PICTURE: ARJUNA IN INDONESIA
Translated by london swaminathan
Date: 29 April, 2016
Post No. 2766
Time uploaded in London :– 8-33
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அர்ஜுனன் உறுதி மொழி (பிரதிக்ஞா)
ந தைன்யம் – என்றும் பரிதாபத்துக்குரிய நிலையை அடையமட்டேன்
ந பலாயனம் – என்றும் புறமுதுகு காட்ட மாட்டேன் (போரில்).
“அர்ஜுனஸ்ய பிரதிக்ஞே த்வே ந தைன்யம் ந பலாயனம்”
Xxx
ஒரே சொல், ஒரே அம்பு
தத் ப்ரூஹி வசனம் தேவி ராக்ஞா யதபிகாங்க்ஷிதம்
கரிஷ்யே ப்ரதிக்ஞாதே ச ராமோ த்வினார்பிபாஷதே
வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம், 18-30
தேவி! நீ சொல். அரசனால் விரும்பப்பட்டராமன், இரண்டாவது முறை அம்பு தொடுப்பதுமில்லை; இரண்டாவது தடவை உறுதிமொழி செய்வதுமில்லை.
ராமனுக்கு சொல் ஒன்றே; அதிலிருந்து மாற மாட்டான். அதே போல அவன் ஒரு வில் விட்டால் போதும்; எதிரிகள் வீழ்வர். அதற்குப்பின், மற்றொரு அம்பைத் தொடுக்கும் தேவையே இராது.
த்வி: சரம் நாபிசந்தத்தே ராமோ த்விநார்பிபாஷதே— மஹாநாடகம்
இரண்டாவது அம்பு தொடுப்பது இல்லை; இரண்டாவது சொல் பேசுவதுமில்லை.
கைகேயி, சீதை, பரதன், அனுமன், சுக்ரீவன்,குகன், விபீஷணன் ஆகிய எல்லோருக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினான்.
இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன் (மனதாலும் மற்ற பெண்களை நினைக்க மாட்டேன் என்று சீதைக்கு வாக்குக் கொடுத்தான்). அதனால் தான் ராமர் இருக்கும் இடத்தில் காமன் இருக்க மாட்டான் என்பர் பெரியோர். மண், பெண், பொன் ஆசையைத் துறந்தவன் அவன். இலங்கையின் பொன்மயமான கோட்டைகளை லெட்சுமணன் புகழ்ந்த போது “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” (ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசி)
இந்த உறுதி மொழிகளால்தான் வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு ராமன் என்று உலகம் புகழ்கிறது.
xxx
முந்தைய கட்டுரை
ராமனுக்கு ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் !!!
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2 by ச.நாகராஜன்; Post No 1635; Dated 9th February 2015
–Subham—