மனிதனும் தெய்வமாகலாம் -குறள் , ரிக் வேதம் (Post No.9722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9722

Date uploaded in London – –12 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும்  ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர், பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.

ராமன், கிருஷ்ணன் போன்ற கறுப்புத்  தோல்படைத்த  மன்னர்களையும் அவதாரம் என்று இந்துக்கள் கருதுகின்றனர். மற்றொரு காகம் போல கருப்புத் தோல் படைத்த கிருஷ்ண த்வைபாயன வியாஸரையும் பகவான் என்றும் விஷ்ணுவின் மறு அவதாரம் என்றும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் துதி பாடுகின்றன. இவை எல்லாம் மனிதனை, குறிப்பாக கவிஞர்களை, தெய்வீக நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டுகின்றன.

இதை வள்ளுவர்  மிக அழகாகச் சொல்கிறார்….

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50

நிலவுலகத்தில் , இல்லற வாழ்க்கையை , வாழவேண்டிய அறநெறிப்படி நின்று வாழ்பவன் மண்ணுலகத்தில் வாழ்ந்தாலும், வானுலகத்தில் வாழும் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுவான்.

இதனால்தான் நாம் சம்பந்தர், ஆதி சங்கரர் போன்றோரையும் கடவுளின் அவதாரமாக அல்லது அம்சமாகக் கருதுகிறோம்.

திருக்குறள் 413ல் மீண்டும் இதே கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

செவியுணவிற் கேள்வியுடையார்  அவியுணவின்

ஆன்றாரோ  டொப்பர் நிலத்து – குறள் 413

செவிக்கு உணவாகிய வேதத்தை (கேள்வி=சுருதி) உடையவர்கள் (பிராமணர்கள் )உலகத்தில் வாழ்ந்தாலும் அவிஸ் என்னும் யாக உணவை உண்ணும் தேவரோடு ஒப்பிட்டுக்  கூறத்தக்கவர்களே .

பிராமணர்களை பூ சுரர் , ‘பூலோக தேவர்கள் என்று மநு முதலிய சட்டப்புஸ்தகங்கள் கூறுவதை வள்ளுவர் அப்படியே மொழி பெயர்த்து விட்டார். அவி = ஹவிஸ் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவதில் இருந்து இது தெரிகிறது. ஆயினும் ராமர் கிருஷ்ணர் போன்றார் பிராமணர் அல்ல. வாழ்வாங்கு வாழ்பவர் எல்லோரும் தெய்வங்களே.

வள்ளுவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது சதபத பிராஹ்மண நூலில் உளது.

யே ப்ராஹ்மணாஹா சுச்ருவாம்ஸோ

அனூ சானாஸ்தே மனுஷ்யே தேவாஹா

xxx

வித்வாம்ஸோ ஹி தேவாஹா  (அறிஞர்களும் தேவர்களே)

2-2-2-6; 2-4-3-14 ; 3-7-3-10, சதபத பிராமணம்

ஜாதி என்பதை மறந்துவிட்டு அறிவை நாடும் எல்லோரும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

இந்தக் கருத்துக்கள் உலகிலேயே மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரிந்திராது

இதோ ரிக்வேதப் பாடல்கள்/ மந்திரங்கள். இதைத்தான் பிற்கால பிராஹ்மண நூல்களிலும் திருக்குறளிலும் காண்கிறோம்

ரிக்வேதம் 1-20-8 ல்

வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் இருந்தார்கள் ; அவர்கள் தங்கள் நற்செயல்களால் வேள்வியில் தேவர்களோடு பங்கு கிடைக்கப்பெற்றார்கள் என்று ரிஷி மேதாதிதி கண்வன் பாடுகிறார் .

இது குறள் 413 போலவே உளது.

ரிபுக்கள் யார் ?

