கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்! (Post No.5698)

John Freeman, right, interviewing Carl Gustav

Written by S Nagarajan

Date: 25 November 2018

GMT Time uploaded in London –6- 30 am
Post No. 5698

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!

ச.நாகராஜன்

Jung’s regret over “I don’t need to believe, I know.”

வருடம் 1959. பி.பி.சி.யில் உள்ளோருக்கு ஒரே மகிழ்ச்சி. வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல உளவியலாளர் கார்ல் குஸ்டாவ் ஜங் ஒரு பேட்டி தர ஒத்துக் கொண்டார். ஸ்விட்ஸர்லாந்தில் ஜூரிச் நகரில் ஒரு ஏரிக்கரையின் அருகில் அமைந்திருந்த தனது வீட்டில் அமைதியாக அவர் அமர்ந்திருந்தார். பேட்டி எடுக்க வந்தவர் பிரபல பேட்டியாளர் ஜான் ஃப்ரீமேன்.

ஜான் ஃப்ரீமேன் (John Freeman) (பிறப்பு 19-2-1915; மறைவு 20-12-2014),

சாதாரண பேர்வழி இல்லை. அவர் ஒரு அரசியல்வாதி. ராஜதந்திரி. போர்வீரர். பேட்டி எடுப்பதில் நிபுணர். அவர் சர்ச்சிலை பேட்டி எடுத்த போது அவரைப் பாராட்டியவுடன் சர்ச்சில் கண்ணீர் விட்டுக் கலங்கினார். இந்தியாவின் ஹைகமிஷனராக ஜான் ஃப்ரீமேன் நியமிக்கப்பட்ட போது இந்தியா காமன்வெல்த்திலிருந்து விலகி விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்த போது அதை தனது சாதுரியத்தால் தவிர்க்க வைத்தவர். இங்கிலாந்தின் தூதுவராக அவர் வாஷிங்டனுக்கும் அனுப்பப்பட்டார்.

‘Face to Face’ என்ற அவரது நிகழ்ச்சி தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. இன்றும் கூட அந்த நிகழ்ச்சிகளை இணையதளத்தில் பார்க்கலாம். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், எடித் சிட்வெல், சிசில் பீடன், ஈவிலின் வா, ஹென்றி மூர், மார்டின் லூதர் கிங் என ஏராளமான பிரபலங்களை அவர் நேருக்கு நேர் பேட்டி எடுத்துப் புகழ் பெற்றார்.

99 வயது வரை வாழ்ந்து அவர் 20-12-2014இல் மறைந்தார்.

ஆனால் ஜங்குடன் அவர் எடுத்த பேட்டி மட்டும் தனித் தன்மை வாய்ந்த ஒன்றாக இருந்தது. அருமையான அந்தப் பேட்டியில் காமராவிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்த ஃப்ரீமேன், ஜங்கிடமிருந்து உண்மைகளைப் பெற, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தார்.

1959இல் ஜங் இந்தப் பேட்டியைத் தந்த போது அவருக்கு வயது 84. இதற்குப் பின்னர் 18 மாதங்களில் அவர் மறைந்தார். (ஜங் பிறப்பு 26-7-1875 மறைவு 6-6-1961).

பேட்டியின் போது நான்கு முறை ஜங், “that  is difficult to say” என்று கூறினார். அப்படி கேள்விகள் கூர்மையாக  இருந்தன. ஆனால் அந்த வயதிலும் அவரது புத்தி கூர்மை வியக்கத் தக்கதாக இருந்தது.

பேட்டி மிக விரிவாகப் போய்க் கொண்டிருந்த போது திடீரென்று ஃப்ரீமேன், “கடவுளை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.பேட்டி இப்படி அமைந்தது:

Freeman : And did you believe in God?

Jung: Oh! Yes.

Freeman : Do you now believe in God?

Jung : Now? (pause) Difficult to answer. I know. I don’t need to believe. I know.

பின்னர் பேட்டி தொடர்ந்தது.

நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஜங் பற்றி கடுமையான விமரிசனம் எழுந்தது. அவர் கிறிஸ்தவ இறையியல் கொள்கை பற்றிச் சற்று விமரிசித்தே வந்தவர். ஆகவே அவர் கடவுள் இல்லை என்று சொல்லி விட்டார் என்று அனைவருக்கும் கோபம்!

