வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2 (Post No.10,343)

EGYPTIAN FROG GODDESS HEQET OR HEKET= HINDU SHAKTI 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,343

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள்” (Post.10,337) -என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் இதுவரை நான் 5 அதிசயங்களைக் கண்டுள்ளேன். அதர்வண வேதம் முழுதும் மாய , மந்திர, இந்திர ஜால (Magic) வித்தைச் செய்திகளாக உள்ளன. யஜுர் வேதத்திலும் மேலும் அதிசயச் செய்திகள் உள்ளன. ஆகவே தவளைகள் பற்றி மேலும் அதிசயச் செய்திகள் கிடை க்கலாம் .

இதுவரை நாம் கண்ட அதிசயங்கள் 4; அவையாவன

1. ரிக் வேதத்தில் வசிஷ்டர் பாடிய நகைச் சுவை மிகுந்த தவளைப் பாட்டு (RV 7-103). இதை அப்படியே கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனீஸ் காப்பி அடித்து கிரேக்க மொழியில் ஒரு நாடகம் செய்தார். இது உலக அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தி ; கம்பனும் இதே பாணியில் தவளை பற்றிப்   பாடினான்  (எனது முந்தைய கட்டுரைகளில் காண்க).

இரண்டாவது அதிசயம்- ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் தகனக் கிரியைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலில் சடலத்தை எரித்த பின்னர் அங்கே பெண் தவளை ஒன்றை வைக்க வேண்டும் என்பதாகும் .

மூன்றாவது அதிசயம் – அதர்வண வேதத்தில்  இருக்கிறது; சிவப்பு -நீல நிற நூலைக் கட்டி தங்கத்துடனும் ‘அவகா’ என்ற நீர்த் தாவரத்துடனும் கால் வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விட  வேண்டும்  என்று சொல்லி இருப்பதைக் கண்டோம்..

நாலாவது அதிசயம் — அதர்வண வேதத்தில் கண்வக்கா , கைமுக்கா , தஹூரி என்றெல்லாம் தவளைக்குப் பெயர் சூட்டும் மந்திரம் உள்ளது. இதை வெள்ளைக்காரர்கள் , ஒலி நயம் காரணமாக ரிஷிகள் பாடி மகிழ்ந்தனர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் நான் அது தவறு என்பதை அலிகி , விளிகி பாம்பு விஷயங்களைக் காட்டி விளக்கினேன்.

XXXX

GREEK GODDESS HECATE= HINDU SHAKTI 

இப்போது புதிய அதிசயத்துக்கு வருவோம்.

ஐந்தாவது அதிசயம்

மொழி இயல் (Linguistic researchers) பற்றி ஆராய்வோருக்கு சில விஷயங்கள் கண்களில் ‘சட்’டென்று பட்டு விடும்

ரிக் வேதத்தில் ‘ஸபா’ என்ற சொல் உள்ளது. அதை ‘அவை’ என்று மாற்றி தமிழர்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பன தெயாத இந்தியர்கள் இருக்க முடியாது. அங்கே ‘ப’ என்பது தமிழில் ‘வ’ என்று மாறுகிறது. இன்றும் நாம் ‘பெங்கால்’ என்பதை ‘வங்கம்’ என்கிறோம் . இந்த மாற்றங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து இருக்கிறது!

இதே போல நாம் ‘ச’ என்று சொன்னால் கிரேக்க பாரசீக மொழிகளில் ‘ச’ கிடையாது; அதை அவர்கள் ‘ஹ’ என்பர். இதனால்தான் சிந்து நதிக்கரையில்’ அதற்கு அப்பாலும் வசித்த நம் எல்லோரையும் அவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று எழுதிவிட்டனர் .

இந்துக்கள் ‘சக்தி’ என்றால் அவர்கள் ‘ஹக்தி’ என்பார்கள் . இதே பெயரில் எகிப்திலும் , கிரேக்க நாட்டிலும் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றில் கிரேக்க நாட்டு ‘ஹெகதி’க்கு நாம் ‘சக்தி’ பற்றி சொல்லிய வருணனைகள் பொருந்துகின்றன.

எகிப்து நாட்டில் ‘ஹெகதி’ Heqet, Heket என்ற தேவதைக்கு தவளை உருவம் கற்பித்துள்ளனர். அவளை குழந்தை பிறப்பதில் உதவவும் தேவதையாகவும் மகப்பேறு மருத்துவச்சி என்றும் பழைய எகிப்திய நூல்கள் வருணிக்கின்றன.

இப்போது நாம் பழைய விஷயங்களை ஒப்பிடுவோம் . சுடுகாட்டில் ஏன் இந்துக்கள், பெண் தவளையை வைத்தனர்? கால்வாயில் ஏன் இந்துக்கள் நீர்  தாவரத்துடன் தவளையை விட்டு திறப்பு விழா நடத்தினர்?

இதற்கு விடை: மறு பிறப்பு, மறு மலர்ச்சி,  (Rebirth, Reincarnation, Resurgence) புத்தெழுச்சி ஆகும் அதாவது தவளை முட்டையாக தோன்றி மீன் போல உருமாறி (தலைப் பிரட்டை Tadpole) நான்கு கால் தவளையாக உருமாறுகிறது. இது மறு பிறப்பைக் குறிக்கும். அது மட்டுமல்ல தவளைக்குள்ள அபூர்வ குணம் நீரிலும் வசிக்கும், நிலத்திலும் வசிக்கும். (Amphibian) கல்லுக்குள் தேரையாகவும் வசிக்கும் .அத்தோடு இந்துக்கள் நீர்த் தாவரத்தையும் கால்வாயில் விட்டனர். அந்த ‘அவகா’ தாவரத்தை இன்று லண்டன் முதலிய இடங்களில் அக்வேரியம் aquarium எனப்படும் மீன் காட்சி சாலைகளில் தண்ணீர் தொட்டிக்குள் காணலாம். இதன் அபூர்வ குணம் தண்ணீருக்குள் வளர்ந்து அதை சுத்தப்படுத்தும் . இதை அறிந்த வேத கால ரிஷிகள் இதையும் சேர்த்து கால்வாயில் விடச் சொன்னார்கள்.

தவளையின் இனப்பெருக்கத்தையும் (fertility) , அதன் உரு மாற்ற (Metamorphosis) குணத்தையும் கண்ட எகிப்தியர் இந்துக் கடவுளுக்கான ‘சக்தி’க்கு தவளை உருவத்தைக் கொடுத்து அதை ‘ஹெகதி’ (சக்தி என்றனர்)

இப்போதும் மேற்கு வங்கம் பீஹார் போன்ற இடங்களில் இந்துக்கள் ‘ஷஷ்டி’ Shasthi என்ற தேவதையாக வணங்கி வருகின்றனர். காலப்போக்கில் சஷ்டியில் (ஆறு என்பதன் சம்ஸ்கிருதம்) முருகன் வழிபாடு இருப்பதாலும், முருகனை 6 கிருத்திகைப் பெண்கள் வள ர்த்தத்தாலும் அதை ஸ்கந்தனுடனும் தொடர்பு படுத்தினர்.

தவளை உருமாற்றம் செய்வது போலவே இந்து தெய்வங்கள் உருமாற்றம் அடைவதையும் காணலாம் (Metamorphosis of Hindu Gods) . ஒரே பார்வதி தேவியை – ஒரே சக்தி அன்னையை- மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயரில் அழைப்பதைக் காணலாம் – 51 சக்தி பீடங்களின் தேவி பெயர்களின் பட்டியலைப் பார்த்தால் இது உங்களுக்குத் புரியும். அத்தோடு local லோக்கல் கதைகளை இணைத்து தலபுராணமும் சொல்லுவார்கள். “கடவுள் ஒருவரே; அவரை பல குணங்களில் ,  பல ரூபங்களில் வணங்கலாம்”– என்பது இந்துக்கள் உலகிற்குக் கற்பித்த  பாடம்.

