எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர் (Post No.5219)

Written by S NAGARAJAN

 

Date: 15 JULY 2018

 

Time uploaded in London –   8-33 AM (British Summer Time)

 

Post No. 5219

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

புத்த தரிசனம்

எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்

ச.நாகராஜன்

அற்புதமான புத்த சரித்திரம் அவரது எல்லையற்ற கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் காண்பிக்கிறது. புத்த ஜோதியைத் தரிசித்த யாவரும் பரிசுத்தமாயினர்;ஜோதிக்குள் ஐக்கியமாயினர்.

இங்கு சில நிகழ்வுகளை புத்த சரித்திரத்திலிருந்து பார்க்கலாம்.

அங்குலிமாலா என்ற கொள்ளைக்காரன் அந்த நாளில் வாழ்ந்து வந்தான். அவனை நினைத்தாலே அனைவரும் பயப்படுவர். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை அறுத்து அதை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டவன் அவன். இரக்கமின்றி எதிரில் வருபவரைக் கொன்று குவித்த கொலைகாரன். ஆகவே அவன் பெயரைச் சொன்னாலே அனைவரும் நடுங்குவர்.

ஒருநாள் புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியைப் பார்த்த மக்கள் அவர் அருகில் சென்று அந்த வழியில் போகவேண்டாம் என்றும் அது நேரடியாக அங்குலிமாலாவின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்து விடும் என்றும் எச்சரித்தனர்.

அமைதியாக அதைக் கேட்டுக் கொண்ட புத்தர் தன் வழியிலே செல்லலானார்.

அங்குலிமாலா ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தான். எதிரிலே புத்தர் வருவதைக் கண்ட அவன், “என்ன, என்னைக் கண்டு பயமில்லையா! ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று கர்ஜித்தான்.

அமைதியாக புத்தர் அவனை நோக்கிப் புன்முறுவலுடன் முன்னேறினார்.

அச்சமின்றி தன் எதிரில் வரும் ஜோதி வெள்ளத்தைக் கண்டு அவன் பிரமித்தான். அவர் விரலை அறுக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை. அவர் பாதத்தில் வீழ்ந்தான்.

அந்தக் கணமே கொள்ளைக்காரன் அங்குலிமாலா மறைய, புதிய புத்த சீடனான அங்குலிமாலா உருவானானான். அவன் புதிய பெயரையும் பெற்றான்.

பத்து வருடங்கள் கழிந்தன. புத்தர் ஒருநாள் அவனை அழைத்து, “ நீ தகுதி பெற்றவனாகி விட்டாய்! சென்று தர்ம பிரச்சாரம் செய்” என்று கட்டளையிட்டார்.

 

ஆனால் மக்கள் அங்குலிமாலாவைக் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆனால் அங்குலிமாலா புன்சிரிப்புடன் அவர்களை எதிர்கொண்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதனால் இந்த மாற்றம்?

அங்குலிமாலா கூறினான்: “ நான் முன்பு செய்த கொடுமைகள் அவர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது உண்மை தான். ஆனால் அதை விட அதிக கோபம் இப்போது அவர்கள் என்னைக் கல்லைக் கொண்டு எறியும் போதும் நான் பேசாமல் இருப்பதால் அதிகம் ஏற்படும். என் உள்ளார்ந்த அமைதியை அவர்கள் உணர்வர். அந்த அற்புதமான தெய்வீக ஞானத்தைப் பெற அவர்கள் தாமாகவே முன் வருவர்.”

உண்மை! அதிசயிக்கத் தக்க மாற்றத்தைக் காண்பித்த கொள்ளைக்காரன் இப்போது புத்த பிக்ஷுவாக மாறியதைக் கண்டு வியந்த மக்கள் இப்போது அவன் கூறும் தர்மோபதேசத்தைக் கேட்கத் தயாராயினர்.

ஆம்ரபாலி என்று பெரும்பாலோரால் அறியப்படும் அம்பாபாலிகா வைசாலி நாட்டின் பேரழகி. சம்ஸ்கிருதத்தில் ஆம்ரம் என்றால் மாமரத்தைக் குறிக்கும். பாலி இலையைக் குறிக்கும். அவள் அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்குப் பெயர் ஆம்ரபாலி ஆயிற்று.

அவளை அடைய பெரும் பிரபுக்களும் செல்வந்தர்களும் விரும்பினர். இதை விரும்பாத வைசாலி மன்னன் இதைத் தடுக்க ஒரே வழி அவளை அரசவை நடனமங்கை ஆக்குவது தான் என்ற முடிவுக்கு வந்து அவளை அரசவை நடன மங்கை ஆக்கினான். ஆனால் அடுத்த நாட்டு அரசனான பிம்பசாரன் அவளுக்கு இணையான இன்னொரு அழகியைத் தனது நாட்டில் அரசவை நடனமங்கையாக அறிவிக்க முடியாமல் தவித்தான். ஆகவே போரை மேற்கொண்டு வைசாலியை ஜெயித்து அவளை மணந்தான். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

ஒருமுறை ஆம்ரபாலி புத்தருக்கு பிக்ஷை அளிக்க விரும்பினாள். அதே தினத்தில் லிச்சாவி மன்னனும் புத்தரை விருந்துக்கு – பிக்ஷைக்கு – அழைத்தான்.

ஆனால் மன்னனின் கோபத்தையும் மீறி ஆம்ரபாலி இல்லத்திற்கு புத்தர் விருந்தை ஏற்க ஏகினார். அங்கு அவளுக்கு புத்த தர்மத்தை உபதேசித்தார்.

எல்லையற்ற கருணைவெள்ளமான புத்த தரிசனத்தை அம்பாபாலிகா பெற்றாள். உடனே மாறினாள். அவளும் அவளது மகன் விமல் கொண்டனனும் புத்தமதம் தழுவினர்.

ஒருமுறை அங்குட்டராபா பட்டிணத்தில் ஆபனா நகருக்கு புத்தர் தன் 1250 சீடர்களுடன் விஜயம் செய்தார். 1250 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் புத்தரின் பின் சென்றதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். வீதி வழியே அவர்கள் செல்ல மக்கள் வீதியின் இருபுறமும் திரளாக நின்று அவர்களை வரவேற்று வணங்கினர்.

கேனியா என்று ஒரு பிராமணர் புத்தரின் அருகில் சென்று அவரை வணங்கி அவரிடம் தனது இல்லம் வந்து பிக்ஷையை ஏற்குமாறு கூறினார்.புத்தர் மறுத்து விட்டார்.

 

“பெரிய குழுவுடன் நான் வந்திருக்கிறேன். அனைவருக்கும் உணவு சமைப்பது என்றால் அது பெருத்த சிரமத்தை உருவாக்கும். வர இயலாது” என்றார் புத்தர்.

கேனியா மூன்று முறை அழைத்தார். அதற்குப் பின்னர் புத்தர் அவர் அழைப்பை ஏற்றார்.

1250 பேருக்கு உணவைச் சமைப்பதில் ஏற்படும் கஷ்டமும், அவர்களுக்குப் பரிமாறுவதில் உள்ள சிரமத்தையும் உலகாயத ரீதியாக அறிந்ததால் புத்தர் அதை மறுத்தார். மூன்று முறை அழைத்தவுடன் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் தகுந்த குழுக்களை அமைத்து 1250 பேருக்கும் கேனியா விருந்தளித்தார்.

விருந்துக்குப் பின்னர் புத்தர் தர்மோபதேசத்தைச் செய்தார்.

அனைவரும் பயனடைந்தனர்.

புத்தர் போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்த பின்னர், முதலாவதாக தான் மதித்து கௌரவிக்க வேண்டிய குரு யாராவது தனக்கு இருக்கிறாரா என்பதைத்தான் கண்டுபிடிக்க முயன்றார். தனக்கு இணையான ஒரு நபரையே அவரால் கண்டு பிடிக்க முடியாமல் போனது. ஆகவே குருவைக் கண்டு பிடிக்கும் பிரச்சினை இன்னும் சிக்கலானது. அப்படி ஒரு குரு இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

ந மே ஆசார்ய அத்தி சதிஸா மேன நவீஜ்ஜா இதி (எனக்கு ஒரு குரு இல்லை; என்னை ஒத்த இன்னொருவரும் இல்லை)

ஆகவே தான் புத்தர் தனது தர்மத்தையே  தனது குருவாகக் கொண்டார்.

அந்த தர்மத்தை அஹிம்சா வழியில் அனைவருக்கும் உபதேசித்தார்.

அவரது கருணைவெள்ளம் கரை புரண்டு ஓட அதில் நனைந்து மக்கள் மகிழ்ந்தனர்.

 

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

 

***

 

 

கருணையுள்ள வேலைக்காரி! (Post No.2935)

maid

Written by London swaminathan

 

Date: 1 July 2016

Post No. 2935

Time uploaded in London :– 18-45

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வில்லியம் டீன் ஹோவல்ஸ் என்பவர் சிறந்த நாவல் ஆசிரியர். அவருடைய மனைவி, ஒரு வேலைக்காரியை வீட்டு வேலைக்கு வைத்திருந்தார். நாவல் ஆசிரியர் என்பதால் வில்லியம் எப்போதும் வீட்டிலிருந்தே கதை எழுதி வந்தார். இதைப் பார்த்த வேலைக்காரிக்கு கருணை ஏற்பட்டது.

 

ஒரு நாள், சமையல் அறைக்குள், திருமதி  ஹோவல்ஸ் நுழைந்தார்.

வேலைக்காரி: அம்மா, உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?

திருமதி ஹோவல்ஸ்: என்ன வேணும்? மேரி, சொல்லு.

 

ஒன்றுமில்லை, அம்மா, நீங்கள் எனக்கு வாரத்துக்கு நாலு டாலர் சம்பளம் தருகிறீர்கள்…………….

 

திருமதி ஹோவல்ஸ்: – இதோ பார் இதற்கு மேல் என்னால் தரமுடியாது.

 

வேலைக்காரி: அம்மா, அதை நான் சொல்லவில்லை. ஐயா வீட்டிலெயே இருக்கிறாரே. எனக்குப் பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. அவருக்கு வேலை கிடைக்கும் வரை என் சம்பளத்தை மூன்று டாலராகக் குறைத்துக் கொடுங்களேன்.

 

 

வேலைக்காரிக்கு இவ்வளவு கருணை உள்ளமா? என் று திகைத்துப்  போனார் திருமதி ஹோவல்ஸ்.

KWS Mona Lake dead fish 6.JPG

Dead fish float on the shoreline of Mona Lake along Wellesley Drive just east of Ross Park in Norton Shores Wednesday. Date shot: 4/2/08.

கருவாடு நாற்றம்!!

 

வில்லியம் வாண்டபில்ட் என்பவர் தக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு ஹோட்டலில் (விடுதியில்) தங்கி இருந்தார். ஹோட்டல் அறையில் இருந்த ஒரு துண்டு, துவைக்காத துண்டுபோல அழுக்காக இருந்தது.

 

ஹோட்டல் ஊழியரை அழைத்து, அதைக் காண்பித்தார்.

 

“ஸார், வழக்கமான லாண்டரியில்தான் சார், எல்லாம் சலவைக்குப் போய் வருகிறது.”

 

வாண்டர்பில்ட்: “இந்த துண்டை முகர்ந்து பார். கருவாட்டு நாற்றம் வீசுகிறது.”

 

“ஓ, அதுவா? ஸார்? ஒரு வேளை நீங்கள் முன்னதாகப் பயன்படுத்தி இருப்பீர்கள். பின்னர் மறந்து போயிருக்கலாம் அல்லவா?”

 

(வாண்டர்பில்ட் தலையில் அடித்துக்கொள்ளாததுதான் குறை!!)

–subham-

 

 

வால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)

eagle1

Written by S Nagarajan

 

Date: 20  February 2016

 

Post No. 2558

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

  19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மேதை உள்ளம்

வால்டேர் வளர்த்த கழுகு

 

.நாகராஜன்

 voltaire

உலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்

ஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.

“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.

தன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்!

அப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.

பறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.

கடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.

மாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.

“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”

இப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.

பறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.

 

eagle2

வைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.

அவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

மறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

வால்டேருக்கு புதிய வேலையாக இது  வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது?” என்பது தான்!
“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.

ஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே  இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா! எப்படிப்பட்ட நல்ல செய்தி! என் கழுகு நன்கு குணமாகி விட்டதா?” என்றார்

 

.”இல்லை ஐயா!  அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது  செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.

இதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.

“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு!” என்று ஒரு கூப்பாடு போட்டார்.

நடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா?’ என்று கேட்டாள்.

ரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.

“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம்! நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா? விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.

 

eagle-flying-on-sky

இரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்?” என்று கேட்டார்

“ஐயோ, பாவம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்றாள் டெனிஸ்.

“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள்? ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன? இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான்  உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.

மிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.

ஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.

“ஒரு வார்த்தையும் பேசாதே! ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா! ஓடிப் போ” என்றார் வால்டேர்.

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.

 

 

கருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.

கஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.

கருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து!

************

.

 

 

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.

கருணைக்கு அருணகிரி!

Written by London swaminathan

Date: 21 April 2015; Post No: 1817

Uploaded in London at 17-47

உரையாசிரியர்களில் வல்லவரான நச்சினார்க்கினியரை “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்றும் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியனை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” என்றும் சங்கத் தமிழில் மிக அதிகப் பாடல்களை இயற்றிய பிராமணப் புலவன் கபிலனை “புலன் அழுக்கற்ற (ஜிதேந்திரியன்) அந்தணாளன்”, “வாய்மொழிக் (சத்தியவான்) கபிலன்” என்றும் பாராட்டுவர். நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்றும் அடை மொழி கொடுத்து பாராட்டிப் போற்றுவர். இதில் ஒவ்வொன்றிற்கும் ஒர் காரணம் உண்டு. இதே போல திருப்புகழ் பாடி சந்தக் கவிகளால் பெயர் பெற்ற அருணகிரிநாதருக்கு ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. “கருணைக்கு அருணகிரி” என்று அவரை பக்தர் உலகமும் தமிழ் உலகமும் போற்றும்.

“கருணைக்கு அருணகிரி” என்று அவரைப் போற்ற பல காரணங்கள் உண்டு. கந்தனின் கருணையால் அவருக்கு மறு ஜன்மம் கிடைத்தது. கந்தனின் கருணை மழையில் நாம் எல்லோரும் நனைய நமக்கு 1300-க்கும் மேலான திருப்புகழ்களைக் கொடுத்தார். இதையெல்லாம் விட தமிழ்ப் புலவர்களை எல்லாம் தமது அகந்தையால் படாதபாடு படுத்திய வில்லிப்புத்தூராரைத் தண்டிக்க வாய்ப்புக் கிடைத்தும் அவர் மீது கருணை காட்டினார்.

அது என்ன கதை?

வில்லிபுத்தூரார் தன்னை மிஞ்சிய தமிழ் அறிவு யாருக்கும் இல்லை என்றார். அப்படி யாராவது தனக்கும் மிஞ்சிய அறிவு படைத்ததாகச் சொன்னால் கவிதைப் போட்டிக்கு வரவேண்டும் என்றும் சவால் விட்டார். அந்தப் போட்டியில் தோற்போரின் காதைக் துறட்டு வைத்து அறுத்தும் விடுவார். பல போலி புலவர்களை நடுநடுங்க வைத்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று புலவர் என்று பெயர் சொல்லிய எல்லோரையும் வாதுக்கு அழைத்தார்; வம்புக்கும் இழுத்தார்.

அருணகிரி புகழ் அறிந்து அவர் வாழ்ந்த திருவண்ணாமலைக்கும் வந்தார். திருப்புகழையும் குறை சொன்னார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டி, அந்தப் பகுதி மன்னன் பிரபுடதேவன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தான். அருணகிரியும், வில்லிப் புத்தூராரும் அதற்கு இசைவு தெரிவித்தனர். எப்போதும் நிபந்தனை போடும் வில்லிக்கு வில்லனாக வந்த அருணகிரியும் ஒரு நிபந்தனை விதித்தார். தன் கையிலும் ஒரு துறட்டியைக் கொடுக்க வேண்டும் என்றும் வில்லி தோற்றால் அவர் காது அறுபடும் என்றும் எச்சரித்தார்.

அருணகிரி பாடும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்ல வில்லி ஒப்புக் கொண்டார். முருகன் அருள் பெற்ற அருணகிரி, கந்தர் அந்தாதி என்னும் அற்புதப் பாட்டை எட்டுக்கட்டி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லச் சொல்ல போட்டி நீண்டு கொண்டே போனது. ஐம்பத்து நான்கு பாடல்கள் வரை பாடி முடித்த அருணகிரி, ஒரே எழுத்துக்களான கவிதையை எடுத்து வீசினார். இது பொருளற்ற பிதற்றல் என்றும் அப்படிப் பொருள் இருந்தால் அதற்கு அருணகிரியே பொருள் சொல்லட்டும் என்றும் வில்லிப்புத்தூரார் கூறினார்.

அபோது அருணகிரி, ‘குமரா’ என்று பெயர் சொல்லி அழைக்க ஒரு பாலகன் அவர் முன்னே வந்தான். அதாவது முருகனே பையன் போல வந்தான். அவனே அக்கவிதைக்கும் பொருள் சொல்லவே வில்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆயினும் அவரது காதை அறுக்காமல் விட்டு விட்டு அவரிடம் இருந்த துறட்டியையும் வாங்கிக் கொண்டு நீங்களும் நல்ல கவி இயற்றிப் புகழ் பெறலாமே என்று அறிவுரையும் ஆசியும் வழங்கினார்.

இதற்குப் பின்னரே வில்லிப்புத்தூரார் மஹாபாரதத்தை தமிழ் வடிவில் தந்து பெயர் பெற்றார். இன்று வரை வில்லி பாரதம் அவர்தம் புகழைப் பரப்புகிறது. அகந்தை அழிந்து அறிவுக் கண் திறக்க உதவிய அருணகிரியை உலகம், “கருணைக்கு அருணகிரி” என்று வாழ்த்தியது.

அவர் பாடிய, வில்லியைத் திணறடித்த, பாடல்:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதன் பொருள்:

திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய (தாதை) பரமசிவனும், மறை கிழவோனாகிய (தாத) பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய (தத்தி) ஆதிசேசனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய (அத்தி) திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசத் தலமாகக் கொண்டு), ஆயர்பாடியில் (ததி) தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே (தித்தித்ததே) என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்), போற்றித் (துதித்து) வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே (ஆதி), தந்தங்களை (தத்தத்து) உடைய, யானையாகிய ஐராவதத்தால் (அத்தி) வளர்க்கப்பட்ட, கிளி (தத்தை) போன்ற தேவயானையின்,தாசனே, பல தீமைகள் (திதே துதை) நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு), அக்னியினால் (தீ), தகிக்கப்படும், அந்த (திதி) அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து (துதி தீ) வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட (தொத்ததே) வேண்டும்.