ஜங்கிற்கு ஒரே வருத்தம். தான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களே என்று!

ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போன்ற ஒரு விடையாக ஆகி விட்டது!

பின்னால் அவர் எழுதினார் இப்படி: “நான் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்ததை நான் நம்புகிறேன். ஆகவே தெரிந்த ஒன்றைப் பற்றிய நம்பிக்கை என்பது தேவையில்லாத ஒன்று. ஆகவே கடவுள் இருக்கிறார் என்பது நிச்சயமான போது அவர் இருக்கிறாரா என்பது பற்றிய நம்பிக்கை தேவை இல்லையே!”

இதைத் தான் அவர் சொல்லி இருந்தார்!

தனது பதிலை இப்படி விளக்கமாகக் கூறி இருந்தால் இப்படி ஒரு தவறான புரிதல் எழுந்திருக்காதே, விளக்கமாகப் பதிலைச் சொல்லாமல் ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போல ஆகி விட்டதே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

கடவுள் பற்றிய உண்மை சிக்கலான ஒன்று.கடவுள் ஒரு மர்மம். கடவுளின் தன்மை மனித அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று அவர் நம்பினார்.

ஜங் ஸ்விட்சர்லாந்தில் உள்ள குஸ்நாஸ்ட்டில் இருந்த (Kusnacht, Switzerland)  தனது வீட்டின் வாசல் கதவில் இப்படி லத்தீன் வாசகங்களைப் பொறித்திருந்தார் : “VOCATUS ATQUE NON VOCATUS DEUS ADERIT.” இதன்பொருள், அழைத்தாலும் சரி, அழைக்கா விட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்!  (“Called or not called, the god will be there.)

கார்ல் ஜங் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றியெல்லாம் அறிவியல் துளிகள் தொடரில் விரிவாக எழுதி இருப்பதால் அதை இங்கு மீண்டும் தரவில்லை.

உலகம் கண்ட உன்னத உளவியலாளர்களில் ஒருவர் ஜங்!

TAGS–கடவுள் நம்பிக்கை,  கார்ல் ஜங்

***

 

கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா? (Post No.3652)

 

 

 

Written by S NAGARAJAN

 

Date: 20 February 2017

 

Time uploaded in London:-  5-48 am

 

 

Post No.3652

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

10-2-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

.நாகராஜன்

“கொஞ்சமாக இருக்கும் தத்துவ அறிவு நம்மை நாத்திகத்தின் பக்கம் திருப்புவது உண்மை தான்! ஆனால் ஆழ்ந்த தத்துவ அறிவு நம்மை  மதத்தின் பக்கம் திருப்பும்” சர் பிரான்ஸிஸ் பேகன்

 

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

இது பற்றி அடிக்கடி பிரம்மாண்டமான மாநாடுகள் நடப்பது வ்ழக்க்மாகி வ்ருகிறது. உல்கெங்கிலுமிருந்து வரும் விஞ்ஞானிகளும் ஆன்மீகவாதிகளும் காரசாரமாக விவாதித்து கலைவது வழக்கம்.

மிக பிரம்மாண்டமான் ஆய்வு ஒன்றை நடத்த ஆக்ஸ்போர்ட் பல்க்லைக் கழகம் தீர்மானித்தது. இதற்கென ஒதுக்கப்பட்ட தொகை பிரிட்டிஷ் பவுண்டில் 19 லட்சம். (ஒரு பவுண்டின் மதிப்பு 85 இந்திய ரூபாய்)

உலகெங்கிலுமுள்ள 20 நாடுகளில் உள்ள 53 பல்கலைக் கழகங்கள் இந்த ஆய்வில் மூன்று ஆண்டுகள் ஈடுபட்டன. தத்துவம், உளவியல், மானுடவியல் உள்ளிட்ட விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளில் உள்ளோர் இதில் ஈடுபட்டனர்.