இந்துக் கடவுளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றோர், அதற்கு மொழி மாற்றம் காரணமாக புதிய உச்சகரிப்பை – புதிய  நாமத்தை — புதிய கதைகளை உருவாக்கி லோக்கல்/ உள்ளூர்  மக்களை கவர்கின்றனர் .

இதுதான் சக்தி – ஷஷ்டி ஆகி கிரேக்க நாட்டில் ஹெகதி ஆகிக் – எகிப்தில் தவளை ரூபா ஹெக்தி ஆக உரு மாறிய கதை.

அதர்வண வேத மந்திரம் ஒவ்வொன்றும் அற்புத விஷயங்களைச் சொல்கிறது. நம்முடைய முதல் கடமை வேதம் படித்தவர்களைப் பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து, தயவு செய்து இதை ஒலி மாறாமல் சொல்லி வாருங்கள்; நாங்கள் பிற் காலத்தில் அர்த்தம் சொல்கிறோம் என்று சொல்ல வேண்டும்!!

இன்று காலை நான் படித்த அதர்வண வேத ஐந்தாவது காண்டத்தின் முன்னுரையிலேயே, இதிலுள்ள 30 பாடல்களுக்கும் சாயனர் உரை  எழுதவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனருக்கே அர்த்தம் புரியவில்லையா? ஆராய்ச்சிகளைத் தொடர்வோம் .

–subham–

TAGS- எகிப்து, தவளை, தேவதை, கிரேக்க, ஹெகதி , சக்தி , அதர்வண வேதம், அதிசயங்கள்

எகிப்து, கிரீஸ், ரிக் வேதத்தில் கண் பற்றிய  அதிசயச் செய்திகள் (Post 10,187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,187

Date uploaded in London – 8 OCTOBER  2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் உலகத்திலேயே பழைய புஸ்தகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெள்ளைக்கார  சுள்ளான்களும் இப்போது கி .மு.2000-ஐ ஒட்டி என்று பேசத்  துவங்கி விட்டனர். அப்பேற்பட்ட ரிக்வேதத்தில் கண் பற்றிய அதிசயமான விஷயங்களை எகிப்தியர்களும், கிரேக்கர்களும் ‘கள்ளக் காப்பி’ copy  அடித்துப் பாடியுள்ளனர்.

நம்ம ஊரு வள்ளுவர் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என்றார் . ஆனால் ரிக் வேத முனிவர்களோ கண் என்பது சூரியன் என்கின்றனர். இதை உருவக ரீதியில் பார்த்தால் சரி என்போம். அதாவது கண்ணும் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியனும் எல்லாவற்றையும் பார்க்கிறான். கண்ணை மூடினால் இருள்; சூரியன் அஸ்தமித்தால்  இருள். கண்ணில் எதையும் காண ஒளி அவசியம்; அதை இயற்கையாகவே உமிழ்ப்பவன் சூரியன்;

இரண்டும்  கிட்டத்தட்ட ஒரே வடிவம் உடையவை . கண் இமைகளைப் பார்க்கையில் அது சூரிய கிரணங்கள்/ கதிர்கள் போலத்  தோன்றுகின்றன என்றெல்லாம் சிலர் தத்துவ விளக்கம் சொல்லக்கூடும். ஆனால் இந்துக்கள் அதைவிட முன்னேறிச் சென்று அதிசயமாக சில விஷயங்களை இயம்புகின்றனர் .

Xxx

RV 10-90

எல்லா கோவில்களிலும், சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பிராமணர் வீடுகளிலும் தினமும் ஒலிக்கும் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-90).

இதில் ‘கண் என்பது சூரியனிடமிருந்து பிறந்தது’ என்றும் ‘மனம் என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் ஒரு மந்திரம் வருகிறது.

சந்திரமா மனஸோ ஜாதக; சக்ஷ்ஓர் ஸூர்யோ அஜாயத”

பிரபஞ்சம் முழுதும் வியாபித்துள்ள புருஷனிடமிருந்து (கடவுளிடமிருந்து) – “கண்களிலிருந்து சூரியன் வந்தது. அவனுடைய மனதிலிருந்து சந்திரன் பிறந்தது” என்பது இந்த வரியி ன் பொருள்  .

இன்னொரு மந்திரத்தில் யமனுடைய மகன்  ரிஷி  தமனன் பாடுகிறார்:-

10-16-3

(இறந்த) உன்னுடைய கண் சூரியனுக்குச் செல்க ; மூச்சுக் காற்று, காற்றுடன் கலக்கட்டும்; நீ எவ்வளவு புண்ணியம் செய்தனையோ அதற்குத்தக பூமிக்கோ சொர்க்கத்துக்கோ செல்க;உன் கரும பலனுக்கு ஏற்ப தாவரமாகவோ நீர்வாழ் பிராணியாகவோ போ .

இதை மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சிவபுராணத்தில் சொல்லிவிட்டார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

இந்துக்கள் சொன்ன 3 அதிசயங்கள்

மனது , கண் பற்றி விஞ்ஞானிகளுக்கும் இதுவரை தெரியாத மூன்று விஷயங்களை முதலில் காண்போம்.

1. சந்திரனையும் தாவரங்களையும் தொடர்புபடுத்தி இந்து மத நூல்கள் அனைத்தும் பேசுகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை. சூரிய ஒளி மூலம் நடக்கும் போட்டோசிந்தசிஸ் photosynthesis என்னும் ஒளிச் சேர்க்கை மூலம் மட்டுமே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால்  ஒரு காலத்தில் நாம் சொன்ன உண்மையை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.

.2.இரண்டாவது விஷயம் மனதுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை ரிக்வேத மந்திரம் (10-90) வெளிப்படையாகவே பேசுகிறது. இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. ஆயினும் கடல் பொங்கக் கூடிய அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பைத்தியங்களின் மனமும் கொந்தளிப்பதை மருத்துவ மனை ரிகார்டுகள்/ பதிவேடுகள் hospital records  காட்டுகின்றன. பூமியில் 70 சதம் நீரால் மூடப்பட்டுள்ளது. மனித உடலிலும் 70 சதம் நீர் உள்ளது. ஆகையால் இப்படி ரத்தத்திலும் பாதிப்பு இருக்கலாமே என்பது நம்புவோர் வாதம்; ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் ஒன்றும் அந்த நாட்களில் மன நோயாளிகளுக்குக் கூடுதல் மருந்து கொடுக்கவில்லையே என்பது சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRISTS மருத்துவர்களின் பிடிவாதம் !

3.கண்ணுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பினை மேலே இரண்டு ரிக் வேத மந்திரங்களில் கண்டோம். இதையும் விஞ்ஞானிகள் ஏற்பதில்லை ; ஆனால் இக்கருத்து எகிப்து, கிரீஸ் வரை சென்றுவிட்டது.அவர்களும் இதைப்  பாடி வைத்துள்ளனர்  . இன்றும்கூட லட்சக் கணக்கானோர் அதிகாலையில் , குறிப்பாக R S S ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். ஜோதிடத்திலும் சூரியனே ஆரோக்கியகாரகன். கண்ணுக்கும் பகலவனுக்கும் உள்ள தொடர்பினை  ஏற்காத விஞ்ஞானிகள், சூரிய ஒளியிடமிருந்து vitamin D வைட்டமின் டி கிடைக்கிறது என்று ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். அத்தோடு மேலை நாடுகளில் சூரிய ஒளி குறைவானதால் இப்போது வைட்டமின் டி சாப்பிடுங்கள் என்று ஆலோசனை வழங்கத் துவங்கிவிட்டனர். வருங்காலத்தில் இந்துக்கள் சொன்னதை அவர்கள் 100 சதம் ஏற்பார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

