ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,181

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

RV.10-16-4

இது தகனம் செய்யும் மந்திரம் / சுடுகாட்டில்

“அக்கினியே, தேகத்தில் பிறப்பில்லாத ஒரு பாகம் /ஆன்மா இருக்கிறது. அதை தூய்மை செய்க;. நீ எரித்து அழித்த  உடல் உறுப்புகளுடன் அவனை புனிதர்கள் வாழும் இடத்துக்கு அழைத்துச் செல்க”.

RV.10-16-5

“அக்கினியே உனக்கு அளிக்கப்பட்ட பொ ருட்களுடன் வருபவனை பிதாக்களிடம்/ முன்னோரிடம் அழைத்துச் செல்க. அவன் ஜீவனை அடைந்து சந்ததியை வளர்ப்பான் ஆகுக. ஜாத வேதசனே/ அக்கினியே அவனை மீண்டும் தேகத்துடன் சேர்த்து வைப்பாயாகுக”.

இதில் இறந்து போனவர் மீண்டும் பிறந்து சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற கருத்து தொனிக்கிறது. எப்போது??

 புனித உலகத்தில்/ சொர்க்கத்தில் வாசம் முடிந்தவுடன் என்பதும் தெளிவாகிறது .

இந்தக் கருத்துக்கள் இந்திய மதங்களைத் தவிர ஏனைய செமிட்டிக் மதங்களுக்கு Semitic Religions  (யூத, கிறித்தவ, இஸ்லாமிய) எதிரானவை. ஆகவே வெள்ளைக்காரப் பயல்கள் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை. மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்கள் வாய் மூடி மௌனியாகி விடுவார்கள்!!!

Xxx

ரிக்வேதம் RV. 10-54 முதல் Rv.10-60 துதிகள்

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஏராளமான ஈமக்கிரியை விஷயங்கள் (Funeral Rites) வருகின்றன. அவற்றை விளக்க வெள்ளைத் தோல் வெளிநாட்டனாலோ மார்க்சீய கும்பலினாலோ முடியாது. இதை இன்றும் சுடுகாட்டிலும் , வீட்டில் நடக்கும் திவச திதிகளை செய்வோரும் மட்டுமே விளக்க முடியும். குறிப்பாக ஞான திருஷ்டி உடைய சாது சன்யாசிகள் மூலமே அறியமுடியும். இங்கே அசுநீதி , அசமாதி , அனுமதி, உஸீநாரணி   ஆகிய புதிய பித்ருலோக தேவதைகள் பற்றி ரிஷிகள் பாடுகின்றனர்.

xxx

ஒரு சில குறிப்புகளை மட்டும் காண்போம்

RV. 10-56-1; 10-56-2

மூன்று ஒளிகள் இருக்கின்றன; இங்கே தகன அக்கினி; மேலே ஒரு வெளிச்சம்; அதையும் தாண்டி உள்ள ஒளியுடன் கலப் பாயாகுக

அது தேவர்களின் பிறப்பிடம். அன்பு செழிக்கும் இடம்.

நீ வானத்திலுள்ள ஒளியிலும், சூரியனுடைய ஒளியிலும், உன்னுடைய சொந்த ஒளியிலும் நுழைவாயாகுக.

ரிக் வேதத்தின் 56ஆவது துதியின் அடிக்குறிப்பு இறந்தவர்கள் ஒளி ரூபத்தில் சென்று மஹத்தான ஒளியுடன் கலப்பார்கள் என்று சொல்கிறது .

XXXX

RV.10-56-7

“புவியின் பல திசைகளுக்குச் செல்ல கப்பலில்  நீரின் மீது சென்று எல்லாக் கஷ்டங்களையும் கடந்த மனிதர்களைப் போல பிருகதுக்தன் , தன்  பலத்தால் தன்  புதல்வனை — வாஜிநனை — இங்கு அக்கினி முதலியவற்றில் – அங்கு சூ ரியன் முதலியவற்றில் ஸ்தாபித்தான்” .

இப்படி ரிக் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் எழுதியபோதும் இதைப் பாடிய ரிஷியின் பெயர், புதல்வர் பெயர் எல்லாம் உண்மைப் பெயர்கள் அல்ல; அடையாள பூர்வ பெயர்களே என்ற கருத்தும் தொனிக்கிறது.

xxxx

RV.10-58-12

58-ஆவது துதி மனம் பற்றிப் பேசுகிறதா , இறந்தவரின் ஆவி பற்றிப் பேசுகிறதா என்று எவருக்கும் தெளிவாகவில்லை. ஆகையால் இரண்டு பெயர்களையும் (MIND/SPIRIT)  எழுதிவிட்டார்கள் .

எமனிடம் சென்றுள்ள உன்னை மீண்டும் இங்கு வசிக்கச் செய்கிறோம் என்பது பல்லவி போல  12 மந்திரங்களிலும் வருகிறது. இதில் 12ஆவது மந்திரத்தை ஜம்புநாதன் மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்.

இதோ மந்திரம்  எண் 12

“உன்னுடைய ஆவி இருக்கும் மற்றும் இருக்கப் போகும், தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

மந்திரம் எண் 7

“உன்னுடைய ஆவி நீரிலும் தாவரங்களிலும் , தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

இது கல், மண், புல் முதலிய எல்லாவற்றுமாக மனிதன் பல பிறவிகள் எடுப்பதும் தொனிக்கிறதது . மாணிக்கவாசகர் போலத் தெளிவாகப்படுகிறார் ரிஷி.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

………… மாணிக்கவாசகர், திருவாசகம்

xxx

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

இந்த  12 மந்திரங்களிலும் இறந்த ஆவியை மீண்டும் இங்கு வசிக்க அழைப்பது மறுபிறப்பை வலியுறுத்துகிறது

Xxxx

ஈமக்  கிரியையில் படகு வைத்ததை என் அம்மாவின் இறுதிச் சடங்கிலே  எழுதினேன் ; எகிப்திலும் இது உள்ளது .

இதோ மேலும் ஒரு கப்பல் மந்திரம் ; இதையும் எதோ ஒரு காரணத்தினால் ஜம்புநாதன் மொழி பெயர்க்கவில்லை. 10,000+++ மந்திரங்களில் அவர் விட்டுப்போன மந்திரங்கள் சுமார் பத்துதான் ; அதில் ஒன்று இங்கே –

RV.10-135-4

“பாலனே , நீ ரிஷிகளிடமிருந்து இங்கே வரச்செய்த தேர் , சாமனால்  பின்தொடரப்பட்டது. ஆகையால் இரண்டையும் கப்பலில் வைத்துள்ளோம்”. (இங்குள்ள 7 மந்திரங்களும் எமனை நோக்கிச் சொல்லும் மந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. )

RV.10-135-1

“நல்ல இலைகளுள்ள மரத்தின் அருகே எமன் தேவர்களோடு பருகுகிறான். எமன் மனையின் தலைவன் . அவன் நம்முடைய பழைய மனிதர்களை விரும்பும் தந்தையாக இருக்கிறான்” .