ரிக்வேதத்தில் வரும் தெய்வங்களில் ரிபுக்கள் என்ற பன்மைச் சொல்லும் உளது. இவர்கள் சுதன்வான் என்பவருடைய 3 மகன்கள். இவர்கள் அங்கீரஸ் என்பவர்களின் வழித்தோன்றல்கள். ரிபு, விபவான், வாஜா  என்ற மூவரையும் கூட்டாக ரிபுக்கள் என்பர். இவர்கள் தங்கள் இடையறா முயற்சியால் தெய்வீக அந்தஸ்த்தைப் பெற்றனர் சூரிய மண்டலத்தில் இவர்கள் வசிக்கின்றனர். சூரியனின் ஒளிக்கதிர்கள் என்றும் இவர்களை ரிஷிகள் துதி பாடுகின்றனர் மனிதன் தெய்வீக நிலையை அடைய முடியும் என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டு என்று ரிக் வேத பாஷ்யம் (உரை) இயம்புகிறது.

பிற்காலத்தில் உபநிஷத்துக்களில் இந்தக் கருத்து மிகவும் தெளிவாகவே உள்ளது. தத் த்வம்  அஸி , ‘அஹம் பிரம்மாஸ்மி  (நீயே அது; நானே பிரம்மம்) போன்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

–subham—

yags-கடவுள், தெய்வம், மனிதன், தெய்வப்புலவர்

மரத்துக்கான மனிதர் யார்? கடவுள் யார்?(Post No.8894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8894

Date uploaded in London – –5 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ சில மரங்களும் தாவரங்களும்- அவைகளு டன்  தொடர்புடைய மா மனிதர்கள் அல்லது கடவுளர் யார் யார் ? விடைகள் கீழே உள்ளன ?

1.மகிழ மரம் —

2.குருந்த மரம் —

3.வன்னி மரம்

4.அசோக மரம் –

5.கோவிதார மரம்/ ஆத்தி–

6.பனை மரம் –

7.ஆல மரம்—

8.புளிய மரம், வட இந்தியா–

9.புளிய மரம், தென் இந்தியா

10.அரசமரம்

11.வில்வ மரம்

12.இலந்தைமரம்

13.கடம்ப மரம்

14.மாமரம் , தென் இந்தியா

15.அருகம்புல், எருக்கு

16.வெற்றிலை

17.வேப்பமரம்

18.மாமரம் , வட இந்தியா

ANSWERS—

1.சுந்தரர் ; 2.மாணிக்க வாசகர் ; 3.பாண்டவர் ; 4.சீதை;  5. பரதன், சோழர்கள்

6.பல ராமன் ; 7.தக்ஷிணாமூர்த்தி ; 8.தான்சேன்; 9.நம்மாழ்வார் ; 10.புத்தர்;  11.சிவன் ; 12.சபரி ;13.முருகன், மதுரையில் சிவன் ; 14.ஏகாம்பரேஸ்வர், காஞ்சி ; 15.விநாயகர் ;16.ஆஞ்சனேயர் ; 17.மாரியம்மன்;  18.ஆம்ர பாலிகா , மாந்தோப்பை புத்தருக்கு தானம் செய்த நடன மங்கை

 tags — மரம் மனிதர், யார், கடவுள்

—subham—

கம்ப்யூட்டர் கடவுளே சரணம்! (Post No.6908)

WRITTEN by S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 21 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 6-53 am

Post No. 6908

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Robot to change the face of religion

A 400-year-old temple in Japan is attempting to hot-wire interest in Buddhism with a robotic priest it believes will change the face of the religion — despite critics comparing the android to “Frankenstein’s monster.”

A robot priest!

The android Kannon, based on the Buddhist deity of mercy, preaches sermons at Kodaiji temple in Kyoto, and its human colleagues predict that with artificial intelligence it could one day acquire unlimited wisdom. “This robot will never die, it will just keep updating itself and evolving,” priest Tensho Goto said.

Chants prayers

The adult-sized robot began service earlier this year and is able to move its torso, arms and head. But only its hands, face and shoulders are covered in silicone to replicate human skin. Clasping its hands together in prayer and speaking in soothing tones, the rest of the droid’s mechanical parts are clearly visible.

A gender-neutral robot

Wiring and blinking lights fill the cranial cavity of its open-top head and snake around its gender-neutral, aluminium body. A tiny video camera installed in the left eye completes an eerie, cyborg-like frame seemingly lifted straight out of a dystopian Hollywood sci-fi thriller.