xxx

கிரீஸ்

கிரீஸ் எனப்படும் கிரேக்க Greece நாட்டில், எல்லா கலைகளும் நமக்கு பின்னர் தோன்றின. ஆனால் வெள்ளைக்கார சுள்ளான்களுக்கு இந்திய இலக்கியம் தெரியாது. ஆகையால் உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் கிரேக்க நாடுதான் ஆதாரம் என்று உளறிவிட்டார்கள். சாக்ரடீசும், அவர் சிஷ்யர் , பிளாட்டோவும், அவர் சிஷ்யர் அரிஸ்டாட்டிலும், அவர் சிஷ்யர் அலெக்ஸ்சாண்டரும் இந்து மத தத்துவங்களையே சொன்னார்கள் என்று கிரேக்கர்களே எழுதிவைத்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மூத்த பிதகோரஸ் Pythagoras Theorem தியரம் முதலியன இந்தியாவில் இருந்து சென்றதே. அவரும் ஒரு வெஜிட்டேரியன் என்றெல்லாம் இப்போது தெரிகிறது; சாக்ரடீஸ் விஷம் குடித்து சாவதற்கு முன்னர், கிரீட்டோ என்ற சிஷ்யனை அழைத்து ‘காளி ஆத்தாவுக்கு கோழி அடிச்சு கும்பிட மறந்துடாதே’ என்று சொல்லிட்டு செத்துப்போனார். அந்த அளவுக்கு இந்து மதத்தில் நம்பிக்கை.

ஒரு கிரேக்க புலவர் Theia தேவியை நோக்கி பாடுகிறார்

There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-

“Thou beam of the sun

Far seeing mother of the eyes”.

தேவி என்பதை அவர்கள் தெய்யா , தேவி , தெய்வி என்று அழைப்பர்

அம்மா நீயே சூரியனின் ஒளி

தொலை நோக்கு பார்வை உன்னுடையது.

பிராமணர்கள்  தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் இது உள்ளது. அதை விட அவர்கள் மூன்று நேரங்களிலும் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரங்கள் ஏராளம். என்ன அதிசயம்!! உலகில் உள்ள பழங்க்கால கடவுளர் எல்லாம் மியூசியக் கடவுளாகவும் படிம அச்சுக் கடவுளாகவும் Museum Gods and Fossil Gods  போய்விட்டார்கள் ; பிராமணர்களும் காயத்ரீ சொல்லும் இந்துக்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை-சிந்து-சரஸ்வதி நதிக்கரையில் கற்ற மந்திரங்களை இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் எழுத்தில் இல்லாமல் வாய் மொழியாகவே பரப்பி வருகிறார்கள்.

பின்வரும் மந்திரத்தை பார்ப்பனர்கள் தினமும் மதியவேளையில் சொல்லுவார்கள். அதுவும் சூரியனை இரண்டு கைகளின் விரல்களையும் கோர்த்து அதில் ஒரு இடைவெளி விட்டு அதன் வழியாக சூரியனைப் பார்த்துச் சொல்லுவார்கள். கடுமையான சூரிய ஒளி கண்களைப் பாதிக்கும் என்ற உண்மை, ஐயர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களாக கண்டுபிடித்த Hand Telescope கை டெலஸ்க்கோப் மூலம் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்

பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

பொருள்

சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக.

(இதை எல்லோருமே தினமும் சொல்லலாம் என்பது என் சொந்தக் கருத்து) .

இதிலும் முதல் மந்திரமே 100 ஆண்டுக் காலம் சூரியனைப் ‘பார்க்க’ வேண்டும் என்ற கருத்து வந்து விடுகிறது.

2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் சோபோக்ளீஸ் Sophocles எழுதிய நாடக ம் ‘ஈடிபஸ் கலோனஸ் ; Oedipus Colonus; அதில் அவரும் இதையே சொல்கிறார் ‘ உலகம் முழுதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியதேவன் என்னைப் போலவே நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் ‘

இதே போல அரிஸ்டோபனிஸ் Aristophanes என்ற அறிஞர் ‘உருண்டோடும் சூரிய தேவன் சக்கரம்’ பற்றி பேசுகிறார். சூரியனை ஒரு சக்கரமுடைய 7 குதிரை பூட்டிய ரதத்தில் செல்வதாகவே வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பாடுகின்றன.

xxx

ரிக் வேதம் 10-37-1 மந்திரத்தைக் காண்போம்

சூரியனை நோக்கிச் சொல்லும் துதி இது .

மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்களாகத்  திகழும் தேவனுக்கு வணக்கத்தைத் தெரிவியுங்கள் .அவன் தொலை நோக்குடையோன். வானத்தில் கொடி (போலப் பட்டொளி வீசிப் பறக்கிறான்). அவன் தேவர்களிடையே  பிறந்தவன். மகத்தான அந்த கடவுளுக்கு இந்த வேள்வியைப் படைப்போமாகுக. வானத்தின் மகனான சூரியனின் புகழ் பாடுவோம்”

இவ்வாறு துவங்கி இன்னும் 11 மந்திரங்களில் சூரியனைப் பாடிப் பரவுகின்றார் ரிஷி அபித பவன்

அதில் எட்டாவது மந்திரம் (10-37-8) – கடலின் மீது எழும் உன்னை நாங்கள் தினமும் கண்டு வாழ்த்த நீடுழிக் காலம் வாழ்வோமாகுக. நீதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறாய்

.xxxxx

எகிப்தில்

எகிப்தில் உட் ஜட் கண் Udjat Eye என்று அழைக்கும் தாயத்து உள்ளது. இதை அதிர்ஷடம் அளிக்கும் தாயத்தாகக் கருதி பழங்கால எகிப்தியர்கள் அணிந்தனர்.

ஹோரஸ் Horus என்பது சம்ஸ்க்ருத கருடன் என்பதன் மரூஉ இந்தக் கருடனுக்கும் சேத Seth என்னும் தேவதைக்கும் நடந்த சண்டை கருடர்- நா கர் சண்டையின் வேறு படைப்பாகும். இந்தக் கருடனின் கண்களை உட்ஜட் கண் என்று அழைப்பர். இதற்கு மூன்று குணங்கள் உண்டு ;

1.பாதுகாப்பு 2.குணப்படுத்தும் ஆற்றல் 3. பொதுவான ஆரோக்கியம்.

அதாவது நாம் கருட மந்திரம், கருடன் தாயத்து, கருடன் கிழங்கு ஆகியவற்றுக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறோமோ அவை அனைத்தையும் உட்ஜட்  கண் தாயத்தில்  காணலாம். இவை அனைத்தும் வேத காலத்துக்குப் பின்னர் வளர்ந்த கதைகள். இந்துக்களைப் போலவே எகிப்திலும் நூற்றுக் கணக்கில் தெய்வங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகளைப்ப பற்றிய கதைகள் நம்முடைய 18 புராணங்கள் போல் வளர்ந்தன. நம்முடைய இலக்கிய அளவைப் பார்க்கையில் எகிப்தின் பழைய இலக்கியம் மிகக்குறைவு. அதில் மகா குழப்பம். காரணம் என்னவெனில் பல தெய்வங்களுக்குப் பல பகுதிகளில் பல கதைகள் உண்டு.

எகிப்தில் இந்த வளர்ச்சிக்கு  மாக்ஸ் முல்லர் கும்பலும் திகிடுதத்த மார்க்சீய கும்பல்களும்  இனவாதப் பூச்சு பூசவில்லை. ஆரிய-திராவிடம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தியாவில் ஏதேனும் இரண்டு முரணான விஷயங்களைப் பார்த்தால் உடனே அதற்கு ஆரிய -திராவிட பிரிவினை முத்திரைகளைக் குத்தி விடுகின்றனர் . சிந்து சமவெளி முத்திரைகளைத் தோண்டி எடுத்த மார்ஷல், மகே , மார் டிமர் வீலர் போன்றோர் ஆரம்பத்தில் இருந்தே இந்த அயோக்கியத் தனத்தில் இறங்கியதால் இன்றுவரை சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க முடியவில்லை  உட் ஜட் கண்பற்றிய கதைகளிலும் இது போல குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எந்த ஒரு விஷயத்துக்கும் பத்து, பதினைந்து விளக்கங்கள் சொல்ல முடியும். திருக்குறளுக்கே நாம் பத்து உரைகள் கண்டோம். ஏன் ? கருத்து சுதந்திரம். ஆயினும் உரை எழுதியோர் பாரதீய மரபுகளை மீறாமல் எழுதினார்கள்,; நேற்று வந்த வெள்ளை-சிவப்பு விஷமிகள் விஷம் கக்கி வைத்துள்ளனர். அவற்றை அகற்றுவது நம் கடமை..