(இதன் அடிக்குறிப்பில் ‘நல்ல இலைகளுள்ள மரத்துக்கு , இறந்து போன நல்ல ஆத்மாக்கள் இளைப்பாறும் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது).

XXXX

ரிக் வேத துதி RV.10-154, யமி , புதிய ஜீவனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது . இறந்தவர்களின் ஆன்மா , பித்ருக்கள் வசிக்கும் லோகத்துக்குத் செல்கிறது. (முதல் மந்திரத்தின் அடிக்குறிப்பு இறந்தோருக்கு அதர்வவேதிகள் தேனையும், சாமவேதிகள் நெய்யையும் அளிப்பதாகாச் சொல்கிறது .)

xxx

எனது வியாக்கியானம்

நான் படிக்கும்போது எனது கருத்துக்களை புஸ்தகம் முழுதும் எழுதுவதும், கடைசி பக்கத்தில் நானாக ஒரு இன்டெக்ஸ்INDEX  தயாரித்து எழுதுவதும் வழக்கம். அதில் மறுபிறப்பு என்று நான் எழுதிய குறிப்புகள் —

RV.10-55-5

நேற்று இறந்தவன் இன்று உயிரோடு இருக்கிறான்

இதைப்பாடிய புலவரே அடுத்த 4 துதிகளில் இறந்தவர்கள் பற்றிப்பாடும் பின்னணியில் இதைக் காண்க.

RV.10-30-9

இந்த மந்திரத்தில் இருமை என்ற சொல்லுக்கு இம்மை, மறுமை என்று சாயனர் விளக்கம் சொல்கிறார். அதையே ஒப்புக் கொள்ளும் வள்ளுவனும் மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறான் (குறள் 23)

இம்மை, மறுமை, அமிர்தம்; இறவாத தன்மை, பிறவாத தன்மை , எமலோகம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்துக்கள் இன்று கொண்டுள்ள கருத்துக்களையே ரிக் வேத காலத்திலும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்று ஈமக்ரியைப் பாடல்களில் உள்ளன.

இந்துக்கள் இது பற்றி படிப்பதோ பேசுவதோ ‘அபசகுனம்’ என்று கருதுவதாலும் , மார்க்சீய மாக்ஸ்முல்லர் கும்பல்களுக்கு இது அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமானது என்பதாலும் இந்த விஷயங்கள் அதிகமாக வெளியே தெரிவதில்லை. மரணத்துடன் தொடர்புள்ள நிர்ருதி என்ற தேவதையை ரிக் வேதம் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறது. அது மட்டுமே இன்று புரோகிதர்களுக்குத் தெரியும்; பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற தேவதைகள் அந்த மந்திரங்களில் மற்றும் பேசப்படுவதால் இந்தப் புஸ்தகத்திலும் அவைகளுக்கு விளக்கம்  இல்லை. இது தவிர ‘மர்ம நாமம் (ரகசியப்  பெயர்கள்) பற்றியும் இது போன்ற துதிகளில் வருகிறது ; ரகசிய நாமங்கள் பற்றிய விளக்கமும் இல்லை.

தேவார , திருவாசக, திருமந்திர, திவ்வியப் பிரபந்த பாடல்கள் இவைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.

பவுத்த, சமண மதங்களுக்கு முந்தைய உபநிஷதங்களில் மிகத்தெளிவாக உள்ளன ; பகவத் கீதைப்  புஸ்தகத்துக்கு நூற்றுக்கணக்கில் உரைகள் உள்ளன. அவைகளில் மறு ஜென்மம் பற்றிய பாடல்களுக்கு எல்லோரும் உபநிஷதக் கருத்துக்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

–சுபம்–

tags- வேதத்தில்,  புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை, கருத்துக்கள்

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,176

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

இன்னொரு ‘சுவையான’ விஷயத்தைச் சொல்லிவிட்டு ரிக் வேதம் பற்றிச் சொல்லுகிறேன். எகிப்திய கலாசாரம் பற்றி இருபது முப்பது நூல்கள் என் வீட்டில் (லண்டனில்) இருக்கிறது அதில் THE BOOK OF DEAD ‘தி புக் ஆப் டெட்’ இறந்தோர் பற்றிய புஸ்தகம் வெள்ளைக்காரர்களுக்கு அத்துப்படி. அதில் சொன்ன பல விஷயங்களை இறந்தவர்கள் வீட்டில் வாசிக்கும் கருட புராணத்துடன் ஒப்பிடலாம். இறந்தோர் ஆவி பாதாள உலகத்துக்குச் செல்லுவது, ஒரு ஆற்றைக் கட்டப்பது, முதலிய விஷயங்கள் அதில் வருகின்றன.

திருக்குறளில் பிறவிப் பெருங்கடலை நீந்துவது பற்றி வள்ளுவர் பத்தாவது குறளில் பாடுகிறார். ஆனால் சம்ஸ்கிருதம் முழுவதும் பிறவிப் பெருங்கடலை கப்பலிலோ அல்லது படகிலோ கடப்பது பற்றியே பாடுகின்றனர் ; வள்ளுவன் ‘பக்கா’ நீச்சல் பேர்வழி போலும்!

என் அம்மா இறந்து போன செய்தி, நான் லண்டனில் இருந்தபோது வந்தது. எல்லாக் கிரியைகளையும் வழக்கமான நாட்களில் முடியுங்கள்; நான் மூன்றாவது நாள் கிரியை முதல் கலந்து கொள்கிறேன் என்று டெலிபோனில் சொல்லிவிட்டு, விமானத்தில் பறந்தேன். எனக்காக அங்கேயுள்ள பிராமணர்கள் மூன்று நாள் கிரியைகளை மீண்டும் ஒரு முறை சுருக்கமாக செய்துவைத்தார்கள் . பெரும் வெளிநாட்டுத் தலைவர்கள் டில்லியில் வந்து இறங்கியவுடன் நமது தேசீய கீதத்தை முழு க்கவும் இசைக்காமல் சுருக்கமாக இசைப்பார்கள் ABRIDGED VERSION OF NATIONAL ANTHEM  ; அது போல எனக்கு சுருக்கமான மந்திரம்.

 13 நாள் கிரியைகளில் எந்த நாள் என்று நினைவில்லை. ஈமச் சடங்கு  செய்யும் இடத்தில் ஒருநாள் அந்த புரோகிதர்கள் வாழை இலை , அதன் மட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு சிறிய கப்பலை , படகை செய்து வைத்திருந்தார்கள். துக்கமான ஒரு நிகழ்ச்சியிலும் என ஆர்வமும் ஆராய்ச்சியும் வெளிக்காட்டின .