The cost!

Developed at a cost of almost $1m in a joint project between the Zen temple and renowned robotics professor Hiroshi Ishiguro at Osaka University, the humanoid — called Mindar — teaches about compassion and of the dangers of desire, anger and ego.

Reaching younger generations

With religion’s influence on daily life flat-lining in Japan, Goto hopes Kodaiji’s robot priest will be able to reach younger generations in a way traditional monks can’t.

***

கடவுள் ஏன் மனிதனுக்குக் கஷ்டங்களைக் கொடுக்கிறார்? – 2 (Post No.6511)

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 8 June 2019


British Summer Time uploaded in London –  8-49 am

Post No. 6511

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- கடவுள் (Post No.5633)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 8-55 am

Post No. 5633

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 27 சொற்கள் உள. கண்டுபிடித்து தமிழறிவினைப் பெருக்குங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!

குறுக்கே

1.பயம், ஸர்ப்ரைஸ்

4.திருடன்

7.கோபுரம் கட்ட பயன்படும்

9.முத்தம் பெறும் இடம்

10.பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.குடித்தால் போதை

12.நாய் மீது எறியலாம்

13.வருக, வருக

14.மாட்டுக்குத் தீவனம்

18.அழகு

19.பொழுதுபோக்கு, தமாஷ்

20.சிவனுடன் இணந்தது

21.பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.வயதான நிலை

3.நெல் விளையும் இடம்

4.இறைவன்

5.காலையில் சோறு போடலாம்

6.பனை மரத்து நன்கொடை

8.இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.- தேவலோக அழகி

14.- வதந்தி

16.- கண்ணே, மணியே, வா, வா

17.ஜனங்கள்

18.பல்லாங்குழி ஆடலாம்

19.ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21. மயிலின் மகிமை

 

 

விடை

1.திகில்- பயம், ஸர்ப்ரைஸ்

4.கயவன் – திருடன்

7.கருங்கல்- கோபுரம் கட்ட பயன்படும்

9.கன்னம் – முத்தம் பெறும் இடம்

10.குரு- பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.கள்- குடித்தால் போதை

12.கல்- நாய் மீது எறியலாம்

13.நல்வரவு- வருக, வருக

14.புல்-மாட்டுக்குத் தீவனம்

18.சோபை- அழகு

19.கேளிக்கை- பொழுதுபோக்கு, தமாஷ்

20.லிங்கம்- சிவனுடன் இணந்தது

21.தோல்- பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.கிழவன் – வயதான நிலை

3.வயல்- நெல் விளையும் இடம்

4.கடவுள்- இறைவன்

5.காகம்- காலையில் சோறு போடலாம்

6.நுங்கு- பனை மரத்து நன்கொடை

8.கரும்பு- இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.ரம்பை- தேவலோக அழகி

14.புரளி- வதந்தி

16.செல்லம்- கண்ணே, மணியே, வா, வா

17.மக்கள்- ஜனங்கள்

18.சோழி- பல்லாங்குழி ஆடலாம்

19.கேலி- ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21.தோகை- மயிலின் மகிமை

–SUBHAM–

விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696)

Written by London swaminathan

 

Date: 6 March 2017

 

Time uploaded in London:- 6-10 am

 