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல, இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சக்தியையும் இவர்கள் மீது வீசி எறிந்தாலும் அது சரியான, உரிய தணடனை ஆகாது. பாரதியார் சொன்னது போல ‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’யில் எழுதப்பட்ட விஷமத்தை , விஷத்தை அகற்ற வேண்டும்

–சுபம்–

tags-

உட்ஜட் கண், எகிப்து, கிரேக்கம், ரிக் வேதம், கண், மந்திரம் , பஸ்யேம

மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664)

Written by London swaminathan

 

Date: 23 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-10

 

Post No. 3664

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் பிரமிடுகளுக்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் தெரிந்தது ஸ்பிங்ஸ் SPHINX என்னும் பிரம்மாண்டமான சிலை ஆகும். இதற்கு மூன்று பெருமைகள் உண்டு:

 

உலகிலேயே மிகப்பெரிய சிலை!

உலகிலேயே பழமையான சிலை!

உலகிலேயே விநோதமான சிலை!

இந்து மதத்தில் விஷ்ணுவுக்கு முக்கிய அவதாரங்கள் 10. அதில் ஒன்று நரசிம்மாவதாரம்; அங்கே சிங்க முகம் , மனித உடல். ஆனால் எகிப்தில் மனித முகம், சிங்க உடல்: நேர் எதிர் உருவம்.

 

எகிப்தில் எங்கே உள்ளது (Sphinx) ஸ்பிங்ஸ்?

கீஸா (Giza) என்னும் இடத்தில் இந்தச் சிலை இருக்கிறது. அது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு அருகில் உள்ளது.

 

இந்த சிலையின் பொருள் என்ன? இது என்ன?

 

இது எகிப்திய மன்னரின் முகத்தையும் படுத்திருக்கும் சிங்கத்தின் உடலையும் கொண்டது.

 

இதன் உயரம் நீளம் என்ன?

இதன் உயரம் 66 அடி; நீளம் 240 அடி. பெரும்பாலும் ஒரு மலையைச் செதுக்கி உருவாக்கியுள்ளனர். ஆயினும் அத்தோடு கல்வேலைப்பாடு செய்து பொருத்தியுள்ளனர்.. அருகில் நாலாவது அரச வம்சத்தைச் சேர்ந்த காப்ரே என்ற மன்னரின் பிரமிடு இருக்கிறது

இது கொஞ்சம் சேதம் அடைந்துள்ளது. எகிப்துக்குள் வந்த துருக்கி படைகள் துப்பாக்கி– பீரங்கிப் பயிற்சிக்கு இதை குறியிலக்காகப் பயன்படுத்தியது!!

 

3000 ஆண்டு எகிப்திய வரலாற்றில் பலமுறை இதைப் பாதுக்காக்க மேல்பூச்சு பூசினர். பாலைவனப்பகுதியில் இருந்ததால் பெரும்பகுதியை மணலும் மூடிப் பாதுகாத்தது. முன்காலத்தில் இதில் பல வர்ணங்களைப் பூசி யிருந்தனர். உடலையும் முகத்தையும் சிவப்பு வர்ணத்தாலும் மன்னரின் தலைக் கிரீடத்தை மஞ்சள்-நீல நிறங்களாலும் அலங்கரித்தனர்.

 

 

ஸ்பிங்ஸ் சிலை குறித்து இரண்டு புதிர்கள் உள்ளன:

  1. இதன் வயது எதற்காக இப்படி ஒரு விநோதமான உருவத்தை அந்த மன்னன் சமைத்தான்?

 

இது இருக்கும் பகுதியில் பெரிய பிரமிடு (Great Pyramid)  என அழைக்கப்படும் கூஃபூவின் பிரமிடு, அவனுடைய மகன் காஃப்ரேயின் பிரமிடு, அவனுடைய மகன் மென்கௌரேயின் பிரமிடு (அதாவது கூஃபுவின் பேரன்) ஆகியன இருக்கின்றன. சிலர் இது காப்ரேயின் முகம் என்பர்; மற்றும் சிலர் இது மன்கௌரேயின் முகம் என்பர்; இவர்கள் எல்லோரும் கி.மு 2600 முதல் 2400 வரை ஆண்டவர்கள். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் இது அவர்களுக்கெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது — அதாவது கி.மு.5000 தான் இதன் உண்மை வயது என்பர். அப்படியானால் 7000 ஆண்டுகளாக இது மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப்பட்டு வருகிறது!

 

ராபர்ட் ஸ்சோச் (Robert Schoch) என்ற அறிஞர் காலநிலை மாற்றத்தால் சிலைக்கு ஏற்பட்ட அரிப்பு/ சிதைவை வைத்துக் கணக்கிட்டு 7000 ஆண்டுப் பழமையானது என்பார். ஆனால் தொல்பொருட்துறை அறிஞர்கள் இது காப்ரே மன்னரின் காலத்தை ஒட்டியே உருவாகி இருக்க வேண்டும் என்பர். அப்படியானால் இதன் வயது 5000 ஆண்டுகளுக்கும் குறைவே.

 

இப்படி ஒரு உருவத்தை ஏன் உருவாக்கினர்?

இது திட்டமிடப்பட்டு உருவாக்கிய சிலை என்பது ஒருசாரார் வாதம்; மற்றொரு கோஷ்டி, இல்லை, பக்கத்தில் உள்ள பிரமிடுகளுக்குக் கல் தோண்டுகையில் கற்களை வெட்ட வெட்ட இப்படி ஒரு உருவம் இயற்கையிலேயே உருவாகியது. அதை வீணடிக்கவேண்டாம் என்று எண்ணி, சிங்க உருவமாகச் செதுக்கிவிட்டார்கள் என்கின்றனர்.

 

அருகிலேயே ஸ்பிங்ஸ் கோவில் (Sphinx Temple)  இருக்கிறது அது காப்ரே (Khafre) என்ற மன்னருடன் தொடர்புடையது. ஆகையால் காப்ரேதான் இதையும் உருவாக்கினான் என்பது ஊகம்! இது ஒரு சாலையின் முடிவில் இருப்பதாலும் அருகில் மிகப் பழைய பிரமிடுகள் இருப்பதாலும் அவைகளின் காவலனாக — காவல் தெய்வமாக- இதைப் படைத்தனரோ என்றும் எண்ணுவர். இது பற்றி எந்தக் கல்வெட்டும் இல்லா ததால் இப்படிப் பல ஊகங்கள், புதிர்கள் உலவுகின்றன!

 

எகிப்திலும் கிரேக்க (Greece) நாட்டிலும் பலவகையான ஸ்பிங்ஸ் சிலைகள் உள்ளன. அவைகளைப் பின்னர் காண்போம்.

 

–Subham–

 

 

எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657)

Written by London swaminathan

 

Date: 21 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 19-56

 

Post No. 3657

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் ஆரம்பகால மன்னர்கள் (பழைய ராஜ்யம் Old Kingdom) இறந்தபோது அவர்களுடன் நூற்றுக்கணக்கான அடியாட்கள், காமக்கிழத்தியர் (Concubines), குள்ளர்களும் (Dwarves) புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது.இவர்கள் தானாக உயிர்த் தியாகம் செய்தார்களா அல்லது பலவந்தமாக நரபலி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்வி.