தெய்வீகத்தில் நம்பிக்கை இருக்கிறதா, மறுபிறப்பில் நம்பிக்கை உண்டா போன்ற கேள்விகளுக்கு விடை காணுவதே ஆய்வின் நோக்கம். ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளிடம் கேட்ட போது அவர்களுக்கு சூப்பர் ஹ்யூமன் செயல்களை நம்புவது சுலபமாக இருப்பதைக் கண்டனர்.

சீனாவில் நடந்த ஆய்வோ பல்வேறு கலாசாரம் கொண்டவர்களும் கூட ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்பதையும் மனிதர்களுக்கு  மறுபிறப்பு என்பது உண்டு என்பதையும்  நம்புவதைத் தெரிவித்தது.

ஆய்வின் இணை டைரக்டரான பேராசிரியர் ரோஜர் ட்ரிக் (Roger Trigg) தங்களது ஆய்வு ஆன்மீகம் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் கோல்ஃப் விளையாடுவதற்கு பதிலாக சர்ச்சுக்கு செல்லும் சமாசாரம் இல்லை என்பதைத் தெரிவிக்கிறது என்று கூறுகிறார்.

 

வெவ்வேறு சமூகங்களிலும் கூட கடவுள் நம்பிக்கை பொதுவாக நிலவுவதை தங்கள் ஆய்வு அதிகாரபூர்வமாக அறிந்து விட்டது என்று அவர் மேலும் கூறுகிறார். இதனால்  மதத்தை நசுக்குவது என்பது முடியாத காரியம் என்பது ஆய்வின்  முத்தாய்ப்பான முடிவு.

இந்த ஆய்வுத் திட்டத்தின் மானுடவியல் மற்றும் மனம் பற்றிய பிரிவின் டைரக்டரான டாக்டர் ஜஸ்டின் பாரட்,“உலகெங்குமுள்ள வெவ்வேறு சமூகங்கள் இணக்கமாக இணைய மத நம்பிக்கை உதவுகிறது” என்று கூறுகிறார்.

ஆனால் பெரும் நகரங்களில் இந்தக் கடவுள் நம்பிக்கை சற்று குறைவாகத் தான் இருக்கிறது என்கிறார் அவர்.

இன்னொரு ஆய்வு 51 சதவிகிதம் பேர் கடவுள் உண்டு என்று திடமாகக் கூறுவதையும் 17 பேர் தங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று கூறுவதையும் 18 சதவிகிதம் பேர் நிச்ச்யம் கடவுள் இல்லை என்று கூறுவதையும் தெரிவிக்கிறது.

கடவுள் உண்டு என்பதை இந்தோனேஷிய மக்களில் 93 சதவிகிதம் பேரும் துருக்கியில் 91 சதவிகிதம் பேரும் நம்புகின்றனர்.

பல க்டவுளர் உண்டு என்பது இந்தியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.பிரான்ஸ், ஸ்வீடன்,  பெல்ஜியம், பிரிட்டன், ஜப்பான் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடவுள் நம்பிக்கை சற்று குறைந்து வருகிறது.இந்த நாடுகளில் 33 சதவிகிதம் பேர் கடவுளை நம்ப மறுக்கின்றனர்.

 

 

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், ‘மர்மமான ஒன்றைப் பற்றி அனுபவம் பெறுவதே வாழ்க்கையின் அழகிய விஷயமாகத் திகழ்கிறது’ (The most beautiful thing we can experience is the Mysterious) என்கிறார். வாழ்ந்து வரும் விஞ்ஞானியான் ஸ்டீபன் ஹாகிங் கடவுளே இல்லை என்கிறார். டார்வினோ இது பற்றி உறுதியாகத் தன்னால் எதையும் சொல்ல  முடியவில்லை என்கிறார்.

வாழ்ந்து வரும் பிரபல விஞ்ஞானியான ஃப்ரான்ஸிஸ் காலின்ஸ் கடவுளை கதீட்ரலிலும் காண்லாம்; லாபரட்டரியிலும் காணலாம் என்று  முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

இது ஒருபுறமிருக்க விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அதிகமாக அதிகமாக விஞ்ஞானிகளே பல விஷயங்களையும் பற்றி ஆச்சரியபப்ட ஆரம்பிக்கின்றனர்.