சுவாமிகளே ! இது என்ன ஈமச் சடங்கில் கப்பல் பொம்மை எதற்காக? என்று கேட்டேன். அம்மாவின் ஆவி நதியைக் கடந்து போக வேண்டும் இல்லையா ? என்றார் புரோகிதர். இப்படி எகிப்திலும் சில விஷயங்கள் வருவது கண்டு வியந்தேன். அதை விட  வியப்பு .ரிக் வேதத்தில் நேற்று அந்த கப்பல் விஷயத்தை படித்தபோது ஏற்பட்டது:-

வேள்விக் கப்பல் உவமை – 10-44-6;

இறந்தவனுக்கான  கப்பல் 10-56-7; 10-58-5

விண்கப்பல் – 10-63-10;

புறநானூறு சொல்லும் வலவன் ஏவா வானவூர்தி PILOTLESS PLANE OR DRONE  ; கண்ணகியை ஏற்றிச் செல்ல கோவலன் கொண்டுவந்த விண்கப்பல் (காண்க- வஞ்சிக் காண்டம் -சிலப்பதிகாரம் ; ALSO வனபர்வம் -மஹாபாரதம் PILOTED SPEACE SHIP )

XXXX

10-59-7; 10-58-5;

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் பிராமணர்கள் ஈமச் சடங்கில் ஓதும் மந்திரங்களில் 3 விஷயங்கள் வருகின்றன.

1.இறந்தவர்களின் ஆவி ஒளி ரூபத்தில் பயணம் செய்வது

2.கப்பலில் சென்று கரைகடப்பது ; சில நேரங்களில் விண்கப்பல்- சில இடங்களில் கடல்- கப்பல்

3.மீண்டும் வருக என்று ஆவியை அழைப்பது (மறு  பிறப்பு)

அர்ஜுனனை மாதலி என்பற பைலட் / PILOT OF SPACE SHIP விண்வெளி விமானி , இந்திரலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் காட்சி மஹாபாரத வன பாவத்தில் வருகிறது. அங்கு ஒளி ரூபத்தில் பலர் உலவுவதைக் கண்டு அர்ஜுனன் ஆச்சர்யத்துடன் வினாத் தொடுக்கிறான்.

அதற்கு அர்ஜுனனுக்கு PILOT OF SPACE SHIP MR MATHARI/ LI ஸ்பேஸ் ஷிப் பைலட் மாதரி பதில் கொடுக்கையில் “இவர்களைத்தான் நீங்கள் பூமியில் நட்சத்திரங்களாகப் பார்க்கிறீர்கள்” என்கிறான். இதை என்னால் விஞ்ஞான பூர்வமாக விளக்க முடியாது. ஆயினும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் நாம் எல்லோரும் நடசத்திரத் துகல்களில் இருந்து பிறந்ததை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். (WE ARE ALL STAR DUST)  இதை பி பி.சி ஸ்கை அட் நிகழ்சசியில் பிரிட்டிஷ் ஆஸ்தான விண்வெளி அறிஞர் பாட்ரிக் மோர் (PATRICK MOORE , SKY AT NIGHT, BBC) சொன்னபோது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே ! இது மஹாபாரத  வன பர்வத்தில் உள்ளதே என்று  (இது பற்றி முன்னரே இங்கு நிறைய எழுதியுள்ளேன் )

XXXX

பிராமணர்  வீட்டில் நடுகல்

எனக்கு மிகவும் சின்ன வயது; அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டது மட்டும் காதில் விழுந்தது; கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. தாத்தா இறந்து போனார், அவருடைய ஆவிக்கு இருட்டுப் பாதையில் வழி    காட்டுவதற்காக, நாங்கள் பேரப் பிள்ளைகள், நெய் பந்தத்தை ஏந்தி நிற்க, கோவிந்த கோவிந்த என்ற முழ க்கத்துடன் XXXXXX தூக்கினர் (அமங்களச் சொற்களை எழுதக் க கூடாது); சுடுகாட்டுக்கும் அப்பாவுடன்  போனேன்; தகனக் கிரியை முடிந்தது. வயதான தாத்தாதான். அப்படியும் என் அப்பாவின் கண்ணில் சிறு துளிகள் வழிந்தன. அந்த துக்ககதர நிகழ்ச்சியில் அந்த வெட்டியான் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன.

“சாமி, ஒரு கவலையும் இல்லாமல் போங்க சாமி. நாளைக்கு காலைல வாங்க; மல்லி கைப் பூப் போல சாம்பல் (அஸ்தி) தரேன்”. என்ன தொழில் சுத்தம் பாருங்கள். அவன் தொழில் சடலத்தை எரிப்பது; சாம்பல் தருவது ; அதிலும் அவன் 100 சதவிகித பெர்பெக்ஷன் CENT PERCENT PERFECTION IN HIS JOB பற்றிப் பேசுகிறான் !!

மல்லிகைப்  பூ போல தாத்தா சாம்பல் !!!

சப்ஜெக்டுக்கு வருகிறேன். எங்கள் அம்மாவும் அப்பாவும் பேசியது :

கல்லை எங்கே புதைப்பது?

என்ன கல் ? என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. நாங்கள் வசித்ததோ மதுரை வடக்கு மாசி வீதியில் 20ம் எண் வீடு; பைரவப் பிள்ளைக்குச் சொந்தமானது; நாங்கள் பணக்காரர் அல்ல. வாடகைவீட்டில் எங்கே கல் புதைப்பது? என்று அவர்கள் கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. இதற்கு எப்போது அர்த்தம் புரிந்தது தெரியுமா?

லண்டனிலிருந்து பறந்து சென்று என் அம்மாவின் ஈமக்ரியைகளில் கலந்து கொண்டது பற்றிச் சொன்னேன் அல்லவா? அங்கும் ஒரு கல்லை வைத்து பல நாள் மந்திரங்கள் சொல்லி அந்த சடங்குகள் நடந்த இடத்திலேயே என் அண்ணனை கொண்டு புதைக்கச் சொன்னார் சாஸ்திரிகள் (வீட்டுப் புரோகிதர்); அதுவரை நான் நடுகல் (HERO STONES)  புதைக்கும் வழக்கம் பழந்தமிழர் இடையே மட்டும் இருந்தது என்று எண்ணி இருந்தேன். நடுகல் பற்றி இரண்டு தொல் பொருட் துறை புஸ்தகமும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த நடுகல் நம் இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது- அதை கிறிஸ்தவர்கள் (EPITAPH IN BURIAL GROUNDS) , முஸ்லீம்களும் பின்பற்றி இறந்தோர் இடத்தில் கல் புதைக்கின்றனர் என்பது இப்போது புரிகிறது..

XXX

ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளை மட்டும் காண்போம்:

10-15-3

நான் கருணைமிக்க பிதாக்களை (இறந்து போன முன்னோர்கள்) – அடைந்தேன் . நான் விஷ்ணுவிடமிருந்து புதல்வனையும், வம்ச விருத்தியையும் பெற்றேன்; சோம ரசத்தைக் குடித்து இன்புறும் அவர்கள் இங்கே –  பூமிக்கு– அடிக்கடி வருகிறார்கள்; இந்த தர்ப்பைப் புல்லின் மீது அமர்கிறார்கள்.

திருக்குறள்

10-15-6

இங்கே கால்களை மடித்து தெற்குப் பக்கத்தில்  உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்த அவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் . பிதாக்களே ; மனிதர்களின் பலவீனம் காரணமாக நாங்கள் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால் அத்தற்காக எங்களைத் தண்டித்துவிடாதீர்கள் .