 

வால்மீகி ராமாயணத்தில் ராமன் சரயு ஆற்றில் விழுந்து உயிர்த் தியாகம் (ஜல சமாதி) செய்தபோது அவரோடு ஏராளமான பொது மக்களும் தாமாக முன்வந்து  உயிர்த் தியாகம் செய்த செய்தி உள்ளது.

 

திருஞான சம்பந்தர் திருமண நாளன்று  மனைவியுடன் அக்கினியில் புகுந்தபோது அவர் ஏராளமானோரை அழைத்துச் சென்றார். இது போல மன்னர்களும், புனிதர்களும் இறக்கும்போது அவர்களுடன் சென்றால் சுவர்க்கத்துக்குள் எளிதாகப் போக முடியும்; இது சொர்க்கத்துக்கு ஒரு சுருக்குவழிப்பாதை (Short cut route) என்பது மக்களின் நம்பிக்கை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தபோது பிசிராந்தையார் முதலியோரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும் இந்தக் காரணத்தால்தான். வடக்கிருத்தல் என்பது ஒரு புனித நோன்பு.

மஹா பத்தினியான சித்துர் ராணி பத்மினி , அலாவுதீன் கில்ஜியின் கரங்கள் தன் மீது பட்டுவிடக்கூடாதென்பதற்காக தீக்குளித்தபோது அவளுடன் நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வீராங்கனைகள் தீக்குள் பாய்ந்து உயிர் நீத்ததற்கும் இதுவே காரணம். போரில் இறப்பவர்களுக்கு வீர சுவர்க்கம் கிர்டைக்கும் என்பது பகவத்கீதையிலும் புறநானூற்றிலும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. போருக்கு முன்பாக தன்னைத்தானே பலிகொடுத்து வீரத்தைத் தூண்டிவிடும் வீரர்களின் சிலைகள் தமிழ்நாடு முழுதும் உள்ளன. இது  மஹாபாரத காலத்தில் துவங்கியது மஹாபாரதத்தில் வரையப்பட்டுள்ளது.

 

 

எகிப்தில் நடந்தது என்ன?

எகிப்திலும் தாமாக முன்வது இறந்தனரா என்பதே கேள்வி

பிளிண்டர்ஸ் பெற்றி Flinders Petrie என்பவர்தான் முதல் முதலில் எகிப்தில் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவர் ABYDOS அபிதோஸ் நகரில் 1900ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடத்தினார். முதல் அரச வம்சத்தைச் சேர்ந்த தஜெர் (Djer of First Dynasty) என்ற மன்னரின் புதைகுழிக்குப் பக்கத்தில் 317 துணைப் புதைகுழிகள் இருந்தன. இது தவிர நைல் நதி ஓரமாக ஏராளமான கல்லறைகள் இருந்தன.

 

முதல் அரச வம்சம் தொடர்பான சில விஷயங்கள் சின்னச் சின்ன கல்வெட்டு வில்லைகளாகக் கிடைத்தன. அதில் முக்கிய தர்பார் நிகழ்ச்சிகளும் சமயம் தொடர்பான சடங்குகளும் வரையப்பட்டுள்ளன.

 

இரண்டு வில்லைகளில் பயங்கரக் காட்சிகள் உள்ளன. உயிருடனுள்ள ஒரு கைதியின் நெஞ்சில் ஒருவன் கத்தியைப் பாய்ச்சுகிறான். அவனது ரத்தத்தைப் பிடிப்பதற்காக அருகிலேயே ஒரு கிண்னம் வைக்கப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் தெரியவில்லை. ஆனால் போர்க்கைதிகள், குற்றவாளிகளை சமயச் சடங்குகளில் பலி கொடுப்பது தெரியவந்த்துள்ளது.

 

ஆனால் ஒவ்வொரு மன்னர் இறந்தபோதும் ஏராளமானோர் பலிகொடுக்கப்பதற்கான ஆதாரஙள் எதுவும் இல்லை. ஆரம்ப கால கிசா பிரமிடுக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக கல்லறைகள் இருந்தபோதும் அவை எல்லாம் அரசாங்க திகாரிகள் இறந்தபின்னர் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டவையே. இது அவர்களுக்குக் கிடைத்த ஒரு சலுகை!

முதல் அரசவம்ச (First Dynasty) கால கல்லறைகளில் ஒரு முக்கிய வேறுபாடு காணப்படுகிறது. இறந்தவரின் பெயரும் அவர் பதவியும் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உயர் அதிகாரிகள் இல்லை. அரசரின் சேவகர்கள், காமக் கிழ்த்தியர், குள்ளர்கள் ஆகியோரின் கல்லறைகளாகும்.

 

இந்தியாவிலும் அரண்மனைகளில் குள்ளர்களை வேலைக்கு வைக்கவேண்டும் என்று நீதி சாத்திரம் கூறுகிறது. இந்தியாவிலும் அரசனின் அந்தப்புரத்தில் இதுபோல கள்ளக் காதலிகள் இருப்பர்.

 

அவர்களுடைய சடலம் உள்ள நிலை, எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டனர் என்பதை ஆராய முடியாதவாறு கல்லறைத் திருடர்கள் அவைகளைத் தோண்டி நிர்மூலம் செய்துவிட்டதால் முறையான ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போய்விட்டது.

 

சீனா, மெசபொடோமியா, பழைய நூபியா(Old Nubia) ஆகிய நாடுகளின் கல்லறைகளில் சடலமோ, எலும்புக்கூடோ உடகார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து அது உயிருடன் புதைக்கப்பட்ட ஆசாமி என்பதை அறிந்தோம். சில இடங்களில் ஒரே கல்லறையில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட தையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எகிப்தில் அப்படி இல்லாமல் இற   ந்தோருக்கு மரியாதை கொடுத்திருப்பதைக் காண முடிகிறது. தனித்தனி கல்லறைகளில் சடலங்கள் புதைக்கப் பட்டன. தலையைச் சீவி பலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு புரியாத விசித்திரப் புதிர் மட்டும் இருக்கிறது! ஆஹா (Aha) என்ற மன்னரின் (பாரோவின்) கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்ட எல்லோருடைய வயதும், 25-க்கும் குறைவு! அரசன் மறைவை அடுத்து அவர்களும் இறந்தது அல்லது இறக்கவைக்கப்பட்டது தெரிகிறது

நரபலி தடயங்கள்

முதல் அரச வம்சத்தின் இரண்டு அரசர்களின் (பாரோக்கள்) கல்லறைகளில் நரபலிக்கான நல்ல தடயம் கிடைத்தன. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது மன்னரின் மீதுள்ள அபிமானத்தால் தற்கொலை செய்துகொண்டார்களா என்று சொல்ல முடியாது. சமர்கேட் Semerkhet (சமரகேது), கா (Qaa) (இந்துமதத்தில் கா என்றால் பிரம்மா என்று பொருள்) ஆகிய இருவரின் கல்லறைகளுக்கு அருகிலுள்ள சில கல்லறைகள் ஒரே நேரத்தில் மூடப்படுள்ளன. அவர்களாக உயிர்த் தியாகம் செய்திருக்கலாம். 1989ல் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ இறந்தவுடன் அவருடைய பழைய நன்றியுள்ள ஒரு சேவகன் தற்கொலை செய்துகொண்டான்; காரணம்- மன்னருக்கு மேலுலகத்திலும் சேவை செய்ய!

 

எகிப்திலும் மக்களின் சமய நம்பிக்கை காரணமாக இறந்திருக்கலாமே! நமது நாட்டிலேயே ராமாயண, புறநானூற்றுச் சான்றுகள் உளவே!