Post No. 3696

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

இந்துக்களின் தெய்வங்களான பிள்ளையார், அனுமார், ஹயக்ரீவர், நரசிம்மர், வராகாவதாரம் முதலிய உருவங்களை மேலைநாட்டினர் பார்த்தால் மனதுக்குள் சிரிப்பார்கள்; இது என்னடா? இவர்கள் எல்லாம் (STONE AGE) கற்காலத்தில், (Iron Age)உலோக காலத்தில், ஆதிகாலத்தில் (Primitive) வாழ்கிறார்களா? என்று உள்ளுக்குள் நகைப்பார்கள். ஆனால் அவற்றின் தத்துவங்களை விளக்கினால்   வியப்பார்கள்; நம்மை மதிப்பார்கள். இது போலத்தான் எகிப்திய தெய்வங்களும். 120-க்கும் மேலான முக்கிய தெய்வங்களின் பட்டியல் உள்ளது. எகிப்திய தெய்வங்களைப் பற்றிய தனி புத்தகங்களும் உள்ளன. இவைகளைப் புரிந்துகொள்ள இந்துமதம் மிகவும் துணை புரியும். ஆனால் 5000 ஆண்டுக் காலமாக வாழும் இந்துமதம் போலன்றி மத்திய கிழக்கில் வணங்கப்பட்ட 3000 தெய்வங்களும், எகிப்தில் வணங்கப்பட்ட சுமார் 200 தெய்வங்களும் மியூசியங்களில் காட்சிப் பொருள்களாகிவிட்டன!!!

 

வேத காலத்தில் 30, 40 தெய்வங்களுடன் இருந்த இந்துமதம், பின்னர் எப்படி நூற்றுக் கணக்கான தெய்வங்களை உருவாக்கியதோ, வேத காலத்தில் இருந்த நாலே ஜாதி எப்படி இன்று 4000 ஜாதிகளாக மலர்ந்தனவோ அதுபோல எகிப்தின் 5000 ஆண்டுக்கால வரலாற்றில் தெய்வங்கள் பல்கிப் பெருகின. இந்து மதத்தில் எப்படி தலபுராணங்களில் ஒவ்வொரு ஊரிலும் தெய்வம் பற்றிக் கதைகள் உளவோ அதுபோல எகிப்திலும் உள்ளூர் தெய்வங்கள் வளர்ந்தன. ஆனால் இந்து மதத்திலுள்ள, உயரிய கருத்துக்கள் — மனிதனும் தெய்வமே= அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி — போன்ற தத்துவார்த்த கருத்துகள் அங்கே வளர்ந்ததாகத் தெரியவில்லை. புராண அளவில் கதைகள் நின்றனவே அன்றி உபநிஷதம் கண்ட உண்மைப் பொருள் அளவுக்குப் போகவில்லை.

மூன்றடுக்கு தெய்வங்கள்

 

எகிப்திய தெய்வங்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.தேவதைகள் குடியிருக்கும் சில பொருள்களுக்கு (Fetishes) மந்திர சக்தி உண்டு என்று எண்ணி அவைகளை வழிபடுதல்.

2.மனித உருவிலுள்ள கடவுளர் (Gods in Human forms)

3.மிருகங்கள், பறவைத் தெய்வங்கள் (Zoomorphic Gods)

 

நிறைய பேருக்கு கடைசி வகைதான் எகிப்திய தெய்வங்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அதவது, நாய், பூனை, ஆடு, சிம்மம், கொக்கு, வாத்து, வண்டு, கழுகு குரங்கு, முதலை, காளை முதலியவற்றின் படங்களைப் பார்த் தவுடன் அது மனதில் பதிந்துவிடுகிறது.

இயற்கையை அவர்கள் போற்றியதை இந்த தெய்வங்கள் பிரதிபலிக்கின்றன. மகிழ்ச்சி, இன்பம் என்ற கருத்தை வெளிப்படுத்த அவர்கள் வரைந்த சித்திர எழுத்து ‘பசுவும் கன்றும்!’

 

கடவுள், இறைவன், ஆண்டவன் என்றெல்லாம் தமிழில் பொதுவாகச் சொல்லுவது போல எகிப்திய மொழியில் NETJER நெட்ஜெர்  என்று தெய்வத்தை அழைத்தனர்.

 

வேத காலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு அம்சம் (Truth and Order) உண்மையும் ஒழுங்கும்.

 

ஆங்கிலச் சொற்களான உண்மையும் ஒழுங்கும் —-TRUTH ட்ரூத்,  RHYTHM ரிதம் ஆகியன எல்லாம் சம்ஸ்கிருதச் சொல்லான ருதம் ‘RTAM’  என்பதிலிருந்து வந்தவையே. இது வேதகாலச் சொல். இதை எகிப்தியரும் நம்பினர்.