இறந்தோர் தென் திசையில் வாழ்வதை வள்ளுவரும் தென்புலத்தார் என்று குறிப்பிடுகிறார்.(குறள் 43)

அவி /ஹவிஸ் HAVIS  என்பதையும் 259, 413 குறள்களில் பயன்படுத்துகிறார்.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச்  சொற்களை முதல் 50 குறள்களில் வள்ளுவர் அள்ளித் தெளிக்கிறார். பிற்காலத்தில் சில திராவிடங்கள் உளறிக்கொட்டி கிளறி மூ டும் என்பதை அறிந்து ரிக் வேதச்  சொற்களான ஹவிஸ், தென்புலத்தார், அமிர்தம், தெய்வம்  ஆகியவற்றையும் வள்ளுவர் பயன்படுத்தினார்.

மேற்கூறிய குறிப்புகள் மறு  உலகம் ஒன்று உண்டு, அது தென் திசையில் இருக்கிறது; அங்குள்ள நம் முன்னோர்கள், நாம்  அழைக்கும்போது பூமிக்கு வந்து நெய் கலந்த சோற்று உருண்டை/ ஹவிஸ், எள் , நீர் ஆகியவற்றை ஏற்பது தெரிகிறது. பிராமணர்கள் ஆண்டுக்கு குறைந்தது 24 முறை- அதிகமாக 94 முறை – இப்படி இறந்துபோன முன்னோர்களை வீட்டுக்கு அழைத்து  எள்ளும் நீரும் இறைப்பதைக் காணலாம். (நான் லண்டனிலும் இதைச் செய்கிறேன்; ஹவிஸ் மட்டும் திதி என்று வருடத்துக்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது. முற்காலத்தில் இதை மக்கள் தினமும் செய்தனர் என்பது குறள் 43ல் வரும் பஞ்ச யக்ஞம் மூலம் வெளிப்படுகிறது.

தொடரும்…………………….

tags– புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை ,

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!(Post No.10,174)

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!    (Post No.10,174)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,174

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நம்முடைய பிளாக் Blog கட்டுரைகளைப் படிக்கும் வாசகர் ஒருவர் வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை பற்றி இல்லையாமே, இவை எல்லாம் புத்த, ஜைன மதத்திலிருந்து வந்ததாமே ! இது உண்மையா என்று கேட்டிருந்தார் .

சுருக்கமான பதில்- ரிக் வேதம் உலகில் பழமையான புஸ்தகம். அதிலேயே இந்தக் கருத்துக்கள் உள்ளன.அதைத் தொடர்ந்து வந்த பிராமணங்கள் என்னும் நூல்கள் மற்றும் உபநிஷதங்கள் ஆகியவற்றில் தெள்ளத் தெளிவாக, ஐயம் திரிபற, இந்த விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் புத்த, ஜைன மதநூல்களுக்கு முற்பட்டவை என்பதைத் ‘தள்ளிப்போன வெள்ளைக்காரர்களும்’ ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே இவை இந்து மதத்திலிருந்து ஏனைய கீழ்த்திசை மதங்களுக்கு — அதாவது இந்து மதத்தின் கிளை மதங்களுக்குச் சென்றன என்பதே உண்மை.

முதலில், காலக் கணிப்பை எடுத்துக்கொள்வோம். நமது பஞ்சாங்கமும் மத நூல்களும் சொல்லும் கருத்துக்களை ஏற்காத– எதிர்த்துப் பேசுவோர்– சொல்லும் கருத்துக்கள் இவை என்பதை முதலில் நாம் மனதிற் கொள்ளவேண்டும் ;  நமது பஞ்சாங்கங்கள் கி.மு 3102-ல் கலி யுகம் துவங்குவதாகச் சொல்லுகின்றன சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. அதன்படி பகவத் கீதை அதற்கு முந்திய நூல். அதில் இரண்டாவது அத்தியாயத்தில் மறு பிறப்பு, கர்ம வினை என்பன தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஒரு வேளை கீதையின் காலத்தைச் சந்தேகிப்பவர்கள், வேறு சில ஆதாரங்களைக் கேட்கலாம். பிருஹத் ஆரண்யக உபநிஷத் மற்றும் சதபத பிரா(ஹ்)மணம் முதலிய நூல்களில் இருப்பதை வெளிநாட்டோரும் ஒப்புக் கொள்வதோடு அந்த நூல்களுக்கு கி.மு.850 அல்லது 800 என்றும் தேதி குறித்துவிட்டனர். அப்படிப்பார்த்தாலும் புத்தர், மஹாவீரர் முதலியோருக்கு முன்னரே இது எழுத்து வடிவில் வந்து விட்டது.

ரிக் வேதத்தில் உள்ளது

இந்து மத நூல்கள் பெரிய சமுத்திரம் போல விரிவானவை ; எவரேனும் அவை முழுவதையும் படித்திருக்க முடியுமா என்று கேட்டால் நான் இல்லை என்றே சொல்லுவேன். ஆனால் ஏனைய மத நூல்களை ஒரே நாளில் பிடித்துவிடலாம். மேலும் நமது நூல்கள் மிகவும் அப்டேட் Update  ஆனவை. வேதம் தவிர மற்ற எல்லா நூல்களையும் நம் முன்னோர்கள் Update அப்டேட் செய்துள்ளனர்- புதுமைப்படுத்தியுள்ளனர். சில விஷயங்களை விளக்கத்துக்காக சேர்த்துள்ளனர். வெளிநாட்டார் கடைசியில் சேர்க்கப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து தேதி குறிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இந்துமதத்தைப் பின்பற்றாதவர்கள், அதில் சொல்லிய கருத்துக்களை நம்பாதவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்களை அப்பணியில் பணம் கொடுத்து  ஈடு  படுத்தியவர்கள் ‘கிறிஸ்தவ மத கொள்கைகளை வலியுறுத்த உம்மை இப்பணியில் நியமித்துள்ளோம்’ என்றும் எழுத்து வடிவில் எழுதியும் வைத்துவிட்டனர். நம் வீட்டு எதிரி– குடும்ப எதிரி — நம் குடும்பத்திலுள்ளோர் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொன்னால் நாம் உடனேயே அவைகளை உதறித் தள்ளிவிடுவோம். அது போல எதிரிகளின் கருத்தை ஏற்க வேண்டியது இல்லை.

அது சரி, ஒரு இந்து மத அன்பர், உண்மையிலேயே இது பற்றி தெரிந்து கொள்ள நம்மை அணுகினால் நாம் என்ன சொல்லுவோம்? இதோ பதில்.

ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மரணம், இறுதிச் சடங்கு, மக் கிரியைகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. அவற்றில் இக்கருத்துக்கள் பேசப்படுகின்றன. இந்த மந்திரங்களை இன்றும் ஒருவர் இறந்தபின்னர் முதல் 13 நாட்களின் சடங்குகளில் பிராமணர்கள், பயன்படுத்துகின்றனர். பொதுவாக ஈமக் கிரியை விஷயங்களை எவரும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொவதில்லை. ஆனால் மிகவும்  வியாப்பான விஷயம், ரோட்டில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் பாடும் பாட்டுக்களில் கூட  இந்தக் கருத்துக்கள் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

ரிக்வேத மந்திரங்களில் நுழைவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்த ஓரிரு விஷயங்களை சொல்லுகிறேன்.. முப்பது வருடங்களுக்கு முன்னால் — அதாவது 1987ல் பிரிட்டிஷ் அரசு என்னை லண்டனுக்கு பி.பி.சி . தமிழோசை ஒலிபரப்புக்கு அழைத்ததற்கு முன்னால்— நான் மதுரை ஜில்லா ஆர்.எஸ்.எஸ் கார்யவாஹ் (மாவட்டச் செயலர்) பொறுப்பில் இருந்தேன். மேலூர், உசிலம்பட்டி , திருமங்கலம், கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் முதலிய இடங்களுக்குச் சென்று ஆர். எஸ்.எஸ். கிளைகளைத் துவக்குவது, கூட்டங்களில் பேசுவது முதலியன வழக்கமான பணிகள் . ஒருமுறை உசிலம்பட்டி சென்றபோது பஸ் நிலையத்தில் பஸ்  நின்றவுடன் ஜன்னல் வழியாக கையை நுழைத்து காசு கேட்டு நச்சரித்தவன் கையில் ஒரு சிப்பலா க்கட்டையை வைத்து அடித்துக் கொண்டு பாடிய பாடல் என்னை அசத்திவிட்டத்து ; உபநிஷத்திலும் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலும் சொல்லும் கருத்துக்களை அவன் நாட்டுப்புற பாடலாகப் பாடுகிறான். கையில், பையில் இருந்த பணத்தில் ஊர் போய்ச்  சேரத் தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு  மிச்சத்தை அவன் கையில் போட்டேன் .

Xxx

லண்டனில் நான் BBC பி.பி.சி ஒப்பந்த வேலை பார்த்தது ஐந்து ஆண்டுகளுக்கும் சற்று அதிகம். அதற்குப் பின்னர்  நான் பார்த்த பகுதி நேர வேலையில் ஒன்று, பிரபல ஆஸ்பத்திரியொன்றின் மொழிபெயர்ப்பாளர் வேலை. அதில் ஒரு புற்று நோய் நோயாளி இறக்கப்போகிறார் என்பதை அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அறிவிக்கும் நாள் வந்தது. இங்கெல்லாம் இவ்விஷயத்தை பட்டவர்த்தனாமாக்ச் சொல்லி விடுவார்கள். ஆனால் பக்குவமாக, சுற்றிவளைத்து, ஒரு மணிநேரம் பேசிவிட்டு, மிகவும் அழகாகச் சொல்லுவார்கள். அந்த SPECIALIST NURSES ஸ்பெஷலிஸ்ட் நர்ஸுகள்  இருவர், முதலில் குடும்பத்தினரை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்லி உயில் முதலியவற்றை எழுதச்  சொல்லுங்கள், அவருக்குக்ப் பிடித்த விஷயங்களைக் கேட்டு அதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் விக்கி விக்கி அழுதனர்.

பிறகு நோயாளியிடம் வந்து ஒரு அரை மணிநேரம் பேசிய பின்னர் விஷயத்தை உடை த்தோம் . அவர் அழ வும் இல்லை ஷாக் ஆகவும் இல்லை. “ஆமாம், ஆமாம், காடு வா,வா என்கிறது ;வீடு போ, போ, என்கிறது; போகத்தா னே வேண்டும்; எல்லாம் முடித்துவிட்டேனே” என்றார் . அவர் சொன்னதை நான் அ ப்படியே மொழி பெயர்த்துச் சொன்னேன். நர்ஸுகள்  லண் டன் கிறிஸ்தவர்கள். அவர்களுக்கு இந்த விஷயம் புரியவில்லை . ஆள் மூளை குழம்பிவிட்டதோ என்று என்னைக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு சுருக்கமாக வானப்பிரஸ்தம் என்னும் இந்துக்களின் மூன்றாவது கட்டத்தைச் சொல்லி வயதான இந்துக்கள் இதை அடிக்கடி வீட்டில் சொல்லுவார்கள். அவரும் மரணத்தை எதிர்கொண்டு மறு உலகத்துக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்று.

அந்த வெள்ளைக்கார நர்ஸுகளுக்கு எவ்வளவு புரிந்ததோ கடவுளுக்கே வெளிச்சம். உசிலம்பட்டி பஸ்  நிலைய பிச்சைக்காரனோ இறந்து போன புற்று நோய்காரனோ  பகவத் கீதையையோ பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தையோ படித்திருக்க மாட்டார்கள். ஆனால்  அவர்களுடைய மரபணுவில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊன்றிய வேத தத்துவங்கள் வெளிப்படுகின்றன என்றே நான் சொல்லுவேன்.

மரணம் தொடர்பாக உள்ள மந்திரங்களை வெள்ளைக்கார்களும் கூட விளக்காமல் அப்படியே மொழி பெயர்த்துவிட்டனர். நான் ரிக் வேதத்தில் 9000 மந்திரங்களுக்கு மேல் படித்துவிட்டேன். இன்னும் சுமார் 1000 மந்திரங்களே பாக்கி. இதுவரை படித்த ஈமச் சடங்கு மந்திரங்களுக்கு பல இடங்களில் அர்த்தம் புரிவதில்லை.  பல மர்மமான புரியாத விஷயங்களைப் பேசுகினன்றனர் . ஆகவே இந்து மதம் பற்றிப் பேசுவோர் அதை முழுமையாக அறியவில்லை .

எங்கள் வீட்டுக்கு வாரம் தோறும் பிச்சை எடுக்க ஓர் நாமம் போட்டவர் வருவார். இராமனின் பெயரைச் சொன்னால் ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே என்ற கம்ப ராமாயணப்  பாடலை வாசலில் நின்று பாடுவார். உடனே சகோதரர்களில் ஒருவர் ஓடிச் சென்று அவர் பாத்திரத்தில் ஒரு பிடி அரிசி அல்லது ஒரு அணா காசு போடுவோம். கொஞ்சம்  தாமதமானால் அவர் அந்தப்பாடலை உரத்த குரலில் பாடி எங்களை மிரட்டுவார். நாங்கள் அண் ணன் தம்பி களுக்குள் ஜோக் அடித்துக் கொள்ளுவோம்; ஏய் , அதிகார ப் பிச்சைக்காரன் வந்துட்டான் ; அவன் அதிகாரம் செய்து அதட்டுவதற்குள் காசு போடுவோம் என்று பேசிக் கொள்வோம். அவர் பாடிய இராமன் என்னும் இரண்டு எழுத்தினால் ஜென் மமும் மரணமும் இன்றித் தீருமே என்பது இன்றும் காதில் ரீங்காரமாக ஒலிக்கிறது. யார் இவர்களுக்கு எல்லாம் இந்த உயரிய தத்துவங்களைச்  சொல்லிக் கொடுத்தார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக இரத்தத்தில் யார்  ஏற்றிவிட்டார்கள் ?

அமிர்தம்

காலா காலமாக நாம் நம்பும் விஷயங்கள் இவை. இதற்குப்  பெரிய ஆதாரம் “அமிர்தம்” என்ற சொல்லில் இருக்கிறது. இந்த சம்ஸ்கிருதகி  சொல் சங்க இலக்கியத்திலும் உளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பயன்படுத்திய இந்தச் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான முறைகள் வரும்.

 இந்த அமிர்தம் என்பது என்ன காட்டுகிறது? மரணமில்லாப் பெரு வாழ்வு தரக்கூடியது அமிர்தம்.

எங்கே? இறைவனின் திருப்பாதத்தில் அல்லது சொர்க்கத்தில். அது கிடைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்ற கருத்து ரிக் வேதம் முழுதும் இந்தச்  சொல்லால்  எதிரொலிக்கப்படுகிறது.

TO BE CONTINUED……………………

XXXXX

  tags –புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை,  ,ரிக்வேத,ம் 

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி (Post No.7027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – -7-37 AM

Post No. 7027

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அக்டோபர் 2019 நற்சிந்தனை காலண்டர்

கர்ம வினை, செயல்பாடு பற்றி 31 பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள்-அக்.2- காந்தி ஜயந்தி; 7- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை; 8-விஜயதசமி; 26-தந்வந்திரி ஜயந்தி27-தீபாவளி, லக்ஷ்மி-குபேர பூஜை; 28-ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

பௌர்ணமி-13; அமாவாசை-27; ஏகாதசி விரதம்- 9,24

முஹூர்த்த தினங்கள்—24, 30

அக்டோபர் 1 செவ்வாய்க் கிழமை

ஸ்வார்ஜிதான்யேவ கர்மாணி ப்ரயான்ந்த்யேவ ஸஹாயதாம் – ராமாயண மஞ்சரி

உன் செயல்களே உனக்குத் துணை வரும்

XXX

அக்டோபர் 2 புதன் கிழமை

ஸ்வார்த்தமேவ ஸமீஹஸ்வ கிம் பரார்த்தஸ்ய சிந்தயா- கஹாவத் ரத்னாகர்

உன் வேலையைக் கவனி, மற்றவர்களைப் பற்றி என்ன பேச்சு?

XXX

அக்டோபர் 3 வியாழக் கிழமை

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரதஹ ஸம்சித்திம் லபதே நரஹ – பகவத் கீதை 18-45

அவரவர் கடமையில் ஈடுபடுவோர் பக்குவ நிலையை அடைவர்

XXX

அக்டோபர் 4 வெள்ளிக் கிழமை

ஸ்வயமக்ஷிணீபன்க்த்வாந்தோ பவஸி

உன் கண்களைக் குத்திக்கொண்டால் நீயே குருடாவாய்– கஹாவத் ரத்னாகர்

XXX

அக்டோபர் 5 சனிக் கிழமை

ஸ்னிக்தேஸ்வாசஜ்யாம் கர்ம யதுஷ்கரம் ஸ்யாத்

கடினமான வேலைகளை முயற்சியுடையோரிடம் தாருங்கள்- பிரதிக்ஞா யௌகந்தராயண

-XXX

அக்டோபர் 6 ஞாயிற்றுக் கிழமை

ஸுகம்ஹி ஸுக்ருதாத் துக்கம் துஷ்க்ருதாதேதி நான்யதஹ – கதா சரித் சாகரம்

நல்லன செய்தால் இன்பம்; தீயன செய்தால் துக்கம்

XXX

அக்டோபர் 7 திங்கட் கிழமை

ஸுகம் துக்கம் ஸ்வயம் புங்தே ந சான்யே ஸவஸ்ய கர்மணஹ – கஹாவத் ரத்னாகர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறநானூறு)

XXX

அக்டோபர் 8 செவ்வாய்க் கிழமை

ஸ்வஹ கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் – சம்ஸ்க்ருத பொன்மொழி

நாளைய வேலையை இன்றே செய்க; பிற்பகல் வேலையை முற்பகல் செய்க

-XXX

அக்டோபர் 9 புதன் கிழமை

விரமேதஸமாப்ய நாரப்தம்-சதாபதேச பிரபந்த

எடுத்த காரியத்தை தொடுத்து முடி

XXX

அக்டோபர் 10 வியாழக் கிழமை

வக்தும் ஸுகரம் துஷ்கரமத்யவஸிதும் – வேணி சம்ஹாரம்

சொல்லுதல் எளிது, செய்வது கடினம்

XXX

அக்டோபர் 11 வெள்ளிக் கிழமை

லோகபீடகரம் கர்ம ந கர்தவ்யம் விசக்ஷணே – வால்மீகி ராமாயணம்

நல்லோர் செய்கை எதுவும் உலகத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

XXX

அக்டோபர் 12 சனிக் கிழமை

யதா கர்ம ததா பலம்

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

XXX

அக்டோபர் 13 ஞாயிற்றுக் கிழமை

யத்யதாத்மவசம் கர்ம தத்தத்ஸேவேத யத்னதாஹ- மநு ஸ்ம்ருதி 4-159

உனது சக்திக்குட்பட்டதை செய்து வா

XXX

அக்டோபர் 14 திங்கட் கிழமை

யோகஹ கர்மஸு  கௌசலம் – பகவத் கீதை 2-50

யோக்ம் என்பது திறமையாகச் செயல்படுவதாகும் (சமபுத்தியுடன் செயல்படுவோரைப் புண்ணிய, பாவம் தொடராது)

-XXX

அக்டோபர் 15 செவ்வாய்க் கிழமை

யஹ காரயதி ஸ கரோத்யேவ – பழமொழி

உழைப்பவனே மற்றவர்களுக்கு ஊற்றுணர்ச்சி தருகிறான்

XXX

அக்டோபர் 16 புதன் கிழமை

மஹத்சு நீசேஷு ச கர்ம சோபதே- பஞ்ச தந்திரம்

ஒரு செயல் பெரிதா, சிறிதா எனபதை அந்த செயலே காட்டிவிடும்

XXX

அக்டோபர் 17 வியாழக் கிழமை

மனஸா சிந்திதம் கார்யம்  வாசா நைவ ப்ரகாசயேத்- சானக்ய நீதி 10-7

மனதில் தோன்றுவதை எல்லாம் வார்த்தையில் வடித்துக் கொட்டாதே

XXX

அக்டோபர் 18 வெள்ளிக் கிழமை

பஹ்வாரம்பே லகுக்ரியா – கஹாவத்ரத்னாகர்

சின்ன காரியத்துக்கு ஆடம்பரமான ஆரம்பம்!

Xxx

அக்டோபர் 19 சனிக் கிழமை

பத்ரக்ருத்ப்ராப்னுயாத்பத்ரம் அபத்ரஞ்சாப்யபத்ரக்ருத் – கதாசரித் சாகரம்

இனம் இனத்தோடு சேரும்(நல்லோர் நல்லோரை நாடுவர்; தீமை தீயதை நாடும்)

Xxx

அக்டோபர் 20 ஞாயிற்றுக் கிழமை

பத்ர அபத்ரம் வா க்ருதமாத்மனி கல்ப்யதே – கதா சரித் சாகரம்

நல்லதோ கெட்டதோ- செய்தது அவனுக்கே திரும்பிவரும்

Xxx

அக்டோபர் 21 திங்கட் கிழமை

ந குப்ஸிதம் கர்ம குர்வதி – சதோபதேச பிரபந்த

சான்றோர் ப ழிக்கும் வினையை செய்யற்க

xxx

அக்டோபர் 22 செவ்வாய்க் கிழமை

ந சிகீர்ஷத்துஷ்கரம் கர்ம– சதோபதேச பிரபந்த

செய்ய முடியாத செயலில் இறங்காதே

xxxx

அக்டோபர் 23 புதன் கிழமை

நிஜம் கர்ம ப்ரகுர்வாணைர்லஜ்யதே நஹி ஜந்துபிஹி- ப்ருஹத் கதா கோச

ஆண்மகன் அவனுக்கே உரித்தான செயல்களைச் செய்ய அஞ்சுவதில்லை (வினையே ஆடவர்க்கு உயிரே)

xxx

அக்டோபர் 24 வியாழக் கிழமை

முடிவும் இடையூறும்  முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல் – குறள் 676

செயலைத் துவங்கும் முன் அதன் முடிவு, இடையூறு, இறுதியில் கிடைக்கும் பலன் ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்

Xxx

அக்டோபர் 25 வெள்ளிக் கிழமை

தூங்கற்க தூங்காது செய்யும் வினை – குறள் 672

ஒத்திப் போடாமல் உரியகாலத்தில் அதை அதைச் செய்யவேண்டும்

Xxx

அக்டோபர் 26 சனிக் கிழமை

— மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார் – கருமமே கண்ணாயினார் – நீதி நெறி விளக்கம்

Xxx

அக்டோபர் 27 ஞாயிற்றுக் கிழமை

செய்வன திருந்தச் செய் –  ஆத்திச்சூடி

Xxx

அக்டோபர் 28 திங்கட் கிழமை

தூக்கி வினை செய்–  ஆத்திச்சூடி

Xxx

அக்டோபர் 29 செவ்வாய்க் கிழமை

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் – உலக நீதி

Xxx

அக்டோபர் 30 புதன் கிழமை

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – தமிழ் பழமொழி

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு

ஆவின்பால் கன்றினாற் கொள்

(கன்றைக் காட்டி பால் கற

xxx

அக்டோபர் 31 வியாழக் கிழமை

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி – கொன்றைவேந்தன்

—subham —

subham

கர்ம வினை பற்றி புத்தரும் வள்ளுவரும் செப்புவது ஒன்றே!- பகுதி 7 (Post No.3947)

Written by London Swaminathan

 

Date: 27 May 2017

 

Time uploaded in London: 21-26

 

Post No. 3947

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

(This is already posted in English a few days ago)

 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

 

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் உரை. இதற்கு எதிர் மாறாராக எழுதப்படும் உரை தவறானவை. நூறு ஆண்டுக்கு முந்தைய புத்தகங்களில் எல்லாம் இந்த உரையே இருக்கும் புத்தரின் தம்ம பத உரையும் இதை ஆதரிக்கும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115)

பொருள்

உலகத்தில் அழிவும் ஆக்கமும் இல்லாமல் இல்லை. இது ஒருவருக்கு வருவதற்கு பழ வினையே காரணம். ஆகையால் எது வந்தபோதிலும் நடுவு நிலைமை தவறாது இருப்பதே பெரியார்களுக்கு அணிகலன் ஆகும்

 

கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின் (குறள் 115)

 

ஒருவன் நடுவுநிலைமை தவறி தவறானவற்றைச் செய்யப் போனால், தான் கெட்டுப் போனதற்கு அறிகுறி அதுதான் என்பதை அவன் உணர வேண்டும். அதாவது அவன் கெட்டழிவது உறுதி

 

விநாச காலே விபரீத புத்தி என்று சம்ஸ்கிருதத்தில் பழமொழி உண்டு.

quosdeus vult perdere prius dementat – Napoleon

Whom God wishes to destroy He first deprives sanity

 

நெப்போலியனும் சொல்கிறார்: கடவுள் யாரை விழுத்தாட்ட நினைக்கிறானோ அவனுக்கு முதலில் புத்தியைத் தடுமாற வைப்பார்.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

 

கெட்டதும் நல்லதும் நம்மால் வருவதுதான்; தானே தீங்கு

செய்து கொள்கிறான்; தானே தீமையை அகற்றவும் செய்கிறான். தானே தூய்மைப்படுத்திக் கொள்ளவும் செய்கிறான்.        இது எல்லாம் வேறு ஒருவர் செய்வதல்ல (தம்மபதம் 165)

தனக்குத் தானே எஜமானன் என்றும் சொல்லுவார் (160)

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றன் கருத்து இங்கே தொனிக்கிறது:-

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

 

 

 

புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கத்துத் தான்பிறிது ஊனுண்பான்

எங்கனம் ஆளும் அருள் (குறள் 251)

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

 

பொருள்:-

தன்னுடைய சதையைப் பெருக்க வைப்பதற்காக இரக்கமின்றி மற்ற உயிர்களைக் கொன்று சாப்பிடுபவன் எப்படி கருணை உடையவனாக இருக்க முடியும்?

 

ஒரு உயிரையும் கொல்லாமலும், மற்றவர் விற்கும் புலாலை உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிரினங்களும் இருகரம் குவித்து தொழுது ஏத்தும்.

 

புத்தர் சொல்கிறார்:

எல்லா மனிதர்களும் தண்டனை என்றால் நடுங்குகின்றனர்; எல்லோரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்; அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது. கொல்வதற்க்குக் காரணமாக இருக்கக்கூடாது.–தம்மபதம் 129

 

to be continued………………..

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

nepali kutti sanyasi

Picture: Little boy from Nepal.

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 853 தேதி 20, பிப்ரவரி 2014

This is a translation of my Post No 832 posted in English on 10th February 2014 in this blog.

புறநானூற்றில் ஒரு அருமையான தமிழ் பாட்டு இருக்கிறது. எல்லோருக்கும் முதல் வரி மட்டும் தெரியும்: யாதும் ஊரே; யாவரும் கேளிர்; அதற்கு அடுத்த வரியோ, அந்தப் பாட்டின் முழுப் பொருளோ பலருக்கும் தெரியாது. ஆகையால் இரண்டாவது வரியை தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இது இந்துக்களின் கர்ம வினைக் கொள்கையை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. “ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மிதவை போல”– என்ற சித்திர உவமையை இந்து சந்யாசிகளும் புத்தரும் பயன்படுத்துகிறார்கள். இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஆகிய அனைவரும் மறு பிறப்பு, கர்மா கொள்கைகளில் நம்பிக்கை உடையோர்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

—-புறம்.192, கனியன் பூங்குன்றன் ( பொருண்மொழிக் காஞ்சித் துறை))
இந்து தர்மக் கோட்பாடுகளை விளக்கும் அருமையான பாட்டு இது.

இவை அத்தனையும் பகவத் கீதையில் உள்ள வரிகள்!!!

வசுதைவ குடும்பகம்

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே—மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக்கை (Subramanya Bharati)

என்று பாரதி பாடுகிறார். 3000 ஆண்டுகளுக்கு முன் அதர்வண வேதத்திலும் ‘பூமி என் தாய், நான் அதன் மகன்’ என்ற வரி உள்ளது. மஹோபநிஷத்திலுல் (6-71), பஞ்ச தந்திரத்திலும் (5-3-37), ஹிதோப தேசத்திலும் (1-3-71) ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் ஒரே குடும்பம்) என்ற கோட்பாடு உள்ளது. ஆக உலகம் “ஒரே குடும்பம் நாம் எல்லோரும் அதன் மக்கள்” என்ற கருத்து வேத காலம் முதலே இருக்கிறது.

சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே

இறந்து போவது ஒன்றும் புதிது அல்ல. ஆகையால் வாழ்வதிலும் பெரிய இன்பம் கிடையாது. அதற்காக அதை வெறுத்து ஒதுக்குவதும் எங்களிடம் இல்லை. இந்தக் கருத்து கீதை முழுதும் பல இடங்களில் வருகிறது.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம முதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹர்யேர்த்தே ந த்வம் சோசிதும் அர்ஹஸி (2-27)

பகவத் கீதை 2—27

பொருள்: பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயமாக இருக்கிறது. ஆகையால் தவிர்க்க முடியாத விஷயத்தில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.

தமிழ் திரைப் படப் பாடலிலும் இதே கருத்தைக் காண்கிறோம்:

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

(படம்- பாசமலர்; பாடல்-கவிஞர் கண்ணதாசன்)

இதையே புத்த மதப் பாடலிலும் காணலாம்:

“Weep not, for such is here the life of man
Unasked he came, unbidden went he hence
Lo! Ask thyself again whence came thy son
To bide on earth this little breathing space
By one way come and by another gone…..
So hither and so hence— why should ye weep?”

— Psalms of Sisters (E.T. by Mrs Rhys Davids (1909) quoted by Dr S Radhakrishnan in his Bhagavad Gita commentary.

மஹா பாரதத்திலும் வியாசர் உலகிலேயே மிக அதிசயமான விஷயம் எது என்ற கேள்விக்கு தருமன் வாய் மொழியாக விடை கூறியதை யக்ஷப் ப்ரஸ்னத்திலும் ‘உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்?’ என்ற கட்டுரையிலும் ஏற்கனவே எழுதிவிட்டேன். வள்ளுவனும் இந்த ஆச்சரியத்தைக் (குறள் 336) குறிப்பிட்டதையும் எழுதிவிட்டேன்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் பிறர் தருவதில்லை. நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். தினை விதைத்தவன் தினை அறுப்பான் ,வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் தமிழ் சான்றோர்கள் பகர்வர். வேதகாலம் முதல் இந்தியாவில் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். பாவ புண்ணியம் என்பது இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் தெரிந்த கருத்து.

கருட புராணத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தை டாக்டர் ராதாகிருஷ்ணன் எடுத்தாள்கிறார்:

Garuda Purana says
Sukhasya dukkhasya na kopi data
Paro dadatiti kubhuddir esa
Swayam krtam svena phalena yujyate
Sarira he nistara yat tvatya krtam

இன்பமும் துன்பமும் பிறர் தருவது இல்லை. மற்றவர்கள் நமக்குக் கெடுதி செய்துவிட்டனர் என்பது தவறு. நாம் என்ன விதைத்தோமோ அதுதான் பழம் ஆகி பலன் தருகிறது.

’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,

devotion

பெரியாறு என்பது தமிழ்நாடு—கேரள எல்லையில் இருக்கிறது. புலவர் இதையும் சொல்லி இருக்கலாம். அல்லது பொதுவாக கங்கை முதலிய பெரிய நதிகளில் வரும் தெப்பத்தையும் (படகு) சொல்லி இருக்கலாம். வாழ்க்கை என்பது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் படகு போன்றது. அது போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் சேரும் என்பது அறிஞர்கள் கண்ட உண்மை என்று கனியன் பூங்குன்றன் கூறுகிறார். ஆதிசங்கரரின் விவேக சூடாமணி யிலும் இதைக் காணலாம் ஆனால் தமிழ்ப் புலவர் இதைப் படித்துதான் எழுத வேண்டும் என்பதில்லை. பெரியோர்கள் ஒரேமாதிரி சிந்திப்பர்:

ஆதிசங்கரரின் விவேக சூடாமணி (பாடல் 550): ஆற்று வெள்ளத்தில் மிதக்கும் ஒரு கட்டை அதன் போக்கில் உயர்ந்தோ தாழ்ந்தோ ஏறி இறங்கிச் செல்லும். அதே போல கடந்த கால செயல்களுக்கு ஏற்ப (அவரவர் கர்மாப் படி) ஒவ்வொருவரும் அவற்றின் பலன்களை அனுபவிப்பர்.
சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காவியம் முழுதும் ஊழ்வினையின் விளையாட்டைக் காணலாம்.

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

ஆகையால் பெரியவர்களைக் கண்டால் அவர்களைப் புகழ்வதும் இல்லை. சிறியவர்களைக் கண்டால் இகழ்வது என்பதும் கொஞ்சமும் இல்லை என்கிறார் புலவர் பூங்குன்றன். இதைத் தான் சமத்துவ பாவனை என்பர். சான்றோர்களுக்கு எல்லோரும் ஒன்றே.

“ஸமத்துவ பாவனையே அச்சுதனுக்கு செய்யும் ஆராதனையாம்”

(ஸமத்வ- மாராதன-மச்யுதஸ்யாம், பிரஹ்லாதன்; விஷ்ணுபுராணம், 1-17-90)

வித்யா – விநய – ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின: ( கீதை 5-18)

பொருள்: கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்தும், பசுவி னிடத்தும்,யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலைய னிடத்தும் ஆத்ம ஞானிகள் (பண்டிதர்கள்) சமதர்சனம் (ஒரே பார்வை) உடையவர்கள்.

(ஆதாரம்:– அண்ணா எழுதிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம், மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை, இரண்டு புத்தகங்களும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடுகள், மயிலாப்பூர், சென்னை)

ஆக கனியன் பூங்குன்றனின் கருத்துகள் இந்திய தத்துவம்; இது பாரதம் முழுதும் ஒன்றே என்பதைக் காட்டும்.

தொடர்பு கொள்க: swami_48@yahoo.com