3 கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து! (Post No.4519)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-54 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4519

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

15-12-17 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 43வது) கட்டுரை

மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போஸ்டன் நகரில் மிகவும் பிரபலமான நைட் கிளப்பாகத் திகழ்ந்தது கோகனட் க்ரோவ் என்னும் க்ளப்.

 

இதில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோரமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் காரணம் அதிகாரபூர்வமாக இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் பல ஊகங்கள் இது பற்றி உண்டு. தப்பான வயரிங் தான் இதற்குக் காரணம் என்றும் ஒரு பல்பை மாற்றும் போது ஏற்பட்ட மின்கசிவினால் இந்த மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது என்றும் சிலர் கூறுவர்.

 

தீ விபத்து ஏற்பட்ட நாளில் அதிலிருந்த ஹாலில் அதில் இருக்கக் கூடிய நபர்களுக்கு மேல் மிகவும் அதிகமாகக் கூட்டம் இருந்தது. ஹாலின் பக்கவாட்டில் கதவுகள் இருந்த போதும் அவை வெளிப்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. ஆகவே உள்ளிருப்போர் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

 

இன்னொரு காரணம் தீ பற்றிய் எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அவசர வழி வழியாக அனைவரும் தப்ப முயன்றனர்.

 

ஆனால் கிளப்பில் இருந்த ஒரு முட்டாள் அவசர வழி கதவுகளைத் திறக்க முடியாதபடி அடைத்து விட்டான். அதன் காரணம் தீ என்ற சாக்கில் கிளப்பிற்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் எல்லோரும் ஓடி விட்டால் என்ன செய்வது என்று அவன் முட்டாள்தனமாக எண்ணியதே காரணம்.

ஹாலில் இருந்தவர்களில் 492 பேர்கள் தீயினால் கருகி மாண்டனர். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து இது தான்.

 

(28-11-2017 அன்று நடந்த) இதன் 75வது நினைவு தினத்தை ஒட்டி  இந்த ஹாலில் தீ விபத்தில் அகப்பட்டும் கூட அதிர்ஷ்டவசமாகத் தப்பி மீண்ட 91 வயதான மார்ஷல் கோல் என்பவர் இதைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுகையில், “கோரமான அந்த விபத்தில் பிழைத்து மீண்டதிலிருந்து எங்கு போனாலும் முதலில் வெளியேறும் வழிகள் எங்கு உள்ளன கதவுகள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்வதைத் தவறாமல் செய்வது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது” என்றார்.

இந்தத் தீ விபத்தின் கோரமான இழப்பு ஒரு புறம் இருக்க, இதனால் மூன்று பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.

600 பேர்கள் இருக்கக் கூடிய ஹாலில் ஆயிரம் பேருக்கு மேல் அன்று குழுமி இருந்தவர்களில் பெரும்பாலோர் தம்பதிகளாக ஜோடி ஜோடியாக வந்திருந்தனர்.

திடீரென்று தீப்பொறிகள் தென்பட்டன. அது என்னவென்று உணருவதற்கு முன்னர் ஹாலே தீ ஜுவாலைகளால் பற்றி எரிய ஆரம்பித்தது.

 

492 பேர் இறந்ததோடு 150 பேர் தீக்காயத்தினால் பீடிக்கப்பட்டனர். போஸ்டன் சிடி ஹாஸ்பிடலில் தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 300 பேர் அட்மிட் செய்யப்பட்டனர். மசாசுசெட்ஸ் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு இன்னொரு நூறு பேர் எடுத்துச் செல்லப்பட்டனர்.

 

அங்கிருந்த பிளாஸ்டிக் சர்ஜன் ப்ராட்ஃபோர்ட் கானான் (Bradford Cannon) என்பவர் தீக்காயங்களுக்கு ஒரு நவீன சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக தீக்காயங்களுக்கு டைகள் மற்றும் டேனிக் ஆசிட் ஆகியவையே உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். அதற்கு பதில் அவர் காஸ்  (gauze)-  உடன்  பெட்ரோலியம் ஜெல்லியை போரிக் ஆசிட் மீது தடவி அதைப் பயன்படுத்தினார். அவர்கள் தீயினால் வெந்திருந்த சதைப் பகுதிகளை அகற்றி தோலை ஒட்டும் புது முறையைக் கையாண்டார். கானான் இந்த சிகிச்சை முறையை பிலடெல்பியாவிலும் பின்னர் வேலி ஃபோர்ஜ் ஜெனரல் ஹாஸ்பிடலில் கையாண்டார்.

 

அது மட்டுமின்றி அந்த 500 பேர்களும் தவித்த தவிப்பு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தது. அந்த வழிமுறைகள் உலகெங்கும் இன்று தீ விபத்துக் காயம் ஏற்பட்டவரிடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இந்த நவீன சிகிச்சை முறையால் பிற்காலத்தில் நலம் அடைந்தனர்.

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது கண்டுபிடிப்பு உளவியல் ரீதியில் அமைந்தது.

இந்தப் பெரிய தீ விபத்தில் உயிர் பிழைத்தோரையும் , போரில் தீக்காயம் பட்ட இராணுவத்தினரையும் உளவியலாளர் எரிச் லிண்டிமான் (Erich Lindemann) முறையாக பேட்டி எடுத்து விவரங்களைச் சேகரித்தார். இப்படி ஒரு துயரமான சம்பவத்தில் அகப்பட்டோரின் துக்கம் எப்படி இருக்கும், அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தான் மணமுடித்திருந்த ஒரு இளம் வயதுப் பெண் தன் கணவனை அந்தத் தீவிபத்தில் இழந்திருந்தார். அந்தக் கணவன் அவளுடன் ஒரு சண்டையைப் போட்டு விட்டு அந்த கிளப்புக்குச் சென்றிருந்தான். இன்னொருவரோ தன் இளம் வயது மனைவியை அந்த விபத்தில் இழந்திருந்தார். அவளைக் காப்பாற்றுமுன்னர் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

இப்படிப் பல துயரகரமான நிகழ்வுகளையும் அதையொட்டிய மனித உணர்வுகளையும் தொகுத்த லிண்டிமான் உளவியல் துறையில் துக்கம் அடைந்தோருக்கான உளவியல் சிகிச்சை முறையைக் கண்டார். அதற்கு இந்த தீ விபத்து தான் வழி வகுத்தது.

 

மூன்றாவது கண்டுபிடிப்பாக ஒரு  விபத்தில் காயம்பட்டோர்  அது நடந்து முடிந்தவுடன் எப்படி தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பதை தீவிபத்தில் உயிர்பிழைத்தவர்களைச் சந்தித்து அலெக்ஸாண்ரா ஆட்லர் (Alexandra Adler) என்ற பெண்மணி ஒரு ஆய்வு நடத்தினார். இப்படிப்பட்ட ஒரு ஆய்வை முதலில் செய்த உளவியலாளர் இவர் தான். கோகனட் கிளப் தீ விபத்தை வைத்து இவர் செய்த இவரது உளவியல் ஆய்வு பெரிய மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆய்வுப் பேப்பர்களைக் கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டில் டாக்டர் ஆட்லர் மறைந்தார். அவர் மறைவை ஒட்டிய இரங்கல் செய்தியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் உல்ப்கேங் சாக்ஸன் என்ற நிபுணர், “490 பேருக்கு மேல் கொல்லப்பட்ட விபத்தில் அங்கிருந்து மீண்ட பலருக்கு மூளை நிரந்தரமாக சேதம் அடைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் சோதனை செய்த ஆட்லர் மன அழுத்தமும், கவலையும் எப்படி ஒரு விபத்தைத் தொடர்ந்து பலரையும் நிரந்தரமாக பாதிக்கிறது, அதை எப்படிப் போக்குவது என்பதையும் ஆராய்ந்தார். அதன் பலனாகவே இரண்டாம் உலகப் போரில் காயம்பட்டிருந்த பல வீரர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடிந்தது” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

 

 

இந்த மாபெரும் தீ விபத்து உலகினருக்குத் தரும் செய்தி என்ன?

