வியட்நாமியரின் வியத்தகு சம்ஸ்க்ருத அறிவு – 1 (Post No.7374)

Written by London swaminathan

Post no. 7374

Date 23 December 2019

Uploaded from London

Pictures are taken from various sources; thanks

கம்போடியாவில் சிவன், விஷ்ணு பாதங்கள் (Post No.7133)

India- Vietnam Joint Issue

Written by london Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am


Post No. 7133

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கடவுளின் பாத சுவடுகளை வழிபடுவதும், ஞானியரின் காலணிகளை வழிபடுவதும் பாரத நாட்டில் தொன்றுதொட்டு  இருந்துவரும் பழக்கங்கள். ராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டான் பரதன். காசி இந்து பல்கலைக் கழக துவக்க விழாவுக்கு வர இயலாது என்று சிருங்கேரி சுவாமிகள் சொன்னவுடன் பாதுகைகளை  வாங்கிச் சென்று பெரிய மரியாதை செய்து அவற்றைத் திருப்பி அனுப்பினார் அமைச்சர். பாதுகா சஹஸ்ரம் என்ற பெயரில் இறைவனின் திருவடிகள் மீது 1000 பாடல் இயற்றினார் வேதாந்த தேசிகன். வள்ளலார் பாதக் குறடுகள் முதல் மஹாத்மா காந்திஜியின் பாதக் குறடுகள் வரை இன்றும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் தரிசிக்கப்படுகிறது.

இந்துக்களுக்கு மண்ணும் புனிதம், மலையும் புனிதம். பக்தர்களின் காலடித் தூசி தன்  மீது படவேண்டும் என்பதற்காக மாமன்னர்கள் தங்கள் பாத சுவடுகளை கோவில் தரைகளில் பொறிக்க வைத்தனர். ஆனால் அவர்கள் காலடிச் சுவடுகள் மீது நாம் படக்கூடாது என்று அஞ்சி அதன் மீதும் மண்டபம் எழுப்பிவிட்டோம்.

இமய மலை முதல் இலங்கையின் சிவனொளி பாத மலை (Adam’s Peak) வரை பாதச் சுவடுகளை வழிபடுவதில் வியப்பில்லை ஆனால் கம்போடியாவிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபடக்கூடிய பாத சுவடுகள் உள்ளதைப் பலரும் அறியார்.

வியட்நாம், கம்போடியாவின் பழைய பகுதி ப்யூனான் (Funan). அங்கு முக்கிய வைஷ்ணவக் கல்வெட்டுகள் கிடைத்தன. ஒரு கல்வெட்டு ஜயவர்மனின் மனைவி குலப் பிரபாவதி செய்த தானம் பற்றியது. பிராமணர்கள் வசிக்கும் குரும்ப நகரத்தில் அவள் இறைவனின் தங்க விக்ரகத்தை நிறுவினாள்; ஒரு நந்தவனத்தையும், ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்தாள்; மற்றொரு கல்வெட்டு விஷ்ணுவின் பாத சுவடுகள் பற்றியது. குணவர்மன் என்பவன் சக்ர தீர்த்த ஸ்வாமின் என்னும் விஷ்ணுவின் பாத சுவடுகளைப் பொறித்தான். அடுத்ததாக ருத்ரவர்மன் கல்வெட்டு புத்தர், பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறது.

604-ம் (CE 604) ஆண்டில் (சக ஆண்டு 526) ஒரு பிராஹ்மணன், மலை உச்சியில் சிவன் பாதத்தைப் பொறித்து அதன் மீது தண்ணீர், பால் விழுவதற்காக ஒரு குடத்தை நிர்மாணிததாக ஒரு கல்வெட்டு இயம்புகிறது. அதைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பியதையும் கல்வெட்டு உரைக்கிறது.

613 (CE 613) ஆண்டில் சிவன் மடி மீது பார்வதி அமர்ந்த சிலை நிர்மாணிக்கப்பட்டதை மற்றொரு கல்வெட்டு காட்டுகிறது.

xxxx

Brahma Stamp in Indo China

சீனர்கள் அடித்த கொள்ளை – ஒரு லட்சம் பவுண்டு தங்கம்

சீனாவின் லியங் வம்சாவளி (History of Liang Dynasty) )  பற்றிய புஸ்தகம் கிடைத்துள்ளது. அதில் வியட்நாமென்னும் சம்பா  தேசத்தில் இருந்து சீனர்கள் ஒரு லட்சம் பவுண்டு எடையுள்ள தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும் கவுண்டின்ய வம்சத்தில் வந்த மன்னர் தங்க சிம்மாசனத்தில் படாடோபங்களுடன், அழகிகள் சாமரம் வீச, எழுந்தருளியதாகவும் எழுதி வைத்துள்ளனர். இப்பொழுது நாம் சினிமாவில் காணும் மன்னர்களின் காட்சிகள் அத்தனையையும் அவர்கள் அப்படியே வருணித்து எழுதியுள்ளனர்.

சம்பா தேச பாமர மக்கள் உடை அணியாமல் இருந்ததாகவும் அவர்களுக்கும் உடை அணியும் வழக்கததை கவுண்டின்யர் கற்றுக் கொடுத்தகதாவும் சீனர்கள் எழுதி வைத்துள்ளனர்.

சீனர்களுக்கு சிறிய கப்பல் மட்டுமே கட்டத் தெரிந்ததால், தென் சீனக் கடலில் ,இந்துக்களின் நீண்ட கப்பல்களுக்கு , பயணிகள் மாற்றப்பட்டதாகவும் சீனர்கள் சொல்கின்றனர்.

ஒரு பவுண்டு= 453 கிராம்; ஒரு பவுன்/ சவரன் = எட்டு கிராம்)

xxx

உடனே செய்க!

உலக நாடுகள் முழுதும் அவரவர் எழுதிய புது வரலாற்றைப் படிக்கின்றனர். இந்தியர்கள் மாட்டும் வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றை இன்று வரை படிக்கின்றனர்!!!

இந்திய வரலாற்றை விரைவில் திருத்தி எழுத மாபெரும் இயக்கம் துவக்க வேண்டும். தமிழர்களும் ஏனைய தென் இந்தியர்களும் தென் கிழக்கு ஆசியாவில் எட்டு நாடுகளை 1500 ஆண்டுகளுக்கு ஆண்டதை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்; சிங்க்கப்பூரின் பெயர் சம்ஸ்க்ருதம் (சிம்ஹ புரம்; இலங்கையின் பெயர் சம்ஸ்க்ருதம்- லங்கா, சிம்ஹலதேச); பர்மாவின் பெயர் பிரஹ்மா, கம்போடியாவின் பெயர் காம்போஜம், லாவோஸின் பெயர் லவன் தேசம்; வியட்நாமின் பழைய பெயர் சம்பா; மலேயாவின் பெயர் மலை நாடு- தமிழ்) சாவகம், சுமத்ரா போன்ற` இந்தோநேஷிய தீவுகள் தமிழ், சம்ஸ்கிருத நூல்களில் உள்ளன; தென் கிழக்காசிய வரலாற்றை தமிழர்கள் கற்றால் ராஜேந்திர சோழன், வீர பாண்டியன், குலோத்துங்க சோழனின் கடற்படை வலிமை புரியும். வியட்நாமை ஆண்ட திருமாற பாண்டியன் முதல் 1500 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் கொடிகட்டிப் பறந்தனர்). அந்த புகழோங்கிய காலம் மீண்டும் வரும்; வரச் செய்ய முடியும்!)

Shoe worship | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › shoe-worship

1.      

15 Aug 2012 – Why Do Hindus Worship Shoes? By London swaminathan. “A pair of sandals worn by the Maharishi is expected to fetch £80,000 when they are …

Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints! (Post …



https://tamilandvedas.com › 2017/04/08 › nayan-tara-temple-in-syria-with-…

1.      

8 Apr 2017 – Written by London swaminathan Date: 8 APRIL 2017 Time uploaded in London:- 13-47 Post No. 3799 Pictures are taken from various sources; …

Footprints on sands | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › footprints-on-sands

1.      

12 Jul 2017 – Written by London Swaminathan Date: 12 July 2017. Time uploaded in London- 18-24. Post No. 4074. Pictures shown here are taken from …

Durga | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › durga

1.      

20 Jul 2018 – The kings foot prints were engraved on a boulder and it indicated he ruled or conquered that area. In the text of the inscription he compared his …

காலமெனும் மணலிற் காலடி ‘Footprints …



https://tamilandvedas.com › 2018/10/07 › காலம…

1.      

Translate this page

7 Oct 2018 – Tamil and Vedas … காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the … some of his most famous poems, including the Village Black Smith. … Manu and Longfellow: Great Men think Alike (Post No.4074)In …

Xxxx subham xxxx

கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு. 

இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.

 

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  8-25 am  (British Summer Time)

Post No. 5098

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

 

பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.

 

கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-

 

‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.

 

 

கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.

 

மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.

 

பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.

 

நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல    மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.

எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்)துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டுக்யூனிபார்ம் லிபியில் உளது.

மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.

 

சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.

 

மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.

 

தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.

 

கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள்  உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.

 

அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.

 

 

ஐயருக்கும் கோவில்கள்

சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

 

எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.

 

 

ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.

 

இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும்  கல்வெட்டுகளும் உள.

 

1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த  தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.

 

கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.

 

சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய  கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.

 

தாய்லாந்தில்

தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.

 

ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத  இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.

-சுபம்-