அதிசய மூலிகை ‘அபாமார்கன்’ – – அதர்வண வேத அதிசயச் செய்தி (Post No.10,474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,474

Date uploaded in London – –   22 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட”

………………………………………………….

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்” — கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

XXX

அதர்வண வேதம் முழுவதும் மூலிகை மர்மங்களும் அதிசயங்களும் விரவிக்கிடக்கின்றன . அவைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அளிப்பது இந்துக்களின் கடமை.

அதர்வண வேதம்- நாலாவது காண்டம்- துதி 17 (சூக்தம் 119)- தலைப்பு கேடும் குறையும்

பாடலின் பொருள் : இந்த துதியானது மந்திர குணமுள்ள ஒரு மூலிகையை நோக்கி இசைக்கப்படுகிறது . நோய்கள் தாக்காமல் இருக்கவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் உதவும் மூலிகை இது. பெயர் அபாமார்கன் – சுக்கிரன்- வனஸ்பதி ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

xxxx

இந்த துதியில் எட்டு மந்திரங்கள் உள்ளன

முதல் மந்திரம்

மருந்துகளின் மஹாராணியே ! வெற்றி கொடுப்பவளே ! உன்னை நான் பிடிக்கிறேன் ; ஓஷதியே ! ஒவ்வொருவருக்கும் (உதவ) ஆயிரம் சக்தி உடையவளாக செய்துவிட்டேன் .

மந்திரம் -2

நிச்சய வெற்றிதரும், சாபம் அழிக்கும்,மஹத்தான , மீண்டும் திரும்பும் உன்னை வேண்டுகிறேன்; அது எங்களைக் காக்கட்டும்; இதுவே பிரார்த்தனை

3

எங்களுக்குச் சாபம் இட்டவள் அல்லது தீய , கொலைகார எண்ணத்தை மனதில் கொண்டவள் அல்லது என் குழந்தைக்கு  தீங்கிழைப்பவள், அவள் கருத்தரித்துள்ள அவள் குழந்தையையே விழுங்கட்டும்

4.

சுடாத பானையில் அல்லது நீலம்- சிவப்பாகும் வரை சுட்ட பானையில் , சமைக்காத மாமிசத்தில்  அவர்கள் என்ன சூனியம் வைத்திருந்தாலும் அதைக்கொண்டே அவளை அழித்துவிட்டு

5

கெட்ட கனவு, அரக்கர், இராக்கதர், பிசினாறி , தீய பெயருள்ளவள், தீய நாற்றம் உடையவள் — ஆகிய அனைவரையும் விரட்டுகிறோம்

6

அபா மார்க்கனே , உன்னைக்கொண்டு —-   பசிப்பிணி மரணம், தாகத்தால் /வறட்சியால் ஏற்படும் மரணம், , குழந்தைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு ஆகியவற்றை துடைத்தது அழிக்கிறோம்

7.

இந்த மந்திரத்தில் ,மேற்கூறிய விஷயத்துடன்,  உடல் உறுப்புகளின் செயல் குறைவு ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.

ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உடல் உறுப்பு இழப்பு என்பதற்குப் பதிலாக சூதாட்டத் தோல்வி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்

8

வளரும் மூலிகைகளின் மன்னன் அபா மார்கன் ; அதை வைத்து இந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறோம்.

இது எட்டு மந்திரங்களின் சாராம்சம்

Xxxx

அபா மார்கம் என்றால் என்ன ?

தேள் கடி போன்ற விஷத்தை நீக்க இது பயன்படுகிறது மருந்துகள், யாகங்களிலும் உபயோகிக்கிறார்கள்; இதனுடைய வேறு பெயர்கள்- பராக் புஷ்பம், பிரத்யாக புஷ்பம்,  பிரத்யாக பரணி

இந்தப் பெயரின் சம்ஸ்க்ருத மொழி விளக்கம் —

அபா = உடன், உதவியுடன் ; ம்ரிஜ் = துடைத்து அழி = அபாமார்க ; ஏழாவது மந்திரத்தில் இது வினைச் சொல்லாக வந்துள்ளது