ஜனசந்தடி அல்லது கூட்டம் அதிகமுள்ள ஒரு இடத்திற்குப் போகும் போது அங்கு எங்கெல்லாம் வெளியேறும் வழிகள் உள்ளன, எப்படி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில், இது பெண்களையும், குழந்தைகளையும், முதியோரையும் தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து செல்வோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்பதைச் சொல்ல தேவையே இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உடை விஷயத்தில் எப்போதுமே அக்கறை இல்லை.

 

அவர் மனைவிக்கு இதில் பெரிதும் வருத்தம்.

நன்றாக உடை உடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வார்.

 

“எதற்காக? என்னை எல்லோருக்கும் அங்கே நன்றாகத் தெரியும்” என்று சொல்லி மனைவியின் வாயை மூடி விடுவார் ஐன்ஸ்டீன்.

 

ஒரு சமயம் பெரிய மாநாட்டிற்கு மனைவியுடன் அவர் செல்ல வேண்டியிருந்தது.

 

வழக்கம் போல அவர் மனைவி, “நன்றாக உடை உடுத்திக் கொண்டு போக வேண்டும்” என்று ஆரம்பித்தார்.

வழக்கம் போல ஐன்ஸ்டீனும்,” எதற்காக? அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரியும்” என்றார்.

உடனே அவர் மனைவி, “ என்னை அங்கே யாருக்கும் தெரியாதே!” என்று பதில் சொன்னார்!

 

ஐன்ஸ்டீன் சிரித்தார். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டார்!

***

 

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை! (Post No4382)

Written by S.NAGARAJAN

 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4382

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

10-11-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில்  வெளியாகியுள்ள  கட்டுரை

 

 

 

வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!

 

 ச.நாகராஜன்

 

 

“ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்றால், அதைச் செய்து விடுவது தான்! -அமிலியா எர்ஹார்ட்

Amelia Earhart

 

   உலகில் முதன் முதலாக ஒரு விமானத்தை ஓட்டிப் பல சாகஸங்களைச் செய்த துணிச்சல்காரப் பெண்மணியை உலகம் அவ்வளவாக அறிந்திருக்காது. அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது உட்பட ஏராளமான சாகஸங்களை நிகழ்த்திய அமெரிக்கப் பெண்மயான அமிலியா எர்ஹார்ட் (பிறப்பு 24, ஜூலை 1897 மர்ம மறைவு 2, ஜூலை, 1937 – Amelia Earhart) மங்கையர் சரித்திரத்தில் மகோன்னதமான இடத்தைப் பிடிப்பவராவார்

 

 

அமிலியா மேரி எர்ஹார்ட் அமெரிக்காவில் கான்சாஸில் பிறந்தவர். இளமையிலிருந்தே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். இளமையில் பேஸ்கட் பால் விளையாடுவார். ஆட்டோ ரிப்பேர் வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் கல்லூரியிலும் படித்தார்.

முதல் உலகப்போரில் ரெட் கிரஸில் இணைந்து நர்ஸாகப் பணி புரிந்தார். கனடாவில் டோரொண்டோவில் ராயல் ஃப்ளையிங் கிளப்பில் விமானங்கள் பறப்பதை வேடிக்கை பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

முதல் உலகப் போர் முடிந்தவுடன் அமரிக்கா திரும்பி நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  மருத்துவ ஆரம்பப் படிப்பில் சேர்ந்தார்.

கலிபோர்னியாவில் 1920இல் டிசம்பர் மாதம் புகழ் பெற்ற பைலட்டான ஃபிராங்க் ஹாக்ஸ் என்பவருடன் கூடச் சேர்ந்து அவர் விமானத்தில் பறந்தார்.

 

 

1921, ஜனவரி மாதம் நேதா ஸ்னூக் என்ற பெண் பயிற்சியாளரிடம் விமானத்தை ஓட்ட கற்றுக் கொண்டார்.

இதற்காகப் பணம் கட்ட லாஸ் ஏஞ்சலஸில் டெலிபோன் கம்பெனியில் குமாஸ்தாவாக அவர் பணி புரிந்தார்.

பயிற்சி முடிந்தவுடன் தனக்கென சொந்தமாக ஒரு பழைய விமானத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு ‘கேனரிஎன்று செல்லப் பெயரையும் சூட்டினார்.

 

 

டிசம்பர் 1921இல் பறப்பதற்கான லைசென்ஸை பெற்றவுடன் தைரியமாக வானில் பறக்க ஆரம்பித்தார்.

1922இல் 14000 அடி உயரத்தில் பறந்த முதல் பெண்மணி என்ற சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினார். 1932இல் அட்லாண்டிக்கில் தனியாகப் பறந்து அதைக் கடந்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார். அவர் இந்த சாதனையை நிகழ்த்தியவுடன் அமெரிக்காவில் காங்கிரஸ் அவருக்கு  ‘ஃபிளையிங் கிராஸ் என்ற அரிய விருதைக் கொடுத்து கௌரவித்தது.

 

 

அதே ஆண்டில் தொடர்ந்து 19 மணி நேரம் இடைவிடாது பறந்து, லாஸ் ஏஞ்சலஸில் கிளம்பியவர் நியு ஜெர்ஸியில் வந்து இறங்கி புது சாதனையைப் படைத்தார்.

1935இல் ஹவாயிலிருந்து தனியாகக் கிளம்பி அமெரிக்காவை அடைந்து அதிலும் முதலாவது பெண்மணியாகத் திகழ்ந்து புகழ் பெற்றார்.

 

இதனாலெல்லாம் உலகெங்கும் வாழும் மங்கையர் மனதில் ஒரு உற்சாகமும் ஆர்வமும் ஏற்பட்டது. ‘நைண்டி நைன்ஸ் (Ninety Nines)  என்ற விமான ரேஸை நடத்தும் நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார்.

 

தொடர்ந்த சாகஸமே அவரின் இறுதிக்குக் காரணமாக அமைந்தது.

 

1937ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்திலிருந்து உலகத்தைச் சுற்றுவது என்ற முடிவில் தன் பயணத்தைத் தொடங்கினார்.

 

 

அவருக்கு வழி காட்ட ப்ரெட் நூனன் என்பவர் உடன் சென்றார். மியாமி வழியாக தென் அமெரிக்கா சென்று பின்னர் அட்லாண்டிக்கிலிருந்து ஆப்பிரிக்கா சென்று இந்தியா வழியே தென்கிழக்கு ஆசியாவை அடைந்தார் அமிலியா.

ஜூன் 29ஆம் தேதி அவர்கள் நியூ கினியாவில் லீ என்ற இடத்தை அடைந்த போது 22000 மைல்கள் பறந்திருந்தனர். புறப்பட்ட இடத்தை அடைய இன்னும் 7000 மைல்கள் தான் பாக்கி. லீயிலிருந்து ஜூலை இரண்டாம் தேதி அமிலியாவும் நூனனும் கிளம்பினர். பிறகு அந்த இருவரையும் காணோம்.

உலகமே பரபரப்படைந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் பிரம்மாண்டமான ஒரு தேடுதல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தார். இரண்டு வார காலம் இந்தத் தேடுதல் பணி நடந்தது. ஆனால் பயனில்லை.

 

 

1937, ஜூலை 19ஆம் தேதி அவர்களைக் கடலில் மறைந்தவர்களாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அமிலியாவின் மர்மமான மறைவுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்பட்டன.

