இவன் வேலை பார்த்த ராஜா மண்டூகதேவன் (Montuhotep IV) எப்படி மரணம் அடைந்தான், பின்னர் இப்படி இந்த அதிகாரி பதவி ஏற்றான் என்பதெல்லாம் வரலா ற்றின் தீர்க்கப்படாத புதிர்கள்!

 

இவனுடைய கதை நெபெர்தி (நவ ரதி )ஆருடம் (Nefert Prophecies) என்ற இலக்கியக் குறிப்பிலிருந்து கிடைக்கிறது. நாலாவது வம்ச ராஜாவான ஸ்நோப்ரு (Snofru)    காலத்தில் இந்த ஜோஸியம் சொல்லப்பட்டதாக பிற்கலத்திலெழுதப்பட்ட குறிப்பு இது

 

நமது இந்துப் புராணங்கள் எல்லாவற்றிலும் வம்சாவளி என்ற பகுதியில் முடிந்த, இறந்து போன மன்னர்களின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் ஆளப் போகிறார்கள் என்று வருங்கால ஆரூடம் போல எழுதியிருப்பர். அதே பாணியில் நடந்து போன நிகழ்ச்சிகளை  இனி நடக்கப் போவதாக எழுதப்பட்ட ஜோதிடப் புத்தகம் நவரதி ஆரூடம்.

 

இதில் சமண கேது பற்றி எழுதி இருக்கும் பகுதி சுவையானது:

தெற்கிலிருந்து வருவான் ஒரு மன்னன்

அவன் பெயர் அமன என்ற ஒலியில் அமையும்

 

அவன் கத்திக்கு இரையாவர் ஆசிய மக்கள்

அவன் எழுப்பும் தீயில் விழுவர் லிபிய மக்கள்

கலகக்காரர்கள் கோபம் அடைவர்

அவர்கள் மன்னனுக்கு அச்சத்தை உண்டாக்குவர்

 

ஒழுங்கு அதன் இடத்தைப் பிடிக்கும்

சட்டச் சீர்குலைவு பற ந்தோடிப் போகும்.

 

நம்ம ஊர் குடுகுடுப்பைக்காரன் ஆரூட பாணியில் எழுதப்பட்ட இவ்வசகம் நாத்ரதாமஸ் ஆரூடம் போன்றது. யார் எப்படி வேண்டுமானாலும் ஜவ்வாக இழுத்து மனம்போனபோக்கில் அர்த்தம் சொல்லலாம்.

 

அமனகேது அந்தப்புர  சதியில் சிக்கியதை வேறு சில எழுத்துகளும் உறுதி செய்கின்றன அதன் பெயர் அமனகேது கட்டளைகள் (Instructions of Amenemhet). அந்தக் குறிப்பில் சொல்லப்படிருப்பதாவது:

 

இரவுச் சாப்பாடு முடிந்தது; இருள் சூழ்ந்தது

நான் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தேன்

படு களைப்பு எனக்கு; படுக்கையில் விழுந்தேன்;

என் இதயம், றக்கத்தின் பாதையில் அடி வைத்தது

 

திடீரென்று இரைச்சல்; விழித்தேன் சண்டையில்

மெய்க்காவலன் தாக்குதல் அதுவே

என் கைகளில் விரைவில் ஆயுதம் வந்திருந்தால்

கோழைகளை ஓட வைத்திருப்பேன்

அந்தோ! அவ்விரவில் வலுவானவர் இலையே

தனிமையில் சண்டை செய்யும் எவருமிலர்

பாதுகாப்பற்றவன் வெற்றி அடைவது எங்கனம்?

 

 

இதற்கு முன் அந்த மன்னன், தனது மகனுக்கு நல்லாட்சி நடத்துவது எப்படி என்ற பகுதிகள் உள்ளன. வால்மீகி ராமாயண த்தில் நல்லாட்சி பற்றி வசிட்டர் சொன்ன அருளுரைகள் போன்றது அப்பகுதி.

