Adad on Rishaba Vahana (bull) like Lord Shiva
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:- 1300; தேதி: 20 செப்டம்பர் 2014
இராக் என்று இப்பொழுது நாம் அழைக்கும் நாட்டில் உலகின் மிகப் பழமையான நாகரீகங்களில் ஒன்றான சுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் இருந்தன. டைக்ரீஸ், யூப்ரடீஸ் என்ற இரு நதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசம் என்னும் பொருளில் இதை மெசபொடோமியா என்று அழைப்பர். இதைப் பற்றி பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதியை Dictionary of the Ancient Near East published by the British Museum நான் ஆழப் படித்திருக்கிறேன். எந்த ஒரு தலைப்பை எடுத்தாலும் இந்து கலாசாரத்துடன் பல ஒற்றுமைகளைக் காணமுடியும். இவைகளைப் பற்றி துலாபாரம், தகனம், இரு தலைப் பறவை, இந்திரன் வழிபாடு. லபிஸ் லசூலி ஏற்றுமதி முதலிய 20 கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.
கடவுள் என்ற தலைப்பில் இந்த அகராதி தரும் விஷயங்கள் இந்து மதத்துடன் உள்ள அற்புத ஒற்றுமைகளைக் காட்டுகிறது. அவர்களும் கடவுளுக்கு 3000 பெயர்கள் வைத்திருந்தனர்!!
முதலில் சிலைகளுக்கு “கண் திறத்தல்” என்னும் அற்புத ஒற்றுமையைக் கண்போம். இந்துக் கோவில்களுக்குச் சிலை வடிக்கும் சிற்பிகள் அந்த சிலையின் கண்களைத் திறப்பதை மிகவும் முக்கியமானதாகக் கருதி அதற்கு விஷேச புனிதத்துவம் கொடுப்பர். இதை “நயனோன்மீலனம்” என்னும் வடமொழிச் சொற்களால் விவரிப்பர். சிலையின் கண்களைச் செதுக்கிவிட்டால் அதற்கு உயிரும் புனிதத்துவமும் வந்துவிடும். அதற்குப்பின் அது வெறும் கல் அல்ல—புனிதக் கடவுள்!! பின்னர் அதை ஜலத்திலும், தானியத்திலும் வைத்து மேலும் சக்தி ஏற்றுவர். அதற்குப் பின்னர், அதில் எண்ணை தடவ எல்லாப் பொதுமக்களையும் ஜாதி, குல வேறுபாடு இன்றி அனுமதிப்பர். இதே போல பாபிலோனியாவிலும் ஒரு சடங்கு உண்டு.
Inanna like Hindu Goddess
பாபிலோனியாவில் சிலை வடித்த பின்னர் செய்யும் சடங்கிற்கு ‘வாய் திறத்தல், வாய் கழுவுதல்’ என்று பெயர். இதைச் செய்தவுடன் அந்தச் சிலைக்கு தெய்வீக சக்தி ஏற்பட்டுவிடும் என்று பாபிலோனியர் நம்பினர். அவர்கள் இந்துக்களாக இருக்கலாம். அல்லது நம்மிடம் இதைக் கற்றிருக்கலாம். நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் இந்துக்களுடையது. அதை கி.மு 6000 ஆண்டைச் சேர்ந்தது என்று சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் கூறுகின்றனர். அண்மையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிவரும் அமெரிக்கர்கள் அது கி.மு 1700-ஐச் சேர்ந்தது என்பர். எவ்வகையிலும் பாரினில் இதுபோல் பிரிதொரு நூல் இல்லை.
‘வாய் திறத்தலும்’, ‘கண் திறத்தலும்’ ஒன்றே. சில மொழிகளில் சில சொற்கள் இல்லாததால் வேறு உறுப்புகளைப் பயன்படுத்தி அதே கருத்தை வெளியிடுவர். ‘’தமிழுக்கு முகம் இல்லை, சம்ஸ்கிருதத்துக்கு வாய் இல்லை’’ — என்று ஆன்றோர்கள் பகடி செய்வர். தமிழில் முகம் என்று சொல்ல முடியாததால் வடமொழிச் சொல்லான முகத்தையே பயன் படுத்துவர். சம்ஸ்கிருதத்தில் வாய் என்று சொல்ல முடியாததால் ‘’முகத்தால் பேசினான்’’ – முகேன வதந்தி — என்பர். நான் தமிழ் ஒரு ‘’இதயமற்ற மொழி’’ என்று சொல்லுவதுண்டு. தமிழில் இருதயம் என்பதற்குச் சொல் இல்லததால், ‘’ஹ்ருதயம்’’ என்ற வடசொல்லையே பயன் படுத்துகிறோம். ‘ஹார்ட்’, ‘இதயம்’ ஆகியன எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தவை!
Ashtart on like Hindu goddess Durga on lion
ஆக வாய் திறத்தல் என்று பாபிலோனியர் (சுமேரியர், மெசபொடோமியர்) சொல்வதெல்லாம் கண் திறக்கும் ‘’நயனோன்மீலனம்’’ என்னும் சடங்கேயாம் என்று அறிக.