 

1937லிருந்து 2017 முடிய இந்த எண்பது ஆண்டுகளில் பல திடுக்கிடும் தகவல்களை அவரது மர்ம மறைவு பற்றி ஆராய்வோர் தந்து கொண்டே இருக்கின்றனர்.

‘விழுந்து மூழ்கிய கொள்கை என்பதை வலியுறுத்துவோர் அமிலியாவின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய்விட்டதால் ஹௌலேண்ட் ஐலேண்ட் அருகே அவர்கள் விமானம் கீழே விழுந்து மூழ்கியிருக்கலாம் என்கிறனர். கடந்த 15 ஆண்டுகாலமாக அவர்கள் பயணித்த விமானத்தின் சிதிலமடைந்த பாகம் ஏதேனும் கிடைக்குமா என்ற ஆராய்ச்சிக்காக ஹை டெக் சோனார் தொழில்நுட்பமும் ஆழ்கடல் ரொபாட்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பயணித்த ‘எலெக்ட்ரா விமானத்தின் எந்த ஒரு பகுதியும் பசிபிக் பிராந்தியத்தில் கிடைக்கவில்லை.

     

 

 

     பன்னாட்டு விமான மீட்பு வரலாற்றுக் குழு தனது ஆய்வில் அவர்கள் ஒருவேளை ஹௌலேண்ட் ஐலேண்டிலிருந்து சுமார் 350 மைல் தள்ளில் உள்ள கார்ட்னர் ஐலேண்டில் இறங்கி இருக்கலாம் என்ற கொள்கையை முன் வைக்கின்றனர். யாருமே குடியிருக்காத அந்தப் பகுதியிலும் விமானங்கள் பறந்து ஆய்வை நடத்தின. ஆனால் பலனில்லை. ஒருவேளை அவர்கள் அந்தத் தீவில் தங்கி பசியால் வாடி இறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

1988ஆம் ஆண்டிலிருந்து பல முறை இந்தத் தீவிற்குப் பலரும் சென்று இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தனர்.

ஜூன், 2017இல், அங்கு தொடங்கி நடத்தப்படும் ஆய்வில் ஏதேனும் மனித எலும்புக் கூடுகள் கிடைக்குமா என்று பார்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

 

ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் பெண்கள் அணிந்து வந்த மாடல் செருப்பு போல ஒரு செருப்பு அந்த ஆய்வில் கிடைத்தது. பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன குடுவை ஒன்றும் கிடைத்தது. மனித  விரல் ஒன்றும் கிடைத்தது.

 

இது தவிர இந்த மர்மம் பற்றி, வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன.

 

 

சிலர் அவர்களை ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டனர் என்கின்றனர். இன்னும் சிலரோ அமிலியா ரூஸ்வெல்ட் நிர்வாகத்தில் உளவாளியாகப் பயன்படுத்தப்பட்டதால் அவர் இறந்தது போல ஒரு நாடகம் நடத்தப்பட்டு ‘இறந்து போன இருவருக்கும் புதுப் பெயர்கள் வழங்கப்பட்டு அவர்கள் எங்கோ வாழ்கின்றனர் என்கின்றனர்.

   

 

  ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தன் ஆய்வில் சேர்த்துள்ள லெஸ் கின்னி என்பவர், கப்பல் ஒன்று உடைந்த விமானத்தை ‘டோ செய்து இழுத்துக் கொண்டு செல்வது ஒரு போட்டோவில் காணப்படுகிறது என்றும் அந்தக்  கப்பலில் காணப்படும் இருவர் அமிலியா மற்றும் நூனன் போல இருக்கிறது என்றும் கூறுகிறார்.

 

 

இந்த போட்டோ உண்மையான ஒன்று தானா என்பதை ஆய்வு செய்த ஃபோரன்ஸிக் நிபுணரான டக் கார்னர், “சந்தேகமே இல்லை; இது உண்மையான போட்டோ தான் என்கிறார்.

‘சரி, கப்பல் யாருடையது என்பதை ஆராய்ந்த அவர்கள் அது கோஷு மாரு என்ற ஜப்பானியக் கப்பல் என்று கண்டு பிடித்துள்ளனர்.

 

அமிலியாவும் நூனனும் ஜப்பானுக்குக் கடத்தப்பட்டனரா? அவர்கள் ஜப்பானில் என்ன ஆனார்கள்?

மர்மத்தைத் துலங்கிக் கொள்ள ஆய்வு தொடர்கிறது.

இதில் ஆர்வம் உள்ள உலக மக்கள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

உலக சாதனை படைத்த மங்கையை அப்படியே விட்டு விடலாமா என்ன?என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேணடாமா?

 

 

தாய்க்குலம் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் பல்வேறு ஆய்வுகளைக் கவனித்து வருகின்றனர். மர்மம் தொடர்வது போல ஆய்வுகளும் தொடர்கின்றன!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மறைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. என்றாலும் கூட அவர் அன்றாட செய்திகளில் அவ்வப்பொழுது முதலிடம் வகிக்கிறார். சமீபத்தில் விஞ்ஞானிகள் குழு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர். அது கிராவிடேஷனல் அலைகளைப் பற்றி அவர் முன்னமேயே கூறி இருந்ததை மெய் என்று நிரூபித்தது.

 

 

   இப்போது அவர் தன் கைப்பட, ‘வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எழுதிய அறிவுரைகளை ஏலம் போட்டதில் அது 18 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகி இருக்கிறது. (ஒரு டாலரின் இன்றைய மதிப்பு ரூபாய் 65)

 

ஜப்பானில் 1922இல் அவர் ஒரு சொற்பொழிவை ஆற்றச் சென்றிருந்தார். நோபல் பரிசு பெற்ற அவரது சொற்பொழிவு நான்கு  மணி நேரம் நடந்தது. 2500 பேர் அதைக் கேட்டனர். அங்கு தங்கி இருந்த போது ஒரு டெலிவரி பாய் அவரிடம் ஒரு செய்தியைக் கொடுக்கச் சென்ற போது அவனுக்கு டிப்ஸ் கொடுக்க அவர் விரும்பினார். ஆனால் போதுமான சில்லறை இல்லை. ஆகவே தன் கைப்பட அவர் குறிப்புகளை எழுதினார். அது தான் இன்று உலக பிரசித்தி பெற்ற ‘சந்தோஷக் குறிப்புகள் ஆகி விட்டன. ஒரு குறிப்பு ஹோட்டல் பேப்பரிலும் இன்னொரு குறிப்பு ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதப்பட்டன.

 ‘இதற்கு என்றேனும் ஒரு நாள் கொஞ்சம் மதிப்பு கிடைக்கும் என்று கூறியவாறே அவற்றை டெலிவரி பாயிடம் அவர் கொடுத்தார்.

 

அதில் ஒரு குறிப்பு இது: எப்போதும் அமைதியற்று வெற்றியை அடைய விழைவதை விட அமைதியான எளிய வாழ்க்கை சந்தோஷத்தைத் தரும் ( “A calm and modest life brings more happiness than the pursuit of success combined with constant restlessness.”)

இன்னொரு குறிப்பு இது : மனம் இருந்தால் மார்க்கம் உண்டு   ( “Where there is a will, there is a way.”)

 

ஐன்ஸ்டீன் ஆரூடம் கூறியது போலவே அவற்றின் மதிப்பு இன்று பதினோருகோடியே எழுபது லட்சம் ரூபாய் ஆகி விட்டிருக்கிறது.

பெரியோர் வாக்கு பொய்க்காது!

***

 

உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ! (Post No.4091)

Written by S NAGARAJAN

 

Date: 18 July 2017

 

Time uploaded in London:- 7-13 am

 

 

Post No.4091

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

அறிவியல் துளிகள் தொடர் கடந்த பல ஆண்டுகளாக பாக்யா வார இதழில் வந்து கொண்டிருக்கிறது. 7-7-17இல் பாக்யா இதழ் 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய பொலிவுடன் இந்த இதழ் முதல் பாக்யா வெளிவருகிறது.