உடலைப் பற்றிய ஆய்வு முக்கியமான ஒன்று. மனித உடலானது வலிமை வாய்ந்த அதிர்வுடன் கூடிய ஒரு டிரில்லியன் (டிரில்லியன் என்பது ஒன்றுக்கு பின்னால் 12 பூஜ்யங்கள் கொண்ட மிகப் பெரிய எண்ணிக்கை) அணுக்களால் ஆகியுள்ளது.

இந்தத் தொகை அதிக ஜனத்தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு லட்சம் நாடுகளின் ஜனத்தொகை ஆகும்! அல்லது உலக ஜனத்தொகை முழுவதும் எடுத்துக் கொண்டால் அது போல 15000 மடங்கு அதாவது பதினைந்தாயிரம் உலகங்களின் ஜனத்தொகையாகும்.

அதாவது ஒரு மனித உடலில் மட்டும் உள்ள அணுக்களைப் பற்றியே நாம் சொல்கிறோம். உலகிலுள்ள 700 கோடி மக்களின் அணுக்களைப் பற்றிச் சிறிது எண்ணிப் பார்த்தால் தலையைச் சுற்ற வைக்கும் பிரம்மாண்டமான எண் வருகிறது!

உடலில் தான் எத்தனை பிரிவுகள், எத்தனை இயக்கங்கள்! இன்னும் மூளை, மனம், பிரக்ஞை அல்லது உணர்வு போன்றவை பற்றியெல்லாம் நாம் அறிவது மிக மிகக் கொஞ்சமே! இவற்றைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ! விஞ்ஞானிகள் பிரமிக்கின்றன்ர்!

கடைசியில் ஒரு ஜோக்கைப் பார்க்க்லாம்:

கடவுள் இனி தேவை இல்லை என்று தீர்மானித்த விஞ்ஞானிகளின் குழு கடவுளை வரவழைத்துத் தங்கள்  முடிவைத் தீர்க்கமாக்த் தெரிவித்தனர்.

“கடவுளே! இனி நாங்களே எல்லாவற்றையும் படைத்து விடுவோம். நீங்கள் தேவையில்லை” என்றனர் அவர்கள்.

கடவுள் ஆச்சரியத்துடன், “அப்படியா”! என்றார்.

“ஆமாம், இதோ இந்த மண்ணை எடுத்துக் கொண்டு எங்கள் படைப்பைப் படைத்துக் காண்பிக்கிறோம் பாருங்கள்” என்ற விஞ்ஞானிகள் ஒரு பிடி மண்ணை எடுத்தனர்.

“ஒரு நிமிடம்” என்ற கடவுள், “இந்த மண் வேண்டாம்! நீங்கள் படைத்த மண்ணை எடுத்துக் கொண்டு உங்கள் வேலையைத் தொடங்குங்கள்” என்றார். ஆக ஐன்ஸ்டீன் சொன்னது போல நமக்குத் தெரியாத ஒரு மர்மத்தில் அழகிய அனுபவம் மிளிர்வது உண்மையே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

எட்வர்ட் ஃப்ராங்க்லேண்ட் (Edward Frankland தோற்றம் 18-1-1925 ம்றைவு  9-8-1899) பிரிட்டனைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானி. மருத்துவராக விரும்பியவர் ஆறு ஆண்டுகள் படிப்பை முடித்த போது ஒரு நண்பர் இரசாயன இயலைப் படிக்கத் தூண்டினார்.  28ஆம் வயதில் பெரிய விற்பன்னராக ஆனார். காலராவினால் மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கிலாந்தில் இறந்த போது மிகத் தீவிரமான் ஆராய்ச்சியால் தண்ணீர் தான் இந்த் வியாதிக்குக் காரணம் என்பதைக் கூறினார். லண்டனில் மட்டும் 20000 பேர் மரணம்டைந்தனர். கழிவுநீரும் சுத்த நீரும் கலப்பதால் வியாதிகள் உருவாவதால் சுத்தமான நீரை விநியோகிக்க வேண்டும் என்றார் அவர். முதன் முதலாக சுத்த நீர் வேண்டும் என்பதைச் சொல்லியதோடு அது ஏன் வேண்டும் என்பதையும் அவர் நிரூபித்தார்.