கடவுள் பற்றி பாபிலோனியர், சுமேரியர் சொல்வதும் நம்மைப் போன்றதே. கடவுளைப் பல் பெயர் இட்டு அழைக்கலாம், பல உருவம் கொடுக்கலாம், ஆண், பெண் என்ற பல வடிவில் வணங்கலாம், அவருக்கு உருவம் கொடுத்து சிலை வைக்கலாம், கடவுளில் பெரியவர், சின்னவர், பரிவார தேவதைகள் வைத்து வணங்கலாம். கடவுள் மேலுகத்திலும் , கீழ் உலகத்திலும் இருப்பார், அவர்களுக்கு வெவ்வேறு விஷேசப் பணிகள் உண்டு — இப்படி அவர்கள் கூறூவது எல்லாம் இந்து மதத்திலும் உண்டு. அவர்கள் மொத்தத்தில் இதுவரை 3000 பெயர்களைக் கண்டு பிடித்ததாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி கூறும் நாமோ ஒவ்வொரு சாமிக்கும் 1000 – சஹஸ்ர நாமம் — பெயர்கள் வைத்துள்ளோம்!!
இவ்வளவு பெயர்கள் இருந்தாலும் ‘’கடவுள் ஒருவரே, அதை அறிஞர்கள் பலவேறாக அழைப்பர்’’ — என்ற மாபெரும் உண்மையையும் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே செப்பியும் விட்டோம் (காண்க: ரிக் வேதம் (RV 1-164-46) – ‘’ஏகம் சத், விப்ரா: பஹூதா வதந்தி’’ = ‘’உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பல்வாறாக அழைப்பர்’’.
Lilith of Hebrew mythology with owls like Lakshmi
ஏன் மனிதன் பல கடவுளரை உருவாக்கினான்?
சக்தி என்று ஒரு பெண் தெய்வத்தை அழைப்போம். ஒரு பையன் வந்து, அப்பா, நான் பரீட்சையில் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று கேட்டால் அதை சரஸ்வதியாக வணங்கு என்போம். ஒருவர் பணம் வேண்டும் என்றால் லெட்சுமி என்னும் வடிவில் தியானம் செய் என்போம். மற்றொருவர் கோர்ட் வழக்கில் வெற்றி பெற்வேண்டும் என்றால் துர்க்கை என்று வழிபடு என்போம். இப்படியாக தெய்வங்களின் எண்ணிக்கை பெருகும். இன்னும் சில தெய்வங்கள் நடிகர் நடிகையர் மூலம் திடீரெனப் பிரபலமாகும். மூகாம்பிகை, ஐயப்பன், ராகவேந்திரர் முதலியோர் வழிபாடு பிரபலமானதைக் குறிப்பிடலாம். 100 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலுக்குப் போனோர் தொகையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று இரண்டு கோடிப் பேர் செல்கின்றனர். இப்படிக் காலத்துக்கு காலம் கடவுளர் பெருமை ஏறி இறங்கினாலும் கடவுள் ஒருவனே, அவனை எல்லா வகையிலும் வழிபட முடியும் என்ற மாபெரும் உண்மையை, கை நாட்டு வைக்கும் கிழவியும் கூட அறிவாள்.
வேறு கலாசாரங்களில் வெவ்வேறு இன மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் பல் தெய்வங்கள் இணைந்துவிடும். ஆனால் பல பெயர்கள் மட்டும் மக்கள் மனதில் தங்கிவிடும். மேலை நாட்டில் முதல் முதலில் நாகரீகத்தைப் பரப்பிய கிரேக்கர்களின் தெய்வங்களுக்கு இணையாக ரோமானியர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரைப் புகலுவர் மற்றும் புகழுவர்.
Yasidi tribe has peacock as sacred symbol like Tamiol Skanda/ Muruga
இதே போல இந்தியாவில் இருந்து வேத கால நாகரீகத்தை மேற்கு ஆசியா, ஐரோப்பா முழுதும் எடுத்துச் சென்ற ‘ஹிட்டைட்ஸ்’, ‘காசைட்ஸ்’, ‘மிட்டனியன்ஸ்’ — நமது தெய்வங்களை அவர்களுடைய பழைய தெய்வங் களுடன் இணைத்தனர். இராக் மலைப் பகுதியில் வாழும் ‘யசீதி’ இனம் முதல் பல்வேறு இடங்களில் இந்துமதத்தின் எச்ச சொச்சங்களையும் மிச்சம் மீதிகளையும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கத்தில் “உலகம் முழுதும் சநாதன தர்மமே இருந்தது, அதன் தடயங்கள்தான் இவை — நாம் மதத்தைப் பரப்ப எடுத்துச் செல்லவில்லை, முன்னரே இருந்தவை” — என்று கூறுவதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
Please read my earlier posts on Sumer- India link
Hindu Vestiges in Iraq ( Posted on 12th August 2014)
Indus Valley to Egypt: Lapis lazuli Export (posted 0n 6th Sept.2014)
Why did Sumer and Egypt worship Indra? (Posted 14th Sept.2014)
Double Headed Eagle: Indian—Sumerian Connection (18th December 2011)
Birds for Finding Direction: Sumeria to Tamil Nadu via Indus Valley (Posted 8th April 2013)
Cremation: Sumerian – Hindu Similarities (Posted on 14th May 2014)
Sanskrit Words in Sumerian: Sumukan Mystery (Posted on 12th May 2014)
A Hindu Story in Sumerian Civilization (Posted on 11th May 2014)
Mysterious Fish Gods around the World (Posted 27-10-2012)
Tulabharam: Indian – Sumerian Connection (Posted on 2nd January 2012)
Serpent Queen: Sabarimalai to Indus Valley
Hindu Vahanas around the World
Seven gods on Seven vahanas in Iraq
Hindu Vahanas in Iraq (Posted on 21st October 2012)
330 Million Gods (முப்பத்து முக்கோடி தேவர்கள்)
இந்தக் கட்டுரைகளில் பலவற்றைத் தமிழிலும் தந்துள்ளேன்
(Most of these articles are published in Tamil as well around the same dates)
Contact swami_48@yahoo.com
Tammuz in Mesopotamia
You must be logged in to post a comment.