ஏழாம் ஆண்டின் 20வது கட்டுரையாக வெளியாகியுள்ள கட்டுரை இதோ:-

உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ!

.நாகராஜன்

 

“கூகிளின் ஆல்ஃபா கோ என்ற புரோகிராம் ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் பேர் விளையாடும் போர்டு விளையாட்டை அவர்கள் விளையாடும் அதே கணத்தில் நன்கு கவனித்து  மூன்று கோடி பொஸிஷன்களை கணித்துக் கொண்டு சமயத்திற்குத் தகுந்தபடி விளையாடுகிறது “- அறிவியல் தகவ்ல்

உலகின் அதி சிறந்த ரோபோ இருக்குமிடம் கொரியாவின் அட்வான்ஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கட்டிடத்தில்.

 

அதன் பெயர் ஹ்யூபோ! (Hubo) ரொபாட்டுகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து பார்த்தால் இது ஐந்தாம் தலைமுறை ரோபோவாகும். ஐந்து அடி உயரம் 200 பவுண்டு எடை. இலேசு ரக விமானத்தை உருவாக்கும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு   வெள்ளி போல ஜொலிக்கும் ஹ்யூமனாய்ட் தான் ஹ்யூபோ. அதற்கு இரண்டு கைகள்,இரண்டு கால்கள் உண்டு. தலைக்குப் பதிலாக  அதி நவீன லேஸர் தொழில்நுட்பம் அடங்கிய ஒரு காமராவும் உண்டு.ஒவ்வொரு கணத்திலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முப்பரிமாணத்தில் அறியும் சக்தி கொண்டது அது

 

ஹ்யூபோ நடக்கும். தேவையானால் முழங்கால் மண்டியிட்டு அமரும். அதற்கு விசேஷமான சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

உலகின் தலை சிறந்த ரொபாட் எது என்பதற்கான போட்டி ஒன்று 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோ பிரம்மாண்டமான தொகையான இருபது லட்சம் டாலர்கள். (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 64 ரூபாய்கள்)

இந்தப் போட்டியில் உலகின் பிரபல கல்வி நிறுவனமான கார்னீகி மெலான், எம் ஐ டி, ஆகியவற்றோடு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவின் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரியும் கலந்து கொண்டன.

 

போட்டி என்ன தெரியுமா?ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நடந்த ஒரு அணு உலை உருக ஆரம்பித்த போது நடந்ததைப் போல ஒரு காட்சியை உருவாக்க வேண்டும் என்பது தான். புகுஷிமா என்ற ஜப்பான் நகரில் நேர்ந்த அந்த அணுக்கசிவின் போது அணு உலையை மூடுவதற்கு முன்னர் அங்குள்ள எஞஜினியர்கள் தப்பிக்க வேண்டி இருந்தது. ரொபாட்டுகளே அங்கு நடந்த பேரழிவைப் பற்றியும் கதிரியக்க அளவு பற்றியும் மதிப்பீடு செய்தன.

இது போன்ற பேரழிவுச் சம்பவம் ஒன்று நடக்கும் போது  மனிதனைப் போல உள்ள ரொபாட்டே சரியாகச் செயல்படும் என்று அமெரிக்க தற்காப்பு ஆய்வு நிறுவனமான டர்பா என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜன்ஸி (The Advanced Research Projects Agency – DARPA) கருதியது. இது போன்ற சூழ்நிலையில் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை ரொபாட்டே செய்ய முடியும் என்பதால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த ரொபாட்டை வடிவமைப்போருக்குச் சிறந்த பரிசைத் தர அது கருதியது. அதனால் ஏற்பட்டதே இந்தப் போட்டி.

ரொபாட் இயலில் பெரும் நிபுணரான பேராசிரியர் ‘ஓ’ ரொபாட் எப்படி எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார். இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்.

 

ஒரு போர்க்களத்தில் அதைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டு செயல்பட வீடு விட்டால் அது ஒருவேளை நம்மையே கொன்று விடலாம். அதைச் சிந்திக்க விடாமல் வெறும் புரோகிராம் அடிப்படையில் சொன்னதை மட்டும் செய்யச் சொன்னால்,ரொபாட்டின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை பறித்ததாக ஆகி விடும்.

ஆகவே வலிமை வாய்ந்த ஒரு ரொபாட்டின் சிந்தனைத் திறன் அளவுடன் இருக்க வேண்டும் என்கிறார் ஓ. தென்கொரியாவின் கொடியை பின்னால் ஏந்திக்  கொண்டிருக்கும் ஹ்யூபோ செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளின் மீது சர்வ சாதாரணமாக ஏறுகிறது.

 

அதன் கேமரா, படியை ஸ்கேன் செய்கிறது. தவழும் சின்னக் குழந்தை போல அது ஒவ்வொரு படியாக ஜாக்கிரதையாக ஏறுகிறது.

மற்ற ரொபாட்டுகள் எல்லாம் கீழே விழுந்த நிலையில்  ஹ்யூபோ மட்டும் அனைத்துத் த்டைகளையும் வென்று முன்னேறியது ஹ்யூபோ ஜாக்கிரதையாக காரை ஓட்டுகிறது.எதிரே உள்ள சாலையை நன்கு ஸ்கேன் செய்கிறது.

கதவைத் திறக்கிறது. வால்வைத் திறந்து மூடுகிறது. இடிபாடுகளின் இடையே எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது.

 

காரிலிருந்து வெளியே வருவது மனிதர்களுக்கு சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் ஹ்யூபோவிற்கோ? அது இந்த விஷயத்தைப் பல கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு முதலில் தனது கைகளைத் தூக்குகிறது. காரின் பிரேம்களைக் கண்டு பிடிக்கிறது. அதைப் பிடித்துக் கொண்டு சரியான பிரஷருடன் தன் உடலைத் தூக்கிக் கொள்கிறது. பின்னர் வெளியே விழுந்து விடாமல் ஜாக்கிரதையாக வெளி வருகிறது.

 

எப்படி தென் கொரியா இப்படி செயற்கை அறிவிலும் ரொபாட் இயலிலும் முன்னேறி இருக்கிறது என்று கேட்டால் அதற்கு ஓ தரும் பதில் :’ நாங்கள் விஞ்ஞானத்தை நல்லதற்காகவே பயன்படுத்த நினைக்கிறோம். அதன் விளைவாகவே முன்னேறுகிறோம்” என்பது தான்.

செயற்கை அறிவிலும் அதன் பயன்பாட்டான ரொபாட் போன்றவற்றிலுல் உலகத் தலைநகராகத் திகழும் தென்கொரியா இன்னும் பல ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

 

இயந்திர அமைப்பில் இருக்கும் ரொபோவே நம்மை இப்படி அசத்துகிறது. இனி எதிர்காலத்தில் பேரழகிகளாகவும், பெரும் அழக்ன்களாகவும் வடிவமைப்பிலும் தோற்றத்திலும் உருவாகப் போகும் ரோபோக்கள் உணர்ச்சியையும் கொண்டிருந்தால் அதை உலகம் எப்படி எதிர் கொள்ளப் போகிறது.

மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் மண உறவு ஏற்படுமா அல்லது மன உறவு மட்டும் இருக்குமா? கேள்வி சுவாரசியாமானது தான்! பதிலைக் காலம் தான் சொல்ல வேண்டும்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் புகழேணியில் உச்சத்தில் இருந்ததால் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமானோர் விரும்பினர். இதனால் அவருக்கு இப்படிப்பட்டோரின் தொந்தரவு மிக அதிகமாக இருந்தது.