 

இதெல்லாம் நடந்து 1600 ஆண்டுகளுக்குப்  பின்னர் எகிப்திய வரலாற்றை முதல் முதலில் எழுதிய மனீதோவும் இந்த மன்னன் 38 ஆண்டுகள் ஆண்டான் என்றும் , அவன் தனது சொந்த அலிகளால் கொல்லப்பட்டான் என்றும் எழுதி வைத்துள்ளார். இந்தியாவிலும் எகிப்திலும் அந்தப் அந்தப்புரத்தில் அலிகளையும் குள்ளர்களையும், கூனர்களையும் வேலைக்கு அமர்த்துவர். அப்படிப்பட்ட கூனி ஒருவள்தான் ராமாயணக் கதயையே உருவாக்கினாள்:அவள் பேச்சைக்கேட்டு மயங்கிப் போனாள் கைகேயி!

 

–சுபம்–

விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696)

Written by London swaminathan

 

Date: 6 March 2017

 

Time uploaded in London:- 6-10 am

 

Post No. 3696

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

இந்துக்களின் தெய்வங்களான பிள்ளையார், அனுமார், ஹயக்ரீவர், நரசிம்மர், வராகாவதாரம் முதலிய உருவங்களை மேலைநாட்டினர் பார்த்தால் மனதுக்குள் சிரிப்பார்கள்; இது என்னடா? இவர்கள் எல்லாம் (STONE AGE) கற்காலத்தில், (Iron Age)உலோக காலத்தில், ஆதிகாலத்தில் (Primitive) வாழ்கிறார்களா? என்று உள்ளுக்குள் நகைப்பார்கள். ஆனால் அவற்றின் தத்துவங்களை விளக்கினால்   வியப்பார்கள்; நம்மை மதிப்பார்கள். இது போலத்தான் எகிப்திய தெய்வங்களும். 120-க்கும் மேலான முக்கிய தெய்வங்களின் பட்டியல் உள்ளது. எகிப்திய தெய்வங்களைப் பற்றிய தனி புத்தகங்களும் உள்ளன. இவைகளைப் புரிந்துகொள்ள இந்துமதம் மிகவும் துணை புரியும். ஆனால் 5000 ஆண்டுக் காலமாக வாழும் இந்துமதம் போலன்றி மத்திய கிழக்கில் வணங்கப்பட்ட 3000 தெய்வங்களும், எகிப்தில் வணங்கப்பட்ட சுமார் 200 தெய்வங்களும் மியூசியங்களில் காட்சிப் பொருள்களாகிவிட்டன!!!

 

வேத காலத்தில் 30, 40 தெய்வங்களுடன் இருந்த இந்துமதம், பின்னர் எப்படி நூற்றுக் கணக்கான தெய்வங்களை உருவாக்கியதோ, வேத காலத்தில் இருந்த நாலே ஜாதி எப்படி இன்று 4000 ஜாதிகளாக மலர்ந்தனவோ அதுபோல எகிப்தின் 5000 ஆண்டுக்கால வரலாற்றில் தெய்வங்கள் பல்கிப் பெருகின. இந்து மதத்தில் எப்படி தலபுராணங்களில் ஒவ்வொரு ஊரிலும் தெய்வம் பற்றிக் கதைகள் உளவோ அதுபோல எகிப்திலும் உள்ளூர் தெய்வங்கள் வளர்ந்தன. ஆனால் இந்து மதத்திலுள்ள, உயரிய கருத்துக்கள் — மனிதனும் தெய்வமே= அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி — போன்ற தத்துவார்த்த கருத்துகள் அங்கே வளர்ந்ததாகத் தெரியவில்லை. புராண அளவில் கதைகள் நின்றனவே அன்றி உபநிஷதம் கண்ட உண்மைப் பொருள் அளவுக்குப் போகவில்லை.

மூன்றடுக்கு தெய்வங்கள்

 

எகிப்திய தெய்வங்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.தேவதைகள் குடியிருக்கும் சில பொருள்களுக்கு (Fetishes) மந்திர சக்தி உண்டு என்று எண்ணி அவைகளை வழிபடுதல்.

2.மனித உருவிலுள்ள கடவுளர் (Gods in Human forms)

3.மிருகங்கள், பறவைத் தெய்வங்கள் (Zoomorphic Gods)

 

நிறைய பேருக்கு கடைசி வகைதான் எகிப்திய தெய்வங்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அதவது, நாய், பூனை, ஆடு, சிம்மம், கொக்கு, வாத்து, வண்டு, கழுகு குரங்கு, முதலை, காளை முதலியவற்றின் படங்களைப் பார்த் தவுடன் அது மனதில் பதிந்துவிடுகிறது.