ஏழைகளின் வியாதி என்று பெயரிடப்பட்ட காலராவை ஒழிக்க அவரது ஆய்வு பெரிதும் உதவியது. விக்டோரியா மஹாராணியார் அவரது அறிவுரையை ஏற்று முதலில் லண்டனில் பருகும் நீரை விநியோகிக்க உத்தரவிட்டார். உலகில் இப்போது குழாய் வழியே நல்ல நீர் கிடைக்கிறது என்றால் அதற்குக் காரணம் ப்ராங்க்லேண்டே தான்!

****

 

ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள்!

usa e=mc2

Research Article No. 2033

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 1st August  2015

Time uploaded in London : – 13-25

(This is already published in English a few days back)

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்க ஒரு கணித வல்லுநர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டு அந்த கொள்கையை விளக்க முற்பட்டார். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த அறிஞர்கள் பொறுமை இழந்தனர்; ஒரு துணிச்சல்காரர் எழுந்து சொன்னார்:

“அன்பரே! ஐன்ஸ்டீனின் தத்துவம் 12 பேருக்கே புரிந்தது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பேசியதோ எங்களில் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆகவே நீவீர் ஐன்ஸ்டீனுக்கும் மேலான அறிஞரே!”

(பழிகரப்பு அங்கதம் வாழ்க)

Xxxxx

india eistein

நான் கணித மேதை அல்ல!!

சர் வில்லியம் ராதென்ஸ்டைன் என்ற ஓவியர் ஐன்ஸ்டீனின் ஓவியத்தை வரைந்தார். இதற்காக ஓவியருக்கு முன்னால் ஐன்ஸ்டீன் மணிக்கணக்கில் உட்கார வேண்டி வந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கொஞ்சமும் நேரத்தை வீணாக்க வில்லை. அவருடன் ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு மூலையில் சிவனே என்று அமர்ந்திருந்தார். அவ்வப்பொழுது ஐன்ஸ்டீன் சில கணிதப் புதிர்களைப் போடுவதும் அதை அவர் விடுவிப்பதுமாக இருந்தது.

ஓவியம் வரைந்த பின்னர் ராதென்ஸ்டைன், மெதுவாக ஐன்ஸ்டீனிடம் யார் அந்த ஆசாமி என்று கேட்டார். “அவரா? அவர்தான் என்னிடம் கணிதமேதையாக வேலை செய்பவர். எனக்கு கணக்கு வராது. ஆகையால் அவ்வப்பொழுது நான் போடும் கணக்குகளைச் சரிபார்க்க அவரை வைத்திருக்கிறேன்” என்றார். பணக்காரர்கள் எல்லோரும் கணக்குப்பிள்ளை ஒருவரை வேலைக்கு வைத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். விஞ்ஞானிகள் , “கணிதமேதைப்பிள்ளை”-களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்!!

Xxxx

E= mc2

ஐன்ஸ்டீனுக்கு சின்ன மூளை!!!

ஆங்கிலத்தில் யாருக்காவது சின்ன புத்தி இருந்தால் “பறவை அளவுக்குதான் மூளை— bird’s brain பேர்ட்ஸ் பிரயின் – என்று கேலி செய்வர். டால்பின் போன்ற பிராணிகளுக்கு மூளை மிகவும் பெரிதாகையால் அவை மிகவும் புத்திசாலிப் பிராணிகளாக இருக்கின்றன என்றும் படிக்கிறோம். ஆனால் வியப்பான செய்தி ஐன்ஸ்டீனுக்கு நம்மைப் போன்ற சாதாரண ஆட்களைவிட மூளை சிறியது என்பது அவர் இறந்தபின்னர் உடலைப் பரிசோதித்த போதுதான் தெரிந்தது!

ஐன்ஸ்டீனின் மூளையை 240 துண்டு போட்டு உலகெங்கிலும் உள்ள மூளையியல், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்தனர். அதை ஆரய்ந்ததில் ஒரு குறிப்பிட்ட (ப்ரீ Fராண்டல் கார்டெக்ஸ்) உறுப்பு அவருக்கு சிறப்பாக அமைந்திருந்ததைக் கண்டனர். இதுதான் அவரை உலகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியாக்கி இருக்கிறது ((The researchers noted a uniquely formed pre-frontal cortex and concluded that this would explain the kind of abstract thinking Einstein would have needed for his experiments on the nature of space and time – such as imagining riding alongside a beam of light.))