அவர் எது சொன்னாலும் அது வேத வாக்காக அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒரு முறை நடந்து செல்லும் போது பேச்சுவாக்கில் அவர் சொன்ன “God is subtle, but not malicious’ (கடவுள் நுட்பமானவர், தீய நோக்கம் கொண்டவரல்ல) என்ற வாக்கியம் அவரது     கணி தப் பிரிவில் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

அவர் தனது அருமையான தரைத் தளத்தில் இருந்த அலுவலகத்தைக் கைவிட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்குச் செல்ல நேர்ந்தது இதனால் தான்!

போவோர் வருவோர் எல்லாம் அவர அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்கள்.

அகதிகளாக வந்த கலைஞர்களின் நிதி உதவிக்காக அவர் சிலை போல மாடலிங் செய்ய வேண்டியிருந்தது. மணிக்கணக்காக அவர் சிலை போல் இருப்பார்.

ஒரு முறை நியூயார்க்கிலிருந்து பிரின்ஸ்டனுக்கு ரயிலில் அவர் சென்ற போது சக பயணி ஒருவர் அவரிடம் வந்து,”உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. நீங்கள் யார்?”என்று கேட்டார்.

ஐன்ஸ்டீன் உடனே அவரிடம,” நான் ஒரு மாடலிங் ஆர்டிஸ்ட். அதனால் என்னைப் பார்த்திருக்கக் கூடும்” என்றார்.

“அது தானே பார்த்தேன். மாடலிங் ஆர்டிஸ்டா?” என்று கூறிய அவர் மேற்கொண்டு தொந்தரவு செய்யாமல் அவரிடமிருந்து போய் விட்டார்.

ஐன்ஸ்டீனுக்கு ஒரே மகிழ்ச்சி – மாடலிங் ஆர்டிஸ்ட் என்று சொன்னதால் தொந்தரவு இல்லையே என்று!

***

 

 

சந்திரனில் ஒரு கிராமம்!(Post No 2812)

moon value

Written  BY S NAGARAJAN

Date: 15 May 2016

 

Post No. 2812

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 13-5-16  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

 

சந்திரனில் ஒரு கிராமம்!

ச.நாகராஜன்

 

 

“சந்திரனைக் குறி வையுங்கள். ஒருவேளை தவறி விட்டாலும் ஒரு நட்சத்திரத்தை அடையலாம்.”

டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன்

 

 

உல்கெங்கும் சந்திரனில் ஒரு கிராமம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2016 ஏப்ரல்  மாத ஆரம்பத்தில் 32வது விண்வெளி கருத்தரங்கம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் எப்படி இந்த கிராம திட்டத்தை நிறைவேற்றுவது என்பதை ஆர்வலர்கள் தீவிரமாகப் பரிசீலித்தனர்.

 

 

நாஸாவோ செவ்வாய்ப் பயணத்தில் தீவிர ஈடுபாட்டைக் காண்பிப்பதால் சந்திரனில் கிராமம் அமைக்கும் திட்டத்திற்கு அவ்வளவாக ஆதர்வு காட்டவில்லை.

 

 

ஆனால் சந்திரனில் ஒரு தளத்தை முதலில் அமைத்து விட்டால் அங்கிருந்து செவ்வாய்க்குச் செல்லும் பயணம் சுலபமாகும் என்று அங்கு குழுமியிருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கருத்தை முன் வைத்தனர்.இரண்டாயிரத்து இருபதுகளில் இது முடிந்து விட்டால் இரண்டாயிரத்து முப்பதுகளில் செவ்வாய்ப் பயணம் உருவாகி விடும் என்பது அவர்களின் கணிப்பு.

இதற்கிடையில் இப்போது வெளியாகி உலகில் பரபரப்பூட்டை ஊட்டும் ஒரு புத்தகமாக பால் ஸ்புடிஸ் என்ப்வர் எழுதிய ‘தி வால்யூ ஆஃப்  தி மூன்’ என்ற புத்தகம் அமைகிறது.

 

 

ஸ்புடிஸ் சந்திரனைப் பற்றிய ஒரு ஸ்பெஷலிஸ்ட். முதலில் சந்திரனில் மனித குலம் குடியேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் விஞ்ஞானி.

ரொபாட்டுகளையும் மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி அங்கிருக்கும் நீர் உள்ளிட்ட அனைத்து ஆதார வளங்களையும் பயன்படுத்தி அற்புதமான ஒரு குடியிருப்பை அமைத்து விடலாம் என்பது அவரது ஆலோசனை.

 

 

இந்தியாவின் சந்திராயன் – 1 திட்டத்தை அவர் வெகுவாக ஆதரிக்கிறார்.

 

நாஸாவின் செவ்வாய் மோகத்தில் அவருக்கு சந்தேகம்! சமீப காலத்தில் நிச்சயமாக செவ்வாய்க்குச் செல்ல  முடியாது; அப்படியே போனாலும் அது மனிதனின் கால் பதிக்கும் பயணமாகவே அமையும். ஆனால் சந்திரன் அருகில்  இருக்கும் கிரகம். அதில் காலனி ஏற்படுத்துவது என்பது சுலபம் என்கிறார் அவர்.

 

 

சந்திரனில் நீர் இருப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தப் பனிக்கட்டி நீரைப் பயன்படுத்துவதோடு சந்திரனில் எப்போதுமே வெளிச்சமாக இருக்கும் பகுதியைப் பயன்படுத்தினால் சூரிய ஒளி பிரதேசத்தில் சரியான தளம் ஒன்றை அமைக்க முடியும். அங்கிருந்து மனிதர்களின் சந்திரனுக்கும் பூமிக்குமான பயணம் சுலபமாகும், சாடலைட்டுகளை சர்வீஸ் செயவதும் சுலபம். இது இன்னும் தொலைதூரப் பயணங்களுக்கு வழி வகுத்து அப்பயணங்களை எளிதாக்கும் என்று விவரமாக அவர் விளக்குகிறார்.

 

 

இந்த திட்டத்திற்கு 2011இல் உத்தேசிக்கப்பட்ட செலவு சுமார் 88 பில்லியன் டாலராகும் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

இப்போது கொஞ்சம் கூட செலவாகும்.

ஆனால் சந்திர தளத்தை அமைத்து விட்டால் டெலி ஆபரேடட் ரொபாட்டுகள் அனைத்து வேலைகளையும் அங்கு செய்து மனிதர்கள் வாழத் தக்க ஒரு கிராமத்தை உருவாக்கி விடும். சந்திரனில் தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏராளமான காரணங்கள் உள்ளன.

 

முதலில் தளம் அமைக்கும் தேசத்தின் கௌரவம் உயரும். அறிவியல் புதிய பரிமாணத்தை எட்டும். வணிகம் உயரும். சந்திர பயணங்கள் ஏற்பட்டு கிரகங்களுக்கு இடையேயான பயணம் ஆரம்பிக்கும்.

 

 

 

1972இலிருந்து ஒருவரும் சந்திரனுக்குச் செல்லவில்லை. இரண்டாயிர்த்து இருபதுகளிலிருந்து இந்த நிலை மாறும். இப்படி ஒரு சந்திர கிராமம் அமைய வேண்டுமெனில் மேலும் பல கருத்தரங்கங்கள் தேவை. இதை ஜாம் செஷன் என்று அழைக்கின்றனர்.

 

ஆனால் இப்படிப்பட்ட தளம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட ப்ல நாடுகளும் விரும்புகின்றன. அனைத்து நாடுகளும் இந்த திட்டத்தில் இணைந்தால் திட்டம் வெற்றி பெறும்.

 

 

யூரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸியின் டைரக்டராக 2015இல் பொறுப்பெற்றவுடன் ஜோஹன் டயட்ரிச் வோர்னர்  இதை வலியுறுத்தினார்.