இதனுடைய தாவரவியல் பெயர்—

ACHYRANTHES ASPERA ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

மேல் விவரம் — லினன் போன்ற சணல் நார் துணிகளைச் சுத்தப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள்

இதனுடைய இலைகளும் பூக்களும்

எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதால் இதை ‘பராக்’ என்ற சொல்லின் மூலம் விளக்குகிறார்கள்

இந்த மூலிகையை 4-19-4, 6-129-3;  7-65-1 ஆகிய மந்திரங்களிலும் காணலாம்.

xxx

எனது விமர்சனம்

இந்துக்களிடையே இரண்டு, மூன்று  நம்பிக்கைகள் உண்டு

1. நாம் செய்த பாவத்தால் நோய்கள் வரும்

2. நாம் மற்றவர்க்கு தீங்கு செய்தால் நமக்குத் தீங்கு வரும்

3. பிறர், பில்லி, சூனியம், மாய மந்திரத்தால் நமக்கு நோய்களைத் தர  முடியும் .

இவை அனைத்துக்கும் விஞ்ஞான விளக்கமும் உளது

1. பாவம் என்பது என்ன ? கெட்ட உணவு, அதிக உணவு  உண்ணுதல், குடித்தல் , பெண் வழிச்  சேரல் , புகை பிடித்தல் முதலியன  இவை தீமை என்பதை டாக்டர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் – குறள் 202-  என்பது வள்ளுவன் வாக்கு.

2.நாம் மற்றவர்க்கு தீங்கிழைத்தால் அது நமக்கு கெடுதி செய்யும். உணமைதான் ; அவர்கள் பழிக்குப் பழி வாங்குவார்கள் ; அதுமட்டுமல்ல; கோபம், ஆத்திரம், சாபம் இடுதல் முதலியன ஒருவரின் சக்தியை உறிஞ்சுவிடும், மன நிலையைப் பாதிக்கும் என்று உள்ளவியல் – PSYCHOLOGIST சைக்காலஜிஸ்ட் — நிபுணர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்

இந்துக்கள் இதற்கும் மேல் ஒருபடி சென்று தர்மமே நம்மைத் தண்டிக்கும் என்பர். பக்கா ஹிந்துவான  வள்ளுவனும் — மறந்தும் பிறன்கேடு சூழற்க , சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு — குறள் 204 — என்கிறான். இது தர் மோ ரக்ஷதி ரக்ஷிதஹ — என்பதன் மறு  வடிவம்.

கடைசி விஷயம்,  எல்லா பண்பாடுகளிலும் உளது. ஐரோப்பாவில் 19 வயது பிரான்ஸ் நாட்டு வீராங்கனை ஜோன்  ஆப் ஆர்க் உள்பட 90 லட்சம் பெண்களை சூன்யக்காரி என்று சொல்லி கிறிஸ்தவர்கள் , உயிருடன் எரித்துக் கொன்றதை GRIFFITH கிரிப்பித், வேத மொழி பெயர்ப்பில் சுட்டிக்காட்டுகிறார். உலகம் முழுதும் இப்படி நடந்துள்ளது.

இந்துக்கள் அப்படி யாரையும் கொல்லவில்லை ; ஆனால் சூனியம் வைத்தலை நம்புகிறோம். இதில் சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள்; மக்களுக்கு அவற்றைச் சொன்னால் புரியாது; ஆகையால் பேய், பிசாசு என்று சொல்லி வேப்பிலை போன்ற உண்மையிலேயே மருத்துவ குணம் உள்ள செடிகொடிகளை பயன்படுத்தினர். இரண்டாவது விஷயம் மன நோயைக் குணப்படுத்த நோயாளிக்கும், நோயாளியின் குடும்பத்துக்கும் நம்பிக்கை ஊட்ட சில விஷயங்களைக் ‘கற்பித்து’ விரட்ட வேண்டும்.