-சுபம்–

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

pyramid

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

எகிப்திய நாகரீகம் குறித்து 2012 ஆம் ஆண்டில் சுமார் பத்து கட்டுரைகளில் பல விஷயங்களை எழுதி இருந்தேன். ‘’நெய்த்’’ என்னும் எகிப்திய தெய்வம் நெய்தல் (துணி நெய்தல்) என்பதுடன் தொடர்புடைய தெய்வம், ‘’க’’ என்றால் கடவுள் (பிரம்மா) முதலிய பல சொல் ஆராய்ச்சி விஷயங்க ளையும் வீடு முதலிய சொற்கள் செமிட்டிக் மொழியில் இருப்பது பற்றியும் எழுதி இருந்தேன். அண்மையில் ‘’பழங்கால எகிப்தில் யார், எவர்’’ — என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாசித்து முடித்ததில் மேலும் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே இருப்பதை அறிந்து வியந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆய் என்ற மன்னன் எகிப்திலும் உண்டு. சேர நாட்டு மன்னர்களுக்குப் பின் எப்படி ஆதன், குட்டுவன், பொறையன் என்று பெயர் இருக்கிறதோ அது போல எகிப்திலும் உள்ளது.

இமயவரம்பன் நெடுஞ்சேரல் ஆதன், சேரன் செங் குட்டுவன், மாந்த்ரஞ் சேரல் இரும் பொறை எனப் பல பெயர்களை நாம் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். பொறையன் என்பது எகிப்தில் பாரோ (மன்னன்) என்ற பெயரில் உள்ளது. கேட் என்று முடியும் பல எகிப்திய மன்னர்களின் பெயர்களை (அமன்கேட், ஹருகேட்) குட்டுவன் என்பதோடு ஒப்பிடலாம். ஆதன் என்ற பெயர் சூரியன் என்னும் கடவுளின் பெயராக எகிப்தில் புழங்குகிறது (ஒரு மன்னன் பெயர் அகனாதன்). அதே பொருளில் — (ஆதவன்=சூரியன் என்ற பொருளில்) —- சேரன் பெயர்களில் இருப்பதை அறிவோம்.

நான் பட்டியலில் கொடுக்கும் பெயர்கள் எல்லாம் கி.மு.1900 முதல் கி.மு 1300 வரைக்குட்பட்டது. தனித்தனியே மன்னனின் ஆட்சி ஆண்டு வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க.
இது தவிர முட ‘’மோசி’’ என்ற பெயர்களும் ஆய் என்ற பெயரும் வியப்பை உண்டாக்கும்.
ஆய் என்பவன் எகிப்தில் சாதாரண நிலையில் இருந்து மன்னன் ஆனவன். தனது மகளை ஒரு எகிப்திய மன்னனுக்கு மணம் செய்து கொடுத்ததால் அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

Egyptian-Sunpower

மிட்டன்னிய (தற்போதைய சிரியா/ துருக்கி பிரதேசம்) இந்து மன்னன் தசரதன் தன்னுடைய இரண்டு புதல்விகளான புது கீபா, தது கீபா — (புத்த சிவா, தத்த சிவா என்ற பெயர்களோ!!) —- ஆகியோரை எகிப்திய மன்னனுக்கு மணம் புரிவித்து தங்கத்தினால் ஆன கடவுள் சிலை ஒன்றையும் அனுப்பிவைத்தான். இந்தக் கடவுள் சிலை துர்க்கை என்று நாம் வணங்கும் கடவுளுக்குச் சமமான மேற்காசிய தெய்வம் ஆகும். இவர்கள் எகிப்திய அரசவைக்குள் நுழைந்தபின்னர் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே புழக்கத்தில் வந்தன. ராம்செஸ் என்ற பெயரில் மட்டும் 13 பேர் எகிப்தை ஆண்டனர் (இது குறித்து காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஆற்றிய உரை விஷயங்களை முன்னரே எழுதிவிட்டேன்).

முடமோசி என்ற சங்க காலப் பெண் புலவர் பற்றித் தமிழர்கள் நீண்ட காலமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தப் பெயர் எகிப்து நாட்டில் மிகவும் அதிகம். தத் மோசி என்ற பெயரில் மட்டும் நால்வர் இருந்தனர். இதுதவிர ஆமோசி, ஹரமோசி, காமோசி, மீனமோசி என்ற பெயர்களும் மன்னர்கள் பட்டியலில் உண்டு.

மோசி என்றால் மகன் என்று பெயர். தமிழில் மூசு என்பதை முதலில் விளையும் இளம் பலாக் காய்க்குப் பயன் படுத்துவோம். பலா மூசு கூட்டு, கறி முதலியவற்றைச் சாப்பிடுகிறோம். இதே பொருளில் மோசி என்றால் தலைப் பிள்ளை என்ற அர்த்தம் ஸ்வாகிலி (கிழக்கு ஆப்பிரிக்கா) மொழியிலும், எகிப்திலும் இன்றும் இருக்கிறது. மோசஸ் என்ற குழந்தையை நைல் நதியில் கண்டு எடுத்த மன்னன் மகள் அவனுக்கு ஹீப்ரூ (எபிரேய) மொழியில் மோசி (மோசஸ்) என்று பெயரிட்டாள். பின்னர் அவர் யூதர்களை வழி நடத்திச் சென்ற கதைகளை நாம் அறிவோம்.

trademap

தமிழில் முட மோசி என்ற பெயர், அவர் வீட்டுக்குத் தலைப் பிள்ளையாக (புதல்வியாக) பிறந்ததால் வந்திருக்கலாம். பிறக்கும் போதே இளம் பிள்ளை வாதம் (போலியோ) போன்ற குறைகளுடன் பிறந்ததால் முடமோஸி என்ற பெயரும் பெற்றிருக்கக்கூடும்.

ஆக மோசி என்பது எகிப்து வரை உள்ளது. சேர நாட்டில் இருந்து கடலை நோக்கி உட்கார்ந்தால் அது எகிப்து இருக்கும் திசையை நோக்கி இருக்கும். பழங்காலத்தில் அரபிக் கடல் முழுதும் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தினர். கடல் கொள்ளையர்களை செங்குட்டுவன் ஒடுக்கி அவர்களுடைய காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

நெடுஞ் சேரலாதனோவெனில், அங்கு அட்டூழியம் புரிந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, தலையில் எண்ணையை ஊற்றி அவமானப் படுத்தியதைப் பதிற்றுப்பத்தில் படித்தோம். இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள் என்ற எனது பழைய கட்டுரையில் கிருஷ்ன பரமாத்மா, துவாரகை துறைமுகத்தில் இருந்து கடற்படையுடன் சென்று மேற்காசியாவில் நடத்திய தாக்குதல்களை விவரித்துள்ளேன்.

இப்படி நமது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தகாலதில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு இந்தியன் உளறிவிட்டான். எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு கிரேக்க நாட்டானிடம் பருவக் கற்று மூலம் நாம் எப்படி எகிப்து முதலிய நாடுகளுக்குச் செலவே இல்லாமல் செல்கிறோமென்று உளறிவிட்டான். அது முதல் மேலை நாட்டோர் நம் மீது படை எடுத்து நம்மை அடிமைப் படுத்தத் துவங்கிவிட்டனர். அந்த கிரேக்க நாட்டான் பெயர் ஹிப்பலஸ் — அவன் பெயரில் தென் மேற்குப் பருவக்காற்று ரகசியம் மேலை உலகம் முழுதும் பரவியது. (தமிழ் இலக்கியத்தில் அதிசயங்கள் — என்ற எனது பழைய– 2003 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில்– மேல் விவரம் காண்க)

egypt 2

ஆக சேர நாட்டில் இருந்து தமிழ் பெயர்கள் அங்கு சென்றதில் வியப்பில்லை. எபிரேய மொழியில் பல தமிழ் சொற்கள் உண்டு அவற்றை தனிக் கட்டுரையில் தருவேன்.. யூதர்கள், பார்ஸிக்கள் முதலியோர் மேலைக் கடற்கரை மாநிலங்களில் குடியேறியதும் பருவக் காற்று ரகசியம் வெளியேறியதால்தான் என்று சொல்லலாம்.

