5 கிரகம் உச்சம் ! பின்னர் ஏன் ராமன் கஷ்டப்பட்டான்?-1(POST 8646)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8646

Date uploaded in London – –8 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏன்? ஏன்? ஏன்? நாட்டை விட்டு காட்டுக்கு போனார் ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ???

Gnanamayam – Home | Facebookwww.facebook.com › … › Religious OrganizationGnanamayam · 17 hrs ·. *Significance of Tree Plantation as in Sastras & Ancient Indian Treatises-Book Release*. His Holiness released a book on …You visited this page on 07/09/20.

ZOOM BROADCAST VIA GNANAMYAM ON MONDAY 7-9-2020

FACE BOOK.COM/GNANAMAYAM

அனைவருக்கும் கத்துக்குட்டி அன்பான மாலை வணக்கம்.

ஒரு அன்பரின் கேள்வி

மிக மிக உயர்ந்த்தான, பூஜிக்கத் தகுந்த ,5 கிரகங்கள் உச்சம்

பெற்றிருக்கிற ஜாதகம் ஶ்ரீ ராமருடையதாக இருந்தும் ஏன் 14

வருடங்கள் காட்டில் இருக்கும்படி நேரிட்டது????

அவரது மனைவி சீதையும் சகோதரன் லட்சுமணனும் ஏன் கூடவே

இருந்து கஷ்டப்பட நேர்ந்தது????

முதலில் ஶ்ரீ ராமருடைய ஜாதகத்தைப் விரிவாக பார்ப்போம்.

ஶ்ரீ ராமர் புனர்பூச நட்சத்திரத்தில், கடக ராசியில், கடக

லக்னத்தில், உச்சம் பெற்ற குருவும், ஆட்சி பெற்ற சந்திரனும்

சேர்ந்திருந்ததினால் , ராஜ களையுடனும் அஞ்சா நெஞ்சம்

பெற்று மன உறுதியுடன் பகைவரை வெல்லும் ஆற்றல்

பெற்றவானார்.

இரண்டாம் பாவத்திற்குரிய சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று

சூரிய குல திலகமாக திகழ்ந்தார், வாழ்ந்தார்

மூன்றாம் பாவத்திற்குரிய புதன் சூரியனுடன் சேர்ந்து

“ புத ஆதித்ய யோகம்”பெற்றிருப்பதினால் ஆய கலைகள்

அறுபத்தி நான்கும் அவரை தஞ்சம் புகுந்ததென்றால் மிகையாகாது.

சனி 4 ம் பாவத்தில் உச்சம் பெற்று 10 பார்வையாக லக்னத்தைப்

பார்ப்பதினால் எல்லோரையும் கவரக்கூடிய நீல வண்ணத்தில்

பிரகாசித்தார்.

6-ம் பாவத்தில் உள்ள ராகு எதிரிகளை எளிதில் வெல்லும்

ஆற்றலை அளித்திருக்கிறார்

9-ம் பாவத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் அழகான மனைவியை

சயம்வரத்தில் வென்றார்

7-இடத்து அதிபதியான சனி அவர் வீட்டிலேயே உச்சம் பெற்ற

உச்சம் பெற்ற செவ்வாயும் இருந்ததினால் அன்னிய நபர்களாலும்

நல்ல நண்பர்களாலும் உதவி கிடைத்தது.

இற்கெல்லாம் மேலாக 33 சிறப்பான ராஜ யோகங்கள் காணப்

படுகின்றன இவர் ஜாதகத்தில் !!!!!

இவ்வளவு சிறப்புகள் பெற்று 5 கிரகம் உச்சமான ஜாதகம்

பெற்றும் அவர் பட்ட கஷ்டங்கள் பல.

முதலில. ஓர் உண்மையை தெரிந்து கோள்வோம். ஶ்ரீ ராமருக்கு

முடி சூட்டு விழா நாளைக்கே !!! என்று அறிவித்தவர்

தசரதர்தான் ,,,,,,,,குல குரு வசிஷ்டர் சொல்ல வில்லை.

இந்த நாள் இனிய நாள் இல்லை என்று குல குரு

வசிஷ்டடர் ஏன் தசரதனிடம் சொல்ல வில்லை????

ஒன்று தசரத சக்ரவர்த்தியே அனைவர் முன்னிலையிலும்

அறிவித்கு விட்டார்.இரண்டாவதாக முக்காலமும் உணர்ந்த

முனி சிரேஷ்ட்டர் வசிஷ்டர்.. அவருக்குத் தெரியாதா ஶ்ரீ ராமரின்

அவதார நோக்கம்???. அவர் நினைத்திருந்தால் கைகேயியின்

வரங்களையும் ராமர் காட்டுக்கு போவதையும் தடுத்திருக்கலாம்.