 

சந்திர கான்க்ரீட்டைக் கொண்டு பாறைகள் உள்ள பகுதியில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு கிராமம் அமைக்கலாம். கிராமம் என்றால் ஒரு சர்ச், ஒரு டவுன் ஹால், வீடுகள் என்று அர்த்தமில்லை. ரொபாட்டுகள்  மற்றும் மனிதர்களின் செய்ல்பாட்டிற்கு உதவும் ஒரு தளம், அவ்வளவு தான்,

 

ஆனால் இதிலும் அபாயங்கள் இல்லாமல் இல்லை. சந்திரனின் உஷ்ணநிலை மாறுபாடு அபாரமாக இருக்கும். சூரிய கதிரியக்கம் வேறு அதிகம். அத்துடன் விண்கற்கள் மோதாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் மீறி நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றார் அவர்.

 

 

விண்வெளி வீரர்கள் சிறிது சிறிதாக அங்கு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றனர். ஓடுபாதையில் விண்கலத்திலேயே உருவாக்கப்பட்ட உணவுவகைகளை அவர்கள் சாப்பிடுவது உள்ளிட்ட பல முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

 

விண்வெளி கருத்தரங்கமும் சந்திர தளம் அமைப்பதற்கு ஆதரவாக வெளியாகியுள்ள புதிய புத்தகமும் நல்ல முயற்சிக்கான ஆரம்பம் என்று சந்திரப் பிரியர்கள் கருதுகின்றனர்.

 

einstein

 

அறிவியல் அறிஞர்கள் வாழ்வில .. ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க சிறந்த ஒரு மனிதரும் கூட என்று அவரது வாழ்க்கைச் சமபவங்கள் பல நிரூபித்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இது:

 

1903ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார் மேரி க்யூரி. (தோற்றம் 7-11-1867 மறைவு 4-7-1934). அவரது கணவரான பியரியுடன் இணைந்து இப்பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.

1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் அவர் கணவர் அகால மரணம் அடைய அவர் விதவையானார். பெரும் துக்கம் அவரை ஆட்கொண்டது.

 

 

காலப்போக்கில் ஆறுதல் அடைந்த அவர்  மனம், பால் லாங்வின் (Paul Langevin) என்ற  இயற்பியல் பேராசிரியரின் மீது நாட்டம் கொண்டது. பால் தன் மனைவியிடமிருந்து ஒதுங்கித் தனித்து வாழ்ந்து வந்தார். ஏனெனில் அடிதடிக்குத் தயங்காதவர் அவர் மனைவி.

 

இருவரின் காதலும் வளர்ந்ததைப் பார்க்கச் சகிக்காத பாலின் மனைவி  அவரது வீட்டின் கதவை உடைத்து காதல் கடிதங்களைக் கைப்பற்ற ஒரு ஆள் மூலமாக ஏற்பாடு செய்தார். அந்தக் கடிதங்களை பத்திரிகைகளுக்கு வேறு அனுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வளவு தான், பத்திரிகைகள் மேரி க்யூரியைக் கண்டபடி சித்தரிக்க ஆரம்பித்தன.

 

 

 

இதனால் மிகவும் மன வருத்தமுற்றார் அவர். இதற்கிடையே ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அங்கே ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். மாநாட்டிலிருந்து திரும்பி பாரிஸுக்கு வந்த அவர் தன் வீட்டின் முன்னால் திரண்டிருந்த கோபம் கொண்ட கும்ப்லைக் கண்டு திடுக்கிட்டார். வீட்டை விட்டு தனது மகள்களுடன் வெளியேறிய அவர் தன் நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புக நேர்ந்தது.

 

இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் மிகுந்த வருத்தம் அடைந்தார். மேரி க்யூரியை அபூர்வமான அறிவு கொண்ட பிழையில்லாத நேர்மையான பெண்மணி என்று அவர் கணித்து வைத்திருந்தார். ஆனால் பத்திரிகைகளும் மஞ்சள் பத்திரிகைகளும் பல்வேறு விதமாக அவரைச் சித்தரித்து அவருக்கு களங்கத்தை உண்டாக்கின. குறிப்பாக அவரது அறிவியல் சாதனையை மட்டம் தட்ட வேண்டும் என்பதே அவற்றின் குறிக்கோளாக இருந்தது.

 

 

ஆறுதல் கடிதங்கள் எழுதுவதில் புகழ் பெற்ற ஐன்ஸ்டீன் அற்புதமான ஒரு கடிதத்தை மேரி க்யூரிக்கு எழுதி அதில் தனது உறுதியான ஆதரவை அவருக்குத் தெரிவித்தார். களங்கமே இல்லாத நபர் என்று மேரியை ஐன்ஸ்டீன் புகழ்ந்தார்.

 

“இந்தக் கடிதத்தை எழுதுவதைப் பார்த்துச் சிரிக்க வேண்டாம், ஆனால் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் கோபமடைகிறேன், உங்களின் அறிவையும் உங்கள் ஆற்றலையும் நேர்மையையும் பார்த்து நான் வியக்கிறேன். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் உங்களைச் சந்தித்ததில் பெருமைப் படுகிறேன். கண்டதை எல்லாம் படித்து குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கும் லாங்வினுக்கும் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நீண்ட கடிதம் ஒன்றை ஐன்ஸ்டீன் எழுதினார்.

 

இதைப் பார்த்த மேரி பெரும் ஆறுதலை அடைந்தார். தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை ‘ஐன்ஸ்டீன்: ஹிஸ் லைஃப் அண்ட் யுனிவர்ஸ்’ என்ற சமீபத்திய புத்தகத்தில்  வால்டர் ஐஸக்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

**********

 

ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள்!

usa e=mc2

Research Article No. 2033

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 1st August  2015

Time uploaded in London : – 13-25

(This is already published in English a few days back)

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்க ஒரு கணித வல்லுநர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டு அந்த கொள்கையை விளக்க முற்பட்டார். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த அறிஞர்கள் பொறுமை இழந்தனர்; ஒரு துணிச்சல்காரர் எழுந்து சொன்னார்:

“அன்பரே! ஐன்ஸ்டீனின் தத்துவம் 12 பேருக்கே புரிந்தது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பேசியதோ எங்களில் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆகவே நீவீர் ஐன்ஸ்டீனுக்கும் மேலான அறிஞரே!”

(பழிகரப்பு அங்கதம் வாழ்க)

Xxxxx

india eistein

நான் கணித மேதை அல்ல!!

சர் வில்லியம் ராதென்ஸ்டைன் என்ற ஓவியர் ஐன்ஸ்டீனின் ஓவியத்தை வரைந்தார். இதற்காக ஓவியருக்கு முன்னால் ஐன்ஸ்டீன் மணிக்கணக்கில் உட்கார வேண்டி வந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கொஞ்சமும் நேரத்தை வீணாக்க வில்லை. அவருடன் ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு மூலையில் சிவனே என்று அமர்ந்திருந்தார். அவ்வப்பொழுது ஐன்ஸ்டீன் சில கணிதப் புதிர்களைப் போடுவதும் அதை அவர் விடுவிப்பதுமாக இருந்தது.

ஓவியம் வரைந்த பின்னர் ராதென்ஸ்டைன், மெதுவாக ஐன்ஸ்டீனிடம் யார் அந்த ஆசாமி என்று கேட்டார். “அவரா? அவர்தான் என்னிடம் கணிதமேதையாக வேலை செய்பவர். எனக்கு கணக்கு வராது. ஆகையால் அவ்வப்பொழுது நான் போடும் கணக்குகளைச் சரிபார்க்க அவரை வைத்திருக்கிறேன்” என்றார். பணக்காரர்கள் எல்லோரும் கணக்குப்பிள்ளை ஒருவரை வேலைக்கு வைத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். விஞ்ஞானிகள் , “கணிதமேதைப்பிள்ளை”-களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்!!