எகிப்தில் பல பெயர்கள் தேவ (டேப்) என்று முடியும். இவை அந்த நாட்டுக் கடவுளான ஹோதெப் (ஹே தேவ!) என்று அவர்கள் புத்தகத்தில் எழுதுவர். ஆயினும் கடவுள் என்ற பெயரில் தேவ இருப்பதில் வியப்பில்லை. நாம் சிவனை மஹா தேவ என்று சொல்கிறோம்.

இப்படிப் பெயர்களில் மேம் போக்காகக் காணப்படும் ஒற்றுமைகளை வைத்து மட்டும் நாம் எகிப்திய-இந்திய உறவை எடை போடுவது அறிவுடைமை ஆகா. வேறு பல விஷயங்களிலும் காணப்படும் ஒற்றுமைகளை வைத்தே முடிவுக்கு வருகிறோம். ஈசாப் என்னும் கிரேக்க அடிமை, எகிப்து நாட்டில் அடிமை வேலை செய்த காலையில் கேட்ட கதைகளை எழுதி உலகப் புகழ் பெற்றான். அவன் நாட்டில் இல்லாத மயில் போன்ற இந்தியப் பறவைகளை அவன் கதைகளில் காண்பது நம்முடைய கலாசார தாக்கத்தை வெள்ளிடை மலையென விளக்கும்.

egypt india

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)
Did Indians build Egyptian Pyramids? ( 27 August 2012)
Vishnu in Egyptian Pyramids ( 5 September 2012)
Vedas and Egyptian Pyramid Texts ( 20 August 2012)
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (26-9-2012)
Hindu Gods in Egyptian Pyramids ( 16-9-2012)
Flags: Indus Valley- Egypt Similarities (15-10-2012)
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் (21-11-2013)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை (14-10-2012)
Hindu Symbolism in France ( 24 August 2014)
More Tamil and Sanskrit Names in Egypt (15th November 2014)
aum
contact swami_48@yahoo.com

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

God heiroglyph

Indra Dwaja symbol meant GOD in Egypt!

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1289; தேதி:– 15th September 2014.

This article was already published in English.

உலகம் முழுதும் இந்திரன் வழிபடப்படுவது பாரத மக்களுக்கு பெருமைதரும் விஷயமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் ஒலித்த அதே மந்திரங்கள் இன்று இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்களில் விழாக் காலங்களில் ஒலிப்பதும், “த்ரி கால சந்தியா வந்தனம்” செய்யும் பிராமணர்களின் வீடுகளில் நாள்தோறும் ஒலிப்பதும் அதிசயத்திலும் அதிசயமான விஷயம் ஆகும்.

அதைவிட அதிசயம், கரிகால் சோழன் முதல் சிலப்பதிகார காலம் வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட இந்திர விழா இன்றும் நேபாளத்தில் அதே பெயரிலும் தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் “நீர்ப் பெருக்கு விழா” (Water Festival) என்ற பெயரிலும் கொண்டாடப்படுவதாகும். இதை எல்லாம் பார்க்கும்போது ‘’ஒல்காப்புகழ் தொல்காப்பியன்’’ ஏன் இந்திரனையும் வருணனையும் தமிழ் தெய்வங்கள் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான் என்பதும் தெள்ளிதின் விளங்கும்.
Vientine, Laos
Indra in Vientine, Laos (South East Asia)

இதைவிட வியப்பான விஷயங்களைச் சொல்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனின் பெயரில் உள்ள அண்டிரன் (Andiran) என்பது இந்திரனின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் பிராமணப் பெண் புலவர் அண்டிரனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் இந்த ரகசியத்தை வெளியிடுகிறார். அதை விட வியப்பான விஷயம் எகிப்தில் இந்திர த்வஜத்துடன் இந்திரனைக் கடவுள் என்ற பெயரில் வணங்கியதாகும். சுமேரியர் என்ன சளைத்தவரா? கிரேக்கர்கள் என்ன இளைத்தவரா? அவர்களும் கும்பிட்டதோடு வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கும் இந்திரன் பெயர்சூட்டினர்.

தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்திரன் சிலை இருப்பதும், நேபாளம் முதல் கண்டி வரை இன்றும் மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு இந்திரன், இந்திராணி, சசி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வதும் நாம் அறிவரும் அறிந்ததே.

இந்திர அதிசயம் 1
எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்!
indra saci nepal
Indra in wooden sculpture , Nepal

இந்திர அதிசயம் 2
சுமேரியாவில் அண்டர ANDARA என்றால் இந்திர என்று ஒரு புத்தகம் (India We Lost) கூறுகிறது. சுமேரிய, பாபிலோனிய மெசபொட்டோமிய நாகரீகம் நிலவிய இராக், சிரியா பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி (Dictionary of the Near East) கூறுகிறது.
பழைய பாரசீக மொழியில் உள்ள Zend Avesta செண்ட் அவஸ்தாவில் இந்திரன் பெயர் இரண்டு இடங்களில் வருகிறது என்றும் அதுவும் அண்டிர என்ற சப்தத்தில் இருப்பதாகவும் இன்னொரு நூல் பகரும்.

இந்திர அதிசயம் 3
இந்திய புராணங்களில் இந்திரன் மனைவி பெயர் அய்ந்திரி Aindri. ஆக கணவன் பெயர் அய்ண்டிரன் என்பதில் பொருத்தம் உளது. மேலும் இந்திரன் மனைவி இந்திராணி, புலோமன் என்ற அசுரனின் பெண். ஆக ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை பொய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்திரன் கொன்ற 30 அசுரர்களில் இருவர் பிராமணர்கள்! ஆக இதுவும் ஆரிய திராவிட இனவெறிக் கொள்கையைத் தகர்க்கிறது.

Indra-Jatra-14-,nepal

Indra Festival in Nepal

இந்திர அதிசயம் 4
கிரேக்கர்கள் கும்பிட்ட ZEUS சூஸ், ரோமானியர்கள் கும்பிட்ட JUPITER ஜூபிடர், நார்வீஜியர் கும்பிட்ட THOR தோர், கெல்ட்ஸ் கும்பிட்ட TARANIS தாரனிஸ் ஆகியோர் இந்திரன் போன்றே “இடி” எனும் வஜ்ர ஆயுதத்தை THUNDERBOLT கையில் வைத்திருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம். இதைவிட முக்கியமான செய்தி கேட்டை நட்சத்திரம் ஆகும். “ஜ்யேஷ்டா” என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்துக்கு அதிதேவதை இந்திரன். அந்த கிரேக்க நட்சத்திரத்தின் பெயர் ANTARES அண்டாரெஸ். அண்டிரன் என்பதையே இப்படி சொல்கிறார்கள். அவருக்கு இதற்கு விளக்கம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு இதற்கு வேறு பொருள் கற்பித்தனர்!

இந்திர அதிசயம் 5
ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடல் PURANANURU 240-மற்றும்-241-ல் இரண்டு முக்கியச் செய்திகளைக் கூறுகிறார்.

1.ஆய் அண்டிரன் இறந்தவுடன் “வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலில்” அவனை வரவேற்க முரசுகள் முழங்கி வானில் ஒலி எழுந்தது என்கிறார் புலவர்.— இதற்கு மூன்றுவிதப் பொருள் உண்டு (அ) அவர் இறந்த அன்று மழைமூட்டமாக இருந்ததால் இடி இடித்தது (ஆ) அவர் நிறைய கொடையளித்துப் புண்யம் சம்பாதித்ததால் அவர் சொர்க்க (இந்திர) லோகம் போவார் (இ) அவர் பெயரில் அண்டிரன் / இந்திரன் இருப்பதால் புலவர் இப்படிப் பாடினார். இந்தக் கடைசி பொருளே சரி என்பது என் முடிவு. மற்ற எல்லா இடங்களிலும் மேல் உலகம் என்று புலவர்கள் பாடுவர். இங்கோ ‘வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்’ — என்று இந்திரன் பெயரை நீட்டி முழக்குகிறார் புலவர். இதே வரியை இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்துகிறார்.