ஆரம்பகால தெய்வங்கள்:

ஆதம் ATUM = படைப்புக்கடவுள்

ரே RE =சூரியக் கடவுள்

ஹதோர் HATHOR, ஈஸிஸ்/ ஐஸிஸ் ISIS = தேவி

நெய்த்NEITH == போர் தேவதை

ப்தா PTAH (பிதா) = சக்திக் கடவுள்

ஆசிரிஸ் OSIRIS

சேத் SET = தீமையின் கடவுள்

ஹோரஸ் HORUS = மன்னர் கடவுள்

பிற்கலத்தில் பல புராணக் கதைகளை உருவாக்கி ஆசிரிஸ் – சேத் – ஹோரஸ் பகைமையைக் காட்டினர்.

இது இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் இடையே பிற்காலத்தில் மோதல்களை உண்டாக்கியதற்குச் சமம்.

தத் (THOTH) என்னும் கடவுள் மொழிகளின் கடவுள்; ஹெர்மாபாலிஸ் என்ற நகரில் வழிபடப்பட்டார்.

மாதா(Ma’at) என்ற இளம்பெண் உண்மை, நேர்மை, ஒழுங்கு /கட்டுப்பாடின் தெய்வமாக வழிபடப்பட்டாள். எகிப்தில் மனிதர்களின் தோற்றத்துடன் தொடர்புடைய கடவுள் மாத் (ஆ). கடவுள் உலகைப் படைக்க முடிவு செய்தவுடன் மாதாவை கையில் தூக்கி உதட்டில் முத்தமி ட் டார். ஒரு சதுப்பு நிலத்திலிருந்து நீர்ப்பறவை குரல் எழுப்பியவுடன் படைப்பு துவங்கியது என்பது எகிப்திய கதை.

 

பல தெய்வங்கள் — ஆசிரிஸ் உள்பட — மேற்காசியாவிலிருந்து வந்தவை. இதனால் காலப்போக்கில் எகிப்திய கடவுளரின் பங்கு பணிகள் மாறின.

 

இந்துக்களுக்கு வேதம் என்பது ரகசியப் பொருள் உடைய மந்திரங்கள்; அதன் மேலோட்டமான இலக்கிய அர்த்தத்தைப் பார்க்கக்கூடாது என்பது தெரியும். அதனால் சங்க காலத்  தமிழர்கள், வேதங்களை மறை (ரஹசியம்) என்று மொழி பெயர்த்தனர். அது போல எகிப்திலும் ரஹசியப் பெயர் உடைய ஒரு சக்தியைக் கண்டு (He whose Name is Hidden) தெய்வங்களும் பயந்தன என்ற வழக்கு உண்டு.

 

மிக சக்தி வாய்ந்த ஹோரஸ் என்ற தெய்வத்தை பருந்து வடிவில் (கழுகு) சித்திரம் வரைவர். இந்தப் பருந்துகூட பெரிய கடவுளின் (HIDDEN GOD) அரண்மனையில் மதில்சுவரில் உட்கார்ந்து இருக்கும் என்பர். இதை இந்து மதத்திலுள்ல பிரம்மன் அல்லது தேவி பாகவதத்தில் வரும் திருமூர்த்திகளும் வணங்கும் தேவிக்கு ஒப்பிடலாம்.

 

எகிப்திய வரலாற்றில் இந்த மறைந்திருக்கும் தெய்வம் (He whose Name is Hidden) யார் என்பதை எழுதாவிடிலும் சிலர் அமன் (AMUN) என்னும் தெய்வம்தான் என்று சிலர் சொல்லுவர். இந்துக்களின் அம்மன் அல்லது பிரமன் இப்படித் திரிந்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பிதா, சவிதுர் (ஹதோர்) ஹோரஸ் (சோலஸ்= சோலார்= சூர்ய), ரே முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் அவர்களின் கடவுளர் பெயர்களில் உள்ளன.