Xxxx

E= mc2

ஐன்ஸ்டீனுக்கு சின்ன மூளை!!!

ஆங்கிலத்தில் யாருக்காவது சின்ன புத்தி இருந்தால் “பறவை அளவுக்குதான் மூளை— bird’s brain பேர்ட்ஸ் பிரயின் – என்று கேலி செய்வர். டால்பின் போன்ற பிராணிகளுக்கு மூளை மிகவும் பெரிதாகையால் அவை மிகவும் புத்திசாலிப் பிராணிகளாக இருக்கின்றன என்றும் படிக்கிறோம். ஆனால் வியப்பான செய்தி ஐன்ஸ்டீனுக்கு நம்மைப் போன்ற சாதாரண ஆட்களைவிட மூளை சிறியது என்பது அவர் இறந்தபின்னர் உடலைப் பரிசோதித்த போதுதான் தெரிந்தது!

ஐன்ஸ்டீனின் மூளையை 240 துண்டு போட்டு உலகெங்கிலும் உள்ள மூளையியல், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்தனர். அதை ஆரய்ந்ததில் ஒரு குறிப்பிட்ட (ப்ரீ Fராண்டல் கார்டெக்ஸ்) உறுப்பு அவருக்கு சிறப்பாக அமைந்திருந்ததைக் கண்டனர். இதுதான் அவரை உலகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியாக்கி இருக்கிறது ((The researchers noted a uniquely formed pre-frontal cortex and concluded that this would explain the kind of abstract thinking Einstein would have needed for his experiments on the nature of space and time – such as imagining riding alongside a beam of light.))

Xxxx

Albert_Einstein_1979_USSR_Stamp

மந்தமான ஐன்ஸ்டீன்!

ஐன்ஸ்டீன் சிறுவயதில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். தனியாகவே விளையாடுவார். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியன எல்லாம் வயதுக்கேற்றவாறு இல்லை .பேச்சே வரவில்லை. டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் இந்தக் குழந்தை – கொஞ்சம் மந்தம்தான் – என்று சொல்லிவிட்டார். பெற்றோர்களுக்கோ பெரும் கவலை.

ஒரு நாள் இரவுச் சாப்பாட்டிற்கு அனைவரும் மேஜையில் அமர்ந்தனர். திடீரென சின்னப் பயல் ஐன்ஸ்டீன், “அம்மா இந்த சூப்பு மிகவும் சூடாக இருக்கிறது” என்று தாய்மொழியில் (ஜெர்மன் மொழியில்) கத்தினான். பெற்றோர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பேரானந்தம்! ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

“அடப் பாவி மகனே! தேனே! பாலே! கற்கண்டே! என் அமுதமே! குஞ்சு மணியே! ஏனடா இவ்வளவு காலம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை?” என்று சொல்லி கட்டி அணைத்துக் கொண்டனர்.

சின்னப் பையன் ஐன்ஸ்டீன் சொன்னான்:

“இவ்வளவு காலம் வரை எல்லாம் சரியாக இருந்தது!” (அதனால் பேசத் தேவை எழவில்லை).

இதற்குப் பின்னர் இப்படி சிறு வயதில் வளர்ச்சி குன்றி, பிற்காலத்தில் பெரும் மேதைகளாக வரும் “நோய்க்கு” ஐன்ஸ்டீன் சிந்Dரோம் என்று பெயர் சூட்டினர் மருத்துவ வல்லுநர்கள்.

உங்கள் பிள்ளை கொஞ்சம் மந்தமாக இருந்தால் கவலைப்படாதீர்கள்” யார் அறிவார்? ஐன்ஸ்டீனை விடப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்யக் கூடும்!!!

Xxxxxx

mocambiqe

ஐன்ஸ்ட்டீனும் கடவுளும்

ஐன்ஸ்டீனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? அவரே சொன்ன பதில்:–

ஒரு சிறுவன் ஒரு நூலகத்தில் நுழைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறுவன் வியப்பான் இவ்வளவு புத்தகங்களையும் யார் எழுதியது? எவ்வளவு மொழிகள்? யாரோ இதை அழகாக ஒரு வரிசையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்தைப் பையன் வியப்பான். நூல்களை அடுக்கியவரோ, புத்தகத்திலுள்ள மொழிகளோ , அவைகளின் ஆசியரோ – யாரையும் அவனுக்குத் தெரியாது.

எவ்வளவு பெரிய அறிஞரானாலும் இப்படித்தான் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மர்மமான முறையில் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அற்புதமான, அபாரமான ஒரு வரிசைக் கிரமத்தில் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அதன் முழு விளக்கங்களும் நமக்குப் புரிவதில்லை”.

s_einstein-8

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்………………………

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்…….. என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. இது போல எல்விஸ் பிரஸ்லி என்ற பாடகர், மர்லின் மன்றோ என்ர நடிகை முதலான பத்துப் பேர் இறந்த பின்னரும் அவர்களின் பாடல், நடிப்பு, பெயர்கள், பிராண்டுகள் மூலம் ஏராளமான ராயல்டி தொகை கிடைக்கிறது. அதாவது உலகிலேயே பெரிய பத்து – செத்துப் போன—இப்போது பணம் உண்டாக்கும் பணக்காரர்கள்– என்று சொல்லலாம். இந்த பத்துப் பேரில் ஐன்ஸ்டீனும் ஒருவர். ஆண்டுக்கு அவர் பெயர் – புகழ் – மூலம் கிடைக்கும் வருவாய் இருபது மில்லியன் ( 2 கோடி) டாலர்கள்!!!

Einstein.stamp

–சுபம்–

ஐன்ஸ்டீன் ‘காப்பி’ அடித்தாரா?

india eistein

Article No.2024

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 28  July 2014

Time uploaded in London : 10-16 am

இயற்பியலில் (பௌதீகம்) மிகவும் முக்கியமான சார்பியல் கோட்பாட்டைக் (Theory of Relativity) கண்டுபிடித்து வெளியிட்டவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் அவருடைய பெயர் ‘ஒரு கல்’. ஐன் = ஒன்று, ஸ்டைன்=கல்/ஸ்டோன்.

இவருக்கு இப்பேற்பட்ட ஒரு கொள்கை மனதில் உதித்தது எப்படி? இந்து மதத்தின் தாக்கம் காரணமா?

எதையும் ஒருவர் கண்டுபிடித்தபின்னர் “எங்களுக்கு அன்றே தெரியும் இது” – என்று சொந்தம் கொண்டாடுவது நியாயம் இல்லைதான். இருந்த போதிலும் காரண காரியங்களை ஆராய்வதில் தவறே இல்லை.

காலம் (Concept of TIME) – என்பது பற்றி மேலை நாட்டினருக்கு, பழங் காலத்தில் கொஞ்சமும் விஞ்ஞான பூர்வ அணுகுமுறை கிடையாது.உலகமே கி.மு.4004–ல் தோன்றியது என்ற கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எழுதிவந்தனர்.