 வெளிநாடுகளில் மன நோய் உடையவர்களைக் குணப்படுத்துவது ஒரு பெரிய பிசினஸ் (Money Making Industry) . ஐந்தில் ஒருவருக்கு மன நோய் தாக்கியதாக புள்ளி விவரம் கூறுகிறது. நல்ல தூக்கம் தூங்கும் வயதுள்ள ஆட்கள் வெளிநாட்டில் இல்லை; சிறுவர்கள் மட்டுமே நல்ல தூக்கம் தூங்குகிறார்கள். மன உளைச்சவர்கள், சண்டை போடுவோர் முதலியோர் கவுன்சலிங் COUNSELLING என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டாலர்களை டாக்டர்களுக்கு கொடுக்கின்றனர். இந்துக்கள் மாய மந்திரம் என்று சொல்லி 5, 6 மாதம் கோவிலைச் சுற்றச் செய்வார்கள். அவர்களும் பெரும்பாலும் குணம் அடைந்து விடுகிறார்கள்.

ஆயினும் பில்லி சூனியம் வெகு அபூர்வமாக நடை பெறுவதுண்டு . இதை கோடிக்கணக்கான இந்துக்கள் நம்புவதை கந்த சஷ்டிக் கவசம் முதலிய மந்திரங்கள் காட்டுகின்றன.; இது பற்றிய அச்சமும் மக்களிடையே இருக்கக்கூடாது என்பதற்காகவே தேவராய சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்றே நாம் கருத வேண்டும் .

தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியேனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு…

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் எனை தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்”

………………………… கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

—SUBHAM–

TAGS- அபாமார்க , நாயுருவி, அதர்வண வேதம், கந்த சஷ்டிக் கவசம், பில்லி, சூனியம்

கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் !! (Post No.9972)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9972

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவசங்கள் பற்றிய ஒரு புஸ்தகத்தின்  முன்னுரையைப் படித்தபோது அதை வெளியிட்டவர் “காஞ்சி சுவாமிகள் கவசங்கள் வேதத்திலேயே உள்ளது” என்று கூறியிருக்கிறார் என்று எழுதி இருந்தது. இப்பொழுது ரிக்வேதத்தின் ஜம்புநாதன்  அச்சிட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் ஏழு பாகங்கள் முடித்துவிட்டேன்; இன்னும் மூன்று பாகங்களைப் படிக்கவேண்டும் ஆயினும் காஞ்சி சுவாமிகள் சொன்னதுபோல ஆங்காங்கே குறிப்புகள் வருகின்றன.

பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனம் என்ற  வழிபாட்டை/ துதியை மூன்று முறை செய்யவேண்டும் . அதில் மத்தியானம் செய்யும் துதியில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரம் வருகிறது. அதில்  ‘சரதஸ் சதம்’ என்ற சொல் 100 ஆண்டுகள் நான் சரத் ருது எனப்படும் மழைக்காலத்தை அனுபவிப்பேன் ஆகுக என்று வேண்டுவதாகும் . நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவரும் திருக்குறளில் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் போற்றுகிறார். இதை பிராமணர்கள் தினமும் மந்திரமாகச் சொல்கின்றனர். அடுத்துவரும் மந்திரத்தில் நீரின் மந்திர சக்தியும் வருகிறது (ஆபோ ஹிஷ்டா மயோ …). இங்கே கவசம் பற்றி மட்டும் காண்போம்.

‘100 ஆண்டுக் காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க’ என்று வேண்டும் மத்தியான மந்திரத்தில் கண், காது ,மனம் புத்தி, உடல் வலு வேண்டும் என்ற கவசப் பகுதிகள் வந்து விடுகின்றன.

இன்னும் பல இடங்களில் எனக்கு எது வேண்டும் என்ற இடத்தில் கை , கால், பாதுகாப்பு பற்றிக் குறிப்பாக வேண்டும் மந்திரங்கள் வருகின்றன

நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து  வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list  கொடுக்கிறார்.

அந்த LIST லிஸ்டில்

“மதி, ஞானம், தவம் ,தானம் , மானம் , ஒளி , புகழ் , குலம் , வண் சரீரம்

தானம், தான்யம், , மனைவி, மைந்தர்”  என்ற வரிகள் வருகின்றன.