நட்சத்திரக் கடவுள்கள் (Star Gods= Stellar Deities)

 

நட்சத்திரங்கள் என்பன புண்யாத்மாக்கள், தேவர்கள் என்று இந்துக்கள் கருதினர் (Vanaparva in Mahabharata). பிரமிடுகள் கட்டத் துவங்கியதிலிருந்து இந்த நம்பிக்கை வலுப்பட்டது. இறைவனான மன்னன், இறந்தவுடன் நடசத்திரங்களுக்கு அப்பால் பயணம் செய்வான் என்று நம்பினர். இதனால் நட்சத்திரங்களை நோக்கி பிரமிடின் சாளரங்களை அமைத்தனர். குறிப்பாக சிவனுடன் தொடர்புடைய ORION ஒரியன் (ஓரையன்=அரையன்) நட்சத்திர மண்டலம் இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அங்குதான் சிவனுடைய ஆருத்ரா நட்சத்திரமும், மிருக சீர்ச நட்சத்திரமும் உள்ளன.

 

கட்டாய குருமார் (PRIEST SERVICE) சேவை

 

சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் கட்டாய ராணுவ சேவை உள்ளது போல ஆரம்பகாலத்தில், உயர் பதவியிலுள்ள எல்லோரும், கோவில்களில் கட்டாயமாக குருமாராக (குருக்களாக ) இருக்கவேண்டும் என்று இருந்தது. இது நம்பூதிரிகளைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் செய்ய வேண்டிய பணி. பின்னர் குருக்கள் வேலை தனித் தொழிலாக பரிணமித்தது. எல்லா கோவில்களிலும் ராஜாதான், கொள்கை அளவில் தலைமை குருக்கள். அங்கு வேலை பார்க்கும் குருக்கள் ராஜாவின் பிரதிநிதி. சில கோவில்கள் காலப்போக்கில் மிகவும் பிரபலமாகி அதன் குருக்களும் செல்வாக்குடையவர் ஆயினர்.

 

1.மெம்பிஸ் (Priest of Ptah of Memphis) நகர பிதா கோவில் குருக்கள்

2.ஹீலியோபாலிஸ் ரே (Priest of Re of Heliopolis) கோவில் குருக்கள்

3.தீப்ஸ் நகர அமன் (Priest of Amun of Thebes) கோவில் குருக்கள் – ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்

 

முதலில் கடவுள் என்பவர் ராஜாவின் ஆள், பொதுமக்களுக்குத் தொடர்பில்லை என்று இருந்தது. ஆனால் காலப்போக்கில் கடவுள் எல்லோருக்கும் தொடர்புடையவர், எல்லோரையும் கட்டுப்படுத்துபவர் என்ற கொள்கை வளர்ந்தது. இதனால் கோவில்கள் செல்வாக்கும் செல்வமும் பெற்றன.

 

எகிப்தில் தத்துவக் கருத்துகள் (Philosophical) காணப்படவிடினும்  உண்மை, நீதி, நேர்மை, ஒருவரை ஒருவர்  மரியாதையுடன் நடத்துவது ஆகியன இருந்தன. எகிப்தியர்களுடைய நம்பிக்கைகள் என்ன என்பதை மிகவும் பிற்காலத்தில் எழுந்த கிரேக்க நூல்கள் மூலமே அறிய முடிகிறது.

 

முக்கிய தெய்வங்களின் பட்டியலையும் பங்கு பணிகளையும் அடுத்த பகுதியில் இந்து சமய தெய்வங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

to be continued…………………………..

 

கடவுளுக்கு சவால்!

simpsonz

கடவுளும் விஞ்ஞானிகளும்

கடவுளுக்கு சவால்குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 23 September 2015

Post No: 2182

Time uploaded in London :– 13-26

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

கடவுளுக்கு சவால்!

படைப்பு என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; எல்லாம் நம்மாலேயே செய்ய முடியும் என்றார் ஒரு விஞ்ஞானி.

அந்த நகரிலிருந்த பெரியவரிடம் அனைவரும் அந்த விஞ்ஞானியின் அதிசயமான கூற்றைத் தெரிவித்தனர்பெரியவர் விஞ்ஞானியிடம் வந்தார்.