நாமோ உலகம் வியக்கும் கொள்கைகளைப் புராணத்தில் எழுதி வைத்தோம். ‘த்ரிகால ஞானிகள்’ என்பவர்கள் முக்காலத்தையும் பார்க்க வல்லவர்கள் என்று எடுத்துக் காட்டுகளுடன் காட்டினோம். ஒருவன் மலை உச்சியில் ஏறி நின்றுகொண்டு ஓடும் ஒரு நதியைப் பார்த்தால், எப்படி ஆற்றில் “சென்ற” தண்ணீர், “செல்லுகின்ற” தண்ணீர், “செல்லப்போகின்ற” தண்ணீர் ஆகிய மூன்றையும் பார்ப்பானோ அது போல, முனிவர்கள் காணமுடியும் என்று உணர்த்தினோம். ஆனால் நதிக்கரையில் நிற்பவனுக்கு “அப்பொழுது ஓடும் தண்ணீர்” (நிகழ்காலம் Present ) மட்டுமே தெரியும். இதே போல நாம் எப்படி டேப்ரிகார்டரில் அல்லது வீடியோ ரிகார்டரில் “பாஸ்ட் Fஆர்வர்ட்” Fast forward, “ரீவைண்ட் Rewind” செய்து எப்படி பார்க்கிறோமோ அது போல் சந்யாசிகளும் காலம் என்னும் விஷயத்தில் செய்ய முடியும் – என்றும் சொல்லிக் கொடுத்தோம்.

albert-ajnstajn-velika

பகவத் கீதையில் விஸ்வரூப தரிசனம் என்னும் அத்தியாயம் இதை மெய்ப்பிக்கிறது. நிகழப் போகும் நிகழ்ச்சிகளை அர்ஜுனனுக்கு முன்கூட்டியே காட்டிவிடுகிறான் கண்ணபிரான். இப்பொழுது கருந்துளைகள் (BLACKHOLE பிளாக் ஹோல்), ஜோடியான பிரபஞ்சம் ( PARALLEL UNIVERSE பாரல்லல் யுனிவெர்ஸ்) என்னும் விஷயங்கள் பற்றி வியப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. பகவத் கீதை விஸ்வரூப தர்சன யோகம் இவைகளை எல்லாம் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிளாக் ஹோலில் மஹத்தான வேகத்தில் எல்லாப் பொருட்களும் உள்ளே இழுகப்பட்டு மாயமாய் மறைவது போல விஸ்வரூபத்தின் வாயில் படைகள் அனைத்தும் மஹத்தான வேகத்தில் நுழைந்து மறைகின்றன.

இப்படி பகவத் கீதைக்கும், பிளாக் ஹோலுக்கும் முடிச்சுப் போடுவது, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம் அல்லது கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம். அது சரியல்ல. நான் தான் இப்படி முதலில் செய்வதாக நினைக்காதீர்கள். முதல் அணுகுண்டு வெடித்தைப் பார்த்தவுடன் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரும் பகவத் கீதை ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார் (ROBERT OPPENHEIMER, Theoretical Physicist); அந்த ஸ்லோகம் இதோ…….

“வானத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம் ஒரே நேரத்தில் நேரத்தில் உதிக்குமானால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ அவ்வளவு பிரகசத்தில் விஸ்வரூபம் தோன்றியது” (கீதை 11-12)

திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா

யதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ் –தஸ்ய மஹாத்.

இப்பொழுது ஐன்ஸ்டீன் – இந்துமத நூல்கள் தொடர்பு  பற்றிய இரண்டு தடயங்களைக் காண்போம்:

usa e=mc2

தடயம் 1

ரவீந்திரநாத் தாகூர் உள்பட பல இந்துமதக் கவிஞர்களையும் அறிஞர்களையும் ஐன்ஸ்டீன் சந்தித்து அளவளாவியிருக்கிறார். அவருடைய நூல்நிலையத்தில் ப்ரம்ம ஞான சபையினர் வெளியிட்ட ‘தி ஸீக்ரெட் டாக்ட்ரைன்’ (The Secret Doctrine by Theosophical Society) என்னும் புத்தகம் இருந்தது. இது இந்துமத நூல்களை அவர் விரும்பிப் படிக்கும் பழக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் இதில் சார்பியல் கோட்பாட்டுக்கான மூலம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் நமது நூல்களைப் படித்தால் சார்பியல் கொள்கையை உருவாக்கத் தேவைப்பட்ட Lateral Thinking “லேடரல் திங்கிங்”- ‘பன்முக சிந்தனை’ கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தடயம் 2

பெரியோர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் என்ற பழைய ஆங்கில நூல் ஒன்றில் ஐன்ஸ்டீன் சொன்னதாக உள்ள கதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய கதைத் தொகுப்பான கதாசரித் சாகரத்தில் இருக்கிறது. ஆக ஐன்ஸ்டீனுக்கு நம்முடைய சம்ஸ்கிருத நூல்கள் அத்துபடி என்பது இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும். இதோ அந்தக் கதையை ஐன்ஸ்டீன் பயன்படுத்தும் ஒரு சுவையான நிகழ்வு:-

ஐன்ஸ்ட்டினை விருந்துக்கு அழைத்த ஒருபெண்மணி, ‘சார்பியல் கோட்பாட்டை’ விளக்கும் படி ஐன்ஸ்டீனை கேட்டுகொண்டார். உடனே ஐன்ஸ்டீன் சொன்னார்:

“பெண்ணே! நான் ஒரு நாள், கண் தெரியாத ஒரு நண்பருடன் கடும் வெய்யிலில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு கொஞ்சம் குடிப்பதற்குப் பால் வேண்டுமே – என்றேன்.

அந்தக் குருடர் கேட்டார்: பாலா, அப்படியானால் என்ன?

அதான், வெள்ளை நிற திரவம்.

திரவம் எனக்குத் தெரியும். ஆனால் வெள்ளை என்றால் என்ன?

அதுதான்; கொக்கு என்னும் பறவையின் சிறகுகளின் நிறம்.

ஓ, கொக்கின் இறகுகள் எனக்குத் தெரியும். ஆனால் கொக்கு எப்படி இருக்கும்?

அதுதான், வளைந்த கழுத்துள்ள பறவை – என்றேன்.

கழுத்து எனக்குத் தெரியும். ஆனால் வளைந்த என்றால் புரியவில்லையே என்றார் அந்த அந்தகர்.

உங்கள் கைகளைக் கொடுங்கள் என்று சொல்லி, ஒரு கையை நன்கு நீட்டினேன். இதுதான் ‘நீட்ட வாக்கு’ என்று சொல்லிவிட்டு அவர் கையைக் கொஞ்சம் முறுக்கியும் மடக்கியும் வளைத்துக் காட்டி இப்படித்தான் இருக்கும் கொக்கின் வளைந்த கழுத்து என்றேன்.

ஓ! எனக்கு பால் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டது என்றார் அந்த அந்தகர்.

eistein quote

(உலகிலுள்ள எல்லாக் கதைகளுக்கும் மூலம் சம்ஸ்கிருதத்திலுள்ள, கதாசரித் சாகரம் (கதைக்கடல்) தான். இதிலிருந்தே அராபிய இரவுக் கதைகள் முதலியன வந்தன. பஞ்ச தந்திரக் கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக்கடல்) ஆகிய மூன்றும்தான் வெவ்வேறு உருவில் ‘காமிக்’ கதைப் புத்தகங்களாகவும் “ஹாரி பாட்டர்” கதைகளாகவும் வருகின்றன! சம்ஸ்கிருதம் படித்தோருக்கு எதுவுமே புதுமை இல்லை.

ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களுக்கும் கூட சம்ஸ்கிருதக் கதைகளே மூலம். ஆனால், அவர் சம்ஸ்கிருதத்தைக் காப்பி அடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் எப்படியெல்லாம், எல்லா விஷயக்களைப் பற்றியும் சிந்திக்க முடியுமோ அவை அத்தனையையும் சம்ஸ்கிருதத்தில் முன்னமேயே எழுதிவிட்டனர். பின்னர் வந்தவர்கள் அதில் ஒன்றிரண்டு விஷயங்களைப் பயன்படுத்தி தங்களுடைய – சொந்த சரக்குகளையும்- கற்பனையையும்—சொற்சிலம்பத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி புகழ் எய்தினர் என்றால் தவறில்லை.

அடுத்த ஒரு கட்டுரையில் ஐன்ஸ்டீன் வாழ்வில் நடந்த சில சுவைமிகு சம்பவங்களைத் தருவேன்.

–சுபம்—