இந்த லிஸ்ட் ரிக் வேதத்தில் தனித்தனி மந்திரங்களில் வருகிறது.

ஆனால் ,

கந்த சஷ்டிக் கவசத்தில் எதிரிகளை எப்படி அழிக்க வேண்டும் என்ற வரிகள் வருகின்றன. அதில் உள்ள விஷயம் அப்படியே ரிக்வேதத்தில் வசிஷ்டர் சொல்லும் ஏழாவது மண்டல மந்திரத்தில் வருகிறது.

இதோ ஒப்பிட்டுப் பாருங்கள் :–

முதலில் உடல் உறுப்புகளைக் காக்கும்படி வேண்டிவிட்டு பின்னர் காலை முதல் இரவுவரை எல்லா நேரங்களிலும் காக்கும்படி வேண்டிவிட்டு இந்த வரிகள் வருகின்றன.:-

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர் களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்

…………………………………………………

இதில் எல்லா நோய்களிலிருந்து பாதுகாப்பும் பாவ மன்னிப்பும் வேண்டப்படுகிறது

XXXXXXXXX

இதோ வசிஷ்டர் சொல்லும் மந்திரம் :–

ரிக் வேதம் 7-104

மந்திரம் 1 (7-104-1)

இந்திர சோமர்களே! அரக்கர்களை அழியுங்கள் இருளுக்கு இருள் சேர்க்கும் கீழானவர்களை வீழ்த்துங்கள்.புல்லர்களை அகற்றுங்கள். கொல்லுங்கள் ; தீக்கிரையாக்குங்கள்.

மந்திரம் 2

இந்திர சோமர்களே!  தீமை செய்பவனை ஒழியுங்கள்; யாகத்தில் போடப்படும் அவிஸ் எரிந்து சாம்பல் ஆவதைப்போல உங்கள் கோபம் அவர்களை சாம்பலாக்கட்டும்.. கடவுளை எதிர்ப்போரையும், கோணல் பார்வையுடைவனையும் மனிதர் மாமிசத்தை உண்பவனையும் வெறுத்து ஒதுக்குங்கள்.

மந்திரம் 3

துஷ்டர்களை ஆழ்ந்த இருட் குகைக்குள் அமுக்கி வெளியே வரமுடியாதபடி செய்யுங்கள்

மந்திரம் 4

துஷ்டர்களை /கெட்டவர்களை அழிக்கும் ஆயுதத்தை வானத்திலிருந்து வீசுங்கள்; எரிக்கும் தீயை மேகத்திலிருந்து செலுத்துங்கள்

(அவன் தலையில் இடி விழுக என்று நாம் திட்டுவது போன்றது இந்த மந்திரம்)

6

இந்திரனே சோமனே , நீங்கள் இருவரும் ரதத்தில் கட்டப்பட்ட இரண்டு குதிரைகள் போன்றவர்கள்; என் துதியை இரண்டு அரசர்களைப் போல ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. துரோகிகளான அரக்கர் களைக் கொல்லுங்கள் அவர்களுக்கு சுகமே வரக்கூடாது

8.என் மனம் சுத்தமானது ; பொய் சொல்பவனை , பழி கூறுபவனை கையில் உள்ள நீர் போல  வழிந்தோடச் செய்க

9.நான் சத்தியத்தைக் கடைப் பிடிப்பவன் ; என்னைப் பழிச் சொற்களால் துன்புறுத்துபவனை பாம்பு கடிக்கட்டும்; நிருதி என்ற துஷ்ட தேவதையிடம் அவனை அனுப்புங்கள்

10. திருடர்களும் கொள்ளையர்களும் சந்ததியின்றி அழிவார்களாகுக

11. இரவிலும் பகலிலும் எங்கள் நாசத்தை நாடும் அவர்களின் புகழ் கெடுக.

12.பொய் எது, உண்மை எது என்று அறியும் பகுத்தறிவு மனிதனுக்கு உளது. சோம தேவன் சத்தியத்தைக் காப்பாற்றி பொய்மையை அழிக்கிறான் .

14.நான் அசத்திய தேவர்களைப் போற்றினால் என்னை தண்டிக்கவும்

15. நான் அரக்கனாக இருந்தாலோ யாரையாவது துன்புறுத்தி இருந்தாலோ இன்றே நான் மரிப்பேனாக . என் மீது பொய்ப்பழி சுமத்துபவன் பத்து புதல்வர்களையும் இழக்கட்டும்

16.என்னை அரக்கன் என்று சொல்வோன் மிருகங்களுக்கும் கீழான நிலையை அடையட்டும்.

17. இரவில் ஆந்தை போல அலையும் பெண்கள்/அரக்கிகள் எல்லையற்ற குகையில் தலை கீழாக விழட்டும்

18.மருத் தேவர்களே ! இரவில் வந்து வேள்வியை அழிப்போரை தேடிக் கண்டுபிடித்து பொடிப் பொடியாக்குங்கள்

19.இந்திரனே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளிலுள்ள தீயோரை உனது வஜ்ராயுதத்தால் அழி .

20.நாய்களோடு வரும் கபடர்களை இந்திரன் வஜ்ராயுதத்தினால் அழிக்கிறான்

21.வனத்தில் மரங்களை வெட்டும் கோடாரியைப் போல, மண் பானைகளை உடைப்பது போல எதிரிகளை இந்திரன் அழிக்கிறான்

7-104- 22

ஆந்தை போலும் ஆந்தைக் குஞ்சு போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

 நாய் போலவும் சக்ரவாகப் பறவை போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

பருந்தைப்போல, கழுதையைப் போல  உள்ள அரக்கர்களை அழித்து விடு

23. ஆணவம் பிடித்த தம்பதிகளை உஷா தேவி விலக்குவாளாகுக  பூமியிலும் வானத்திலும் எங்களுக்குத் துன்பம் நேரிடக் கூடாது.

24.

ஆண் வடிவம் எடுத்து வரும் அரக்கனைக் கொல்.

மாயையில் மகிழும் அரக்கியைக் கொல்

கபடத்தால் துன்புறுத்துவோரை அழி

கொலை செய்வோரின் தலைகள் வெட்டப்படட்டும் .

அவர்கள் இனி சூர்யோதயத்தையே காணாமற் போகட்டும்

7-104-25

இந்திரனே, சோமனே ! இருவரும் விழித்து இருங்கள்; சுற்றுமுற்றும் பாருங்கள் .

இம்சையே செய்யும் அரக்கர்கள் மீது\ ஆயுதத்தைச் செலுத்துங்கள்.

கந்த சஷ்டிக் கவசத்திலும் ரிக் வேதத்திலும் அகமும் புறமும் உள்ள எதிரிகள், பகைவர்கள், நம்மைத் துரத்தும் தீய குணங்கள் ஆகியன அழிந்து சுபீட்சம் பரவ வேண்டும் என்பதே. இரண்டு துதிகளுக்கும் இடையே 3000 ஆண்டு இடைவெளி இருந்தாலும்  உடல் நலம், மன நலம் வேண்டுவதிலும் நம் மனத்திலும் வெளியிலும் உள்ள பகைவர்கள் ஓடி ஒழிய வேண்டும் என்று கோருவதிலும் ஒற்றுமையைக் காண்கிறோம். அவர்களை நாம் அரக்கர் என்போம், பேய் பூதம் என்போம்.

கந்த சட்டிக் கவசத்தில் நீண்ட நோய்களின் பட்டியல் ஒன்று உளது. இது போல அருணகிரி நாதரின் திருப்புகழிலும் வியாதிகள் பட்டியல் உளது . இவைகளை சொல்லி அழியட்டும் என்று வேண்டும்போது நாம் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாசிட்டிவ் positive thoughts  எண்ணமும் மேம்படுகிறது.

கவசத்தைப் படியுங்கள், வேதத்தை ஓதுங்கள்

-சுபம்–

கந்த சஷ்டிக் கவசம், ரிக்வேதம், RV 7-104,