2. இரண்டாவது செய்தி என்னவென்றால் அவனது உரிமை மகளிர் (மனைவியர்) அவனுடன் (சிதைத்தீயில்) எரிந்தனர். ‘சதி’ என்னும் இவ்வழக்கம் வட நாட்டில் அதிகம் உண்டு. இன்னொரு புறப்பாடலில் பூதப்பாண்டியன் பெருந்தேவியாரும் கணவனுடன் சிதைத் தீயில் ஏறி மாண்டதைக் காண்கிறோம். ஆய் அண்டிரன் வடக்கே இருந்து வந்த வேளிர் மரபைச் சேர்ந்தவன். கபிலரின் புறநானூறு 201 ஆம் எண் பாடலின் உரையில் வேளிர் என்போர் அகத்தியர் தலைமையில் துவாரகா புரியில் இருந்து வந்தவர்கள் என்பதை அறிகிறோம். இவை அனைத்தையும் ஒரு சேரவைத்துப் பார்த்தால் ஆய் அண்டிரன் — இந்திரன் என்ற பெயரைக் கொண்டதில் வியப்பில்லை.

indra nepal 3
Indra Festival

இந்திர அதிசயம் 6
இந்திரனை அடிக்கடி காளைமாடு என்று ரிக்வேதம் வருணிக்கிறது. சிந்து சமவெளியிலும் முத்திரைகளில் காளைகளே அதிகம். அதுமட்டுமல்ல. உலகின் பழைய நாகரீகங்களில் யானைச் சின்னம் உள்ளது சிந்து சமவெளியில் மட்டுமே. இந்திரனுடைய வாகனம் யானை வாகனம் என்பதோடு அத்தகைய சின்னம் ஒன்றும் சிந்துவெளியில் கிடைதிருக்கிறது. ஒரு யானையின் மேல் ஒரு உருவம் நிற்க அதன் மேல் சக்ர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆக இந்திரன் எனபவர் மத்திய ஆசியாவில் அல்லது சைபீரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தெய்வம் என்ற கூற்று எல்லாம் பொய்யாய்ப் ப்ழங்கதையாய்ப் போயிற்று!!

இந்திர அதிசயம் 7
இந்திரனுக்கு ஒதுக்கப்பட்ட திசை கிழக்கு என்பதாலும் அவர் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியானவர் இல்லை என்பது புலப்படும். இந்திய இந்திரனே குதிரையிலும், காளையிலும், யானையிலும் ஏறி உலக வலம் வந்தான் என்று கொள்வதே சாலப் பொருத்தம்!!
antares_m4_stargazerbob_600

Red Colour Jyeshta (kettai in Tamil) Antares Star in Scorpio constellation.

தொல்காப்பியம் புகழும் இந்திரன் வாழ்க !!
தமிழ் தெய்வம் இந்திரன் வெல்க !!!

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” – பாரதியார்.
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” — பாரதியார்.

contact swami_48@yahoo.com

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

map Egypt Luxor

–லண்டன் சுவாமிநாதன்—

POST No. 716 dated 21 Novemeber 2013

“உன்னையே நீ அறிவாய்”, “உள்ளம் பெருங்கோயில்” என்ற கருத்துக்கள் இந்துக்களுக்குக் கரதலைப் பாடமாகத் தெரிந்தவை. ‘மனக் கோயில், மனமே கோயிலாகக் கொண்டவன்’ என்று இறைவனைப் பாராட்டும் வரிகள் தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருவாசகத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.

எகிப்து நாட்டில் தீப்ஸ் என்னுமிடத்தில் உள்ள லக்ஸார் கோவிலில் இந்த இந்து மதக் கருத்துக்கள் எழுத்தில் இருக்கின்றன. இந்தக் கோவில்கள் 3500 ஆண்டுகள் பழமையானவை. அப்போதே இந்துமதக் கருத்துக்கள் அங்கே பரவி இருந்தன. உபநிஷத் சொன்ன கருத்துக்களை பிற்காலத்தில் சாக்ரடீஸ் மேலை உலத்தில் பரப்பினார். அதற்குப் பின்னர் திருமூலர் அவைகளைத் தமிழில்—எளிய தமிழில்—எல்லோருக்கும் புரியும்படியாகப் பாடி வைத்தார்.

சாக்ரடீஸின் சீடர் பிளட்டோ இந்தக் கருத்துக்களை அவரது சீடர் அரிஸ்டாடிலுக்குச் சொன்னார். அவர் தனது சீடரான அலெக்ஸாண்டருக்குச் சொன்னார். இதைக் கேட்டுப் பிரமித்துப் போன மஹா அலெக்ஸாண்டர் எப்படியாவது இந்து மத சந்யாசிகளைக் கிரேக்க நாட்டுக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இதை “ஒரு யோகியின் சுயசரிதை” நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா போன்றோர் (நடிகர் ரஜினிகாந்தின் குருவின் வழிவந்தவர் பரமஹம்ச யோகாந்தா) கூறியுள்ளனர். எல்லா விவரங்களையும் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

court_ramesisluxor

கீழ்கண்ட பகுதியை விக்கிபீடியாவில் இருந்து எடுத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்:
“பழங்கால லக்ஸார் கோவிலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.முன் பகுதியில் ஆரம்ப உபதேசம் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். உள்ளே இருக்கும் பகுதிக்குத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உயரிய ஞானமும் அந்தர்முகமாகப் பார்க்கவல்லவர் மட்டுமே அங்கே பிரவேசிக்கலாம். வெளிப்புறக் கோவிலில் இருக்கும் பொன்மொழிகளில் ஒன்று “ உடலே இறைவனின் திருக்கோயில்”. இதனால்தான் உன்னையே நீ அறிவாய் என்று மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. உள்ளே உள்ள பொன்மொழிகளில் ,”மனிதனே , உன்னையே நீ அறிவாய். பின்னர் நீ கடவுளை அறிவாய்” என்று எழுதப்பட்டுள்ளது.

Ancient Egyptian
“There are two parts of the ancient Luxor temple: the outer temple where the beginning initiates are allowed to come, and the inner temple where one can enter only after proven worthy and ready to acquire the higher knowledge and insights. One of the proverbs in the Outer Temple is “The body is the house of God.” That is why it is said, “Man know thyself.”[20] In the Inner Temple, one of the many proverbs is “Man, know thyself … and thou shalt know the gods.”[21]”

large_5Luxor_Temp..__Egypt

ஏற்கனவே நான் எழுதிய எகிப்து தொடர்பான மூன்று, நான்கு கட்டுரைகளில் அதர்வண வேத மந்திரக் கருத்துக்கள் அங்கே இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். காஞ்சி மஹா பெரியவர் சென்னையில் 1930களில் நடத்திய சொற்பொழிவுகளில் உலகம் முழுதும் இந்துமதக் கருத்துக்கள் இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பின்னர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்: “இப்படி நான் சொன்னதால் இந்துக்கள் அங்கெல்லாம் போய் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் ஒரே மதம்தான் உலகம் முழுதும் இருந்தது. அதுதான் சநாதன தர்மம்” (இந்து மதத்தின் பழைய பெயர்) என்று சொல்லி இருக்கிறார்.

இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்:

1.”தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்”

2.”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(பாடல் 280)

3. “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”

கீதையில் கண்ண பிரானும் இதை வலியுறுத்துகிறான்:
எவன் தானே தன்னை வெல்கிறானோ அவனே அவனுக்கு உறவினன் (பந்து).தன்னை வெல்லாதவனுக்கு தானே பகைவன் (6-6)

‘திருமூலருடன் 60 வினாடி பேட்டி’ என்ற எனது முந்தைய கற்பனைப் பேட்டியில் மேல் விவரம் காண்க.

tutakhamun

Tutankhamun in Luxor