Xxxx

Albert_Einstein_1979_USSR_Stamp

மந்தமான ஐன்ஸ்டீன்!

ஐன்ஸ்டீன் சிறுவயதில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். தனியாகவே விளையாடுவார். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியன எல்லாம் வயதுக்கேற்றவாறு இல்லை .பேச்சே வரவில்லை. டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் இந்தக் குழந்தை – கொஞ்சம் மந்தம்தான் – என்று சொல்லிவிட்டார். பெற்றோர்களுக்கோ பெரும் கவலை.

ஒரு நாள் இரவுச் சாப்பாட்டிற்கு அனைவரும் மேஜையில் அமர்ந்தனர். திடீரென சின்னப் பயல் ஐன்ஸ்டீன், “அம்மா இந்த சூப்பு மிகவும் சூடாக இருக்கிறது” என்று தாய்மொழியில் (ஜெர்மன் மொழியில்) கத்தினான். பெற்றோர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பேரானந்தம்! ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

“அடப் பாவி மகனே! தேனே! பாலே! கற்கண்டே! என் அமுதமே! குஞ்சு மணியே! ஏனடா இவ்வளவு காலம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை?” என்று சொல்லி கட்டி அணைத்துக் கொண்டனர்.

சின்னப் பையன் ஐன்ஸ்டீன் சொன்னான்:

“இவ்வளவு காலம் வரை எல்லாம் சரியாக இருந்தது!” (அதனால் பேசத் தேவை எழவில்லை).

இதற்குப் பின்னர் இப்படி சிறு வயதில் வளர்ச்சி குன்றி, பிற்காலத்தில் பெரும் மேதைகளாக வரும் “நோய்க்கு” ஐன்ஸ்டீன் சிந்Dரோம் என்று பெயர் சூட்டினர் மருத்துவ வல்லுநர்கள்.

உங்கள் பிள்ளை கொஞ்சம் மந்தமாக இருந்தால் கவலைப்படாதீர்கள்” யார் அறிவார்? ஐன்ஸ்டீனை விடப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்யக் கூடும்!!!

Xxxxxx

mocambiqe

ஐன்ஸ்ட்டீனும் கடவுளும்

ஐன்ஸ்டீனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? அவரே சொன்ன பதில்:–

ஒரு சிறுவன் ஒரு நூலகத்தில் நுழைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறுவன் வியப்பான் இவ்வளவு புத்தகங்களையும் யார் எழுதியது? எவ்வளவு மொழிகள்? யாரோ இதை அழகாக ஒரு வரிசையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்தைப் பையன் வியப்பான். நூல்களை அடுக்கியவரோ, புத்தகத்திலுள்ள மொழிகளோ , அவைகளின் ஆசியரோ – யாரையும் அவனுக்குத் தெரியாது.

எவ்வளவு பெரிய அறிஞரானாலும் இப்படித்தான் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மர்மமான முறையில் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அற்புதமான, அபாரமான ஒரு வரிசைக் கிரமத்தில் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அதன் முழு விளக்கங்களும் நமக்குப் புரிவதில்லை”.

s_einstein-8

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்………………………

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்…….. என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. இது போல எல்விஸ் பிரஸ்லி என்ற பாடகர், மர்லின் மன்றோ என்ர நடிகை முதலான பத்துப் பேர் இறந்த பின்னரும் அவர்களின் பாடல், நடிப்பு, பெயர்கள், பிராண்டுகள் மூலம் ஏராளமான ராயல்டி தொகை கிடைக்கிறது. அதாவது உலகிலேயே பெரிய பத்து – செத்துப் போன—இப்போது பணம் உண்டாக்கும் பணக்காரர்கள்– என்று சொல்லலாம். இந்த பத்துப் பேரில் ஐன்ஸ்டீனும் ஒருவர். ஆண்டுக்கு அவர் பெயர் – புகழ் – மூலம் கிடைக்கும் வருவாய் இருபது மில்லியன் ( 2 கோடி) டாலர்கள்!!!

Einstein.stamp

–சுபம்–