பெரியவர் கேட்டார்:- “நீங்கள் கடவுளைப் போல எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களாமே!”

 monkeysshakespeare

 

விஞ்ஞானி முழங்கினார்:+ “ நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம்! கடவுளே இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் மனிதனால் செய்ய முடியும்!”

பெரியவர் விஞ்ஞானியிடம் ஒரு பந்தையும் பேட்டையும் கொடுத்தார்.அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு குரங்கை வளர்ப்புப் பிராணியாக வளர்த்து வந்ததும் பெரியவருக்குத் தெரியும்.

பெரியவர் சொன்னார்:”ஓஹோ! சரி, பெரிய விஷயம் எல்லாம் பேச வேண்டாம். இதோ கொடுத்திருக்கிறேனே, பேட், பந்து, இரண்டையும் உங்கள் செல்லக் குரங்கிடம் கொடுங்கள். அதற்கு பேட் மூலம் பந்து விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் அப்புறம் கேட்கிறோம்!”

 

 

பூ! இது சுலபம்என்றார் விஞ்ஞானி. அனைவரும் கலைந்தனர்.

விஞ்ஞானி குரங்கிற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பேட்டையும் பந்தையும் வைத்து எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நாட்கள் ஓடின. குரங்கு பந்து விளையாடக் கற்கவே இல்லை.

கடைசி முயற்சியாக குரங்கை பேட், பந்துடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். நெடு நேரம் கழித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க அவர் கதவின் சாவித் துவாரம் வழியே பார்த்தார்.

மறுமுனையில் குரங்கு தன் விழிகளை வைத்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது!

 

விஞ்ஞானி அன்றிலிருந்து தன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்வதை நிறுத்தி விட்டார். பெரியவர் புன்முறுவல் பூக்க அனைவரும் வழக்கம் போல கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுதனர்.

கோவிலில்அலகிலா விளையாட்டுடையான்சிரித்தான்!

 

 darwin_italy_stamp

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை    

காலம் காலமாக எதையாவது புதுக் கொள்கையாகச் சொல்வது அறிஞர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர்களின் பல கொள்கைகள் கால வெள்ளத்தில் ஈடு கொடுத்து நிற்க முடிவதில்லை!

எவல்யூஷன்’ – பரிணாம வளர்ச்சிஎன்ற கொள்கையை முன் வைத்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அது தோன்றிய காலம் தொட்டே சர்ச்சைக்குள்ளாகி  படாதபாடு பட்டது.

 

 

ஆனால் தாமஸ் ஹக்ஸ்லி (Thomal Huxley) அதை பலமாக ஆதரித்தார்.அவர் சிறந்த உயிரியல் வல்லுநர் (eminent biologist)

குரங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் என்று அடித்துக் கூறினார் அவர். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு குரங்கு டைப் அடித்துக் கொண்டே இருந்தால் அது ஷேக்ஸ்பியரின் கவிதையைக் கூட டைப் அடித்து விடும் என்றார்.

அவரது, ‘Monkeys might type Shakespeare’ என்ற வாக்கியம் பிரசித்தமானது. அவ்வளவு தூரம் இங்கிலாந்தின் சொற்பொழிவு அரங்கங்களில் அந்தக் கருத்தை அவர் முழங்கி வந்தார்.

 

 

பரிணாம வளர்ச்சி கடவுளுக்கு எதிரான சவால் என்று விஞ்ஞானிகளும்பகுத்தறிவுகளும்மகிழ மக்களோ முழித்தனர். எது உண்மை?

 

 cartoon

குழுவினரும் குரங்குகளும்       

இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு குழு முன் வந்தது. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள ப்ளிமத் பல்கலைக்கழகத்தைச் (Plymouth University) சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய குழு தான் அது. இந்த மாணவர்கள் மீடியா லாப் ஆர்ட்ஸ் (Media Lab Arts Course) என்ற பாடத்திட்ட வகுப்பில் பயில்பவர்கள்.