அவதார நோக்கம் அறிந்த அவர் அவ்வாறு

செய்ய வில்லை……..

இரண்டாவதாக உச்சம் பெற்ற சூரியனும் உச்சம் பெற்ற சனியும்

சம சப்தமமாக ஒருவரை ஓருவர் பார்த்துக் கொண்டதினால்

உச்சனை உச்சன் பார்த்தால் மிச்சம் ஏதும் இல்லை” என்றவாறு

தந்தைக்குப் பிடித்த பிள்ளையாக ஶ்ரீ ராமர் இருந்த போதும் ,அவர்

சொல்லை மீறாமல் காட்டுக்கு செல்ல நேர்ந்தது. அவருக்குக்

“கர்மம்” கூட செய்ய முடியாத நிலையும் ஆகிவிட்டது.

மூன்றாவதாக 6 – ல் இருந்த ராகு நிறைய விரோதிகளை உண்டு

பண்ணுயிருக்கிறார்………அதிலும் பெண்கள் பங்கு அதிகம்!!!

முதலில் தாடகை , ராமரைகாட்டுக்கு அனுப்பிய கைகேயி

கைகேயியடம் ராமரைப் “போட்டுக் கொடுத்த” கூனி, வனவாசத்தின்

போது வந்து “வம்பு “ பண்ணிய சூர்ப்பனகை,இதற்கெல்லாம்

மேலாக சொந்த மகன்களாகிய லவன், குசனிடமும் சண்டை!!!!!

4 வதாக மிக மிக முக்கியமான பாயிண்ட் POINT  என்னவென்றால்

கிரகங்கள் எல்லாம் நல்ல நிலைமயில் இருந்தாலும்

நல்ல   திசைகள்” அவருக்கு நடக்கவில்லை……..

அவர் பிறந்த புனர் பூச நடசத்திரத்தின் 4 வது பாதமாக இருந்ததினால்

 குரு திசை கர்ப்ப செல்லு போக 4 வருடங்கள்

இருந்ததிருக்கும். அதற்கு பிறகு சனிதிசை 19 வருடங்கள்!!!!

சனி திசை முடிந்த உடன் 3 ஆம், 12 ஆம் இடத்திற்குரிய

புதனின் திசை அவரை வன வாசத்திற்கே அனுப்பியது அவரது

23 வது வயதில்!!!

7 ம் அதிபதியான சனி 12 ம் இடத்து அதிபதியான புதனைப்

பார்ப்பதிதினால் மனைவியைப் பிரிய நேரிட்டது.

இதற்கெல்லாம் மேலாக அயன, சயன, சுக, போக பாக்ய

ஸ்தானமான 12 ம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து

எதையுமே அனுபவிக்க முடியாதபடி செய்து விட்டார்!!!

நேயர் கேட்ட கேள்வியின் இரண்டாவது பகுதி

ஶ்ரீராமரின் மனைவியான சீதையும் சகோதரனான லசுமணனும்

காட்டில் கஷ்டப்பட நேரிட்டது ஏன்????

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் இது ஒரு “மில்லியன் டாலர்

கொஸ்டின்” MILLION DOLLAR QUESTIN என்றே சொல்லுவார்கள்.

கடந்த 15 வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து பம்பாய்க்கு

ஒரு விமானம் 128 பயணிகளுடன் பறந்து சென்று கொண்டிருந்த போது

நடு வானில் வெடித்து சிதறியது.அதில சென்ற 128 பயணி

களும் இறந்தார்கள். அந்த செய்தி கேட்ட நண்பர் ஒருவர்

“என்ன சார், உங்களுக்குத்தான் ஜோதிடம் தெரியுமே……..

அந்த விமானத்தில் பயணம் செய்த 128 பேருக்குமா ஒரே

சமயத்தில் மரண யோகம் வரும்???”

அதற்கு என்னுடைய பதில்

பயணம் சென்ற 128 பேருக்கு மரண யோகமா இல்லையா என்பது

அவர்களப் படைத்த பிரும்மனுக்குத் தான் தெரியும்! ஆனால் அந்த

விமானத்திற்கு மரணயோகம் . அது பிறந்த நேரம் பறந்த நேரம்

அதன்படி விழுந்து நொறுங்கியது.!!

TO BE CONTINUED…………………………………………

Gnanamayam – Home | Facebookwww.facebook.com › … › Religious OrganizationGnanamayam · 17 hrs ·. *Significance of Tree Plantation as in Sastras & Ancient Indian Treatises-Book Release*. His Holiness released a book on …You visited this page on 07/09/20.

to be continued…………………………………

tags — ராமர் ஜாதகம், 5 கிரக உச்சம், கஷ்டம், ஏன்

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —