Written by London Swaminathan
Date: 2 May 2018
Time uploaded in London – 9-59 am (British Summer Time)
Post No. 4969
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
என் கேள்விக்கு என்ன பதில்? சொல், சொல், மனமே!-2 (Post No.4969)
கீழ் கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி, உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்.
1.தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளி
xxx
2.மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய்
xxx
3.என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே.
xxx
4.எங்கள் பகைவ எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
xxxx
5.நச்சு மாமரமாயினுங் கொலார்
நானும் அங்ஙனே யுடைய நாதனே
xxxxx
6.கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல்முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
xxx
7.அஞ்சல்! அஞ்சல்! என்று தினம் அண்டையிலே தான் இருக்க
நஞ்சுதனை ஏன் அருந்தினார்?
xxxx
8.பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே………
தேவர் பாடையின் இக்கதை செய்தவர் மூவர்
xxxx
9.அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
xxxx
10.மாநீர்வேலி வச்சிர நல்நாட்டுக்
கோனிறை கொடுத்த கொற்றப்பந்தரும்
மகநல்நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்து கொடுத்த பட்டிமண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நீவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்
xxxx
11.அறமிருக்க மறம்விலைக்குக் கொண்டவாறே
பனிநீராற் பாவைசெயப் பாவித்தேனே
கரும்பிருக்க இரும்புகடித்து எய்த்தவாறே
xxx
12.ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!
xxx
13.அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
xxxx
ANSWERS
1.தற்கால அவ்வையார்
2.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை
3.பட்டினத்தார் பாடல்
4.பாரதிதாசன் பாடல்கள்
5.மாணிக்கவாசகர், திருவாசகம்
6.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்
7.காளமேகம், தனிப்பாடல்கள்
8.கம்பன், கம்ப ராமாயணம்
9.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
10.இளங்கோ, சிலப்பதிகாரம்
11.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை
12.பாரதி, பாரதியார் பாடல்கள்
13.திருமூலர் எழுதிய திருமந்திரம்
-SUBHAM–