இயற்கையை அவர்கள் போற்றியதை இந்த தெய்வங்கள் பிரதிபலிக்கின்றன. மகிழ்ச்சி, இன்பம் என்ற கருத்தை வெளிப்படுத்த அவர்கள் வரைந்த சித்திர எழுத்து ‘பசுவும் கன்றும்!’

 

கடவுள், இறைவன், ஆண்டவன் என்றெல்லாம் தமிழில் பொதுவாகச் சொல்லுவது போல எகிப்திய மொழியில் NETJER நெட்ஜெர்  என்று தெய்வத்தை அழைத்தனர்.

 

வேத காலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு அம்சம் (Truth and Order) உண்மையும் ஒழுங்கும்.

 

ஆங்கிலச் சொற்களான உண்மையும் ஒழுங்கும் —-TRUTH ட்ரூத்,  RHYTHM ரிதம் ஆகியன எல்லாம் சம்ஸ்கிருதச் சொல்லான ருதம் ‘RTAM’  என்பதிலிருந்து வந்தவையே. இது வேதகாலச் சொல். இதை எகிப்தியரும் நம்பினர்.

ஆரம்பகால தெய்வங்கள்:

ஆதம் ATUM = படைப்புக்கடவுள்

ரே RE =சூரியக் கடவுள்

ஹதோர் HATHOR, ஈஸிஸ்/ ஐஸிஸ் ISIS = தேவி

நெய்த்NEITH == போர் தேவதை

ப்தா PTAH (பிதா) = சக்திக் கடவுள்

ஆசிரிஸ் OSIRIS

சேத் SET = தீமையின் கடவுள்

ஹோரஸ் HORUS = மன்னர் கடவுள்

பிற்கலத்தில் பல புராணக் கதைகளை உருவாக்கி ஆசிரிஸ் – சேத் – ஹோரஸ் பகைமையைக் காட்டினர்.

இது இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் இடையே பிற்காலத்தில் மோதல்களை உண்டாக்கியதற்குச் சமம்.

தத் (THOTH) என்னும் கடவுள் மொழிகளின் கடவுள்; ஹெர்மாபாலிஸ் என்ற நகரில் வழிபடப்பட்டார்.

மாதா(Ma’at) என்ற இளம்பெண் உண்மை, நேர்மை, ஒழுங்கு /கட்டுப்பாடின் தெய்வமாக வழிபடப்பட்டாள். எகிப்தில் மனிதர்களின் தோற்றத்துடன் தொடர்புடைய கடவுள் மாத் (ஆ). கடவுள் உலகைப் படைக்க முடிவு செய்தவுடன் மாதாவை கையில் தூக்கி உதட்டில் முத்தமி ட் டார். ஒரு சதுப்பு நிலத்திலிருந்து நீர்ப்பறவை குரல் எழுப்பியவுடன் படைப்பு துவங்கியது என்பது எகிப்திய கதை.

 

பல தெய்வங்கள் — ஆசிரிஸ் உள்பட — மேற்காசியாவிலிருந்து வந்தவை. இதனால் காலப்போக்கில் எகிப்திய கடவுளரின் பங்கு பணிகள் மாறின.

 

இந்துக்களுக்கு வேதம் என்பது ரகசியப் பொருள் உடைய மந்திரங்கள்; அதன் மேலோட்டமான இலக்கிய அர்த்தத்தைப் பார்க்கக்கூடாது என்பது தெரியும். அதனால் சங்க காலத்  தமிழர்கள், வேதங்களை மறை (ரஹசியம்) என்று மொழி பெயர்த்தனர். அது போல எகிப்திலும் ரஹசியப் பெயர் உடைய ஒரு சக்தியைக் கண்டு (He whose Name is Hidden) தெய்வங்களும் பயந்தன என்ற வழக்கு உண்டு.

 

மிக சக்தி வாய்ந்த ஹோரஸ் என்ற தெய்வத்தை பருந்து வடிவில் (கழுகு) சித்திரம் வரைவர். இந்தப் பருந்துகூட பெரிய கடவுளின் (HIDDEN GOD) அரண்மனையில் மதில்சுவரில் உட்கார்ந்து இருக்கும் என்பர். இதை இந்து மதத்திலுள்ல பிரம்மன் அல்லது தேவி பாகவதத்தில் வரும் திருமூர்த்திகளும் வணங்கும் தேவிக்கு ஒப்பிடலாம்.