 

இதற்கான ஆராய்ச்சியை அறிவியல் ரீதியில் நடத்த நாங்கள் தயார் என்று குழுவினர் அறிவித்தனர். 2000 பவுண்டு நிதி உதவி உடனே அளிக்கப்பட்டது. (ஒரு பவுண்டு இன்றைய மதிப்பில் சுமார் 101 ரூபாய்; ஆராய்ச்சி நடந்த காலத்தில் குறைவு தான்!) மத்திய இந்தோனேஷியாவில் இருந்த சோலை குரங்குகள் ஆறை வாங்கினர் குழுவினர்.

 

இதற்காக தேவான் என்ற இடத்தில் உள்ள பைக்ங்டன் மிருகக்காட்சிசாலையில் (Paignton Zoo, Devon) ஒரு தனி அறை அமைக்கப்பட்டது. ஒரு கம்ப்யூட்டரும் நிறுவப்பட்டது. குரங்குகளின் இலக்கிய இன்பம்எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அன்றாடம் அவ்வப்பொழுது கண்காணிக்க குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

 

ஒரு மாத தீவிர முயற்சியில் அந்த சோலை மந்திகள் கம்ப்யூட்டரை உடைத்ததோடு அதைத் தங்கள் கழிவறையாகவும் பயன்படுத்தியதைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கேட்ட மக்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.

 shakes, falkland

ஷேக்ஸ்பியரை குரங்குகள் மதிக்கவே இல்லை!!

ஒரு குரங்கு ஐந்து பக்கங்களில் ‘S’ என்ற வார்த்தையை மட்டும் அடித்துத் தள்ளி இருந்தது!

 

 

குரங்கின் மீதல்ல ஜோக், கொள்கையின் மீதே தான்!

 

ஆய்வுத் தலைவரான விரிவுரையாளர் ஜெஃப் காக்ஸ் (Geoff Cox) தங்களது ஆய்வின் முடிவை அறிவித்துக் கூறுகையில், “காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் ரேண்டம் ப்ராசஸ் (Random Process) முறை மூலம் மிருகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடையாது என்பதையும் மிருகங்களைக் கம்ப்யூட்டர் மட்டத்திற்கு கொண்டு வர முடியாது என்பதையும் எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வில் ஜோக் ஏதாவது இருப்பதாக எண்ணி நீங்கள் மகிழ்வீர்களானால் அந்த ஜோக் குரங்குகளின் மீது (அல்லது அதன் செயல்பாடுகளில்) இல்லை. உண்மையில் ஜோக் அந்த பரிணாம வளர்ச்சி கொள்கையில் தான் இருக்கிறதுஎன்றார்.

 

paington 

 

ஊடகத்தின் கொண்டாட்டம்

 

இது என்ன, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய் இருக்கிறதே என்கிறீர்களா! இல்லை உண்மையில் குரங்கு அடிக்கப் போய் கம்ப்யூட்டர் டாய்லட் ஆன கதை தான் இது!

விஷயம் பிரமாதமான விஷயம் இல்லையா! வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் ஆய்வுக் குழுவினரை (குரங்குகள் கூடவே இருக்கும் போது தான்!) முற்றுகை இட்டன.

 

உலகளாவிய விதத்தில் ஆய்வு முடிவுகள் ஒளிபரப்பப்பட்டன. லண்டனில் பிரபல பத்திரிகையான டைம்ஸ்இல், நிருபர் சாம் லிஸ்டர் (Times, Sam Lister) செய்தியை வெளுத்துக் கட்டி விட்டார். (இதை ஸ்டேட்ஸ்மென் ஆங்கில நாளிதழ் 10-5-2003 இதழில் வெளியிட்டது)

 

 darwin russia

சார்லஸ் டார்வினின் கொள்கை சந்தி சிரிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; கடவுளை அடிக்கடி சவாலுக்கு இழுக்கும் விஞ்ஞானிகளின் விளையாட்டு தான் திண்டாட்டத்தில் முடிகிறதுஒவ்வொரு முறையும்!

அலகிலா விளையாட்டுடையான் அவன்!

அவனிடமே ஒரு விளையாட்டா???!!!

****************

தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.
Contact swami_48@yahoo.com