 

எகிப்திய வரலாற்றில் இந்த மறைந்திருக்கும் தெய்வம் (He whose Name is Hidden) யார் என்பதை எழுதாவிடிலும் சிலர் அமன் (AMUN) என்னும் தெய்வம்தான் என்று சிலர் சொல்லுவர். இந்துக்களின் அம்மன் அல்லது பிரமன் இப்படித் திரிந்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பிதா, சவிதுர் (ஹதோர்) ஹோரஸ் (சோலஸ்= சோலார்= சூர்ய), ரே முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் அவர்களின் கடவுளர் பெயர்களில் உள்ளன.

நட்சத்திரக் கடவுள்கள் (Star Gods= Stellar Deities)

 

நட்சத்திரங்கள் என்பன புண்யாத்மாக்கள், தேவர்கள் என்று இந்துக்கள் கருதினர் (Vanaparva in Mahabharata). பிரமிடுகள் கட்டத் துவங்கியதிலிருந்து இந்த நம்பிக்கை வலுப்பட்டது. இறைவனான மன்னன், இறந்தவுடன் நடசத்திரங்களுக்கு அப்பால் பயணம் செய்வான் என்று நம்பினர். இதனால் நட்சத்திரங்களை நோக்கி பிரமிடின் சாளரங்களை அமைத்தனர். குறிப்பாக சிவனுடன் தொடர்புடைய ORION ஒரியன் (ஓரையன்=அரையன்) நட்சத்திர மண்டலம் இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அங்குதான் சிவனுடைய ஆருத்ரா நட்சத்திரமும், மிருக சீர்ச நட்சத்திரமும் உள்ளன.

 

கட்டாய குருமார் (PRIEST SERVICE) சேவை

 

சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் கட்டாய ராணுவ சேவை உள்ளது போல ஆரம்பகாலத்தில், உயர் பதவியிலுள்ள எல்லோரும், கோவில்களில் கட்டாயமாக குருமாராக (குருக்களாக ) இருக்கவேண்டும் என்று இருந்தது. இது நம்பூதிரிகளைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் செய்ய வேண்டிய பணி. பின்னர் குருக்கள் வேலை தனித் தொழிலாக பரிணமித்தது. எல்லா கோவில்களிலும் ராஜாதான், கொள்கை அளவில் தலைமை குருக்கள். அங்கு வேலை பார்க்கும் குருக்கள் ராஜாவின் பிரதிநிதி. சில கோவில்கள் காலப்போக்கில் மிகவும் பிரபலமாகி அதன் குருக்களும் செல்வாக்குடையவர் ஆயினர்.

 

1.மெம்பிஸ் (Priest of Ptah of Memphis) நகர பிதா கோவில் குருக்கள்

2.ஹீலியோபாலிஸ் ரே (Priest of Re of Heliopolis) கோவில் குருக்கள்

3.தீப்ஸ் நகர அமன் (Priest of Amun of Thebes) கோவில் குருக்கள் – ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்

 

முதலில் கடவுள் என்பவர் ராஜாவின் ஆள், பொதுமக்களுக்குத் தொடர்பில்லை என்று இருந்தது. ஆனால் காலப்போக்கில் கடவுள் எல்லோருக்கும் தொடர்புடையவர், எல்லோரையும் கட்டுப்படுத்துபவர் என்ற கொள்கை வளர்ந்தது. இதனால் கோவில்கள் செல்வாக்கும் செல்வமும் பெற்றன.

 

எகிப்தில் தத்துவக் கருத்துகள் (Philosophical) காணப்படவிடினும்  உண்மை, நீதி, நேர்மை, ஒருவரை ஒருவர்  மரியாதையுடன் நடத்துவது ஆகியன இருந்தன. எகிப்தியர்களுடைய நம்பிக்கைகள் என்ன என்பதை மிகவும் பிற்காலத்தில் எழுந்த கிரேக்க நூல்கள் மூலமே அறிய முடிகிறது.

 

முக்கிய தெய்வங்களின் பட்டியலையும் பங்கு பணிகளையும் அடுத்த பகுதியில் இந்து சமய தெய்வங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

to be continued…………………………..